கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-10-2025

 

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 17.10.2025

கிழமை:- வெள்ளி


*திருக்குறள்:*

பால்:- பொருட்பால்
இயல்:- குடியியல்
அதிகாரம்:- சான்றாண்மை

*குறள் : 983*

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்

*உரை:*

அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

*பழமொழி :*

success blooms in the soil of consistency.

தொடர்ச்சியில் தான் வெற்றியின் மலர் மலர்கிறது.

*இரண்டொழுக்க பண்புகள் :*

1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

*பொன்மொழி :*

அறியாத காலத்தில் வெறும் நம்பிக்கையுடன் செய்வது பக்தி . அறிவு பெற்ற பிறகு செய்வது மெய்யறிவு - ஷேக்ஸ்பியர்

*பொது அறிவு :*

01.தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமான ஆறு எது?

கோதாவரி - Godavari

02. இந்திய பசுமைப் புரட்சியின் சிற்பி என்று அழைக்கப்படுபவர் யார்?


எம்.எஸ்.சுவாமிநாதன்
M. S. Swaminathan

*English words :*

Attribute- quality

Author- writer

*தமிழ் இலக்கணம்:* 

உரிச்சொல் என்பது ஒரு சொல்லின் பண்புகளை அல்லது தன்மைகளை விளக்கி, பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களுக்கு அடையாக வரும் சொல் ஆகும்.

எ. கா:

நல்ல' மாணவன், 'உயரமான' பெண், 'கடி' மலர், 'சால' தின்றான், மஞ்சள் மாம்பழம்

*அறிவியல் களஞ்சியம் :*

இந்த உணர்ச்சி கிறுகிறுப்பு (Vertigo) எனவும் அழைக்கப்படும். உயரத்திலிருந்து கொண்டு கீழே பார்ப்பவனுக்கும், கப்பலில் போகின்ற போது பார்ப்பவனுக்கும் இக்கிறுகிறுப்பு ஏற்படக்கூடும். உட்காதின் நெகிழ் நீர்மத்தின் காரணத்தால் ஏற்பட்ட நரம்பின் விளைவே இது அல்லாமல் பெரும்பாலும் உடல் சார்ந்த தன்மை இதில் இல்லை எனக் கூறலாம். உடலின் எட்டாவது கபால நரம்பின் ஒரு கிளையான வெஸ்டிபுல நரம்பின் பாதிப்பிலும் தலைசுற்றல் ஏற்படும்.

*அக்டோபர் 17*

*உலக வறுமை ஒழிப்பு நாள்*

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

*நீதிக்கதை*

*தவளையும் சுண்டெலியும்*

அது ஒரு அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.

ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா? என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து ஒரு கயிற்றினால் கட்டிக்கொண்டது.

அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.

அந்த சமயம், தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது. இரண்டு விருந்து கிடைத்த சந்தோஷத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது.

நீதி : நமக்கு தகுதியானவரை நண்பனாக ஏற்றுக் கொள்ளவதே சிறந்தது.

*இன்றைய செய்திகள்*

17.10.2025

💫இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.  நிலநடுக்கம் 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது- அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தகவல்.

💫 சாலையோரங்கள், சாலை சென்டர் மீடியன் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் தற்காலிக கொடிக் கம்பங்களுக்கு தலா ரூ.1,000 வசூலிக்க தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

💫 வடகிழக்கு பருவ மழை: மீட்பு பணிக்காக தீயணைப்பு படையினர் ஒத்திகை.

💫 தீபாவளிக்கு சொந்த ஊர் போக  கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை - மதுரை இடையே 4 மெமு சிறப்பு ரயில்கள், தாம்பரம் - செங்கோட்டை இடையே 2 சிறப்பு விரைவு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

*🏀 விளையாட்டுச் செய்திகள்*

💫 தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் தேர்வுதேர்வு வழிகாட்டி

💫 ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான விருதை வென்றநீர் இந்தியாவின் அபிஷேக் மற்றும் மந்தனா.

*Today's Headlines:*

⭐A powerful earthquake has struck Indonesia's Papua province today. It was recorded at 6.7 on the Richter scale. The earthquake was centered at a depth of 70 km, reported by the US Geological Survey.

⭐Madras High Court directs Tamil Nadu government to collect Rs. 1,000 each for temporary flagpoles on roadsides, road center medians, and public places obstructing public view.

⭐Northeast Monsoon: Firefighters rehearse for rescue operations.

⭐Additional special trains announced for Diwali to go home. Southern Railway has announced 4 MEMU special trains between Chennai and Madurai and 2 special express trains between Tambaram and Sengottai.

*SPORTS NEWS*

🏀 Isari Ganesh re-elected as president of Tamil Nadu Olympic Association

🏀  India's Abhishek and Mandhana win ICC's September award.

➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️


கனமழை காரணமாக 16-10-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

 

கனமழை காரணமாக 16-10-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 16-10-2025 due to heavy rain) விவரம்...


 கனமழை விடுமுறை அறிவிப்பு - 16-10-2025



தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (பள்ளிகளுக்கு மட்டும்)


விடிய விடிய தொடர் கனமழை - 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.


கனமழை காரணமாக 

1. நெல்லை, 

2. தூத்துக்குடி 

3. தென்காசி


மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-10-2025

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 16.10.2025

கிழமை:- வியாழன்


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.10.2025

 

திருக்குறள்:

குறள் 981:

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

உரை:

கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

பழமொழி :
Effort never goes unrewarded.

முயற்சி ஒருபோதும் வீணாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்குக் கடமைப்பட்டுள்ளேன் .நான் இன்று நன்றாக வாழ்வதற்கு எனது ஆசிரியருக்கு கடமைப்பட்டுள்ளேன்- மாவீரன் அலெக்சாண்டர்

பொது அறிவு :

01.செவாலியர் விருதை வழங்கும் நாடு எது?

பிரான்ஸ் -France

02.தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் சபாநாயகர் யார்?

J.சிவ சண்முகம் -J. Sivashanmugam
English words :

Gorgeous-beautiful

Enormous-huge

தமிழ் இலக்கணம்:


இடைச்சொல்: பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையில் வந்து பொருள் தருபவை. இடைச்சொற்கள் தனித்து நிற்காமல், பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லின் துணையோடு வரும்.
ஏ, ஓ, உம், தான், இன், கு, உடைய, ஆனால், போல, மற்று ஆகியவை இடைச்சொல் ஆகும்
எ.கா

1. அவனுக்கு கொடுத்தான்


2. மேலே வந்தான்


அறிவியல் களஞ்சியம் :

வட்டமாக, மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலைசுற்றி மயக்கம் ஏற்படும். சமச்சீரைக் கட்டுப்படுத்தும் காதின் உட்பகுதியிலுள்ள உணர்ச்சி நீர்மம் (Sensitive liquid) உடல் சுற்றுவது நின்றபிறகும் தொடர்ந்து சுற்றிக் கொண்டுள்ளது. ஆகையால் சுற்றுப்புறப் பொருள்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதாக அல்லது ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன. ஆயினும் சில விநாடிகளுக்குள் அந்த நீர்ம நெகிழ்பொருள் சமன் அடைந்து சரியாகிவிடுகிறது.

அக்டோபர் 16

உலக உணவு நாள் (World Food Day)

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.

நீதிக்கதை

சோதனை

ஒரு ஊரில் கணேசன் என்பவர் இருந்தார். அவருக்கு சிவா என்று ஒரு மகன் இருந்தான். அவன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு சொந்தமாக சுயதொழில் செய்து வந்தான். ஆரம்பத்தில் அவன் செய்த தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இப்படியே சில மாதங்கள் கடந்தன. திடீரென அவன் செய்த தொழிலில் மந்தமான போக்கு ஏற்பட்டு பெரும் நஷ்டம் அடைந்தான். எனவே என்ன செய்வது என்று புரியாமல் மிகுந்த மனச்சோர்வுடன் காணப்பட்டான்.

தன் மகனின் சூழ்நிலையைக் கண்ட கணேசன், மகனை அழைத்துக் கொண்டு வேகமாக சமையலறைக்குள் சென்றார். சமையலறையில் இருந்து மூன்று பாத்திரங்களை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஒரு உருளைக்கிழங்கையும், இரண்டாவது பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஒரு முட்டையையும் போட்டு ஒவ்வொன்றாக அடுப்பில் வைத்து வேக வைத்தார். உருளைக்கிழங்கும், முட்டையும் நன்கு வெந்ததும், இரண்டையும் தனியே எடுத்து வைத்துக் கொண்டார்.

பிறகு மூன்றாவது பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் டீத்தூளை கலந்து அடுப்பில் வைத்தார். சூடான டீ தயார் ஆனது. சூடான டீயுடன் சிறிது சர்க்கரை சேர்த்து ஒரு காபி கப்பில் ஊற்றி சூடாக தன் மகனுக்கு கொடுத்தார். சிவாவும், அப்பா கொடுத்த டீயை வாங்கிப் பருகினான். அப்போது கணேசன் தன் மகனிடம் கேட்டார். சிவா! நீ இப்போது நன்றாக வெந்துள்ள உருளைக்கிழங்கு போன்றவனா? அல்லது முட்டையைப் போன்றவனா? அல்லது டீத்தூளைப் போன்றவனா? சிந்தித்துப் பார்த்து பதில் சொல் என்றார்.

அதற்கு சிவா, அப்பா! எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றான். அதற்கு கணேசன், உருளைக்கிழங்கு, முட்டை, டீத்தூள் ஆகிய மூன்று பொருட்களும் ஒரே எதிரியாகிய கொதிக்கும் தண்ணீரைத்தான் சந்தித்தன. அதில் முட்டையானது, தனது கடினமான வெளித்தோலில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் இருந்தாலும், தனக்குள் இருந்த கருவை கடினமாக்கிவிட்டது. உருளைக்கிழங்கோ, கொதிக்கும் தண்ணீரில் இளகிப் பலவீனப்பட்டுவிட்டது. ஆனால், டீத்தூளோ வெந்நீரை மணமுள்ளதாக்கி சுவையானதாக மாற்றிவிட்டது.

இந்த முட்டை, உருளைக்கிழங்கு மற்றும் டீத்தூளைப் போலத்தான் மனிதர்களில், ஒரு சிலர் எந்தக் கஷ்டம் வந்தாலும் அதைத் தாம் முன்னேறுவதற்கு வந்த வாய்ப்பாக மனமுவந்து சந்தித்து, சோதனைகளை டீத்தூள் போன்று சாதனைகளாக மாற்றுகின்றார்கள். அதைப்போல் ஒரு சிலர் தங்களுடைய கஷ்ட நஷ்டங்களை வெளிகாட்டாமல் முட்டை போல தோற்றமளித்தாலும் உள்ளே மனதளவில் விரக்தியடைந்து விடுகின்றார்கள். வேறு சிலர் உருளைக்கிழங்கு போல துன்பங்களில் தம்மைக் கரைத்துக் கொண்டு மனத்தோற்றம், வெளித்தோற்றம் ஆகிய இரண்டிலும் கோழைகளாகி விடுகின்றனர். இப்போது என் கேள்வி உனக்கு புரிகிறதா? என்று சிவாவிடம் கணேசன் கேட்டார்.

அதற்கு சிவா, அப்பா இனி நான் டீத்தூளைப் போன்றவன் என்று உற்சாகமாகப் பதில் சொன்னான். இன்று முதல் நான் டீத்தூளைப் போலவே எந்தக் கஷ்டம் வந்தாலும், அதை நான் முன்னேறுவதற்கு வந்த வாய்ப்பாக மனமுவந்து சந்தித்து, சோதனைகளை டீத்தூள் போன்று சாதனைகளாக மாற்றிக் கொண்டு வாழ்வேன் என்று உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கூறினான். சிவா கூறியது போலவே புத்துணர்ச்சியுடன் தொழிலில் லாபம் பெற என்ன செய்ய வேண்டும், என்ன யுக்திகளை கையாள வேண்டும் என்று சிந்தித்து, அதை தொழிலில் புகுத்தி செயல்பட ஆரம்பித்தான். சில மாதங்களிலேயே அவன் செய்து வந்த சுயதொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

நீதி : சோதனையை சாதனைகளாக மாற்ற முயல வேண்டும்.

இன்றைய செய்திகள்

16.10.2025

⭐தீபாவளி முன்னிட்டு இன்று முதல் கூடுதலாக சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

⭐கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - புழல் ஏரியில் இருந்து 700 கன அடி நீர் திறப்பு

⭐ பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளிக்கிடையே எல்லை வழியே நடைபெறும் பரஸ்பர வணிகத்துக்கான எல்லை 2வது நாளாக மூடப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி தரவரிசையை ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்

* ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

Today's Headlines

⭐ Special Connection Buses will be operated from Today for the Diwali festival.

⭐ Increase in water level in the Kosasthalai river - 700 cubic feet of water released from Puzhal Lake

⭐ The tension between Pakistan and Afghanistan has increased as the border between the two countries has been closed for the second day of the mutual business.

🏀 Sports News

🏀 The Afghan players who occupied the ICC rankings

* Ibrahim Satran has jumped 8 places in the ODIs rankings and secured 2nd place. Indian player Jaiswal has jumped 2 places in the Test batting rankings and secured 5th place



அக்டோபர் 2025 மாத சிறார் திரைப்படம் - "Kurangu Pedal" - இயக்குநரின் செயல்முறைகள்



அக்டோபர் 2025 மாத சிறார் திரைப்படம் - "குரங்கு பெடல்" திரையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் DSE செயல்முறைகள்


Proceedings of the Director of School Education regarding the screening of the October 2025 Children's Film - "Kurangu Pedal"



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2026ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்

 


2026ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்


2026 Government Holidays



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

 

திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


 1-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பித்து ரூ.15000 பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் - செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


PGTRB - உத்தேச விடைக்குறிப்புகள் மற்றும் ஆட்சேபனை தொடர்பாக பத்திரிக்கைச் செய்தி

 


PGTRB - உத்தேச விடைக்குறிப்புகள் மற்றும் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பத்திரிக்கைச் செய்தி



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Direct Recruitment for PG Assistant / Physical Director Grade – I / Computer Instructor Grade – I (02/2025) - Release of Tentative key with Objection Tracker.


https://trb1.ucanapply.com/login



பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

 

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு




மறியல் போராட்டத்திற்கு வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் / அலுவலர்கள் சங்கம் முழு ஆதரவு



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-10-2025


 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 15.10.2025

கிழமை:- புதன்கிழமை



*திருக்குறள்*


பால் :பொருட்பால் 

‌இயல்: குடியியல் 

அதிகாரம்:  மானம்


*குறள் எண்: 963*


பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய 

சுருக்கத்து வேண்டும் உயர்வு.


 *விளக்கவுரை:*


செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.


 *பழமொழி :* 


True friends are stars that shine in the dark. 

உண்மையான நண்பர்களே இருளில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள்.


 *ஈரொழுக்கப் பண்புகள் :* 


1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2. எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


 *பொன்மொழி :* 


வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்

 - அன்னை தெரசா


 *பொது அறிவு :* 


01.உலக விஞ்ஞானிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

விடை: நவம்பர் 10   November-10


02. புதன் கோள்  சூரியனை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலம் எவ்வளவு?

விடை: 88 நாட்கள்- 88 days


 *English words :* 


Abstract – Theoretical

Access – Entry


 *தமிழ் இலக்கணம்:* 


 வினைச்சொல் என்பது ஒரு செயலை அல்லது நிகழ்வை உணர்த்தும் சொல். இது ஒரு வாக்கியத்தின் இன்றியமையாத பகுதியாகும், இது பொருள் என்ன செய்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.

