>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
*மூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் மாநில அளவிலான பயிற்சி
15.12.22
16.12.22
17.12.22
*மாவட்ட அளவிலான பயிற்சி
19.12.22
20.12.22
21.12.22
*ஒன்றிய அளவிலான பயிற்சி
02.01.23
03.01.23
04.01.23
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
*மூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் மாநில அளவிலான பயிற்சி
15.12.22
16.12.22
17.12.22
*மாவட்ட அளவிலான பயிற்சி
19.12.22
20.12.22
21.12.22
*ஒன்றிய அளவிலான பயிற்சி
02.01.23
03.01.23
04.01.23
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.12.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: அன்புடைமை
குறள் : 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
பொருள்:
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்
பழமொழி :
Where there is anger, there may be excellence.
கோபம் உள்ள இடத்தில் தான் குணமும் இருக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள்.
2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்
பொன்மொழி :
எல்லாப் பதில்களையும் தெரிந்து கொள்வதை விட, சில கேள்விகளை தெரிந்து கொள்வது சிறந்தது. --ஜேம்ஸ் தர்பர்
பொது அறிவு :
1. உலோகம் சாராத கனிமம் எது?
ஜிப்சம் .
2. தீப்பற்றாத மரம் எது?
செம்மரம்.
English words & meanings :
cereal - a breakfast food. noun. ஒரு வகை காலை உணவு. பெயர் சொல். serial - sequential. தொடர்கதை. noun. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
ஒரு முட்டையில் துத்தநாகத்துடன் நல்ல அளவு வைட்டமின் பி 6 மற்றும் பி 12 உள்ளன. அவை 'நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், அவை காய்ச்சல் மற்றும் குளிர்ச்சிக்கு எதிராக போராட உதவுகின்றன. முட்டை வைட்டமின் டி இன் நல்ல மூலமாக இருப்பதால், உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் உதவும்.
NMMS Q
சூரிய மின்கலம் ஒளி ஆற்றலை ___________ ஆற்றலாக மாற்றுகிறது.
a) வேதி. b) மின். c) வெப்ப d) ஒலி.
விடை: மின்
டிசம்பர் 07
கொடி நாள் (இந்தியா)
கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நீதிக்கதை
மலைப்பாம்பும் மான் குட்டியும்
ஒரு நாள் மான்குட்டி ஒன்று தனது தாய்க்காக நாவல் பழங்களை பறிக்க ஆற்றை கடந்தது. அப்போது அங்கு குறட்டி என்ற பெயரைக்கொண்ட ஒரு மலைப்பாம்பு இருந்தது. அது இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும். அது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் கொண்டது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது மிக கடினம்.
மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும்.
ஆனால் குறட்டி வித்தியாசமாக காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில் நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது. குறட்டி ஆற்றங்கரையையே பார்த்துக்கொண்டு இருந்தது. ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டியைப் பார்த்தது. மான்குட்டி தனது பக்கமாக வரும்வரை காத்திருந்தது. மானும் ஆற்றைக் கடந்து குறட்டி இருக்கும் இடத்தை நோக்கி வந்தது. மானை குறட்டி சுற்றிக்கொண்டது. அம்மா என்று கதறியது மான்குட்டி. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது. பாவமாக இருந்தது.
மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது. குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் தப்பிக்க போராட்டம் நடத்தும். மான் குட்டியைப் பார்த்து, நீ ஏன் அழுகிறாய் என்றது குறட்டி. மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு எப்படியும் நான் சாகுவது உறுதி. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் எனக்கு உதவுங்கள் என்றது மான். நான் எப்படி உதவ முடியும்? என்றது.
மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு நான் வருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு என்றது மான். நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியேன்றால் நீ என் கூடவே வா... நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு.
உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன? என்றது குறட்டி. என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன். நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும் என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டு மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது. தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது.
நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால் அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும் என்றது குறட்டி. நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன் என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடிய மான் குட்டி தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது.
குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களில் மறைந்து கொண்டது. அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன. அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விடுமே என்று நினைத்தது. பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக்கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர்ந்தது.
அதே மான்குட்டி தனியாக வந்தது. என் கடமை முடிந்தது. எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன். உனக்கு எனது நன்றி என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி. குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது.
எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன். உன்னை கொன்று தின்னப்போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்? நீ சொன்னது சரிதான்... ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?
குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்குகிறேன் என்று சொல்லி, குறட்டி அதனை உயிரோடு விட்டுச்சென்றது.
நீதி :
எப்போது மற்றவருக்கு உதவும் குணம் இருத்தல் வேண்டும்.
இன்றைய செய்திகள்
07.12.22
* அடாப்டிவ் டிராஃபிக் சிக்னல்: சென்னை நெரிசலைக் குறைக்க வருகிறது நுண்ணறிவு போக்குவரத்து திட்டம்.
* கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் குரூப்-3ஏ தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
* மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை புயலாக வலுவடையக்கூடும் என்பதால், தமிழகத்தில் 9-ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அன்றைய தினம் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடந்தது.
* கரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வக விஞ்ஞானி தனது புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
* இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரிஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* முதலாவது டிவிசன் ஹாக்கி லீக்: மின்சார வாரிய அணி வெற்றி.
* 2027-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பில் இருந்து பின்வாங்கியது இந்தியா.
Today's Headlines
* Adaptive traffic signal: Intelligent traffic scheme coming to reduce congestion in Chennai.
* The Madras High Court has directed the Tamil Nadu Department of School Education and Higher Education to re-examine the teacher appointment procedures in three months so that only educated people can be appointed directly to the educational institutions.
* The Tamil Nadu Public Service Commission has announced that the Group-3A examinations will be conducted at the examination centers in 15 districts of Tamil Nadu.
* The Chennai Meteorological Department has warned that there is a possibility of very heavy rain in Tamil Nadu on the 9th as the deep depression moving in the west-northwest direction may intensify into a storm this evening. A red alert was issued for many districts on that day.
* The meeting of representatives from G20 member countries began in Udaipur, Rajasthan. On the first day of the meeting, discussions were held on important issues including technology transfer.
* A Wuhan laboratory scientist in China claims in his new book that the coronavirus was created by humans.
* Former player Rishikesh Kanitkar has been appointed as the batting coach of the Indian women's cricket team.
* 1st Division Hockey League: Power Board Team Win.
* India has backed up its bid to host the 2027 Asian Cup football tournament.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மேஷம்
டிசம்பர் 07, 2022
குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபிட்சம் உண்டாகும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : சுபிட்சம் உண்டாகும்.
பரணி : எண்ணங்கள் ஈடேறும்.
கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------
ரிஷபம்
டிசம்பர் 07, 2022
மனதில் ஒருவிதமான குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களிடத்தில் கோபமின்றி செயல்படவும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சலுக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். செய்கின்ற முயற்சிகளில் உழைப்பு மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : கோபமின்றி செயல்படவும்.
ரோகிணி : உழைப்பு மேம்படும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
டிசம்பர் 07, 2022
எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை அளிக்கும். வெளியூர் நபர்களின் மூலம் தொழிலில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றத்தின் மூலம் முன்னேற்றமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
டிசம்பர் 07, 2022
குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவு எடுக்கவும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரத்தின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : காரியங்கள் ஈடேறும்.
---------------------------------------
சிம்மம்
டிசம்பர் 07, 2022
சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். தன்னம்பிக்கையான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : முடிவு கிடைக்கும்.
பூரம் : இன்னல்கள் நீங்கும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
கன்னி
டிசம்பர் 07, 2022
பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். தந்தை வழியில் உதவி கிடைக்கும். மனதை உறுத்திய சில கவலைகள் படிப்படியாக குறையும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
அஸ்தம் : விரயங்கள் ஏற்படும்.
சித்திரை : கவலைகள் குறையும்.
---------------------------------------
துலாம்
டிசம்பர் 07, 2022
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். முன்கோபத்தை குறைத்து கொள்வதால் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : நம்பிக்கை மேம்படும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
விருச்சிகம்
டிசம்பர் 07, 2022
எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : உதவி கிடைக்கும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : முடிவு கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
டிசம்பர் 07, 2022
குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை மேம்படும். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முக்கிய ஆவணங்களில் கவனம் வேண்டும். இழுபறியான சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மூலம் : ஒற்றுமை மேம்படும்.
பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திராடம் : முடிவு கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
டிசம்பர் 07, 2022
குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் அடைவீர்கள். தவறிப்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இணைய வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் அமையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். நிறைவான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : ஆதாயம் அடைவீர்கள்.
திருவோணம் : நெருக்கம் உண்டாகும்.
அவிட்டம் : திறமை வெளிப்படும்.
---------------------------------------
கும்பம்
டிசம்பர் 07, 2022
பெரியவர்களின் ஆலோசனைகளால் நம்பிக்கை உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் நெருக்கடியான சூழல் உண்டாகும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : நம்பிக்கை உண்டாகும்.
சதயம் : நெருக்கடியான நாள்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
மீனம்
டிசம்பர் 07, 2022
பிள்ளைகள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். தொழில் சார்ந்த முயற்சிகளில் உடனிருப்பவர்களால் காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வியாபாரத்தில் புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிடிவாத குணத்தினை மாற்றி கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும்
உத்திரட்டாதி : ஆதரவான நாள்
ரேவதி : தீர்வு கிடைக்கும்
ஒரு மைல் அற்புதம் - மனத்தடையே காரணம் - ரோஜர் பேனிஸ்டர் - Roger Gilbert Bannister (One Mile Miracle - Reluctance is the reason)...
3 மாதங்களில் ஆசிரியர் நியமன முறைகளில் மறு ஆய்வு செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்..
தொலைத்தூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை - உயர்நீதிமன்றம் கருத்து...
சென்னை: தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியை நித்யா, பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வு முன்பாக இன்று (டிசம்பர் 6) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'ஆசிரியை நித்யா, பி.எட் தமிழில் படித்துப் பின்னர், பி.ஏ. ஆங்கிலம் படித்ததாலும், பி.ஏ.,வை தொலைதூரக் கல்வியில் படித்ததாலும் அவருக்கு ஆங்கில ஆசிரியை பிரிவில் பதவி உயர்வு வழங்க முடியாது' என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆசிரியை நித்யா தமிழ் ஆசிரியை பிரிவில் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.
மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்கள்தான் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட நீதிபதி, இட ஒதுக்கீட்டின் கீழ் நியமித்தாலும் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், தற்போது தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணியில் இருப்பது வேதனைக்குரியது என்றும் கூறினார். அதுமட்டுமின்றி தொலைதூரக் கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறைகளை தமிழக அரசு 3 மாதங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
TamilNadu Paramedical துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் 17.06.2025 முதல் துவங்குகிறது Counseling application for Paramed...