கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

 


மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள “அன்புச்சோலை” திட்டத்தின் மையத்தை திருச்சி பொன்மலையில் இன்று தொடங்கி வைத்தார்கள்.


ஒரு மாநகராட்சியில் இரண்டு மையங்கள் வீதம் திருச்சி உட்பட மொத்தம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் 2 மையங்கள் என மொத்தம் 25 “அன்புச் சோலை” மையங்களையும் காணொளிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்துச் சிறப்பித்தார்.




மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



ரூ.10 கோடி செலவில் 25 இடங்களில் கட்டப்பட்டுள்ள மூத்தோர்களுக்கான அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


அதன்படி, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா 2, சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி



ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி


Room facilities for passengers to stay and rest at railway stations


 ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சில மணி நேரம் தங்கி விட்டு குளித்துவிட்டு தங்கள் பயணத்தை தொடர்வதற்கு தங்கும் வசதி ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது 


சாதாரண அறை 

ஒரு அறைக்கு 

5 கட்டில்கள் 

ஒரு நபருக்கு கட்டணம்..

6 மணி நேரம்

ரூபாய்.300 


12 மணி நேரம் 

 450 ரூபாய் 


24 மணி நேரம்

 750 ரூபாய் 


AC அறைகள்

ஒரு அறைக்கு  

5 கட்டில்கள் 


ஒரு நபருக்கு கட்டணம்.....

6 மணி நேரம் 

600 ரூபாய் 

12 மணி நேரம் 1000 ரூபாய் 

24 மணி நேரம்

1700 ரூபாய் 


அறையில் தங்குவதற்கு அவசியம் ஆதார் அட்டை தேவை 


அன்றைய தினம் தாங்கள் ரயிலில் பயணித்த டிக்கெட் கையில் வைத்திருக்க வேண்டும்


மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம் 

73053 05956

86081 88147

97512 22288


மேலும் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் Retiring Room வசதி உள்ள ரயில் நிலையங்கள்! பட்டியல் 


பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தின் கீழ் உள்ள சில முக்கிய நிலையங்களில் Retiring Room வசதி வழங்கப்பட்டுள்ளது. 


📍 Retiring Room வசதி உள்ள நிலையங்கள் பட்டியல்:


➡️ மயிலாடுதுறை (Mayiladuthurai)

➡️ விழுப்புரம் (Villupuram)

➡️ திருவண்ணாமலை (Tiruvannamalai)

➡️ சிதம்பரம் (Chidambaram)

➡️ வேளாங்கண்ணி (Velankanni)

➡️ கும்பகோணம் (Kumbakonam)

➡️ நாகப்பட்டினம் (Nagapattinam)

➡️ திருவாரூர் (Thiruvarur)

➡️ விருத்தாசலம் (Virudhachalam)

➡️ புதுச்சேரி (Puducherry)

➡️ வேலூர் (Vellore)

➡️ தஞ்சாவூர் (Thanjavur)

➡️ திருச்சி (Tiruchchirappalli)


📲 முன்பதிவு முறை:

🔹 IRCTC / RailOne இணையதளம் அல்லது ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

🔹 உங்கள் PNR எண் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

🔹 செக்-இன் செய்யும் போது அடையாள ஆவணம் அவசியம்.


📌 குறிப்பு:

சில நிலையங்களில் இவ்வசதி தற்போது பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சில நிலையங்களில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 🔧


தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...


உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு - TRB செய்தி வெளியீடு

 


 Direct Recruitment for the Posts of Assistant Professors in the Tamil Nadu Collegiate Educational Service for Government Arts and Science Colleges and Government Colleges of Education – Press Release - Edit Option for Online Application.


உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு - Edit Option தொடர்பாக TRB செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2025 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட கடவுச் சொற்கள் (Passwords)



2025 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட கடவுச் சொற்கள் (பாஸ்வேர்டுகள்)



அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம்



அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம்


B.T. Assistant Post in Government Aided School 


 ஆசிரியர் தேவை


சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி


(அரசு பகுதி உதவி பெறும் பள்ளி)


சிலுக்குவார்பட்டி - 624 215. திண்டுக்கல் மாவட்டம்.


125 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய பள்ளி


எமது பள்ளியில் ஏற்பட்டுள்ள நிரந்தர ஆசிரியருக்கான பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடம் : இளங்கலை பட்டதாரி ஆசிரியர்- தமிழ்


கல்வித் தகுதி : B.A., (Tamil), B.Ed., with TET (Pass)


இனசுழற்சி : ஆதிதிராவிடர் (SC)


வயது வரம்பு : தமிழக அரசு விதிகளின்படி


சம்பள விகிதம் தமிழக அரசு விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி


செயலாளர், சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, சிலுக்குவார்பட்டி 624 215, திண்டுக்கல் மாவட்டம்.


