கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UGC NET exam results - The National Test Agency has released

 யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை


UGC NET exam results - The National Test Agency has released



B.Ed., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - TRB க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 


பி.எட்., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது பி.எட். படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஎட் முடிக்காமலேயே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பணி வழங்க உத்தரவிட்டிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், " தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் கோரி கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியானது. நானும் விண்ணப்பித்தேன். அந்த தேர்வில் 97 மதிப்பெண் எடுத்தேன்.


பின்னர், கடந்த மே மாதம் 31-ந் தேதி சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது. இதன் பின்னர் வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு விதிகளின்படி எனக்கு இப்பதவி பெற தகுதியில்லை என்று கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தது. மேலும் தகுதி இல்லாதோர் பட்டியலில் என் பெயர் முதலில் இடம் பெற்று இருந்தது. இந்த பட்டியலை ரத்து செய்து, எனக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று ராஜேஸ்வரி கூறியிருந்தார்.


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் கதிவரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறும் போது, "மனுதாரர் ஆசிரியர் தகுதித்தேர்வில் 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால், பி.எட். படிப்பை 2018-ம் ஆண்டுதான் முடித்துள்ளார். அதனால், அவருக்கு பணி பெற தகுதி இல்லை" என்று வாதிட்டார்.


மனுதாரர் ராஜேஸ்வரி தரப்பில் வக்கீல் என்.கவிதா ராமேஸ்வர் ஆஜராகி, '2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில், 2016-17 கல்வியாண்டில் இறுதியாண்டு படிக்கும் பி.எட். மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும், பி.எட். தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி மனுதாரர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். ஆனால், பி.எட். படிப்பில் அவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்த பாடத்திற்கான தேர்வை எழுதி 2018-ம் ஆண்டு பி.எட். பட்டம் பெற்றுவிட்டார்' என்று வாதிட்டார்.


அரசு தரப்பு , மனுதாரர் தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அவர் தனது உத்தரவில், "2017-ம் ஆண்டு தகுதி தேர்விலும், 2018-ம் ஆண்டு பி.எட். தேர்விலும் மனுதாரர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆகவே, மனுதாரரை ஆசிரியர் பணியை பெற தகுதியில்லாதவர் என்று கூற முடியாது. மனுதாரரை தகுதியில்லாதவர் பட்டியலில் சேர்க்க எந்த காரணமும் கிடையாது.  எனவே, மனுதாரரின் பெயரை தகுதி பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன்பின்னர், அவருக்கு பணி வழங்கும் நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளவேண்டும்" என்று குறிப்பிட்டார்.


Kalai Thiruvizha - Dates for CRC and Block level competitions - SPD Proceedings, Dated : 14-10-2024

 


குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடைபெறும் நாட்கள் அறிவிப்பு - SPD செயல்முறைகள், நாள் : 14-10-2024...


Kalai Thiruvizha - Dates for CRC and Block level competitions - SPD Proceedings, Dated : 14-10-2024...


கலைத் திருவிழா போட்டிகள் குறுவள மைய அளவில் 30-10-2024க்குள் முடித்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும், வட்டார அளவிலான போட்டிகள் 07.11.2024 அன்றைக்குள் முடித்து 08.11.2024க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் - மாநிலத் திட்டஇயக்குநரின் செயல்முறைகள்...


1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் 1 முதல் 12 - ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் நாட்கள் SPD அறிவிப்பு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A செல்லும் - உச்சநீதிமன்றம்

 


குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A செல்லும் - உச்சநீதிமன்றம்


"குடியுரிமைச் சட்டம் பிரிவு 6A செல்லும்"


1966 (ஜன.) முதல் 1971 (மார்ச்) வரை வங்காளதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லுபடியாகும்.


குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A செல்லும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு.


குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமில் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைச் செல்லும்; பிரிவு 6ஏ-வை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


ஒரு முக்கிய தீர்ப்பில், ஜனவரி 1, 1966 க்கு முன்பு அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கிய குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A இன் அரசியலமைப்பு செல்லுபடியை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.


Supreme Court upholds constitutional validity of Section 6A of Citizenship Act


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பை வாசிக்கும் போது, தலைமை நீதிபதி, தாம் உட்பட நான்கு நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பின் ஒரு பகுதியாக அமைந்திருந்த நிலையில், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மறுப்பு தெரிவித்ததாக கூறினார்.



தீர்ப்பின் நகல் இன்னும் பொது வெளியில் வெளியிடப்படவில்லை.


மத்திய அரசில் இருந்த ராஜீவ் காந்தி அரசுக்கும் அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்திற்கும் (AASU) இடையே அஸ்ஸாம் ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து 1985 இல் இந்த விதி சட்டத்தில் சேர்க்கப்பட்டது. பங்களாதேஷில் இருந்து அஸ்ஸாமிற்குள் குடியேறியவர்கள் நுழைவதற்கு எதிரான ஆறு வருட போராட்டத்தின் உச்சக்கட்டமாக இந்த ஒப்பந்தம் அமைந்தது.


புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்குவது மற்றும் "பூர்வீக" அசாமிய குடிமக்களின் உரிமைகள் தொடர்பான முக்கியமான கேள்விகளுக்கு இந்த தீர்ப்பு பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனுதாரர்களில் அஸ்ஸாம் பொதுப்பணித்துறை, அஸ்ஸாம் சன்மிலிதா மகாசங்க மற்றும் பலர் அசாமில் குடியுரிமைக்கு வேறுபட்ட கட்-ஆஃப் தேதியை நிர்ணயிப்பது "பாரபட்சமானது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது" என்று கூறுகின்றனர். மாநிலத்தில் மக்கள்தொகையை மாற்றுவது இந்திய அரசியலமைப்பின் 29 வது பிரிவின் கீழ் பழங்குடி அசாமிய மக்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான உரிமைகளைப் பாதிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


2012 இல் தாக்கல் செய்யப்பட்ட அவர்களின் மனுவில், “பிரிவு 6A இன் பயன்பாடு அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டும் மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பில் உணரக்கூடிய மாற்றத்திற்கு வழிவகுத்தது மற்றும் அஸ்ஸாம் மக்களை அவர்களின் சொந்த மாநிலத்தில் சிறுபான்மையினராகக் குறைத்துள்ளது. இது மாநிலத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பதோடு, மக்களின் கலாச்சார வாழ்வு, அரசியல் கட்டுப்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த சக்தியாக செயல்படுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளனர்.


மறுபுறம், மத்திய அரசு அரசியலமைப்பின் 11 வது பிரிவை நம்பியுள்ளது, இது "குடியுரிமையைப் பெறுதல் மற்றும் நீக்குதல் மற்றும் குடியுரிமை தொடர்பான பிற விஷயங்கள் தொடர்பாக எந்தவொரு ஏற்பாடும் செய்ய" பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் உட்பட மற்ற பிரதிவாதிகள், பிரிவு 6A நீக்கப்பட்டால், தற்போது வசிப்பவர்களில் பெரும்பாலோர் "நாட்டற்றவர்களாக" மாற்றப்படுவார்கள் மற்றும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியுரிமை உரிமைகளை அனுபவித்த பிறகு வெளிநாட்டினராகக் கருதப்படுவார்கள் என்று வாதிட்டனர்.



Reduction of train ticket booking days from 120 to 60

 


ரயில் டிக்கெட் முன்பதிவு நாட்கள் 120ல் இருந்து 60ஆக குறைப்பு.


நவம்பர் 1 முதல் ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 120 நாட்களில் இருந்து 60ஆக குறைப்பு - இந்திய ரயில்வே.


120 நாட்கள் அவகாசத்தின் கீழ் அக்.31 வரை முன்பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட்டுகள் செல்லுபடியாகும்.


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்பிலும் எந்த மாற்றமும் இருக்காது.


ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. இது வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளைப் பொறுத்தவரை, 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் முறை தற்போது உள்ளது. இந்த டிக்கெட்டை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இணையதளம் மூலமாகவும், ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து, பயணம் செய்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்ய இந்த காலவரம்பு பயணிகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படவுள்ளது. இது நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.


இது குறித்து இந்திய ரயில்வே துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படும். இது, நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இருப்பினும், அக்.31-ம் தேதி வரை, 120 நாட்களுக்கு முன்பதிவு செய்யும் காலத்தின் கீழ், அனைத்து முன்பதிவுகளும் அப்படியே இருக்கும். இதுபோல, நவ.1 ம் தேதிக்கு முன்பாக, முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை 60 நாட்களுக்குப் பிறகும் ரத்து செய்ய அனுமதிக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்பில் எந்த மாற்றமும் இருக்காது. குறிப்பிட்ட பகல்நேர விரைவு ரயில்களான லைம் தாஜ் விரைவு ரயில், கோம்தி முன்பதிவு செய்வதற்கான வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-10-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்:பொருட்பால்

அதிகாரம்: பழைமை

குறள் எண்:804

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்
கேளாது நட்டார் செயின்.

பொருள்:உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.


பழமொழி :
A good beginning is half the battle.

நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம்.


இரண்டொழுக்க பண்புகள் : 

* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன். 

* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.


பொன்மொழி :

உங்களின் உழைப்பை 80 சதவிகிதம் திட்டமிடவும், 20 சதவிகிதம்  திட்டமிட்டப்படி  செயல்படுத்தவும் தொடங்கினால்  நீங்கள்  நிச்சயம்  வெற்றியாளார் தான். -- ஆப்ரகாம் லிங்கன்


பொது அறிவு :

1. கருவளர்ச்சியில் முதலில் தோன்றும் உறுப்பு எது?


விடை: இதயம்

2.  ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு?

விடை:  1870



English words & meanings :

Stove-அடுப்பு, Strainer-வடிகட்டி


வேளாண்மையும் வாழ்வும் :

"டிசம்பர் 23,

இந்திய விவசாயிகள் தினம்.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது"


அக்டோபர் 18

சார்ல்ஸ் பாபேஜ்  அவர்களின் நினைவுநாள்

சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage, டிசம்பர் 26, 1791 - அக்டோபர் 18, 1871) பிரித்தானிய பல்துறையறிஞர் . இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். வித்தியாச பொறி 1882ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.இதுவே இண்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.1991 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.


தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் நினைவுநாள்

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931 . ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.



நீதிக்கதை

ஊக்கமது கைவிடேல்

மருங்கூர் என்னும் ஊரில் மாதவன் என்ற  மரம் ஏறும் தொழிலாளி வாழ்ந்து வந்தார்.

சுற்றுவட்டார கிராமங்களில் தென்னந்தோப்பில் தேங்காய்களை பறித்துக் கொடுத்து, அதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை ஏழ்மையில்லாதவாறு நடத்தி வந்தார் மாதவன்.

ஒரு சமயம் தேங்காய்களை அறுக்கின்ற காலத்தில் மாதவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. தென்னந்தோப்புக்காரர்கள் எல்லோரும் மாதவனை வரும்படி அழைத்து, தேங்காய்கள் அறுப்பதற்கு நாள் குறித்துவிட்டார்கள்.

மாதவனுக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்தான். பத்து வயது கூட நிரம்பாத சிறுவன் மகேந்திரன் படிப்பிலும், பேச்சு சாதுர்யத்திலும் படு சுட்டியாக இருந்தான் .

சிறு வயதிலேயே நல்ல பழக்கவழக்கங்கள் அவனிடம் நிறைய காணப்பட்டன. மகேந்திரனால் தன் தந்தைப்படுகின்ற வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதே நேரம் தேங்காய்களைப் பறிப்பதற்காக, தன் தந்தை ஒத்துக்கொண்ட வேலையையும் செய்ய முடியாமல், மனக்கஷ்டப் படுவதை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டான்.

தோப்புக்காரர்கள் எல்லோரும் மாதவனின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்திருந்தார்கள். ஆனால் மாதவனின் மகன் மகேந்திரன் வருவது அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

தோப்புக்காரர்களை நெருங்கிய மகேந்திரன் “ஐயா! எல்லோரும் மன்னிக்க வேண்டும். இன்று என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரால் குறிப்பிட்ட நாளில் தேங்காய் அறுப்பதற்கு வர முடியவில்லை.

அதனால் அவர் செய்கின்ற வேலையை நானே செய்வதாக முடிவெடுத்து வந்துள்ளேன்” என்றான். அதனைக் கேட்ட தோப்புக்காரர்கள் ஆச்சர்ய மடைந்தனர்.

“சிறுவனே! உன்னால் எப்படி உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களைப் பறிக்க முடியும்? என்று கேட்டனர்.

உடனே மகேந்திரன் “ஐயா! நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று தான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால், என் தந்தையின் உடல்நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவரிடம் செல்லவே பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அதனால் நான் மரம் ஏறி தேங்காய்களை அறுத்துத் தருகிறேன்” என்று கூறியபடி  கொண்டு வந்த வெட்டரிவாளினை இடையில் சொருகிக் கொண்டு வேகமாகத் தென்னை மரத்தின் மீது ஏறத் தொடங்கினான் மகேந்திரன்.

சிறுவயதிலேயே மரம் ஏறுவதில் தன் தந்தையுடன் பயிற்சி செய்தது சரியான நேரத்தில் உதவி செய்கிறதே! என்று மனதுள் நினைத்தபடியே மர உச்சிக்கு சென்று விட்டான் மகேந்திரன்.

தோப்புக்காரர்கள் எல்லோரும் மகேந்திரனை வியப்புடன் பார்த்து அவனின் வீரத்தைப் பாராட்டினார்கள். மகேந்திரன் தன் கடமையையே கருத்தில் கொண்டவனாக அரிவாளினால் தேங்காய்களை அறுக்கத் தொடங்கினான்.

பின்னர் மரத்தைவிட்டு கீழிறங்கி அடுத்த மரத்தில் ஏறத் தொடங்கினான். தன் தந்தையைப் போலவே, நன்கு விளைந்த தேங்காய்களை எல்லாம் இனம் கண்டுபிடித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுத்து முடித்து விட்டான்.

அந்த தோப்புக்காரரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அருகிலிருக்கும் மற்றொரு தென்னந்தோப்புக்குள் நுழைந்து தேங்காய்களை அறுக்கலானான் தனது தந்தையார் ஒத்துக்கொண்ட எல்லாத் தோப்புக்காரர்களின் தோப்புகளிலும் மரம் ஏறி தேங்காய்களை அறுத்துக் கொடுத்து பணத்தை  வாங்கிக் கொண்டு வீட்டையடைந்தான் மகேந்திரன்.

தான் வாங்கி வந்த பணத்தையெல்லாம் தந்தையிடம் கொடுத்து, தான் செய்து வந்த வேலைகளைப் பற்றிக் கூறினான் . மாதவன் அதனைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்.

பயமில்லாமல் உயரமான மரங்களில் ஏறி எப்படி நீ தேங்காய்களை அறுத்தாய்? என்று மகேந்திரனிடம் ஆச்சர்யத்துடன் கேட்டார்.

அதற்கு மகேந்திரன் “அப்பா! தன்னம்பிக்கையும் , உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும், விடா முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்ற மனத்துணிவும் தான் இக்காரியத்தில் எனக்கு வெற்றியைத் தேடி தந்தது.

இனிமேல் நீங்கள் கவலையுடன் நோயினால் படுத்திருக்க வேண்டாம். இப்போதே வைத்தியர்

வீட்டிற்குச் செல்லலாம்," என்று கூறினான்.

மாதவனோ தன் மகனை அன்போடு தழுவிக் கொண்டார்.

நீதி: மன உறுதியை இழந்து விடாமல் துணிவோடு செயல்களை செய்ய வேண்டும்.



இன்றைய செய்திகள்

18.10.2024

* தமிழகம் முழுவதும் கனமழையால் 891 குளங்கள் நிரம்பின: 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 60 சதவீதம் நீர்இருப்பு.

* தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையில், 200-க்கும்மேற்பட்ட பாம்புகள் தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பவர்களால் பிடிக்கப்பட்டன.

* ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. இது வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

* 12 அணிகள் பங்கேற்கும் 'புரோ கபடி லீக்' நாளை தொடக்கம்.

* டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை; ஹாரி புரூக் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Heavy rain across Tamil Nadu filled 891 ponds: 90 dams and reservoirs have 60 per cent capacity of water.

*  Over 200 snakes were caught by the fire department and snake catchers, in the rain that fell across Tamil Nadu yesterday.

* The time limit for booking train tickets will be reduced from 120 days to 60 days.  Indian Railways has said that this will come into effect from November 1.

* 'Pro Kabaddi League' will start tomorrow with 12 teams in participation.

* Test Cricket Rankings;  Harry Brooke advances to 2nd place.



Prepared by

Covai women ICT_போதிமரம்
.


ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க மறுக்கக்கூடாது - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

 


ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க மறுக்கக்கூடாது - தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள், நாள் : 09-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க மறுப்பதாக பார்வையிற்காண் கடிதத்தின்படி தமிழ்நாடு உயர்நிலை / பட்டதாரி ஆசிரியர் கழகம், திருப்பூர் மாவட்டம் சார்பாக கோரிக்கை மனு பெறப்பட்டுள்ளது.


  எனவே தமிழ்நாடு விடுப்பு விதிகள் 1933 இல் அறிவுரைகளின்படி செயல்படுமாறு திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UGC NET exam results - The National Test Agency has released

 யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை UGC NET exam results - The National Test Agency has released