கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொங்கல் பரிசாக ரூ.3000/- ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவு



 பொங்கல் பரிசாக ரூ.3000/- ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவு


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ. 3000/- ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.


பொங்கல் பரிசு - செய்தி வெளியீடு எண்: 021, நாள் : 04-01-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-01-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-01-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 05.01.2026

கிழமை:- திங்கள்


 

திருக்குறள்: 


பால்:- அறத்துப்பால்

இயல்:- இல்லறவியல்

அதிகாரம்:- அன்புடைமை


*குறள் 73:*


அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. 

                    

*விளக்க உரை:*


அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.


*பழமொழி :*


Hardwork is the root of success.      


 கடின உழைப்பே வெற்றியின் வேர்.


*இரண்டொழுக்க பண்புகள் :*



1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.


2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.


*பொன்மொழி :*


புத்தாண்டில் ஒரு நாள் என்பது 365 பக்க புத்தகத்தில் எழுதப்படாத ஒரு பக்கமாகும். அதில் நல்லவற்றை நன்றாக எழுதுங்கள்.- பிராட் பைஸ்லி


*பொது அறிவு :* 


01.இந்தியாவில் முதன்மையான முதலை பூங்கா எங்குள்ளது?


    தமிழ்நாடு -சென்னை 


    Tamilnadu - Chennai


02.இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?


திரு.தாதாபாய் நௌரோஜி


Dadabhai Naoroji


*English words :*


New horizons - new beginnings புதிய தொடக்கம் 


confetti - small pieces of colour papers விழாக்களில் தூவப்படும் சிறிய வண்ணத் தாள்கள்


*தமிழ் இலக்கணம்:*


 பிற மொழி சொற்களைக் கண்டு பிடிப்பது எப்படி?

1. தனிக் குறில் எழுத்தை அடுத்து "ர்" வரும் சொற்கள் எல்லாமே பிறமொழிச் சொற்களே.


எ. கா –1. *_தர்மம்_* செய்ய முயலுங்கள்


 தூய தமிழில் - *_அறம்_* செய்ய முயலுங்கள்


2. *_கர்ம_* வீரர் காமராசர்

  

 தூய தமிழில்    *_செயல்_* வீரர் காமராசர்


3. இதற்கு என்ன *_அர்த்தம்_* தெரியுமா?

     


 தூய தமிழில் - இதற்கு என்ன *_பொருள்_* தெரியுமா?


      தொடரும்


*அறிவியல் களஞ்சியம் :*


 நாசா வல்லுநர்களின் கூற்றுப்படி, நமது பால்வெளி மண்டலத்தில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் வரை எங்கும் இருக்க முடியும்.  2015 ஆம் ஆண்டில் வெளியிப்பட்ட நேச்சர் பத்திரிகை ஆய்வு அறிக்கையின் படி உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 3.04 டிரில்லியன் மரங்கள் உள்ளன.


