+2 பொதுத்தேர்வு 2026 மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள (18.06.2026 வரை) இறுதி வாய்ப்பு - அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
+2 பொதுத்தேர்வு 2026 மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள (18.06.2026 வரை) இறுதி வாய்ப்பு - அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-06-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:44 குற்றங்கூறாமை
குறள் எண்:431
குறள்:
பொருள்:
செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும் .
பழமொழி :
Diamond cuts diamond
முள்ளை முள்ளால் எடு.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.
2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.
பொன்மொழி :
"புத்தகங்கள் அறிவின் பொக்கிஷப் பெட்டகங்கள்."
Thought for the Day :
Knowledge is a treasure that no one can take away from you.
பொது அறிவு :
1. உலக சிட்டுக்குருவிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? .
மார்ச் 20.
2. 133 அடியில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட ஆண்டு எது?
2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
English words :
Maintain – Preserve, பராமரி.
Conclude – Finish, முடிவுக்கு வா.
NMMS :
ஒரு வட்டத்தின் ஆரம் இருமடங்கானால் அதன் பரப்பு எத்தனை மடங்காகும்??
விடை : நான்கு மடங்காகும்
புவியியலும் சுற்றுசூழலும் :
அரசியலமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் மிக உயர்ந்த சட்டமாகும். ஒரு நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும், அரசாங்கத்தின் அதிகாரங்கள் என்ன, மக்களின் உரிமைகள் என்ன என்பவற்றை நிர்ணயிக்கும் அடிப்படை சட்டமே அரசியலமைப்பு ஆகும்.
மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.
1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.
பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.
பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கக்கன் அவர்களின் பிறந்தநாள்
பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார்.
நீதிக்கதை
ஒரு காட்டில் ஒரு நரி வாழ்ந்து வந்தது. அது எப்போதும் எந்த வேலையையும் தாமதமாகச் செய்தது. உணவு தேடுவதற்குக் கூட நேரம் கழித்து கிளம்பும்.
அதே காட்டில் ஒரு அணில் இருந்தது. அது தினமும் அதிகாலையில் எழுந்து உணவைச் சேகரித்து வைத்துக்கொள்ளும்.
ஒருநாள் காட்டில் பலத்த மழை பெய்தது. எல்லா விலங்குகளும் தங்கள் இருப்பிடங்களில் இருந்தன. அணில் முன்பே சேகரித்த உணவை வைத்து நிம்மதியாக இருந்தது. ஆனால் நரி உணவு இல்லாமல் பசியால் தவித்தது.
அப்போது அணில், “நேரத்தை மதித்து வேலை செய்தால் எந்த கஷ்டமும் வராது” என்று கூறி, தன்னிடம் இருந்த உணவை நரியுடன் பகிர்ந்து கொண்டது.
அன்றிலிருந்து நரி தாமதத்தை விட்டுவிட்டு, நேரத்திற்கு வேலை செய்யத் தொடங்கியது.
நீதி: நேரத்தை மதிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.⏰🏆 🌟⭐⭐
🗒️AI .ஆல் நேர்மை, ஒழுக்கத்தை கற்றுத் தர முடியாது - சென்னை ஐகோர்ட்டு கருத்து.
🗒️இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி கடந்த நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடி - புதிய சாதனை. பாதுகாப்புத் துறை பெருமிதம் .
🗒️கச்சா எண்ணெய் விலை குறையும்: பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.
*விளையாட்டு்ச் செய்திகள்*
🏀உலகக் கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணிக்காக விளையாடிய இந்தியர் 27 வயது சர்பிரீத் சிங் .
🏀 பெர்லின் ஓபன் டென்னிஸ்: கம்பேக் போட்டியில் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி.
Today's Headlines
🗒️ AI cannot teach honesty and morality, observes the Madras High Court.
🗒️ India’s defence production reached ₹1.78 lakh crore in the last financial year, setting a new record, says the Defence Ministry.
🗒️ Crude oil prices will come down, said U.S. President Donald Trump during his meeting with Indian Prime Minister Narendra Modi.
Sports News
🏀 FIFA World Cup Football: 27-year-old Indian-origin player Sarpreet Singh represented the New Zealand national team.
🏀 Berlin Open Tennis: Serena Williams suffered a shock defeat in her comeback match.
பழைய ஓய்வூதியத் திட்டம் அரசுக்கு செலவைக் குறைக்குமா.?
