கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆலோசனை - இயக்குநரின் செயல்முறைகள்

 

 

 

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 20-11-2025


Consultative meeting chaired by the Honorable Minister of School Education with representatives of the Teachers' Federation regarding the Teacher Eligibility Test - Proceedings of the Director of Elementary Education, Date: 20-11-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8




புத்துளிர் Puthulir - கண்டுபிடிப்பு மற்றும் சிந்தனை சவால் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு மற்றும் பதிவு செய்தல் - இணை இயக்குநரின் செயல்முறைகள்

 


புத்துளிர் - பள்ளி கண்டுபிடிப்பு மற்றும் சிந்தனை சவால் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு மற்றும் பதிவு செய்தல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் 



Puthulir - School Innovation and Thinking Challenge - School Students Participation and Registration - Proceedings of the Joint Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8




2025 இறுதிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களின் Genuineness Certificate சமர்ப்பிக்க உத்தரவு

 

 

2025 இறுதிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்று சமர்ப்பிக்க உத்தரவு


உண்மைத் தன்மை சான்று முக்கிய உத்தரவு - 2025 டிசம்பர்க்குள் அனைவரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் & D.T.Ed., சான்றிதழ்களின் உண்மைத்தன்மை Genuineness Certificate பெற‌வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 20.11.2025

கிழமை:- வியாழக்கிழமை



*திருக்குறள்:*


பால்:- அறத்துப்பால்

இயல்:- துறவறவியல்

அதிகாரம்:- மெய்யுணர்தல்



*குறள் : 358*


பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் 

செம்பொருள் காண்ப தறிவு 


*விளக்க உரை:*


பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.


*பழமொழி :*


Great achievements require hard work. 


பெரிய சாதனைகள் கடின உழைப்பில் தான் உண்டாகும்.


*இரண்டொழுக்க பண்புகள் :*



1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.



2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.


*பொன்மொழி :*


ஒரு முள் குத்திய அனுபவம் வாழ்க்கை முழுவதற்குமான எச்சரிக்கை. -ஜேம்ஸ் ரஸ்ஸல் லோவல்


*பொது அறிவு :*


01.இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை "அடையாள அட்டை" என்று கூறியவர் யார்?


திரு. N.A. பால்கிவாலா

Thiru.N. A.Palkhivala


2.இந்தியாவில் மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?


இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

Indira Gandhi National Open University (IGNOU)



*English words :*


incredible-impossible to believe, industrious, hard-working, and productive


*தமிழ் இலக்கணம்:* 


 'ந' வரும் இடம் எழுதும் முறை. 'ந' வை தந்நகரம் என்று கூறுவர். காரணம் ந் என்ற ஒற்றெழுத்தை தொடர்ந்து வரக் கூடிய மெய்யெழுத்து த வர்க்கமாக தான் இருக்கும். 


எ.டு. வெந்தயம், பந்து, பந்தயம்.


*நவம்பர் 20*


*திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள்...*


திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.


*நீதிக்கதை*


கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார். 


ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது. 


மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது. 


இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார். 


ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது. 


மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும். 


நீதி :


பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.


*இன்றைய செய்திகள்*


20.11.2025



⭐விவசாயத்திற்கு உதவி புரிய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளது. இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது- பிரதமர் மோடி.


⭐உக்ரைன் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ரஷியா சராமாரி தாக்குதல்: 10 பேர் பலி.


⭐ செங்கல்பட்டு-காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை (NH132B) மற்றும் காஞ்சிபுரம்-திருத்தணி மாநில நெடுஞ்சாலை (SH58) ஆகிய இரண்டு சாலைகளும் 4 அல்லது 6 வழித்தடங்களாக விரிவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀ஒருநாள் பேட்டர் தரவரிசை: 22நாட்களுக்குள் ரோகித் சர்மாவின் முதல் இடத்தை பறித்த நியூசிலாந்து வீரர் டாரில் மிட்செல்.  ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார்.


*Today's Headlines*



⭐The government has opened all avenues to help agriculture. 

* India is becoming a global hub for organic farming - Prime Minister Modi.


⭐ The Tamil Nadu government is planning to expand both the Chengalpattu-Kanchipuram National Highway (NH132B) and the Kanchipuram-Thirutthani State Highway (SH58) to 4 or 6 lanes.


⭐Russia launches missile and drone attacks on Ukraine, and 10 civilians were killed.



 *SPORTS NEWS* 


🏀One Day Batsman Rankings: New Zealander Daryl Mitchell dethroned Rohit Sharma to become the World's top  No. 1 batsman in 22 Days. Rohit Sharma has slipped to 2nd place. Afghanistan's Zadran is in 3rd place.


Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8




01-09-2025க்கு முன் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான Special TET - TRB வெளியிட்ட Notification


01-09-2025க்கு முன் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - அறிவிப்பாணை வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



இந்த அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 



இந்த அறிவிப்பில் உள்ள முக்கிய தகவல்கள் தொகுப்பு:


* 01-09-2025 ஆம் ஆண்டு  முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்


* Online விண்ணப்பம் தொடங்கும் நாள்:


20-11 2025


* விண்ணப்பம் செய்ய கடைசி நாள் 


20-12-2025


* மொத்தம் 150 வினாக்கள்


அனைத்து பிரிவினரும் 60% மதிப்பெண் (82 மதிப்பெண் பெற வேண்டும்)


* விண்ணப்பம் திருத்தம்


21-12-2025

22-12-2025



* தேர்வு நடைபெறும் நாள்*l


📄PAPER-1

24-01-2026


📄PAPER-2

25-01-2026


* கால அளவு


3 மணி நேரம்


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 - 8 வகுப்புகள் வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் Special TET தகுதித் தேர்வு


Paper - 1 


24.01.2026 


For 1-5 Class Secondary Grade Teachers


Paper - 2 


25.01.2026 


For BEd Teachers.


Online application last date 20.12.2025


Exam fees 600/300




Notification No.05/2025 

 Date: 19.11.2025 

GOVERNMENT OF TAMILNADU 

TEACHERS RECRUITMENT BOARD 

3rd Floor, Puratchi Thalaivar Dr.M.G.R. Centenary Building, Perasiriyar 

College Road, Chennai – 600 006. 

Website: https://www.trb.tn.gov.in

TEACHER ELIGIBILITY TEST FOR INSERVICE TEACHERS - 2025 

NOTIFICATION 

Applications are invited for Teacher Eligibility Test (TET), Paper - I and Paper - II only from the eligible working Teachers who are appointed on or before 01.09.2025 as SGT, BT Assistant and other Equivalent cadre Teachers on Time Scale/Consolidated/Part-time pay under the Directorate of School Education / Directorate of Elementary Education / Most Backward Class Department / Adi-Dravida Welfare Department / Tribal Welfare Department / Chennai Corporation / Coimbatore Corporation / Madurai Corporation / Forest Department / Differently Abled Department / Other Departments, Government, Government Aided and Unaided Recognized Private Schools of State Board and Other Boards etc., in Tamil Nadu for the year 2025 through online mode only till 20.12.2025. 

Teachers Recruitment Board has been permitted to notify and conduct Teacher Eligibility Test for currently working Teacher. 

[G.O.(Ms).No.231, School Education (TRB) Department, dated:13.10.2025]



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8




சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்

 

Special TET சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு 


பத்திரிக்கைச் செய்தி


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் /தனியார் பள்ளிகளில் தற்பொழுது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள்-II) நடத்துவதற்கான அறிவிக்கை A (Website: http://www.trb.tn.gov.in) 19.11.2025 இன்று வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணிபுரியும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 20.11.2025 முதல் 20.12.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


நான்: 19.11.2025


இடம்: சென்னை-06



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 19.11.2025

கிழமை:- புதன்கிழமை


*திருக்குறள்:-*


பால்:- அறத்துப்பால்

இயல்:- துறவறவியல்

அதிகாரம்:- மெய்யுணர்தல்


*குறள் : 356*



கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 

மற்றீண்டு வாரா நெறி. 



