கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

 


தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது ஒன்றிய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI


The Union Government's Unique Identification Authority of India presented the Achievement Award to the School Education Department of the Government of Tamil Nadu.


பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் பதிவை துல்லியமாக மேற்கொண்டதில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசின் UIDAI பாராட்டு




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் (ELCOT) ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” எனும் இத்திட்டம் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.72 நாள்.11.03.2024-ல் வெளியிடப்பட்டது.


இத்திட்டமானது தொடர்ந்து 2024-25-ஆம் கல்வியாண்டில் ஆதார் பதிவு மேற்கொள்பவர்களைக் கொண்டு இப்பணி அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக நாளது வரை ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு.


பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,12,81,426


ஆதார் புதிய பதிவு மேற்கொள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை:13,437


கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை : 16,06,961


ஏற்கெனவே புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டவர்களில் கண்டறியப்பட்டவர்கள் : 62,25,210


ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் 70 சதவீத மாணவர்களுக்கு புதிய ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது இத்திட்டத்திற்கு ஒரு மைல்கல் ஆகும்.


​பள்ளிக் குழந்தைகளின் நலனிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிடுவதுடன் “பயிலும் பள்ளியிலேயே ஆதார்” என்ற இச்சிறப்புத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எவரும் அழைக்கப்படாமல் அவரவர் பயிலும் பள்ளியிலேயே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சிறந்த இலக்கினை தமிழ்நாடு மட்டுமே எட்டியுள்ளது. இந்த சாதனையை பாராட்டி இந்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையமானது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு “சாதனையாளர் விருது” வழங்கி கௌரவித்துள்ளது.




வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வழக்கில், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம்


வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வழக்கில், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம்


ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு


மாநில மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு: குடியரசுத் தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு


மாநில மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என குடியரசு தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ள உச்சநீதிமன்றம், முடிவெடுப்பதற்கு முன் உச்சநீதிமன்றத்தை அணுகுவது விவேகமானது என்று தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "சட்டப்பேரவை நிறைவேற்றிய ஒரு மசோதாவை நிறுத்திவைத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு செய்தால் அது தொடர்பாக அமைச்சரவை ஆலோசனைப்படி ஒரு மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்.


அமைச்சரவையின் ஆலோசனைக்கு புறம்பாக அந்த மசோதாக்களை நிறுத்திவைப்பதாக இருந்தால், ஆளுநர் அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் அவற்றை திருப்பி அனுப்ப வேண்டும். அதேவேளை அந்த மசோதாக்கள் மாநில சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அந்த மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு ஆளுநரால் பரிந்துரைக்கப்படுமானால் அவற்றின் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்” என தீர்ப்பளித்தது.


மசோதாக்கள் மீது சட்ட ஆலோசனையை உச்சநீதிமன்றத்திடம் கேட்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில ஆளுநர்களுக்கு கிடையாது. இதை சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஆளுநர்கள் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தால், அவர் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை பெறுவது விவேகமானது. அரசியலமைப்பின் பிரிவு 143இன் கீழ் ஒரு மசோதா குறித்த சட்ட ஆலோசனையை குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது கட்டாயம் அல்ல. என்றபோதிலும், விவேகமான ஒரு நடவடிக்கையாக, குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆளுநர் மசோதாக்களை அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைப்பதற்கான வழிமுறை மாநில அளவில் இல்லாததால் இது மிகவும் அவசியமானது.” என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


மேலும், "ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு அதன் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு உண்டு. ஒரு தவறான மசோதா சட்டமாக மாறினால் இயற்கையாகவே பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். எனவே, முன்கூட்டியே அத்தகைய ஒரு சட்டம் இயற்றப்படாமல் தடுக்கப்படுமானால் அது நேரத்தையும் பொது வளங்களையும் மிச்சப்படுத்தும். மேலும், பொருத்தமான திருத்தங்களை சட்டமன்றம் மேற்கொள்வதற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.” என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


NMMS 2024-2025 Individual Students Marks Download Link

 


NMMS 2024-2025 Individual Students Marks Download Link


https://apply1.tndge.org/nts-result-change-2022


NMMS 2024-2025 Result Analysis

 

NMMS 2025 - Results Analysis


இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் 2,30,345. 