Will the Old Pension Scheme reduce costs for the government?
👍👍👍👍👍👍👍👍👍
*_கேள்வி:_*
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும், இதர ஓய்வூதியத் திட்டத்திற்கும் அடிப்படையான வேறுபாடு என்ன.?
*_பதில்:_*
ஓய்வூதியத்திற்காக ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டமே பழைய ஓய்வூதியத் திட்டம்.
இதர ஓய்வூதியத் திட்டங்களான,
புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS),
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS),
உத்திரவாத ஓய்வூதியத் திட்டம் (GPS),
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS),
தமிழ்நாடு அரசு உறுதியளிக்கும் ஓய்வூதியத் திட்டம் (TAPS ))
போன்ற இதர திட்டங்கள் அனைத்திலும் ஊழியர்களிடம் சந்தா பிடிக்கப்படும்.
நாம் கேட்பது சந்தா பிடிக்காத பழைய ஓய்வூதியத் திட்டமே.!
👍👍👍👍👍👍👍👍👍
*_கேள்வி:_*
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய ராஜஸ்தான், ஜார்கண்ட் சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சந்தித்த சவால்கள் என்ன.?
*_பதில்:_*
புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்திய தேதி முதல் ரத்து செய்த தேதி வரை பிடித்தம் செய்த பங்கீட்டுத் தொகையை
மேற்கண்ட நான்கு மாநிலங்களும் ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையத்தில் (PFRDA) செலுத்தின.
NPS..ஐ ரத்து செய்து OPS திட்டத்தை அமல்படுத்திய பின்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செலுத்திய பணத்தை
( 10% + 10% )திருப்பித் தர PFRDA மறுத்து விட்டது.
இன்று வரை திருப்பித் தர வில்லை.
இருப்பினும் சம்பந்தபட்ட மாநில அரசுகள் கொள்கை ரீதியாக OPS திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.
👍👍👍👍👍👍👍👍👍
*_கேள்வி:_*
CPS திட்டத்தை ரத்து செய்தால் தமிழக அரசும் மேற்கண்ட பிரச்சனையை சந்திக்க வேண்டுமா.?
*_பதில்:_*
அப்படி ஒரு பிரச்சனையே எழாது.
தமிழக அரசு PFRDA வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாததால்
CPS திட்டத்தில் பிடித்தம் செய்த பங்கீட்டுத் தொகையை
( 10% + 10% ) PFRDA வில் செலுத்தவில்லை.
CPS ல் பிடித்தம் செய்யப்பட்ட
ரூ. 1,10,000 கோடி தமிழக அரசிடமே உள்ளது.
👍👍👍.👍👍👍👍👍👍
*_கேள்வி:_*
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதால், தமிழக அரசுக்கு நிதிச் சுமை குறையுமா.?
எப்படி.?
*_பதில்:_*
OPS திட்டத்தை தமிழக அரசு அமுல்படுத்தினால் CPS கணக்கில் உள்ள Rs.1,10,000 கோடி ரூபாயில்
CPS திட்டத்தில் தமிழக அரசு செலுத்திய 10% பங்கீடான 55 ஆயிரம் கோடி ரூபாய் அரசு கணக்கில் திருப்பி வரவு வைக்கப்படும்.
OPS திட்டத்தை அமல்படுத்துவதால் CPS திட்டத்தில் ஒரு வருடம் அரசு செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகை ரூ.6240 கோடி செலவு தவிர்க்கப்படும்.
தொடர்ந்து மாதாந்திர தொடர் செலவுகளும் தவிர்க்கப்படும்.
CPS திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பங்கீட்டுத் தொகை (10% + 10% ) LIC யில் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. முதலீடு செய்த பணத்திற்கு LIC தமிழக அரசுக்கு 6.5% வட்டி வழங்குகிறது.
6.5 % வட்டியை பெற்றுக் கொண்ட தமிழக அரசு One Time Settlement ல் அரசு ஊழியர்களுக்கு 7.1% வட்டி வழங்குகிறது.
கிடைத்த வட்டியை விட 0.6% கூடுதலாக தமிழக அரசு செலவு செய்து வருகிறது.
OPS திட்டத்தை அமுல்படுத்தினால் தமிழக அரசுக்கு கூடுதலாக வழங்கும் வட்டி 0.6% மிச்சமாகும்,
செலவும் குறையும்.
தொடர் செலவுகளும் குறையும்.
