கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு



மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு


ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிறப்பித்த புதிய அறிவிப்பாணைப்படி, வந்தே மாதரமும், தேசிய கீதமும் அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது


வந்தே மாதரம், தேசியகீதம் இரண்டில், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும்; மாநில பாடல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.


இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை உறுதி செய்ய கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பில் மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் என கூறப்படவில்லை என பதில்.



மாணவர்கள் மீதான FIRகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் முடிவு



மாணவர்கள் மீதான FIR-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு


* நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான FIR-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு.


* இது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயம் என்பதால், வன்முறையில் ஈடுபட்டவர்கள் தவிர மற்றவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், போலீசாரின் அத்துமீறல் புகார்கள் குறித்து விசாரிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உள்ளதாகவும் தெரிவிப்பு.


 Students Protests | Supreme Court


அண்ணாமலையார் கோயிலுக்குள் செப்டம்பர் 1 முதல் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை


பக்தர்கள் வசதிக்காக 5 இடங்களில் கட்டண பாதுகாப்பு அறைகள் அமைப்பு



முதலமைச்சர் கோப்பை (CM Trophy) விளையாட்டு போட்டிகளுக்கு பதிவு செய்வதற்கான Link

 


முதலமைச்சர் கோப்பை (CM Trophy) விளையாட்டு போட்டிகளுக்கு பதிவு செய்வதற்கான Link

👇👇👇


https://tncmtrophy.sdat.in/register/guidelines


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு சேர்க்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த வேண்டுகோளினை வெளிப்படுத்துகின்றோம்


*AIFETO... 18.08.2026.*



*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*


*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள தவெக அரசு 100 நாள்களை நிறைவு செய்து இருக்கிறது!. வரவேற்க வேண்டிய அம்சங்களை வரவேற்க வேண்டியவர்கள் வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள்!. 60 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட இரண்டு கட்சிகளும் எதிர்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். சட்டப்பேரவையின் நிகழ்வுகளில் நீண்டகால அனுபவ கொள்முதலினைப் பெற்றவர்கள் அவர்கள்.. 100 நாள் சாதனைகளை தவிர்த்துக் கொண்டு விமர்சனங்களை  முன்வைக்கத்தான் செய்வார்கள். இது இயல்பான ஒன்றுதான்.*


 *ஆனால் எல்லோரும் ஒன்றை கருத்தொருமித்து வரவேற்றுப் பாராட்டுகிறார்கள்!.. சட்டப்பேரவையின் நிகழ்வுகளை நேரலையாக அன்றாடம் ஒளிபரப்புவது என்பது 60 ஆண்டுகால தமிழ்நாட்டு வரலாற்றில் நடைபெறாத நிகழ்வு என்பதை எவரும் மறுக்க முடியாது.*


 *நேரலையாக ஒளிபரப்பும் போது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை மக்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்ப்பதற்கான வாய்ப்பு அமையும். என்னதான் ஆளுங்கட்சியின் சாதனைகள் இருந்தாலும் விமர்சனங்களை எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்க முடியாது. ஆனால் முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு நேரலையாகவே சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பி வருகிறார்கள்.*


 *மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களை அனைத்து கட்சிகளும் பாராட்டத்தான் செய்கிறார்கள். காரணம் அனைவருக்கும் வாய்ப்புகளை சமமாக அளித்து வருகிறார். அமைச்சர்களின் உண்மைக்கு மாறான பேச்சினையும், தகவலினையும் அவை குறிப்பிலிருந்து நீக்கி அறிவிக்கிறார்.*


 *எங்களைப் போன்ற மூத்த இயக்க தலைவர்களின் அனுபவங்களை கனிவான பார்வைக்காக கொண்டு வருகிறோம்!...*


 *வலம் வரும் வதந்திகள் பல நேரங்களில் உண்மைக்கு புறம்பாக அமைந்து விடுகின்றன. சில நேரங்களில் வதந்திகள் உண்மையாக நிலைத்து நிற்பதும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தவரையில் பன்முகத்தன்மை கொண்ட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ஆ.ராஜ்மோகன் அவர்களை கல்வித்துறைக்கு அளித்துள்ளார்கள். வரவேற்று நன்றி பாராட்டுகிறோம்!..*


 *பள்ளிக்கல்வி இயக்குனர் பதவிக்கு மீண்டும் முந்தைய  ஆட்சியாளர்கள் காலத்தில் இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலரை பள்ளிக் கல்வி ஆணையராக நியமனம் செய்தார்கள். ஒட்டுமொத்த ஆசிரியர்களின் உச்சம் தொட்ட போராட்டங்களின் காரணமாக பள்ளிக்கல்வி ஆணையர் பதவி ரத்து செய்யப்பட்டது. இது முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.*


 *ஆனால் எப்படி  வதந்தி பரவுகிறது என்று தெரியவில்லை!. மீண்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர் ஒருவரை பள்ளிக்கல்வி ஆணையராக நியமனம் செய்ய இருப்பதாக பரவலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முந்தைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற ஆய்வு மனப்பான்மை கொண்டவர். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி இயக்குனர் வரிசையில் தான் அந்தப் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். என்ற நடைமுறையே தவெக அரசிலும் தொடர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் எதிர்பார்ப்பாகும்.*


 *இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்களைப் பொறுத்தவரையில் நிர்வாக பொறுப்புகளை தொடர்ந்து நடத்தி வருபவர்கள்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு பொதுமக்களுக்கு நன்மைகள் செய்வது மட்டுமின்றி  ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள அரசு என்பதையும் நாங்கள் நன்கறிவோம்!..*



*மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் 2.30 மணி நேரம் நிதிநிலை அறிக்கையினை தண்ணீர் கூட அருந்தாமல் படித்தார்கள். அதில் பள்ளிக்கல்வித்துறைக்கும் உயர்கல்வித்துறைக்கும் சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையினை விட குறைவாக ஒதுக்கீடு செய்துள்ளதை அறிந்து கொண்டோம்.*


 *சென்ற ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில்  செலவு செய்யப்படாத நிதியினை இந்த பட்ஜெட்டில் குறைத்துள்ளோம்.. என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சமாதானம் சொல்லி இருக்கிறார். அதேபோல ஓய்வூதிய திட்டத்தில் ஒதுக்கப்படுகிற நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. TAPS திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொதுவாக 3000 கோடி நிதி உள்ளிட்ட இரண்டையும் சேர்த்து 14 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீட்டினை குறைத்து இருக்கிறார்கள்.*


 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் அரசு ஒரு காலமும்  இந்தப் பாதிப்பினை செய்யாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.  ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பார்கள்!..*


 *முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் ஆட்சியினைப் பார்த்து கொண்டார்கள். ஆனால் நிர்வாகம் முழுவதையும் இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். அவர்கள் ஐந்து ஆண்டு காலமாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதையும் செய்ய விடவில்லை. செய்யலாம் என்று நினைத்த முதலமைச்சரையும் தடுத்தார்கள்.   இந்த அதிகாரிகளால் தான் பொதுத் தேர்தலில்  50 தொகுதிகள் இழப்பார்கள் என்று மூன்று ஆண்டுகாலமாக  செய்தியாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் பேட்டிகள் அளித்து வந்தோம். அதுதான் நடந்துள்ளது.*


 *தற்போது முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசிலும் நிதிநிலை அறிக்கையில்  ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எந்த நன்மையும் நடந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கத்தில் இந்த நிதியினை அதிகாரிகள் குறைத்துள்ளார்கள் என்ற விமர்சனம் ஏற்பட்டுள்ளது.*


*அதுமட்டுமல்லாமல் முந்தைய அரசு போல் முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசின் மீதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வெறுப்பினை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. நிதிநிலை அறிக்கையினை படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகளில் நிதிநிலை சரி செய்யப்படும் என்று மாண்புமிகு  நிதிஅமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவிக்கின்றார். ஆனால் நிதித் துறையிடமிருந்து தமிழ்நாட்டின்  நிதி நிலைமை சீராக இன்னும் 50 ஆண்டுகளாகும் என்று அவர்கள் செய்தியினை வெளியிடுகிறார்கள்.*


*இன்று 18.08.2026 சட்டப்பேரவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட  TAPS திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் 50% பென்சன் கண்டிப்பாக வழங்கப்படும். பணிக்கொடை  வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற உறுதியினை தெரிவித்து இருக்கிறார்கள்.. வரவேற்று பாராட்டுகிறோம்!..*


 *இருந்தாலும்...*


*தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை பரிசீலித்து, மாண்புமிகு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை  ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவார்கள்  என்ற நம்பிக்கை உணர்வு எங்களுக்கு இப்போதும் இருக்கிறது. என்ற நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்துகிறோம்.*


 *1999இல் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 12,000 பேருக்கு 2026 ஜனவரி முதல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். PAY MATRIX 45 செல்லில் இருந்து 50 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு உயர்த்தினால் மட்டுமே இனி அவர்கள் ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வு பெற முடியும். இந்தக் கோரிக்கையினை  அக்கறையுடன் அரசு உடனடியாக செய்ய வேண்டிய கோரிக்கையாகும்.*


*ஆசிரியர் சங்கங்களின் சார்பில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை விண்ணப்பத்தினை கொடுத்து விளக்கம் அளித்தும்  இதுவரை எட்டு மாதங்கள் ஆகியும் PAY MATRIX செல் அதிகரித்து வழங்கப்படாததால் ஆண்டு ஊதிய உயர்வே இல்லாமல் 12000 இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லாமல் பெரிதும் பாதிப்படைத்துள்ளார்கள்.*


 *மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கும், புலனப் பதிவு மூலமாக அனுப்பி உள்ளோம்!.*


 *எந்த காரணத்தை முன்னிட்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்திற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி தான் தொடர வேண்டுமே தவிர!..  இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர் ஒருவரை பள்ளிக்கல்வி ஆணையராக நியமனம் செய்யும் நடைமுறையினை அறவே தவிர்த்து நீண்ட காலமாய் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து வரும் நடைமுறையினை பாதுகாத்திட வேண்டுமாய் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் உணர்வுகளின் அடிப்படையில் இதனை தெரிவித்துக் கொள்கிறோம்!.*


 *ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் அவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அவர்கள், தமிழ்நாடு  பாடநூல் கழகத்தின் செயலாளர் என அனைவருமே  இந்திய ஆட்சிப் பணித்துறை சார்ந்த அலுவலர்கள்தான்..*


 *இவர்கள் அனைவரையும் கண்காணிக்கின்ற பொறுப்பு பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களிடம் உள்ளது.*


 *பள்ளிக்கல்வித்துறை ஆணையரை நியமனம் செய்வது வதந்தியாகவே இருக்கட்டும்!.. ஒருபோதும் உண்மையாக இருக்க வேண்டாம்!. என்று இயக்கத்தின் மூத்த தலைவர் என்ற முறையிலும் 54 ஆண்டு காலம் பொதுவாழ்வில்  அனுபவக் கொள்முதல் பெற்றவன் என்ற முறையில் தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்!.*


 *முற்றிலும் ஊழலற்ற ஆட்சியை எந்நாளும்  தொடர்ந்து நடத்திக் காட்டுவோம்!.  என்ற மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் சூளுரையினை வரவேற்று பெருமிதம் கொள்கிறோம்!*


*24.08.2026 அன்று நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் அறிவிப்புகள் வெளிவரும் என்ற நம்பிக்கை உணர்வுடன்....*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி சென்னை- 600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com .*


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


சிறிய மனிதரின் பெரிய சாதனை



சிறிய மனிதரின் பெரிய சாதனை


"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 

அச்சாணி அன்னார் உடைத்து".


பொருள்: ஒருவரின் உருவத்தின் சிறிய தோற்றத்தைக் கண்டு அவரை இகழக் கூடாது. பெரிய உருவம் கொண்ட தேருக்கு, மிகச் சிறிய அச்சாணியே முக்கியமானது போல, உலகத்தில் சிறிய தோற்றம் உடையவர்களும் பெரிய திறமை உடையவர்களாக இருக்க கூடும்.


“என் மகனை சர்க்கஸுக்கு அனுப்ப மாட்டேன்; அவனைப் படிக்க வைத்து, நாளை ஒரு மருத்துவராக்குவேன் !” 👑


இவர் தான் கணேஷ் பாரையா. வெறும் 3 அடி உயரமும் 20 கிலோ எடையும் கொண்ட இளைஞர். இன்று இவரது பெயர் பலருக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகம். 


பல ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் சிறுவனாக இருந்தபோது, அவரது உடல் தோற்றத்தைக் கண்டு சர்க்கஸ் நடத்துபவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். கணேஷை தங்களிடம் ஒப்படைத்தால், அவரது தந்தைக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக அவர்கள் கூறினர். அக்காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்திற்கு அது மிகப்பெரிய தொகை.


ஆனால் அந்தத் தந்தை உறுதியாகச் சொன்னார்:


“என் மகனை நான் படிக்க வைப்பேன். சர்க்கஸுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க மாட்டேன்!”


தந்தை கண்ட அந்தக் கனவுக்கு சிறகுகள் கொடுக்க, கணேஷ் தனது முழு முயற்சியுடன் படித்தார்.


