கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-03-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 13.03.2026 

கிழமை:- வெள்ளி


திருக்குறள்:

அதிகாரம் 82 / CHAPTER 82 –

தீ நட்பு

குறள் 811:

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.     

விளக்க உரை:

அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.


பழமொழி :
All is well that ends well.

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2. எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.


பொன்மொழி :

வெற்றி மகிழ்ச்சிக்கு திறவுகோல் அல்ல மகிழ்ச்சியே வெற்றிக்கு திறவுகோல்


பொது அறிவு :

01.இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய காய்கறி எது?

வெங்காயம் - Onion

02.  மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை  பட்டத்தை வழங்கியவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Netaji Subhas Chandra Bose


English words :

Carry on- continue to do something

Carry out-perform or complete  task


தமிழ் இலக்கணம்:

வயிறு+இல் = வயிறில் அல்ல *வயிற்றில்*

கயிறு + இல் = கயிறில் அல்ல *கயிற்றில்*

கயிறு+ ஐ = கயிறை அல்ல *கயிற்றை*

வீடு + ஐ =  வீடை அல்ல *வீட்டை*

ஆறு + பக்கம் = ஆறுபக்கம் அல்ல

*ஆற்றுப்பக்கம்*

இப்போது நீங்கள் மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் று,டு ஆகிய எழுத்துக்கள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துக்களுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும்


அறிவியல் களஞ்சியம் :

மனித மூளையானது ஒரு சிறிய மின்விளக்கை ஒளிரச் செய்யக்கூடிய மின்சாரத்தை (சுமார் 12-25 வாட்ஸ்) உருவாக்குகிறது.


நீதிக்கதை

கருத்துடன் செயல்படு

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.


இன்றைய செய்திகள்

13.03.2026

⭐அமராவதி, காவிரி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து கரூர், அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட 7 தொகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீரைக் கொண்டுவர ரூ.5,400 கோடி புதிய திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

⭐ பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருவதால் ஸ்விக்கி மற்றும் ஸோமாடோ போன்ற பார்ட்னர்கள்  பாதிக்கப்பட்டுள்ளன.

⭐ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் டிரோன்கள்,ஏவுகணைகளை வீசியது.பக்ரைனில் உள்ள முக்கிய எண்ணை சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விவியன் ரிச்சர்ட்சும் இந்திய அணியை புகழ்ந்து உள்ளார்.


Today's Headlines

⭐ The Tamilnadu government has approved a new project worth ₹5,400 crore to bring water to lakes and ponds in 7 constituencies including Karur, Aravakurichi, Ottanchathiram, Athur, and Dindigul from the point where the Amaravathi and Kaveri rivers meet.

⭐ Many restaurants are being temporarily closed, which has affected partners such as Swiggy and Zomato.

⭐ Iran launched drones and missiles toward the United Arab Emirates. Attacks were also carried out on major oil storage facilities in Bahrain.

*SPORTS NEWS*

🏀 The Indian team is receiving widespread praise not only from former Indian players but also from international personalities. In that line, former West Indies cricket team captain and legendary batsman Vivian Richards has praised the Indian team.



சிறுநீரக நலன் காப்பதன் மூலம் பூமியை பாதுகாக்க முடியுமா?



சிறுநீரக நலன் காப்பதன் மூலம் பூமியை பாதுகாக்க முடியுமா?


நீரின்றி அமையாது உலகு 

சிறுநீரின்றி இயங்காது உடம்பு !


இன்று (12/03/2026) உலக சிறுநீரக தினம். சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் பிரச்சினைகளால் ஏற்படும் உடல் உபாதைகளையும்  தெரிந்து கொள்வதற்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. 