மாநிலத்தில் தேர்வு செய்யப்படும் மொத்த மாணவர்கள் = 6,695


🛑 General category தேர்வு செய்யப்படுபவர்கள் = 1992 பேர்


(190 லிருந்து 108 மதிப்பெண்கள் பெற்றவர்கள் General category இல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்)


🛑 OBC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 1173 பேர்


(108 - 97 மதிப்பெண்கள்)


🛑🛑 BCM category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 234 பேர்


(108 - 97 மதிப்பெண்கள்)


🛑 MBC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 1338 பேர்


(108 - 96 மதிப்பெண்கள்)


🛑 SC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 995 பேர்


(108 - 92 மதிப்பெண்கள்)


🛑 SCA category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 198 பேர்


(108 - 90 மதிப்பெண்கள்)


🛑 ST category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 64 பேர்


(108 - 92 மதிப்பெண்கள்)


🛑 PWD category(Blind) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 16 பேர்


(110 - 63 மதிப்பெண்கள்)


🛑 PWD category (Deaf) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 6 பேர்


(72 - 59 மதிப்பெண்கள்)


🛑 PWD category (ORTHO) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 57 பேர்


(130 - 72 மதிப்பெண்கள்)


Gen Ortho 1 மாணவர்


OBC Ortho 1 மாணவர்


MBC Ortho 1 மாணவர்


SC Ortho 19 மாணவர்கள் (72-58)


ST ortho 3மாணவர்கள் (71-60)


ஆக மொத்தம் 6,695 மாணவர்கள் மேற்காண் பட்டியலின் படி அரசின் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள்.


_*குறிப்பு: (சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் cut off மதிப்பெண்கள் கணிசமாக உயர்ந்துள்ளது)*_


வெற்றி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐



NMMS 2024-2025 Result Analysis


*_General 1992 students Mark 170 - 108_*


*_OBC -1773 students Mark 108 - 97_*


*_BCM -234 students Mark 108 - 97_*


*_MBC 1338 students Mark 108 - 96_*


*_SC 985 students  Mark 108 - 92_*


*_SCA 198 students Mark 108 - 90_*


*_ST 94 students Mark 108 - 92_*


*_PWD CANDIDATES 111 students Mark 110 - 60_*


*_Total selected students 6695_*



NMMS 2025 Cut off :

General 108

OBC 97

BCM 97

MBC 96

SC 92

SCA 90

ST 92

அரசு ஊழியர்கள் அரசின் முன் அனுமதி பெற்று புத்தகம் எழுதலாம்



 அரசு ஊழியர்கள் அரசின் முன் அனுமதி பெற்று புத்தகம் எழுதலாம்


அரசு ஊழியர்கள் அரசின் முன் அனுமதி பெற்று புத்தகம் எழுதலாம். ஆனால் அதில், அரசை விமர்சிக்க கூடாது' என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவை பின்பற்றி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வி சார்ந்த அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டை முன்னிட்டு, அரசு ஊழியர்களின் எழுதும் திறனை அரசு அங்கீகரிக்கிறது. எழுதும் திறமையுள்ளோர் இலக்கியம், சிறுகதை, நாடகம், கட்டுரை, கவிதை, அரசின் கொள்கைகள், துறை சார்ந்த விளக்கங்கள் அடங்கிய நுால்களை எழுதும் முன், அரசின் அனுமதியை பெற வேண்டும்.


அதேபோல, அரசின் மீதான விமர்சனமோ, எதிரான கருத்துக்களோ, தாக்குதலோ இடம் பெறாது; மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் கருத்துக்கள் இடம் பெறாது என்ற நிபந்தனையுடன் கூடிய முன் அனுமதி பெறாமல், கலைப்பணிகளில் ஈடுபடவோ, புத்தகத்தை வெளியிடவோ கூடாது.


அத்துடன், முன் அனுமதி பெறாமல், வெளியீட்டாளரிடம் இருந்து ஊதியமோ, காப்புரிமை தொகையோ பெறக்கூடாது. புத்தகத்தை விற்பனை செய்வதற்கோ, ஊக்குவிப்பதற்கோ தன் நேரத்தையும், அரசாங்க செல்வாக்கையும் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


NMMS EXAM 2024 - 2025 - LIST OF SELECTED CANDIDATES

 


NMMS 2024-2025 தேர்வில் வெற்றி பெற்ற 6695 மாணவர்கள் விவரம் வெளியீடு


NMMS EXAMINATION 2024 -2025 - LIST OF 6695 SELECTED STUDENTS CANDIDATES



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



NMMS 2024-2025 Individual Students Marks Download Link


https://apply1.tndge.org/nts-result-change-2022

NMMS Exam 2025 Results - செய்தி வெளியீடு


தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு (NMMS EXAMINATION) தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்ந்து செய்திக்குறிப்பு வெளியீடு


NMMS Exam February 2025 Results - Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




NMMS 2024-2025 Individual Students Marks Download Link


https://apply1.tndge.org/nts-result-change-2022

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

  தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது ஒன்றிய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI The Union Government...