*நீதிக்கதை*


 *மூன்று தோசைகள்*



ஒரு ஊரில் சிறிய கிராமத்தில் ஒரு சிறிய உணவு விடுதி இருந்தது. அங்குள்ள மக்கள் தங்கள் அவசரத்திற்கு அங்கு சென்று உணவு வாங்குவதோ சாப்பிட்டுக் கொள்வதோ பழக்கம். இந்த உணவு விடுதியாளர் தனது உணவு விடுதியை மிகவும் சுத்தமாக வைத்திருந்தார்.  எனவே அந்த வழியாக பெரு நகரத்திற்கு செல்லுபவர்கள்  அங்கு வந்து உணவு உண்டு விட்டு செல்வது பழக்கம். அங்கு ஒரு அருமையான தோசை மாஸ்டர் இருந்தார் அவர் மிகவும் ருசியான தோசை சுடுவதில் மிகவும் வல்லவர். மிகவும் பிரசித்தி பெற்றவர். அவர் எண்ணும் விதமாய்  தோசைகள் விதம் விதமாக செய்வார். அவர் அப்படியாக  செய்வதற்கு ஏற்றார் போல் தோசைகள் தங்களை விட்டுக் கொடுக்கும். ஒரு நாள் தோசைகளை அவர் ஊற்றும் பொழுது இரு தோசைகளுக்கு ஒரு எண்ணம் வந்தது. இவர் சொல்படியே நாம் கேட்க வேண்டுமா? நாம் இஷ்டப்படி சொல்லி அவரை சுடச் சொல்லுவோம் என்று சொல்ல ஆரம்பித்தது.   ஒரு தோசை மட்டும் இல்லை நாம் அப்படி செய்யக்கூடாது மாஸ்டருக்கு தான் தெரியும் நம்மை எப்படி உருவாக்க வேண்டும் என்று எனவே நாம் இப்படியாக செய்யக்கூடாது. அவர் செய்வதற்கு நாம் விட்டுக் கொடுத்து காத்திருக்க வேண்டும் என்று சொல்லியது. ஆனால் மற்ற தோசை மாவுகள் அப்படியாக செய்வதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மாஸ்டர் முதல்  தோசையை ஊற்றினார். முதல் தோசை அவர் திருப்பி போடும் முன்னாலே அவரைப் பார்த்து கத்த ஆரம்பித்தது. போதும் என்னை சுட்டது எடுத்துக் கொண்டு அங்கு காத்திருப்பவருக்கு கொடுங்கள் என்று சொல்லியது. இவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் ஆனால் தோசை கேட்க வழியில்லை எனவே அந்த தோசையை எடுத்துக்கொண்டு அங்கு சென்ற பொழுது அவர் அதைப் பார்த்துவிட்டு என்ன வேகாத தோசை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கூறி கோபத்தில் அதை எடுத்துக் கொண்டு குப்பை கூடையில் போட்டு விட்டார். அதற்குள்ளாக அவர் இரண்டாவது தோசையை ஊற்றி இருந்தார். அதை திருப்பி போடுவதற்கு முன்பாக அதிலே சில காய்கறிகளை சில பொருட்களை போடுவதற்கு அவர் யோசித்தார். அப்பொழுது அந்த இரண்டாவது தோசை “என் மீது எதுவும் போட வேண்டாம் இப்படியே என்னைக் கொண்டு கொடுங்கள் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு செய்யாதீர்கள் என்று சொன்னது”   அவர் இதனிடமும் சொல்லிப் பார்த்தார் “உன்னை நன்கு உருவாக்குவேன்” என்று ஆனால் அது அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எனவே அந்த சாதா தோசையை கொண்டு போய் சாப்பிட வந்தவரிடம்  கொடுத்தார் அவர் அதற்கு சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டுவிட்டு பரவாயில்லை என்றார். மூன்றாவது தோசையை  இவர் மெதுவாக ஊற்றி அதை சுற்றி நெய் ஊற்றி குடமிளகாய் வெங்காயம் கேரட் போன்ற சத்துள்ள பொருட்களை அதன் மீது துருவி போட்டு அதன் பின்பு நன்கு இரண்டு பக்கமும் வெந்த பிறகு அதை கொண்டு போய் சாப்பிடுவரிடம் கொடுத்தார் அவர் முகம் மலர்ந்து இதுதான் மிகச் சிறந்த தோசை என்று சொல்லி அவர் கொடுக்க வேண்டிய அளவிற்கு மேலாகவே பணம் கொடுத்து அந்த தோசையை சாப்பிட்டு விட்டு சென்றார் .மாணவர்களே இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது


1. நம் இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் 


2. இரண்டாவது நாம் நம்முடைய மதிப்பை கூட்ட வேண்டும் என்றால் வாழ்வில் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.


*இன்றைய செய்திகள்*


05.01.2026


⭐தெற்கு ரயில்வே காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. (2025) கடந்த மார்ச் முதல் நவம்பர் வரையில் 2.424 கோடி அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.17.87 கோடி சேமிக்கப்பட்டு உள்ளது. 


⭐தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கியூஆர் குறியீடு (QR) அடங்கிய ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


⭐ இந்தியாவை அனைத்து பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைக்கும் யுக்தியில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் ஆகிய நாடுகளில் சீனா தனது இராணுவத் தளங்களை நிறுவ திட்டமிட்டு அனு ஆயுதங்களை குவித்து வருகிறது.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀டி20 உலகக் கோப்பை: எங்களது போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்துங்கள்- ஐசிசிக்கு வங்கதேசம் வேண்டுகோள்

வங்கதேச வீரர்கள் இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.


*Today's Headlines*


⭐ Southern Railway is actively involved in wind power generation projects. (2025) From March to November last year, 2.424 crore units of electricity have been generated. This has saved Rs. 17.87 crore.


⭐The Tamilnadu government has ordered that stickers containing QR codes must be pasted in all drug stores in Tamil Nadu.


⭐ China is planning to establish military bases in Sri Lanka, Pakistan, Bangladesh, and Myanmar, and is amassing nuclear weapons, in a strategy to surround India from all sides.


 *SPORTS NEWS* 


🏀T20 World Cup: Bangladesh appeals to ICC to hold  matches outside India There is growing opposition to Bangladesh players not playing in India.



Tamil Nadu Assured Pension Scheme (TAPS) குறித்து அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய குறைபாடுகள் / வரம்புகள்


தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் - Tamil Nadu Assured Pension Scheme (TAPS) குறித்து அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய குறைபாடுகள் / வரம்புகள் 

கீழே நேர்மையாகவும் நடைமுறையாகவும் பட்டியலிடப்படுகின்றன.


OPS Vs TAPS - ஓய்வூதியர் மீது ஏற்படும் நிஜமான தாக்கம் (Financial Legal)


Tamil Nadu Assured Pension Scheme (TAPS) குறித்து அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய குறைபாடுகள் / வரம்புகள் கீழே நேர்மையாகவும் நடைமுறையாகவும் பட்டியலிடப்படுகின்றன. (இவை OPS-ஐ ஒப்பீட்டுத் தரமாக கொண்டு விளக்கப்படுகின்றன.)