சிறுநீரகத்தின் செயல் ,தேவை மற்றும் அதன் செயல்இழப்பால் ஏற்படக்கூடிய விளைவுகளை பெரும்பாலான மக்கள் உணர்ந்து இருப்பார்கள். எனினும் சிறுநீரகத்தின் சிறப்பையும் அதன் நலனை பராமரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மனதில் நிறுத்திக் கொள்ள ஒரு மையப் பொருளை (theme)உருவாக்கி ஒவ்வொரு வருடமும் சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. 


அதன்படி இந்த வருட மையக் கருத்தாக


 "அனைவருக்கும் சிறுநீரக நலன்- மக்களின் மீதான அக்கறையும் பூமியை பாதுகாத்தலும்"


 என்பதனை உருவாக்கி உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. 


அது என்ன சிறுநீரக நலன் ?


ஆம், அதன்படி சிறுநீரக நலனை கருத்தில் கொண்டு சிறுநீரக சுகாதாரத்திற்கான கருத்துக்களை மக்களிடையே விதைப்பது அதில் உறுதிப்படுத்தக்கூடிய சிறுநீரக நலன்களாக..

1) போதுமான உடலின் நீர்ச்சத்தை உறுதிப்படுத்துவது 

2) ஆரோக்கியமான உணவு முறை 

3) சரியான அளவு தூக்கம் 

4) தேவையற்ற மருந்துகள் உட்கொள்வதை தவிர்த்தல் 

5) சிறுநீரக செயல் இழப்புகளை உருவாக்கும் நோய்களை விரைவில் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல் 

6) தேவையான நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையையும் மருத்துவமும் பெறுதல் 


மேற்கண்ட அனைத்தும் ஒரு மனிதனின் சிறுநீரக நலனை காப்பதற்கு உதவுகிறது. இந்த தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமாக மக்களின் மீதான அக்கறையை உலக சிறுநீரகக் கூட்டமைப்பும் இதர சுகாதார அமைப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. 


இதன் மூலம் எவ்வாறு இந்த பூமியை பாதுகாப்பது ?


ஒரு எளிமையான விளக்கம், பூமியை பாதுகாப்பது என்பது நேரடியாக இந்த பூமி பந்தை பாதுகாப்பது என்றும் பூமியில் வாழும் மக்களை பாதுகாப்பது என்றும் எடுத்துக் கொள்ளலாம். 

சிறுநீரக செயலிழப்பை தடுப்பதன் மூலம் இந்த பூமி பந்தின் பாதுகாப்பை எவ்வாறு செயல்படுத்த முடியும். 

இன்று சிறுநீரக செயலிழப்பின் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் டயாலிசிஸ்(Dialysis )எனப்படும் ரத்த சுத்திகரிப்பை மேற்கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார்கள் ,இதற்காக கோடிக்கணக்கான லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்  செலவிடப்படுகிறது மேலும் இந்த இரத்த  சுத்திகரிப்பிற்கு பயன்படுத்தப்படும் டையலைசர்(Dialyser) மற்றும் பிளட் டியூபிங்(Blood tube) அனைத்தும் மக்காத பிளாஸ்டிக் போன்ற பொருட்களினால் செய்யப்படுகிறது ,இது தினமும் பயன்படுத்தப்பட்டு மருத்துவக் கழிவுகளாக எல்லா நாடுகளிலும் மலை போல் குவிந்து வருகின்றன, இது பின்வரும் மனித சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை .


எனவே சிறுநீரக நலனை பாதுகாப்பதன் மூலம் சிறுநீரக நோய்களை விரைவில் கண்டறிந்து குணப்படுத்துவதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் டயாலிசிசின் தேவையை குறைக்க முடியும், இவ்வாறு குறைப்பதன் மூலமாக அதனால் பெருகக்கூடிய மக்காத மருத்துவ கழிவுகளின் அளவு குறையும் இதன் மூலம் இந்த பூமி பந்தினை நம்மால் பாதுகாக்க முடியும். 


எனவே இந்த வருட கருப்பொருளை மனதில் நிறுத்தி செயல்படுவோம் 


"Kidney Health For All - Caring for People,  Protecting the planet"


"அனைவருக்கும் சிறுநீரக நலன் மக்களின் மீதான அக்கறையும் பூமியை பாதுகாத்தலும்."


நன்றி.


17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய ரயில் சேவை



17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய ரயில் சேவை


17 ஆண்டுகளுக்குப் பிறகு அறந்தாங்கி ரயில் வழித்தடத்தில் பாரத பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மயிலாடுதுறை -   காரைக்குடி பயணிகள் ரயில் அறந்தாங்கி வந்தடைந்தது


காரைக்குடியிலிருந்து நேற்று 12/3/2026 முதல் தினசரி காலை 6:15 மணிக்கு அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பூந்தோட்டம், பேரளம் வழியாக மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயில் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 17 வருடங்களுக்கு பிறகு இயக்கப்படுகிறது.



இனி PLI பாலிசிகளுக்கு Pay Recovery Mode கிடையாது



இனி PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE கிடையாது


அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



💼  வரும் 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE  (அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டும் வசதி) அஞ்சல் ஊழியர்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.


💼 எனவே 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு அஞ்சல் ஊழியர்கள் தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு PAY RECOVERY MODE பாலிசிகளை துவங்க வேண்டாம்.


💼  இதற்கு பதிலாக அஞ்சல் சேமிப்பு கணக்கு,  IPPB கணக்கு, இதர வங்கி கணக்குகளில் இருந்தும் ஆட்டோ பேமென்ட் செய்யும் நடைமுறையை வாடிக்கையாளருக்கு தெளிவுபடுத்தவும்.


💼  மேலும் காப்பீடாளர் தங்களின் PLI பாலிசி Login மூலமாகவும் பிரீமியம் செலுத்தும் வசதியும் உள்ளது.


💼  ஏற்கனவே பிடித்தம் செய்த பாலிசிகளுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை தொடர்கிறது.



F.no. 25-01/2022-LI

Ministry of Communications

Department of Posts

(Directorate of Postal Life Insurance)


Chanakyapuri P.O. Complex,

New Delhi-110021

Dated: 12-03-2026.


To,

All Heads of Circles,


Sub: Discontinuation of premium payment through Pay-Recovery Book Adjustment for new PLI policies issued to officials of non-postal Central Government Ministries/ Departments/ Organizations w.e.f. 01.04.2026 - reg.


Madam/Sir,


I am directed to refer to the existing practice of collection of Postal Life Insurance (PLI) premium through pay-recovery book adjustment in respect of officials of non-postal Central Government Ministries/ Departments/Organizations.


2. In this regard, it has been decided that the option of premium payment through pay-recovery book adjustment shall be discontinued for new PLI policies issued to officials of non-postal Central Government Ministries/Departments/Organizations with effect from 01.04.2026.


3. Accordingly, Circles are requested to take necessary action to ensure that no new PLI policies, issued to officials of non-postal Central Government Ministries/Departments/Organizations, are enrolled under the pay-recovery book-adjustment mode from 01.04.2026 onwards. Suitable instructions may be issued to all concerned to ensure compliance.


4. It may also be ensured that Inchrges of CPCs address the DDOs linked to the concerned CPCs by email/letter to advise existing policyholders to opt for alternate premium payment channels such as NACH (SI through India Post Payments Bank or Post Office Savings Bank or bank account)/online premium payment channels like customer portal. The process for the purpose is also enclosed herewith as Annexure.


5. This may be treated as most urgent and the compliance may be ensured accordingly.


This issues with the approval of the Competent Authority.


Digitally signed by 

Kamal Kumar Sharma 

Date: 12-03-2026 15:30:37

(Kamal Sharma) DDM-III (PLI)


Copy to:

DPLI Kolkata for information and necessary action.

1.25-01/2022-LI-Pt (Computer No. 3202306)


THIRAN 360° - பணியாளர்களின் திறன் மேம்பாட்டு - மாவட்ட கருவூல அலுவலரின் கடிதம்



 திறன் 360° - பணியாளர்களின் திறன் மேம்பாட்டு - மாவட்ட கருவூல அலுவலரின் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருவூலம் மற்றும் கணக்குத்துறை


அனுப்புநர்

திரு.சீ.ரெங்கநாதன், M.Com.,

மாவட்ட கருவூல அலுவலர்,

மாவட்ட கருவூலம்,

திருவண்ணாமலை.


பெறுநர்

அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்,

திருவண்ணாமலை மாவட்டம்.


கா.மு.எண்.54/K1/2026 நாள்: .03.2026


அய்யா அம்மையீர்,


பொருள்: திறன் 360 - பணியாளர்களின் திறன் மேம்பாட்டு கற்றல் திட்டத்தை பயன்படுத்துதல் - தொடர்பாக.


அரசு பணியாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சிக்காக 24 * 7 நேரமும் இலவசமாக செயல்படக்கூடிய "திறன் 360°" எனும் இணையவழி கற்றல் தளம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திறன் 360° தளத்தில் பணியாளர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு பாடநெறிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தளத்தில் Advanced Excel, ஆங்கில தொடர்புதிறன், தலைமைப்பண்பு வளர்த்தல், பெண்கள் முன்னேற்றம், Generative Al போன்ற 70 வகையான திறன் மேம்பாட்டு பாடநெறிகள் இடம்பெற்றுள்ளன. இது பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கும் நிர்வாக திறன் உயர்விற்கும் உதவியாக இருக்கும். இத்தளத்தில் பதிவு செய்ய. பின்வரும் முறையினை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


களஞ்சியம் கைபேசி செயலி -> Login Other services - Thiran 360° - Login with Employee ID


IFHRMS வலைதளம் -> IFHRMS Home Page -Thiran 360° - Login with Employee ID


எனவே. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பணம் பெறும் அலுவலர்களும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பணியாளர்கள் திறன் 360 தளத்தில் பதிவு செய்து, கிடைக்கும் கற்றல் வாய்ப்புகளை பயனுள்ளதாக பயன்படுத்துமாறு ஊக்குவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தங்களது அலுவலகங்களில் பணியாளர்கள் அதிகளவில் இதில் கலந்து கொண்டு பயனடைவதை உறுதி செய்து, கற்றல் முன்னேற்றத்தை அவ்வப்போது பரிசீலனை செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


நகல்

கருவூல அலுவலர். திருவண்ணாமலை.

அனைத்து உதவி கருவூல அலுவலர்கள்

(ம) மாவட்ட கருவூல அலுவல கண்காணிப்பாளர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம்.


தமிழ்நாட்டில் 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது



தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என்பது வெறும் வதந்தி; 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது- தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம்.


நாடு முழுவதும் 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது.


பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தி.


கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம்; அது மிகவும் ஆபத்தானது.


எவ்வளவு கேட்டாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் தருகின்றன.


சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 7000 பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றது.


டீலர்களுக்கு கடன் கொடுப்பதை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.


வதந்தியால் மக்கள் தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கினால் விரைவில் காலியாகி செயற்கை தட்டுப்பாடு ஏற்படும்-தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்க மாநிலத் தலைவர் முரளி.


Indane கேஸ் சிலிண்டர் எளிமையாக புக்கிங் செய்யும் முறை



இண்டேன் கேஸ் புக் ஆகவில்லையா? இப்படி செய்ய அறிவுறுத்தல்


இண்டேன் (Indane) அதன் டீலர்களுக்கு அனுப்பிய செய்தியில், முன் எப்போதும் இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும், எங்கள் ஐவிஆர்எஸ் மற்றும் மிஸ்டு கால் எண்களுக்கு வரும் முன்பதிவு அழைப்புகளின் எண்ணிக்கை இயல்பை விட 8-10 மடங்கு அதிகரித்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், தொலைபேசி இணைப்புகள் இணைக்கப்படவில்லை. மேலும், இணைக்கப்பட்டாலும் முன்பதிவுகள் முடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.


பொதுவாக, வீட்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடைவெளி 21 நாட்களாக இருந்தது. ஆனால், அரசாங்கம் சமீபத்தில் அதை 25 நாட்களாக அதிகரித்தது. இருப்பினும், தொலைத் தொடர்பு நெட்வொர்க் மட்டத்தில் தொழில்நுட்பக் கட்டுப்பாடு இல்லாததால், 25 நாட்கள் நிறைவடைவதற்கு முன்பே மக்கள் முன்பதிவு செய்ய முயற்சிக்கின்றனர். 


இதனால், வாடிக்கையாளர்கள் செய்யும் ஒவ்வொரு அழைப்பும் IVRS மற்றும் தவறவிட்ட அழைப்பு முன்பதிவு விண்ணப்பங்களைச் சென்றடைகிறது என்று Indane கூறியுள்ளது. தொலைபேசி மூலம் கேஸ் புக் செய்ய முடியாததால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் விநியோகஸ்தர் அலுவலகங்களுக்கு செல்கின்றனர்.


இந்த நிலையில், Indane கேஸ் நிறுவனத்தின் Smart Booking வசதி அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் முன்பதிவு, இந்தியன் ஆயில் ஒன் மொபைல் செயலி மற்றும் வாடிக்கையாளர் போர்டல் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்த நிறுவனம் விரும்புகிறது. 


அமேசான் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என்றும் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.


குறிப்பாக மாலை 6 மணிக்குப் பிறகு அல்லது இரவில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று இண்டேன் அறிவுறுத்துகிறது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பெறப்படும் கோரிக்கைகள் மறுநாள் காலை செயல்படுத்தப்படும்.


பற்றாக்குறை குறித்த செய்திகளை நம்பி வாடிக்கையாளர்கள் பீதியடையக்கூடாது என்றும், மாற்று டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த சூழ்நிலையை சரி செய்யலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.


தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் பதவியேற்பு



 தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர அர்லேக்கர் பதவியேற்பு.


* தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் பதவியேற்றுக் கொண்டார்.


* உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


LPG சிலிண்டரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிகள்



கேஸ் சிலிண்டரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிகள்


கேஸ் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாலும் மாற்று வழிகளை முயற்சித்து வருவதாலும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இருந்தாலும், தற்போது இருப்பில் இருக்கும் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.


1. முதலில் அடுப்பு பர்னர் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். நீங்கள் அடுப்பை எரிக்கும்போது மஞ்சள் நிறத்தில் இருந்தால் பர்னரில் அழுக்கு சேர்ந்திருக்கலாம். எனவே, அதனை சுத்தப்படுத்தி பயன்படுத்துவது நல்லது. அதுபோல கேஸ் செல்லும் குழாயிலும் அடைப்புகள் இருந்தால் கேஸ் அதிகமாக உறிஞ்ச வாய்ப்புள்ளது. இதற்கு கேஸ் அடுப்பைக் கடைகளில் கொடுத்து சுத்தம் செய்து பயன்படுத்தலாம். இதை இப்போது மட்டுமின்றி குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை செய்வது கேஸ் பயன்பாட்டைக் குறைக்கும்.


2. கேஸ் அடுப்புக்கு பதிலாக முடிந்தவரை இன்டக்ஷன் ஸ்டவ் எனும் மின் அடுப்பைப் பயன்படுத்தலாம். தண்ணீர் கொதிக்கவைப்பதற்கு, டீ, காபி போடுவதற்கு, முட்டை மற்றும் பருப்புகளை வேகவைப்பதற்குக்கூட பயன்படுத்தலாம். தண்ணீர் சுட வைப்பதற்கு கெட்டில்களும் உடனடி உதவியாக இருக்கும்.


3. அதேபோல பிரஷர் குக்கரை முடிந்தவரைப் பயன்படுத்துங்கள். பருப்புகள், காய்கறிகளை வேகவைப்பதற்கு பிரஷர் குக்கரை பயன்படுத்திய பிறகு சாதாரண பாத்திரத்திற்கு மாற்றி பயன்படுத்தலாம். இது அதிக சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்தும்.


4. நீங்கள் செய்யும் சமையல் அளவுக்கு ஏற்ப பாத்திரங்களைத் தேர்வு செய்யுங்கள். அடுப்பு எரிவதற்கு சரியான அளவில் அல்லது சற்று பெரிதாக தேர்வு செய்வது நல்லது.


5. நீங்கள் சமைப்பதற்கான காய்கறிகளை வெட்டிவைப்பது, மசாலா தயார் செய்து வைப்பது என அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்ற வையுங்கள். அடுப்பு எரிந்துகொண்டே இருக்கும்போது பொருள்களை தயார் செய்வது கேஸ் அதிகமாக செலவாகும். கடுகு, சீரகம் போன்ற சிறிய பொருள்களையும் எடுத்து பக்கத்தில் வைத்துக்கொள்வது நல்லது. அரிசி, பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து பின்னர் சமைக்கலாம்.


6. தேவைக்கேற்ப ஒரு நேரத்தில் ஒரு அடுப்பை மட்டும் பயன்படுத்தலாம். எரியும் தீயை தேவைக்கேற்ப குறைத்துவைத்தும் பயன்படுத்தலாம்.


7. அதேபோல சாதம் வேகவைக்கிறீர்கள் என்றால் தேவைக்கேற்ப தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரை அதிகமாக வைப்பது அதிக கேஸ் செலவாகும்.


7. உணவை மீண்டும் சூடுபடுத்தும் வேலையைக் குறைத்துக்கொள்ளுங்கள்.


8. அடுப்பை பற்றவைத்துவிட்டால் முடிந்தவரை அனைத்து சமையல் வேலைகளையும் முடித்துவிட்டு அணையுங்கள். மீண்டும் மீண்டும் பற்றவைப்பது வேண்டாம். அதேபோல சமையல் முடிந்ததும் ரெகுலேட்டரை அணைத்துவிடலாம்.


9. பருப்பு, காய்கறிகளை தனித்தனியே வேகவைக்காமல் ஒரே குக்கரில் சேர்த்தோ அல்லது குக்கரில் மேலும் ஒரு பாத்திரத்தை தனியாக வைத்தோ பயன்படுத்துங்கள்.


10. நீங்கள் என்ன சமைக்கப் போகிறீர்கள் என்பதைப் பொருத்தும் சமையல் எரிவாயு செலவாகும். உதாரணமாக இட்லி என்றால் ஒரே நேரத்தில் ஊற்றி வைத்துவிடலாம். தோசை என்றால் நீண்ட நேரம் அடுப்பு எரிய வேண்டியிருக்கும். எனவே சிலிண்டர் இல்லை, வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் விரைவாக சமைக்கும் உணவுகளைத் தேர்வு செய்யலாம்.


இறுதியாக, உங்கள் பகுதியில் வாய்ப்பு இருந்தால் விறகு அடுப்புகளைப் பயன்படுத்துங்கள்.


எரிவாயு தட்டுப்பாடு குறித்து IOCLன் தகவல்



எரிவாயு தட்டுப்பாடு குறித்து IOCLன் தகவல்


பீதி அடைய தேவையில்லை


எரிவாயு தட்டுப்பாடு என தகவல் பரவும் நிலையில் பதற்றத்தில் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் மக்கள்.


“நீங்கள் பதற்றம் அடைந்து முன்பதிவு செய்யத் தேவையில்லை; உங்களது ஒவ்வொரு நேர்மையான கோரிக்கையும் பூர்த்தி செய்யப்படும்”


– இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-03-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-03-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀🌀...