கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aided School Deployment - DEE Proceedings

 


உபரி ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்தல் / மாற்றுப்பணி வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


அரசு உதவி பெறும் பள்ளிகள் பணியாளர் நிர்ணயம் செய்தல் - DEE Proceedings 


Aided School Deployment - DEE Proceedings 


Deployment and Deputation Teachers details



அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் படிவங்கள்



>>> செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> படிவங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



OnePlus Nord Buds 3r TWS Earbuds up to 54 Hours Playback, 2-mic Clear Calls, 3D Spatial Audio, AI Translation, 12.4mm Drivers, Dual-Device Connectivity, 47ms Low Latency - Aura Blue


https://amzn.to/4rQFMdh




NMMS தேர்வை பிப்ரவரியில் நடத்த MP கோரிக்கை


NMMS Examination January 2026 -  NMMS 2026 தேர்வை பிப்ரவரியில் நடத்த நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை


தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு (NMMS) உதவித் தொகைக்கான 2026 தேர்வை  பிப்ரவரி மாதத்தில் நடத்திடுக! 


தோழர்.இரா.சச்சிதானந்தம்.

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் 


இது குறித்து, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  தெரிவித்துள்ளதாவது: 


2025-26 ஆம் ஆண்டிற்கான வருவாய் வழி மற்றும் தகுதிப்படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு (NMMS). 10.01.2026 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளதாக பார்வை 1ன் மூலமாக அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வானது பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறும். தற்போது அரையாண்டுத் தேர்வில் மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர். விடுமுறை முடிந்து ஒரு சில தினங்களிலேயே தேர்வு என்பதால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க போதுமான நாட்கள் இல்லை. இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இத்தேர்வை எதிர்கொள்வது கடினமானதாக இருக்கும். எனவே, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி வழக்கமாக தேர்வு நடைபெறும் பிப்ரவரி மாத இறுதியில் தேர்வினை நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 


OnePlus Nord Buds 3r TWS Earbuds up to 54 Hours Playback, 2-mic Clear Calls, 3D Spatial Audio, AI Translation, 12.4mm Drivers, Dual-Device Connectivity, 47ms Low Latency - Aura Blue


https://amzn.to/4rQFMdh




வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய சிக்கல்

 


வாக்காளர் பட்டியலில் (Voters List ) புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய சிக்கல்


வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், 2002 அல்லது 2005 SIR பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் அல்லது உறவினர்களின் விவரங்களை தெரிவிப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல் அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb



"சமவேலைக்கு சமஊதி​யம்" வழங்​கக்​கோரி சென்னை DPI வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது



 சமவேலைக்கு சமஊ​தி​யம்’ வழங்​கக்​கோரி சென்னை டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட முயன்ற ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்​பட்​டனர். சாலை​யில் அமர்ந்து போராடிய​தால் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டது. ஆசிரியை ஒரு​வர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்​பட்​டது.


அரசு மற்​றும் அரசு உதவி​ பெறும் பள்​ளி​களில் 31.5.2009க்கு முன்னர் பணி​யில் உள்ள இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், அதற்கு பின்னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்படை சம்​பளத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு இருந்து வரு​கிறது. ஊதிய முரண்பாட்டை கண்​டித்து சமவேலைக்கு சமஊ​தி​யம் என்ற கோரிக்​கையை வலியுறுத்தி நீண்ட கால​மாக போராடி வருகின்​றனர்.


இந்​நிலை​யில், டிசம்பர் 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் உள்​ளிட்ட கல்​வித்​துறை அலு​வல​கங்​கள் அமைந்​துள்ள DPI வளாகத்தை முற்றுகையிட்டு போராட்​டம் நடத்​தப்​ போவதாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்து வளாகத்​தின் அனைத்து வாயில்​களும் மூடப்​பட்டு போலீ​ஸார் குவிக்கப்​பட்​டனர்.


போராட்​டத்​துக்​காக வெளியூர்​களில் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்​களை நுங்கம்பாக்கம், எழும்​பூர் ரயில்​நிலை​யங்​கள் உள்​ளிட்ட இடங்​களில் வழிமறித்து போலீஸ் வாக​னங்​களில் ஏற்​றிச்​சென்​றனர். இந்நிலையில், காலை 11.30 மணி​யள​வில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்​தின் பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் மற்​றும் நிர்​வாகி​கள் தலை​மை​யில் 50-க்கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை முற்றுகை​யிட முயன்​றனர்.


