பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
யானையிடம் இருந்து நொடியில் உயிர் தப்பிய இளைஞர்கள்
மைசூர்-பண்ணாரி சாலை ஆசனூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை யானை தாக்க முயன்ற அதிர்ச்சி காட்சி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வாய்ப்பு - இன்று ஒரு சிறுகதை
Every Problem is an Opportunity - Today’s Short Story
தினம் ஒரு குட்டி கதை -
"ஒரு ஊரில் , ஒரு ராஜா !"
ஒரு நகரத்தில் ஒரு சட்டமிருந்தது.
அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும்.
ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டும்தான்.!
ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே.!
மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்...
இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது.
இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு.
அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.. இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது.
அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும்.
அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான்.
மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான்,
''மன்னன் செல்லும் படகா இது!
பெரிய படகைக் கொண்டு வாருங்கள்!
நான் நின்றுகொண்டா செல்வது!
சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன!
சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டி தான்.!
காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை.
அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான்
''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை.!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா.!
நான் என்ன செய்தேன் தெரியுமா?
ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்...!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்;
இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்...
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர்.
இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்...!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது.
இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்...!
சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்...!
அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்...!
உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு...!'' என்றான் மன்னன்.
கருத்து: சூழ்நிலை எதுவாயினும் மனம் தளராமல் சிந்தனை செய்தால் தீர்வு நிச்சயமாக கிடைக்கும்.
🌹🌹🌹🌹🌹🌹
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் வரலாறும், சிறப்புகளும்
நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கவும், பித்ரு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கவும் மன நோய்களை நீக்கி மனஅமைதி தரும் தலமாக உள்ளது கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம். கொடுமுடி மகுடேஸ்வரரை வழிபட்டால் சகல பிணிகளும் நீங்கும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற பாதிப்புகளும் விலகும் என்பது நம்பிக்கை.
மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, பல திருப்பணிகளைச் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.
இன்றைக்கு பல பேருக்கு திருமணம் நடைபெறாமல் தடை ஏற்படுகிறது. சிரமப்பட்டு திருமணம் நடைபெற்றாலும் புத்திரபாக்கியம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ராகு கேது தோஷம் திருமணம், புத்திர பாக்கிய தடையைத் தருகிறது. இந்த தோஷங்களும் தடைகளும் நீங்க சிறந்த பரிகார தலமாக உள்ளது கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம்.
சிவன், பிரம்மா, விஷ்ணு:
இது சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயமாக இது விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம். அதுபோல இங்கு மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால், இது கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை மகுடேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.
தல வரலாறு
மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது. ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும், தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க மேரு மலையை கையாண்டனர்.
ஆதிசேஷன் மேரு மலையை சுற்றி வளைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனிடமிருந்து மேரு மலையை விடுவிக்க முயற்சித்தார். இந்த போட்டியில் மேரு மலை சிறு சிறு துண்டுகளாகி, நாலா பக்கமும் சிதறியது. அவை ஒவ்வொன்றும் சிவலிங்கமாக மாறியது. அப்படி உருவானதே கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் என்று சொல்லப்படுகிறது.
அமுதபுரி ஆலயம்
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் ‘பிரம்மபுரி' என்றும், திருமால் பூஜித்ததால் ‘அரிகரபுரம்' என்றும், கருடன் இத்தல இறைவனை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் ‘அமுதபுரி' என்றும் இந்த தலத்துக்கு பல பெயர்கள் உள்ளன.
திருமண வரம் கிடைக்கும்
வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது.
இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இந்தக் கோவிலில் வேப்பமரமும், அரச மரமும் இணைந்துள்ள மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும் குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலய வழிபாடு:
கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரங்களும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன.
இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடிநாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்.
சுயம்பு லிங்கம்:
இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களைக் காணலாம். அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்தபோது ஏற்பட்ட விரல் தடயங்கள் என்பது ஐதீகம்.
மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்று அமைந்துள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும்.
அம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியில் சரஸ்வதிக்கும் தனி சந்நிதி உள்ளது.
பிரம்மா:
இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிலர் இந்த மரம் அதையும் விட பழமையானது, இதன் வயதை கணக்கிட முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். வன்னி மரத்தடியில் பிரம்மாவின் சந்நிதி உள்ளது.
இந்த வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்களும், மற்றொரு பகுதி முட்கள் இல்லாமலும் உள்ளது. ஆண் மரமாக கருதப்படும் இந்த வன்னி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை, காய்கள் காய்ப்பதில்லை என்பது சிறப்பம்சம்.
இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாட்களானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத் தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.
மகாலட்சுமி அருள்:
பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும், ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.
மன நோய் தீர்க்கும் ஆலயங்கள்:
காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும். காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகா விஷ்ணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற குற்றங்களும், மனநோயும் நீங்கும்.
நாக தோஷங்கள் நீங்கும்:
ஆதிசேஷனால் உருவான ஆலயம் என்பதால், இங்கு நாகர் வழிபாடு மிகவும் விசேஷம். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தற்போதும் நடைபெற்று வருகிறது. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் இதுபோன்று செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைப் பேறு கிடைக்கவும் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
எங்கு எப்படி செல்வது:
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட இந்த ஆலயம், தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில், 210-வது திருத்தலமாகத் திகழ்கிறது. கரூர் - ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கொடுமுடி உள்ளது. கோவிலின் அருகிலேயே ரயில் நிலையம் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் எளிதாக வந்து செல்லலாம்.
26.08.2026 புதன் கிழமை --
ஓணம் பண்டிகை
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
மகாபலி சக்கரவர்த்தி என்ற அரசன் மக்களுக்கு நல்லது செய்து வந்தான். ஆனால் அவரை ஏன் அழிக்க பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார் தெரியுமா?... வாருங்கள் புராண கதையைப் பார்ப்போம்...
🕉 அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக, திறமையாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் மக்களை வந்து பார்த்து வளமோடு, செழிப்பாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை.
🕉 ஓணம் பண்டிகை
மலையாள சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைதான் ஓணம் பண்டிகை. கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்தின் போது மகாபலி மக்களை காண வருவதாக ஐதீகம்.
🕉 எலியாக இருந்த மகாபலி சக்கரவர்த்தி:
மகாபலி சக்கரவர்த்தி முற்பிறவியில் எலியாக இருந்தார். அப்போது சிவன் கோயிலில் திரிந்து கொண்டிருந்த பொழுது, அங்கு சிவபெருமானுக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அந்த விளக்கின் திரியின் மீது எலியின் வால் தற்செயலாக பட்டு தூண்டப்பட்டு மீண்டும் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது.
தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்ததால், அந்த எலியை அடுத்த பிறவில் சிறந்த மன்னராக மகாபலி சக்கரவர்த்தியாக படைத்தார் இறைவன்.
🕉 ஓணம் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகின்றது, எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?
மகாபலி சக்கரவர்த்தி பெருமைகள்:
புராண கதைகளின் கூற்றுப்படி, கேரளாவை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்ததாகவும், அவர் மக்களை மிகவும் அரவணைப்புடன் கவனித்துக் கொண்டதாகவும், அவரின் ஆட்சியின் கீழ் நாடு செழிப்பாகவும், மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்
வேள்வி :
இந்நிலையில் நாட்டு மக்களின் நலனுக்காக ஒரு மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தவும், வேள்வியின் இறுதியில் நாட்டு மக்களுக்கு தான, தர்மம் வழங்க முடிவு செய்தார் மகாபலி சக்கரவர்த்தி.
இந்த வேள்வியை அசுர குரு சுக்ராசாரியார் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையறிந்த தேவர்கள் மகாபலி சக்கரவர்த்தியுடன் போரிட்டனர். இதில் மகாபலி வென்றார். இதனால் அச்சமடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.
வாமன அவதாரம் :
தேவர்களை காப்பது தனது கடமை என கருதிய மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். மண்ணுலகில் விஷ்ணுவின் 5வது அவதாரமாக காஸ்யப முனிவர், திதி தம்பதிக்கு மகனாக வாமனர் அவதரித்திருந்தார்
மகாபலி சக்கரவர்த்தி தன் வேள்வி நிறைவு செய்யும் விதமாக, மக்களுக்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். இதில் தான தர்மங்கள் செய்து முடிக்கும் போது வாமனன் அங்கு வந்தார்.
மூன்றடி மண்:
வாமனனைப் பார்த்ததும், மகாபலி தாமதமாக வந்துவிட்டீர்க்ளே. இப்போது தான் தானம் கொடுப்பதை நிறைவு செய்தேன் என்றார்.
அதற்கு வாமனனோ, நானோ மூன்றடி உயரம் கொண்ட சிறுவன். நான் பெரிதாக எதையும் கேட்க மாட்டேன், என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும் என்றார்.
அப்போது அசுர குரு சுக்ராசாரியார், இவர் விஷ்ணுவின் அவதாரமாக தோன்றுகிறது. அவருக்கு தானம் அளிப்பதற்கு முன் சற்று யோசியுங்கள் என்றார்.
ஆனால் மகாபலி சக்கரவர்த்தியோ, மகாவிஷ்ணுவே என்னிடம் தானம் பெற வந்துள்ளார் என்றால் எந்தளவிற்கு, நான் சிறந்தவன். நான் தானம் கொடுத்தே தீருவேன் என்றார்
தானம் கொடுக்க கமண்டலத்திலிருந்து நீரை வார்க்க மகாபலி சக்கரவர்த்தி முயன்ற போது, நீர் வராத மாதிரி, வண்டு அவதாரம் எடுத்து சுக்ராச்சாரியர் கமண்டலத்தை அடைத்துக் கொண்டார்.
அப்போது வாமனன் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து கமண்டல நீர் வரும் குழாயை குத்தினார். இதனால் சுக்ராச்சாரியரின் ஒரு கண் பறிபோனது.
வரம் பெற்ற மகாபலி சக்கரவர்த்தி:
அதன் பின் ஒரு அடியால் மண்ணுலகையும், மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் வாமனன். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என கேட்க, மகாபலி தன் தலை மீது வைக்குமாறு சொன்னார்.
மகாபலியின் தலையில் வாமனன் கால் வைத்ததும், மகாபலி பாதாளலோகம் சென்றார்
அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லனவற்றை செய்த மகாபலிக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி, என் மக்களை நான் ஆண்டுக்கு ஒருமுறை வந்து பார்த்து, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என பார்த்து செல்ல விரும்புகிறேன் என கூறினார்.
அதற்கு அப்படியே ஆகட்டும். நீ உன் மக்களை வந்து பார்ப்பதை மக்கள் பண்டிகையாக கொண்டாடுவார்கள் என மகாவிஷ்ணு வரம் அளித்தார் 🕉
🕉 நாமும் அன்றைய தினம் வாமன மூர்த்தியான உலகளந்த பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வணங்குவோமாக🕉
🕉ஒம் நமோ நாரயணாய🕉
🙏இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்🙏
🌄🎈🌄🎈🌄🎈🌄🎈🌄
2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
Reconstitution of School Management Committees for the years 2026–2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – Proceedings of the State Project Director
மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க. எண். : 1338/A11/பமேகு/ஒபக/2026, நாள். 24/08/2026
பொருள்:
பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.
பார்வை:
(1) அரசாணை (நிலை) எண்.144, நாள்: 28.06.2024, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.
(2) அரசாணை (நிலை) எண். 143, நாள்: 19.08.2026, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.
பார்வை-1இல் காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது கடந்த 2024 ஆகஸட் மாதம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.
பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகளில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கானப் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும்
1
பார்வை-2இல் காணும் அரசாணையில் பக்கம்-22இல் கண்டுள்ள "மறுகட்டமைப்பு நாளுக்கு முன்னதாக செய்ய வேண்டியவை" தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திடவும்,
மேலும், பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 9-இல் உள்ள கால அட்டவணைக்கு மாற்றாக, பக்கம் 4, பத்தி x.-இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
boAt Wave Call 3 Smartwatch 1.83” HD Display with Animated Watch Faces; BT Calling, Functional Crown, Multiple Sports Modes, IP68, HR, SpO2 Monitor, Smart Watches for Men & Women (Timber Brown)
Exemption from TET for teachers appointed before 23.08.2010 – Tamil Nadu Government moves special resolution in the Legislative Assembly
23.08.2010க்கு முன்னர் பணியேற்ற ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு - சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பேரவையில் அரசினர் தீர்மானம் கொண்டு வந்த அமைச்சர் ராஜ்மோகன்.
2010 ஆகஸ்ட் 23க்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு வேண்டும்.
இதற்கு மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
>>> தீர்மானம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Milton Flip Lid 1000 Thermosteel Water Bottle 1 LTR, 24 Hr Hot and Cold I Leak Proof Lid, ISI Certified I Vacuum Insulated I for Office, Gym, School I Silver
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
இணை நிகழ்ச்சி நிரல்
2026, ஆகஸ்ட் 25, செவ்வாய்க்கிழமை
ஆவணி 8, திருவள்ளுவர் ஆண்டு 2057
காலை 9.30 மணி
இனம் 1 ஏற்கெனவே அறிவித்துள்ளவாறு
2. அரசினர் தனித் தீர்மானம்
மாண்புமிகு திரு. ராஜ்மோகன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர், கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:-
"ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவைப் போதிக்கும் தொழில் மட்டுமல்ல; அது மனித வளத்தை உருவாக்கி, சமூகத்தின் எதிர்காலத்தைச் செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும். மேலும், பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாகக் கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளான, விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் (NCTE) 23.08.2010-ஆம் தேதியிட்ட அறிவிக்கையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித இடையூறும் இன்றி தங்களது பணியைச் சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியிலிருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 01.09.2025-ஆம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு (சிவில் அப்பீல்) எண்.1405/2025, 1385/2025 மற்றும் 1385/2025-இல் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவினால், தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வினை பெற இயலும், மேலும் தேர்ச்சி பெறவில்லையெனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சீராய்வு மனுவின் மீதான 29.05.2026-ஆம் நாளிட்ட தீர்ப்பில், பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.08.2028-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றிப் பணியாற்றி ஓய்வுபெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை, தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் எனவே, வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் செயலாகும். இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்டகால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், இம்மாமன்றத்தில் பின்வரும் தீர்மானம் முன்மொழியப்படுகிறது.
1. தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் நீண்டகாலப் பணியனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
2. இதற்கேற்ப, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல், உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, 23.08.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) வழியாக இதுதொடர்பான தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் / சற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டுமாறு ஒன்றிய அரசை இப்போவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
3. மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப்பலன்கள் எவ்விதத் தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது."
ஏற்கெனவே அறிவித்துள்ள இனம் 2 என்றுள்ளதை இனம் 3 என மாற்றி வாசிக்கவும்
அவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்
ஏற்கெனவே அறிவித்துள்ளவாறு
இரா. சாந்தி, செயலாளர்.
பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு 2026-2028 கூட்ட படிவங்கள்
School Management Committee Reconstitution 2026-2028 Meeting Formats
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Nylon 55 litres Waterproof Strolley Duffle Bag- 2 Wheels - Luggage Bag
ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் குறைப்பு மற்றும் பணிக்காலத்திற்கான சிறப்பு மதிப்பெண்கள் குறித்து தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்
Affidavit filed by the Tamil Nadu Government in the High Court regarding the reduction of Teacher Eligibility Test (TET) marks and special weightage marks for service tenure
ஆசிரியர் தகுதித் தேர்வு
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு ஒரு மதிப்பெண்
பணிக்கால சிறப்பு மதிப்பெண் &
பொதுப்பிரிவினர் மதிப்பெண்
WP No 26016/2026
WP No 26068/2026
WMP 28460 / 2026
WMP 29742/2026
சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள்
அரசு வழங்க முடியாது என எதிர் மனு தாக்கல்
* தகுதி மதிப்பெண்களைத் தீர்மானிப்பது அரசின் கொள்கை சார்ந்த மற்றும் வல்லுநர் குழு சார்ந்த விடயமாகும். தேர்வு முடிந்த பிறகு தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தேர்வின் நம்பகத்தன்மையையும் கல்வித் தரத்தையும் பாதிக்கும்
* உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் TET தேர்வை கட்டாயத் தகுதியாகவே உறுதி செய்துள்ளது. பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தேர்ச்சி பெற கால அவகாசம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளதே தவிர, தகுதி மதிப்பெண்களில் எந்த இளகும் (relaxation) வழங்கப்படவில்லை
* மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) பிரிவு 23-ன் கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஒரு கட்டாய சட்டப்பூர்வ தகுதியாகும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு (SC/ST/OBC/மாற்றுத்திறனாளிகள்) சலுகை வழங்குவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது; ஆனால் பொதுப் பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க NCTE விதிகளில் இடமில்லை.
* 08.07.2026 அன்று அளிக்கப்பட்ட இடைக்காலத் தடையை (Interim Order) நீக்கி, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசால் நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு எதிர் மனு தாக்கல்
Counter Affidavit and Vacat Interim Order petition in W.P.NO.26068 Of 2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty
ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்
ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த TVK MLA
பல ஆண்டுகளாக TET தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
நியமன தேர்வு தேர்ச்சி பெற்றும் சிலருக்கு வேலை கிடைக்கவில்லை
நானும் டெட் தேர்வு, டிஆர்பி தேர்வு, நியமன தேர்வு உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்கவில்லை.
நியமன தேர்வு இல்லாமல் தகுதி தேர்வு அடிப்படையிலும், சீனியாரிட்டி அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
ஆசிரியர்களின் பாதி வாழ்க்கை வேலையை எதிர்பார்த்தே போய்விடுகிறது.
சட்டப்பேரவையில் குடியாத்தம் எம்.எல்.ஏ சிந்து பேச்சு
Portable Tyre Inflator for Car, Bike, Cycle with 150 PSI Pressure, Digital Display, Auto Shut-Off, LED Light, 2.7m Cord, Air Pump Compressor for Cigarette Lighter Socket (Black)
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்