*விளக்க உரை:*



கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.



*பழமொழி :*


If the intention to achieve is deep in your heart, you can achieve anything with your consistent effort. 



சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால், உன் விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம்.



*இரண்டொழுக்க பண்புகள் :*



1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.





2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.



*பொன்மொழி :*



அனுபவம் என்பது சிறந்த ஆசிரியர். நமக்கு பலவற்றை கற்றுக் கொடுக்கிறது - பிளினி.



*பொது அறிவு :*



01.ரப்பர் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள் எது?



ரப்பர் மரத்தின் பால்-லேடெக்ஸ்


natural latex from rubber trees



02. இந்தியாவில் கருப்பு மிளகு அதிகமாக விளையும் மாநிலம் எது?



கர்நாடகா- Karnataka



*English words :*



perplexed-confused



mischief-playful behaviour



*தமிழ் இலக்கணம்:*



 'ன' என்ற எழுத்துக்கு றன்னகரம் என்றும் பெயர் உண்டு.இது வரும் சொற்களில், அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகவே இருக்கும்.


எடுத்துக்காட்டு: கன்று, இன்று, சென்றான், மன்றம், தென்றல்.



*நவம்பர் 19*



*இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்*



இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக மாறினார்.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.



*உலகக் கழிவறை நாள்*



உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே.



*நீதிக்கதை*



 *அற்பமாக எண்ணாதே*



ஒரு காட்டின் ஓரத்தில் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. அதற்கு அப்பால் அதை மிக ஒட்டி ஒரு வறண்ட நிலப் பகுதியும் இருந்தது. இத்தோட்டத்தில் பல அழகிய மலர்கள் இருந்தன. ரோஜா, சாமந்தி, முல்லை, கனகாம்பரம்  போன்ற பல  மலர்கள் இருந்தன. வறண்ட பகுதியில் கள்ளிச் செடிகள் வளர்ந்திருந்தன. எல்லா செடிகளும் ஒற்றுமையாக இருந்தன. ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டன. காட்டு செய்திகளை மலர்கள் சொல்லும். வறண்ட நிலப் பகுதியில் நடக்கும் காரியங்களை கள்ளிச்செடிகள் அவர்களோடு கூட பகிர்ந்து கொள்ளும். ஆனால் இந்த ரோஜா செடிகள் மட்டும் தலைக்கனம் பிடித்தவையாக இருந்தன. அவைகள் இந்த கள்ளிச் செடிகளை பார்த்து “எப்படி முள்ளோடு இருக்கிறது எவ்வளவு குண்டாக இருக்கிறது  ஒரு உருவம் இல்லாமல் இருக்கிறது” என்று சொல்லி கேலி செய்வது உண்டு. அதைக் கேட்டு கள்ளிச்செடிகள்  சோகமாக இருப்பது உண்டு. சில நாட்கள் கழித்து கோடை காலம் வந்தது. காட்டில் சில மாதங்களாக மழை பெய்யவில்லை. ஆகவே கோடைகாலத்தில் குளங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டன. மிருகங்களும் பறவைகளும் நீர் தேடி வேறு இடம் செல்வதற்கு தயாராகி விட்டன. செடிகள் பாவம் அவைகளால் எங்கும் செல்ல முடியாது எனவே அவைகள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தாங்கள் இறந்து விடுமோ என்று பயந்தன. அந்த வேளையில் கள்ளிச்செடிகள் எல்லாம் நாங்கள் எங்களுடைய நீரை உங்களுக்கு வேரின் வழியாக தருகிறோம் என்று சொல்லி அவைகளை ஆறுதல் படுத்தின. அதன்படியே தாங்கள்  சேமித்து வைத்திருந்த அதிகப்படியான நீரை வேரின் வழியாக இந்த செடிகளுக்கு கொடுத்து உதவின. சிறிது நாட்களிலே மழை பெய்ய தொடங்கி எல்லா செடிகளும் பிழைத்து விட்டன. இப்பொழுது ரோஜா செடிகள் தங்கள் தலைக்கனம் குறைந்து தாங்கள் தேவை இல்லாமல் பேசியதை எண்ணி வருந்தி  கள்ளிச்செடிகளிடம் மன்னிப்பு கேட்டன.



