கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜாக்டோ ஜியோ சார்பாக ஓய்வூதியக்குழுவிடம் அளிக்கப்படும் கோரிக்கை சாசனம்

 

 ஜாக்டோ ஜியோ சார்பாக ஓய்வூதியக்குழுவிடம் பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திடக் கோரி அளிக்கப்படும் கோரிக்கை சாசனம்


Old Pension Scheme Implementation: JACTTO GEO Representation to Pension Committee 


Request letter to the Pension Commission on behalf of JACTTO GEO requesting the implementation of the benefit pension scheme



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பிளஸ் 1 துணைத் தோ்வு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் ஆகஸ்ட் 25-இல் வெளியீடு


பதினொன்றாம் வகுப்பு துணைத் தோ்வு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் ஆகஸ்ட் 25-இல் வெளியீடு


பிளஸ் 1 துணைத் தோ்வுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிடப்படவுள்ளது.


இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சசிகலா அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தமிழகத்தில் பிளஸ் 1 துணைத் தோ்வு கடந்த ஜூலையில் நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்கள், மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்களது பதிவெண்களின் பட்டியல் இணையதளத்தில் 'நோட்டிஃபிகேஷன்' என்ற பகுதியில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிற்பகலில் வெளியிடப்படும்.


இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது தோ்வெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


B.Ed., கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோருக்கு 6 மாத கால பயிற்சி : DEO சுற்றறிக்கை




B.Ed., கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோருக்கு 6 மாத கால பயிற்சி  : பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



B.Ed., கல்வித் தகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று  பணிபுரியும் ஆசிரியர்களுக்கு NIOS வழங்கும் 6 மாத கால சான்றிதழ் படிப்பு இணைப்பு பயிற்சி - DEO சுற்றறிக்கை பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பத்து தலைமுறையின் ஏழ்மையை ஒரே தலைமுறையில் மாற்றும் வல்லமை கொண்ட ஒரே ஆயுதம் – "கல்வி"



பத்து தலைமுறையின் ஏழ்மையை ஒரே தலைமுறையில் மாற்றும் வல்லமை கொண்ட ஒரே ஆயுதம் – "கல்வி"



*1. அறிமுகம்*


மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் — உணவு, உடை, இருப்பிடம். ஆனால், அந்த மூன்றுக்கும் மேலான மிகப் பெரிய தேவையாக கல்வி இருக்கிறது. ஏழ்மை என்பது தலைமுறைகளாகத் தொடரும் நோய் போல. ஆனால் அந்த ஏழ்மையை முற்றிலும் அழிக்கக்கூடிய மருந்து படிப்பே ஆகும். படிப்பு மனிதனின் அறிவைத் தூண்டுகிறது, திறமையை வெளிக்கொணர்கிறது, வாழ்க்கையை மாற்றுகிறது.


*2. ஏழ்மையின் சங்கிலி*


ஏழ்மை என்பது வெறும் பணமின்மை மட்டுமல்ல; அது ஒரு சமூக நிலை.


கல்வியறிவு இல்லாதவன் நல்ல வேலை பெற முடியாது.


வேலை இல்லாதவன் பொருளாதார ரீதியாகத் தாழ்ந்து விடுவான்.


பொருளாதார ஏழ்மை குழந்தைகளின் கல்வியைத் தடுத்து, அடுத்த தலைமுறையையும் ஏழ்மையின் வட்டத்தில் சிக்கவைத்து விடுகிறது.


இவ்வாறு தலைமுறை தலைமுறையாக ஏழ்மை தொடர்கிறது. ஆனால், ஒரே தலைமுறையில் கல்வி வந்துவிட்டால், அந்த சங்கிலி உடைந்து போகும்.


*3. படிப்பு தரும் மாற்றங்கள்*


(அ) பொருளாதார முன்னேற்றம்:

கல்வி பெற்றவன் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுவான். நிலையான வருமானம் கிடைத்தால் குடும்பத்தின் பொருளாதார நிலை உடனடியாக உயர்ந்துவிடும்.


(ஆ) சமூக மரியாதை:

கல்வி பெற்றவன் தன் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவனாக மாறுவான். சமுதாயத்தில் மரியாதை பெறுவான்.


(இ) சுயநினைவு மற்றும் தன்னம்பிக்கை:

அறிவு பெற்றவன் யாராலும் ஏமாற்றப்பட மாட்டான். தன் உரிமைக்காக போராடத் தெரிந்திருப்பான்.


(ஈ) தலைமுறைக்கான வழிகாட்டுதல்:

கல்வியறிவு பெற்ற ஒருவன் தன் பிள்ளைகளை மேலும் உயர்ந்த கல்வி கற்கச் செய்வான். இதன் மூலம் ஏழ்மை வேரோடு அழியும்.


*4. வரலாற்று உதாரணங்கள்*


அப்துல் கலாம்: மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தும், படிப்பின் மூலம் "இந்தியாவின் விண்வெளி மனிதர்" ஆனார்.


பெரியாரும் பாரதியாரும்: கல்வியறிவின் மூலம் அறியாமையை எதிர்த்து சமூக சிந்தனையைப் பரப்பினர்.


சிறு கிராமங்களில் பிறந்த குழந்தைகள்: இன்று உலகின் பெரிய நிறுவனங்களில் வேலை செய்து தங்கள் குடும்பத்தையும் ஊரையும் உயர்த்தியுள்ளனர்.


இவர்கள் அனைவரும் ஏழ்மையை வெல்லச் செய்தது கல்விதான்.


*5. படிப்பு – சுதந்திரத்தின் சாவி*


அரசியல் சுதந்திரத்தைப் பெற்றாலும், கல்வியறிவு இல்லையெனில் அது முழுமையான சுதந்திரமில்லை.


படிப்பு தான் நம்மை அறியாமையின் இருளிலிருந்து விடுவிக்கும்.


படிப்பு தான் சிந்திக்கவும், சந்தேகிக்கவும், புதிதாய் உருவாக்கவும் கற்றுத் தருகிறது.


படிப்பு தான் "நான் ஏழை" என்ற எண்ணத்தை "நான் எதையும் செய்ய முடியும்" என்ற தன்னம்பிக்கையாக மாற்றுகிறது.


*6. குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் விளைவு*


ஒரு குடும்பத்தில் ஒருவராவது படித்து நல்ல நிலையை அடைந்தால்:


குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் ஊக்கமடைவார்கள்.


அக்குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.


சமூகத்தில் அந்தக் குடும்பம் ஒரு முன்னுதாரணமாகத் திகழும்.

இவ்வாறு படிப்பின் வெளிச்சம் ஒருவரை மட்டுமல்ல, பலரையும் ஒளிரச் செய்கிறது.


*7. இன்று நாம் செய்ய வேண்டியது*


பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பது நம் பெற்றோரின் முதல் கடமை.


கல்வி செலவாகாது; அது முதலீடு. அதன் பலன் தலைமுறைகள் அனுபவிப்பது.


ஏழ்மையை அழிக்க நன்கொடை, உதவி, திட்டங்கள் எல்லாம் தேவையானவை; ஆனால் அவற்றை விட கல்வி மட்டுமே நிலையான மாற்றத்தைத் தரும்.


*8. முடிவுரை*


ஏழ்மை என்பது மனிதனை அடிமைப்படுத்தும் ஒரு சங்கிலி. ஆனால் அந்தச் சங்கிலியை உடைக்கக் கூடிய ஒரே ஆயுதம் படிப்பு. அது மனிதனை பொருளாதாரத்திலும், சமூகத்திலும், சிந்தனையிலும் உயர்த்துகிறது.

எனவே, "பத்து தலைமுறையின் ஏழ்மையை ஒரே தலைமுறையில் மாற்றும் வல்லமை கொண்ட ஒரே ஆயுதம் – படிப்பு" என்ற கூற்று வெறும் வாசகம் அல்ல; அது வாழ்க்கை நியதி.


* பிள்ளைகளுக்கு நாம் தர வேண்டிய மிகப்பெரிய பரிசு – நிலம், வீடு, செல்வம் அல்ல ; கல்வியே...


தூய்மைப் பணியாளருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

 


தூய்மைப் பணியாளருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்


சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து வரலட்சுமி உயிரிழந்தார்.


வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


இந்த நிலையில், கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.


மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.


6 இடங்களில் வன உயிரின புத்தாக்க வளர் மையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு



6 இடங்களில் வன உயிரின புத்தாக்க வளர் மையங்கள் அமைக்க அரசாணை G.O.(D).No.185, New Wildlife Conservation, Dated : 29-07-2025 வெளியீடு


தேனி மாவட்டம், மேகமலை உள்ளிட்ட 6 இடங்களில் வன உயிரின புத்தாக்க வளர் மையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து ஆசிரியர் காயம்

 


பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து ஆசிரியர் காயம்


காஞ்சிபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கட்டடத்தின் மேல் பகுதியில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் ஆசிரியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. 


காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கட்டடம் கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கட்டடத்தின் பல இடங்களில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. கூரை பூச்சு பல இடங்களில் பெயர்ந்து விழுந்துள்ளது. 


அதன் தொடர்ச்சியாக, பள்ளியின் கூரை பூச்சு நேற்றும் பெயர்ந்து விழுந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் மீது விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷடவசமாக மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 


இப்பள்ளியின் பராமரிப்பு பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் அடிக்கடி மேற்கொள்வதாக கூறினாலும், இப்பள்ளி கட்டடத்தின் தரம் மோசமான நிலையில் இருப்பதாகவே பெற்றோர் தெரிவித்துள்ளனர். 


இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, 18வது வார்டு கவுன்சிலர் மல்லிகா, மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.



தவறான தொடுதல் : உடற்கல்வி ஆசிரியர் POCSO சட்டத்தின் கீழ் கைது

 

 தவறான தொடுதல் புகார் : உடற்கல்வி ஆசிரியர் POCSO சட்டத்தின் கீழ் கைது 


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பானாம்பட்டு பாதை பகுதியை சேர்ந்த ஆதி என்ற சிவபாலன் (வயது 48) என்பவர் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன், உடற்கல்வி பாடவேளையின்போது 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரை பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்று தவறான தொடுதலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர்.


இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அரசு பள்ளி மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் தவறான தொடுதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

 

 

கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


பாலியல் தொல்லை கொடுத்​த​தாக அரசு உதவி​பெறும் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்​டார். திருச்சி மேல​கல்​கண்​டார் கோட்டை மாருதி நகரைச் சேர்ந்​தவர் எஸ்​.​வில்லி​யம் பால்​ராஜ்(52). இவர், புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் உள்ள அரசு உதவி​பெறும் பள்ளி​யில் முது​நிலை கணித ஆசிரிய​ராகப் பணிபுரிந்து வந்​தார்.


இந்​நிலை​யில், அங்கு பயிலும் ஒரு மாணவிக்கு கடந்த ஓராண்​டாக பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வல​கத்​துக்கு புகார் தெரிவிக்​கப்​பட்​டது. மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வலர் வசந்​தகு​மார் முதல்​கட்ட விசா​ரணைக்​குப் பிறகு, கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.


இது தொடர்​பாக ஆசிரியர் வில்​லி​யம் பால்ராஜ் மீது போக்சோ உள்​ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்​குப் பதிவு செய்​து, அவரை கைது செய்​தனர். பின்​னர், புதுக்​கோட்டை மகளிர் நீதி​மன்​றத்தில் ஆஜர்படுத்​தி, சிறை​யில்​ அடைத்தனர்​.



தெரு நாய்களைப் பிடிப்பவர்களைத் தடுப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்



தெரு நாய்களைப் பிடிப்பவர்களைத் தடுப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்


 தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது : உச்ச நீதிமன்றம்


தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்


"நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டு மொத்த வழிகாட்டு நெறிமுறைகளை தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்படுத்தப் போகிறோம்" - உச்சநீதிமன்றம்


பிடித்த இடத்திலேயே விட வேண்டும்

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு அவற்றை பிடித்த இடத்திலேயே விட்டு விட வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளது.




வெறி நாய் கடி விவகாரம்

இந்தியாவில் வெறி நாய் கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வாரம் வழக்கு பதிவு செய்திருந்தது.


ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, டெல்லியில் சுற்றித் திரியும் அத்தனை தெரு நாய்களையும் அடுத்த எட்டு வாரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்றும், அவற்றை முறையான காப்பகம் அமைத்து பராமரிக்க வேண்டும் என்றும் நாய்களுக்கு தேவையான கருத்தடை செய்வது தடுப்பூசி போடுவது உள்ளிட்டவற்றை அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. 


உத்தரவுக்கு எதிராக மனு

இந்த உத்தரவுக்கு எதிராக சிலர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும் என் வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதி அமர்வு அமைக்கப்பட்டது. 


இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.


மத்திய அரசு வாதம்

அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா, "ஒரே நாளில் பத்தாயிரம் பேருக்கு மேல் இந்தியாவில் நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர்.


ஒரு வருடத்திற்கு 20000 நபர்கள் வரை இந்த தெரு நாய் கடியினால் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


 பெரும்பாலும் குழந்தைகள்தான் தெரு நாய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இங்கு யாரும் விலங்குகளை வெறுப்பவர்கள் கிடையாது. அவற்றை யாரும் கொல்ல வேண்டும் என சொல்லவில்லை. அவற்றை மனிதர்களிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம்" என கூறினார்


மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்

அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்த மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், "இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எதிர் தரப்பிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.


இவற்றைக் காப்பகங்களில் வைக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால், அந்த காப்பகங்கள் எங்கே இருக்கிறது.


பெரும்பாலான இடங்களில் ஒட்டுமொத்தமாக நூற்றுக்கணக்கான நாய்கள் அடைக்கப்படுகின்றது. அவை ஒன்றுக்கொன்று சண்டையிடும் பொழுது பெரும்பாலானவை இறந்து போகின்றன.



தெரு நாய்களுக்கு உரிய கருத்தடை உள்ளிட்டவற்றை செய்யும் பொழுது அவற்றின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும். ஆனால், அதை விடுத்து இப்படி ஈவு இரக்கமின்றி செயல்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.


டெல்லிக்கு வழங்கப்பட்ட இந்த உத்தரவை பின்பற்றி பிற மாநிலங்களும் நாய்களைப் பிடிக்க தொடங்கியிருக்கின்றன என கூறினார்.

பிறகு வழக்கின் தீர்ப்பு  தேதி குறிப்பிட்டாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.


உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

இந்த வழக்கில் 22-08-2025 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,


"கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் உள்ள அனைத்து நாய்களையும் எட்டு வார காலத்திற்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது.


தற்பொழுது அந்த தீர்ப்பில் நாங்கள் சில மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறோம். அதன்படி டெல்லியில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அந்த நாய்களை எங்கிருந்து பிடித்தார்களோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் 


தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையாக தடை

மூர்க்கத்தனமான ராபிஸ் நோயை பரப்புவதற்கான வாய்ப்புகள் உள்ள நாய்களை தொடர்ந்து காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும்.


தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதை முழுமையாக தடை செய்கிறோம். தெருவோர நாய்களுக்கு உணவளிக்க கூடியவர்கள் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் உணவளிக்க வேண்டுமே தவிர கண்ட இடங்களில் உணவுகளை போடக்கூடாது .


தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை உருவாக்க வேண்டும். 


நாய் கடி விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுகிறோம்.


நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டு மொத்த வழிகாட்டு நெறிமுறைகளை தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்படுத்தப் போகிறோம்.


தெரு நாய்கள் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது, இதற்கென்று எத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது என்று இது தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.


மாநகராட்சிகள் தெரு நாய்களை பிடிக்க பிறப்பித்த முந்தைய உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுக்கிறது.


தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்குகிறோம்.


நாய்களைப் பிடிப்போரை தடுப்பவர் மீது 25 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்"  என தீர்ப்பு வழங்கப்பட்டது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜாக்டோ ஜியோ சார்பாக ஓய்வூதியக்குழுவிடம் அளிக்கப்படும் கோரிக்கை சாசனம்

   ஜாக்டோ ஜியோ சார்பாக ஓய்வூதியக்குழுவிடம் பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திடக் கோரி அளிக்கப்படும் கோரிக்கை சாசனம் Old Pension Sch...