மற்​றொரு​புறம் ஏராள​மானோர் குவி​யத்​தொடங்​கினர். அதில் ஒரு பிரி​வினர் சாலையில் அமர்ந்து கோஷமிட்​டனர். அவர்களை காவல் துறையினர் குண்​டுக் கட்டாக தூக்கி போலீஸ் வாக​னங்​களில் ஏற்றினர்.


திடீர் மறியல்: தொடர்ந்து ஆசிரியர்கள் கூட்டம் கூட்​ட​மாக வரு​வதும் சாலை​யில் அமர்ந்து கோஷமிடு​வதும், அவர்​களை போலீஸார் வாக​னங்​களில் ஏற்​றிச் செல்வதும் என கல்​லூரிச்சாலை​யில் போக்குவரத்து நெரிசல் ஏற்​பட்​டது. வாகனங்கள் மாற்​றுப் பாதை​யில் திருப்​பி​விடப்​பப்​பட்​டன. இதற்​கிடையே, போராட்டத்தில் ஈடு​பட்ட நாமக்​கல் ஆசிரியை மகேஸ்​வரி என்​பவர் மயங்கி விழுந்​தார். இதையடுத்து அவர் அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த ஆம்​புலன்​ஸில் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார்.


போராட்​டம் தொடரும்: போராட்​டம் சற்று தணிந்த நிலை​யில் 50-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​களை ஒய்​எம்​சிஏ கல்​லூரி அருகே போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். இதனால் அவர்​கள் அனை​வரும் சாலை​யில் அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பின்​னர் அவர்​கள் போலீஸ் வாக​னத்​தில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்​டனர்.


முன்​ன​தாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்​கத்​தின் பொதுச்​செயலாளர் ஜே.​ராபர்ட் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தி​முக தேர்​தல் வாக்​குறு​தியை இது​வரை நிறைவேற்​ற​வில்​லை, தொடர்ந்து பேச்​சு​வார்த்​தை, குழு அமைப்​பது என தள்ளிக்​கொண்டு செல்​கிறார்​கள்.


முன்​கூட்​டியே கைதுசெய்​வது, வலுக்கட்டாயமாக அப்​புறப்​படுத்​து​வது என எங்​கள் போராட்​டத்தை ஒடுக்க நினைத்தாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராடு​வோம்.  போராடக்​கூட அனு​மதி மறுக்​கிறார்​கள். அறவழி​யில் போராடும் எங்​களை தீவிரவாதிகளைப் போல நடத்துகிறார்கள்” என்​றார்.


அரசியல் தலை​வர்​கள் கண்​டனம்: சமவேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக்கோரி போராட்​டத்​தில் ஈடு​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டதற்கு அரசியல் கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரிவித்​துள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​:


அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: திமுக அளித்த தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றக் கோரி போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்​களை காவல்​துறையினர் கைது செய்​திருப்​பது கடும் கண்டனத்​துக்​குரியது. முதல்​வர் ஸ்டா​லின் தான் கொடுத்த வாக்​குறு​தியை நிறைவேற்ற முடிய​வில்லை எனில், அதனை ஒப்​புக்​கொள்ள வேண்​டும். ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்​டும்.


பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்திரன்: சமவேலைக்கு சம ஊதி​யம் கேட்​டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்​களின் மீது அடக்​கு​முறையை ஏவி அவர்​களை வலுக்​கட்​டாய​மாகக் கைது செய்​துள்​ளது கடும் கண்​டனத்​துக்​குரியது.


ஆசிரியர்கள் முதல் செவிலியர்​கள் வரை அனை​வரை​யும் போராடும் அவல நிலைக்கு தள்​ளுவது​தான் நல்​லாட்​சி​யின் அம்​ச​மா? காலி பணி​யிடங்​களை நிரப்​பாமல், பணி​யில் இருப்​பவர்​களுக்கு முறை​யான ஊதி​யம் வழங்​காமல், ஓய்​வு​பெற்ற அரசு ஊழியர்களுக்​கான ஓய்​வூ​தி​யப் பலன்​களை விடுவிக்​காமல் ஒட்​டுமொத்த அரசு இயந்திரத்தையே பழு​தாக்​கியது​தான் திமுக அரசின் நான்​காண்டு சாதனை.


பாமக தலை​வர் அன்​புமணி: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வேண்​டும் என்று போராட்​டம் நடத்​திய ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்​கு​முறை​களை கட்​ட​விழ்த்து விட்​டிருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. ஆசிரியர்களின் போராட்​டத்தை அடக்​கு​முறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற எண்​ணத்தை திமுக அரசு கைவிட்​டு, அவர்​களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.


தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: திமுக அறி​வித்த தேர்தல் வாக்​குறு​தி​களை இடைநிலை ஆசிரியர்​களும் நம்பி வாக்களித்தனர். ஆனால் இன்​னும் நிறைவேற்​றப்​ப​டாதது ஏற்​புடையதல்ல. போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்​தது அடக்குமுறையான செயல். தொடர்ந்து அடக்கு​முறை​களைக் கையாளாமல் இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறியுள்​ளனர்.




Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb



பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது CBSE

 


 பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது சிபிஎஸ்இ CBSE 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Heavy Duty Socket Wrench Spanner 10 Pieces Chrome Vanadium Hand Tool Kit Set | Professional Socket Set for Car, Bike & Home Repairs | Ratchet Handle, Extension Bars, Screwdriver Bits, Spanners


https://amzn.to/3KZQNbD




न्द्रीय माध्यममक मिक्षा बोर्ड

CENTRAL BOARD OF SECONDARY EDUCATION

(An Autonomous Organisation Under the Ministry of Education, Govt. of India)

कें द्रीय माध्यममक मिक्षा बोर्डएकीकृ त कायाडलय परिसि, सेक्टि 23, फे स - I, द्वािका, न्यूमिल्ली -110077

CBSE Integrated Office Complex, Sector 23, Phase - I, Dwarka, New Delhi - 110077

 Telephone: 011-24050612, Website : www.cbseacademic.nic.in

फ़ोन/Telephone: 011-23211575व◌बस◌ााइट/Website :http://www.cbseacademic.nic.inई-म◌ल/e-mail:

CBSE/ACAD/AP&AD(AC)/2025 Date: 24.12.2025

 Circular No: Acad-95/2025

All the Heads of Schools affiliated to CBSE

Subject: Prevention of Dog-bite Incidents and Management of Stray Dogs in School Premises - reg. 

In view of recent directions of the Hon’ble Supreme Court emphasizing the safety, security and well-being of children, the Department of Animal Husbandry and Dairying, Ministry of Fisheries, Animal Husbandry and Dairying, Government of India, has issued a Standard Operating Procedure (SOP) on Prevention of Dog-bite Incidents and Management of Stray Dogs in Institutional Premises.

In the interest of child safety and public health, all schools are hereby advised to strictly 

implement the following measures:

 Conduct awareness sessions for students and staff (both teaching and non-teaching) on preventive behaviour around animals, first-aid in case of bites, and immediate reporting protocols etc. 

 Identify vulnerable areas and ensure immediate removal of Stray dogs found within school premises which must be removed forthwith in coordination with the Municipal Authority, local elected bodies and District Administration.

 Ensure that the school premises are secured by adequate fencing, boundary walls, gates etc.

 Designate a Nodal Officer responsible for the upkeep and cleanliness of the premises and for ensuring that stray dogs don't enter or inhabit the school premises. Furthermore, the details of the said Officer shall be displayed prominently at the entrance.

 Facilitate regular inspections (at least once every three months) by competent authorities appointed by the State/UT Governments to ensure that no stray dog habitat exists within or in the immediate vicinity of the school premises. Any lapse may be viewed seriously and responsibility fixed accordingly.

 Strictly implement effective waste disposal and drainage systems, including secure storage and daily removal of waste, in accordance with the guidelines of Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN). (copy of guidelines enclosed in the link below)

 Follow the Guidelines on School Safety and Security to ensure a holistic approach to school safety covering physical, emotional and overall well-being. (copy of guidelines enclosed in the link below)

 Undertake activities recommended by the Ministry of Health & Family Welfare (MoHFW) for rabies elimination, as available at https://rabiesfreeindia.mohfw.gov.in)

The above measures are advisory in nature however you are requested to take appropriate action for compliance with the directions of the Hon’ble Supreme Court.

The copy of SOP on Prevention of Dog-bite Incidents and Management of Stray Dogs in Institutional Premises, Guidelines for the ‘Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN)’ and 'Guidelines on School Safety and Security' can be accessed through the link: 

https://drive.google.com/drive/u/1/folders/1Is0oFNKtT3v6Obl7uaY_3lpiwDv6WbaA

A brief report of the action taken may be submitted on the link:

https://forms.gle/4AEKfqU2eq5VhunF7

With best wishes!

(Dr. Praggya M. Singh)

 Professor & Director (Academics)




வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள்


வாக்காளர் பட்டியல் திருத்தம் : டிசம்பர் 2025 – ஜனவரி 2026 சிறப்பு முகாம்கள்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள்


இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது.


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெறும்.


ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கீழ்க்கண்ட தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்:


27.12.2025 (சனிக்கிழமை)


28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை)


03.01.2026 (சனிக்கிழமை)


04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை)


ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள், படிவம்–6 ஐ உறுதிமொழி படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.


மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும்,

முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்க கோரவோ படிவம்–7 மூலம் விண்ணப்பிக்கலாம்.


முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய /

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) மாற்றம் செய்ய /

மாற்றுத் திறனாளி (PwDs) வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைகள் உடையவர்கள் படிவம்–8 மூலம் விண்ணப்பிக்கலாம்.


சிறப்பு முகாம்கள் சீராக நடைபெறவும், இச்செயல் திட்டம் பயனுள்ளதாக அமல்படுத்தப்படவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


– அர்ச்சனா பட்நாயக்,

தலைமைத் தேர்தல் அதிகாரி, 

தமிழ்நாடு



Bare Anatomy Ultra Smoothing Hair Mask For Dry & Frizzy Hair | Restores Smoothness & Texture by 27% | Powered By Carbohydrate Complex & Niacinamide | For Women & Men | SLS & Paraben Free | 250gm


https://amzn.to/3Ld1ese




"பசுமைத்திட்டம்" இயக்கம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 


பசுமைக்கொள்கை 2025 - அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க "பசுமைத்திட்டம்" இயக்கம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Bare Anatomy Ultra Smoothing Hair Mask For Dry & Frizzy Hair | Restores Smoothness & Texture by 27% | Powered By Carbohydrate Complex & Niacinamide | For Women & Men | SLS & Paraben Free | 250gm


https://amzn.to/3Ld1ese





தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06

ந.க.எண். 1509140/ஜெ2/2025, நாள் 26.09.2025

பொருள்:

பள்ளிக்கல்வி - பசுமைக்கொள்கை 2025 - அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல், உயிரிய பல்வகைத் தன்மையினைப் பாதுகாத்தல் சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளை பள்ளி வளாகங்களில் செயல்படுத்துதல் சார்பாக.

பார்வை

1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.00066/எம்1/இ1/2025, நாள்.04.09.2025.

2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.32844/எம்1/இ1/2025, நாள்.02.06.2025.


காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு எதிராகப் பள்ளி மாணவர்களிடம். விழிப்புணர்வினைத் தூண்டும் வகையிலும், இளமையிலேயே மாணவப் பருவத்தில் இயற்கையினை நேசித்து அவற்றைப் பாதுகாக்கும் உணர்வினைத் தூண்டுவதற்காகவும், நம் மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள "பசுமைத்திட்டம்" எனும் இயக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.


மேற்கண்ட திட்டத்தின்படி, இணைக்கப்பட்டுள்ள இரண்டு படிவங்களில், பள்ளிகளில் பள்ளிகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், பசுமைப்பரப்பினை அதிகரித்தல், உயிரிய பல்வகைத் தன்மையின் முக்கியத்துவத்தினை மாணவர்கள் அறியச்செய்தல், பள்ளிவளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு செங்குத்து நிலைத்தோட்டம் (Vertical Garden), சூரியமின்தகடு (Solar Panel) அமைப்பு. குறுங்காடு அமைத்தல் (மியாவாக்கி காடுகள்). காய்கறி மூலிகைத் தோட்டம் போன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுச் செயல்பாடுகள் அனைத்துப் பள்ளிகளிலும் தொடங்கப்பட உள்ளது.


1. பள்ளி வளாக பசுமையாக்கம்

பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும். வளாகத்தில் மரக்கன்று நட வேண்டும்.

வளாகத்தின் இடவசதிக்கேற்ப மாணவர்கள் தம் வீடுகள், பொது இடங்களிலும் மரக்கன்று நடுவது மிக முக்கியச் செயல்பாடு ஆகும்.

குறிப்பாக மாணர்கள் தன் பிறந்த நாளிலோ அல்லது பெற்றோர். ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பிறந்த நாளிலோ மரக்கன்றுகள் நடலாம்.

மேற்கண்ட மரக்கன்று நடுதல் நிகழ்வினைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.


2. பள்ளி வளாக உயிரிய பல்வகைத்தன்மையை மாணவர்கள் அறிதல்,

பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் உள்ளூர் பெயர் மற்றும் தாவரவியல் பெயரை (Botanical Name) அறிந்து அதனைப் பள்ளி வளாகத்தில், அறிவிப்புப் பலகையில் குறிக்க வேண்டும்.

வளாகத்தில் வருகை தரக்கூடிய பறவைகள் மற்றும் சிறு விலங்குகள் பற்றிய முக்கியத் தகவல்களை (உள்ளூர் பெயர். விலங்கியல் பெயர். தோராய எண்ணிக்கை) மாணவர்கள் அறியச்செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு மாணவர்களை ஊக்குவிக்க அருகிலுள்ள கல்லூரிப் பேராசிரியர், வல்லுநர், அறிவியல் ஆய்வாளர் ஒருவரை பள்ளிக்கு அழைத்து மாணவர்களுக்குப் பயிற்சி தர (அதிகபட்சம் ஒரு மணி நேரம் மட்டும்) ஏற்பாடு செய்யலாம்.


3. குறுங்காடு அமைத்தல் (மியாவாக்கி காடுகள்)

பள்ளிகளில் குறைந்த பட்சம் 600 சதுர அடி காலியான நிலப்பரப்பு இருப்பின் அதில் 2 அடி நீள அகலத்தில் மரக்கன்றுகளை (பெரிய மரங்கள், சிறிய மரங்கள், குறு மரங்கள்) தேர்ந்தெடுத்து நட வேண்டும். ஆனால், அரசமரம், ஆலமரம், வேம்பு, மா. காட்டு வாகை, பனை, தென்னை ஆகிய மரங்கன்றுகளை குறுங்காடுகள் அமைப்பில் தவிர்க்கவும்.


4. பசுமை இயக்கங்கள்-

பசுமைப்பரப்பை பள்ளி வளாகங்களில் அதிகரிப்பது, மரக்கன்றுநடுவது, பராமரிப்பது ஆகியவற்றில் மாணவர்கள் தாமே இயற்கை ஆர்வத்துடன் மேற்கொள்ள பள்ளியளவில் சுற்றுச்சூழல் மன்றங்களை / குழுக்களைச் செயல்படுத்த வேண்டும். பொறுப்பாசிரியர் நியமிக்கப்படலாம். இதற்கு

மேற்கண்ட செயல்பாடுகளை, விரைவாக பள்ளிகளில் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை தொடர்வது. தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவான மாநிலம் முழுவதும் பசுமைப்பரப்பினை 33 சதவீதமாக உயர்த்தும் முயற்சியின் அடிப்படையில் உருவானது ஆகும்.

எனவே, இணைக்கப்பட்டுள்ள இரண்டு படிவங்களிலும் பள்ளிகளிலிருந்து "பசுமைத்திட்டம்" தகவல்களை உடனடியாக பூர்த்தி செய்து இவ்வியக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளிலிருந்து தகவல்களையும், புள்ளி விவரங்களையும் பெற்றுத்தர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தங்களிடமிருந்து பெறப்படும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, பசுமைப்பரப்பை அதிகரிக்க திட்டமிட வேண்டி உள்ளதால், இதுகுறித்து உடனடியாக தனிக்கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு- படிவம் 1 மற்றும் 2

தொடக்கக்கல்வி இயக்குநருக்காக

பெறுநர்

அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள்.

(மின்னஞ்சல் வழியாக).


Proceedings of the Director of Elementary Education, Chennai-06
Ref. No. 5.5.6.1509140/2/2025, Date: 26.09.2025
Subject:
School Education - Green Policy 2025 - Regarding planting and nurturing saplings, conserving biodiversity, and implementing environmental development activities in all government and government-aided primary/middle schools.
References:
Proceedings of the Director of School Education, Ref. No. 00066/M1/E1/2025, Date: 04.09.2025.
Proceedings of the Director of School Education, Ref. No. 32844/M1/E1/2025, Date: 02.06.2025.
To raise awareness among school students against the impacts of climate change, and to inspire a love for nature and the feeling of protecting it from a young age, a movement called the "Green Scheme" is being launched to take continuous action in all government and government-aided primary/middle schools in our state.
According to the above scheme, based on the information received from schools in the two attached forms, environmental awareness activities such as increasing green cover, making students aware of the importance of biodiversity, setting up rainwater harvesting structures, vertical gardens, solar panels, mini-forests (Miyawaki forests), and vegetable/herb gardens will be initiated in all schools.
Every student studying in the school should plant a sapling on the campus. Planting saplings at home or in public places according to the available space is a very important activity.
Specifically, students can plant saplings on their birthdays or the birthdays of their parents, teachers, or School Management Committee members.
The sapling planting event mentioned above must be documented by taking photographs.
School campus biodiversity students...


TPD Training to B.T. Assistants - List of RPs & Participants - SCERT Proceedings

 

 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - கருத்தாளர்கள் பெயர், பங்கேற்பாளர்கள் பெயர், பயிற்சி கால அட்டவணை மற்றும் உத்தேச செலவினம் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 23-12-2025


B.T. English Training - SCERT Proceedings


TPD Training - List of RPs & Participants - SCERT Proceedings


Teachers Professional Development Training for Post Graduate Teachers and Graduate Teachers - Name of the Resource Persons, Name of the Participants, Training Schedule and Proposed Expenditure - Proceedings of the Director of State Council for Education Research and Training, Dated: 23-12-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Layer’r Wottagirl 135 ml Premium Long-lasting Body Spray for Women


https://amzn.to/4i8Ah50





5400 தர ஊதியம் தொடர்பாக பெறப்பட்டுள்ள இடைக்கால தடை ஆணை

 

 

Interim Stay order of the Madras High Court regarding 5400 Grade Pay


5400 தர ஊதியம் தொடர்பாக பெறப்பட்டுள்ள, சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை ஆணை


ஆசிரியர் சகோதரர்களுக்கு 

தர ஊதியம் 5400 தொடர்பாக சிறப்பான இடைக்கால தடை ஆணை பெறப்பட்டு உள்ளது. நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வழக்கறிஞர் திரு சசிதரன் மூலம் பெறப்பட்டுள்ளது .

ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Bare Anatomy Ultra Smoothing Hair Mask For Dry & Frizzy Hair | Restores Smoothness & Texture by 27% | Powered By Carbohydrate Complex & Niacinamide | For Women & Men | SLS & Paraben Free | 250gm


https://amzn.to/3Ld1ese





W.P. No.47210 of 2025

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 12.12.2025

CORAM

THE HONOURABLE MR.JUSTICE M.DHANDAPANI

W.P. No.47210 of 2025

and

W.M.P. No.52750 of 2025

B.Bharathi

W/o.V.Dhakshinamurthy, 

Primary School Headmaster, 

Arthanari Aided Primary School, 

Namakkal, Namakkal District.

Petitioner(s)

Vs

1.The Government of Tamilnadu,

Rep. By Secretary to Government School 

Education Department,

Fort St. George, Chennai-9.

2.The Secretary,

Government of Tamil Nadu 

Finance Department, 

Fort St. George, Chennai- 9.

3.The Director of Elementary Education

College Road, Chennai-6.

4.The District Educational Officer (Elementary)

Namakkal District, Namakkal.

5.The Block Educational Officer

Namakkal Range, Namakkal District.

Respondent(s)


For Petitioner(s) : Mr.R.Saseetharan

For Respondent(s) : Mrs.Mythreya Chandru

 Special Government Pleader 


ORDER

Mrs.Mythreya Chandru, learned Special Government Pleader, takes notice for the respondents.

2. The learned counsel for the petitioner would submit that the petitioner is working as a Primary School Headmaster in Arthanari Aided Primary School, which is an aided School receiving teaching grant from the Government of Tamil Nadu. It is stated that the petitioner moved to Selection Grade on 30.06.2025 and his pay was revised notionally from 01.01.2006 and with monetary benefits with effect from 01.01.2011 vide proceedings of the Management dated 09.07.2012. It is further submitted that the aforesaid proceedings was approved by the 5th respondent on 10.09.2012 as per the Government letter dated 08.11.2010, G.O.Ms.No.23 dated 12.01.2011 and Government Letter dated 05.01.2012.

3. While so, after a lapse of 14 years of pay fixation, the 5th respondent issued proceeding for re-fixation and recovery vide order dated 23.10.2025, on the ground that the Government vide letter dated 15.12.2023 states that the Selection Grade Scale of Pay of Primary School Head Master has to be restricted to the Ordinary Grade Scale of Pay of Middle School Headmaster. 

4. It is the case of the learned counsel for the petitioner that the benefit already given cannot be taken away from the petitioner and the letter dated 15.12.2023 cannot be given retrospective effect. Challenging the order of re-fixation and recovery dated 23.10.2025, the petitioner has filed the writ petition.

5. In view of the above, there shall be an order of interim stay in respect of recovery alone.

6. Registry is directed to post the matter on 20.01.2026 along with

W.P. No.47863 of 2025.

12.12.2025

(3/3)



M.DHANDAPANI, J.

mka

To:

1.The Secretary to Government School 

Education Department

Fort St. George, Chennai-9.

2.The Secretary,

Government of Tamil Nadu Finance 

Department, Fort St. George, Chennai- 9.

3.The Director of Elementary Education

College Road, Chennai-6.

4.The District Educational Officer 

(Elementary)

Namakkal District, Namakkal.