நீதி: பிறரை அற்பமாக எண்ணுவது மிகவும் கொடிய‌ குணம். நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் எனவே ஒருவரை உருவ கேலி செய்வது மிகவும் தவறு. மற்றவர் மனம் வருந்தும்படி ஒருநாளும் பேசக்கூடாது. நம்முடைய அழகும் திறமையும்  அல்ல நம்முடைய குணங்களே மிகவும் முக்கியமானதாகும்.



*இன்றைய செய்திகள்*


 19.11.2025



⭐இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்



⭐தென்காசி மாவட்டத்தில் கனமழை --  குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிப்பு.




⭐அமெரிக்காவிடம் இருந்து ஆண்டிற்கு 22 லட்சம் டன் LPG இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்.




⭐இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்.



⭐அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை கடும் சரிவு.



🏀 விளையாட்டுச் செய்திகள்



🏀ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. 


இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.



*Today's Headlines*


⭐Tamil Nadu has become the sports capital of India - Minister Anbil Mahesh


⭐Bathing at the Courtallam Main Falls has been banned due to heavy rains in the Tenkasi district.


⭐India signs deal to import 2.2 million tonnes of LPG per year from US.


⭐Enrollment of new international students at US universities plummets.




 *SPORTS NEWS* 

🏀The much-awaited Ashes series between Australia and England is set to begin on the 21st. * Players from both teams are training hard for the series.


Park Avenue Euphoria, Eau De Parfum Men, 100ml | Long Lasting Perfume for Men | Fragrance Scent


https://amzn.to/3LKzpHT




கனமழை காரணமாக 18-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

 

 

கனமழை காரணமாக 18-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் (Districts declared holiday to Schools on 18-11-2025 due to heavy rain) விவரம்


விழுப்புரம்


கடலூர்


புதுச்சேரி, காரைக்கால் (பள்ளிகள், கல்லூரிகள்)





Philips Steam Iron DST0820/20 (World no. 1 Ironing Brand) Powerful 15 gm/min Steam Output with Spray, Multilayer Coated Non stick Soleplate with 1250 W quick Heat up






Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/49Bxdfw



இன்று (நவம்பர் 18) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது - தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை


இன்று (நவம்பர் 18) பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது


 ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று (நவம்பர் 18) அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தலைமைச்செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Helmet & Multipurpose Cable Lock


https://amzn.to/4oMjrvz






> *ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்.*

1. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எம்.பி.முருகையன் கூற்றுப்படி, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 4 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

3. இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

4. அதேபோல, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ.18) முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5. தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:

6. சில அரசு ஊழியர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக நோட்டீஸ் அளித்துள்ளன.

7. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்ட விதிகளின்படி, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் உள்பட எந்த ஒரு வடிவில் போராட்டம் நடத்தினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

8. தற்காலிக ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

9. மருத்துவக் காரணம் இன்றி விடுப்பு எடுத்தால் அல்லது போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.

10. தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.



MOST IMMEDIATE

Human Resources Management (J) Department, Secretariat, Chennai-600 009.

Letter No.6499/J2/2025-2, dated 17.11.2025


From

Thiru. N. Muruganandam, I.A.S., Chief Secretary to Government.


To

All Additional Chief Secretaries / Principal Secretaries / Secretaries to Government,

Departments of Secretariat, Chennai - 600 009.

All Heads of Departments (Through Administrative Departments of Secretariat

All District Collectors.


