கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

 

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு




மறியல் போராட்டத்திற்கு வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் / அலுவலர்கள் சங்கம் முழு ஆதரவு



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-10-2025


 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 14.10.2025

கிழமை:- புதன்கிழமை



*திருக்குறள்*


பால் :பொருட்பால் 

‌இயல்: குடியியல் 

அதிகாரம்:  மானம்


*குறள் எண்: 963*


பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய 

சுருக்கத்து வேண்டும் உயர்வு.


 *விளக்கவுரை:*


செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.


 *பழமொழி :* 


True friends are stars that shine in the dark. 

உண்மையான நண்பர்களே இருளில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள்.


 *ஈரொழுக்கப் பண்புகள் :* 


1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2. எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


 *பொன்மொழி :* 


வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்

 - அன்னை தெரசா


 *பொது அறிவு :* 


01.உலக விஞ்ஞானிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

விடை: நவம்பர் 10   November-10


02. புதன் கோள்  சூரியனை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலம் எவ்வளவு?

விடை: 88 நாட்கள்- 88 days


 *English words :* 


Abstract – Theoretical

Access – Entry


 *தமிழ் இலக்கணம்:* 


 வினைச்சொல் என்பது ஒரு செயலை அல்லது நிகழ்வை உணர்த்தும் சொல். இது ஒரு வாக்கியத்தின் இன்றியமையாத பகுதியாகும், இது பொருள் என்ன செய்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.

எடுத்துக்காட்டாக, "கண்ணன் ஓடினான்" என்ற வாக்கியத்தில் 'ஓடினான்' என்பது ஒரு வினைச்சொல் ஆகும்.


 *அறிவியல் களஞ்சியம் :* 


 "மூச்சு விடும்போது வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடு கொசுக்களைக் கவரும் ஒரு முக்கிய ஈர்ப்புப்பொருள் என்பதால் மனிதர்கள் நேரடியாக ஆய்வில் உட்படுத்தப்படவில்லை. வாசனை வீசும் பூக்கள் மலரும் செடிகளையும், பழ மரங்களையும் இல்லாமல் செய்யும் மனிதன் அந்த நறுமணத்தை செயற்கையாக உருவாக்கினால் இது போன்ற பாதிப்புகளே ஏற்படும்.


தொலைதூர விண்வெளி ஆய்வுகளிலும் ஆழமான கடற்பரப்பில் ஆராய்ச்சிகளிலும் சாதனைகள் புரியும் மனிதனால் கொசுக்கள் என்ற இந்த சின்னஞ்சிறிய உயிரினங்களைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் வெற்றிபெற முடியவில்லை என்பதே உண்மை."


 *அக்டோபர் 15* 


இன்று இளைஞர் எழுச்சி நாள் ,உலக கைகள் கழுவும் தினம், உலக மாணவர் தினம் மற்றும் வெண்பிரம்பு பாதுகாப்பு தினம் .


 *APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்*


பொதுவாக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகின்ற இவர் ஒரு இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.


இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.


2002 ஆம் ஆண்டில், இவர் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் "மக்கள் ஜனாதிபதி" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகின்றார். பிற்கால வாழ்வில் இவர் கல்வி, எழுத்து மற்றும் பொதுச் சேவைக்கு திரும்பினார். பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் ஆக பணியாற்றினார்.


இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுகளுக்காகவும், இந்திய மாணவர் சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடல்களுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். 




 *நீதிக் கதை*


 _மீனவனின் புத்திசாலித்தனம்_ 


மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல என்று மன்னர் மறுத்தார். சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆணா? பெண்ணா? என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.


எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை திரும்ப பெற்றே ஆக வேண்டும் என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.


பேராசைக்காரன், கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விடவில்லை பாருங்கள் என்றாள் மன்னரிடம். அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான். நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். 


நீதி : யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றியடைகிறார்கள்.


 *இன்றைய செய்திகள்* 


 15.10.2025


🌟தீபாவளி திருடர்களை பிடிக்க டிரோன்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு- அவசர உதவிக்கு செல்போன் எண்கள் அறிவிப்பு


🌟இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சுமார் 3 புயல்கள் தாக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


🌟மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடியது வெனிசுலா


🌟2025ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.


 *விளையாட்டுச் செய்திகள்*


🌟பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக வம்சாவளி வீரர் முத்துசாமி அசத்தல்.


 *Today's Headlines* 


🌟Police department use drones for  monitoring Diwali thieves and they have announced emergency phone numbers also.


🌟The Meteorological Department has warned that around 3 cyclones may hit Puducherry and its surrounding areas during this year's northeast monsoon season.


🌟Venezuela closes its embassy in Norway after Nobel Prize announcement for Maria Corina.


🌟The 2025 Nobel Prize in Economics has been awarded jointly to Joel Mogir, Philip Achion, and Peter Howitt


 *SPORTS NEWS*


🧶Batsman Muthusamy who is of Tamil Nadu ancestry, took 11 wickets in the Test against Pakistan.



புகார் அளித்தால் ரூ.1,000-க்கு இலவசமாக FasTag Recharge

புகார் அளித்தால் ரூ.1,000-க்கு இலவசமாக பாஸ்டேக் ரீ சார்ஜ்



புகார் அளித்தால் ரூ.1,000-க்கு இலவசமாக FasTag Recharge

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் நாட்கள் அறிவிப்பு



சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் நாட்கள் அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு 


Announcement of dates for the Special Teacher Eligibility Test - TRB Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு TET தேர்வு தாள் 1 ஜனவரி 24 அன்றும், தாள் 2 ஜனவரி 25 அன்றும் நடைபெறும் என அறிவிப்பு


2026 ஜனவரியில் சிறப்பு TET தேர்வு:


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச தேர்வு தேதிகள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


2026 ஜனவரி 24ல் தேர்வு முதல் தாள், ஜனவரி 25ல் இரண்டாம் தாள் நடத்த திட்டம்.


சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிக்கை நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு


ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 1 லட்சம் - அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்

 


ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் - அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்


ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையில், ஆந்திரப் பிரதேசம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. இங்கு 12,912 பள்ளிகள் ஒரு ஆசிரியரால் நடத்தப்படுகின்றன.


இந்தியாவில் கல்வியின் நிலை குறித்த மத்திய கல்வி அமைச்சகம் (MoE) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள் (1,04,125) ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்கி வருகின்றன. 2024-25 கல்வியாண்டில், இந்தப் பள்ளிகளில் சுமார் 33.76 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் மூலம், ஒரு பள்ளிக்குச் சராசரியாக 34 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


கல்வி உரிமைச் சட்டம் (RTE), தொடக்கநிலை வகுப்புகளுக்கு 30:1 என்ற விகிதத்திலும், உயர் தொடக்கநிலை வகுப்புகளுக்கு 35:1 என்ற விகிதத்திலும் ஆசிரியர்-மாணவர் விகிதத்தை (PTR) பராமரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ள நிலையில், இந்த நிலைமை அரசின் கல்வி இலக்குகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது.


மாநிலங்களின் நிலை என்ன?


ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையில், ஆந்திரப் பிரதேசம் (12,912 பள்ளிகள்) நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசம் (9,508), ஜார்க்கண்ட் (9,172), மகாராஷ்டிரா (8,152), கர்நாடகா (7,349) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசம் (6,24,327 மாணவர்கள்) முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட் (4,36,480) மற்றும் மேற்கு வங்காளம் (2,35,494) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


குறையும் எண்ணிக்கை; அரசின் நடவடிக்கை


நல்ல வேளையாக, ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2022-23 கல்வியாண்டில் 1,18,190 ஆக இருந்த இந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை, தற்போது 1,04,125 ஆகச் சரிந்துள்ளது.


"பள்ளிகளை ஒன்றிணைத்தல்" மூலம் வளங்களைப் பயன்படுத்துவதை அதிகரிக்க அரசு முயற்சிப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் கற்பித்தல் செயல்முறையைத் தடுக்கின்றன. எனவே, மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்து, ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றும் அவர் கூறினார்.


சராசரி மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள இடங்கள்


ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள டெல்லி (9 பள்ளிகள்) மற்றும் சண்டிகரில் (0 பள்ளிகள்), ஒரு பள்ளிக்குச் சராசரி மாணவர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சண்டிகரில் 1,222 மாணவர்களும், டெல்லியில் 808 மாணவர்களும் சராசரியாக உள்ளனர். இது உள்கட்டமைப்பை உகந்த முறையில் பயன்படுத்துவதைக் குறிக்கிறது என்று அதிகாரிகள் விளக்கமளித்தனர்.


மிகக் குறைந்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளைக் கொண்ட யூனியன் பிரதேசமாக புதுச்சேரி, லடாக், சண்டிகர் ஆகியவை உள்ளன. டெல்லியில் வெறும் 9 ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்தவும், சட்டம் வகுத்த விகிதத்தை அடையவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.


சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு(Special TET)க்கு SCERT மூலம் DIET பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு



சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு SCERT மூலம் DIET பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு கடித எண்: 449/ ஆ.தே.வா./ 2025, நாள் : 13-10-2025


School Education Department Secretary's order to provide training to In-service Teachers for Special Teacher Eligibility Test through SCERT, Letter No.: 449/ TRB/ 2025, Dated: 13-10-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-10-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 14.10.2025

கிழமை:- செவ்வாய்கிழமை


*திருக்குறள்:*

பால்:- பொருட்பால்
இயல்:- குடியியல்
அதிகாரம்:- மானம்

*குறள் : 961*

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
                    
*உரை:*

இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

*பழமொழி :*

Respect given is respect earned.  

மரியாதை கொடுத்தால், மரியாதை தானாக கிடைக்கும்.

*இரண்டொழுக்க பண்புகள் :*

1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

*பொன்மொழி :*

படைப்பாற்றலின் கதவை திறக்கக்கூடிய சாவி கல்வி -அகதா கிறிஸ்டி

*பொது அறிவு :*

1.இந்தியாவில் கையால் நெய்யப்பட்ட கம்பளங்களுக்கு மிகவும் பிரபலமான நகரம் எது?

     பதோஹி -உத்தரபிரதேசம்

           Bhadohi - Uttar Pradesh,

2. மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பயன்படும் கருவியின் பெயர் என்ன?

              என்செபலோகிராப்

                 Encephalography

*English words :*

Frigid - extremely cold, மிகவும் குளிர்ந்த தன்மை

Acknowledge – to accept or admit.ஒப்புக்கொள்

*தமிழ் இலக்கணம்:*

தமிழ் சொற்கள் நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், மற்றும் உரிச்சொல் ஆகும்.

பெயர்ச்சொல்: இது ஒரு நபரையோ, பொருளையோ, இடத்தையோ அல்லது கருத்தையோ குறிக்கும் சொல் ஆகும். (எ.கா: மரம், சென்னை, ஓடுதல், அழகு).

*அறிவியல் களஞ்சியம் :*

ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட நறுமணம் இருப்பதால், வாசனை சோப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் சோப்புகளின் வாசனையும் அவர்களில் சிலரை மட்டும் கொசு கடிக்க ஒரு காரணமாக அமையலாம் என்று ஐசயன்ஸ் (iScience) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள இந்த கட்டுரை கூறுகிறது.

*அக்டோபர் 14*

*அக்டோபர் 14 - உலக தர நிர்ணய நாள் (World  Standards  Day)*

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று, ISO (தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு), IEC (சர்வதேச மின்தொழில்நுட்ப ஆணையம்) மற்றும் ITU (சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்) ஆகியவற்றின் உறுப்பினர்கள் உலக தர நிர்ணய தினத்தைக் கொண்டாடுகிறார்கள், இது சர்வதேச தரங்களாக வெளியிடப்படும் தன்னார்வ தொழில்நுட்ப ஒப்பந்தங்களை உருவாக்கும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் ஒரு தினமாக கொண்டாடப்படுகின்றது.

