கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒவ்வொரு துறையிலும் என்னென்ன படிப்புகள் படிக்கலாம்? - Career Selection Guide



ஒவ்வொரு துறையிலும் என்னென்ன படிப்புகள் படிக்கலாம்? - தமிழ்நாடு அரசின் முழுமையான வழிகாட்டல் கையேடு ( Career Selection Guide ) வெளியீடு


What courses can be studied in each field? - Tamil Nadu Government releases complete guidance manual


உயர் கல்வியே எங்கள் இலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின், பள்ளி கல்வித் துறையின் நான் முதல்வன் பிரிவு வெளியிட்டுள்ள நாட்காட்டி



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்பு முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தலாம் - ஆசிரியர் சங்கம் அறிக்கை



ஓய்வூதியம் வழங்க மாதந்தோறும் 10% பிடித்தம் செய்வதை நிறுத்துவதுடன் உடனுள்ள 9 கோரிக்கைகளையும் நிறைவேற்றியவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டு விழாவை நடத்தலாம்


நமது கோரிக்கைகளை நிறைவேற்றியவுடன் குறிப்பாக 10% விடை தெரியும் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டு விழாவை நடத்தலாம்


- தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி  கழகத்தின் நிலைப்பாடு குறித்த விரிவான அறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 27.01.2026

கிழமை:- செவ்வாய்


 

திருக்குறள்: 


இயல்:- அரசியல்

அதிகாரம்:- பெரியாரை துணைக்கோடல்



*குறள் 441:*


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.     


*விளக்க உரை:*


அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.


*பழமொழி :*


A goal without effort stays a dream. 


முயற்சி இல்லாத இலக்கு வெறும் கனவாகவே இருக்கும்.


*இரண்டொழுக்க பண்புகள் :*



1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.



2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.


*பொன்மொழி :*


புத்தகமும் கதவும் ஒன்றே. இரண்டையும் நீங்கள் திறந்தால் வேறு ஒரு உலகிற்கு செல்வீர்கள் - ஜீனெட் விண்டர்சன்


*பொது அறிவு :*


01.உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த விலங்குகளில் முதன்மையானது எது?


  பந்தயக் குதிரை- Race horse


02. பழங்காலத்தில் சேரன் தீவு என்று அழைக்கப்பட்ட நாடு எது?


 இலங்கை- Srilanka


*English words :*


Ingenious -clever and inventive


Dreadful-extremely bad


*ஜனவரி 27*


பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் (International Holocaust Remembrance Day) 


*நீதிக்கதை*


 *நட்புக்குத் துரோகம்*



ஒரு அடர்ந்த காட்டில் வசித்து வந்த ஒரு நரியும், ஒரு கழுதையும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து நாள்தோறும் இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், அப்படி இரைத் தேடச் செல்லும் போது இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்க போராட வேண்டும் என்றும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தன. 




ஒரு நாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், சிங்கம் ஒன்று நரியினை வழி மறித்தது. நரி உடனே சிங்கத்தை நோக்கி, மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னை கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. என்னுடைய நண்பனாகக் கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அந்த கழுதையை தின்பதால் உங்களுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு உணவு கிடைக்கும் என்று கூறியது. சிங்கமும் ஒப்புக் கொண்டது. நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது. 


நண்பனே! இரை தேடச் செல்லலாமா? எனக் கழுதையை அழைத்துக் கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததும் மறைந்திருந்த சிங்கமானது, கழுதையின் மீது பாய்ந்துக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது. நரி பதறிப் போய், மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் கூட்டி வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே! என்று நரி நடுக்கத்துடன் கேட்டது. 


நீ உன் நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காதவன். நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்று என்ன நிச்சயம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது. 


நீதி :


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.


*இன்றைய செய்திகள்*


27.01.2026


⭐நிலத்தடி நீரை எடுத்தல் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்லுதலை ஒழுங்குமுறைப்படுத்தவும், 'தமிழ்நாடு நீர்வளங்கள் மசோதா' தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ளது.


⭐அமெரிக்காவின் பெரும் பகுதி (3-ல் 2 பங்கு) பனிப்புயலின் பிடியில் சிக்கியுள் ளது.உறைபனியின் தாக்கத்தால் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. 14 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. சுமார் 13,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


⭐ உலகின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் 410 கப்பல்களில் 6,223 மாலுமிகளுக்கு ஊதியம் கிடைக்க வில்லை அதில் 1,125 மாலுமிகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀கவுகாத்தி: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.வரலாறு படைத்தார் அபிஷேக் ஷர்மா; நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது இந்தியா.


*Today's Headlines*


⭐The Tamilnadu Water Resources Bill has been passed in the Tamilnadu Legislative Assembly to regulate the extraction and expensive of ground water.


⭐ A large part of the United States (2/3) is caught in the grip of a blizzard. Millions of homes have been plunged into darkness due to the 

impact of the freezing temperatures.

It has completely disrupted the normal lives of 140 million people. More than 13,000 flights have been canceled.


⭐ Out of 410 ships operating in various parts of the world, 6,223 sailors have not received their salaries, out of which 1,125 sailors are from India.


 *SPORTS NEWS* 


🏀 Guwahati: India won the 3rd T20 cricket match against New Zealand by 8 wickets. Abhishek Sharma created history; India defeated New Zealand easily.


Karur & Erode to Goa : செல்லும் பயணிகளுக்கான முழு விவரம்



Karur & Erode to Goa : செல்லும் பயணிகளுக்கான முழு விவரம்


 கரூர் & ஈரோடு டு கோவா: எந்த ரயிலில் செல்வது புத்திசாலித்தனம்?


கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களுக்குப் புதன்கிழமைகளில் கோவா செல்ல இரண்டு ரயில்கள் உள்ளன.


கரூர்/ஈரோடு: விடுமுறைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான கோவாவிற்குச் செல்லத் திட்டமிடுகிறீர்களா? கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களுக்குப் புதன்கிழமைகளில் கோவா செல்ல இரண்டு ரயில்கள் உள்ளன. ஆனால், சரியான ரயிலைத் தேர்ந்தெடுக்காவிட்டால், உங்கள் பயண நேரம் தேவையில்லாமல் பல மணி நேரம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


இந்த இரண்டு ரயில்களின் வழித்தடங்கள் மற்றும் பயண நேரத்தை அல

சி, உங்களுக்கான சிறந்த தேர்வு எது என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.


1. மின்னல் வேகப் பயணம்: நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22630)

நீங்கள் கோவாவிற்கு விரைவாகவும், அலுப்பு தட்டாமலும் செல்ல விரும்பினால், உங்கள் முதல் மற்றும் சிறந்த தேர்வு 'நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ்' ஆகத்தான் இருக்க வேண்டும்.


புறப்படும் நேரம்: இந்த ரயில் புதன்கிழமை மதியம் 12:20 மணிக்குக் கரூரிலும், தொடர்ந்து மதியம் 01:30 மணிக்கு ஈரோட்டிலும் வந்தடைகிறது.


வழித்தடம்: இங்கிருந்து புறப்படும் ரயில் திருப்பூர், கோவை மற்றும் பாலக்காடு வழியாகச் சென்று, கேரளாவின் பசுமையான கொங்கன் கடற்கரை மார்க்கத்தில் பயணிக்கிறது. இந்த வழித்தடம் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைக் கொண்டது.


சேரும் நேரம்: வியாழக்கிழமை அதிகாலை 03:50 மணிக்கே உங்களை கோவாவின் மட்காவ் (Madgaon) நிலையத்தில் சேர்த்துவிடும்.


பயண நேரம்: ஈரோடு பயணிகளுக்குச் சுமார் 14 மணி 40 நிமிடங்களும், கரூர் பயணிகளுக்குச் சுமார் 15 மணி 55 நிமிடங்களும் மட்டுமே ஆகிறது.


2. நீண்ட தூரச் சுற்றல்: வாஸ்கோ எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 17316)

பெங்களூரு அல்லது ஹூப்ளி வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் மட்டுமே இந்த ரயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றபடி, கோவா செல்வதற்கு இது ஒரு நீண்ட நேரத்தைச் செலவழிக்கும் பயணமாகும்.


புறப்படும் நேரம்: இந்த ரயில் புதன்கிழமை அதிகாலை 04:25 மணிக்குக் கரூரிலும், காலை 05:40 மணிக்கு ஈரோட்டிலும் கிளம்புகிறது.


வழித்தடம்: இது நேராகச் செல்லாமல், சேலம் சென்று அங்கிருந்து தர்மபுரி, ஓசூர், பெங்களூரு (Banaswadi), துமகூரு மற்றும் ஹூப்ளி வழியாகக் கர்நாடக மாநிலத்தைச் சுற்றிக்கொண்டு கோவா செல்கிறது.


சேரும் நேரம்: வியாழக்கிழமை அதிகாலை 01:30 மணிக்குத்தான் கோவா சென்றடையும்.


பயண நேரம்: ஈரோடு பயணிகளுக்குச் சுமார் 19 மணி நேரமும், கரூர் பயணிகளுக்குச் சுமார் 21 மணி நேரமும் ஆகிறது. அதாவது, நெல்லை எக்ஸ்பிரஸை விட இதில் சென்றால் சுமார் 5 மணி நேரம் கூடுதல் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.


முடிவு: எதைத் தேர்வு செய்வது?

சுருக்கமாகச் சொன்னால், கோவாவிற்குச் சுற்றுலா செல்வதுதான் உங்கள் முக்கிய நோக்கம் என்றால், நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் (22630) ரயிலில் முன்பதிவு செய்வதே சிறந்தது. இது உங்கள் நேரத்தையும், சக்தியையும் மிச்சப்படுத்தும். பெங்களூரு மார்க்கத்தில் வேலை இருப்பவர்கள் மட்டும் வாஸ்கோ எக்ஸ்பிரஸை (17316) பரிசீலிக்கலாம்.


இனிமையான பயணத்திற்கு வாழ்த்துகள்!



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-01-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-01-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 26.01.2026

கிழமை:- திங்கள்


 

திருக்குறள்: 


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: நடுவுநிலைமை


*குறள் : 112*


செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 


*பொருள்:*


நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.


*பழமொழி :*


A calm mind solves difficult problems. 


அமைதியான மனம் கடினமான பிரச்சனைகளையும் தீர்க்கும்.


*இரண்டொழுக்க பண்புகள் :*



1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.

2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.


*பொன்மொழி :*


முதலில் சிறந்த புத்தகங்களை படியுங்கள் இல்லையெனில் அவற்றைப் படிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் - ஹென்றி டேவிட் தோரோ


*பொது அறிவு :*


01.நமது நாட்டின் 2026 குடியரசு தின அணிவகுப்புக்கான கருப்பொருள் என்ன?



" வந்தே பாரதத்தின் 150 ஆண்டுகள்"

150 Years of Vande Mataram.”


02. 2026 குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் எந்த கருப்பொருளை கொண்டு அலங்கார ஊர்தி இடம்பெறவுள்ளது?


"வளமையின் மந்திரம்: தற்சார்பு இந்தியா'

Mantra of Prosperity: Self-Reliant India


*English words :*


pass down -transfer tradition to the next generation


tormenting -torturing


*தமிழ் இலக்கணம்:*


 சில எண்களின் பெயரை தமிழில் எழுதும் போது நாம் பேச்சு வழக்கில் தவறாக எழுதி விடுகிறோம். அவற்றை எவ்வாறு எழுத வேண்டும் என்று பார்ப்போம்


23 –இருபத்தி மூன்று 

34 –முப்பத்தி நான்கு

56 –ஐம்பத்தி ஆறு

மேல் கூறிய மூன்றும் தவறு.

இருபத்தி, முப்பத்தி, ஐம்பத்தி என்பவைகள் முறையே இரு பத்திகள், மூன்று பத்திகள், ஐந்து பத்திகள் என்று பிரிந்து வேறு பொருள் தந்து விடும். ஆனால் 

இருபத்து, முப்பத்து, ஐம்பத்து என்று எழுதும் போது இரு பத்துகள், மூன்று பத்துகள், ஐந்து பத்துகள் என்று பிரிந்து சரியான பொருள் தரும்.


இனி 

இருபத்து மூன்று 

முப்பத்து நான்கு என்று பிழையில்லாமல் எழுதுவீர்கள் தானே?

        தொடரும்


*ஜனவரி 26*


*இந்தியக் குடியரசு நாள்* 


* 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்


"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."


    * 12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியலமைப்பு சட்டவரைவை மக்களவையில் சமர்ப்பித்தது.


     * 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.


     * அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது


*நீதிக்கதை*


 *நல்லதே செய்*



ஒரு பெரிய முதலாளியிடம் பல அடிமைகள் வேலை செய்து வந்தனர். அவர்கள் பல வகையிலும் கொடுமைப் படுத்தப்பட்டு வந்தனர். துன்பத்திற்குள்ளான அவர்களில் ஒருவன் முதலாளியிடமிருந்து எப்படியோ தப்பி காட்டிற்குள் ஓடி விட்டான். 



அவன் காட்டில் ஒளிந்து திரிந்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் அருகில் வந்தது. அது மிகுந்த வலியால் துடிப்பதை அடிமை பார்த்தான். அவன் சிறிதும் பயம் இல்லாமல் அதன் காலைத் தூக்கிப் பார்த்தான். அதன் பாதத்தில் ஒரு பெரிய முள் தைத்திருந்ததைப் பார்த்தான். சிங்கத்தின் காலில் தைத்திருந்த முள்ளை மிகவும் சிரமப்பட்டுப் பிடுங்கி எறிந்தான். அதன் காலை தடவிக் கொடுத்தான். சிங்கமானது ஆபத்தில் தனக்கு உதவிய அந்த மனிதனை நன்றியுணர்வுடன் பார்த்துவிட்டு வலி நீங்கி மகிழ்ச்சியுடன் சென்றது. 



காட்டில் அவன் இருப்பதை அறிந்த அந்த அடிமை மனிதனை முதலாளியின் ஆட்கள் பிடித்துச் சென்றனர். அந்தக் காலத்தில் தப்பியோடும் அடிமைகளுக்கு மரண தண்டனை அளிப்பது வழக்கம். அதன்படி ஒரு கூண்டிற்குள் ஒரு சிங்கத்தை அடைத்து அச்சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு வைத்து அந்த அடிமை மனிதனை அக்கூண்டிற்குள் தள்ளிவிட்டு சிங்கத்தை ஏவி விடுவர். அவ்வாறு இந்த அடிமையையும் சிங்கம் இருக்கும் கூண்டிற்குள் தள்ளிவிட்டனர். பசியோடு இருந்த அந்த சிங்கம் அந்த அடிமையை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவன் அருகில் வந்ததும், அந்த மனிதன் தன் காலில் முள் தைத்து அவதிப்பட்டபோது உதவியவன் என்பதை அடையாளம் கண்டு கொண்டது. மிகவும் பணிவுடன் அவன் அருகில் வந்து வாலை ஆட்டிக் கொண்டு இருந்தது. அடிமை, சிங்கத்தைத் தடவிக் கொடுத்தான். 



இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசனும், பொதுமக்களும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். அரசன், அடிமை மனிதனிடம் விபரங்களைக் கேட்டறிந்தான். அடிமை மனிதன் சொன்ன செய்தியைக் கேட்டு அறிந்த அரசன் அடிமையை விடுதலை செய்தான். நன்றியுணர்வு மிக்க சிங்கத்தைக் காட்டில் கொண்டுபோய் விடச் செய்தான். 




நீதி :


நமக்கு நன்மை செய்தவனுக்கு நாம் நன்றி மறவாமல் நடக்க வேண்டும்.


*இன்றைய செய்திகள்*


26.01.2026



⭐குடியரசு தினத்தை முன்னிட்டு 44 காவல்துறை அதிகாரிகள்-பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதலமைச்சர் ஆணை.


⭐தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்' வழங்க மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.


⭐பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது



⭐அமெரிக்காவை முடக்கிய பனிப்புயல்- 13 ஆயிரம் விமானங்கள் ரத்து.

* பனிப்புயலால் 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀U19 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா


🏀 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.


*Today's Headlines*



⭐Chief Minister ordered Medals to 44 police officers and personnel on the occasion of Republic Day


⭐ MK Stalin has ordered to award the Tamil Nadu Chief Minister's Medal for Meritorious Intelligence and the Medal for Meritorious Special Performance.


⭐The Padma Awards are usually announced every year on the occasion of Republic Day. Accordingly, the Padma Awards for the year 2026 have been announced.



⭐ America has been affected by a snowstorm that paralyzed the whole state, with 13,000 flights canceled. A state of emergency has been declared in 15 states, and about 140 million people have been affected by the snowstorm.


 *SPORTS NEWS* 


🏀U19 World Cup: India beats New Zealand to advance to Super Sixes 


🏀 Indian squad announced for Asia Cup.


குடியரசுத் தலைவரின் உரை : 77 வது குடியரசு தினம், 2026



குடியரசு தின விழா ஜனாதிபதி உரை

குடியரசுத் தலைவரின் உரை : 77 வது குடியரசு தினம், 2026

என் அன்பான சக குடிமக்களே, தேவைக்கேற்ப காணொளி: குடியரசுத் தலைவரின் நாட்டு மக்களுக்கு உரை 

வணக்கம்!

இந்திய மக்களாகிய நாம், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், குடியரசு தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடப் போகிறோம். இந்த தேசிய விழாவில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


குடியரசு தினத்தின் புனிதமான தருணம், நமது நாட்டின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் அதன் நிலை மற்றும் திசையைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நமது சுதந்திர இயக்கத்தின் சக்தி 1947 ஆகஸ்ட் 15 அன்று நமது நாட்டின் நிலையை மாற்றியது. இந்தியா சுதந்திரம் பெற்றது. நமது சொந்த தேசிய விதியின் சிற்பிகளாக நாம் ஆனோம்.


ஜனவரி 26, 1950 முதல், நமது குடியரசை நமது அரசியலமைப்பு இலட்சியங்களை நோக்கி நகர்த்தி வருகிறோம். அன்று, நமது அரசியலமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஜனநாயகத்தின் பிறப்பிடமான பாரதம், ஆதிக்க அமைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, நமது ஜனநாயகக் குடியரசு உருவானது.


உலக வரலாற்றின் மிகப்பெரிய குடியரசின் அடித்தள ஆவணம் நமது அரசியலமைப்பு ஆகும். நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் இலட்சியங்கள் நமது குடியரசை வரையறுக்கின்றன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசியலமைப்பு விதிகள் மூலம் தேசியவாத உணர்வுக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கினர்.


லௌ புருஷ், சர்தார் வல்லபாய் படேல், நம் நாட்டை ஒன்றிணைத்தார். கடந்த ஆண்டு, அக்டோபர் 31 ஆம் தேதி, நன்றியுள்ள ஒரு தேசம் அவரது 150 வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியது. அவரது 150 வது ஜெயந்தி தொடர்பான நினைவு நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன. இந்தக் கொண்டாட்டங்கள் மக்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் பெருமையின் உணர்வை வலுப்படுத்துகின்றன. வடக்கிலிருந்து தெற்கு வரையிலும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், நமது பண்டைய கலாச்சார ஒற்றுமையின் துணி நம் முன்னோர்களால் நெய்யப்பட்டது. இந்த ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் ஒவ்வொரு முயற்சியும் மிகவும் பாராட்டத்தக்கது.


கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி முதல், நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்ட 150 ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. பாரத மாதாவின் தெய்வீக வடிவத்திற்கான பிரார்த்தனையான இந்தப் பாடல், ஒவ்வொரு இந்தியரிடமும் தேசபக்தியைத் தூண்டுகிறது. சிறந்த தேசியவாதக் கவிஞர் சுப்பிரமணிய பாரதி, "வந்தே மாதரம் யென்போம்" என்ற பாடலை தமிழில் இயற்றினார், அதாவது "வந்தே மாதரம் பாடுவோம்", மேலும் மக்களை வந்தே மாதரத்தின் உணர்வோடு இன்னும் பெரிய அளவில் இணைத்தார். இந்தப் பாடலின் பிற இந்திய மொழிகளும் பிரபலமடைந்தன. ஸ்ரீ அரவிந்தோ இந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மதிப்பிற்குரிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாய இசையமைத்த 'வந்தே மாதரம்' நமது பாடல் வரிகள் நிறைந்த தேசிய பிரார்த்தனை.


இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜனவரி 23 ஆம் தேதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளில், நாடு அவருக்கு மரியாதை செலுத்தியது. 2021 முதல், நேதாஜியின் ஜெயந்தி 'பராக்கிரம திவாஸ்' என்று கொண்டாடப்படுகிறது, இதனால் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அவரது வெல்லமுடியாத தேசபக்தியிலிருந்து உத்வேகம் பெற முடியும். நேதாஜியின் 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கம் நமது தேசிய பெருமையின் பிரகடனமாகும்.


அன்புள்ள சக குடிமக்களே,

நீங்கள் அனைவரும் நமது துடிப்பான குடியரசை வலுப்படுத்துகிறீர்கள். நமது மூன்று ஆயுதப் படைகளின் வீரமிக்க வீரர்கள் நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதில் எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள். காவல்துறையிலும் மத்திய ஆயுதக் காவல் படைகளிலும் உள்ள நமது அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மக்களின் உள் பாதுகாப்பிற்காக தொடர்ந்தும் விடாமுயற்சியுடன் பாடுபடுகிறார்கள். நமது விவசாயிகள் மக்களுக்கு உணவு உற்பத்தி செய்ய கடுமையாக உழைக்கிறார்கள். நமது நாட்டின் முன்னோடி மற்றும் திறமையான பெண்கள் பல துறைகளில் புதிய அளவுகோல்களை அமைத்து வருகின்றனர். நமது திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் மக்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளனர். நமது அர்ப்பணிப்புள்ள துப்புரவுப் பணியாளர்கள் நமது நாட்டில் தூய்மையைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நமது அறிவொளி பெற்ற ஆசிரியர்கள் எதிர்கால சந்ததியினரை வடிவமைக்கின்றனர். நமது உலகத்தரம் வாய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய திசையை வழங்குகிறார்கள். நமது கடின உழைப்பாளி தொழிலாளர்கள் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். அவர்களின் திறமை மற்றும் பங்களிப்புகளால், நமது நம்பிக்கைக்குரிய இளைஞர்களும் குழந்தைகளும் நமது நாட்டின் சிறந்த எதிர்காலத்தில் நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறார்கள். நமது திறமையான கலைஞர்கள், கைவினைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நமது வளமான மரபுகளுக்கு நவீன வெளிப்பாட்டை வழங்குகிறார்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறார்கள். நமது துடிப்பான தொழில்முனைவோர் நாட்டை வளர்ச்சியடையச் செய்வதற்கும், தன்னிறைவு பெறுவதற்கும் மகத்தான பங்களிப்பை வழங்குகிறார்கள். சமூகத்திற்கு தன்னலமின்றி சேவை செய்யும் தனிநபர்களும் நிறுவனங்களும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை தங்கள் பணியால் ஒளிரச் செய்து வருகின்றனர். அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் பணிபுரியும் அனைத்து மக்களும் தங்கள் கடமைகளை நேர்மையாகவும் திறமையாகவும் நிறைவேற்றி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கின்றனர். பொது சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்படும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நலன்புரி மற்றும் மேம்பாட்டு இலக்குகளை அடைய உதவுகிறார்கள். இவ்வாறு, அனைத்து அறிவொளி பெற்ற மற்றும் உணர்திறன் மிக்க குடிமக்களும் நமது குடியரசின் முன்னேற்றத்தை முன்னேற்றி வருகின்றனர். நமது குடியரசை வலுப்படுத்த பாடுபடும் அனைத்து சக குடிமக்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். உலக அரங்கில் நமது குடியரசின் பிம்பத்திற்கு பெருமை சேர்க்கும் வெளிநாட்டு இந்தியர்கள். அவர்களுக்கு எனது சிறப்பு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புள்ள சக குடிமக்களே,

இன்று, ஜனவரி 25 ஆம் தேதி, நம் நாட்டில் 'தேசிய வாக்காளர் தினம்' கொண்டாடப்படுகிறது. நமது வயது வந்த குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது அரசியல் கல்விக்கு வழிவகுக்கும் என்று பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நம்பினார். பாபாசாகேப்பின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நமது வாக்காளர்கள் தங்கள் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். வாக்களிப்பதில் பெண்களின் அதிகரித்து வரும் பங்கேற்பு நமது குடியரசிற்கு ஒரு சக்திவாய்ந்த பரிமாணத்தை சேர்க்கிறது.


நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் சுறுசுறுப்பான மற்றும் அதிகாரம் பெற்ற பங்கேற்பு மிகவும் முக்கியமானது. அவர்களின் சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான தேசிய முயற்சிகள் பல துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளன. 'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ' பிரச்சாரம் பெண்களின் கல்வியை ஊக்குவித்துள்ளது. 'பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா'வின் கீழ், இதுவரை 57 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளில் கிட்டத்தட்ட 56 சதவீதம் பெண்களுடையது.


நமது பெண்கள் பாரம்பரியமான ஒரே மாதிரியான கருத்துக்களை உடைத்து முன்னேறி வருகின்றனர். அவர்கள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தீவிரமாக பங்களித்து வருகின்றனர். சுயஉதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பத்து கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் வளர்ச்சி செயல்முறையை மறுவரையறை செய்து வருகின்றனர். விவசாயம் முதல் விண்வெளி வரை, சுயதொழில் முதல் ஆயுதப்படைகள் வரை அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர். விளையாட்டுத் துறையில், நமது மகள்கள் உலகளவில் புதிய அளவுகோல்களை அமைத்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில், ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும் அதைத் தொடர்ந்து பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையையும் வென்றதன் மூலம் இந்திய மகள்கள் விளையாட்டு வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயத்தை எழுதினர். கடந்த ஆண்டு, சதுரங்க உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இரண்டு இந்தியப் பெண்களுக்கு இடையே நடைபெற்றது. இந்த உதாரணங்கள் விளையாட்டு உலகில் இந்தியாவின் மகள்களின் ஆதிக்கத்திற்கு ஒரு சான்றாகும். நாட்டு மக்கள் அவர்களைப் பற்றி பெருமைப்படுகிறார்கள்.


பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 46 சதவீதம். பெண்களின் அரசியல் அதிகாரமளிப்பை அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் 'நாரி சக்தி வந்தன் ஆதினியம்', பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற கருத்துக்கு முன்னெப்போதும் இல்லாத பலத்தை அளிக்கும். விக்ஸித் பாரத்தை உருவாக்குவதில் நாரி சக்தியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதால், பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உள்ளடக்கிய குடியரசின் முன்மாதிரியாக நமது நாடு திகழும்.


அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையுடன், பின்தங்கிய பிரிவுகளின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி, நமது நாட்டு மக்கள் தார்தி ஆப பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளில் ஐந்தாவது ஜன்ஜாதிய கௌரவ் திவாஸைக் கொண்டாடினர், மேலும் இது பகவான் பிர்சா முண்டாவின் 150 வது ஜெயந்தியை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களின் உச்சக்கட்டத்தைக் குறித்தது. 'ஆதி கர்மயோகி' பிரச்சாரத்தின் மூலம், பழங்குடி சமூக மக்களின் தலைமைத்துவ திறன் வளர்க்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், பழங்குடி சமூகத்தின் புகழ்பெற்ற வரலாற்றை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த, அருங்காட்சியகங்களை நிர்மாணித்தல் உட்பட பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. அவர்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 'தேசிய அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்பு மிஷன்' கீழ், இதுவரை 6 கோடிக்கும் மேற்பட்ட திரையிடல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர், மேலும் பல மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். சுகாதாரம் மற்றும் கல்வியில் இத்தகைய பிரச்சாரங்கள் பழங்குடி சமூகங்களிடையே மரபுகளுக்கும் நவீன வளர்ச்சிக்கும் இடையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்குச் செயல்படுகின்றன. 'தார்த்தி ஆபா ஜனஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான்' மற்றும் 'பிரதம மந்திரி-ஜன்மன் யோஜனா' ஆகியவை PVTG சமூகங்கள் உட்பட அனைத்து பழங்குடி சமூகங்களுக்கும் அதிகாரம் அளித்துள்ளன.


நமது அன்னதாதா விவசாயிகள் நமது சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளனர். கடின உழைப்பாளி விவசாயிகளின் தலைமுறைகள் நமது நாட்டை உணவு தானியங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியுள்ளன. நமது விவசாயிகளின் கடின உழைப்பால்தான் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. பல விவசாயிகள் வெற்றியின் மிகவும் ஈர்க்கக்கூடிய உதாரணங்களை வழங்கியுள்ளனர். நமது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதை உறுதி செய்தல், குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைப்பது, பயனுள்ள காப்பீட்டுத் தொகை, நல்ல தரமான விதைகள், நீர்ப்பாசன வசதிகள், அதிகரித்த உற்பத்திக்கான உரங்கள், நவீன விவசாய நடைமுறைகளுக்கான அணுகல் மற்றும் இயற்கை விவசாயத்திற்கான ஊக்கம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 'பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' நமது விவசாயிகளின் பங்களிப்பை கௌரவித்து அவர்களின் முயற்சிகளை வலுப்படுத்துகிறது.


பல தசாப்தங்களாக வறுமையில் போராடி வரும் நமது மில்லியன் கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் வறுமைப் பொறியில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தியோதயாவின் உணர்வை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய திட்டமான 'பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா', 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நம் நாட்டில் யாரும் பசியால் வாடக்கூடாது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திட்டம் கிட்டத்தட்ட 81 கோடி பயனாளிகளுக்கு உதவி வருகிறது. ஏழைக் குடும்பங்களுக்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டுவதன் மூலம், அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் மேலும் முன்னேற்றம் அடைவதற்கும் ஒரு அடித்தளத்தை வழங்கியுள்ளனர். ஏழைகளின் நலனுக்கான இத்தகைய முயற்சிகள் மகாத்மா காந்தியின் சர்வோதய இலட்சியத்திற்கு உறுதியான வடிவத்தை அளிக்கின்றன.


நமது நாடு உலகின் மிகப்பெரிய இளைஞர்களைக் கொண்டுள்ளது. நமது இளைஞர்கள் அபரிமிதமான திறமையைக் கொண்டுள்ளனர் என்பது நமக்கு சிறப்புப் பெருமையைத் தருகிறது. நமது இளம் தொழில்முனைவோர், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டிற்குள் புதிய ஆற்றலைப் புகுத்தி உலக அரங்கில் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர். இன்று, நமது இளைஞர்கள் ஏராளமானோர் சுயதொழில் மூலம் வெற்றியின் அற்புதமான நிகழ்வுகளை முன்வைக்கின்றனர். நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் கொடி ஏந்தியவர்கள் நமது இளைஞர்கள். 'மேரா யுவ பாரத்' அல்லது 'மை பாரத்' என்பது இளம் குடிமக்களை தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் வாய்ப்புகளுடன் இணைக்க தொழில்நுட்பம் சார்ந்த அனுபவக் கற்றல் பொறிமுறையை வழங்குகிறது. நமது நாட்டில் தொடக்க நிறுவனங்களால் காட்டப்படும் அற்புதமான வெற்றி முக்கியமாக நமது இளம் தொழில்முனைவோரால் இயக்கப்படுகிறது. இளைய தலைமுறையினரின் விருப்பங்களை மையமாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும். 2047 ஆம் ஆண்டுக்குள் விக்ஸித் பாரத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் சக்தி முன்னணிப் பங்காற்றும் என்று நான் நம்புகிறேன்.


அன்புள்ள சக குடிமக்களே,

இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகும். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், இந்தியா தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. எதிர்காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான எங்கள் இலக்கை அடைவதை நோக்கி நாங்கள் நகர்கிறோம்.


உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முதலீடு செய்வதன் மூலம், நமது பொருளாதார வலிமையை மிகப் பெரிய அளவில் மீண்டும் கட்டியெழுப்புகிறோம். நமது பொருளாதார விதியை வடிவமைக்கும் இந்தப் பயணத்தில், ஆத்ம நிர்பாரதம் மற்றும் சுதேசி ஆகியவை நமது வழிகாட்டும் கொள்கைகளாகும்.


சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான மிக முக்கியமான முடிவான ஜிஎஸ்டியை அமல்படுத்துவது, 'ஒரு நாடு, ஒரு சந்தை' என்ற அமைப்பை நிறுவியுள்ளது. ஜிஎஸ்டி முறையை இன்னும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான சமீபத்திய முடிவுகள் நமது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும். தொழிலாளர் சீர்திருத்தத் துறையில் நான்கு தொழிலாளர் குறியீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை நமது தொழிலாளர்களுக்கு பயனளிக்கும், மேலும் நிறுவனங்களின் வளர்ச்சியையும் துரிதப்படுத்தும்.


அன்புள்ள சக குடிமக்களே,

பண்டைய காலங்களிலிருந்து, மனிதகுலம் நமது நாகரிகம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மரபுகளிலிருந்து பயனடைந்துள்ளது. ஆயுர்வேதம், யோகா மற்றும் பிராணயாமம் ஆகியவை உலக சமூகத்தால் பாராட்டப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பல சிறந்த ஆளுமைகள் நமது ஆன்மீக மற்றும் சமூக ஒற்றுமையின் நீரோட்டத்தை தொடர்ந்து வளப்படுத்தியுள்ளனர். கேரளாவில் பிறந்த சிறந்த கவிஞர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் ஆன்மீக சின்னமான ஸ்ரீ நாராயண குரு, சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடு இல்லாமல், அனைத்து மக்களும் சகோதரத்துவ உணர்வோடு வாழும் ஒரு சிறந்த இடம் என்று கூறியிருந்தார். ஸ்ரீ நாராயண குருவின் இந்த எண்ணத்தை அவரது சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்:


ஜாதி-பேதம் மத்-த்வேஷம் எதும்-இல்லடே சர்வரும்

சோதர-த்வேந வாதுந்நா மாத்ருகா-ஸ்தான மனிதா ॥

இன்றைய இந்தியா தனது புகழ்பெற்ற மரபுகளை உணர்ந்து, புதிய தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருவது பெருமைக்குரிய விஷயம். சமீபத்திய ஆண்டுகளில், நமது ஆன்மீக பாரம்பரியத்துடன் தொடர்புடைய புனித தளங்கள் மக்களின் உணர்வுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன.


காலனித்துவ மனநிலையின் எச்சங்களை காலத்தால் வரையறுக்கப்பட்ட முறையில் ஒழிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய அறிவு பாரம்பரியம் தத்துவம், மருத்துவம், வானியல், கணிதம், இலக்கியம் மற்றும் கலை ஆகிய துறைகளில் ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 'ஞான பாரதம் மிஷன்' போன்ற முயற்சிகள் இந்திய பாரம்பரியத்தில் கிடைக்கும் படைப்பாற்றலைப் பாதுகாத்து பரப்புகின்றன என்பது பெருமைக்குரிய விஷயம். இந்த மிஷன் நவீன சூழல்களில் லட்சக்கணக்கான இந்தியாவின் விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகளில் குவிந்துள்ள பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும். இந்திய மொழிகள் மற்றும் இந்திய அறிவின் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், நாம் சுயசார்பு நோக்கத்திற்கு ஒரு கலாச்சார அடித்தளத்தை வழங்குகிறோம்.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் இப்போது எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. இந்திய மொழிகளில் அரசியலமைப்பைப் படித்துப் புரிந்துகொள்வது மக்களிடையே அரசியலமைப்பு தேசியவாதத்தைப் பரப்பி, அவர்களின் பெருமை உணர்வை வலுப்படுத்தும்.


அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் நல்லாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல தேவையற்ற விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பல இணக்கத் தேவைகள் நீக்கப்பட்டுள்ளன, மேலும் மக்களுக்கு உதவ அமைப்புகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. பயனாளிகள் தொழில்நுட்பம் மூலம் நேரடியாக வசதிகளுடன் இணைக்கப்படுகிறார்கள். அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் குறிக்கோளுடன் 'வாழ்க்கை எளிமை' வலியுறுத்தப்படுகிறது.


கடந்த பத்தாண்டுகளில் பொதுமக்கள் பங்கேற்பு மூலம் தேசிய இலக்குகளை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியமான தேசிய பிரச்சாரங்கள் வெகுஜன இயக்கங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் முற்போக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. விசித் பாரதத்தை உருவாக்குவது அனைத்து குடிமக்களின் பகிரப்பட்ட பொறுப்பாகும். சமூகத்திற்கு மகத்தான சக்தி உள்ளது. அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் சமூகத்தின் தீவிர ஆதரவைப் பெறும்போது புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, நமது மக்கள் டிஜிட்டல் கட்டண முறையை மிகப்பெரிய அளவில் ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்று, உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் நடைபெறுகின்றன. மிகச்சிறிய கடையில் பொருட்களை வாங்குவது முதல் ஆட்டோ ரிக்‌ஷா சவாரிக்கு பணம் செலுத்துவது வரை, டிஜிட்டல் கட்டணங்களின் பயன்பாடு உலகளாவிய சமூகத்திற்கு ஒரு ஈர்க்கக்கூடிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. அனைத்து குடிமக்களும் இதேபோன்ற முறையில் பிற தேசிய இலக்குகளை அடைவதில் தீவிரமாக பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன்.


அன்புள்ள சக குடிமக்களே,

கடந்த ஆண்டு, நமது நாடு, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத உள்கட்டமைப்புகளுக்கு எதிராக துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. பயங்கரவாத மையங்கள் அழிக்கப்பட்டன, மேலும் பல பயங்கரவாதிகள் முடிவுக்கு வந்தனர். பாதுகாப்புத் துறையில் நமது தன்னம்பிக்கை, ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்று வெற்றிக்கு உந்துதலாக அமைந்தது.


சியாச்சின் தள முகாமில், மிகவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டைப் பாதுகாக்க நமது துணிச்சலான வீரர்கள் முழுமையாகத் தயாராகவும் உந்துதலுடனும் இருப்பதைக் கண்டேன். இந்திய விமானப்படையின் சுகோய் மற்றும் ரஃபேல் போர் விமானங்களில் பறக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. விமானப்படையின் போர்த் தயார்நிலையைக் கண்டேன். இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் அசாதாரண திறன்களைக் கண்டேன். ஐஎன்எஸ் வாக்ஷீர் நீர்மூழ்கிக் கப்பலிலும் நான் போர்க்கப்பலைப் பயன்படுத்தினேன். இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் வலிமையின் அடிப்படையில், மக்கள் நமது பாதுகாப்புத் தயார்நிலையில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.


என் அன்பான சக குடிமக்களே,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு இன்று அதிக முன்னுரிமையாக உள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பான பல துறைகளில் இந்தியா உலக சமூகத்தை வழிநடத்தி வருவதில் நான் பெருமைப்படுகிறேன். இயற்கையுடன் இணக்கமான வாழ்க்கை முறை இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த வாழ்க்கை முறைதான் உலக சமூகத்திற்கான நமது செய்தியின் அடிப்படையாகும்: 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' அல்லது 'வாழ்க்கை'. பூமித் தாயின் விலைமதிப்பற்ற வளங்கள் எதிர்கால சந்ததியினருக்குக் கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிகளை மேற்கொள்வோம்.


நமது பாரம்பரியத்தில், பிரபஞ்சம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறோம். உலகம் முழுவதும் அமைதி நிலவினால் மட்டுமே மனிதகுலத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும். உலகின் பல பகுதிகளில் மோதல்கள் நிறைந்த சூழலில், இந்தியா உலக அமைதிக்கான செய்தியைப் பரப்பி வருகிறது.


அன்புள்ள சக குடிமக்களே,

பாரத பூமியில் வாழ்வது எங்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டம். எங்கள் மாத்ரி-பூமியைப் பற்றி, கவி குரு ரவீந்திரநாத் தாகூர் கூறினார்:


அமர் தேசர் மதி, தோமர் போரே தேகை மாதா

இதன் பொருள்:


என் நாட்டின் புனித மண்ணே! உங்கள் காலடியில் தலை வணங்குகிறேன்.


குடியரசு தினம் என்பது இந்த வலுவான தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும் என்று நான் நம்புகிறேன். 'முதலில் தேசம்' என்ற உணர்வோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நமது குடியரசை இன்னும் மகிமைப்படுத்துவோம்.


மீண்டும் ஒருமுறை, குடியரசு தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தால் நிறைந்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மிகவும் பிரகாசமான எதிர்காலத்தை வாழ்த்துகிறேன்.


நன்றி,

ஜெய் ஹிந்த்!

ஜெய் பாரத்!


77th Republic Day Wishes

 

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" 

அனைவருக்கும் இனிய 77வது குடியரசு தின வாழ்த்துகள் - கல்வி அஞ்சல்


77th Republic Day Wishes - Kalvi Anjal 


மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

 



விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு உடல் குடும்பத்தாரிடம்  ஒப்படைக்கப்பட்டது




பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் ராகவன் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு பின்னர் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.



வாழும் வரை இரத்த தானம்

வாழ்க்கைக்கு பின் உடல் உறுப்பு தானம்



Best Dash Cam details

 


காரில் டேஷ் கேமரா (Dash Cam) பொருத்துவது இன்றைய காலத்தில் மிக அவசியமான ஒன்றாகும். விபத்து காலங்களில் சாட்சியாகவும், இன்சூரன்ஸ் க்ளைம் (Insurance Claim) செய்யவும் இது பெரிதும் உதவுகிறது.


Best Dash Cam details in Tamil


2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த டேஷ் கேமராக்கள் மற்றும் அவற்றை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விவரங்கள் :


1. சிறந்த டேஷ் கேமராக்கள் (பட்ஜெட் மற்றும் அம்சம் வாரியாக)

கேமரா வகைபரிந்துரை செய்யப் படும் மாடல்கள்சிறப்பு அம்சங்கள்தோராய விலை
ஆரம்ப நிலை (Budget)
70mai Lite 

https://amzn.to/4qQz8m8

Qubo Pro Mini
https://amzn.to/4jZpGKD

1080p Full HD, WiFi, மொபைல் ஆப் இணைப்பு.

₹2,500 - ₹3,800
நடுத்தர விலை (Value)DDPAI Mini Pro
https://amzn.to/4k2SSk7

70mai A510
https://amzn.to/3LN7rvy
2K/3K Resolution, சிறந்த இரவு நேர காட்சி (Night Vision).₹4,000 - ₹8,000
உயர்தரம் (Premium)70mai A810
https://amzn.to/3Zy2EBa

Redtiger F7N
https://amzn.to/4a3AMKm
4K Resolution, முன் மற்றும் பின் கேமரா (Dual Channel), GPS.₹10,000 - ₹18,000
அனைத்து பக்கம் (Triple)
Redtiger F17

https://amzn.to/3ZxorJg

Redtiger F17 Elite
https://amzn.to/49DBdvQ

Wolfbox X5
https://amzn.to/4k2SKRF

முன், பின் மற்றும் காரின் உட்புறம் (Cabin) என 3 பக்கமும் பதிவு செய்யும்.₹15,000+


2. டேஷ் கேமரா வாங்கும் போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

  • வீடியோ தரம் (Resolution): குறைந்தபட்சம் 1080p (Full HD) இருக்க வேண்டும். காரின் நம்பர் பிளேட் தெளிவாகத் தெரிய 2K அல்லது 4KResolution சிறந்தது.

  • பார்வைக் கோணம் (Field of View): சாலையின் அனைத்து பக்கங்களும் தெரிய 140° முதல் 170° வரை வைட் ஆங்கிள் (Wide Angle) கொண்ட லென்ஸ் அவசியம்.

  • இரவு நேரப் பதிவு (Night Vision): இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும்போது தெளிவாகப் பதிவு செய்ய WDR (Wide Dynamic Range) அல்லது Starvis Sensor தொழில்நுட்பம் இருக்கிறதா என்று பார்க்கவும்.

  • G-Sensor & Loop Recording: விபத்து ஏற்படும் போது அந்த வீடியோவை தானாகவே லாக் (Lock) செய்து அழியாமல் காப்பது G-Sensor. மெமரி கார்டு நிறைந்தவுடன் பழைய வீடியோக்களை நீக்கிவிட்டு புதியவற்றை பதிவு செய்வது Loop Recording.

  • சூப்பர் கெபாசிட்டர் (Super capacitor): வெயில் காலத்தில் கார் சூடாகும்போது பேட்டரி வெடிக்க வாய்ப்புள்ளது. எனவே, பேட்டரிக்கு பதிலாக 'சூப்பர் கெபாசிட்டர்' கொண்ட கேமராக்களை வாங்குவது பாதுகாப்பானது.



3. கூடுதல் வசதிகள் (Advanced Features)

  • GPS: வண்டி எந்த வேகத்தில் சென்றது மற்றும் எந்த இடத்தில் விபத்து நடந்தது என்ற விபரங்களைக் காட்டும்.

  • Parking Monitoring: கார் நிறுத்தப்பட்டிருக்கும் போது யாராவது மோதினாலோ அல்லது திருட முயன்றாலோ தானாகவே ரெக்கார்ட் செய்யும் (இதற்கு Hardwire Kit தேவைப்படும்).

  • Mobile App Support: வீடியோக்களை உடனுக்குடன் மொபைலில் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் வைஃபை (Wi-Fi) வசதி உதவும்.

குறிப்பு: டேஷ் கேமராவிற்கு Class 10 அல்லது அதற்கு மேற்பட்ட தரம் கொண்ட நல்ல பிராண்டட் Micro SD கார்டுகளை 

உதாரணமாக: 

Samsung Evo Plus   

https://amzn.to/49WA4yr   

அல்லது 

Sandisk High Endurance  

 https://amzn.to/4t0058B )

பயன்படுத்துவது நல்லது.


Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?

 

Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


நடப்பு (2025-26) நிதியாண்டில், New Regimeல் எதுவரை வரி உண்டு, Rebate, Marginal Relief எனும் வரித் தள்ளுபடிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இப்பதிவில் வரிசைக்கிரமமாகத் தெரிந்து கொள்வோம்.



Total Gross Income :


Pay + DA + All other Allowances + EL Surrender + Any Pay Arrear = Total Gross Income.


(கூடுதலாக Savings & Investmentற்கான வட்டி ITRன் போது தானாகவே வருமானக் கணக்கில் சேர்க்கப்படும்)



Net Taxable Income :


இந்த Total Gross Incomeல் இருந்து,


1. மாற்றுத்திறனாளி போக்குவரத்துப் படி

2. Standard Deduction Rs.75,000/- 


உள்ளிட்டவற்றைக் கழித்துவரும் தொகையே Net Taxable Income. இத்தொகை 10ன் முழுமையாக்கப்பட்டு வரிவிதிப்புக் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.



Tax Slab :


Net Taxable Incomeற்கு 2025-26 நிதியாண்டில் பின்வருமாறு வரி விதிக்கப்படுகிறது.


Rs.4,00,000 வரை                    - வரியில்லை

Rs.4,00,001 to Rs.8,00,000     - 5%

Rs.8,00,001 to Rs.12,00,000   - 10%

Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%

Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%

Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%

Rs.24,00,000க்கு மேல்           - 30%



Rebate :


Net Taxable Income  Rs.12,00,000/-க்குள் இருப்பின் அதற்குண்டான வருமானவரி U/S.87Aன் கீழ் தள்ளுபடி செய்யப்படும்.


அதாவது Net Taxable Income Rs.12,00,000/- எனில்,

முதல் 4,00,000 × 0% = 0

2வது  4,00,000 × 5% = 20,000

3வது  4,00,000 × 10% = 40,000

என்று மொத்தமாக Rs.60,000/- வரி வரும். இந்தத் தொகையை Rebate ஆகக் கழிப்பதன் மூலம் வரி சுழியமாக்கப்படும். இவ்வாறுதான் 12 இலட்சம் வரை Tax இல்லை என்று கூறப்படுகிறது.



Marginal Relief :


Net Taxable Income மேற்படி Rebate வரம்பைவிட ரூ.10 கூடி Rs.12,00,010/- என்று வருமானால்  Rebate கிடையாது என்பதால் அணற்கான வரியாக Rs.60,002/-ஐ செலுத்தியாக வேண்டும். Marginல இருந்து வெறும் 10 ரூவா கூடுனது குத்தமா? என்று தோன்றலாம். இக்குறையைப் போக்கத்தான் கடந்த 3 ஆண்டுகளாக Marginal Relief என்ற முறை நடைமுறையில் உள்ளது.


இதன்படி, Tax Marginஆன ரூ.12,00,000/-ஐவிடக் கூடுதலாக எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளோமோ அதை மட்டும் வரியாகக் கட்டினால் போதும். மீதத்தொகை U/S.87Aன் கீழ் Marginal Relief என்று கழிக்கப்பட்டுவிடும்.


உதாரணமாக Net Taxable Income Rs.12,00,010/- என்றால், 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 10 ரூபாயை மட்டும் அப்படியே வரியாகக் (+ 4% Cess) கட்டிக் கொள்ளலாம்.


இந்த Marginal Relief முறை என்பது Net Taxable Income Rs.12,70,580/- வரை பயன்படுத்தப்படும்.


இதற்கு மேலான தொகை, அதாவது Net Taxable Income Rs.12,70,590/- எனில் இந்தக் கூடுதல் தொகையும், வழக்கமான கணக்கீட்டிற்கான வரியும் கிட்டத்தட்ட சமமாக வந்துவிடும். அதாவது,

Rs.4,00,000 =   0% = 0

Rs.4,00,000 =   5% = 20,000

Rs.4,00,000 = 10% = 40,000

Rs.70,590.   = 15% = 10,589

மொத்த வரி          = 70,589


எனவே, Rs.12,70,580/-ற்கு மேலான தொகைக்கு Marginal Reliefன் தேவை இருக்காது.



Marginal Relief Formula :


12 இலட்சத்துக்கு மேலே வரும் தொகையைக் கட்டினால் போதுமென்றால், அதற்கென ஒரு கணக்கீடு இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.


Marginal Relief = Actual Tax - Tax margin Excess Income


இந்த Marginal Reliefஐக் கண்டுபிடித்து அதை மொத்த வரியில் கழித்துவிட்டால் கட்ட வேண்டிய வரி கிடைத்துவிடும்.


உதாரணமாக Net Taxable Income Rs.12,10,000/- எனில்,


Rs.12,10,000/-ற்கான Actual Tax = 61,500


12Lஐ விடக் கூடுதல் வருமானம் = Rs.10,000


ஃ Marginal Relief (61,500 - 10,000) = Rs.51,500


ஆக, Net Taxable Income Rs.12,10,000/-க்கான நிகர வருமான வரி என்பது,

= Actual Tax - Marginal Relief

= 61,500 - 51,500

= Rs.10,000/-



>>> Income Tax Calculation Statement 2025-2026 (PDF)...



>>> Best Dash Cam details...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒவ்வொரு துறையிலும் என்னென்ன படிப்புகள் படிக்கலாம்? - Career Selection Guide

ஒவ்வொரு துறையிலும் என்னென்ன படிப்புகள் படிக்கலாம்? - தமிழ்நாடு அரசின் முழுமையான வழிகாட்டல் கையேடு ( Career Selection Guide ) வெளியீடு What c...