Sir / Madam,

Sub : Service Associations - Proposed to palcipate in ’One day Strlke’ on 18.11.2025 (Tuesday) by certain recognised and unrecognized associations — Participation of State Government Employees / Teachers — Instructions — Issued.


Ref : Government Letter No.105654/K2/91-1, Personnel and Administrative Reforms Department, dated 18.12.1991.


I am directed to state that information has been received that certain recognised and unrecognized Associations have proposed to participate in ’One day Strike’ on 18.11.2025 (Tuesday) pressing certain demands.

1. In this regard, I am directed to invite your attention to the earlier instructions issued by the Government in the reference cited and to point out that a ’strike or threat of strike' or participation by Government Servants in strike or demonstration or any other form of agitation, affecting lhe normal Nnctioning of the Government offices. amounts to violation of rules 20, 22 and 22-A of the Tamil Nadu Government Servants’ Conduct Rules, 1973.

2. I am, therefore, directed to instruct you to impress on the Government staff members of your department that they should not indulge in violation of the provisions of the Tamil Nadu Government Servants’ Conduct Rules, 1973 lest disciplinary action will be taken against them. If any of the Government Servants have not attended office, consequent of fheir participation in the proposed ’One day Strike’ on 18.11.2025 (Tuesday) or any other day organised by recognized and unrecognized Service Associations of the Teachers and Government Employees, their period of absence has to be considered as unauthorized and they are not entitled to the pay and allowances on the basis of the principle *No Work - No Pay’, as per the instructions issued in the Government letter In the reference cited. The part time employees, those on daily wages and on consolidated pay, will be liable to bs discharged from service.

3. I am, therefore, directed to instruct that besides ensuring I:hat no Government Servant violates the Tamil Nadu Government Servants’ Conduct Rufes,1973, disciplinary action should also be taken promptly for unauthorized absence from duty by the employees. In thls connection, it Is also informed that application for ‘Ca9ual Leave' or any other leaye olher than medical leave shall not be allowed on the day of strike.

4. I am also instruct you to watch the position and report the facts about tote violation of the Tamil Nadu Government Servants' Conduct Rules,1973, in this regard by any of the Government Servants' in your department on 18.11.2025 (Tuesday) or any other day.

5. In this connection, all the Heads of Departments are instructed to send a report on the attendance position in respect of the staff working in the offices under their administrative control to the Government in Secretariat Department concerned, in the proforma given below and also through the Google spread sheet link for Heads of the Departments - htip://tiny.cc/osmu001 by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday). Further, the Departments of Secretariat are requested to confirm the Heads of Departments under your administrative control befbre sending the Google spread sheet link. A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the email Id: parjsar@tn.gov.in by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday) without fail.

6. All the District Collectors are Instructed to send attendance particulars in respect of staff working in the Offices under their administrative control to Government through the Office of the Commissioner of Revenue Administration in the proforma given below and also through the Google spread sheet link for all Coflectorates - http./tiny.cc/rsmu001 by 10.15 a.m. of 18.11.2025 (Tuesday). A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the e-mail id: parjsar@tn.gov.in by 10.15a.m. on GB.11.2025 (Tuesday) without fail.

7. The Secretariat departments are instructed to send the attendance deBils of Officers / StaW in their department and consolidated details in respect of Heads of tha Dapartmants, separately, in the proforma givan below and also through the Google spread sheet Ilnk for Secretariat - http://tiny.cc/ismu001 by 1 1.00 a.m. on 18.11.2025 (Tuesday) to the Human Resources Management {J) Department. A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the e-mail id: parjsar@tn.gov.in by 10.15 a.in. on 18.11.2025 (Tuesday) without fail.


Proforma



* Working strength is the actual personnel available as on date.

8. This shall be treated as ’Most Immediate’.



Yours faithfully,

for Chief Secretary to Government.




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-11-2025

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 18.11.2025

கிழமை:- செவ்வாய்கிழமை


*திருக்குறள்:*


பால்:- அறத்துப்பால்

இயல்:- துறவறவியல்

அதிகாரம்:- மெய்யுணர்தல்


*குறள் 351:*

 

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் 

மருளானாம் மாணாப் பிறப்பு.


