* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.23.3
* Updated on 05-07-2026
👉 Simple Gov - Foreign Trip Module Implemented
About this App
* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.23.3
* Updated on 05-07-2026
👉 Simple Gov - Foreign Trip Module Implemented
About this App
2026-2027 கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விவரம் (திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல்)
Details of school working days for the 2026-2027 academic year (Revised list of working days)
வேலை நாட்கள் - 210
விடுமுறை நாட்கள் - 155
மொத்தம் - 365
சனிக்கிழமை வேலை நாட்கள்:
செப்டம்பர் 19
டிசம்பர் 19
ஏப்ரல் 24
பள்ளி கடைசி வேலை நாள் 24.04.2027 சனிக்கிழமை.
கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல் மே 31 வரை. (37 நாட்கள்)
>>> 2026-2027 கல்வியாண்டு நாட்காட்டி தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:446
குறள்:
பொருள்:
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.
பழமொழி :
As rare as hen's teeth.
அத்தி பூத்தார் போல.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
அறிவு வளர வளர பணிவும் வளர வேண்டும்.
Thought for the Day :
Small steps taken every day lead to great achievements.
பொது அறிவு :
1.உலகில் அதிகமாக விளையும் காய்கறி எது?
உருளைக்கிழங்கு.
2. மனித உடலின் மிகவும் நீளமான தசை எது?
நாக்கு.
English words :
Justify – Defend, நியாயப்படுத்து.
Knock – Strike, தட்டு.
புவியியலும் சுற்றுசூழலும் :
உள்ளாட்சி அமைப்புகள் மூன்றாக பிரிக்கப் பட்டுள்ளது.
1. கிராம பஞ்சாயத்து
2. நகராட்சி
3. மாநகராட்சி
NMMS :
(1) வட்டம்
(2) இணைகரம்
(3) சாய்சதுரம்
(4) சரிவகம்
விடை: (1) வட்டம்
நீதிக்கதை
"விக்னேஷின் ஒரு நாள்"
ஒரு நகரத்தில் விக்னேஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எப்போதும் கைபேசி, தொலைக்காட்சி, வீடியோ விளையாட்டுகள்தான் பிடிக்கும். பள்ளி முடிந்ததும் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டு அவற்றிலேயே நேரத்தை கழிப்பான்.
ஒருநாள் பள்ளி விடுமுறை . பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தடைப்பட்டது.
வேறு வழியில்லாமல் வீட்டிற்கு அருகிலிருந்த பூங்காவிற்குச் சென்றான். அங்கே வண்ணத்துப்பூச்சிகள் மலர்களைச் சுற்றிப் பறப்பதையும், தேனீக்கள் தேன் சேகரிப்பதையும், மரக்கிளைகளில் பறவைகள் இனிமையாகக் கீச்சிடுவதையும் பார்த்தான்.
மெல்லிய காற்று அவன் முகத்தைத் தழுவியது. அருகிலிருந்த குளத்தில் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. அந்த அழகைக் கண்டு விக்னேஷின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது.
அப்போது அங்கு நடை பயிற்சி செய்து கொண்டிருந்த கவுன்சிலர் அண்ணன்,, "என்ன தம்பி, இயற்கையை ரசிக்கிறாயா? நல்லா இருக்கா ?” என்று கேட்டார். “ஆமாம் அண்ணா. இவை எல்லாம் பார்க்க ரொம்ப அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு” என்றான்.
அந்த அண்ணன்,“ஆமாம் தம்பி, இயற்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். இந்த அழகை எந்தத் திரையும் தர முடியாது,. உனக்கு ஓய்வு நேரங்களை இயற்கையோடு செலவிட்டுப் பார். இன்னும் மகிழ்ச்சியடைவாய் " என்றார்.
அந்த நாளிலிருந்து விக்னேஷ் தினமும் சிறிது நேரமாவது வெளியில் சென்று மரங்கள், மலர்கள், பறவைகள், சூரிய உதயம், மாலைச் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை ரசிக்கத் தொடங்கினான்.
இதனால் அவன் மனமும் அமைதியாகி, படிப்பிலும் நல்ல முன்னேற்றம் காண ஆரம்பித்தான்.
நீதி:
இயற்கையை ரசித்து வாழ்வது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும். 🌿🌸
🗒️முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை. செட்டிநாடு குழுமம் தனது பல்துறை வணிகங்கள் மூலம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.
🗒️34 கோடி சந்தாதாரர்களுக்கு 15-ந்தேதிக்குள் 8.25 சதவீத பி.எப். வட்டி வந்து சேரும்: மத்திய மந்திரி அறிவிப்பு.
🗒️சீனாவில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி - தொடரும் தீவிர மீட்புப் பணிகள்.
விளையாட்டுச் செய்திகள்
🏀திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வெற்றி பெற்றோம் என இந்தியாவிற்கு எதிரான 3வது T20 போட்டியின் வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் பெருமிதம்.
Today's Headlines
🗒️ 8.25% EPF Interest to Be Credited to 340 Million Subscribers by July 15: Union Minister. The Union Minister announced that the 8.25% Employees' Provident Fund (EPF) interest will be credited to the accounts of 340 million subscribers by July 15.
Sports News
🏀 England's captain expressed pride after the victory in the third T20 match against India, stating that they had executed their plans excellently and succeeded.
NHIS 2026 – Order by the Department of Treasuries and Accounts to upload details regarding Aadhaar, photographs, disability categories, and family members into IFHRMS
NHIS Updation in IFHRMS
NHIS 2026 - ஆதார், புகைப்படம், மாற்றுத்திறனாளிகள் வகை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்ய கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை உத்தரவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு
G.O.Ms.No.93 , Dated : 13-03-2026 - Creation of 125 Computer Instructor Grade 1 Posts
127 BT posts Surrendered and newly 125 Computer Instructor (Grade-1) posts created
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Collateral-free education loans up to Rs. 7.5 lakh for students - District Collector's press release
வங்கிகளில் மாணவர்களுக்கு ரூ.7.5இலட்சம் வரை பிணையம் இல்லாமல் கல்விக்கடன் - மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
செ.வெ.எண்.29 , நாள்.07.07.2026
பத்திரிகைச் செய்தி
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது,
தேனி மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் வங்கிகளில் ரூ.7.5இலட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறுவதற்கு https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும்பொழுது மாணவர்களின் ஆதார் அட்டை, கல்லூரி சேர்க்கை கடிதம், கல்வி கட்டணம், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம், பெற்றோர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை, வருமான வரி அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், மாணவர்கள் மூன்று வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
Namakkal MP requests exemption of teachers from census duties
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:445
குறள்:
பழமொழி :
Art is long and life is short
கல்வி கரையில் கற்பவர் நாள் சில.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
பொறுமை கசப்பானது; அதன் பலன் இனிமையானது.
Thought for the Day :
Dream big, work hard, stay humble.
பொது அறிவு :
1. நோபல் பரிசு எப்போதும் எந்த நாளில் வழங்கப்படுகிறது?
டிசம்பர் 10.
2. சர்வதே மனித உரிமைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் 10.
English words :
Generate – Produce, உருவாக்கு.
Illustrate – Explain, விளக்கிக் காட்டு.
புவியியலும் சுற்றுசூழலும் :
உலகின் மிகப் பெரிய நாடு – ரஷ்யா. இது 11 நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு – இந்தியா
NMMS :
MAT
வேறுப்பட்டதை கண்டுபிடி.
விடை: (2)
சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly; ; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார். சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்.
நீதிக்கதை
"நல்ல வார்த்தையின் சக்தி"
ஒரு பரபரப்பான கடை வீதியில் ரவி என்ற இளைஞன் பழக்கடை வைத்திருந்தான். அவன் எப்போதும், "இன்று வியாபாரம் எப்படி நடக்குமோ?,சரியாக இருக்காது", "யாரும் வாங்க வருகிற மாதிரி தெரியலையே. இன்றைய பழம் எல்லாம் விற்காமல் அழுகி விடுமோ?" என்று எதிர்மறையாகப் பேசிக்கொண்டே இருப்பான்.
அதே வீதியில் மீனா என்ற பெண் பூக்கடை வைத்திருந்தாள். அவள் எப்போதும், "இன்று நல்ல நாள்!", "எல்லாம் நன்றாக நடக்கும்!", "வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வருவார்கள்!" என்று நேர்மறையான வார்த்தைகளையே பேசுவாள்.
ஒருநாள் இருவரின் கடைக்கும் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் வந்தனர். ரவி முகம் சுளித்து, சற்று சலிப்புடன் , "என்ன வேண்டும்?" என்று கேட்டான். வாடிக்கையாளர்களும் விரைவாக வாங்கிவிட்டு சென்றனர்.
மீனா மட்டும் புன்னகையுடன், "வணக்கம்! உங்களுக்கு என்ன பூ வேண்டும்? இன்று உங்கள் நாள் இனிமையாக அமையட்டும்!" என்று அன்பாகப் பேசினாள். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் மீண்டும் அவள் கடைக்கே வரத் தொடங்கினர்.
சில நாட்களுக்குப் பிறகு ரவி, "என் கடைக்கு ஏன் வாடிக்கையாளர்கள் குறைகிறார்கள்?" என்று கேட்டான்.
மீனா புன்னகையுடன், "நாம் பேசும் நல்ல வார்த்தைகளும், நேர்மறை எண்ணங்களும் மக்களின் மனதில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும். அதுவே வெற்றிக்கான முதல் படி," என்றாள்.
அன்று முதல் ரவியும் நேர்மறையாகப் பேசத் தொடங்கினான். சிறிது காலத்தில் அவன் கடையிலும் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.
நீதி:
நேர்மறை கருத்துகளும் நல்ல வார்த்தைகளும் நம்பிக்கையை வளர்த்து, வெற்றிக்கான பாதையைத் திறக்கும்.
🗒️கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மீனாட்சி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்ததுடன், கோழிக்கோடு–வயநாடு இரட்டை சுரங்கப்பாதை திட்ட பணியாளர்களை தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
🗒️பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
*விளையாட்டுச் செய்திகள்*
🏀2-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி.
🏀விராட் கோலியுடன் கிரிக்கெட் விளையாட ஆசை என விம்பிள்டன் சாம்பியன் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
Today's Headlines
🗒️ One person died in a sudden landslide in the Meenatchi area of Kerala's Wayanad district, and intensive search and rescue operations are underway for workers involved in the Kozhikode-Wayanad twin tunnel project.
🗒️ Prime Minister Narendra Modi has been conferred Indonesia's highest civilian award.
Sports News
ஆதிதிராவிடர் நலத்துறை இனி 'சமூக நீதித்துறை' என பெயர் மாற்றம் - அரசாணை வெளியீடு
The Adi-Dravidar Welfare Department is being renamed the 'Department of Social Justice'.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் 'சமூக நீதித்துறை' என மாற்றம் - தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியீடு.
அரசு ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் வகையில், தமிழ்நாடு வணிக விதிகளில் திருத்தம் செய்து நடவடிக்கை
ABSTRACT
Tamil Nadu Government Business Rules, 1978 - Change of Nomenclature of 'ADI DRAVIDAR AND TRIBAL WELFARE DEPARTMENT' as 'SOCIAL JUSTICE DEPARTMENT' -Amendment to the Tamil Nadu Government Business Rules, 1978-Orders - issued.
HUMAN RESOURCES MANAGEMENT(A) DEPARTMENT
G.O.(Ms.)No.35 , Dated: 06.07.2026
Read:
G.O.(Ms).No.366, Public (Special.A) Department, dated 30.05.2026
ORDER:
In exercise of the powers conferred by clauses (2) and (3) of Article 166 of the Constitution of India, the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Tamil Nadu Government Business Rules, 1978:-
AMENDMENT.
In the said Rules, in the "FIRST SCHEDULE", for the heading"ADI DRAVIDAR AND TRIBAL WELFARE DEPARTMENT", the heading"SOCIAL JUSTICE DEPARTMENT" shall be substituted.
(BY ORDER OF THE GOVERNOR)
M. SAI KUMAR
CHIEF SECRETARY TO GOVERNMENT
All Secretaries to Government, Secretariat, Chennai - 600 009
The Secretaries to Chief Minister, Secretariat, Chennai -600 009.
The Secretary to Governor, Chennai-600 022.
The Adi Dravidar and Tribal Welfare Department,
Chennai -600 009.
திருப்பூர் மாவட்டத்தில் 9 பள்ளிகளை மூட முடிவு - நாளிதழ் செய்தி
9 பள்ளிகளை மூட முடிவு
ஒரு மாணவர் கூட இல்லாமல் என்ன செய்வது?
திருப்பூர், ஜூலை 7-திருப்பூர் மாவட்டத்தில், ஒரு மாணவர் கூட இல்லாத, 9 அரசு பள்ளி கள் நடப்பு கல்வியாண்டில் மூடும் நிலை உருவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 144 அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, 10க்கும் குறைவாக உள்ளது. இது தவிர, ஒரு மாணவர் கூட இல்லாமல், 9 பள்ளிகள் உள்ளன. குறிப்பாக, தாராபுரம் கல்வி மாவட்டத்தில், ஒரு மாணவர் கூட இல்லாமல், 7 பள்ளிகளும், திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 2 பள்ளிகளும் உள்ளன.
வேலை தேடி பெற்றோர் வெளியூர் செல்வது, இடம்பெயர்ந்து குடியேறுவது, கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் நகர்வது உள்ளிட்ட காரணங்களால், திருப்பூர் மாவட்டத்தில் பல கிராமப்புற அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்துள்ளது.
ஒரு மாணவர் கூட சேராத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யாததால், 9 பள்ளிகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது
அய்யம்பாளையம், பொங்கலுாரில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆகிய இரண்டிலும், ஒரு மாணவர் கூட நடப்பு கல்வியாண்டில் சேரவில்லை.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளைச் சுற்றி குடியிருப்புகள் மிகக் குறைவாக உள்ளன.
பள்ளி வயதுடைய குழந்தைகள் இல்லாததால் சேர்க்கை குறைந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றனர்.
KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.3 * IFHRMS Kalanjiyam Mobile App New App New Update * Version 1.23.3 * Updated on 05-07-2026 * ...