CPS திட்டத்தில் அரசு செலுத்தும் 10% பங்கு தொகை என்பது
ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு,
ஆண்டு ஊதிய உயர்வு,
தேர்வு நிலை,
சிறப்பு நிலைக்கு இரண்டு ஊதிய உயர்வு வழங்குவதால் 10% அரசின் பங்கீட்டுத் தொகை உயர்ந்து கொண்டே இருக்கும்.
அடுத்த ஊதிய மாற்றம் வரும் போது குறைந்தபட்ச ஊதியம் இரட்டிப்பாக உயரும்.
அரசு பங்களிப்பு தொகையும் இரட்டிப்பாக உயரும்.
வரும் 10 ஆண்டுகளில் அரசின் 10% பங்கீட்டுத்தொகை எவ்வளவு உயரும் என்பதை கணிக்கக் கூட முடியாது.
👍👍👍👍👍👍👍👍👍
*_கேள்வி:_*
ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தியது ஏன்.?
*_பதில்:_*
ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்துவதன் மூலம்,
ஓய்வூதியப் பலன்களுக்கு தமிழக அரசு செய்ய வேண்டிய செலவை கொரானா காலத்தில் ஓராண்டு தள்ளி போடுவதற்காக தான் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆகவும், பின்னர் 59 லிருந்து 60 ஆகவும் உயர்த்தப்பட்டது.
அதே Formula வில் CPS திட்டத்தை ரத்து செய்து OPS திட்டத்தை அமுல்படுத்தினால் தமிழக அரசு ஒரு அரசு ஊழியருக்கு ஓய்வூதியத்திற்காக செய்ய வேண்டிய செலவு 30 ஆண்டுகள் தள்ளிப் போகும்.
தற்போது CPS திட்டத்தில் உள்ள 624140 பேர்களும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறப் போவதில்லை.
மேலும், 60 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே ஓய்வு பெறுவார்கள்.
ஓய்வு பெற்ற பின்புதான் OPS திட்டப்படி அரசு நிதி வழங்கும்.
தற்போது அரசுப் பணியில் உள்ளவர்கள் 30 ஆண்டு பணிபுரிவார்கள்.
இன்னும் 30 ஆண்டுகள் கழித்து தான் ஓய்வு பெறுவார்கள்.
30 ஆண்டுகளுக்கு பின்னால் ஓய்வு பெறும் ஊழியருக்கு CPS திட்டம்தான் என்றால் மாதாமாதம் தமிழக அரசு பங்கீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
அதே நேரம் OPS திட்டம் என்றால் தற்போது 30 வயதில் அரசுப் பணி செய்யும் ஊழியர் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து தான் OPS திட்டப்படி தமிழக அரசு ஓய்வூதியத்திற்கு நிதி வழங்கும்.
ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தியதால் அரசுக்கு செலவு இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போகும் என்றால்,
CPS..ஐ ரத்து செய்து OPS திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் தமிழக அரசின் செலவு 25 லிருந்து 30 ஆண்டுகள் தள்ளிப் போகும் என்பது தான் உண்மை.
*_பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதே, தமிழக அரசுக்கு பெரும் நிதிச் செலவைக் குறைத்து லாபம் தரும் பாதுகாப்பான திட்டமாகும்.!_*
Good afternoon, all. Kindly note today's session and its timings
Click here for SPECIAL TET PAPER 1 ENGLISH SESSION 2
https://www.youtube.com/live/sP-JsNF0JLQ?si=qK4m-mDDq1g5Rwwc
Click here for SPECIAL TET PAPER 2 ENGLISH SESSION 2
https://www.youtube.com/live/2le1FjKVOn8?si=MN9wLgzbv7VRadHW
The session starts today, 17.06.26, at 06.30 PM.
📢✨ *முக்கிய அறிவிப்பு* ✨📢
🚫📱 டெலிகிராம் செயலி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இனி SCERT Special TET சேவைகள் 📅 17.06.26 முதல், இந்த வாட்ஸ் வாட்ஸ்அப் சேனல் (SRC Channel) வழியாக 🎯 சிறப்பு TET Link அனுப்பப்படும். 🔗✨
Click link to join SRC Channel:
https://whatsapp.com/channel/0029VbCcBG8HgZWVwDltOv1Y
Share it with all.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்
தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்
மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை 05.30 மணியளவில் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையினை (WHITE PAPER ON THE FISCAL MANAGEMENT OF TAMIL NADU) வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசின் கடன் ரூ.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்வு.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய், வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது - அமைச்சர் மரிய வில்சன்.
தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபர் மீதான கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, 1,28,934 ரூபாயாக உள்ளது.
வருவாய் பற்றாக்குறை கோவிட் காலத்தை விட கடும் உச்சம். முந்தைய அரசு முதலீட்டுக்கு அல்லாமல் அன்றாட செலவுக்கு கடன் வாங்கியுள்ளது.
அரசு, வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்துகிறது. கனிம வளத்துறையில் நடந்த ஊழல், வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம்.
அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டின் GST குறைவாக உள்ளது.
ஒன்றிய அரசிடம் இருந்து நிதி பகிர்வு சரியாக கிடைக்கவில்லை.
மாநில GDPயில் மொத்த வருவாய் அளவு 10%ல் இருந்து 8.32% ஆக சரிவு.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான தொகையால் கூடுதல் செலவு - அமைச்சர் மரிய வில்சன்.
2021-26 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த ஐந்தாண்டு கால கடனானது, தமிழகம் சுதந்திரத்துக்கு பின் 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட அதிகம்.
வட்டி, சம்பளம், ஓய்வூதியத்திற்காக மொத்த நிதியில் 64% செலவு. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி.
மாநிலத்தின் திட்டங்களுக்கு 13% மட்டுமே செலவு செய்யப்படுகிறது.
மின்வாரிய குழுமத்திற்கு ரூ.2,47,130 கோடி கடன். போக்குவரத்து கழகத்திற்கு மொத்த இழப்பு ரூ.72,667 கோடி
DDO Code அறியும் வழிமுறை
DDO Code கண்டறிதல்
➡️ Download your Payslip
▪️Token Number என்ற இடத்தில் உள்ள முதல் 8 இலக்க எண் உங்களுக்கான DDO CODE ஆகும்.
▪️ Teachers' transfer-க்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2026 - 2027 விண்ணப்பம் குறித்த தகவல்
Teachers' Transfer Counselling
2026-2027 ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் அளிக்க உள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட 8 இலக்க Emis ID மூலம் ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்திட வேண்டிய தேதி 15-06-2026 முதல் 22-06-2026 முடிய என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!
ஒருவர் ஒன்றியத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய மூன்றுக்கும் ஒரு முறையில் மூன்று கட்டத்திலும் Tick கொடுத்து பதிவு செய்தால் போதும். ஒவ்வொரு கலந்தாய்வுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் பதிவு செய்திட வேண்டியது இல்லை.
BEO Approve செய்தவுடன் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக 3 காப்பிகள் பிரிண்ட் எடுத்து கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்
நன்றி
தமிழ்நாடு அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை - நிதியமைச்சர் வெளியீடு
White Paper on the Financial Status of the Tamil Nadu Government – Released by the Finance Minister
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
8th Standard Public Examination for Private Candidates – August 2026 – Press Release
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர்தான் தனித்தேர்வராக எழுத முடியும்.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வராக எழுத எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பிற்குள் இடை நின்றவர்கள் மாற்றுச் சான்றிதழ் இருப்பின்
எவ்வித கல்வி தகுதியும் இல்லாதவர்கள் Birth Certificate கொண்டு 8ஆம் வகுப்பு தேர்வு எழுதலாம் .
தேவைப்படுவோர்க்கு பகிர்க
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -600 006
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு - ஆகஸ்ட்-2026
செய்திக்குறிப்பு
1. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல்
ஆகஸ்ட் 2026-ல் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.08.2026 அன்று 12 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 01.07.2026 பிற்பகல் முதல் 08.07.2026 வரை (ஞாயிற்றுக்கிழமை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Service Centres) நேரில் சென்று online மூலம் பதிவு செய்து கொள்ளலாம். நீங்கலாக)
2. தேர்வுக் கட்டண விவரம்
விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70/-மொத்தம் ரூ.195/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 09.07.2026 மற்றும் 10.07.2026 ஆகிய நாட்களில் (இரண்டு நாட்கள்) தேர்வு கட்டணத்துடன் தட்கல் விண்ணப்ப கட்டணத்தொகையான ரூ.500/- ஐ கூடுதலாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
3. விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை
> முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் / பள்ளி பதிவுத்தாள் நகல் பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். /
> ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்
ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின்/சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் ரூ.42/- க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
4. ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5. இத்தேர்விற்கான விரிவான தகவல்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இணைப்பு : தேர்வு கால அட்டவணை
ஒம்/-
இயக்குநர்
இடம் : சென்னை-600 006
நாள் : 12.06.2026
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-06-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
அதிகாரம்:43.அறிவுடைமை
குறள் எண்:430
குறள்:
பொருள்:
ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.
பழமொழி :
"LDelay of justice is injustice.
தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.
2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.
பொன்மொழி :
"கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம்."
Thought for the Day :
"Education is not just about earning a living, but about learning how to live."
பொது அறிவு :
1. இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருது எது?
ஞானபீட விருது.
2. 2025 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது யாருக்கு வழங்கப்பட்டது?
கவிஞர் ஆர். வைரமுத்து.
English words :
Acquire – Obtain, பெறு.
Expand – Enlarge, விரிவாக்கு.
NMMS :
பின்வருவனவற்றுள் எது சரி??
(1) 0.01=1%
(2) 0.1=1%
(3) 0.01 >1%
(4) 0.01 <1%
Percent means "per hundred."
So:
Answer: (1) 0.01 = 1% ✅
விடை: 0.01=1%
புவியியலும் சுற்றுசூழலும் :
"நீர் இருந்தால் உயிர் இருக்கும்.""எனவே நீர் வளம் பெருக ""மரம் நடுவோம்; பூமியைக் காப்போம்."
லியாண்டர் பயஸ் (Bengali: লিয়েন্ডার পেজ) (பி. ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.
நீதிக்கதை
நேர்மையான சிறுவன்
ஒரு கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் உண்மையே பேசுவான்.
ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு பணப்பையை கண்டான். அதில் நிறைய பணமும் சில முக்கிய ஆவணங்களும் இருந்தன.
அருண் அந்தப் பணப்பையை எடுத்துக்கொண்டு, அதில் இருந்த முகவரியைப் பார்த்து அதன் உரிமையாளரின் வீட்டிற்குச் சென்றான்.
பணப்பையை இழந்தவர் மிகவும் கவலையில் இருந்தார். அருண் பணப்பையை ஒப்படைத்தவுடன் அவர் மகிழ்ச்சியடைந்து,
"மகனே! இதில் இருந்த பணத்தில் சிறிது உனக்குப் பரிசாக எடுத்துக்கொள்," என்றார்.
அதற்கு அருண், "இல்லை ஐயா. இது உங்கள் பொருள். நான் செய்ய வேண்டிய கடமையை மட்டுமே செய்தேன்," என்றான்.
அருணின் நேர்மையைப் பார்த்து அந்த மனிதர் மிகவும் பாராட்டினார். இந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவியது. அனைவரும் அருணை மதிக்கத் தொடங்கினர்.
நீதி:
நேர்மை என்பது பணத்தால் வாங்க முடியாத உயர்ந்த பண்பு. உண்மை பேசுபவரும் நேர்மையாக நடப்பவரும் அனைவரின் மதிப்பையும் பெறுவார்கள்.
பொன்மொழி: "நேர்மை சிறந்த செல்வம்."
🗒️தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை -தமிழக அரசு சார்பில் தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
🗒️ மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இனி இருமல் மருந்து வாங்க முடியாது,என்ற முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது .
🗒️மேற்காசியப் போரை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம், ஜூன்.19ம் தேதியன்று சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாக உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
*விளையாட்டுச் செய்திகள்*
🏀 நேஷன்ஸ் கோப்பை ஆக்கி - ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி.
Today's Headlines
🗒️ Tamil Nadu Financial Status Report – On behalf of the Tamil Nadu Government, Finance Minister Mari Wilson released a White Paper on the financial status of Tamil Nadu at the State Secretariat.
🗒️ No More Cough Medicine Without Prescription – The Central Government has announced that cough medicines can no longer be purchased without a doctor's prescription.
🗒️ The country's Home Ministry has announced that the peace agreement between the United States and Iran, aimed at ending the conflict in West Asia, is set to be signed in Switzerland on June 19.
Sports News
🏀 Nations Cup Hockey – The Indian Women's Hockey Team advanced to the semifinals after defeating Japan.
🎾 Queen's Club Tennis – At the Queen's Club Tennis Championships in London, the pair led by Yuki Bhambri secured a victory.
+2 பொதுத்தேர்வு 2026 மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள (18.06.2026 வரை) இறுதி வாய்ப்பு - அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம் >>...