கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TVK - Election Manifesto 2026

 


தமிழக வெற்றிக் கழகம் - மக்களின் தேர்தல் அறிக்கை 2026 


Tamilaga Vettri Kazhagam – The People's Election Manifesto 2026


த.வெ.க. - தேர்தல் அறிக்கை 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



விஜய் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2500, 6 இலவச சிலிண்டர், 200 யூனிட் மின்சாரம் கிடைக்கும்! 

தேர்தல் வாக்குறுதி ரீவைண்ட்.


தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நேரத்தில், தவெக தேர்தல் வாக்குறுதிகள் குறித்த தேடல் மக்கள் மத்தியில் உள்ளது.


தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்படத்தில், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 முதல் இலவச மின்சாரம், சிலிண்டர், தொழில்கடன் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கப்போகிறது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.


தவெக தேர்தல் வாக்குறுதிகள் 2026


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். 6 விலையில்லா சிலிண்டர்கள் ஆண்டுக்கு வழங்கப்படும். மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும். பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் வழங்கப்படும். மாணவர்களின் அம்மாக்களுககு ரூ.15,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மகளிர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். அரசு போக்குவரத்து கழக அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என விஜய் அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு மாணவ, மாணவியரும் நிதி பற்றாக்குறையால் உயர் கல்வி பெறாமல் போகக்கூடாது. எனவே, 12ஆம் வகுப்புக்குப் பிறகு பிஎச்டி வரை படிக்க ரூ.20 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு


உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்பு பள்ளிகள் அமைத்து தரப்படும். ரூ.20 லட்சம் வரை உயர்க்கல்விக் கடன் வழங்கப்படும். நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள் அமைக்கப்படும். ஏஐ கருவி மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.


அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 8ஆம் ஊதியக்குழு உடனடியாக அமல்படுத்தப்படும், ஐந்தாண்டு பணியில் உள்ள ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும். பணி ஓய்வின்போது ரூ.15 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி, கற்பித்தல் அல்லாத பணிகள் நீக்கம், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.



தமிழ்நாடு ஆட்சேர்ப்பு - அரசு வேலை என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு என்பதால், அந்த நடைமுறைகளில் உள்ள குறைகளை களைய மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பணிகளுக்கு ஆட்சேர்பு அட்டவணை உருவாக்கப்படும். டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, டிஎன்இபி ஆட்சேர்ப்புகளை 365 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்


முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும். 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும் வழங்கப்படும். அனைத்து நலத்திட்டங்களையும் எளிதாக பெற ஒவ்வொரு குடும்பத்திற்கும் Tamil nadu citizen privilege card திட்டம் கொண்டு வரப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.


குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை அமைத்து தரப்படும். ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை செய்து தரப்படும். போதைப் பொருள் இல்லா தமிழ்நாடாக உருவாக்கப்படும் என் தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித் தொகை வழங்கப்படும். ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப் வழங்கப்படும். இளைஞர்களுக்காக 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன் வழங்கப்படும். அரசுத் தேர்வுகளுக்கு கால அட்டவணை கால அட்டவணை நிரந்தரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி வழங்கப்படும். பயிர்க் கடன்கள் தள்ளுபடி. விவசாயிகளுக்கு நெல் குவிண்டலுக்கு ரூ.3500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும். 5 லட்சம் சோலார் பம்புகள் வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும். 100 சதவீதம் பயிர்க் காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு தாமத சூழல் நிதி உதவி - படித்த இளைஞர்களுக்கு 29 வயதுக்கு மேல் வேலைவாய்ப்பு இல்லை என்றால் டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் 4000 ரூபாய், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் 2500 ரூபாய் இளைஞர் நல நிதி கொடுக்கப்படும்.


மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தடைக்கால நிவாரணம் ரூ.27,000 வழங்கப்படும். மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதார் விலை வழங்கப்படும். ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கப்படும். மீனவர்களுக்கு நிரந்தர வீடு வழங்கப்படும் என தவெக தெரிவித்துள்ளது.


லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்து வீட்டு வாசலிலும் இருக்கும். காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள். நிதி ஒதுக்கீட்டில் 10 சதவீத திடடங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்மன்றத்தில் மக்கள் முறையீட்டுக்கான ஒருநாள் ஒதுக்கப்படும். அனைத்து அரசு சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் Vetri TN Super App உருவாக்கப்படும் என்று தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வெற்றி தொழில் பயிற்சி உத்தரவாதம் - ஆண்டுதோறும் 5 லட்சம் தொழில் பயிற்சிகள் வழங்க அரசு மற்றும் தனியார் சிறுகுறு நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சிகள் வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய், ஐடிஐ டிப்ளோமா 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உள்ளூர் ஆட்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு வளர்ச்சிக்காக 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொளாதார இலக்கை எட்டுவோம். ஏஐ அமைச்சகம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ நகரம் உருவாக்கப்படும். MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவும், மாவட் வாரியாக மாஸ்டர் பிளான் செய்யப்படும். தமிழகத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்கு வணிக உரிமம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெற்றி தொழில் முனைவோர் திட்டம் - தொழில் முனைவோரை உருவாக்க 25 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி


நமது ஊரில் நமது வேலைவாய்ப்பு - தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க, தமிழ்நாடு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நிறுவனங்களில் 75 விழுக்காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தால், அந்த தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜிஎஸ்டி 2.5 விழுக்காடு மானியம், 5 விழுக்காடு மின் கட்டணம் மானியம் கொடுக்கப்படும் என விஜய் அறிவிப்பு


இளைஞர்கள் பங்களிப்பு - பஞ்சாயத்து, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முதல்வர் சேவை மக்கள் நண்பர் என்ற 5 லட்சம் பதவிகள் உருவாக்கி, மக்களுக்கான சேவைகள் அவரவர் வசிப்பிடங்களிலேயே சேவைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தில் உள்ள இளைஞர்கள் பங்காளருக்கு 18000 மாத ஊதியம் கொடுக்கப்படும்.


தமிழ்நாடு இளைஞர் ஆலோசனை குழு - வளர்ச்சி திட்டங்கள், இளைஞர்களை நேரடியாக பாதிக்கும் கருத்துகளை முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரகள் நேரடியாக தெரிவிக்கும் தளமாக இது இருக்கும்.


மலை சுற்றுலாத் தளங்களில் Kodai Kondattam சிறப்பு பயிற்சி முகாம்கள் - 895 மாணவர்கள் தேர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



மலை சுற்றுலாத் தளங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் - 895 மாணவர்கள் தேர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Special Training Camps for Summer Celebrations at Hill Tourist Destinations — 895 Students Selected — Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , சென்னை 6


ந.க. எண்: 022197/எம்2/இ2/2026, நாள் : 27.04.2026



பொருள் : 

பள்ளிக் கல்வி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றுதல் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலைசுற்றுலாத் தளங்களில் நடத்துதல் மாணவர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டது மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருதல் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பாதுகாவலர்களிடமிருந்து விருப்பக் கடிதம் பெறுதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு.


பார்வை 

1) 2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு எண் 13


2) அரசாணை (நிலை) எண் 262 பள்ளிக் கல்வித் (பக5(1) துறை, நாள் 09.12.2024


3) அரசாணை (நிலை) எண் 83 பள்ளிக் கல்வித் (பக5(1)) துறை, நாள் 16.07.2025


4) பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் ந.க. எண்: 022197/எம்2/இ2/2026, நாள் 21.04.2026


5) சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியிடமிருந்து பெறப்பட்ட பட்டியல்.



2022-2023ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு எண்.13.இன்படி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடைவிடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழித்திடவும் கோடைக்கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள், மலை சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் (ஏலகிரி) ஆகிய இரு மாவட்டங்களில் இரண்டு பிரிவுகளாக 5 நாட்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு பயிற்சி முகாமிற்கு அரசு பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் ம்ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் கல்வி இலக்கியம் மற்றும் அறிவியல் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தெரிவு செய்திடவும், சிறந்து விளங்கிய 895 மாணவர்களின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இவற்றில் நீலகிரி மாவட்ட முகாமிற்கு 190 மாணவிகளும், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் நடைபெறும் முகாமிற்கு 205 மாணவர்களும் ஆக மொத்தம் 895 மாணவ, மாணவியர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


மேற்படி நடைபெறும் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் இணைப்பில் உள்ள அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சார்ந்த மாணவ / மாணவியர்களின் பெற்றோர் பாதுகாவலர்களிடமிருந்து அதற்கான ஒப்புதல் கடிதத்தினை இரு நகல்களில் பெற்று கோப்பில் வைக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பில் உள்ளவாறு மாணவ, மாணவர் எண்ணிக்கை கோடைக்கொண்டாட்டம் நடத்திடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பிரித்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்குத் தேவையான உடைகள், போர்வைகள் மாணவர்களின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை தவறாமல் கொண்டு வர வேண்டுமென மாணவ / மாணவியர்களுக்கு அறிவுறுத்துமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எனவே, மேற்படி நடைபெறும் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் மற்றும் பாதுகாப்பிற்காக உடன் செல்லும் ஆசிரியர்கள் எவ்வித புகாருக்கும் இடமின்றி கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு தகுந்த அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மாணவிகளை அழைத்துச் செல்லும்பொழுது கட்டாயம் 20 மாணவிகளுக்கு 1 பெண் ஆசிரியை அனுமதிக்கலாம். மாணவியருக்கான முகாம் நீலகிரி மாவட்டத்திலும், மாணவர்களுக்கான முகாம் திருப்பத்தூர் மாவட்டத்திலும் (ஏலகிரி) நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.


சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும். இத்துடன் பயிலரங்கச் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி காலஅட்டவணை இணைத் அனுப்பப்படுகிறது.


இணைப்பு


1) பெற்றோரிடம் பெற வேண்டிய ஒப்புதல் கடிதம்


2) ஒதுக்கீடு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல்.


3) ஒதுக்கீடு செய்யப்படும் மாணவிகளின் பட்டியல்.


4) பயிலரங்கச் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி காலஅட்டவணை


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்,

அனைத்து மாவட்டங்கள்.


1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற அமைச்சர்

 

 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற அமைச்சர்


சிவகங்கை : திருப்பத்தூரில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.


சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்ற நிலையில், பெரிய கருப்பன் 83,374 வாக்குகள் பெற்றார்.


திருப்பத்தூரில் தவெக - திமுக இடையே நீண்ட இழுபறி நிலவி வந்த நிலையில், பெரிய கருப்பன் அவர்கள் தோல்வி.



மக்கள் வழங்கிய தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்கிறேன் - அதிமுக பொதுச் செயலாளர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள்



 மக்கள் வழங்கிய தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்கிறேன் - அதிமுக பொதுச் செயலாளர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை



தி.மு.க.வின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும் - தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்



 தி.மு.க.வின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும் - தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்


மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!


கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.


மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.


அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.


நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!


எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்

அனைவருக்கும் நன்றி !


எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.


எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.


அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.


இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.


TNLA Election 2026 - Leading Status



 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - முன்னிலை நிலவரம் 


TNLA Election 2026 - Leading Status


இதே இணைப்பில் Update செய்யப்படும். தொடர்ந்து முன்னிலை நிலவரம் அறிந்து கொள்ளலாம்


இரவு 09.50 மணி நிலவரம்


234 / 234


தவெக - 107

திமுக கூட்டணி - 74

அதிமுக கூட்டணி - 53

நாதக - 0




இரவு 08.30 மணி நிலவரம்


234 / 234


தவெக - 108

திமுக கூட்டணி - 74

அதிமுக கூட்டணி - 52

நாதக - 0



இரவு 07.15 மணி நிலவரம்


234 / 234


தவெக - 107

திமுக கூட்டணி - 74

அதிமுக கூட்டணி - 53

நாதக - 0





மதியம் 05.15 மணி நிலவரம்


234 / 234


தவெக - 103

திமுக கூட்டணி - 74

அதிமுக கூட்டணி - 57

நாதக - 0




மதியம் 04.00 மணி நிலவரம்


234 / 234


தவெக - 103

திமுக கூட்டணி - 73

அதிமுக கூட்டணி - 58

நாதக - 0





மதியம் 03.20 மணி நிலவரம்





மதியம் 02.40 மணி நிலவரம்




மதியம் 02.15 மணி நிலவரம்





மதியம் 12.50 மணி நிலவரம்


234 / 234


தவெக - 113

அதிமுக கூட்டணி - 61

திமுக கூட்டணி - 60

நாதக - 0



காலை 10.00 மணி நிலவரம்


214 / 234


தவெக - 92

அதிமுக கூட்டணி - 68

திமுக கூட்டணி - 54

நாதக - 0




காலை 9.30 மணி நிலவரம்




காலை 9.25 மணி நிலவரம்


189 / 234


தவெக - 78

அதிமுக கூட்டணி - 59

திமுக கூட்டணி - 52

நாதக - 0



காலை 9.15 மணி நிலவரம்


159 / 234


தவெக - 66

திமுக கூட்டணி - 48

அதிமுக கூட்டணி - 45

நாதக - 0




முதல் சுற்று முடிவில் எடப்பாடி தொகுதி சேலம் மாவட்டம் - எடப்பாடி பழனிசாமி அவர்கள் 6000 வாக்குகள் முன்னிலை 


காலை 9.00 மணி நிலவரம்


120 / 234


திமுக கூட்டணி - 54

அதிமுக கூட்டணி - 33

தவெக - 33

நாதக - 0



West Bengal Assembly Elections 2026:


➤ TMC+: 82

➤ BJP: 101

➤ CPI(M)+: 0

➤ Cong: 0

➤ Others: 1


Assam Assembly Elections 2026:


➤ BJP+: 61

➤ Cong+: 10

➤ AIUDF: 0

➤ Others: 0




காலை 8.45 மணி நிலவரம்


86 / 234


திமுக கூட்டணி - 52

அதிமுக கூட்டணி - 22

தவெக - 12

நாதக - 0





காலை 8.40 மணி நிலவரம்


45 / 234


திமுக கூட்டணி - 32

அதிமுக கூட்டணி - 8

தவெக - 5

நாதக - 0



காலை 8.30 மணி நிலவரம்


29 / 234


திமுக கூட்டணி - 21

அதிமுக கூட்டணி - 4

தவெக - 3

நாதக - 0



TN Noon Meal Program App Update



TN Noon Meal Program App Update


Noon Meal Monitoring application for Tamilnadu state govt schools


 PM POSHAN Tamilnadu Noon Meal App Version 1.20


New version 4.0.3


Update date 02.05.2026


https://play.google.com/store/apps/details?id=in.co.bsnl.chennai.pmp


தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை



தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை


தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று 04-05-2026 காலை 8 மணிக்கு தொடங்குகிறது.


தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


முதலில் காலை 8 மணி முதல் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றுவாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும். 


கடந்த காலங்களில் நண்பகலிலேயே யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை கணித்துவிட முடியும். ஆனால், இந்த முறை நான்குமுனை போட்டிகள் நிலவுவதால் முடிவுகளை கணிக்க மாலை வரை ஆகலாம் எனத் தெரிகிறது.


தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்களை இசிஐநெட் (ECINet) செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் மக்கள் தெரிந்துகொள்வதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.