 *விளக்க உரை:*


மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.


*பழமொழி :*


Break through a thousand obstacles and move forward. 


ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறு.


*இரண்டொழுக்க பண்புகள் :*


1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.



2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.


*பொன்மொழி :*


ஒருவனுக்கு என்ன நேர்கிறது என்பது அனுபவம் அல்ல; ஏதாவது நேரிடும் போது அவன் என்ன செய்கிறான் என்பதே அனுபவம் -ஆல்டஸ் ஹக்ஸ்லி 


*பொது அறிவு :*


01.தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?


தாண்டிக்குடி, திண்டுக்கல் 


Thandigudi, Dindigul 


02.உலகிலேயே இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடு எது?


பிச்சாவரம் அலையாத்திக் காடு


Pichavaram Mangrove Forest


*English words :*


epitaph- words written on the


 Tombstone,craned-to stretch one's neck to see


*தமிழ் இலக்கணம்:*


'ன', 'ண' போன்ற எழுத்துக்களின் சரியான பயன்பாட்டிற்கு, அவை ஒலிக்கும் இடம் மற்றும் அடுத்து வரும் எழுத்துக்களின் விதிகளைப் புரிந்துகொள்வது அவசியம்.



'ண' வரும் சொற்களில், அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகவே இருக்கும் 

எடுத்துக்காட்டு: மண்டபம், நண்டு, உண்டியல், கொண்டாட்டம், கண்டு. 


*அறிவியல் களஞ்சியம் :*


 பறவை வளர்ச்சியின் வரலாற்றின் காரணமாகவும், முட்டைகள் கூட்டில் இருந்து உருண்டு விழாமல் இருக்க பறவைகள் கட்டும் கூட்டின் அமைப்பிற்கு ஏற்ப முட்டை வடிவம் அமைகிறது என்று காரணம் சொல்லப்பட்டு வந்தது. சமீபத்திய ஆய்வில் 1,400 மேலான  பறவை வகைகளின் 50,000 முட்டைகளின் அமைப்பை ஆராய்ந்த ஆய்வாளர்கள் குழு (Stoddard et al. 2017) பறவையின் பறக்கும் வாழ்க்கைத் தேவைக்கேற்ப முட்டையின் வடிவங்கள் அமைகின்றன.


 *நீதிக்கதை*


ஒரு ஊரில் ஒரு காடு இருந்தது. அந்த காட்டில் பலவிதமான பறவைகள் இருந்தது. அதில் சிட்டு என்ற ஒரு குருவியும் இருந்தது. அந்த குருவிக்கு உயர உயர வானத்தில் பறக்க மிகவும் பிடிக்கும். அது எப்பொழுதும் வானில் பறந்து கொண்டே இருக்கும். அது மிகுந்த சந்தோஷமாக இருந்தது.  


ஒரு நாள் அந்த காட்டிலே ஒரு பெரிய புயல் வந்தது. மரங்கள் எல்லாம் ஆடியது. இந்த குருவியால் மேலே பறக்க முடியவில்லை. அப்படி பறக்க முயற்சித்த போது ஒரு மரத்தின் கிளை அதன் மேல் உடைந்து விழுந்தது. அது கீழே  மயங்கி விழுந்து விட்டது. அது விழித்த பொழுது ஓரளவு புயல் அடங்கி இருந்தது. ஆனால் பறக்க முயற்சித்த போது அந்த குருவியால் பறக்க முடியவில்லை‌. அது மிகுந்த வேதனை அடைந்தது. ஏனென்றால் அதற்கு காற்றில் பறப்பதுதான் மிகவும் பிடிக்கும்.  பறக்க  முடியாமல் போனதற்காக அழுது கொண்டே இருந்தது. 


