கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Notification For Working Teachers

 

 

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - 2026 NOTIFICATION


பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விரிவான அறிவிக்கை வெளியீடு


TNTET 2026 Notification For Working Teachers


Teachers Recruitment Board hosted Notification on 13.02.2026 for the conduct of Tamil Nadu Teacher Eligibility Test for Working Teachers 2026 TNTET Paper -I and TNTET Paper -II



>>> Click Here to Download 



தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026 அறிவிப்பு 


பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு Special TET 2026 அறிவிப்பு 


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026 TNTET தாள் -I மற்றும் TNTET தாள் -II ஆகியவற்றை நடத்துவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 13.02.2026 அன்று வெளியிட்டுள்ளது.


GOVERNMENT OF TAMILNADU

TEACHERS RECRUITMENT BOARD

3rd & 4th Floor, Puratchi Thalaivar Dr.M.G.R Centenary Building,

Perasiriyar Anbazhagan Kalvi Valagam, College Road, Nungambakkam,

Chennai -600 006.

Website: https://www.trb.tn.gov.in

Notification No.01 / 2026

Date. 13.02.2026

SHORT NOTICE

Teachers Recruitment Board hosted Notification on 13.02.2026 for the conduct of Tamil Nadu Teacher Eligibility Test for Working Teachers - 2026 TNTET Paper -I and TNTET Paper -Il in its website (https://www.trb.tn.gov.in).


IMPORTANT DATES:-

Date of Notification : 13-02-2026

Commencement of submission of online Application : 18-02-2026

Last date for submission of online Application : 10-04-2026

Edit Option : 11-04-2026 to 13-04-2026

Date of Examination -TNTET Paper I : 04-07-2026 FN (Tentative)

Date of Examination - TNTET Paper II : 05-07-2026 FN (Tentative)

For other information relating to Examination Scheme, Payment of fees and other details, candidates are advised to refer the detailed Notification uploaded in the Teachers Recruitment Board's Website: https://www.trb.tn.gov.in

Chairman


தமிழ்நாடு அரசு 

ஆசிரியர் தேர்வு வாரியம் 

3வது மற்றும் 4வது தளம், புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டிடம், 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், 

கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், 

சென்னை -600 006. 

வலைத்தளம்: https://www.trb.tn.gov.in 

அறிவிப்பு எண்.01 / 2026 தேதி. 13.02.2026 

குறுகிய அறிவிப்பு 

தமிழ்நாடு பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026 TNTET தாள் -I மற்றும் TNTET தாள் -Il ஆகியவற்றை நடத்துவதற்கான அறிவிப்பை ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் 13.02.2026 அன்று அதன் வலைத்தளத்தில் (https://www.trb.tn.gov.in) வெளியிட்டது. 

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு தேதி: 13-02-2026 

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தொடக்கம்: 18-02-2026 

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 10-04-2026 

திருத்த வாய்ப்பு: 11-04-2026 முதல் 13-04-2026 வரை 

தேர்வு தேதி -

TNTET தாள் I : 04-07-2026 முற்பகல் (தற்காலிகமானது) 

TNTET தாள் II : 05-07-2026 முற்பகல் (தற்காலிகமானது) 


தேர்வுத் திட்டம், கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற விவரங்கள் தொடர்பான பிற தகவல்களுக்கு, வேட்பாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வலைத்தளமான https://www.trb.tn.gov.in இல் பதிவேற்றப்பட்ட விரிவான அறிவிப்பைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தலைவர்



>>> Click Here to Download Detailed Notification 

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் அனைத்து வகையான தேர்தல் பணிகளும் முடிக்கப்பட்டு இருக்க வேண்டிய தேதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் அனைத்து வகையான தேர்தல் பணிகளும் முடிக்கப்பட்டு இருக்க வேண்டிய தேதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


மே 10ஆம் தேதிக்குள் அனைத்து வகையான தேர்தல் பணிகளும் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்கான தகவல்.


By Speed Post/E-mail

ELECTION COMMISSION OF INDIA

NIRVACHAN SADAN, ASHOKA ROAD, NEW DELHI-110001

No.437/6/1/INST/ECI/FUNCT/MCC/2026

Dated: 9th February, 2026

To

The Chief Secretaries to the Governments of:

Assam, Dispur;

Kerala, Thiruvananthapuram;

Puducherry,

Tamil Nadu, Chennai; and

West Bengal, Kolkata.


The Chief Electoral Officers of:

Assam, Dispur;

Kerala, Thiruvananthapuram;

Puducherry,

Tamil Nadu, Chennai; and

West Bengal, Kolkata.


Subject: General Elections to Legislative Assemblies of the States of Assam, Kerala,Tamil Nadu and West Bengal and UT of Puducherry, 2026-Transfer/Posting of officers connected with conduct of elections Regarding.

Sir/Madam,

I am directed to state that the term of existing Legislative Assemblies of the States of Assam, Kerala, Tamil Nadu and West Bengal and UT of Puducherry are due to expire as under:-


Name of State/UT               Term upto

Assam 20.05.2026 

Kerala 23.05.2026 

Puducherry  15.06.2026 

Tamil Nadu    10.05.2026 

West Bengal  07.05.2026


The Commission has been following a consistent policy that officers directly connected with conduct of election in an election going State/UT are not posted in their home districts or places where they have served for a considerably long period.



01-06-2026ல் சிறப்பு நிலை பெற உள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு

 


நண்பர்களே வணக்கம் 🙏


01-06-2026ல் சிறப்பு நிலை பெற உள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு


1/6/2026

சிறப்பு நிலை Special Grade பெற உள்ள

 2003,2004 & 2005 TRB நியமன (1/6/2006 பணி வரன் முறை) ஆசிரியர்களின் 

கனிவான கவனத்திற்கு..


இன்னும் 3½ மாதத்தில் சிறப்பு நிலை பெற உள்ளீர்கள்... 

அதற்கு கீழ் கண்ட ஆவணங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்...


1) பணி நியமன ஆணை


2) தொகுப்பூதியம் நீக்கம் செய்து பொதுவான ஆணை


3) 1.6.2006 முன் தேதி இட்டு பணி வரன் முறை ஆணை ( தனிப்பட்ட ஆணை அப்போது வழங்கினார்கள்)


4) தகுதி காண் பருவம் நிறைவு ஆணை


5) 1/6/2016 தேர்வு நிலை பெற்ற ஆணை


இவை அனைத்தும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

( பணிப் பதிவேட்டில் பதிவு உள்ள பக்க நகல் தேவைப்படும்)


இது தவிர


6) SSLC

7) HSC

8) UG 

9) PG 

10) B.Ed / D.T.Ed


கல்வி சான்றிதழ் நகல் மற்றும் உண்மைதன்மை பெறப்பட்ட விவரம் அவற்றின் SR entry details ...


1/6/2026 க்கு இப்போதே பதிவு செய்வதன் நோக்கம்...

உண்மைத் தன்மை பெறப்படாமல் இருப்பின் இப்போதே தலைமை ஆசிரியர் வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்..


அதே போல 10/12/UG/PG/B.Ed/D.T.Ed other state இல் படித்து இருப்பின் கட்டாயம் மதிப்பீடு (Evaluation) செய்யப்பட வேண்டும்...


உண்மைத் தன்மை/Evaluation ஏற்கனவே வாங்கி இருந்து பணிப் பதிவேட்டில் பதிவு எனில் ... 

நன்று / போதும்


தற்போது மீண்டும் புதிதாக வாங்க தேவையில்லை...


அதே போல 1/6/2006 இல் இருந்து 31/12/2025 வரை பணிக் காலம் சரிபார்ப்பு விவரம் விடுதல் இன்றி பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்...


செய்முறை தேர்வு

பொதுத் தேர்வு

சட்ட மன்ற தேர்தல் 

மதிப்பீட்டு பணி

கோடை விடுமுறை என வரும் நாட்களில் Busy ஆக 😊 இருப்போம்...


ஏதேனும் document/entry இல்லாமல் இருந்தால் அதை பெற போதுமான கால அவகாசம் உள்ளது 👍


தங்களின் முன் திட்டமிடல்


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர் 

மதுரை 8/2/26🙏


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-02-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 13.02.2026 

கிழமை:- வெள்ளி


 

திருக்குறள்: 

குறள் 442:

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

விளக்க உரை:

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.


பழமொழி :
Small steps build big journeys.

சிறிய படிகளே பெரிய பயணத்தை உருவாக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.


பொன்மொழி :

மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே வாழ்வில் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியும் - கென்னடி


பொது அறிவு :

1. Which Indian city became a UNESCO Creative City of Gastronomy?

யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டி ஆஃப் காஸ்ட்ரோனமியாக எந்த இந்திய நகரமாக  மாறி உள்ளது?

Mumbai - மும்பை

2. Who controls monetary policy in India?

இந்தியாவில் பணவியல் கொள்கையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?

Reserve Bank of India (RBI).  - இந்திய ரிசர்வ் வங்கி (RBI).


English words :

Monetary - பணவியல்

Mechanics - இயக்கவியல்


தமிழ் இலக்கணம்:

இன்று சும்மா என்ற சொல்லை குறித்து சற்று பார்ப்போம்.
சும்மா என்ற சொல்லை ஒரு நாளில் நாம் ஒரு முறையாவது உபயோகப் படுத்துவது உண்டு. ஆனால் இதற்கு அகராதியில் பொருள் இல்லை. ஏனென்றால் இது இடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு பொருள் தரும். வாருங்கள் சில எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்

1. சும்மா கிடந்த சங்கை எடுத்து


பொருள் –பயன்படாமல் கிடந்த

2. நான் சும்மா சொன்னேன்


பொருள் –நான் பொய் சொன்னேன்

3. இதை நீ சும்மா எடுத்துக்கோ


பொருள் – இலவசமாக எடுத்துக் கொள்
ஆக இந்த மூன்று வாக்கியங்களிலும் மூன்று சும்மாவும் மூன்று பொருள் தருகிறது அல்லவா.


  இன்னும் தொடரும்


அறிவியல் களஞ்சியம் :

அண்டார்டிகா என்றாலே நம் நினைவுக்கு வருவது மைல் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் வெண்மையான பனிப்பாறைகள் தான். ஆனால், அந்த உறைந்த அமைதிக்கு அடியில் "நெருப்பு உலகம்" ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? சீன விஞ்ஞானிகள் தலைமையிலான சர்வதேசக் குழு, அண்டார்டிகாவின் பனிக்கு அடியில் புதைந்து கிடக்கும் 207 ராட்சத எரிமலைகளை கண்டறிந்து உலகையே அதிரவைத்துள்ளது.


பிப்ரவரி 13

உலக வானொலி நாள்

உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.


கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா  (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.



நீதிக்கதை

பசி

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா? என்றார்.

உடனே இளவரசர் மறித்து சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதியசம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான்.

உடனே இளவரசருக்கு சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்? ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்


இன்றைய செய்திகள்

13.02.2026

⭐தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி

⭐வருகிற 15-ந்தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

⭐ எகிப்து நாட்டில் மன்னர்களின் கல்லறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு.

⭐9801 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் இன்று வழங்குகிறார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது லீக் ஆட்டம்: நெதர்லாந்து-அமெரிக்கா இன்று மோதல்


Today's Headlines

⭐ Chief Minister M.K. Stalin said that Tamil Nadu is leading in industrial development.

⭐ Shares of India's leading IT companies have fallen sharply due to the impact of AI technologies

⭐The Meteorological Department has announced that there is a possibility of moderate rain in Tamil Nadu due to a new low-pressure area forming on February 15th onwards.

⭐ 2000-year-old Tamil-Brahmi inscriptions discovered during a survey conducted in the tombs of kings in Egypt.

⭐ Appointment orders for 9801 people - The Chief Minister to provide today.

SPORTS NEWS

🏀3rd league match at Chepauk Stadium: Netherlands-USA clash today


Departmental Exams December 2025 - Tentative Answer Key Released

 

 


துறைத் தேர்வுகள் டிசம்பர் 2025க்கான உத்தேச விடைகள் வெளியீடு


Departmental Tests December 2025 - Tentative Answer Key Released 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு - ஆதரவா? அதிருப்தியா?

  



முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு ஆதரவினை கொண்டு வந்து சேர்த்ததா? அதிருப்தியினை கொண்டு வந்து சேர்த்ததா?


 *மாநாட்டினை நடத்திய ஒருங்கிணைப்பாளர்கள் சுய பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்!. போர்க்குண இயக்க உறுப்பினர்களின் உரிமை குரல்!.. ஆதார் அட்டையினைப் போல அவரவர் சங்கங்கள் தான் அடையாள முகவரி என்பதை ஏன் மறந்து போனார்களோ தெரியவில்லை?..*



*AIFETO... 10.02.2026.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண்:- 36/ 2001.*


 *பிப்ரவரி 8-ல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக சென்னை, நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு அரசுத் திட்டங்களினால்  மக்களிடம் பாராட்டு பெறுவதற்கான காரணமே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான்!.. நீங்கள் எங்களுக்கு!.. நாங்கள் உங்களுக்கு!... எப்போதும் பக்கபலமாக இருப்போம். 2.0 ஆட்சியிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறிடும்!.. என்று ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதலமைச்சர். உறுதியளித்துள்ளார்.*



 *புதிதாக எந்த அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிடவில்லை. பெட்டி இருக்கிறது!.. பூட்டு இருக்கிறது!.. சாவியும் இருக்கிறது!.. திறந்து பார்த்தால் நிதி இல்லை!..*


 *முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் என் பெயருக்கு முன்னால் கருணை இருக்கிறது... ஆனால் உங்களுக்கு கொடுப்பதற்கு என் பெயருக்கு பின்னால் இருக்கிற நிதி இல்லையே!.. என்பார்.*


 *ஆனால் அவர்கள் காலத்தில் தான் இந்தியாவில் முதன்முதலாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கினார்கள். வேலை வாய்ப்பாக பதிவு மூப்பு  அடிப்படையில்  ஆசிரியர்களை நியமனம் செய்தார்கள்.*


 *அதிமுக ஆட்சியில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,  என 55,000 பேரை 01.06.2006  முதல் ஒரே சமயத்தில் காலமுறை ஊதியம் வழங்கி அனைவரையும் பணி நிரந்தரப்படுத்தி ஆணை வழங்கினார்கள்.*



 *கருணைத்தொகையினை தவிர்த்து விட்டு போனஸ் என்று அறிவித்தார்கள்.*


 *ஈட்டிய விடுப்பினை பணமாக்கிக் கொள்ளலாம்!.. என்பதற்கும் அரசாணை வழங்கினார்கள்!.. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இல்லாத பதவி என்பதால் அவர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் ₹ 5400/- சிறப்பு நிலை ஊதியம் ₹ 5700/- என்பதை நிர்ணயம் செய்து அரசாணை வழங்கினார்கள்.*


*இறந்தவர்களை காடு சேர்ப்பதற்காக செலவிற்காக முதலில்  பத்தாயிரத்தை தொடங்கியவர். அறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு வழங்கிய ஊக்க ஊதிய உயர்வினை அவரது காலத்திலும் தொடர்ந்து வழங்கினார்கள்.*



*தமிழ் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறலாம் என்று அவர் காலத்தில் தான் ஆணை கொண்டுவரப்பட்டது.*


 *மந்தண முறையை நீக்கினார்கள்.*


 *வேலை நியமன தடை சட்டத்தை நீக்கியவர்.*


 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநாட்டில் தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்கள்.. ஸ்டாலின் அவர்கள் ஆட்சியிக் காலத்தில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட 9 அறிவிப்புகளையும் வெளியிட்டார்கள்.*


 *கோவிட் பெருந்தொற்று  காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு,  ஈட்டிய விடுப்பு சரண் செய்து கொள்வது நிறுத்திவைப்பு ஆகியவற்றையெல்லாம் விடுவித்தது,  வேறெங்கும் இல்லாத புதிய திட்டமான அரசுப் பணிகளில் விபத்தில் உயிரிழக்க நேர்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய், இயற்கை மரணம் அடைந்தால் பத்து லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடாக தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள்.*


 *பணியில் இருக்கும் போது மரணம் அடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை திருமண உதவித் தொகையாகவும், மேலும் உயர்கல்வி பயில 10 லட்சம் வரையில் நிதி உதவியும் வழங்குவதன் மூலம் நாட்டிற்கே வழிகாட்டி வருவதாகவும் தெரிவித்தார்கள்.*


 *அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து பத்து லட்சம் ரூபாயாகவும், மேலும் உயர் கல்வி பயில 10 லட்சம் வரை நிதி உதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்கள்.*


 *அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் 10,000 ரூபாயில் இருந்துரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்கள். மேலும் அவர்களது ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்கள்.*


 *2003இல் அறிமுகப்படுத்திய புதிய  ஓய்வூதிய திட்டத்தினை 22 ஆண்டுகளுக்குப் பிறகு   ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய  திட்டத்தில் உள்ள அனைத்து சலுகைகளுடன் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத்  (TAPS) திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.* 


*நிதிப்பற்றாக்குறைக்கு முதல் தவணையாக 13000 கோடி நிதியினை ஒதுக்கி உள்ளதாகவும், ஆண்டுதோறும் 13,000 கோடி நிதியினை TAPS திட்டத்திற்காக ஒதுக்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. என்று பெருமையாக தெரிவித்தார்கள்.*


 *ஆனால் 10% பங்களிப்பு தர வேண்டும் என்பது பற்றி முன்னுதாரணமாக முதலமைச்சர் எதையும் அறிவிக்கவில்லை.*


 *இந்தத் திட்டத்தை அறிவித்த உடன் இனிப்புகள் பரிமாறிக் கொண்டவர்களுக்கு வழக்கு மொழியில் இனிப்பூட்டிய  நிகழ்வினை மாநாட்டில் பொங்கி மகிழும் இதய உணர்வுடன் பரிமாறிக் கொண்டார்கள்.*


 *சில ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகிற போது கூட, மேலை நாடுகளிலும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மட்டுமே அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் அமல்படுத்தியதற்கு நன்றி பெருக்கினை தெரிவிக்கக்கூடிய அடையாளமாகத்தான் இந்த மாநாட்டினை நடத்துகிறோம்!.. பாராட்டு மலர்களை தெரிவித்துள்ளார்கள்!..*


 *நாமும் வரவேற்று மகிழ்கிறோம்!..*


 *ஆனால் இந்திய திருநாட்டில் உள்ள மேற்கு வங்காளத்தில் முதலமைச்சராக ஜோதிபாசு அவர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் இப்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி அவர்கள் ஆட்சி காலத்திலும் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது... என்பதை ஏன் சொல்ல மறந்தார்கள்?.. என்று தெரியவில்லை!.*


 *ஆந்திர மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்ட சலுகைகளை பங்களிப்பு இல்லாமல் ஒரு வித்தியாசமான அணுகுமுறையுடன் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.*


 *5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தப்பட்டு ஆணை வழங்கி விட்டார்கள். மத்திய அரசின் ஓய்வூதிய ஆணையத்திடமிருந்து நிதியினை பெற முடியாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள்.*


 *ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் ஒரு லட்சம் கோடி சிபிஎஸ் நிதியினை மத்திய ஓய்வூதிய  ஆணையத்திடம் இன்றும் செலுத்தப்படாமல், காப்பீட்டு நிறுவனத்தில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.*



 *கருத்துக்கணிப்பு..*



 *புதிய ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்திருக்கக் கூடிய 61/4 லட்சம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தினால் TAPS திட்டத்தினை எத்தனை பேர் வரவேற்கிறார்கள் என்றபதனை அரசு தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.*


 *ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு  மாநாடும் சில மாநில ஒருங்கிணைப்பாளர்களின் பாராட்டுரையும்..*


 *எதிர்க்கட்சிகள் சொல்வது போல திமுக மாநாடாகவே நடத்தினார்கள். முதலில் பேனரில் திமுக கொடியினை போட்டு வெளியிட்டு,  எதிர்ப்புகள் வந்த பிறகு அந்த பேனரை எடுத்து விட்டார்கள்.*


 *மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருவர் பேசும்போது அடுத்த ஆட்சியும் 2026 இல் முதல் அமைச்சர் அவர்கள் தலைமையில் தான் அமையப் போகிறது...  இன்னொரு ஒருங்கிணைப்பாளர் 2036 வரையில் நீங்கள் தான் முதலமைச்சர் என்று பகிரங்கமாகவே அறிவித்தார்.*


 *இன்னொரு ஒருங்கிணைப்பாளர் ஓய்வறியா உதயசூரியனே!.. நீங்கள் தான் நிரந்தர முதலமைச்சர்!.. என்று அறிவித்தார்கள்.*


 *ஆனால் கூடியிருந்த கூட்டமோ? ஏதும் அறியாதவர்கள் போல் அமர்ந்திருந்தார்கள்!.*


 *இதுவரையில் ஜாக்டோ ஜியோ என்ற பெயரில் கூட்டப்பட்ட கூட்டத்தில் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆதரவினை இழந்த கூட்டமாகத்தான் காணப்பட்டது.*


 *2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தை நடத்தியவர்கள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!..*


 *வீரம் செறிந்த இந்தியாவியே திரும்பிப் பார்க்க வைத்த உரிமை மீட்பு மாநாடு நடத்தி இருந்தால்  எழுச்சியாவது வந்து இருக்கும்.*


 *நன்றி அறிவிப்பு மாநாடு என்பது ஒரு விழாவில் தேசிய கீதம் பாடிவிட்டால் நிகழ்ச்சி நிறைவு பெற்றுவிட்டது என்பது போல... இனி கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ சார்பாக எந்த போராட்டத்தினையும் நடத்த வாய்ப்பு இல்லை!.. என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்த நிகழ்வுகளாகவே கருதுகிறார்கள்.*



 *தனிசங்கங்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தலாம். ஆனால் ஆயத்த மாநாடு... கோரிக்கை மாநாடு நடத்திய கூட்டமைப்புகளில், நன்றி அறிவிப்பு மாநாடு  நடத்தியது முதன்முறையாக இந்த மாநாடு தான். இது கடைசி மாநாடாக அமைய வேண்டும்!.*



 *ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு கட்சியின் மீது பற்றுதலும் ஆதரவு உணர்வும் உண்டு. ஆனால் அவரவருக்கு அடையாள முகவரியாக அவர்கள் இருக்கின்ற சங்கங்கள்தான் என்பதை மறந்து விட்டார்களே!. எந்த அறிவிப்பும் இல்லாமல் மாநாடு முடிந்து விட்டது.*


 *மாநாடு முடிந்து கூட்டத்தில்  இருந்து கலைந்து சென்ற உறுப்பினர்களின் கேள்விக் கணைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.*


 *10 அம்ச கோரிக்கைகளில் ஒன்றாவது நிறைவேறியுள்ளதா?.. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்வு கண்டு விட்டோமா?.. குழு அறிக்கை வெளிவந்துவிட்டதா?.*


 *60 ஆண்டுகளாக தொடக்கக்கல்வி ஆசிரியர்களுடைய முன்னுரிமைப் பட்டியல் ஒன்றிய அளவில் நடைமுறையில் இருந்து வந்ததை மாநில அளவில் மாற்றி அமைத்து அரசாணை 243 வெளியிட்டார்கள். பெண் ஆசிரியர்களை பாதிக்கும் அந்த அரசாணையில்  குறைந்தபட்சம் திருத்தத்தையாவது வெளியிட்டார்களா?..*


 *அந்த அரசாணை வெளிவந்ததற்கு நன்றி தெரிவித்து மாநாடு நடத்தியவர்கள் தான் இந்த ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டையும் நடத்துகிறார்கள்..*


*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்று எழுதிக் கொடுத்தவர்களுடன் தான் இந்த மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது.*


 *தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலைஞர் அரசில் வழங்கப்பட்ட₹ 5400 தர ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்து கோரிக்கை வைத்தவர்கள் தான் இந்த நன்றி அறிவிப்பு மாநாட்டினை நடத்தி இருக்கிறார்கள்.*


 *என்பதை மறக்கத்தான் முடியுமா?.. மறுக்கத்தான் முடியுமா?*


*சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா?..*


 *அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதா?.. இல்லை!.. இல்லை!.. இல்லை!..*


*மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எளிமை, இனிய அணுகுமுறை கொண்டவர்!. எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு வாய்ப்பினை அளித்து வருபவர்.. என்பதை யாராலும் மறுக்க முடியாது.*


*ஆனால் முதலமைச்சர் அவர்கள் ஆட்சியை நடத்துகிறார்கள். ஆனால் அனைத்து நிர்வாகத்தினையும் அதிகாரிகள் தான் நடத்தி வருகிறார்கள். எந்த அரசிலும் காண முடியாத ஒரு வித்தியாசமான அணுகுமுறை அதிகாரிகள் மட்டுமே ஆட்சி செய்கின்ற நிர்வாகத்தினை தமிழ்நாட்டில் உள்ளோர் அன்றாடம் கண்டு கேட்டு பாதிப்படைந்து வருகிறோம்!..*



*ஆதார் அட்டையைப் போல அவரவர் சங்கங்களின் அடையாள முகவரி என்பதை ஏன் மறந்து போனார்கள் என்று தெரியவில்லை?..*


 *STFI அகில இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு   தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எட்டு ஆசிரியர் இயக்கங்கள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்பெற்று இருந்தாலும் கொள்கை உணர்வோடு நன்றி அறிவிப்பு மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்!.. என்று சூளுரைத்து  பங்கேற்கவில்லை.. என்பதை கண்டு அவர்களை உச்சி முகர்ந்து பல போராட்டங்களை நடத்தியவன் என்ற முறையில் பாராட்டி மகிழ்கின்றேன்.*



 *நன்றி அறிவிப்பு மாநாட்டில் நன்றியுரை தமிழக ஆசிரியர் கூட்டணிக்கு அளித்திருந்தாலும்  கொள்கை வைரங்களாக இயக்கத்தினை பேணிப் பாதுகாத்து வருகிற மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்ட/ வட்டாரப் பொறுப்பாளர்கள் எவரும்  எந்த அறிவிப்பும் இல்லாமல் நன்றி அறிவிப்பு மாநாட்டில்   கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். என்பதற்காகவே கலந்து கொள்ளவில்லை என்பதை நெஞ்சம் நெகிழ.. கொள்கை கண்ணீர்.. கண்களில் விழுந்திட உணர்ச்சிப் பெருக்குடன்  அர்ப்பணித்துக் கொள்கிறோம்!..*


 *இனிப்பூட்டிய நிலைமை நின்று நிலைப்பதில்லை!.. அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பதால் விரத்தியும் ஏமாற்றமும் அடைந்து.... அழைத்து வந்தவர்கள் மீதும், அரசின் மீதும் கோபக்கனலை கக்கிக் கொண்டே தான் வெளியேறினார்கள்.. என்பதை உணர முடிகிறது. வாக்கு வங்கியினை அதிகரிக்கும் மாநாடாக அமையவில்லை!.. சேதாரப்படுத்தும் மாநாடாக அமைந்திருக்கிறது... என்பதை வேதனை உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!.*


 *உங்களின் கரம்பற்றி இதயம் தொட்டு பெரிதும் வேண்டுகிற உங்களின் சகோதர உறவு.... தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு இருப்பேன்... நன்றி!.. வணக்கம்!..  *


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com ,தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com*


அரசு நிகழ்ச்சிகளில் முதலில் ‘வந்தே மாதரம் (Vande Mataram)’ கட்டாயம்



அரசு நிகழ்ச்சிகளில் முதலில் ‘வந்தே மாதரம்’ கட்டாயம்


தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மற்றும் பள்ளிகளிலும், தேசிய கீதமான *‘ஜன கண மன’* க்கு முன்பாக இசைக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. 


பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பத்ம விருது விழாக்கள் உள்ளிட்ட குடிமக்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ கட்டாயமாக இடம்பெறும். 


சினிமா அரங்குகள் உள்ளிட்ட பொது அரங்குகளிலும் 'வந்தே மாதரம்' இசைக்கப்படலாம்; ஆனால் அங்கு எழுந்து நிற்பது கட்டாயமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


மேலும், 1937ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நான்கு சரணங்களும் உட்பட, பாடலின் மொத்த ஆறு சரணங்களும் இனிமேல் இசைக்கப்பட வேண்டும்.


தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ், பாடலை அவமதிப்போருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்டணமில்லா வாக்காளர் உதவி எண் 1950 குறித்த தகவல்கள்

 

வாக்காளர் பதிவு சேவைகள் மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களை பெற கட்டணமில்லா வாக்காளர் உதவி எண் 1950-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.


Contact the toll-free Voter Assistance Number 1950 for voter registration services and election-related information.




எனது வாக்கு

தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026


வாக்காளர் பதிவு சேவைகள் மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு


அதிகாரப்பூர்வ இணையதளம்

www.voters.eci.gov.in

www.elections.tn.gov.in


கைபேசி செயலி

ECINET

(அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்)


உதவி எண் 1950

(கட்டணமில்லா வாக்காளர் உதவி எண்)


தகவல்களுடன் இணைந்திருங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்பற்றுங்கள்.


Election Commission of India


வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் அழைப்பை முன்பதிவு செய்யுங்கள்

Book a Call With BLO


voters.eci.gov.in


TNelectionsCEO

www.elections.tn.gov.in

9444 123 456


PGTRB Appointment Order Ceremony - DSE Proceedings

 

PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


PG TRB Appointment Order Ceremony to be held on 13.02.2026 - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



நம் பயணம் மிகவும் குறுகியது - Today's thought

 

Our journey is too short - Today's thought


நம் பயணம் மிகவும் குறுகியது - இன்றைய சிந்தனை


ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து, இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள்.  அந்த நபர் அமைதியாக இருந்தபோது, "அந்தப் பெண் உங்களை திட்டி கொண்டு இருக்கும் போது, ஏன் அமைதியாக இருந்தீர்கள்" என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.


 அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் பதிலளித்தார்: "ஏனெனில்  எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால்.. முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்".


 இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது, மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார். 


 இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்கும் ஆபத்தானது.


 யாராவது உங்கள் மனதை காயப்படுத்தினார்களா?  அமைதியாய் இருக்கவும். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது..


 யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப் படுத்தினார்களா? 

ஓய்வெடுங்கள் - மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது.


 காரணம் இல்லாமல் யாராவது உங்களை அவமானப் படுத்தினார்களா?

 அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது.


 உங்களுக்குப் பிடிக்காத கருத்தை யாராவது தெரிவித்திருக்கிறார்களா?

 அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும்.  மன்னிக்கவும், மறக்கவும் பழகி கொள்ளுங்கள். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது..


 சிலர் நமக்கு என்ன பிரச்சனைகளை கொண்டு வந்தாலும், அதை நாம் நினைத்தால் தான் பிரச்சனை, நினைவில் கொள்ளுங்கள். நாம் ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியதாக உள்ளது..


 நம் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது.  நாளை என்பதை யாரும் பார்க்கமுடியாது.  அது எப்போது நிறுத்தப்படும் என்றும் யாருக்கும் தெரியாது.


 நாம் ஒன்றாகப் பயணம் செய்வது மிகக் குறைவு..


 நண்பர்களையும் குடும்பத்தினரையும் மற்றும் நமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் அனைவரையும் பாராட்டுவோம்.  அவர்களிடம் நல்ல நகைச்சுவையுடன் பேசவும் அவர்களை மதிக்கவும்.  மரியாதையாகவும், அன்பாகவும், மன்னிப்பவராகவும் எப்போதும் இருப்போம். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது..


 உங்கள் புன்னகையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நீங்கள் விரும்பும் அளவிற்கு அழகாக இருக்க உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள். எப்போதும் மறக்காதீர்கள்

 உங்கள் பயணம் மிகவும் குறுகியது..

 

நாமும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்..


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Notification For Working Teachers

    TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - 2026 NOTIFICATION பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு கு...