கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

8th Pay Commission : அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்


8வது ஊதியக் குழு : அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்


8 வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 காலை தொடங்கியது.


இந்தக் கூட்டத்தொடரின் முதல்நாளில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள அறிக்கையில், “8 வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்கும் திட்டம் இல்லை. மேலும், இது தொடர்பான எந்த பரிசீலனையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


சமீபகாலமாகவே 50 சதவிகித அடிப்படை ஊதியத்தை அகவிலைப்படியுடன் இணைக்க வேண்டும் என பல்வேறு மத்திய அரசு பணியாளர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசிடம் இருந்து 8-வது ஊதியக்குழு தொடர்பாக வெளியான தகவல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.


விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியா்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, ஓய்வூதிய மற்றும் பிற பணப் பலன்களை மாற்றியமைக்க, ஊதியக் குழுவை அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு, 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.


தற்போது எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க கடந்த ஜனவரியில் கொள்கை ரீதியிலான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் அளித்திருந்த நிலையில், அதன் பணி வரையறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது.


இந்தக் குழுவில் பெங்களூரு ஐஐஎம் பேராசிரியர் புலாக் கோஷ் பகுதி நேர உறுப்பினராகவும், மத்திய பெட்ரோலிய துறைச் செயலர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


விரைவில் 8வது ஊதியக்குழு நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்த நிலையில், இதன்மூலம் தற்போது பணியாற்றி வரும் 49 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


அகவிலை ஊதியம் (Dearness Pay)

கடந்த சில ஆண்டுகளில் பணவீக்கம் மிக வேகமாக உயர்ந்து வருவதால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி உண்மையான சில்லறை பணவீக்கத்துடன் ஒத்துப்போகவில்லை என்று சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் படோரியாவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள அறிக்கையில் இந்த பதில் அளிக்கப்பட்டது. 


இதனால்தான் பல ஊழியர் அமைப்புகள் அகவிலைப்படியில் குறைந்தது 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்தில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகின்றன.


நிபுணர்களின் கூற்றுப்படி, நேரடி நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறு இப்போது குறைவாக உள்ளது. ஆனால் அரசாங்கம்ஃபிட்மென்ட் காரணியை வலுப்படுத்துவது பற்றி பரிசீலிக்கலாம். ஃபிட்மென்ட் காரணி என்பது எதிர்கால DA மற்றும் DR அதிகரிப்புகள் தீர்மானிக்கப்படும் குணகமாகும். தற்போது, இது 2.57 ஆக உள்ளது. மேலும் இது 3.0 ஆக அதிகரிக்கப்பட்டால், அடிப்படை சம்பளம், HRA, TA மற்றும் பிற சிறப்பு கொடுப்பனவுகள் போன்ற அனைத்து தொடர்புடைய கொடுப்பனவுகளுடன் சேர்த்து அதிகரிக்கிறது.


இப்பொழுது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

DA மற்றும் DR ஆகியவை இப்போதைக்கு அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படாது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் பொருள் ஊழியர்களின் சம்பளம் அவர்களின் தற்போதைய கட்டமைப்பிற்குள் இருக்கும், அதாவது அடிப்படை ஊதியம் அப்படியே இருக்கும், மேலும் DA மட்டுமே ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் சிறிது அதிகரிக்கும்.


இருப்பினும், அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படி சேர்க்கப்படாதபோது, ​​உண்மையான சம்பள உயர்வு இருக்காது. ஏனெனில் ஓய்வூதியம், PF மற்றும் HRA ஹெச்ஆர்ஏ போன்ற பல முக்கியமான காரணிகள் அடிப்படை ஊதியத்தைப் பொறுத்தது. இது 8வது ஊதியக் குழுவை இன்னும் முக்கியமானதாக ஆக்குகிறது. உண்மையான, குறிப்பிடத்தக்க சம்பள உயர்வுகள் இப்போது ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இருக்கும், அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படியைச் சேர்ப்பதன் மூலம் அல்ல.


DA-DR இன் தற்போதைய நிலை என்ன?

தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி/டிஆர் விகிதம் 58% ஆக உள்ளது. தீபாவளிக்கு முன்பு, அரசாங்கம் அதை 3% அதிகரித்தது. ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் 5 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களையும் 6.5 மில்லியன் ஓய்வூதியதாரர்களையும் நேரடியாகப் பாதிக்கும்.


8வது சம்பள கமிஷன் எப்போது அமல்படுத்தப்படும்?

