கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - RTI தகவல்


 வருகைப் பதிவேட்டில்  ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 மூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் யார் பெயர் எழுத வேண்டும்? மற்றும் தலைமை பொறுப்பு எந்த ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் - RTI தகவல்


Seniors vs. Juniors: Whose name should be entered first in the attendance register? And to which teacher should the incharge responsibility be assigned? — RTI Information.



தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005


பொது நகவல் வழங்கும் அலுவலர்


வட்டாரக் கல்வி அலுவலகம், குருவிகுளம் 

ந.க.எண்.747/அ2/2018, நாள்.30-08-2018


பொருள்.


தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005-மனுதாரர் திரு. க.நடராஜன் என்பாருக்கு உரிய தகவல் அளித்தல் - சார்பு


பார்வை-


1. திருநெல்வேலி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் அவர்களின் சுடித எண்.5283/ஆ3/2017, நாள்.-11-12-2017.


2 குருவிகுளம் சரகம், பழங்கோட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் திரு. சு. நடராஜன் என்பாரது மனு. நாள்.06-12-2017.


பார்வை காணும் கடிதத்தின் ஆணைக்கிணங்க மற்றும் பார்வை(2)ல் காணும் மனுதாரரின் மனுவினை ஆய்வு செய்து தகவல் உரிமைச் சட்டம் பிரிவு6(3)ன் கீழ் மனுதாரருக்கு கீழ்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது.


பார்வை(2)ல் காணும் மனுவின் படி திரு. சந்திரசேகரன் என்பார் 15-10-2010 ல் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, திருமதி. து.சுப்புரத்தினம் என்பார் 23-07-2012 ல் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மேற்படி, நிகழ்வில் பட்டதாரி ஆசிரியரான திரு. ஷ. சந்திரசேகரன் என்பாரை விட ஆங்கில பட்டதாரி ஆசிரியையான திருமதி. து.சுப்புரத்தினம் என்பார் இளையவரே ஆவார்.



மனுதாரரின் கேள்வி & கேள்விக்கான விளக்கம்


1. ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் இருவரில் யாருடைய பெயர் முதலில் எழுதப்பட வேண்டும்


பட்டதாரி ஆசிரியர் பணி நிலையில் மூத்தோரின் பெயரே முதலில் எழுதப்பட வேண்டும்


2. தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்தால் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்


மூத்தோருக்கே முதலில் இவ் பொறுப்பினை பெறும் உரிமை உண்டு.


வட்டாரக் கல்வி அலுவலகம்

குருவிகுளம்


பெறுநர்

திரு.சு.நடராஜன்,

தலைமை ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

பழங்கோட்டை,

குருவிகுளம் சரகம்.


நகல்.

மாவட்டக் கல்வி அலுவலர்,

மாவட்டக் கல்வி அலுவலகம்,

சங்கரன்கோவில் - தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள்

 


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள் 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

தற்போதைய வெயில் காலத்தில் சின்னம்மை தொற்றுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். 


"Chich-Pois" எனும் பிரெஞ்சு மொழிச் சொல்லுக்கு "பச்சை பட்டாணி" ( Chick peas) என்று பொருள். 


சின்னம்மை ஏற்படும் போது உடல் முழுவதும் பச்சை பட்டாணி அளவில் கொப்புளம்  தோன்றியதால் "சிக்கன் பாக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது. மற்றபடி நாம் உண்ணும் சிக்கனுக்கும் இந்த சின்னம்மைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

 

பொதுவாக 

சின்னம்மைக்கு எந்த  மருத்துவ சிகிச்சையும்  தேவை இல்லை எனும் மூடநம்பிக்கை இன்னும் நமது சமூகத்தில் நிலவி வருகிறது.

அதைப் போக்கும் முகமாக இந்த விழிப்புணர்வுக்  கட்டுரை அமையும். 


சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் - வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ் மூலம் உண்டாகும் தொற்று நோயாகும். 


காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் என்பதால் தொற்றுக்குள்ளானவர் தும்மும் போதும் இருமும் போதும் அருகில் இருந்து அதை சுவாசிப்பவர்களுக்கு எளிதில்  பரவி விடும். 


இதனோடு கொப்புளங்கள் தோன்றும் நிலை வரும் போது தோலோடு தோல் உரசுவதாலும் தொற்றுப் பரவல் நடக்கிறது.


வைரஸ் தொற்று உடலுக்குள் சென்றதில் இருந்து நோயின் அறிகுறி தொடங்க சராசரியாக இரண்டு வாரங்கள் எடுக்கும்.


காய்ச்சல்

உடல் சோர்வு 

தொண்டை வலி

தலை வலி ஆகியன முதல் ஐந்து முதல் ஏழு நாட்கள் இருக்கும். 


அதன்பின், உடல் முழுவதும் சிவப்பு நிற படை தோன்றி நெஞ்சுப் பகுதி, பின்புறம், முகம் என கொப்புளங்கள் உருவெடுத்து உடல் முழுவதும் பரவும். 


இரண்டாவது வாரத்தின் முடிவில் கொப்புளங்கள் சருகாகி விழுந்து விடும். 


கொப்புளங்கள் தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து, அவை சருகாகி விழும் வரை பிறருக்குத் தொற்றுப் பரவும் நிலையில் இருக்கும். 


ஏன் சின்னம்மைக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்   ? 


பொதுவாக குழந்தைகளுக்கு இந்தத் தொற்று ஏற்படும் போது பெரிய பாதிப்புகள் இன்றி மறையும் என்பது உண்மை தான். ஆனால் வளர் இளம் பருவத்தினர், வயது வந்தோர், முதியோர், கர்ப்பிணிகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர்க்கு ஏற்படும் போது நோயின்  தீவிரமாக வெளிப்படும். 


முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் 

சிலருக்கு நிமோனியா எனும் தீவிர நுரையீரல் தொற்று , எண்கஃபாலைட்டிஸ் எனும் மூளை அழற்சி , கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படலாம். 


சின்னம்மைக்கு 

ஏசைக்ளோவிர்/ வேல்ஏசைக்ளோவிர் ஆகிய மாத்திரைகள் சிறப்பாக செயல்பட்டு நோயின் தீவிரத்தையும் நோயின் காலத்தையும் குறைக்கக் கூடியதாக உள்ளன. 


முக்கியமாக இந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின் கீழ், தோல் படை மற்றும் கொப்புளங்கள் தோன்றத் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் எடுக்கும் போது சிறந்த பலனைத் தருகிறது.  


இதுவன்றி சின்னம்மை ஏற்பட்டு குணமானவர்களுக்கு, வைரஸின் ஒரு பகுதி அவர்களின் நரம்பு மண்டலத்தில்  நெடிய துயில் நிலைக்குச் சென்று அமைதி காத்திருக்கும். தனக்கான தோதான சூழல் வரும் போது ( அந்த நபரின் எதிர்ப்பு சக்தி குறையும் போது) மீண்டும் உயிர்ப்பு பெற்று அக்கி எனும் ஹெர்பிஸ் சோஸ்டர் நோயை ஏற்படுத்தும். அக்கி என்பது தோலில் திராட்சை பழம் போல தோற்றம் கொண்ட ஒன்றோடு ஒன்று நெருங்கி ஒட்டி இருக்கும் கொப்புளங்களுடன் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடிய நோயாகும். 


ஒரு வயதுக்குள் சின்னம்மை ஏற்பட்டிருந்தாலும் சரி, அந்த நபர் முதியவராக ஆன பின்பும் கூட அதாவது அறுபது வயதைக் கடக்கும் போது மீண்டும் வெளிவந்து அக்கியை ஏற்படுத்தலாம்.

அந்த நோய்க்கும், 

ஏசைக்லோவிர் மருந்தை உடனடியாகக் கொடுப்பதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


சின்னம்மை கண்ட ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களில் 20% பேருக்கும், எதிர்ப்பு சக்தி குன்றியோரில் 50% பேருக்கும் அவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் அக்கி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிக. 


யாருக்கெல்லாம் சின்னம்மை தீவிரத்துடன் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது? 


எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறிப்பாக அதிக அளவில் ஸ்டீராய்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், 


புற்று நோய் சிகிச்சையில் இருப்பவர்கள், மனித எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர், கர்ப்பிணிமார்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், குறைவான எடை கொண்ட ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள், ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்கள், 60+ வயதைத் தாண்டிய முதியோர் 

ஆகியோருக்கு சின்னம்மை தொற்று ஏற்படும் போது தீவிரத்துடன் வெளிப்படக்கூடும். எனவே அதிக கவனம் தேவை. உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். 


சின்னம்மை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிகள் உள்ளனவா? 