1. OPS போல முழுமையான “Non-Contributory” அல்ல


TAPS:

ஊழியர் பங்களிப்பு தொடரும்

அரசு பங்களிப்பும் தொடரும்

➡️ “உறுதியான ஓய்வூதியம் இருந்தாலும், சம்பளத்தில் பிடித்தம் நிறுத்தப்படாது”



2. 100% OPS சமமான ஓய்வூதியம் இல்லை

OPS-ல்:

கடைசி சம்பளத்தின் 50% + DA

TAPS-ல்:

50% Basic Pay மட்டும் உறுதி

DA சமமாக வழங்கப்படுமா என்பது எதிர்கால அரசாணை சார்ந்தது

➡️ DA பாதுகாப்பு OPS அளவுக்கு உறுதி இல்லை (தமிழ்நாடு அரசு செய்தி வெளியீட்டில் ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது)



3. சேவை ஆண்டுகளுக்கு கடும் நிபந்தனைகள்

குறைந்தபட்ச சேவை: 10 ஆண்டுகள்

முழு பலன் பெற: 20 / 25 ஆண்டுகள்

➡️ இடைநிறுத்த சேவை, VRS, medical invalidation இருந்தால் முழு பலன் குறித்து அரசாணையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




4. CPS Corpus முழு சுதந்திரம் இல்லாமல் போகும்

CPS-ல்:

corpus உங்கள் சொத்து

முதலீட்டு மாற்றம் / annuity தேர்வு உண்டு

TAPS-ல்:

corpus அரசு கட்டுப்பாட்டுக்குள் வரும்

lump sum சுதந்திரம் குறையும்

➡️ “உங்கள் பணம், ஆனால் உங்கள் கட்டுப்பாடு இல்லை” என்ற நிலை



5. எதிர்கால விதிமுறை மாற்ற அபாயம்

TAPS ஒரு புதிய திட்டம்

OPS போல 50+ ஆண்டுகள் நிலைத்த சட்டப் பாதுகாப்பு இல்லை ➡️ வருங்கால அரசுகள் விதிமுறைகளை மாற்ற வாய்ப்பு உள்ளது.



6. அதிக சம்பள உயர்வு இருந்தால் OPS அளவுக்கு பயன் இல்லை

OPS-ல்:

கடைசி சம்பளம் உயர்ந்தால் ஓய்வூதியமும் அதிகம்

TAPS-ல்:

ceiling / cap வர வாய்ப்பு உள்ளது (அரசாணையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது)

➡️ Senior officers / high pay matrix உள்ளவர்களுக்கு வரம்பு வரலாம்.


7. மரணத்திற்குப் பின் குடும்பத்திற்கான முழு OPS பாதுகாப்பு இல்லை

OPS-ல்:

Family pension + DA + gratuity மிக தெளிவு

TAPS-ல்:

Family pension உறுதி என்றாலும்

விகிதம், கால அளவு முழுமையாக அறிவிக்கப்படவில்லை (அரசாணையில் குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது)


8. நீதிமன்ற சவால் / சட்டத் தெளிவின்மை

CPS → OPS → TAPS

தொடர்ச்சியான மாற்றங்கள் ➡️ எதிர்காலத்தில் வழக்குகள் வந்தால் நடைமுறை தாமதம் ஏற்படலாம்


9. “Choice Option” தெளிவாக அறிவிக்கப்படவில்லை

CPS உறுப்பினர்கள்:

கட்டாயமாக TAPS-க்கு மாற வேண்டுமா?

அல்லது option வழங்கப்படுமா? ➡️ தேர்வு உரிமை பற்றிய தெளிவான அரசாணை இன்னும் இல்லை


10. பணவீக்கம் (Inflation) எதிர்ப்பு OPS அளவுக்கு இல்லை

OPS-ல்:

DA மூலம் பணவீக்கம் கட்டுப்பாடு

TAPS-ல்:

DA இணைப்பு இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை


நேர்மையான முடிவு (Professional Verdict)

TAPS:

CPS-க்கு மிகவும் மேம்பட்டது

OPS-க்கு முழுமையான மாற்று அல்ல


👉 “CPS-இன் அபாயம் குறைத்து, OPS-இன் பாதுகாப்பை ஓரளவு கொண்டுவரும் இடைநிலைத் திட்டம்” என மதிப்பிடப்படுகிறது 

CPS திட்டத்தை விட, TAPS திட்டம் பலன் அளிக்கக் கூடியது


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை CPS விட, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் TAPS பலன் அளிக்கக் கூடியது - Whatsapp பகிர்வு


✍️✍️✍️✍️✍️✍️✍️

அறிவார்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு

வணக்கம்🙏


தமிழகத்தில் இரண்டு மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.


அரசு ஊழியர்கள், ஆசிரியரகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் சுமார் ஐம்பது இலட்சம் ஓட்டுகள் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய பென்சன் திட்டம் வழங்கப்டாமல், ஒரு உத்திரவாதமான பென்சன் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


நம்முடைய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் பலர் யாரோ போட்ட பதிவை, அவர்கள் என்ன நோக்கத்திற்காக பதிவிடுகிறார்கள் என்று கூட  தெரியாமல் அதையே, வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


பழைய பென்சன் திட்டம் வழங்கப்படவில்லை என்பது வருத்தம்தான்.


ஆனால், போராட்டத்தின் விளைவாக ஏற்கனவே, பெற்றுக் கொண்டிருந்த, பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தை காட்டிலும், உத்திரவாத பென்சன் திட்டம் மேலானது.



கீழ்க்கண்ட உதாரணங்கள் மூலம் இதனை நிரூபிக்க முடியும்.


இருபது ஆண்டுகள்  பணி முடித்த *X என்ற* கல்லூரி ஆசிரியர் ஓய்வு பெறும் போது அவர் வாங்கும் மாத அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.2,40, 000 என எடுத்துக்கொண்டால்,

பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் அரசின் பங்கு மற்றும் ஆசிரியரின் பங்கு என மொத்தம் *70, 00,000 இருக்க* வாய்ப்புள்ளது.


இந்த 70,00,000 அவர் பெற்றுக்கொள்ளலாம். 


பணிக்கொடை எதுவும் கிடையாது.


இந்த எழுபது இலட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதிகம்பட்சம், ஆண்டுக்கு 12% வட்டி என கணக்கிட்டால்,


மாதத்திற்கு ரூ. 70,000 கிடைக்கலாம்.


 10 ஆண்டுகள் கழித்தும்  மாதம் 70,000 தான் கிடைக்கும்.


பத்து ஆண்டுகளில் இதன் சராசரி உண்மை மதிப்பு  மாதம் ரூ. 56,000


பத்து ஆண்டுகள் பெறும் உண்மை மதிப்பு

56000×120= 67,20,000


ஆனால் இன்றைக்கு 70,000 என்பது,  ஆண்டுக்கு 6% பணவீக்கம் என வைத்துக் கொண்டாலும் பத்து ஆண்டுகள் கழித்து இன்றைய மதிப்பிற்கு ரூ. 39,000 ஆக சுருங்கி இருக்கும்.


 உங்களுடைய வைப்புத்தொகையின் மதிப்பும் 39,00,000 ஆக குறைந்திருக்கும்.


ஆக பத்து ஆண்டுகளில் சராசரி உண்மை  மதிப்பு

நீங்கள் பெற்ற வட்டி

67,20,000+ பத்து ஆண்டுகள் கழித்து உங்கள் வைப்புத் தொகையின் உண்மை மதிப்பு 39,00,000=  *1.06.20,000.* 


இதுவே, தமிழ்நாடு உத்திரவாத ஓய்வூதியத் திட்டத்தை *Mr.Y* தேர்ந்தெடுத்தால், மாதம் ஒரு இலட்சம் பென்சன் கிடைக்கும்.


 அகவிலைப்படியும் உண்டு என்பதால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாத பென்சன் ரூ. 1,79,000 ஆக உயரும்.


இந்த பத்து ஆண்டுகளில் சராசரி மாத பென்சன் ரூ. 1,36,000.


அப்படியென்றால் இந்த பத்து ஆண்டில் பெறப்பட்டுள்ள பென்சன்

1,36,000×120=

1,63,20,000.


மேலும், உத்திரவாத பென்சன் திட்டத்தில், இவருக்கு 24,00,000 பணிக்கொடை கிடைக்கும்.


இந்த பணிக்கொடையினை ஆண்டுக்கு 12% கூட்டு வட்டி கண்க்கிட்டால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் தொகை  ரூ. 74,50,000




உத்திரவாத பென்சன்

திட்டத்தின் மூலம் Mr. Y வருமானம் . 1,63,20,000.+74,50,000= *2,37,70,000.* 


பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்

மூலம் Mr. X  பெறுவது *1,06,20,000* 



இதில் யார் புத்திசாலி X or Y?


இங்கே பத்து வருடம் ஏன் கணக்கிடப்படுகிறது என்றால், ஓய்வு பெற்று  குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் உயிரோடிருக்கு வாய்ப்பிருக்கிறது என்ற நிகழ்தகவின் அடிப்படையில்.


பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் பத்து ஆண்டிற்கு பிறகு, பணத்தின் மதிப்பு மீண்டும் குறையும்.


ஆனால் அதே நேரத்தில், பத்து ஆண்டு கழித்து இறந்தவருக்கு, அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவர் இணையர் உயிரோடு இருக்கும் வரை வழங்கப்படும்.


எனவே, இரண்டு திட்டத்தையும் ஒப்பீடு செய்தால், உத்திரவாத ஓய்வூதியத் திட்டமே சிறந்தது என்பது புலனாகும்.


இது கல்லூரி ஆசிரியருக்கு மட்டுமல்ல.


இதே, போன்ற கணக்கீட்டை எந்த ஆசிரியருக்கும், அரசு ஊழியருக்கும் கணக்கீட்டால், உத்திரவாத பென்சன் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை விட உயர்வானது என புரிய வரும்.



எதையும் யோசிக்காமல் புலனக்குழுக்களில் வரும் தகவல்களை படித்து, உணர்ச்சி வசப்பட்டு, நாமும் டென்சனாகி, மற்றரையும் டென்சனாக்காமல் சற்று அறிவுப்பூர்வமாக மேலே சொன்னவற்றை ஆராயுங்கள்.


முழு பென்சனுக்கான காலம் அரசின் ஓய்வூதிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்படாதலால், 25 ஆண்டுகள் என அனுமானிக்கப்பட்டுள்ளது.


இது முப்பது ஆண்டுகள் என கணக்கில் கொண்டால், உத்திரவாத பென்சன் திட்டத்தில் பெறும் தொகை மேலே கண்ட கணக்கீட்டின் படி 20,00,000 முதல் 25,00,000 வரை குறைய வாய்ப்புள்ளது.



தவறான தகவல்களை பதிவிடுபவர்களில் இரண்டு வகை.


ஒன்று,உண்மை தெரியாமல் பதிவிடுவது, forward செய்து.


இரண்டு, ஒரு சில அரசியல் கட்சிகளின் தகவல் தொழில் நுட்பக்குழுக்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புவது.


இறுதியாக உங்களின் சிந்தனைக்கு,


அரசின் வழக்கமான பங்களிப்பு தொகையாக ஆண்டுக்கு ரூ11,000 கோடியும், கூடுதலாக  

ஆண்டுக்கு ரூ13,000 கோடியும் ஒதுக்கப்படுகிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் 13,000 கோடி மூலம் கூடுதல் பலன்கள்தானே கிடைக்கும் என்பதைக்கூட நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையா?



THIRAN - Mark Entry குறித்த தகவல்கள்

  

 


Dear Team,


THIRAN – December (Half-Yearly Assessment) mark entry has been enabled in the school login. *The mark entry is opened now and it will be opened until 10.01.2026 (Saturday)*. Kindly inform the schools to complete the mark entry within this period.


THIRAN


Pass mark for Tamil, English and Maths : above 70% (as followed in Term I)


Class 6&7 : 43/60 

Class 8&9: 71/100


Usual Pass marks are followed for 

 * Science and Social Science .


Class 6 & 7: 21 out of 60

Class 8 & 9: 35 out of 100


For CWSN students mark as absent. Don't mark as 0




>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...


THIRAN – Half-Yearly Assessment mark entry will be open till 10.01.2025

 

 


Good morning to all


THIRAN – December (Half-Yearly Assessment) mark entry has been enabled in the school login. The mark entry will be open from 29.12.2025, to 10.01.2025 (Saturday). Kindly inform the schools to complete the mark entry within this period.




>>> பெண்களுக்கான சிறந்த வாசனை திரவியங்கள் பற்றிய விவரங்கள்...


THIRAN மதிப்பீடு - அரையாண்டுத் தேர்வு - டிசம்பர் 2025 - மாணவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள்

 


திறன் மதிப்பீடு - அரையாண்டுத் தேர்வு - டிசம்பர் 2025 - மாணவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள்


THIRAN Assessment - Half-Yearly Examination - December 2025 - Minimum marks for students to pass


💡திறன் ( THIRAN ) மாணவர்கள் அரையாண்டு தேர்வு மதிப்பெண் பதிவேற்றம் - குறிப்பு


📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் & கணிதம் ஆகிய பாடங்களில் 70% or 70% மேல் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே திறன் மாணவர்களில் இருந்து அடைவு பெறுதல் முடியும்.


📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் & சமூக அறிவியல் பாடங்களில் 35% or 35% மேல் மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.


அதாவது,

✳️ தமிழ், ஆங்கிலம் &  கணிதம்

* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 42 or 42 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும்.

* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 70 or 70 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும். 


✳️ அறிவியல் & சமூக அறிவியல்

* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 21 or 21 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 

* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 35 or 35 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.


நன்றி!



>>> மதிப்பெண் விவரம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Best Perfumes for Women

 


பெண்களுக்கான சிறந்த வாசனை திரவியங்கள் (Best Perfumes for Girls) பற்றிய விவரங்கள் இதோ:


தமிழ்நாட்டின் வெப்பமான தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு, அதிக நேரம் மணம் வீசும் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற சில சிறந்த தேர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


1. பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த தேர்வுகள் (Under ₹1000)


குறைந்த விலையில் நல்ல தரம் மற்றும் நீண்ட நேரம் மணம் தரும் பிராண்டுகள்:


Titan Skinn Celeste: இது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒன்று. மல்லிகை மற்றும் சந்தன வாசனையுடன் (White florals & Sandalwood) மிகவும் நேர்த்தியாக இருக்கும். https://amzn.to/497WHk8


Plum BodyLovin' (Vanilla Vibes/Caramello): இனிப்பான வெண்ணிலா வாசம் (Sweet Vanilla) பிடிப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு. https://amzn.to/4sqyCMX


Bella Vita Luxury (Senorita/CEO Woman): அலுவலகம் செல்லும் பெண்களுக்கு (Office wear) ஏற்ற மென்மையான வாசனை கொண்டது. https://amzn.to/3L28szw


Renee Bloom: ஆடம்பரமான வாசனையை குறைந்த விலையில் பெற விரும்புவோருக்கு இது ஒரு நல்ல "Dupe" வகை வாசனை திரவியம். https://amzn.to/45DqO0y


2. நடுத்தர மற்றும் ஆடம்பர பிராண்டுகள் (Mid-Range to Luxury)


சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நீண்ட கால பயன்பாட்டிற்கு:

Ajmal Raindrops: மழையின் புத்துணர்ச்சி போன்ற வாசனை கொண்டது. கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. https://amzn.to/3MWtccy


Dior J'adore : ரோஜா மற்றும் மல்லிகை பூக்களின் கலவை. இது ஒரு கிளாசிக் மற்றும் ராயல் லுக் தரும். https://amzn.to/45v262r


YSL Black Opium: பார்ட்டி மற்றும் மாலை நேர நிகழ்வுகளுக்கு (Evening wear) மிகவும் பொருத்தமான ஒரு கவர்ச்சிகரமான வாசனை. https://amzn.to/3LpnIGJ


Versace Crystal Noir: இது இந்திய தட்பவெப்ப நிலைக்கு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டது. https://amzn.to/4smz8M0


3. வாங்கும் போது கவனிக்க வேண்டியவை


வாசனை திரவியங்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் வகையைப் பொறுத்து அது உடலில் நீடிக்கும் நேரம் மாறுபடும்.

Parfum: 20% - 30% எண்ணெய் செறிவு கொண்டது. 24 மணி நேரம் வரை மணம் நீடிக்கும் (விலை அதிகம்). https://amzn.to/3N32OxA


Eau de Parfum (EDP): 15% - 20% செறிவு. 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும். அன்றாட பயன்பாட்டிற்கு இதுவே சிறந்தது. https://amzn.to/3YX3ib6


Eau de Toilette (EDT): 5% - 15% செறிவு. 2 முதல் 4 மணி நேரம் வரை மட்டுமே இருக்கும். https://amzn.to/45DE0m7


4. தமிழ்நாட்டின் வெயிலுக்கு ஏற்ற குறிப்புகள்:


சிட்ரஸ் (Citrus) அல்லது அக்வாடிக் (Aquatic): எலுமிச்சை அல்லது கடல் காற்று போன்ற வாசனைகள் கோடை காலத்திற்கு புத்துணர்ச்சி தரும்.

மலர் வாசனை (Floral): மல்லிகை, ரோஜா போன்ற பூக்களின் வாசனை எப்போதும் தமிழ்ப் பெண்களுக்குப் பிடித்தமான ஒன்று.


OPS vs CPS vs NPS vs TAPS - ஓய்வூதியத் திட்டங்கள் : ஒப்பீடு

 


OPS vs CPS vs NPS vs TAPS - ஓய்வூதியத் திட்டங்கள் : ஒப்பீடு


அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள பல்வேறு திட்டங்களுக்கும், அறிவிக்கப்பட்டுள்ள புதிய TAPS திட்டத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்


பழைய ஓய்வூதியம் (OPS) 


புதிய ஓய்வூதியம் (NPS) 


பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - Contributory Pension Scheme (CPS)


தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் - Tamilnadu Assured Pension Scheme (TAPS)





TAPS ஓய்வூதியத்திட்டம் டாப்பா? ஆப்பா?



TAPS ஓய்வூதியத்திட்டம் டாப்பா!? ஆப்பா!?


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


பதிவை முழுமையாகப் படிக்கும் முன் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுகிறேன். . . .


1. நமது கோரிக்கையை ஏற்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அச்சடித்து வெளியிட்ட வாக்குறுதி, 'பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்' என்பதே.


2. ஓய்வூதியம் என்பது பிச்சையோ, ஊதியத்தில் பிடித்தம் செய்து வழங்கும் எச்சமோ அல்ல; ஓய்வூதியம் என்பது கொடுபடா ஊதியம்.


3. பணிக்கொடைக்கும் (Gratuity) ஓய்வூதியத்திற்கும் தொடர்பில்லை. இரண்டும் வெவ்வேறு தனித்த சட்டங்கள். இந்தியாவில் GPF / EPF / NPS / UPS என ஓய்வூதியத் திட்டங்கள் மாறுபட்டாலும் - மாற்றப்பட்டாலும் அதில் உள்ள பணியாளருக்கு Gratuity உண்டு. தமிழ்நாட்டில் CPSல் உள்ளோருக்கு மட்டும் ஓய்வூதியத்துடன் Gratuityயும் நிறுத்தப்பட்டுவிட்டது.


4. The Payment of Gratuity Act, 1972ன்படி குறைந்தது 10 நபர்கள் பணிபுரியும் நிறுவனம் என்றால், குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும்  ஊழியருக்கு ஆண்டிற்கு 15 நாள் ஊதியத்தை பணிக்கொடையாக வழங்க வேண்டும்.



---- இப்ப TAPSக்கு வருவோம் ----


Tamil Nadu Assured Pension Scheme எனும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசின் செய்திக்குறிப்பு வெளிவந்து சங்கத்தலைமைகள் அநேகரால் வாழ்த்து மழைகளும், அடிப்படை உறுப்பினர்கள் பெரும்பான்மையினரால் கேள்விகளும் குவிந்து வருகின்றன. தற்போது வெளிவந்துள்ளது அரசாணை அல்ல என்பதால் செய்திக்குறிப்பை மட்டும் முன்வைத்து சில புரிதல்களை நமக்கு நாமே தெளிவுபடுத்திக்கொள்ளவே இப்பதிவு.