2018-ஆம் ஆண்டு NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், அவரது உயரம் குறைவாக இருப்பதாகக் கூறி மருத்துவக் கல்லூரியில் MBBS சேர்க்கை மறுக்கப்பட்டது.


ஆனால் கணேஷ் தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. உயர்நீதிமன்றத்திலும், பின்னர் நாட்டின் உச்ச நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி, தனது மருத்துவக் கல்விக்கான உரிமையைப் பெற்றார்.


இன்று, MBBS படிப்பையும் இன்டர்ன்ஷிப்பையும் நிறைவு செய்து, டாக்டர் கணேஷ் பாரையா ஆகியிருக்கிறார்! 


சமீபத்தில் கௌன் பனேகா குரோர்பதி (KBC) நிகழ்ச்சியில் தனது வாழ்க்கைப் பயணத்தை கணேஷ் பகிர்ந்தபோது, அதை கேட்ட அமிதாப் பச்சனின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. 


வரம்புகள் உடலுக்குத்தான்; மனதிற்கு அல்ல என்பதை தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்த கணேஷுக்கும், தனது மகனின் திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்த அந்தத் தந்தைக்கும் மிகப் பெரிய பாராட்டுகள்


தன் மருத்துவக் கனவை அடைய உயரம் ஒரு தடையே இல்லை என்பதை சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளார், 3 அடி உயரமுள்ள 23 வயது மருத்துவர் கணேஷ் பாரையா. 


உயரத்தைக் காரணம் காட்டி இவருக்கு எம்.பி.பி.எஸ் படிக்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. 3 அடி உயரம் இருப்பதால் அவசர கால சிகிச்சைகளைக் கையாள முடியாது எனக் கூறி அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.


தன் லட்சியத்தை அடைய அவர் பள்ளித் தலைமை ஆசிரியர் உதவியோடு மாவட்ட ஆட்சியர், மாநில கல்வி அமைச்சரை அணுகியதோடு, குஜராத் உயர் நீதிமன்றத்தையும் நாடினார். குஜராத் உயர் நீதிமன்றத்தில் தோல்வியைச் சந்தித்தவர், அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.


2018-ல் இந்த வழக்கில் வெற்றி பெற்றவர், 2019-ல் எம்பிபிஎஸ் படிக்க அனுமதிக்கப்பட்டார். தன் படிப்பை முடித்த பிறகு பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்.


தன் வெற்றி குறித்துக் கூறிய கணேஷ் பாரையா, ``நான் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதற்காக விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, இந்திய மருத்துவ கவுன்சில் குழு என் உயரத்தைக் காரணம் காட்டி நிராகரித்தது.


உயரம் குறைவாக இருப்பதால் அவசரகால சிகிச்சைகளை என்னால் கையாள முடியாது என்று கூறினார்கள். அதன்பின் நான் என் பள்ளித் தலைமை ஆசிரியர், டாக்டர் தல்பத் பாய் கட்டாரியா மற்றும் ரேவசிஷ் சேர்வையா ஆகியோரிடம் இதைப் பற்றி பேசினேன். 


2018-ல், உச்ச நீதிமன்றம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்க்க உத்தரவிட்டது. ஆனால், அதற்குள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சேர்க்கை முடிந்துவிட்டது. ஆதலால், 2019-ல் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்க்கை பெறுவார் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


நான் பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் பெற்றேன், அதன்பின் என் எம்.பி.பி.எஸ் பயணம் தொடங்கியது. முதலில் என்னைப் பார்க்கும் நோயாளிகள் என் மீதான அபிப்பிராயத்தை உயரத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் இணக்கமாகி, என்னை மருத்துவராக ஏற்றுக்கொண்டனர். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்துகொள்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார். 


வாழ்த்துகள் டாக்டர் கணேஷ் பாரையா!


ஓய்வூதியக்குழு அறிக்கையை தமிழ்நாடு அரசு முழுமையாக வெளியிட வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 


ககன்தீப்சிங்பேடி அவர்களின் ஓய்வூதிய குழு அறிக்கையை முழுமையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் - தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை - நாளிதழ் செய்தி 18.08.2026



தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறுவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுழற்சி முறையில் பணிபுரிய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு



தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறுவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுழற்சி முறையில் பணிபுரிய தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TN Budget 2026 Programme Schedule



 தமிழ்நாடு சட்டமன்ற பேரவை | திருத்திய நிதிநிலை அறிக்கை 2026-2027 | மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் நாட்கள்


TN Budget 2026 Programme Schedule



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு

மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிறப்பித்த புதிய அறி...