ஆம். சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசியை நமது குழந்தைகளுக்கு 

முதல் தவணை - 12 முதல் 15 மாதங்களுக்குள்ளும் 

இரண்டாவது தவணையை  - 4 முதல் 6 வயதிலும் வழங்கலாம். 


இந்தத் தடுப்பூசி 70 முதல் 90%  தொற்றுகளைத் தடுக்கவும், 95% தீவிரத் தொற்றுகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. 


இந்தத் தடுப்பூசியை, 

சின்னம்மை ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த குழந்தைக்கு மூன்று நாட்களுக்குள் வழங்கினால் நோயின் தீவிரம் குறைவதைக் காணலாம். 


எனது குழந்தைக்கு சின்னம்மை தடுப்பூசி போட்டும் சின்னம்மை வந்து விட்டதே. ஏன்? 


சின்னம்மை தடுப்பூசி நோய்த் தொற்றை 70-90% தடுக்கும் என்று ஆய்வுகளில் நிரூபணமாகியிருப்பதால், 10-30% பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும் தொற்று ஏற்படலாம். ஆயினும் தீவிர நோய் நிலை ஏற்படாமல் தடுப்பூசி காக்கும். 


இதுவரை சின்னம்மை தொற்று ஏற்படாத வயது வந்தோரும் கூட இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை - நான்கு மாத இடைவெளியில் போட்டுக் கொள்ளலாம். 


அக்கிக்கு எதிரான தடுப்பூசியும் 50+ வயதினருக்குக் குறிப்பாக நீரிழிவு மருத்துவப் பயனாளிகளுக்கென சந்தையில் உள்ளது. 

தேவைப்படுவோர் அக்கி ஏற்படாமல் இருக்க இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை -  இரண்டு முதல் ஆறு மாத இடைவெளியில் பெற்றுக் கொள்ளலாம். 


வீட்டில் ஒருவருக்கு சின்னம்மை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? 


சின்னம்மை ஏற்பட்டவரிடம் இருந்து வீட்டில் பிறருக்கும் தொற்று பரவாமல் இருக்க - தொற்று கண்டவரைத் தனிமைப் படுத்த வேண்டும். நோயின் அறிகுறிகள் தோன்றிய ஒருவரை தனிமைப்படுத்துவதற்குப் பெயர் "ISOLATION" ஆகும். 


கொப்புளங்கள் தோன்றியதில் இருந்து அவை சருகாகி உலரும் வரை இந்தத் தனிமைப்படுத்துதல் தொடர வேண்டும். 


இதற்கடுத்த படியாக, 

தொற்று கண்ட நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த அவரது வீட்டினர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்து, இன்னும் நோயின் அறிகுறிகள் தோன்றாதவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதை "QUARANTINE" என்கிறோம். 


தற்காலத்தில் இந்த குவாரண்டைன் என்பது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை.  அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 


பொதுவாக ஒரு குடும்பத்தில் முதலில் தொற்று கண்டவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் போது, இரண்டாவது தொற்று கண்டவருக்கு முன்னவரை விட தீவிரமாக நோய் வெளிப்படுவதைக் காண முடிகின்றது. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், சின்னம்மை தொற்று வீட்டில் உள்ள முதியோர்களுக்கும் அதிகமாக ஏற்பட்டு தீவிரத் தொற்றை ஏற்படுத்துகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 


கொப்புளங்கள் தோன்றிய  24 மணிநேரத்திற்குள், அவர்களுக்கு ஏசைக்லோவிர் / வால்ஏசைக்லோவிர் மருத்துவ சிகிச்சை கிடைத்திடச் செய்ய வேண்டும். 


- தொற்று கண்டவரின் விரல் நகங்களை வெட்டி விட வேண்டும்.  கைகளில் துணி கையுறை அணிவிக்கலாம். இது கொப்புளங்களில் ஏற்படும் அரிப்பின் போது அதிகமாக சொரிந்து காயம் ஏற்படாமல் தடுக்க உதவும். 

- அரிப்பு ஏற்படும் போது காலமைன் லோசன் தடவலாம்.

வேறு எந்த வலி நிவாரணி களிம்போ வேறு வகையான தைலங்களோ தடவுதல் கூடாது. 

- தினமும் லேசான  வெந்நீரில் உடலை ஒத்தி எடுக்கலாம். இது கொப்புளங்கள் மீது பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். 