செய்திக்குறிப்பில், ஓய்வூதியம் பெறத் தகுதி வாய்ந்த ஆண்டுகள் பணியாற்றிய ஊழியரது 10% பங்களிப்பை வைத்துத்தான் அவருக்கு 50% ஓய்வூதியம் வழங்கப்படும். அதற்கு நிதி போதவில்லையெனில் மீதத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். அப்பணிக்காலத்திற்குக் குறைவானவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். ரூ.25,00,000/- வரை பணிக்கொடை வழங்கப்படும். CPSல் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதாக உள்ளன.



*புரிதல் :*


1. பிடித்தம் செய்யப்படும் 10% CPS தொகை மொத்தமாகத் திரும்பக்கிடைக்காது.


2. 50% ஓய்வூதியம் பெற வேண்டுமெனில் குறைந்தது 30 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.


3. 30 ஆண்டுகளுக்குக் கீழ் பணிக்காலம் உள்ளோருக்கு, 50% ஓய்வூதியம் கிடைக்காது. குறைந்தபட்ச ஓய்வூதியம் என்ற ஒன்று வழங்கப்படும்.


4. 30 ஆண்டுகள் பணியாற்றி 50% ஓய்வூதியம் பெறுபவர் இறந்துவிட்டால் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% அதாவது ரூ10,000/- Pension வாங்கியிருப்பின், ரூ.6,000/- Family Pensionஆகக் கிடைக்கும்.


5. Retirement / Death Gratuity (பணிக்கொடை) பணிக்காலத்தைப் பொறுத்து வழங்கப்படும்


6. 30 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரின் Basic Pay + DA ரூ.1,44,445 என்றால் அவருக்கு, உட்சபட்ச பணிக்கொடை ரூ.25,00,000/- கிடைக்கும். மற்றவர்களுக்கு (Working Years × Basic&DA × 15) ÷ 26 என்ற கணக்கீட்டின்படி கிடைக்கும்.


7. TAPS தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு இது நடைமுறைப்படுத்தும் நாள்வரை ஓய்வு பெற உள்ளோருக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.


8. 50% ஓய்வூதியம் பெறுவோருக்கு மட்டுமே ஆண்டிற்கு 2 முறை DA கூடும். மற்றபடி 30 ஆண்டுகளுக்குக் கீழ் பணியாற்றுவோருக்கும் DAவிற்கும் தொடர்பில்லை.



*கேள்விகள் :*


1. அரசு இனி தனது பங்களிப்பை மாதம்தோறும் ஒதுக்குமா? /  ஆண்டிற்கொருமுறை நேரடியாக ஓய்வூதிய நிதியத்தில் செலுத்துமா?


2. 30 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளோருக்கு எத்தனை ஆண்டுகள் அடிப்படையில் எவ்வாறு குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும்?


3. 30 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளோர் இறந்துவிட்டால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுமா?


4. TAPS நடைமுறைக்கு வரும்முன் ஓய்வு பெற்றோருக்கு கருணை ஓய்வூதியம் உண்டு எனில், 01.04.2003ற்குப் பின் பணியேற்று தற்போது வரை ஓய்வுபெற்றுவிட்டோர் உள்ளிட்ட அனைவருக்குமே பொருந்துமா?


5. கருணை ஓய்வூதியம் என்பது எவ்வளவு ரூபாய்?


6. UPS திட்டத்திலும் இதே போன்று ஊழியரின் பங்களிப்பைக் கொண்டே 50% ஓய்வூதியம், 60% குடும்ப ஓய்வூதியம் & குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதிசெய்யப்பட்டுள்ளதே. அப்படியானால், UPSன் மறுவடிவம் தான் TAPSஆ?


7. UPSல் அரசின் பங்களிப்பு 14%. TAPSல் அரசின் பங்களிப்பு என்ன?


8. மாதந்தோறும் / ஆண்டிற்கொருமுறை அரசின் பங்களிப்பு கூடிக்கொண்டே போனால் அரசிற்கு கடும் நிதிச்சுமை நிதியாண்டு தோறும் ஏற்படாதா?


9. மாதந்தோறும் / ஆண்டிற்கொருமுறை 100% ஊழியர்களுக்கும் அரசின் பங்களிப்பினை அளிக்காமல் ஓய்வு பெறுவோருக்கு மட்டும் பங்களிப்பு செய்யும் பழைய ஓய்வூதியத் திட்டம் தானே அரசிற்கும் நல்லது?


10. நடப்பு நிதி ஆண்டில் ரூ.11,000 கோடி அரசுப் பங்களிப்போடே கூடுதலாக ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய இயலுமா?


11. ஜனவரி 20ல் தொடங்கும் இந்த ஆட்சியின் இறுதிக் கூட்டத்தொடரில் ரூ.13,000 கோடியை TAPSற்கென கூடுதலாக ஒதுக்கீடு செய்து திருந்திய நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பது சாத்தியமா?



---- சரி TAPS டாப்பா? ஆப்பா? ----


மேற்படி புரிதல் சரியெனில், அதனைத் தொடரும் கேள்விகள் நியாயம்தானெனில் அதற்குண்டான விடைகள் அரசாணையில் கிடைக்கும் என நம்புவோம்.


மேலும், TAPS அறிவிப்பின் வழியே 23 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்ட பணிக்கொடை மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது என்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.


TAPS உங்களுக்கு டாப்பா? ஆப்பா? என்பதை உங்களது ஒட்டுமொத்த பணிக்காலம், பிடித்தம் செய்யப்பட்ட & செய்யப்படவுள்ள CPS தொகை ஆகியவற்றை வைத்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஏனெனில், இதன் பலன்கள் ஒவ்வொரு தனித்த நபரின்  சூழல் சார்ந்தவையே.


முடிவு செய்யும் முன், 


LICன் ஜீவன் உட்சவ்வில், 30 - 46 வயதுவரை 16 ஆண்டுகள் மட்டும் மாதம் ரூ.10,375/- செலுத்தினால், 48வது வயது முதல் 100 வயது வரை ஆண்டிற்கு ரூ.2,00,000/- கிடைக்கும்.


LICன் ஜீவன் ஆனந்த்தில், 30 - 60 வயதுவரை மாதம் ரூ.4,800/- வீதம் ரூ.16,90,749/- மட்டும் செலுத்தினால், 60வது வயதில், ரூ.52,60,000/- கிடைக்கும். இதை 8.05% வட்டி வீதத்தில் Fixed Depositல் முதலீடு செய்தால் மாதம் ரூ.36,365/- வீதம் ஆண்டிற்கு ரூ.4,36,385/- வட்டியாகக் கிடைக்கும். இது போக, 100 வயது வரை ரூ.15,00,000/- இலட்சத்திற்கான Long Life Coverageம் கிடைக்கும்.


இதே, தொகையை ஓய்வூதியமாகப் பெற வேண்டுமெனில், 30 ஆண்டுகள் பணிக்காலத்தோடு, இறுதி மாதத்தில் ரூ.72,730/- அடிப்படை ஊதியமாகப் பெற்றிருக்க வேண்டும். இந்த ஊதியத்திற்கு நீங்கள் ஜீவன் ஆனந்த்தைவிட மாதம் ரூ.3,000/- கூடுதலாக TAPSற்கு செலுத்தியிருப்பீர்கள்.


மேலும், CPSலேயே இருந்து Settlement வாங்கி அதை Fixed Depositல் முதலீடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.


இது ஒரு மாதிரிக் கணக்கீடே. இன்னும் இது போன்ற பல திட்டங்கள் பல்வேறு நிறுவனங்களில் இருக்கலாம். விசாரித்துப் பாருங்கள்.


அதையெல்லாம் விசாரித்துவிட்டு, உங்களது நிதிநிலையை முன்வைத்து உங்களுக்கு TAPS டாப்பா? ஆப்பா?  என்ற முடிவிற்கு வாருங்கள்.


இதுவரைக்கும் இந்த ஒப்பீடெல்லாம் செய்தீர்களா? என்றால், நாம் கேட்டதும், நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதியாகக் கொடுத்ததும், தற்போது அறிவித்துள்ள TAPSற்கு முற்றிலும் நேர்மாறான 100% முழுமையான ஓய்வூதியப் பலன்களை உள்ளடக்கிய பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்தான். அதற்கு இந்த ஒப்பீடெல்லாம் தேவையேயில்லை.


ஆனால், அதுவும் இல்லை, நம்மிடம் பிடிக்கப்பட்ட பங்களிப்புத்தொகையும் இல்லை, 30 ஆண்டுகளுக்குக் குறைவானால் 50% ஓய்வூதியமே இல்லை எனும் போது TAPS முதலீட்டை மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய கட்டாயம் எழத்தானே செய்கிறது.


அதெல்லாம் இல்ல. . . . 'உனது புரிதலே தவறு; கேள்விகள் தேவையற்றவை; ஒப்பீடு அறமற்றது; எதுவுமே இல்லாததற்கு TAPS தேவலாம்!' என்பதே உங்களது பொருளாதாரப் புரிதல் என்றால், உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.


இறுதியாக,


பசியில் அழுதுகொண்டிருந்த சிறுவனுக்கு உணவளிப்பதாகக் கூட்டி வந்த தந்தை, அவனிடமிருந்து தான் எடுத்துக்கொண்ட 10 ரூபாயில், 1 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்தாராம். So kind dadல!


அட. . .,


* அந்தக்காசே அவனோடதுதான. . .!?


* அவனோட மீதி 9 ரூபா எங்க. . . .!?


* இதுக்கு அந்தக்காச எடுக்காம இருந்தா, அவன் வயித்துக்கு ஏதோ அவனே வாங்கி சாப்ட்டிருப்பானே. . .!?


* பசியாற உணவுதானே வேணும், அதத்தான தருவேனு சொன்னாரு!?


என்றெல்லாம் உங்களுக்கும் தோன்றினால் நீயும் என் தோழனே!



>>> பெண்களுக்கான சிறந்த வாசனை திரவியங்கள் பற்றிய விவரங்கள்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொங்கல் பரிசாக ரூ.3000/- ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவு

 பொங்கல் பரிசாக ரூ.3000/- ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைத...