கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSTC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNSTC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 3274 ஓட்டுநர் - நடத்துநர் வேலை வாய்ப்புகள்



அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் TNSTC 3274 ஓட்டுநர் - நடத்துநர் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-04-2025


TNSTC Arasu bus job notification


3274 Driver cum Conductor Job Opportunities in the TamilNadu State Transport Corporation


 அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர் - கண்டக்டர் வேலை வாய்ப்பு


தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் Cum நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு 


இன்று (21-03-2025) தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு.



தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3274 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு 8 போக்குவரத்து கழகங்களில் 25 மண்டலங்களில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்: ஓட்டுநர் உடன் நடத்துநர்


பணிக்காலியிட எண்ணிக்கை: 3274


1.மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை - 364

2.அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) வரையறுக்கப்பட்டது சென்னை - 318

3.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட் - 322


விழுப்புரம் - 88

வேலூர் - 50

காஞ்சிபுரம் - 106

கடலூர் - 41

திருவண்ணாமலை- 37

4.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் - 758

கும்பகோணம் -101

நாகப்பட்டிணம் - 136

திருச்சி - 176

காரைக்குடி - 185

புதுக்கோட்டை - 110

கரூர் - 48

5.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (சேலம்) லிட் - 486

சேலம்-382

தர்மபுரி- 104

6.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (கோவை) லிட் - 344

கோவை-100

ஈரோடு - 119

ஊட்டி - 67

திருப்பூர் - 58

7.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் - 322

மதுரை - 190

திண்டுக்கல்- 60

விருதுநகர் - 72

8.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்

திருநெல்வேலி - 139

நாகர்கோவில்- 129

தூத்துக்குடி - 94


உயது வரம்பு: 01.07.2025 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்


அதிகபட்ச வயது 01.07.2025 அன்று : பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர் மரவினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் (BC/MBC/DNC/SC/ST)45வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். முன்னாள் இராணுவத்தினருக்கு பொது வகுப்பினர் (OC) 50 வயது பூர்த்தியாகாமலும் மற்றும் இதர வகுப்பினர் (BC/MBC/DNC/SC/ST) 55 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.


கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருத்தல் அவசியம்.


முக்கிய தகுதிகள்: செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2025-க்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும்.


உயரம் மற்றும் எடை: உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ. எடை குறைந்தபட்சம் 50 கிலோகிராம்.


உடல் தகுதி:

1. தெளிவான குறைபாடுகளற்ற (Clear Eyesight) கண் பார்வை பெற்றிருத்தல் வேண்டும்.

2. எவ்விதமான உடல் அங்க குறைபாடுகள் (Physical Deformity) அற்றவராக இருத்தல் வேண்டும்..


சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுநர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது.


• மேலே கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வங்கி சேவை கட்டணம் நீங்கலாக (SC / ST) பிரிவினர் ரூ.590/- (18% GST உட்பட) கட்டணமாகவும் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக இதர பிரிவினர் ரூ.1180/-(18% GST உட்பட) கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.


• விண்ணப்பதாரர்கள் முறையே எழுத்து, தேர்வு செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


• விண்ணப்ப கட்டணம் எந்த காரணத்தை முன்னிட்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது.


• விண்ணப்பதாரர்கள் எழுத்து / செய்முறை / நேர்முகத் தேர்விற்கு வருவதற்கான பயணச்செலவு மற்றும் இதர செலவு தொகை ஏதும் வழங்கப்படமாட்டாது.


• இந்நியமனம் தொடர்பாக நடத்தப்படும் எழுத்து / செய்முறை/ நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிய www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.


• இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் 21/03/2025 மதியம் 01.00 மணி முதல் 21/04/2025 மதியம் 01.00 மணி வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு இணைப்பு முடக்கப்படும்.


• இதர விபரங்கள் போக்குவரத்துக் கழக பொதுப்பணி விதிகள் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டது, தகுதி பெறாதவர்களின் விண்ணப்பங்களை எவ்வித அறிவிப்புமின்றி நிராகரிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அதிகாரம் உண்டு.


• சென்னை உயர்நீதிமன்ற W.P. No.20290 of 2012 நாள் 27.08.2014 மற்றும் W.A.No..1737 of 2014 நாள் 20.06.2019 வழக்கில் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.

www.arasubus.tn.gov.in

• தேர்வு அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்கள் என்ற இணையதளத்தில் அவ்வப்போது பதிவிடப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் இத்தளத்தை அவ்வப்போது காணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு (TNSTC) 812 ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) வெளியீடு (Government Order (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) issued for recruitment of 812 drivers and conductors for Tamil Nadu State Transport Corporation)...

 


>>> தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு (TNSTC) 812 ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) வெளியீடு (Government Order (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) issued for recruitment of 812 drivers and conductors for Tamil Nadu State Transport Corporation)...


கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


கும்பகோணம், சேலம், கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 போக்குவரத்துக் கழகங்களில் 812 டிசிசி (Driver cum Conductor) பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கும்பகோணம் (291), சேலம் (423), கோவை (60), மதுரை (272), திருநெல்வேலி (376) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 1422 நடத்துநர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர், போக்குவரத்து துறையின் மூத்த நிதி அலுவலர் ஆகியோருடன் நிதித்துறைச் செயலர் நடத்திய கூட்டத்தில், கும்பகோணம், சேலம், கோவை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 60 சதவீத நடத்துநர் காலிப்பணியிடங்களையும், மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 50 சதவீத நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்பலாம் என முடிவு செய்யப்பட்டது.


அதேநேரம், ஓட்டுநர், நடத்துநர் பிரிவில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் யாராவது ஒருவர் விடுப்பு எடுத்துக் கொண்டாலும், பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளதைப் போல ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களை நியமிப்பதன் மூலம் பேருந்துகளை சீராக இயக்க முடியும். ஏராளமான காலிப்பணியிடங்களை டிசிசி பணியாளர்களை தேர்வு செய்வதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களால் சமாளிக்கவும் முடியும். எனவே, இதர போக்குவரத்துக் கழகங்களிலும் டிசிசி பணியாளர்களை நியமிக்கலாம் என கடந்த ஆண்டு தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற செயலாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான தகுதிகள்


** 10ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


** கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும். அதுதவிர நடத்துனர் லைசென்ஸ் இருக்க வேண்டும்.


சம்பள விவரம்


** ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான ஊதியமாக ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கும்பகோணம் மற்றும் திருச்சியிலிருந்து வார இறுதி நாட்களான ஜூலை 8 மற்றும் ஜூலை 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (TNSTC Announcement that 300 special buses will be operated from Kumbakonam and Trichy on the weekends of July 8 and July 9)...


கும்பகோணம் மற்றும் திருச்சியிலிருந்து வார இறுதி நாட்களான ஜூலை 8 மற்றும் ஜூலை 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (Announcement that 300 special buses will be operated from Kumbakonam and Trichy on the weekends of July 8 and July 9)...


தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.


எதிர்வரும் 9-ம் தேதி அதிக அளவில் திருமணங்கள் நடைபெற உள்ளதாலும், வார இறுதி நாட்களாக உள்ளதாலும்,


வார இறுதி நாட்களான 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் தஞ்சாவூர்,


பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் வேதாரண்யம். திருத்துறைப்பூண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும்,


திருச்சியிலிருந்து கோயமுத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2022-2023ஆம் ஆண்டு - TNSTC நிறுவனத்தில் - மாதம் ரூ.9000 உதவித் தொகையுடன் பட்டம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பு (2022-2023 Year - TNSTC - Notification for engagement of Graduate and Diploma Apprentices - Monthly Stipend: Rs.9000/- for Graduate Apprentice and Rs.8000/- for Diploma Apprentice - One Year Training)...


 TAMIL NADU STATE TRANSPORT CORPORATION LTD

Notification for engagement of Graduate and Diploma Apprentices under the Apprenticeship (Amendment) Act 1973 for the year 2022 – 23

TNSTC  - Villupuram, TNSTC - Kumbakonam, TNSTC - Salem, TNSTC –Madurai, TNSTC  – Dindigul, TNSTC – Dharmapuri, TNSTC – Virudhunagar, and SETC TN - Chennai  invites Online application from eligible Graduate/Diploma holders in Engineering ( Passed during 2020, 2021 & 2022), hailing from Tamilnadu, for undergoing one year  Apprenticeship training under the Apprenticeship (Amendment) Act 1973.

I . Monthly Stipend: Rs.9000/- for Graduate Apprentice and Rs.8000/- for Diploma Apprentice Duration of Training – One Year


>>> 2022-2023ஆம் ஆண்டு - TNSTC நிறுவனத்தில் - மாதம் ரூ.9000 உதவித் தொகையுடன் பட்டம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பு (2022-2023 Year - TNSTC - Notification for engagement of Graduate and Diploma Apprentices - Monthly Stipend: Rs.9000/- for Graduate Apprentice and Rs.8000/- for Diploma Apprentice - One Year Training)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி பயில முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

   உயர்கல்வி பயில்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக...