கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Sivagangai - Ilaiyankudi Azhimadurai - Children who went to school and Anganwadi drowned in the water



சிவகங்கை - இளையான்குடி ஆழிமதுரை - பள்ளி மற்றும் அங்கன்வாடிக்குச் சென்ற குழந்தைகள் கண்மாயில் மூழ்கி உயிரிழப்பு


Sivagangai - Ilaiyankudi Azhimadurai - Children who went to school and Anganwadi drowned in the water


இளையான்குடி அருகே பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய மாணவிகள் 2 பேர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். உடல்களை எடுக்க அனுமதி மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் அருகருகே உள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் மகள் சோபிதா (8) அப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது சகோதரர் கண்ணன் மகள் கிறிஸ்மிகா (4) அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்தார். இன்று பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு சென்ற இரு குழந்தைகளும் காலை 10 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க அருகேயுள்ள கண்மாய்க்கு சென்றனர்.


இதனை ஆசிரியரும், அங்கன்வாடி மைய ஊழியரும் கவனிக்கவில்லை. இந்நிலையில், கிறிஸ்மிகாவை வீட்டுக்கு அழைத்து செல்ல பிற்பகல் 1 மணிக்கு அவரது தாயார் மையத்துக்கு சென்றுள்ளார். ஆனால் அவரையும், பள்ளியில் இருந்த சோபிதாவையும் காணவில்லை. இதையடுத்து அருகேயுள்ள கண்மாயில் தேடியபோது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், கிராம மக்கள் பள்ளி, அங்கன்வாடி மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



மேலும் பிரேத பரிசோதனைக்காக குழந்தைகளின் உடல்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை. அவர்களிடம் கோட்டாட்சியர் விஜயகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதை ஏற்க மறுத்து, மாவட்ட ஆட்சியர் நேரில் வர வேண்டும். குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


அதைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கோரிக்கை தொடர்பாக இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 6 மணிக்கு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து உடல்களை இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



IGNOU B.Ed degree is equivalent to the Tamil Nadu Universities B.Ed degree - G.O.(Ms) No: 160, Dated : 02-12-2024

 

நியூ டெல்லி,  இந்திராகாந்தி தேசிய திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் பட்டத்தை தமிழகப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பி.எட் பட்டத்திற்கு இணையாக மதிப்பீடு செய்து அதை தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் பள்ளி உதவி ஆசிரியர் நேரடி பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு உரிய தகுதியாக அங்கீகரித்து அரசாணை வெளியீடு


பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 160, நாள் : 02-12-2024


School Education Department Ordinance G.O.(Ms) No: 160, Dated : 02-12-2024


The B.Ed degree awarded by Indira Gandhi National Open University is equivalent to the B.Ed degree awarded by Tamil Nadu Universities - Evaluating equivalent to the degree and recognizing it as eligible for direct recruitment and promotion of School Teachers in schools in Tamil Nadu and issue an ordinance. 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


One week jail term and ₹5000 fine for CEO - HC orders


முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் -  உயர்நீதிமன்றம் உத்தரவு


One week jail term and ₹5000 fine for Chief Education Officer - High Court orders


நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு



நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட முன்னால் முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுவுக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு



பணி நிரந்தரம் தொடர்பாக தற்காலிக ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என நீதிபதி விக்டோரியா கெளரி அவர்கள் உத்தரவு


நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக் கல்வித் துறை செயலர், மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசுக்கு ஒரு வார சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ஆசிரியை ஹெலினி ரோனிகா ஜோசுபெல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடற்க்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தேன்.


இந்த பள்ளியில் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர் பணியிட மாற்றம் செய்து சென்று விட்டதால் காலியாக இருந்த உடல் கல்வி ஆசிரியர் பணியை எனக்கு வழங்க பள்ளி நிர்வாகம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு பரிந்துரை செய்தது. ஆனால் பல காரணங்களை கூறி என்னை பணி நிரந்தரம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தேன். வழக்கு விசாரணை செய்த நீதிமன்றம் எனக்கு பணி நிரந்தரம் வழங்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.


ஆனால் உத்தரவு பிறப்பித்து இதுவரை நீதிமன்ற உத்தரவின் படி எனக்கு பணி வழங்கவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித்துறை செயலர், இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு இன்று நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசு மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கையின் கீழ் கல்வி அதிகாரிக்கு ஒரு வார சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


மேலும் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றி பிப்ரவரி 26 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.







An appeal filed by the Tamil Nadu government in the Supreme Court has been withdrawn against the Madras High Court Judgment that TET (Teacher Eligibility Test) is not mandatory for minority school teachers



 சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனு  வாபஸ் 


An appeal filed by the Tamil Nadu government in the Supreme Court has been withdrawn against the Madras High Court Judgment that TET (Teacher Eligibility Test) is not mandatory for minority school teachers.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




வணக்கம்,


சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனு  வாபஸ் பெறப்பட்டுள்ளது என்கின்ற நிறைவான  செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.


இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவைகளில் இருந்த பல நெருக்கடிகள்  இந்த மனு வாபஸ் மூலம் விலகும் என்பதை அறிவீர்கள்.


இந்நிலையில், ஆசிரியர் பெருமக்களின் நலனை முன்னிறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட சட்டரீதியிலான  முயற்சிகளின் பலனாக ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத்தீர்வின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் , நன்றி தெரிவிக்கவும் நாளை (20.02.2025) சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நலன்  காக்கும்  மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்களை  சந்திக்க  முடிவு செய்து இருக்கிறோம்.


சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்லாமல்,

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும்,

அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்,ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழும் அண்ணன் தளபதி அவர்களின் திராவிட மாடல் அரசிற்கு என்றும் தோள் கொடுப்போம்.


என்றும் மக்கள் பணியில்,


இனிகோ இருதயராஜ், எம்எல்ஏ.,


Lack of attendance - denying permission to write exam - High Court dismissed the appeal

 

 வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து மாணவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.


The Madras High Court dismissed the appeal filed by the student against the order denying him permission to write the university examination due to lack of attendance.


வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது முறையாக வருகைப் பதிவை வைத்திருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும்.


கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது எனப் பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து



வருகைப்பற்றாக்குறையை மன்னிக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது, 


இது வழக்கமாக வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை கேலி செய்வதாக இருக்கும் என்று கூறுகிறது. 


வருகைப்பதிவு குறைபாட்டிற்கு மன்னிப்பு கோரி நீதிமன்றத்தை அணுகிய மாணவருக்கு நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் மறுத்துவிட்டது. 

அவரை "இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்பிய துரதிர்ஷ்டவசமான மாணவர்" என்று நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி சி குமரப்பன் பெஞ்ச் குறிப்பிட்டது, 

நீதிமன்றம் அந்த மாணவருக்கு அனுதாபம் காட்டினால், அது தவறான அனுதாபமாகவும், வகுப்புகளுக்கு தொடர்ந்து வரும் மாணவர்களை கேலி செய்வதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டது. நீதிமன்றங்கள் கல்வி விஷயங்களில் தலையிட முடியாது என்றும், 

இதுபோன்ற விஷயங்களை கல்வியாளர்களின் அறிவுக்கே விட்டுவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. 

“கல்வி விஷயங்களில் இந்த நீதிமன்றம் தலையிடாது, அதை கல்வியாளர்களின் அறிவுக்கே விட்டுவிட்டது என்று பலமுறை கூறப்பட்டு வருகிறது.

 UGC ஒழுங்குமுறைக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வருகைப்பதிவு தேவைப்படுகிறது மற்றும் ஒரு மாணவர் அந்த சதவீத வருகைப் பதிவைக் கொண்டிருக்கவில்லை என்றால், மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்பது மட்டுமே முடிவு. 

பல்கலைக்கழகத்தின் கற்றறிந்த ஆலோசகர் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த நீதிமன்றம் அத்தகைய மாணவர்களை அனுதாபத்தைத் தேர்வுசெய்தால், அது தவறான அனுதாபமாக மட்டுமே இருக்கும், மேலும் அது வகுப்புகளுக்குத் தவறாமல் கலந்துகொள்ளும் மாணவர்களை கேலி செய்வதாக இருக்கும்” என்று நீதிமன்றம் கூறியது.


மன்னிக்கத்தக்க 65% வருகைப்பதிவு மாணவருக்கு இல்லாததால், பல்கலைக்கழகம் தேர்வு எழுத அனுமதி மறுத்து, அவரைப் பட்டியலில் இருந்து நீக்கியதாகக் கூறி தனி நீதிபதி நிவாரணத்தை மறுத்துவிட்டார். 

தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்ததால், மாணவர் மேல்முறையீடு செய்தார். இதுபோன்ற வழக்குகளில் சட்டத்தின் ஆட்சியை கடுமையாகப் பயன்படுத்தக் கூடாது என்று வாதிடுவதற்கு மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை நம்பியிருந்தாலும், அந்த வழக்கின் விசித்திரமான உண்மைகளைக் கருத்தில் கொண்டு இந்த அவதானிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதை முன்னுதாரணமாகக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. அந்த மாணவன் தேர்வு எழுதுவதற்கு போதுமான வருகைப் பதிவு இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 

யுஜிசி விதிமுறைகளின்படி, மாணவர் 75% வருகையைப் பெற வேண்டும் என்றும், மன்னிக்கத்தக்க 10% வரம்பையும் வழங்கியது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதாவது, ஒரு மாணவர் தேர்வுக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 65% வருகைப் பதிவு பெற்றிருக்க வேண்டும். தற்போதைய வழக்கில், 10% மன்னிக்கக்கூடிய வரம்பைச் சேர்த்த பிறகும், மாணவர் 67% வருகையைப் பெறுவார், இது 75% வருகையை விட 8% குறைவாக இருக்கும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் எந்தவித குறைபாடும் இல்லை என கருதி, நீதிமன்றம் தலையிட விரும்பாமல், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 

எவ்வாறாயினும், தேவையான கட்டணத்தை செலுத்துவதன் மூலம் மாணவர் படிப்பை மீண்டும் செய்யத் தயாராக இருக்கிறார், பல்கலைக்கழகம் மாணவர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, மாணவர் தொடர்ச்சியான படிப்பிற்கான நல்ல சூழ்நிலையைப் பெறுவதை உறுதிசெய்ய முடியும் என்று நீதிமன்றம் மேலும் கூறியது. 