*நீதிக்கதை*

*சொர்க்கமும் நகரமும்*

அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம். ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள் என்று கேட்டது.

பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏரி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம் என்று வாத்துகள் கூறியது. என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள், என்றது ஆமை. உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்? என்றது வாத்து.

அதற்கு ஆமை ஓர் உபாயம் செய்யலாம், ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள், என்றது ஆமை. நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய் என்று வாத்துகள் கூறியது.

அப்படியானால் பறக்கும்போது நான் வாய் பசாமல் இருக்கின்றேன் என்று ஆமை கூறியது. இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன. சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய், என்று கூறியது.

செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதைப் பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது. கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.

நீதி: வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்.

*இன்றைய செய்திகள்*

14.10.2025

⭐2025ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு ஜோயல் மோகிர்,
பிலிப் அகியோன்
மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது

⭐ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்

⭐ அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் போன்று பேசி 'டிஜிட்டல் கைது' மூலம் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி செய்த 4 பேரை குஜராத்தின் சூரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

⭐இரண்டு கட்டங்களாக 20 பிணைக்கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்: இஸ்ரேலில் உறவினர்கள் மகிழ்ச்சி

*🏀 விளையாட்டுச் செய்திகள்*

🏀ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன்: இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்.

எகிப்தை சேர்ந்த 3ஆம் நிலை வீராங்கனையை வீழ்த்தினார்.
38 நிமிடத்தில் வீழ்த்திய ஜோஷ்னாவுக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்பட்டது.

*Today's Headlines*

⭐Nobel Prize announced for 3 people Joel Mogir, Philip Achion and Peter Howitt are awarded jointly.

⭐Strict action will be taken if additional fares are charged on Omni buses said  Minister Sivashankar

⭐ Enforcement Directorate officials have arrested 4 people in Surat, Gujarat, for allegedly defrauding the public of Rs 100 crore through 'digital arrest' by impersonating Enforcement Directorate officials.

⭐Hamas releases 20 hostages in two phases: Relatives in Israel rejoice.

*SPORTS NEWS*

🏀Japan Squash Open: Indian player Joshna Chinappa is the champion. She defeated the 3rd seeded player from Egypt. Joshna, who defeated her in 38 minutes, was awarded a prize of 15 thousand US dollars.


கலைத்திருவிழா 2025 : பசுமையும் பாரம்பரியமும் போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள்



 கலைத்திருவிழா 2025 : பசுமையும் பாரம்பரியமும் போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் 


Kalai Thiruvizha 2025 : Pasumaiyum Parambariyamum Competitions Guidelines 


 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - பங்கேற்கும் / சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் - வழிகாட்டி நெறிமுறைகள் - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Block Level Kalai Thiruvizha Competitions - Certificates for Students - Guidelines - CEO Proceedings


Block Level Kalai Thiruvizha Competitions for Students of Classes 1 to 12 - Certificates for Participating / Distinguishing Students - Guidelines - Proceedings of the Chief Educational Officer



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் ₹75,000 பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள்



வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் இறந்தால் வழங்கப்படும் ₹75,000 பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள், விண்ணப்பப் படிவம் & சரிபார்ப்புப் பட்டியல் : வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள் : 08-10-2025


Application Forms, Checklist & Procedures for applying for ₹75,000 in case of death of earning mother/ father in an accident: Proceedings of Vellore District Chief Education Officer, Date: 08-10-2025



மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ வழங்கப்படும் ₹75,000/-க்கான விபத்துக் காப்பீடு பத்திரம் பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள், விண்ணப்பப் படிவம் & சரிபார்ப்புப் பட்டியல் குறித்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


நவம்பர் 5, 6ல் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள் மாநாடு


நவம்பர் 5, 6ல் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள் மாநாடு



 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

   பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு மறியல் போராட்டத்திற்கு வணிகவரித்த...