எடுத்துக்காட்டாக, "கண்ணன் ஓடினான்" என்ற வாக்கியத்தில் 'ஓடினான்' என்பது ஒரு வினைச்சொல் ஆகும்.


 *அறிவியல் களஞ்சியம் :* 


 "மூச்சு விடும்போது வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடு கொசுக்களைக் கவரும் ஒரு முக்கிய ஈர்ப்புப்பொருள் என்பதால் மனிதர்கள் நேரடியாக ஆய்வில் உட்படுத்தப்படவில்லை. வாசனை வீசும் பூக்கள் மலரும் செடிகளையும், பழ மரங்களையும் இல்லாமல் செய்யும் மனிதன் அந்த நறுமணத்தை செயற்கையாக உருவாக்கினால் இது போன்ற பாதிப்புகளே ஏற்படும்.


தொலைதூர விண்வெளி ஆய்வுகளிலும் ஆழமான கடற்பரப்பில் ஆராய்ச்சிகளிலும் சாதனைகள் புரியும் மனிதனால் கொசுக்கள் என்ற இந்த சின்னஞ்சிறிய உயிரினங்களைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் வெற்றிபெற முடியவில்லை என்பதே உண்மை."


 *அக்டோபர் 15* 


இன்று இளைஞர் எழுச்சி நாள் ,உலக கைகள் கழுவும் தினம், உலக மாணவர் தினம் மற்றும் வெண்பிரம்பு பாதுகாப்பு தினம் .


 *APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்*


பொதுவாக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகின்ற இவர் ஒரு இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.


இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.


2002 ஆம் ஆண்டில், இவர் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் "மக்கள் ஜனாதிபதி" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகின்றார். பிற்கால வாழ்வில் இவர் கல்வி, எழுத்து மற்றும் பொதுச் சேவைக்கு திரும்பினார். பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் ஆக பணியாற்றினார்.


இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுகளுக்காகவும், இந்திய மாணவர் சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடல்களுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். 




 *நீதிக் கதை*


 _மீனவனின் புத்திசாலித்தனம்_ 


மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல என்று மன்னர் மறுத்தார். சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆணா? பெண்ணா? என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.


எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை திரும்ப பெற்றே ஆக வேண்டும் என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.


பேராசைக்காரன், கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விடவில்லை பாருங்கள் என்றாள் மன்னரிடம். அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான். நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். 


நீதி : யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றியடைகிறார்கள்.


 *இன்றைய செய்திகள்* 


 15.10.2025


🌟தீபாவளி திருடர்களை பிடிக்க டிரோன்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு- அவசர உதவிக்கு செல்போன் எண்கள் அறிவிப்பு


🌟இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சுமார் 3 புயல்கள் தாக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


🌟மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடியது வெனிசுலா


🌟2025ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.


 *விளையாட்டுச் செய்திகள்*


🌟பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக வம்சாவளி வீரர் முத்துசாமி அசத்தல்.


 *Today's Headlines* 


🌟Police department use drones for  monitoring Diwali thieves and they have announced emergency phone numbers also.


🌟The Meteorological Department has warned that around 3 cyclones may hit Puducherry and its surrounding areas during this year's northeast monsoon season.


🌟Venezuela closes its embassy in Norway after Nobel Prize announcement for Maria Corina.


🌟The 2025 Nobel Prize in Economics has been awarded jointly to Joel Mogir, Philip Achion, and Peter Howitt


 *SPORTS NEWS*


🧶Batsman Muthusamy who is of Tamil Nadu ancestry, took 11 wickets in the Test against Pakistan.



புகார் அளித்தால் ரூ.1,000-க்கு இலவசமாக FasTag Recharge

புகார் அளித்தால் ரூ.1,000-க்கு இலவசமாக பாஸ்டேக் ரீ சார்ஜ்



புகார் அளித்தால் ரூ.1,000-க்கு இலவசமாக FasTag Recharge

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-10-2025

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-10-2025 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...