மேல்முறையீட்டாளருக்கான வழக்குரைஞர்: திரு. எஸ்.சிலம்பனன், , திரு.கே.வசந்தநாயகனன் மூத்த வழக்கறிஞர் 

பிரதிவாதிக்கான வழக்கறிஞர்: திருமதி. பி.ஆர். உமாமகேஸ்வரி 

வழக்கு தலைப்பு: கே. ஷ்ரிஷ் எதிராக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் 

வழக்கு எண்: W.A.No.3487 of 2024 


தீர்ப்பைப் படிக்க/பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்



Madras HC Declines Student's Plea To Condone Attendance Shortage, Says It Would Amount To Mocking Students Who Attend Classes Regularly


The Madras High Court recently refused relief to a student who had approached the court seeking condonation of deficiency of attendance.


Calling him an “unfortunate student who wanted to ride two horses” the bench of Justice R Subramanian and Justice C Kumarappan noted that if the court chose to sympathize with the student, it would only be misplaced sympathy and amount to mocking students who attend the classes regularly. The court also added that the courts could not interfere in academic matters and had to leave such matters to the wisdom of academicians.


“It has been repeatedly held that in academic matters this Court will not interfere and leave it to the wisdom of the academicians. The UGC Regulation requires a particular percentage of attendance and if a student does not possess that percentage of attendance, the only result could be the students cannot appear for the examination. As rightly pointed out by the learned counsel for the University if this Court chooses to sympathize with such students, it will be only mis-placed sympathy and it would amount to mocking of students who attended the classes regularly,” the court said.


The appellant K Shrish who was pursuing II year B.Com had approached the court after the University refused to permit him to write examinations citing shortage of attendance which was beyond the condonable 10%. He had approached the court seeking directions to the Controller of Examination, The Dean, and the Head of the Department of SRM Institute of Science and Technology to permit him to write the 3rd-semester examination and to permit him to attend classes for the academic year 2024-25.


The single judge had refused relief stating that since the student did not have the condonable 65% attendance, the University had rightly refused permission to write exams and removed him from the rolls. Since the single judge, dismissed the plea, the student filed the appeal.


Though the student relied upon an earlier decision of the Madras High Court to argue that the rule of law should not be applied rigidly in such cases, the court held that the observation was made taking into consideration the peculiar facts of that case and could not be treated as a precedent.


The court noted that the student did not have sufficient attendance enabling him to write the examinations. The court noted that as per the UGC regulation, the student required 75% attendance and also provided a condonable 10% limit. This meant that a student should have had minimum 65% attendance to enable him to appear for examinations. In the present case, the court noted that even after addinga 10% condonable limit, the student would get only 67% attendance, which would still be 8% less than the required attendance of 75%.


Thus, finding no infirmity in the order of the single judge, the court was not inclined to interfere and dismissed the appeal. However, the court added that of the student is willing to redo the course by paying the required fee, the University can take the student back into the rolls and ensure that the student gets a good ambiance for continuing studies.


Counsel for Appellant: Mr. S. Silambanan, Senior Advocate for Mr. K. Vasanthanayagan


Counsel for Respondent: Mrs. P. R. Umamaheswari


Case Title: K. Shrish v The Controller Of Examination


Citation: 2025 LiveLaw (Mad) 64


Case No: W.A.No.3487 of 2024


Click Here To Read/Download The Judgment



We have fulfilled 90% of our promises - Chief Minister Mr. M.K.Stalin


 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் - முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்


We have fulfilled 90% of our promises - Chief Minister Mr. M.K.Stalin


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது,  அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நிச்சயம் அனைத்து வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதேபோல், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களைப் போன்று, தேர்தல் நேரத்தில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம்.


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





"Perasiriyar Anbazhagan Award" for Best Schools - DSE Proceedings & Form



பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - "பேராசிரியர் அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 010421/ எம்2/ இ2/ 2025,  நாள்: 18-02-2025 &  படிவம் 



"Perasiriyar Anbazhagan Award" for Best Schools - Request for Selection and Referral of Eligible Schools - Regarding - Proceedings of Director of School Education Rc.No. : 010421/ M2/ E2/ 2025, Date: 18-02-2025 & Form



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Important notes for students who are going to write NMMS exam tomorrow 22-02-2025

     நாளை 22-02-2025 NMMS தேர்வினை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள் Important notes for students who are going to write NMMS e...