- நீராகாரங்களாகப் பருகக் கொடுக்கலாம். 

- அரிப்புக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவர் பரிந்துரையில் சிகிச்சை எடுக்க வேண்டும்

- கொப்புளங்கள் சருகாகி உலர்ந்ததும் குளியல் போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வரலாம். 


அபாய அறிகுறிகள் குறித்த கவனம் தேவை - 

சின்னம்மை ஏற்பட்டவருக்கு இரண்டாவது வாரத்தில் 

- பிதற்றல் நிலை 

- அதீத தலை வலி

- வலிப்பு 

- மூர்ச்சை நிலை 

- மூச்சுத் திணறல் 

- தலை சுற்றல் 

- வயிற்று வலி

ஆகியன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை வழங்கிட வேண்டும். 


சின்னம்மை தானே என்று லேசாக எடுத்துக் கொள்ளாமல் 

அதற்கு வழங்க வேண்டிய மருத்துவ சிகிச்சையையும் 

அதற்குரிய சரியான வழிகாட்டுதல்களையும் கடைபிடித்தால் நோயின் தீவிரத்தையும் 

காலத்தையும் அதன் பாதிப்புகளையும் நம்மால் குறைத்திட முடியும். 


நன்றி இந்து தமிழ் 

மறையாத கட்டுக் கதைகள் - 3 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை





Postal Ballot உள்ள உறையை பிரிக்காமலேயே நிராகரிக்க 4 காரணங்கள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

தபால் ஓட்டுச்சீட்டு உள்ள உறையை (Form 13B) பிரிக்காமலேயே நிராகரிக்க 4 காரணங்கள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் ஓட்டுச்சீட்டு உள்ள சிறிய உறையை (Form 13B) பிரிக்காமலேயே, சில முக்கிய காரணங்களுக்காக அந்த வாக்குகளை செல்லாததாக நிராகரிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதல்களை (2026-ன் படி) வழங்கியுள்ளது.

தபால் வாக்குகள் நிராகரிக்கப்படும் முக்கிய காரணங்கள்:

படிவம் 13A இல்லை: ஓட்டுச்சீட்டு இருக்கும் சிறிய உறையுடன் (13B), உறுதிமொழி படிவம் (Declaration - Form 13A) இணைக்கப்படாமல் இருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும்.

கையொப்பம் இல்லை: உறுதிமொழி படிவத்தில் (13A) வாக்காளரின் கையொப்பம் இல்லையெனில் வாக்கு செல்லாது.

சான்றொப்பம் இல்லை: உறுதிமொழி படிவத்தில், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி (Attesting Officer) சான்றொப்பம் (Attestation) செய்யாமல் இருந்தால் நிராகரிக்கப்படும்.

பொருந்தாத எண்கள்: உறுதிமொழி படிவத்தில் (13A) குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டின் வரிசை எண்ணும் (Serial Number), சிறிய உறையின் (13B) மீதுள்ள வரிசை எண்ணும் ஒன்றாக இல்லாவிட்டால், அந்த வாக்கு செல்லாததாக அறிவிக்கப்படும்.


வாக்கு எண்ணிக்கை நடைமுறை:

தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் 500 தபால் வாக்குகளுக்கு ஒரு டேபிள் வீதம் அமைக்கப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மைக்ரோ அப்சர்வர், மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர்கள் பணியில் ஈடுபடுவர்.முக்கிய குறிப்பு: தேர்தல் கமிஷன் அனுப்பிய படிவம் தான் என்பதை உறுதி செய்த பிறகே, படிவம்-13சி (Outer Envelope) திறக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தபால் ஓட்டை பிரிக்காமலேயே நிராகரிக்கலாம் - வழிகாட்டுகிறது தேர்தல் கமிஷன் (பத்திரிக்கைச் செய்தி)



TNEA 2026 விண்ணப்பப் பதிவு தொடக்கம்



பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.


தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.


மே 3 முதல் ஜூன் 2 வரை www.tneaonline.org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம் - 

OC / BC / BCM / MBC @ DNC ₹500, 

SC / SCA / ST ₹250.


அசல் சான்றிதழ் பதிவேற்ற கடைசி நாள் - ஜூன் 6 தேதி ஆகும்.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை


5 மாநில தேர்தல் - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை


தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடக்கம். 


தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


TN Assembly Election 2026 - Exit Poll Survey Results



வெளியானது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்  


TN Assembly Election 2026 - Exit Poll Survey Results


மீண்டும் திமுக ஆட்சி - அக்னி நியூஸ் சர்வீஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு:


திமுக 169 இடங்களிலும், அதிமுக 64, தவெக 1 இடங்களிலும் வெல்லும் என கணிப்பு


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.


சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்:


DMK Alliance: 145 - 160 


ADMK Alliance: 50 - 65


TVK: 13 - 18


பிற: 5 - 8



நியூஸ் 18:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 80


TVK: 18 - 24


பிற: 2 - 6



தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.


NDTV & PEOPLE PULSE:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 80


TVK: 18 - 24


பிற: 2 - 6


MINNAMBALAM EXIT POLL:


DMK - 155


Admk - 72


Tvk - 5


Others -2


REPUBLIC & P MARC:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 85


TVK: 16 - 26


பிற: 1 - 6


MUMBAI SATTA BAZAAR PREDICTION:


DMK: 145 -155


ADMK:45 - 65


TVK: 7 - 9


VOTE VIBE SURVEY:


DMK Alliance: 103 - 113


ADMK Alliance: 114 - 124


TVK: 04 - 10


பிற: 0


இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளின் படி, திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.







அதிமுக ஆட்சி அமைய வாய்ப்புள்ளது என வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் 


JVC & TIMES NOW:


ADMK: 128-147 


DMK: 75-95 


TVK: 8-15


CNN NEWS 18:


ADMK: 114 - 124


DMK: 103 - 113


TVK: 4 - 10



இவை தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களிடம் எடுத்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் மட்டுமே - உண்மையான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 4 அன்று வெளியாகவுள்ளன



தற்போதைய Trending - NASA Landsatல் உங்கள் பெயரை உருவாக்கலாம் - நீங்கள் முயற்சி செய்து பார்த்தீர்களா?



தற்போதைய Trending - NASA Landsatல் உங்கள் பெயரை உருவாக்கலாம் - நீங்கள் முயற்சி செய்து பார்த்தீர்களா? 


நீங்க ட்ரை பண்ணி பார்த்துட்டீங்களா?


* இப்போ இதுதான் ட்ரெண்ட்!


📍நாசாவின் இணையதளத்தின் மூலம் Satellite Art உருவாக்குவது தற்போது ட்ரெண்டாகியுள்ளது!


* NASA landsat இணையதளத்திற்குள் சென்று உங்கள் பெயரை பதிவிட்டால், காடுகள், மலைகள், பாலைவனம் என இயற்கையில் அமைந்துள்ள வடிவங்களின் மூலம் Art உருவாக்கித் தருகிறது


வலைதள முகவரி :

https://science.nasa.gov/specials/your-name-in-landsat/



மாற்றுச் சான்றிதழ்கள் (TC) பதிவிறக்கம் செய்தல் தொடர்பான தகவல்

 

 

மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ்கள் (TC) பதிவிறக்கம் செய்தல் தொடர்பான தகவல்


Respected Chief Educational Officers (CEOs),


Kindly inform the Headmasters of Higher Secondary Schools:


The Transfer Certificates (TC) for Class 12 students should be downloaded on or before the 29th.


This is applicable only to Class 12 students; do not download for other classes.


If missed, the TC for Class 12 students can be downloaded from 11 May 2026.


For other classes, the download process may be started from 11 May 2026.


அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் வணக்கம்.


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ்கள் (TC) 29ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.


இது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பிற வகுப்புகளுக்கான TC-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.


29ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்ய தவறியிருந்தால், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான TC-ஐ 11.05.2026 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.


பிற வகுப்புகளுக்கான TC பதிவிறக்கம் 11.05.2026 முதல் தொடங்கப்படும்.


IFHRMS - கணக்கு தலைப்பு AD இல் இருந்து ACக்கு மாற்றம் செய்யும் முறை

 


🏹 நண்பர்களே தொடக்க கல்வித்துறையில்


AD இல் இருந்து AC கணக்கு தலைப்பு மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்


சென்னையில் HOD இல் சொல்லி தான் மாற்ற வேண்டுமா என்றால் தேவையில்லை


Payroll - Post HOA update webadi இல் சென்று HOA update செய்துவிட்டு மாவட்ட கருவூலத்தில் சென்று approve கொடுத்தால் போதுமானது.