குறிப்பு: 1. வேலைவாய்ப்புஅலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு செய்திருக்கவேண்டும். 2. விண்ணப்பங்களும் மற்றும் அனைத்துவகை கல்வி சான்றிதழ்களின் நகல்களும் 24.11.2025ம் தேதிக்குள் கிடைக்குமாறு இணைத்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


94434 21728, 81221 12355


SwamivivekanandahighSchool@gmail.com




SIR 2026 Enumeration Form-ஐ வலைதளம் மூலமாக சமர்பிக்கலாம்


வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை voters.eci.gov.in என்ற இணையம் மூலம் படிவத்தை நிரப்பலாம் - தேர்தல் ஆணையம்


SIR 2026 Enumeration Form-ஐ வலைதளம் மூலமாக சமர்பிக்கலாம்


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்.


இணையதளம் வாயிலாக Enumeration Form-ஐ பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். 


இதற்கு தேவையான விஷயங்கள். 


உங்கள் அலைபேசி எண் voter ID யுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


ஆதாரில் உள்ள உங்கள் பெயருடன், voter ID உள்ள பெயரும் பொருந்தி இருந்தால், இணையதளம் வாயிலாக சுலபமாக முடித்து விடலாம். 


தேர்தல் ஆணைய இணையதள முகவரி: https://voters.eci.gov.in/



Portronics 71W Car Power 1C Triple Output Fast Car Charger with 33W Type-C Cable, 20W Type-C PD, 18W USB Port, Fast Charging Adapter Compatible with Cars for iPhone & Android Smartphone (Black)






Actual Price: 999

Offer Price : 549

Benefit : Rs. 450



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47zbvYq


டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழப்பு : 11 படுகாயம்

 


டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழப்பு : 11 படுகாயம் 


டெல்லியில் உயர் பாதுகாப்பு அடுக்கில் உள்ள செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததையடுத்து என்.எஸ்.ஜி., என்ஐஏ விசாரணை 


தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.


டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் நுழைவு வாயில் 1 அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இன்று மாலை 7 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. பயங்கர சப்தத்துடன் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் வெடித்துச் சிதறிய காருக்கு அருகில் இருந்த மேலும் 4 கார்களும் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இந்த சம்பவத்தில் இதுவரை 9 பேர் இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த 15 பேர் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால், 9 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், ஒருவருக்கு லேசான காயத்துடன் சுயநினைவில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.








செங்கோட்டை அருகே நிகழ்ந்த இந்த சம்பவத்தையடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, என்ஐஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படை குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.


Apsara Platinum Pencil Value Pack






Actual Price: 119

Offer Price : 88

Benefit : Rs. 31


Minimum Order: 2 Boxes 

Total Price: 88x2= Rs. 176

Pencils : 40

Scale : 2

Sharpener: 2

Eraser: 2


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4hKQlK2



சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 114 பள்ளிகளின் பட்டியல்

 

 

2024-2025ஆம் ஆண்டு - சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 114 பள்ளிகளின் பட்டியல் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 10-11-2025


List of 114 schools selected to receive shields for best schools for the year 2024-2025 - Proceedings of the Director of Elementary Education, Tamil Nadu, Date: 10-11-2025



அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Awarding of Best School Shields for the year 2024-2025 to Government/ Government Aided Primary/Middle Schools - Proceedings of the Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



FUR JADEN Vegan Leather Stylish 15.6 Inch Laptop Backpack Travel Weekender Bag For Men Women




Actual Price: 3500

Offer Price : 2199

Benefit : Rs. 1301



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47LTjJT


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-11-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 10.11.2025

கிழமை:- திங்கள்கிழமை



*திருக்குறள்:*


பால்:- பொருட்பால்

இயல்:- அரசியல்

அதிகாரம்:- குற்றங்கூறாமை


*குறள் : 437*



செயற்பால செய்யா திவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும். 



*விளக்க உரை:*



செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.



*பழமொழி :*


keep trying until failure kneels before you. 



முயன்று கொண்டே இரு, தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை.



*இரண்டொழுக்க பண்புகள் :*



1.கோபம் என் அறிவை மறைக்கும்.



2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.



*பொன்மொழி :*



எல்லா விஷயங்களையும் நன்மையானதாகவே பார்க்க மனதை பழக்குங்கள்-  புத்தர்



*பொது அறிவு :*



01.தமிழ்நாட்டில் செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?



    விழுப்புரம் - Villuppuram 




2.காவிரியின் மிக நீளமான கிளை நதி எது?



அமராவதி ஆறு- Amaravathi  River



*English words :*



terrible-extremely bad



jostle -to push



*தமிழ் இலக்கணம்:*



 அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.



அத்தனை + படங்கள் = அத்தனை படங்கள்


இத்தனை + பறவைகள் = இத்தனை பறவைகள்.


எத்தனை + காக்கைகள் = எத்தனை காக்கைகள்.



*அறிவியல் களஞ்சியம் :*



 பட்டுப் புழுக்கள் மல்பெரி இலையிலிருந்து வரும் "சிஸ்ஜேஸ்மோன்'' எனப்படும் வாசனைப் பொருளை மோப்பம் பிடித்து வருகின்றன. அவை பிற உணவுப் பண்டங்களை சட்டை செய்யாதிருப்பதன் காரணம் இந்த வாசனைப் பொருள் அவற்றில் இல்லாததே. ஜெனட்டிக் தொழில் நூட்பம் மூலம் சிஸ் ஜேஸ்மோன் வாசனைப் பொருளை வேறு செடிகளுக்குப் பொருத்தி அவற்றையும் பட்டுப்புழுக்களுக்கு உகந்த ஆகாரமாக மாற்றலாம்.



*நீதிக்கதை*



 *மாற்றம்*



ஒரு நாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர். அதில் உங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த நபர் நேற்று காலமானார். அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் என்று எழுதி இருந்தது.



நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க, நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.



சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியினுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது.



உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம். நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று எழுதியிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது. உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. 



நீதி :



நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்



*இன்றைய செய்திகள்*


 10.11.2025



⭐11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார 'மைக்ரோ' பஸ்கள்- 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.



⭐தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு- சென்னையில் 10 மையங்களில் 9ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.



⭐ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை.



⭐வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்- பதிவு செய்ய நேற்று 6 இடங்களில் சிறப்பு முகாம்.



⭐கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்தான் தமிழகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன்



*🏀 விளையாட்டுச் செய்திகள்*



🏀உலக கோப்பை செஸ் போட்டி:


அர்ஜூன் எரிகைசி,பிரக் ஞானந்தா, பிரணவ், அரிகிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.



*Today's Headlines*



⭐Electric micro-buses to operate at 5 Minutes intervals at 11 Metro Rail stations. It has been decided to operate these electric micro bus services at 11 Metro Rail stations in the first phase.



⭐Written exam for police jobs across Tamilnadu- more than 9 thousand candidates participated in 10 centers in Chennai. 



⭐ If the domestic dogs are not microchipped Rs. 5000 will be collected as fine –  special camps held at 6 locations yesterday for registration. 



⭐5-years-old boy from Tamilnadu sets record by climbing Mount Kilimanjaro.



⭐Tsunami warning- Powerful earthquake measuring 6.7 on the Richter scale hit  Japan. 



 *SPORTS NEWS* 



🏀World Cup Chess Tournament: 4 Indian players Arjun Erikaisi, Prak Gnananda, Pranav, Arikrishna advanced to the 4th round..


Leather World Vegan Leather 15.6 Inch Laptop Office Briefcase Messenger Bag Satchel for Men and Women, with Adjustable Strap and Expandable Bottom






Actual Price: 2999

Offer Price : 999

Benefit : Rs. 2000



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47OsEw7


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - மதுரையில் 3 ஆசிரியர்கள் மீது POCSO வழக்கு

 

 

 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - மதுரையில் 3 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு


மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு வருவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் பகுதியில் பிரபல அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு செய்வதாகவும், வகுப்பறையில் பாடமெடுக்கும் போது, ஆபாசமான வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்வதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.


இந்நிலையில், மாணவிகளின் புகார் குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மாணவிகள் நேரில் சென்று புகார் கொடுத்துள்ளனர். அதில், “அப்பள்ளியில் பணிபுரியும் ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து மாணவிகளை தவறான இடங்களில் தொட்டு பாலியல் தொந்தரவு செய்கிறார். அவருக்கு ஆதரவாக தலைமை ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியரும் செயல்படுகின்றனர். உதவி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்குள் பிரச்சினையை உருவாக்கி இரு கோஷ்டியாக பிரிக்கிறார்.


மாணவர்கள் மது அருந்திவிட்டும் பள்ளிக்கு வருகின்றனர். இதை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளியை வாடகைக்கு விடுகின்றனர். பள்ளி வகுப்பறைகளில் பீடி, சிகரெட் துண்டுகள் கிடக்கின்றனர்” என குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் ஆகிய மூன்று பேர் மீதும் POCSO சட்டத்தில் தெற்கு மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.




Bajaj iLED 8.5W Rechargeable Emergency Inverter LED Bulb | Cool Day Light | Upto 4 Hours Battery | B22D | (Pack of 1, White)





Actual Price: 685

Offer Price : 187

Benefit : Rs. 498



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47HBUSt





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

  மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில்...