7வது சம்பளக் கமிஷன் தனது 10 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் அரசாங்கம் 8வது சம்பளக் கமிஷனை அறிவித்தது. நீதிபதி (ஓய்வு) ரஞ்சன் தேசாய் தலைமையிலான இந்த கமிஷன், 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


8வது ஊதியக்குழுவின் ஃபிட்காரணி எதிர்பார்ப்புகள் என்னென்ன?

நிபுணர்களின் ஆராய்ச்சியின்படி, ஃபிட்மென்ட் காரணி பரிந்துரைகள் 7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளைப் போலவே இருக்கலாம். 1.83 முதல் 2.46 வரையிலான ஃபிட்மென்ட் காரணியைக் இருக்கலாம் என கூறப்படுகிறது.


இது நடந்தால், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 உயர்ந்து ரூ.32,940 முதல் ரூ.44,280 வரை உயரக்கூடும்.

1. 1.83 காரணி தோராயமாக ரூ.32,940

2. 2.46 காரணி தோராயமாக ரூ.44,280 ஆக இருக்கும்.


மொத்த உண்மையான ஊதியத்தில் (அடிப்படை + அகவிலைப்படி) 14% முதல் 54% வரை அதிகரிப்பு சாத்தியமாகும். இருப்பினும், 54% அளவுக்கு பெரிய உயர்வு சாத்தியமில்லை, ஏனெனில் இது அரசாங்கத்தின் மீது குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை ஏற்படுத்தும். நுகர்வு அதிகரிக்கும் நடவடிக்கையாக அரசாங்கம் ஊதிய உயர்வைப் பயன்படுத்தலாம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.



Bajaj Pygmy Go 178MM Mini Fan with LED Lighting | Rechargeable | USB Charging | 4-hours Battery Backup | 3 Speed | 2-Light Brightness Setting | High Speed | Portable【Blue】


https://amzn.to/4oRIpth





EL / ML / UEL on PA களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்க முடியவில்லையா? - அதற்கான தீர்வு

 


EL / ML / UEL on PA களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்க முடியவில்லையா? - அதற்கான தீர்வு


நண்பர்களே வணக்கம் 🙏


EL/ ML உள்ளிட்ட அனைத்து விடுப்புகளும் நாம் களஞ்சியம் செயலி (Kalanjiyam App) வழியாக விண்ணப்பித்து approval செய்து வருகிறோம்...


சிலருக்கு Leave salary எடுத்துக் கொண்டு வரவில்லை ( அதாவது Leave நாட்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்துள்ளது)

என்று சொல்கிறார்கள்...


தீர்வு


1) *சரியான விடுப்பு* தான் விண்ணப்பித்து உள்ளாரா? உறுதி செய்து கொள்ளுங்கள்


Eg. ML இன் உண்மையான பெயர் *unearned leave on MC* 


2) சரியான விடுப்பு விண்ணப்பித்தும் வரவில்லை?


அவர் தகுதி காண் பருவம் முடித்து விட்டாரா? 

என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் 


அதாவது Employee Type இல் *Approved Probationer* என இருக்க வேண்டும்..


 *Probationer* என இருந்தால் அவருக்கு ML (UEL on MC) அனுமதிக்காது .


3) *Employee type எங்கே* பார்ப்பது?


Initiator login...

e Services...

Finance ....

Payroll...

Process...

Search...


Employeeக்கு நேரே உள்ள Personal click...


Check the person type

( Employee number க்கு கீழே இருக்கும்)


4) இப்படி ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தான் பார்க்க வேண்டுமா? 

பள்ளியில் உள்ள *மொத்த பணியாளருக்கும்* பார்க்க?


Initiator login...

e Services...

Human Resource...

Leave process...

Reports...


Last surrender details report click action...

Ok..


Monitor Request Status

Normal Completed... Wait


Click view output...

Excel sheet will open


அதில் அனைத்து பணியாளர் விவரங்கள் இருக்கும்... அதில் Employee Type சரி பார்த்து கொள்ளுங்கள்...


Approved probationer இருந்தால் சரி.


தகுதி காண் பருவம் முடித்து இருந்தும் 


Probationer / Temporary employee என இருந்தால் 

அவருக்கு probation order entry போட வேண்டும் 


5) *Probation order entry* எப்படி போடுவது?


Initiator login

e Services...

Human Resource...

Employee profile...

Regularisation & probation...

Regularisation details....

Employee ID type... Go...

Click action

ஏற்கனவே regularisation order entry இருந்தால் எதுவும் செய்ய வேண்டாம்

இல்லை எனில்


Create...

Regularisation date ( பணியில் சேர்ந்த நாள்/ 01-Jun-2006) 

Reference number ( JD/ CEO ந.க.எண்) 

Date

Probation commencement date ( default date of joining / 01-Jun-2006)


Review

Attachment இல் Regularisation order copy *கட்டாயம் upload* செய்யவும்...

Submit...

Approve in next level.


Probation order entry steps..

Initiator login

e Services

Human Resource

Employee Profile

Regularisation & probation

Probation Declaration Details...

Employee ID...

Go..

Action...


Actual probation completion date...

Reference number...

Reference date...

Review...

Probation order *கட்டாயம்* attachment செய்யுங்கள்

Submit...

Approve in next level


அந்த பணியாளர்

Approved Probationer ஆக மாறி விடுவார்கள்....


இனி இவருக்கு

 EL/ML/ UEL on PA என எல்லாம் 

ஊதிய பிடித்தம் இல்லாமல் Pay+ Leave salary சரியாக வரும்...


அதே போல் 

Education advance

Marriage Advance 

பட்டி தயாரிக்க முடியும்


தகவலுக்காக..

 *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை 625702

3/12/25


Comfort After Wash Fabric Conditioner, Refill pouch, super saver pack, 2 Litre 


https://amzn.to/3Mnw4yC




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 05.12.2025

கிழமை:- வெள்ளிக்கிழமை


 

திருக்குறள்: 


பால் : பொருட்பால் 

‌இயல்: பண்புடைமை 

அதிகாரம்: குடியியல்


*குறள்: 999*


நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 

பகலும்பாற் பட்டன் றிருள் 


*விளக்கவுரை:*


பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.


 *பழமொழி :* 


Trust is the root of every strong bond. 

நம்பிக்கை தான் ஒவ்வொரு உறவின் வேர்.


 *ஈரொழுக்கப் பண்புகள் :* 


1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.


2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.


 *பொன்மொழி :* 


கடவுளைத் தெரிந்து கொள்ள சிறந்த வழி எல்லாவற்றிடமும் அன்பு செலுத்துதலே ஆகும் -வின்சென்ட் வான்காக்


 *பொது அறிவு :* 


01. "எண்கணித ஏந்தல்" என்று அழைக்கப்படும் இந்திய கணித மேதை யார்?

விடை: ஸ்ரீனிவாச ராமானுஜம்

Srinivasa Ramanujam


02. தமிழ்நாட்டின் முதல் மகளிர் பல்கலைக்கழகம் எது?

விடை: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

Mother Teresa Women's University


 *English words :* 


startled-felt sudden shock

vibrant-lively


 *தமிழ் இலக்கணம்:* 


 _சொல்லின் முதலில் வரா எழுத்துகள்_ 

1. மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வரா 

2. ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது

3. ஞ, ய, வ வரிசையில் குறிப்பிட்ட மெய்யெழுத்துகள் தவிர வேறு எதுவும் முதலில் வராது


 *அறிவியல் களஞ்சியம் :* 


 உங்கள் டார்ச் விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளி சந்திரனை அடைய 238,000 மைல்கள் அல்லது 384,400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதற்கும் சந்திரனின் மேற்பரப்புக்கும் இடையில், வளிமண்டலம் என நமக்குத் தெரிந்த ஒன்று உள்ளது, இது அடிப்படையில் பூமியின் மேற்பரப்பை உள்ளடக்கிய காற்றின் ஒரு அடுக்கு ஆகும்.


 *நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்* 


நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.



 *நீதிக்கதை* 


 *எறும்பின் தன்னம்பிக்கை* 


மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். 


அதாவது ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார். பின் அவர்களிடம், அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.


 *இன்றைய செய்திகள்* 


 *05.12.2025* 


🌟கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 81% குறைந்துள்ளது என்றும், புதிதாக எச்ஐவி நோய்த் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை 49% குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது


⭐தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25-ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.


🌟இண்டிகோ விமான நிறுவனம் ஒரே நாளில் முக்கிய 3 நகரங்களில் விமானங்களின் சேவையை ரத்துசெய்தது.

மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


 *விளையாட்டுச் செய்திகள்* 


🔴ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும். விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.


 *Today's Headlines* 


🌟A survey conducted by the Union Health Ministry has revealed that the number of deaths from AIDS has decreased by 81% and the number of new HIV infections has decreased by 49% in the last 15 years.


🌟At present, 5.7 million electric vehicles are registered in India. And the sales of electric cars increased in 2024-25.


🌟IndiGo airline cancels flights to 3 major cities on one single day, and 86 flights are cancelled at Mumbai airport.


 *SPORTS NEWS*


🔴This is the 44th time that two Indian players have scored centuries in the same innings in ODIs. This is the 8th time India has lost despite Virat Kohli scoring a century.



Waterproof Strolley Duffle Bag- 2 Wheels - Luggage Bag


https://amzn.to/4oAQwK2






Pension & DCRG வழக்கில் தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்பு

 

ஓய்வூதியம் & பணிக்கொடை வழக்கில் தமிழ்நாடு அரசு  அவகாசம் கேட்பு - தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு


* திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (04.12.2025)விசாரணைக்கு வந்தது.


 * அப்போது மனுதாரர் சார்பில்  ஆஜரான வழக்கறிஞர் இந்தியாவிலேயே ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே என்றும் இதற்கான விதிமுறைகளோ வழிகாட்டுதல்களோ இன்றுவரை உருவாக்கப்படவில்லை.


 * பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக T.S ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை இன்றுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மோப்ப நாய்களுக்குக்கூட ஓய்வுக்கு பின்னர் பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை , கடந்த 22 ஆண்டுகளாக PFRDA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாமலும், பிடித்தம் செய்யப்பட்ட 90,000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசே வைத்திருப்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும், மனுதாரரின் மருத்துவ செலவிற்கோ, மகனின் திருமணத்திற்கோ பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்புத் தொகையிலிருந்து முன்பணம் பெற முடியாத நிலையில் இருப்பதையும் கூறினார்.


* இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் இவ்வழக்கில் அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ( Advocate General) ஆஜராக இருப்பதால் அவகாசம் தேவை என்று கோரியதையடுத்து  நீதியரசர்கள் 11.12.2025 அன்றைக்கு  பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.



VOLTURI Non Scratch Wire Dish Cloth (Pack of 10), Steel Scrubber for Utensils Cleaning, Multipurpose Wet and Dry Cleaning, Stainless-Steel Dish Wash Scrubber for Washing Dishes, Sinks, Counters


https://amzn.to/4pOmq6H



TN Election 2026 RO's and ARO's List

 


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் & உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் - தேர்தல் ஆணையம் அரசிதழ் வெளியீடு


TN Asssembly Election 2026 - RO's and ARO's List



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 8.80 Paise.

No. 787]

TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

CHENNAI, MONDAY, DECEMBER 1, 2025

Karthigai 15, Visuvaavasu, Thiruvalluvar Aandu-2056

Part V-Section 4

Notifications by the Election Commission of India

NOTIFICATIONS BY THE ELECTION COMMISSION OF INDIA

NOTIFICATION OF ELECTION COMMISSION OF INDIA REGARDING APPOINTMENT OF RETURNING OFFICERS FOR THE ASSEMBLY CONSTITUENCIES IN THE STATE OF TAMIL NADU

No. SRO G-35/2025.

The following Notification of the Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110 001,dated 21st November, 2025 [30 Karthika, (Saka) 1947] is published:-

No. 434/TN/2025 (3).- In pursuance of the provisions of Section 21 of the Representation of the people Act, 1951 43 of 1951), and in supersession of all its earlier notifications, the Election Commission of India hereby desianates, ir consultation with the Government of Tamil Nadu, the officers of the Government specified in column (2) of the Table below,as the Returning Officer of the Assembly Constituency in the State of Tamil Nadu as specified in the column (1) of the said Table against such officer of the Government.




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



 Vim Fresh Lemon Fragrance Dishwash Liquid Gel 2 L Refill Pack | Super Saver Offer






DEO தேர்வு - TNPSC Notification வெளியீடு


 மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) தேர்வு - TNPSC நோட்டிபிகேஷன் வெளியீடு


DEO தேர்வு - TNPSC Notification வெளியீடு


As per Para 3.1 of the Notification No.5 / 2024 , dated 23.04.2024 the number of vacancies for the following post is revised and the distribution of vacancies is as follows


TAMIL NADU PUBLIC SERVICE
COMMISSION
Number vacancies(Revised)
Notification No.5C/2024
Date: 03.12.2025
Combined Civil Services Examination - Group IB and IC Services
ADDENDUM

1. As per Para 3.1 of the Notification No.5/2024, dated 23.04.2024 the number of vacancies for the


following post is revised and the distribution of vacancies is as follows:
Name of the Post : District Educational Officer
Post Code : 2062
Name of theService : Tamil Nadu School Educational Service

Name of the Department : School Education

Distribution of
Vacancies

GT(G)

GT(W)

BC(OBCM)(G)

BC(OBCM)
(PSTM)

BC(OBCM)(W)
(PSTM)

MBC/DC(G)


ST(G)(PSTM)


(i) From Open Market-5

(ii) From among Teachers employed in recognized aided Secondary Schools and Higher Secondary Schools-2
Note: All other details and conditions stipulated in the Notification No.5/2024, dated 23.04.2024 and addenda 5A and 5B to the Notification will remain unchanged.

Secretary


PANCA Knife Set of 3 with Cover, Stainless Steel Knives for Kitchen| Sharp Edge Cutting Chef Knifes for Chopping Vegetables, Fruits, Multipurpose Knife, Kitchen Tools(Set of 3, Black)


https://amzn.to/4oAgWva




IGNOU - B.Ed பட்டச் சான்றிதழ்-க்கு தனியாக மதிப்பீடு பெற தேவை இல்லை - மாவட்டக் கல்வி அலுவலர்



 புது டெல்லி இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் பட்டச் சான்றிற்கு  தனியாக மதிப்பீடு செய்யத் தேவையில்லை  என அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), பொள்ளாச்சி


IGNOU - B.Ed பட்டச் சான்றிதழ்-க்கு தனியாக  மதிப்பீடு பெற தேவை இல்லை - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சில/ பல இடங்களில்  அவ்வப்போது IGNOU B.Ed., சான்றினை மதிப்பீடு ( Evaluation ) செய்ய வேண்டும் என சொல்வது வாடிக்கையாக உள்ளது. தற்போது தணிக்கைத் துறை மூலம் நடக்கும் தணிக்கையின்போதும், IGNOU B.Ed., சான்றினை மதிப்பீடு செய்ய வேண்டும் என தணிக்கைக் குறிப்பில் குறிப்பிடுவதும் நடந்து கொண்டும் உள்ளது. நமக்கு ஏன் வம்பு என உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இதற்கு மதிப்பீடு சான்றினைக் கோரி விண்ணப்பித்துப் பெறுகின்றனர். இதனைப் பார்த்து, பலர், இவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும் என சொல்வதும் நடந்து கொண்டு தான் உள்ளது. 


    ஆனால் அரசாணைப்படி IGNOU B.Ed., சான்றினை மதிப்பீடு செய்வது அவசியமற்றது. தமிழ்நாடு அரசே, இச்சான்றினைத் தமிழகப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டத்திற்கு இணையானது என மதிப்பீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 


     இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பொள்ளாச்சி மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி ) அவர்கள் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். அதில் தங்களது அலுவலத்திற்கு தொடர்ந்து மதிப்பீடு சான்று கோரும் விண்ணப்பங்களை அனுப்பும் பொள்ளாச்சி தெற்கு வட்டாரக் கல்வி அலுவலகம், இனி வருங்காலங்களில் இத்தகைய கருத்துருக்கள் அனுப்புவதை தவிர்க்குமாறு குறிப்பிட்டுள்ளதுடன், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கும் B.Ed., சான்றுக்குத் தனியாக மதிப்பீடு செய்யத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டு செயல்முறை ஆணை வெளியிட்டுள்ளார்.


 

Waterproof Strolley Duffle Bag- 2 Wheels - Luggage Bag


https://amzn.to/4oAQwK2






பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-12-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-12-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 04.12.2025

கிழமை:- வியாழக்கிழமை


 

திருக்குறள்:


பால்:- பொருட்பால்

இயல்:- குடியியல்

அதிகாரம்:- பண்புடைம



*குறள் 997:*


அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் 

மக்கட்பண் பில்லா தவர் 


*விளக்க உரை:*


மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.


*பழமொழி :*


where trust lives, fear fades. 


நம்பிக்கை இருக்கும் இடத்தில் பயம் மறையும்.


*இரண்டொழுக்க பண்புகள் :*


1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.


2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.


*பொன்மொழி :*


இறைவன் ஒருவனே. இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் .ஆனால் உங்கள் கடமையை செய்ய தவறாதீர்கள் - வள்ளலார்.


*பொது அறிவு :*


01.இந்தியாவிற்கு வணிகத்திற்காக வந்த முதல் ஐரோப்பியர்கள் யார்?



போர்த்துகீசியர்கள்-The Portuguese


02. இந்தியாவின் முதல் நினைவு தபால் தலையில் யாருடைய உருவப்படம் இடம்பெற்றிருந்தது?


மகாத்மா காந்தி- Mahatma Gandhi


*English words :*


clueless-no idea


aboriginal-native


*தமிழ் இலக்கணம்:*


 தமிழ் குறிப்பு 

சொல்லின் முதலிலும் கடையிலும் இறுதியிலும் வரும் சொற்களை நாம் அறிந்து கொண்டால் நாம் தமிழ் நன்கு பேசி எழுத முடியும் 

முதல் எழுத்துகள் 

1. உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் சொல்லின் முதலில் வரும். 

2. க, ச, ந, த, ப, ம ஆகிய வரிசையில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் முதலில் வரும்

3. ஞ,ய,வ வரிசையில் சில உயிர் மெய் எழுத்துகள் மட்டுமே முதலில் வரும் 

4. ஞ வரிசையில் ஞா மட்டுமே முதல் எழுத்தாக வரும் 

5. ய வரிசையில் ய,யா,யு, யூ, யோ, யௌ மட்டுமே முதல் எழுத்தாக வரும் 

6. வ, வா, வி, வீ, வெ, வே, வை,  வௌ ஆகியவை மட்டுமே முதல் எழுத்தாக வரும்


*அறிவியல் களஞ்சியம் :*


 நெருப்பு எரியும் சமயம் உண்டாகும் அதிதவெப்பம் அதன்மேலிருக்கும் காற்றினையும் சூடாக்கும்.அப்படியாக சூடாக்கப்பட்ட காற்று வளிமண்டல,மற்றும் இயற்பியல் விதிகளின் படி மேலெழும்பும்


*டிசம்பர் 04*


*இந்திய கடற்படை தினம்*


1971 இந்திய-பாகிஸ்தான் போரின், இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது[1].இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது. 


*ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள்*


இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012)[1][2] இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவியேற்றார்.


*நீதிக்கதை*


 *முயற்சி வேண்டும்*



ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்! என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. 



கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியவன் மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்! என்றான். 



கடவுளே! உதவி செய்! என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்! என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.


*இன்றைய செய்திகள்*


04.12.2025


⭐புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை


⭐மழை- வெள்ளத்தால் பாதிப்பு: இலங்கைக்கு மருத்துவ குழுவை அனுப்பிய இந்தியா


⭐தமிழகத்தில் ஆண்டுக்கு 2500 பேர் வரை புற்றுநோயால் பாதிப்பு- மத்திய அரசு


⭐பெங்களூருவில் ரூ.28 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல். வெளிநாட்டினர் மூவர் கைது!


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀பேட்டர் தரவரிசையில் ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார்.

பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 6-வது இடத்தில் உள்ளார்.


*Today's Headlines*


⭐Increased water release from Puzhal Lake- Flood warning.


⭐Rain-Flood damage: India sends medical team to Sri Lanka.


⭐Up to 2500 people in Tamil Nadu are affected by cancer every year- Central Government.


⭐Drugs worth Rs. 28 crore seized in Bengaluru, Three foreigners arrested. 


 *SPORTS NEWS*


🏀Rohit continues to be at the top of the batting rankings. Indian bowler Kuldeep Yadav is in 6th position in the bowling rankings.



Comfort After Wash Fabric Conditioner, Refill pouch, super saver pack, 2 Litre 


https://amzn.to/3Mnw4yC




TNPSC - Annual Planner 2026

 

 

TNPSC ஆண்டுத் திட்டம் 2026


TNPSC - Annual Planner 2026


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகள்



TNPSC ANNUAL PLANNER

 2026 ஆம் ஆண்டிற்கான (TNPSC ANNUAL PLANNER 2026) ஆண்டுத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



28 Slots Leather Debit/Credit/ATM Card Holder


https://amzn.to/4iwZO8t





21 DEOs Transfer - DSE Proceedings, Dated : 02-12-2025

 


மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் விவரம்


21 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு


21 District Education Officers Transfer - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Parachute Advansed Deep Nourish Body Lotion for Women & Men, Dry Skin, 400ml | Pure Coconut Milk, 100% Natural, 72h Moisturisation


https://amzn.to/4png52s





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

8th Pay Commission : அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்

8வது ஊதியக் குழு : அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல் 8 வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியத்துடன்...