பின்னர் result இல் AD head இல் உள்ள பணியாளர்கள் அனைவரையும் remove from current payroll என்று கொடுத்துவிட்டு AC பில் group இல் add செய்யவும்.


இதன் பிறகு schedule run கொடுத்தால் ஒரு நாளில் பெயர் result இல் வந்து விடும். 


இம்மாத ஊதியம் தயார் செய்து கொள்ளலாம்.🏹🏹


10 லட்சம் பேர் விலகல் – பாஜகவில் இணைந்த ராகவ் சதாவிற்கு எதிர்ப்பு



24 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் விலகல் – பாஜகவில் இணைந்த ராகவ் சதாவிற்கு இன்ஸ்டாகிராமில் பலர் எதிர்ப்பு தெரிவித்து Unfollow செய்தனர்.


ஜென் Z தலைமுறையின் தாக்கமா? பாஜக மாறியதால் ராகவ் சதா 10 லட்சம் ஆதரவாளர்களை இழந்தார்.


ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ராகவ் சதா அதிர்ச்சியளிக்கும் வகையில் விலகி பாஜகவில் இணைந்தது, ஜென் Z தலைமுறையினரைக் கவரவில்லை என்றே தெரிகிறது. இளைஞர்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருந்த, வசீகரமான அந்த ராஜ்யசபா எம்.பி., 24 மணி நேரத்திற்குள் பத்து லட்சம் ஆதரவாளர்களை இழந்தார்.


ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததன் மூலம் தேசிய தலைநகரில் ராகவ் சதா ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய மறுநாள் , அவரது செல்வாக்கு சரிவைச் சந்தித்திருப்பதாகத் தெரிகிறது. சதா, ஆம் ஆத்மி கட்சியின் ஆறு மாநிலங்களவை எம்.பி.க்களையும் தன்னுடன் பாஜகவுக்கு அழைத்துச் சென்றதால், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி தனது உறுப்பினர்களை ஒன்றுசேர்த்து வைக்கப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சதாவின் பாஜக நோக்கிய நகர்வு, 'ஜென் Z' தலைமுறையினரைக் கவரவில்லை என்றே தெரிகிறது.

  

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒருவரின் பிரபலத்தை அளவிடுவதற்கான ஒரு கருவியாக சமூக ஊடகப் பின்தொடர்பவர்கள் பெரும்பாலும் பார்க்கப்படுகிறார்கள். பாஜகவுக்கு அவர் திடீரென மாறியதைத் தொடர்ந்து , 24 மணி நேரத்திற்குள் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பின்தொடர்பவர்களை சதா இழந்தார் என்று தரவுகள் காட்டுகின்றன . வெள்ளிக்கிழமை அன்று, 37 வயதான அந்த ராஜ்யசபா எம்.பி.க்கு 1.46 கோடி பின்தொடர்பவர்கள் இருந்தனர். சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு, அவரது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.35 கோடியாகக் குறைந்தது.


இளைஞர்கள், குறிப்பாக ஜென் Z தலைமுறையினர், சதாவுக்கு எதிரான எதிர்ப்பை முன்னெடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அந்த அரசியல்வாதியால், அந்தத் தரவுகளை உள்வாங்கி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த முடியுமா?


"இன்ஸ்டாகிராமில் வைரலான ஜென் Z தலைமுறையினரின் 'அன்ஃபாலோ' பிரச்சாரம் காரணமாக, ராகவ் சதாவின் ஃபாலோயர்கள் 24 மணி நேரத்தில் 10 லட்சம் குறைந்துள்ளனர்," என்று NCP (SP) செய்தித் தொடர்பாளர் அனிஷ் கவாண்டே ட்வீட் செய்துள்ளார். "இணையம் ஒரே இரவில் உங்களை ஒரு கதாநாயகனாக மாற்ற முடியும். அதே நேரத்தில், ஒரே இரவில் உங்களை பூஜ்ஜியத்திற்கும் கொண்டு செல்ல முடியும்," என்றும் அவர் மேலும் கூறினார்.



ராகவ் சதாவின் பிரபலம் பாதிக்கப்பட்டதா?

உண்மையில், மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும், அரசியல் உரையாடல்களில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் பிரச்சினைகளைச் சதா தொடர்ந்து எழுப்பியதன் மூலம், இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.


தந்தைக்கான விடுப்பு, போக்குவரத்து நெரிசல், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தினசரி டேட்டா வரம்புகள் தொடங்கி, விமான நிலையங்களில் விலை உயர்ந்த சமோசாக்கள் மற்றும் 10 நிமிட டெலிவரி மாதிரிகள் மூலம் கிக் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது போன்ற "பிரச்சினைகள்" வரை அது பரந்திருந்தது. கிக் தொழிலாளர்களின் சவால்களை அனுபவிப்பதற்காக, அவர் ஒரு நாள் பிளிங்கிட் டெலிவரி பார்ட்னராகவும் பணியாற்றினார்.


கட்டாயமான 10 நிமிட விநியோகக் கெடுவை நீக்குமாறு விநியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்ட பின்னரே, அது இறுதியாகப் பலனளித்தது. இவை அனைத்தும், எளிதில் அணுகக்கூடிய ஒரு அரசியல்வாதியாக சதாவின் பிம்பத்தை வளர்த்தெடுத்தன.


மாநிலங்களவையில் ஜென் Z தலைமுறையினரை மையமாகக் கொண்ட இதுபோன்ற பிரச்சினைகளில் அவர் கவனம் செலுத்தியது, பாரம்பரிய அரசியலுக்கும் இளைஞர்களின் அபிலாஷைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவியது. சதா ஒரு வித்தியாசமான வகை தலைவராகக் கருதப்பட்டார்.


மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து சதா நீக்கப்பட்டபோதும், அவருக்குப் பெருமளவு ஆதரவு கிடைத்தது. பாலிவுட் நடிகை ப்ரினீதி சோப்ராவை மணந்தவரான அந்த ஆம் ஆத்மி எம்.பி., சதா தனக்கென ஒரு 'ஜென் Z கட்சியை' உருவாக்க வேண்டும் என்று ஒரு பயனர் பரிந்துரைத்த இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.


ரிஹான் என்ற பயனர், சதா வேறு கட்சியில் சேர்ந்தால் அவர் வெறுப்புக்கு ஆளாக நேரிடலாம் என்று கூறியிருந்தார். அந்தப் பதிவைப் பகிர்ந்தபோது, ​​சதா அதை ஒரு "சுவாரஸ்யமான சிந்தனை" என்று குறிப்பிட்டிருந்தார். இது அவர் சொந்தமாகக் கட்சியைத் தொடங்குவார் என்ற தீவிரமான யூகங்களுக்கு வழிவகுத்தது.


இருப்பினும், சதா இறுதியில் பாஜகவைத் தேர்ந்தெடுத்தார். அதனால், அவரது ஆதரவுத் தளமும் மாறி வருவதாகத் தெரிகிறது.


அவரைப் பின்தொடர்வதை நிறுத்தியவர்களில், ஆக்சிஜன் உதவியின்றி ஐரோப்பாவின் எல்ப்ரஸ் மலையில் 24 மணி நேரம் தங்கியிருந்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை சமீபத்தில் பெற்ற மலையேறுபவர் ரோத்தாஷ் கிலேரியும் ஒருவர்.


"இன்ஸ்டாகிராமில் ராகவ் சத்தாவின் முதல் பதிவிற்குச் சென்று, அதில் எத்தனை 'பின்தொடர்வதை நிறுத்து' கருத்துகள் உள்ளன என்று பாருங்கள். நிறைய இளைஞர்கள் பின்தொடர்வதை நிறுத்தச் சொல்வதை என்னால் காண முடிகிறது," என்று அரசியல் விமர்சகர் தீக்ஷா கந்த்பால் ட்வீட் செய்திருந்தார்.


உண்மையில், 'unfollowRaghavChadha' என்ற ஹேஷ்டேக் கொண்ட ஒரு டிரெண்ட் ஏற்கனவே வேகம் பெற்று வருகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் விமர்சித்த தனது பழைய பதிவுகளை சதா தனது சமூக ஊடக கணக்குகளிலிருந்து நீக்கிவிட்டதாகவும் பல பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


சதாவின் டைம்லைனில் 'மோடி'யைக் குறிப்பிடும் இரண்டு பதிவுகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சௌரப் பரத்வாஜ் சுட்டிக்காட்டினார். அந்த இரண்டுமே பிரதமரைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளன.


தெளிவாகப் பேசக்கூடிய மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அந்த அரசியல்வாதியால், இளைஞர்கள் மத்தியில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - RTI தகவல்

 வருகைப் பதிவேட்டில்  ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில் >>> தரவிறக்கம் செய்...