5.The Block Educational Officer

Namakkal Range, Namakkal District.

W.P. No.47210 of 2025

12.12.2025



வீழ்ச்சியடையப் போகிறதா தங்கம் விலை? - 60% மட்டுமே கடன் வழங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்



வீழ்ச்சியடையப் போகிறதா தங்கம் விலை? - வழங்கும் கடன் தொகையைக் குறைக்க வங்கிகளுக்கு உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி


 தங்கத்தை அடகு வைக்கச் செல்வோர் கவனத்துக்கு


வீழ்ச்சியடையப் போகிறதா தங்கம் விலை? - 60% மட்டுமே கடன் வழங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்


நகைக்கடனில் கை வைத்த ரிசர்வ் வங்கி - இனி தங்கம் விலை உயர்ந்தாலும் பயன் இல்லை.


தங்கம் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்வதும், பின்னர் லேசாக குறைவதுமாக உள்ளது. பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு வகையான நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கைவசம் உள்ள நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் வாங்கி வருகிறார்கள்.


அதிகரித்த கடன் தொகை

வங்கிகளில் நகையை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் தொகை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த அக்டோபர் மாதம் ரூ.3.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 40 முதல் 45 சதவீதம் அளவிலான நகைக்கடனை 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வாங்கி இருக்கிறார்கள்.


தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும்போது, வாங்கிய கடன் தொகையானது அடகு வைக்கப்படும் நகையின் மதிப்பை விடவும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் நகை கடனை திருப்பி செலுத்துவதில் பெரும்பாலானோர் ஆர்வம் செலுத்துவதில்லை. மேலும் நகையை திருப்பாமல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.


இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து இருந்தது. நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.


தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் தங்க நகையின் மதிப்பில் இருந்து 60 முதல் 65 சதவீதம் வரையிலான அளவுக்கு மட்டுமே கடன் வழங்குவதற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


இனி தங்க நகைக் கடன் வாங்குவது கஷ்டம் - விதிகளை கடுமையாக்கிய இந்திய ரிசர்வ் வங்கி


வங்கி ஒழுங்குமுறை ஆணையமான ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வங்கிகளும் NBFCகளும் தங்கள் தங்கக் கடன் கொள்கைகளை கடுமையாக்குகின்றன. LTVகள் குறைக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக அதே அளவு தங்கத்திற்கான கடன் விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் தங்க விலைகள் மற்றும் அபாயங்கள் விதிமுறைகளை கடுமையாக்க வழிவகுத்தன. சில்லறை கடன் பிரிவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் தங்கக் கடன்களும் ஒன்றாகும்.


இந்திய வங்கிகள் மற்றும் NBFCகள் தங்கக் கடன்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கத் தொடங்கியுள்ளன. ஏனெனில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கத்தின் விலையில் அதிகரித்து வரும் ஏற்ற இறக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, தங்கக் கடன் பிரிவில் கடன் வழங்குபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று RBI அறிவுறுத்தியுள்ளது.


தங்கத்தின் மதிப்பில் 70-72 சதவீதம் வரை கடன்களை வழங்கிய நிறுவனங்கள் இப்போது அவற்றின் கடன்-மதிப்பு (LTV) வரம்புகளை 60-65 சதவீதமாகக் குறைத்துள்ளன. இந்த மாற்றம் வங்கிகளும் NBFCகளும் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.



ரிசர்வ் வங்கியின் கவலை ஏன் அதிகரித்தது?

நாணய ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்படும் கூர்மையான ஏற்ற இறக்கங்கள் குறித்து ரிசர்வ் வங்கி குறிப்பாக எச்சரிக்கையாக உள்ளது. முன்னணி வங்கிகள் மற்றும் NBFCகள் தங்கக் கடன் விநியோகங்களை மெதுவாக்கவும், இடர் மேலாண்மையை வலுப்படுத்தவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.


அதிக தங்க விலைகளைப் பயன்படுத்தி கடன் வாங்குபவர்கள் அதிக அளவு பணத்தை எடுக்கிறார்கள் என்பது ரிசர்வ் வங்கியின் கவலைக்கு ஒரு முக்கிய காரணம். உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் நாணய ஏற்ற இறக்கங்கள் தங்க விலைகளில் கூர்மையான ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கின்றன. தங்கத்திற்கு எதிராக அதிகப்படியான ஆக்ரோஷமான கடன் வங்கிகளின் சொத்து தரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒழுங்குமுறை ஆணையம் அஞ்சுகிறது.


தங்கம் மலிவாகிவிட்டால் என்ன நடக்கும்?

தங்கத்தின் விலை 10-15 சதவீதம் சரிந்தால்கூட, நிலுவையில் உள்ள கடன் தொகை, பல சந்தர்ப்பங்களில், அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் மதிப்பை விட அதிகமாக இருக்கலாம் என்பது வங்கிகளின் மிகப்பெரிய கவலை. அத்தகைய சூழ்நிலையில், கடன் வாங்குபவர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்க்கலாம், இதனால் வங்கிகள் வைத்திருக்கும் பிணையம் பலவீனமடையும்.


இதன் தாக்கம் வீடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது, ஆனால் வங்கிகளுக்கான கடன் திருப்பிச் செலுத்தாத அபாயமும் வேகமாக அதிகரிக்கக்கூடும்.


தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.


தற்போது, ​​MCX ஸ்பாட்டில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.31 லட்சமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இது தோராயமாக 20 சதவீதமும், கடந்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 35 சதவீதமும் உயர்ந்துள்ளது. இந்தக் கூர்மையான அதிகரிப்பு தங்கக் கடன்களுக்கான தேவையை மேலும் அதிகரித்துள்ளது.



வேகமாக வளர்ந்து வரும் தங்கக் கடன் பிரிவு

சில்லறை கடன் துறையில் தங்கக் கடன்கள் தற்போது வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாகும். ரிசர்வ் வங்கியின் தலையீடு, விரைவான வளர்ச்சியுடன் இடர் மேலாண்மையும் சமமாக முக்கியமானது என்பதை தெளிவுபடுத்துகிறது.


இதன் பொருள் கடன் வாங்குபவர்களுக்கு இப்போது அதே அளவு தங்கத்திற்கு குறைந்த கடன் தொகை கிடைக்கும்.


மார்ச் 2025 முதல் நகைக்கடைக்காரர்கள் மற்றும் வீடுகளுக்கான தங்கக் கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிகரித்துள்ள நேரத்தில் இந்த இறுக்கம் வந்துள்ளது.



சாதனை படைக்கும் தங்க நகைக் கடன்

வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைத்து அடமானம் வைக்கப்பட்ட கடன்களின் மதிப்பு தொடர்ந்து 18 மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. 2025 அக்டோபரில், இந்த எண்ணிக்கை ரூ.3.37 லட்சம் கோடியை எட்டியது, இது ஏப்ரல் 2024 இல் வெறும் ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்தது. மார்ச் 2025 முதல், நகைகளை அடமானம் வைத்து கடன்கள் ஒவ்வொரு மாதமும் இரட்டிப்பாகியுள்ளன.


 கவலை அளிக்கும் கடன் வாங்குபவர்களின் வயது


தங்கத்தின் விலை மட்டுமல்ல, கடன் வாங்குபவர்களின் விவரக்குறிப்பும் வங்கிகள் மற்றும் NBFC-களை கவலையடையச் செய்கிறது. தங்க NBFC-யின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், தங்கக் கடன் வாங்குபவர்களில் சுமார் 40-45 சதவீதம் பேர் 31-40 வயதுடையவர்கள்.


21-30 வயதுடையவர்களின் பங்கு நிதியாண்டு 2021 முதல் இரட்டிப்பாகியுள்ளது. இன்று, தங்கக் கடன்களின் சராசரி அளவு ரூ.80,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை உள்ளது.


மிகப்பெரிய கவலை என்னவென்றால், இந்தக் கடனில் பெரும்பகுதி நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது, புதிய சொத்துக்களை உருவாக்குவதற்கு அல்ல.


அதிகரித்து வரும் கடன் வாங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்தும் அழுத்தங்கள் காரணமாக கடன் வழங்குநர்கள் இப்போது கடனை இறுக்கிக் கொண்டுள்ளனர். நுண்நிதி மற்றும் தனிநபர் கடன்கள் தொடர்பான கடந்தகால நெருக்கடிகளின் அனுபவங்கள், முறையான பாதிப்புகளை மீண்டும் உருவாக்காமல் இருக்க நிறுவனங்களை மிகவும் எச்சரிக்கையாக வைத்திருக்கின்றன.


தொழில் சங்கங்களும் கடன் வழங்குநர்களும் ஆக்கிரமிப்பு வளர்ச்சியை விட நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளனர். சாத்தியமான பின்னடைவுகளைக் குறைக்க தங்கக் கடன் விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aided School Deployment - DEE Proceedings

  உபரி ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்தல் / மாற்றுப்பணி வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  அரசு உதவி பெறும் பள்ளிகள் பணியாளர்...