அப்பொழுது அந்த வழியாக ஒரு வயதான முதியவர் வந்தார். அவர் அந்த குருவியை பார்த்து ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். நான் பறந்து கொண்டிருந்தேன் இப்பொழுது என்னுடைய இறக்கைகள் உடைந்து விட்டது. என்னால் பறக்க இயலவில்லை என்று கூறியது. அப்பொழுது அந்த முதியவர் பறக்க முடியாவிட்டால் என்ன நட என்று கூறினார். நான் எப்படி நடக்க முடியும் நான் எப்பொழுதும் பறந்து கொண்டே இருப்பவளாச்சே என்று அந்த சிட்டு கூறியது. 


அவர்  ஒரு வழி அடைத்தால் இன்னொரு வழி திறக்கப்படும் உனக்கு பறக்க முடியவில்லை ஆனால் கால்கள் உள்ளதால் நடக்க முடியும் எனவே நடந்து செல் என்று சொன்னார். அந்த குருவியும் அவர் சொன்னதற்காக நடக்க முயற்சித்தது முதலில் அதனால் நடக்க முடியவில்லை. ஆனால் சிறிது நாட்கள் கழித்து நன்கு நடக்க ஆரம்பித்தது.


இப்பொழுது குருவி தன்னைச் சுற்றி நடக்கும் அநேக காரியங்களை கவனிக்க ஆரம்பித்தது. நடக்க ஆரம்பித்ததினால் இலைகளுக்கு அடியில் இருக்கும் சிறுசிறு பூச்சிகள், உணவு கொண்டு சாரை சாரையாக  செல்லும் எறும்புகள், அங்கங்கே கிடைத்த  தானியங்கள், அழகிய மலர்கள், மலர்களை சுற்றி வட்டமிடும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் என்று பல பல காரியங்களை அது பார்த்து மகிழ்ந்தது.


 நான் எப்பொழுதும் மேலே பறந்து கொண்டிருந்ததனால் இவை எல்லாவற்றையும் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்பொழுது இவைகளை நான் பார்த்து ரசிக்க கடவுள் கிருபை செய்துள்ளார் என்று அது எண்ணி மகிழ்ந்தது. 


ஒரு நாள் இப்படியாக அது நடந்து நடந்து அழகிய காரியங்களை பார்த்து கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதனுடைய உடலில் ஒரு புத்துணர்ச்சியை‌ உணர்ந்தது. தன் இறக்கைகளை விரித்து பார்த்தது  அந்த சிட்டுகுருவியால் இப்போது பறக்க முடிந்தது. இப்பொழுது இந்த குருவி பறப்பது மட்டுமல்ல  நடந்தும்  உலகத்தையும் காட்டையும் ரசித்துக் கொண்டிருக்கிறது.


 நீதி:  ஒருவேளை நம்முடைய வாழ்விலே ஒரு பிரச்சனை வரும்போது அதுவும் நன்மைக்காகவே என்று எண்ணிக் கொண்டு வேறு ஒரு வழியை நாம் தேடினால் நம்மை படைத்தவர் நமக்கு நிச்சயமாக ஒரு வழியை தருவார்.


*இன்றைய செய்திகள்*


18.11.2025



⭐2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் - முதலமைச்சர் பெருமிதம்.


⭐சவுதியில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.


⭐பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானம் வாங்குகிறது உக்ரைன்.


⭐அசாமில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு.


🏀விளையாட்டுச் செய்திகள்


🏀2026 IPL: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சங்ககாரா மீண்டும் நியமனம்.


*Today's Headlines*



⭐Chief Minister is proudly said that Medicine at People's doorstep scheme has been taken care of the health of 2.50 crore people. 


⭐Chief Minister M.K. Stalin expressed condolences over the death of 42 Indians in Saudi Arabia.


⭐Ukraine going to buy 100 Rafale fighter jets from France.


⭐Election Commission orders special revision amendment in Assam.


 *SPORTS NEWS* 


🏀2026 IPL: Sangakkara reappointed as Rajasthan Royals head coach.



Helmet & Multipurpose Cable Lock


https://amzn.to/4oMjrvz




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆலோசனை - இயக்குநரின் செயல்முறைகள்

      ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்...