வாக்கு எண்ணிக்கை வழிமுறைகள்:


காலை 8.00 மணிக்கு துவங்கும் தபால் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து... 


8.30 மணி அளவில் வாக்குப் பதிவு எந்திரங்கள் குறிப்பிட்ட மேசைக்கு கொண்டு வரப்படும்.


ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 14 மேசைகள் போடப்படும்.


பெரிய தொகுதியான  சோழிங்கநல்லூர் மையத்தில் 28 மேசைகளும் 


மதுரவாயல் மையத்தில் 20 மேசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


ஒரு சுற்று என்பது 14 மேசைகளிலும் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் அதிகாரி ஒப்புதல் அளித்த பிறகே நிறைவடையும்.


அதற்கு பின்னர்தான் அடுத்த சுற்று எண்ணிக்கை துவங்கும்.


அந்த தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் முழுமையாக எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் தேர்தல் நடத்தும் அதிகாரியால்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


எனவே  காலை சுமார் 10.00 மணி அளவில்தான் முன்னணி  நிலவரம் தெரியவரும் என தகவல்.


வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - RTI தகவல்


 வருகைப் பதிவேட்டில்  ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 மூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் யார் பெயர் எழுத வேண்டும்? மற்றும் தலைமை பொறுப்பு எந்த ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் - RTI தகவல்


Seniors vs. Juniors: Whose name should be entered first in the attendance register? And to which teacher should the incharge responsibility be assigned? — RTI Information.



தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005


பொது நகவல் வழங்கும் அலுவலர்


வட்டாரக் கல்வி அலுவலகம், குருவிகுளம் 

ந.க.எண்.747/அ2/2018, நாள்.30-08-2018


பொருள்.


தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005-மனுதாரர் திரு. க.நடராஜன் என்பாருக்கு உரிய தகவல் அளித்தல் - சார்பு


பார்வை-


1. திருநெல்வேலி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் அவர்களின் சுடித எண்.5283/ஆ3/2017, நாள்.-11-12-2017.


2 குருவிகுளம் சரகம், பழங்கோட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் திரு. சு. நடராஜன் என்பாரது மனு. நாள்.06-12-2017.


பார்வை காணும் கடிதத்தின் ஆணைக்கிணங்க மற்றும் பார்வை(2)ல் காணும் மனுதாரரின் மனுவினை ஆய்வு செய்து தகவல் உரிமைச் சட்டம் பிரிவு6(3)ன் கீழ் மனுதாரருக்கு கீழ்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது.


பார்வை(2)ல் காணும் மனுவின் படி திரு. சந்திரசேகரன் என்பார் 15-10-2010 ல் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, திருமதி. து.சுப்புரத்தினம் என்பார் 23-07-2012 ல் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மேற்படி, நிகழ்வில் பட்டதாரி ஆசிரியரான திரு. ஷ. சந்திரசேகரன் என்பாரை விட ஆங்கில பட்டதாரி ஆசிரியையான திருமதி. து.சுப்புரத்தினம் என்பார் இளையவரே ஆவார்.



மனுதாரரின் கேள்வி & கேள்விக்கான விளக்கம்


1. ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் இருவரில் யாருடைய பெயர் முதலில் எழுதப்பட வேண்டும்


பட்டதாரி ஆசிரியர் பணி நிலையில் மூத்தோரின் பெயரே முதலில் எழுதப்பட வேண்டும்


2. தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்தால் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்


மூத்தோருக்கே முதலில் இவ் பொறுப்பினை பெறும் உரிமை உண்டு.


வட்டாரக் கல்வி அலுவலகம்

குருவிகுளம்


பெறுநர்

திரு.சு.நடராஜன்,

தலைமை ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

பழங்கோட்டை,

குருவிகுளம் சரகம்.


நகல்.

மாவட்டக் கல்வி அலுவலர்,

மாவட்டக் கல்வி அலுவலகம்,

சங்கரன்கோவில் - தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள்

 


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள் 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

தற்போதைய வெயில் காலத்தில் சின்னம்மை தொற்றுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். 


"Chich-Pois" எனும் பிரெஞ்சு மொழிச் சொல்லுக்கு "பச்சை பட்டாணி" ( Chick peas) என்று பொருள். 


சின்னம்மை ஏற்படும் போது உடல் முழுவதும் பச்சை பட்டாணி அளவில் கொப்புளம்  தோன்றியதால் "சிக்கன் பாக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது. மற்றபடி நாம் உண்ணும் சிக்கனுக்கும் இந்த சின்னம்மைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

 

பொதுவாக 

சின்னம்மைக்கு எந்த  மருத்துவ சிகிச்சையும்  தேவை இல்லை எனும் மூடநம்பிக்கை இன்னும் நமது சமூகத்தில் நிலவி வருகிறது.

அதைப் போக்கும் முகமாக இந்த விழிப்புணர்வுக்  கட்டுரை அமையும். 


சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் - வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ் மூலம் உண்டாகும் தொற்று நோயாகும். 


காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் என்பதால் தொற்றுக்குள்ளானவர் தும்மும் போதும் இருமும் போதும் அருகில் இருந்து அதை சுவாசிப்பவர்களுக்கு எளிதில்  பரவி விடும். 


இதனோடு கொப்புளங்கள் தோன்றும் நிலை வரும் போது தோலோடு தோல் உரசுவதாலும் தொற்றுப் பரவல் நடக்கிறது.


வைரஸ் தொற்று உடலுக்குள் சென்றதில் இருந்து நோயின் அறிகுறி தொடங்க சராசரியாக இரண்டு வாரங்கள் எடுக்கும்.


காய்ச்சல்

உடல் சோர்வு 

தொண்டை வலி

தலை வலி ஆகியன முதல் ஐந்து முதல் ஏழு நாட்கள் இருக்கும். 


அதன்பின், உடல் முழுவதும் சிவப்பு நிற படை தோன்றி நெஞ்சுப் பகுதி, பின்புறம், முகம் என கொப்புளங்கள் உருவெடுத்து உடல் முழுவதும் பரவும். 


இரண்டாவது வாரத்தின் முடிவில் கொப்புளங்கள் சருகாகி விழுந்து விடும். 


கொப்புளங்கள் தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து, அவை சருகாகி விழும் வரை பிறருக்குத் தொற்றுப் பரவும் நிலையில் இருக்கும். 


ஏன் சின்னம்மைக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்   ? 


பொதுவாக குழந்தைகளுக்கு இந்தத் தொற்று ஏற்படும் போது பெரிய பாதிப்புகள் இன்றி மறையும் என்பது உண்மை தான். ஆனால் வளர் இளம் பருவத்தினர், வயது வந்தோர், முதியோர், கர்ப்பிணிகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர்க்கு ஏற்படும் போது நோயின்  தீவிரமாக வெளிப்படும். 


முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் 

சிலருக்கு நிமோனியா எனும் தீவிர நுரையீரல் தொற்று , எண்கஃபாலைட்டிஸ் எனும் மூளை அழற்சி , கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படலாம். 


சின்னம்மைக்கு 

ஏசைக்ளோவிர்/ வேல்ஏசைக்ளோவிர் ஆகிய மாத்திரைகள் சிறப்பாக செயல்பட்டு நோயின் தீவிரத்தையும் நோயின் காலத்தையும் குறைக்கக் கூடியதாக உள்ளன. 


முக்கியமாக இந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின் கீழ், தோல் படை மற்றும் கொப்புளங்கள் தோன்றத் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் எடுக்கும் போது சிறந்த பலனைத் தருகிறது.  


இதுவன்றி சின்னம்மை ஏற்பட்டு குணமானவர்களுக்கு, வைரஸின் ஒரு பகுதி அவர்களின் நரம்பு மண்டலத்தில்  நெடிய துயில் நிலைக்குச் சென்று அமைதி காத்திருக்கும். தனக்கான தோதான சூழல் வரும் போது ( அந்த நபரின் எதிர்ப்பு சக்தி குறையும் போது) மீண்டும் உயிர்ப்பு பெற்று அக்கி எனும் ஹெர்பிஸ் சோஸ்டர் நோயை ஏற்படுத்தும். அக்கி என்பது தோலில் திராட்சை பழம் போல தோற்றம் கொண்ட ஒன்றோடு ஒன்று நெருங்கி ஒட்டி இருக்கும் கொப்புளங்களுடன் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடிய நோயாகும். 


ஒரு வயதுக்குள் சின்னம்மை ஏற்பட்டிருந்தாலும் சரி, அந்த நபர் முதியவராக ஆன பின்பும் கூட அதாவது அறுபது வயதைக் கடக்கும் போது மீண்டும் வெளிவந்து அக்கியை ஏற்படுத்தலாம்.

அந்த நோய்க்கும், 

ஏசைக்லோவிர் மருந்தை உடனடியாகக் கொடுப்பதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


சின்னம்மை கண்ட ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களில் 20% பேருக்கும், எதிர்ப்பு சக்தி குன்றியோரில் 50% பேருக்கும் அவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் அக்கி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிக. 


யாருக்கெல்லாம் சின்னம்மை தீவிரத்துடன் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது? 


எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறிப்பாக அதிக அளவில் ஸ்டீராய்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், 


புற்று நோய் சிகிச்சையில் இருப்பவர்கள், மனித எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர், கர்ப்பிணிமார்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், குறைவான எடை கொண்ட ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள், ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்கள், 60+ வயதைத் தாண்டிய முதியோர் 

ஆகியோருக்கு சின்னம்மை தொற்று ஏற்படும் போது தீவிரத்துடன் வெளிப்படக்கூடும். எனவே அதிக கவனம் தேவை. உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். 


சின்னம்மை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிகள் உள்ளனவா? 


ஆம். சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசியை நமது குழந்தைகளுக்கு 

முதல் தவணை - 12 முதல் 15 மாதங்களுக்குள்ளும் 

இரண்டாவது தவணையை  - 4 முதல் 6 வயதிலும் வழங்கலாம். 


இந்தத் தடுப்பூசி 70 முதல் 90%  தொற்றுகளைத் தடுக்கவும், 95% தீவிரத் தொற்றுகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. 


இந்தத் தடுப்பூசியை, 

சின்னம்மை ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த குழந்தைக்கு மூன்று நாட்களுக்குள் வழங்கினால் நோயின் தீவிரம் குறைவதைக் காணலாம். 


எனது குழந்தைக்கு சின்னம்மை தடுப்பூசி போட்டும் சின்னம்மை வந்து விட்டதே. ஏன்? 


சின்னம்மை தடுப்பூசி நோய்த் தொற்றை 70-90% தடுக்கும் என்று ஆய்வுகளில் நிரூபணமாகியிருப்பதால், 10-30% பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும் தொற்று ஏற்படலாம். ஆயினும் தீவிர நோய் நிலை ஏற்படாமல் தடுப்பூசி காக்கும். 


இதுவரை சின்னம்மை தொற்று ஏற்படாத வயது வந்தோரும் கூட இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை - நான்கு மாத இடைவெளியில் போட்டுக் கொள்ளலாம். 


அக்கிக்கு எதிரான தடுப்பூசியும் 50+ வயதினருக்குக் குறிப்பாக நீரிழிவு மருத்துவப் பயனாளிகளுக்கென சந்தையில் உள்ளது. 

தேவைப்படுவோர் அக்கி ஏற்படாமல் இருக்க இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை -  இரண்டு முதல் ஆறு மாத இடைவெளியில் பெற்றுக் கொள்ளலாம். 


வீட்டில் ஒருவருக்கு சின்னம்மை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? 


சின்னம்மை ஏற்பட்டவரிடம் இருந்து வீட்டில் பிறருக்கும் தொற்று பரவாமல் இருக்க - தொற்று கண்டவரைத் தனிமைப் படுத்த வேண்டும். நோயின் அறிகுறிகள் தோன்றிய ஒருவரை தனிமைப்படுத்துவதற்குப் பெயர் "ISOLATION" ஆகும். 


கொப்புளங்கள் தோன்றியதில் இருந்து அவை சருகாகி உலரும் வரை இந்தத் தனிமைப்படுத்துதல் தொடர வேண்டும். 


இதற்கடுத்த படியாக, 

தொற்று கண்ட நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த அவரது வீட்டினர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்து, இன்னும் நோயின் அறிகுறிகள் தோன்றாதவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதை "QUARANTINE" என்கிறோம். 


தற்காலத்தில் இந்த குவாரண்டைன் என்பது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை.  அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 


பொதுவாக ஒரு குடும்பத்தில் முதலில் தொற்று கண்டவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் போது, இரண்டாவது தொற்று கண்டவருக்கு முன்னவரை விட தீவிரமாக நோய் வெளிப்படுவதைக் காண முடிகின்றது. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், சின்னம்மை தொற்று வீட்டில் உள்ள முதியோர்களுக்கும் அதிகமாக ஏற்பட்டு தீவிரத் தொற்றை ஏற்படுத்துகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 


கொப்புளங்கள் தோன்றிய  24 மணிநேரத்திற்குள், அவர்களுக்கு ஏசைக்லோவிர் / வால்ஏசைக்லோவிர் மருத்துவ சிகிச்சை கிடைத்திடச் செய்ய வேண்டும். 


- தொற்று கண்டவரின் விரல் நகங்களை வெட்டி விட வேண்டும்.  கைகளில் துணி கையுறை அணிவிக்கலாம். இது கொப்புளங்களில் ஏற்படும் அரிப்பின் போது அதிகமாக சொரிந்து காயம் ஏற்படாமல் தடுக்க உதவும். 

- அரிப்பு ஏற்படும் போது காலமைன் லோசன் தடவலாம்.

வேறு எந்த வலி நிவாரணி களிம்போ வேறு வகையான தைலங்களோ தடவுதல் கூடாது. 

- தினமும் லேசான  வெந்நீரில் உடலை ஒத்தி எடுக்கலாம். இது கொப்புளங்கள் மீது பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். 

- நீராகாரங்களாகப் பருகக் கொடுக்கலாம். 

- அரிப்புக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவர் பரிந்துரையில் சிகிச்சை எடுக்க வேண்டும்

- கொப்புளங்கள் சருகாகி உலர்ந்ததும் குளியல் போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வரலாம். 


அபாய அறிகுறிகள் குறித்த கவனம் தேவை - 

சின்னம்மை ஏற்பட்டவருக்கு இரண்டாவது வாரத்தில் 

- பிதற்றல் நிலை 

- அதீத தலை வலி

- வலிப்பு 

- மூர்ச்சை நிலை 

- மூச்சுத் திணறல் 

- தலை சுற்றல் 

- வயிற்று வலி

ஆகியன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை வழங்கிட வேண்டும். 


சின்னம்மை தானே என்று லேசாக எடுத்துக் கொள்ளாமல் 

அதற்கு வழங்க வேண்டிய மருத்துவ சிகிச்சையையும் 

அதற்குரிய சரியான வழிகாட்டுதல்களையும் கடைபிடித்தால் நோயின் தீவிரத்தையும் 

காலத்தையும் அதன் பாதிப்புகளையும் நம்மால் குறைத்திட முடியும். 


நன்றி இந்து தமிழ் 

மறையாத கட்டுக் கதைகள் - 3 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TVK - Election Manifesto 2026

  தமிழக வெற்றிக் கழகம் - மக்களின் தேர்தல் அறிக்கை 2026  Tamilaga Vettri Kazhagam – The People's Election Manifesto 2026 த.வெ.க. - தேர்தல...