கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNLA Election 2026 - Leading Status



 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - முன்னிலை நிலவரம் 


TNLA Election 2026 - Leading Status


இதே இணைப்பில் Update செய்யப்படும். தொடர்ந்து முன்னிலை நிலவரம் அறிந்து கொள்ளலாம்


காலை 9.30 மணி நிலவரம்




காலை 9.25 மணி நிலவரம்


189 / 234


தவெக - 78

அதிமுக கூட்டணி - 59

திமுக கூட்டணி - 52

நாதக - 0



காலை 9.15 மணி நிலவரம்


159 / 234


தவெக - 66

திமுக கூட்டணி - 48

அதிமுக கூட்டணி - 45

நாதக - 0




முதல் சுற்று முடிவில் எடப்பாடி தொகுதி சேலம் மாவட்டம் - எடப்பாடி பழனிசாமி அவர்கள் 6000 வாக்குகள் முன்னிலை 


காலை 9.00 மணி நிலவரம்


120 / 234


திமுக கூட்டணி - 54

அதிமுக கூட்டணி - 33

தவெக - 33

நாதக - 0



West Bengal Assembly Elections 2026:


➤ TMC+: 82

➤ BJP: 101

➤ CPI(M)+: 0

➤ Cong: 0

➤ Others: 1


Assam Assembly Elections 2026:


➤ BJP+: 61

➤ Cong+: 10

➤ AIUDF: 0

➤ Others: 0




காலை 8.45 மணி நிலவரம்


86 / 234


திமுக கூட்டணி - 52

அதிமுக கூட்டணி - 22

தவெக - 12

நாதக - 0





காலை 8.40 மணி நிலவரம்


45 / 234


திமுக கூட்டணி - 32

அதிமுக கூட்டணி - 8

தவெக - 5

நாதக - 0



காலை 8.30 மணி நிலவரம்


29 / 234


திமுக கூட்டணி - 21

அதிமுக கூட்டணி - 4

தவெக - 3

நாதக - 0


EVM முதல் சுற்று - திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேருவுக்கு 292 வாக்குகள் பின்னடைவு


தவெக வேட்பாளர் முன்னிலை



TN Noon Meal Program App Update



TN Noon Meal Program App Update


Noon Meal Monitoring application for Tamilnadu state govt schools


 PM POSHAN Tamilnadu Noon Meal App Version 1.20


New version 4.0.3


Update date 02.05.2026


https://play.google.com/store/apps/details?id=in.co.bsnl.chennai.pmp


தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை



தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை


தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று 04-05-2026 காலை 8 மணிக்கு தொடங்குகிறது.


தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


முதலில் காலை 8 மணி முதல் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றுவாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும். 


கடந்த காலங்களில் நண்பகலிலேயே யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை கணித்துவிட முடியும். ஆனால், இந்த முறை நான்குமுனை போட்டிகள் நிலவுவதால் முடிவுகளை கணிக்க மாலை வரை ஆகலாம் எனத் தெரிகிறது.


தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்களை இசிஐநெட் (ECINet) செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் மக்கள் தெரிந்துகொள்வதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.


வாக்கு எண்ணிக்கை வழிமுறைகள்:


காலை 8.00 மணிக்கு துவங்கும் தபால் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து... 


8.30 மணி அளவில் வாக்குப் பதிவு எந்திரங்கள் குறிப்பிட்ட மேசைக்கு கொண்டு வரப்படும்.


ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 14 மேசைகள் போடப்படும்.


பெரிய தொகுதியான  சோழிங்கநல்லூர் மையத்தில் 28 மேசைகளும் 


மதுரவாயல் மையத்தில் 20 மேசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


ஒரு சுற்று என்பது 14 மேசைகளிலும் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் அதிகாரி ஒப்புதல் அளித்த பிறகே நிறைவடையும்.


அதற்கு பின்னர்தான் அடுத்த சுற்று எண்ணிக்கை துவங்கும்.


அந்த தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் முழுமையாக எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் தேர்தல் நடத்தும் அதிகாரியால்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


எனவே  காலை சுமார் 10.00 மணி அளவில்தான் முன்னணி  நிலவரம் தெரியவரும் என தகவல்.


வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - RTI தகவல்


 வருகைப் பதிவேட்டில்  ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 மூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் யார் பெயர் எழுத வேண்டும்? மற்றும் தலைமை பொறுப்பு எந்த ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் - RTI தகவல்


Seniors vs. Juniors: Whose name should be entered first in the attendance register? And to which teacher should the incharge responsibility be assigned? — RTI Information.



தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005


பொது நகவல் வழங்கும் அலுவலர்


வட்டாரக் கல்வி அலுவலகம், குருவிகுளம் 

ந.க.எண்.747/அ2/2018, நாள்.30-08-2018


பொருள்.


தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005-மனுதாரர் திரு. க.நடராஜன் என்பாருக்கு உரிய தகவல் அளித்தல் - சார்பு


பார்வை-


1. திருநெல்வேலி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் அவர்களின் சுடித எண்.5283/ஆ3/2017, நாள்.-11-12-2017.


2 குருவிகுளம் சரகம், பழங்கோட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் திரு. சு. நடராஜன் என்பாரது மனு. நாள்.06-12-2017.


பார்வை காணும் கடிதத்தின் ஆணைக்கிணங்க மற்றும் பார்வை(2)ல் காணும் மனுதாரரின் மனுவினை ஆய்வு செய்து தகவல் உரிமைச் சட்டம் பிரிவு6(3)ன் கீழ் மனுதாரருக்கு கீழ்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது.


பார்வை(2)ல் காணும் மனுவின் படி திரு. சந்திரசேகரன் என்பார் 15-10-2010 ல் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, திருமதி. து.சுப்புரத்தினம் என்பார் 23-07-2012 ல் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மேற்படி, நிகழ்வில் பட்டதாரி ஆசிரியரான திரு. ஷ. சந்திரசேகரன் என்பாரை விட ஆங்கில பட்டதாரி ஆசிரியையான திருமதி. து.சுப்புரத்தினம் என்பார் இளையவரே ஆவார்.



மனுதாரரின் கேள்வி & கேள்விக்கான விளக்கம்


1. ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் இருவரில் யாருடைய பெயர் முதலில் எழுதப்பட வேண்டும்


பட்டதாரி ஆசிரியர் பணி நிலையில் மூத்தோரின் பெயரே முதலில் எழுதப்பட வேண்டும்


2. தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்தால் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்


மூத்தோருக்கே முதலில் இவ் பொறுப்பினை பெறும் உரிமை உண்டு.


வட்டாரக் கல்வி அலுவலகம்

குருவிகுளம்


பெறுநர்

திரு.சு.நடராஜன்,

தலைமை ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

பழங்கோட்டை,

குருவிகுளம் சரகம்.


நகல்.

மாவட்டக் கல்வி அலுவலர்,

மாவட்டக் கல்வி அலுவலகம்,

சங்கரன்கோவில் - தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள்

 


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள் 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

தற்போதைய வெயில் காலத்தில் சின்னம்மை தொற்றுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். 


"Chich-Pois" எனும் பிரெஞ்சு மொழிச் சொல்லுக்கு "பச்சை பட்டாணி" ( Chick peas) என்று பொருள். 


சின்னம்மை ஏற்படும் போது உடல் முழுவதும் பச்சை பட்டாணி அளவில் கொப்புளம்  தோன்றியதால் "சிக்கன் பாக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது. மற்றபடி நாம் உண்ணும் சிக்கனுக்கும் இந்த சின்னம்மைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

 

பொதுவாக 

சின்னம்மைக்கு எந்த  மருத்துவ சிகிச்சையும்  தேவை இல்லை எனும் மூடநம்பிக்கை இன்னும் நமது சமூகத்தில் நிலவி வருகிறது.

அதைப் போக்கும் முகமாக இந்த விழிப்புணர்வுக்  கட்டுரை அமையும். 


சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் - வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ் மூலம் உண்டாகும் தொற்று நோயாகும். 


காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் என்பதால் தொற்றுக்குள்ளானவர் தும்மும் போதும் இருமும் போதும் அருகில் இருந்து அதை சுவாசிப்பவர்களுக்கு எளிதில்  பரவி விடும். 


இதனோடு கொப்புளங்கள் தோன்றும் நிலை வரும் போது தோலோடு தோல் உரசுவதாலும் தொற்றுப் பரவல் நடக்கிறது.


வைரஸ் தொற்று உடலுக்குள் சென்றதில் இருந்து நோயின் அறிகுறி தொடங்க சராசரியாக இரண்டு வாரங்கள் எடுக்கும்.


காய்ச்சல்

உடல் சோர்வு 

தொண்டை வலி

தலை வலி ஆகியன முதல் ஐந்து முதல் ஏழு நாட்கள் இருக்கும். 


அதன்பின், உடல் முழுவதும் சிவப்பு நிற படை தோன்றி நெஞ்சுப் பகுதி, பின்புறம், முகம் என கொப்புளங்கள் உருவெடுத்து உடல் முழுவதும் பரவும். 


இரண்டாவது வாரத்தின் முடிவில் கொப்புளங்கள் சருகாகி விழுந்து விடும். 


கொப்புளங்கள் தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து, அவை சருகாகி விழும் வரை பிறருக்குத் தொற்றுப் பரவும் நிலையில் இருக்கும். 


ஏன் சின்னம்மைக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்   ? 


பொதுவாக குழந்தைகளுக்கு இந்தத் தொற்று ஏற்படும் போது பெரிய பாதிப்புகள் இன்றி மறையும் என்பது உண்மை தான். ஆனால் வளர் இளம் பருவத்தினர், வயது வந்தோர், முதியோர், கர்ப்பிணிகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர்க்கு ஏற்படும் போது நோயின்  தீவிரமாக வெளிப்படும். 


முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் 

சிலருக்கு நிமோனியா எனும் தீவிர நுரையீரல் தொற்று , எண்கஃபாலைட்டிஸ் எனும் மூளை அழற்சி , கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படலாம். 


சின்னம்மைக்கு 

ஏசைக்ளோவிர்/ வேல்ஏசைக்ளோவிர் ஆகிய மாத்திரைகள் சிறப்பாக செயல்பட்டு நோயின் தீவிரத்தையும் நோயின் காலத்தையும் குறைக்கக் கூடியதாக உள்ளன. 


முக்கியமாக இந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின் கீழ், தோல் படை மற்றும் கொப்புளங்கள் தோன்றத் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் எடுக்கும் போது சிறந்த பலனைத் தருகிறது.  


இதுவன்றி சின்னம்மை ஏற்பட்டு குணமானவர்களுக்கு, வைரஸின் ஒரு பகுதி அவர்களின் நரம்பு மண்டலத்தில்  நெடிய துயில் நிலைக்குச் சென்று அமைதி காத்திருக்கும். தனக்கான தோதான சூழல் வரும் போது ( அந்த நபரின் எதிர்ப்பு சக்தி குறையும் போது) மீண்டும் உயிர்ப்பு பெற்று அக்கி எனும் ஹெர்பிஸ் சோஸ்டர் நோயை ஏற்படுத்தும். அக்கி என்பது தோலில் திராட்சை பழம் போல தோற்றம் கொண்ட ஒன்றோடு ஒன்று நெருங்கி ஒட்டி இருக்கும் கொப்புளங்களுடன் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடிய நோயாகும். 


ஒரு வயதுக்குள் சின்னம்மை ஏற்பட்டிருந்தாலும் சரி, அந்த நபர் முதியவராக ஆன பின்பும் கூட அதாவது அறுபது வயதைக் கடக்கும் போது மீண்டும் வெளிவந்து அக்கியை ஏற்படுத்தலாம்.

அந்த நோய்க்கும், 

ஏசைக்லோவிர் மருந்தை உடனடியாகக் கொடுப்பதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


சின்னம்மை கண்ட ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களில் 20% பேருக்கும், எதிர்ப்பு சக்தி குன்றியோரில் 50% பேருக்கும் அவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் அக்கி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிக. 


யாருக்கெல்லாம் சின்னம்மை தீவிரத்துடன் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது? 


எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறிப்பாக அதிக அளவில் ஸ்டீராய்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், 


புற்று நோய் சிகிச்சையில் இருப்பவர்கள், மனித எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர், கர்ப்பிணிமார்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், குறைவான எடை கொண்ட ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள், ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்கள், 60+ வயதைத் தாண்டிய முதியோர் 

ஆகியோருக்கு சின்னம்மை தொற்று ஏற்படும் போது தீவிரத்துடன் வெளிப்படக்கூடும். எனவே அதிக கவனம் தேவை. உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். 


சின்னம்மை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிகள் உள்ளனவா? 


ஆம். சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசியை நமது குழந்தைகளுக்கு 

முதல் தவணை - 12 முதல் 15 மாதங்களுக்குள்ளும் 

இரண்டாவது தவணையை  - 4 முதல் 6 வயதிலும் வழங்கலாம். 


இந்தத் தடுப்பூசி 70 முதல் 90%  தொற்றுகளைத் தடுக்கவும், 95% தீவிரத் தொற்றுகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. 


இந்தத் தடுப்பூசியை, 

சின்னம்மை ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த குழந்தைக்கு மூன்று நாட்களுக்குள் வழங்கினால் நோயின் தீவிரம் குறைவதைக் காணலாம். 


எனது குழந்தைக்கு சின்னம்மை தடுப்பூசி போட்டும் சின்னம்மை வந்து விட்டதே. ஏன்? 


சின்னம்மை தடுப்பூசி நோய்த் தொற்றை 70-90% தடுக்கும் என்று ஆய்வுகளில் நிரூபணமாகியிருப்பதால், 10-30% பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும் தொற்று ஏற்படலாம். ஆயினும் தீவிர நோய் நிலை ஏற்படாமல் தடுப்பூசி காக்கும். 


இதுவரை சின்னம்மை தொற்று ஏற்படாத வயது வந்தோரும் கூட இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை - நான்கு மாத இடைவெளியில் போட்டுக் கொள்ளலாம். 


அக்கிக்கு எதிரான தடுப்பூசியும் 50+ வயதினருக்குக் குறிப்பாக நீரிழிவு மருத்துவப் பயனாளிகளுக்கென சந்தையில் உள்ளது. 

தேவைப்படுவோர் அக்கி ஏற்படாமல் இருக்க இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை -  இரண்டு முதல் ஆறு மாத இடைவெளியில் பெற்றுக் கொள்ளலாம். 


வீட்டில் ஒருவருக்கு சின்னம்மை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? 


சின்னம்மை ஏற்பட்டவரிடம் இருந்து வீட்டில் பிறருக்கும் தொற்று பரவாமல் இருக்க - தொற்று கண்டவரைத் தனிமைப் படுத்த வேண்டும். நோயின் அறிகுறிகள் தோன்றிய ஒருவரை தனிமைப்படுத்துவதற்குப் பெயர் "ISOLATION" ஆகும். 


கொப்புளங்கள் தோன்றியதில் இருந்து அவை சருகாகி உலரும் வரை இந்தத் தனிமைப்படுத்துதல் தொடர வேண்டும். 


இதற்கடுத்த படியாக, 

தொற்று கண்ட நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த அவரது வீட்டினர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்து, இன்னும் நோயின் அறிகுறிகள் தோன்றாதவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதை "QUARANTINE" என்கிறோம். 


தற்காலத்தில் இந்த குவாரண்டைன் என்பது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை.  அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 


பொதுவாக ஒரு குடும்பத்தில் முதலில் தொற்று கண்டவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் போது, இரண்டாவது தொற்று கண்டவருக்கு முன்னவரை விட தீவிரமாக நோய் வெளிப்படுவதைக் காண முடிகின்றது. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், சின்னம்மை தொற்று வீட்டில் உள்ள முதியோர்களுக்கும் அதிகமாக ஏற்பட்டு தீவிரத் தொற்றை ஏற்படுத்துகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 


கொப்புளங்கள் தோன்றிய  24 மணிநேரத்திற்குள், அவர்களுக்கு ஏசைக்லோவிர் / வால்ஏசைக்லோவிர் மருத்துவ சிகிச்சை கிடைத்திடச் செய்ய வேண்டும். 


- தொற்று கண்டவரின் விரல் நகங்களை வெட்டி விட வேண்டும்.  கைகளில் துணி கையுறை அணிவிக்கலாம். இது கொப்புளங்களில் ஏற்படும் அரிப்பின் போது அதிகமாக சொரிந்து காயம் ஏற்படாமல் தடுக்க உதவும். 

- அரிப்பு ஏற்படும் போது காலமைன் லோசன் தடவலாம்.

வேறு எந்த வலி நிவாரணி களிம்போ வேறு வகையான தைலங்களோ தடவுதல் கூடாது. 

- தினமும் லேசான  வெந்நீரில் உடலை ஒத்தி எடுக்கலாம். இது கொப்புளங்கள் மீது பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். 

- நீராகாரங்களாகப் பருகக் கொடுக்கலாம். 

- அரிப்புக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவர் பரிந்துரையில் சிகிச்சை எடுக்க வேண்டும்

- கொப்புளங்கள் சருகாகி உலர்ந்ததும் குளியல் போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வரலாம். 


அபாய அறிகுறிகள் குறித்த கவனம் தேவை - 

சின்னம்மை ஏற்பட்டவருக்கு இரண்டாவது வாரத்தில் 

- பிதற்றல் நிலை 

- அதீத தலை வலி

- வலிப்பு 

- மூர்ச்சை நிலை 

- மூச்சுத் திணறல் 

- தலை சுற்றல் 

- வயிற்று வலி

ஆகியன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை வழங்கிட வேண்டும். 


சின்னம்மை தானே என்று லேசாக எடுத்துக் கொள்ளாமல் 

அதற்கு வழங்க வேண்டிய மருத்துவ சிகிச்சையையும் 

அதற்குரிய சரியான வழிகாட்டுதல்களையும் கடைபிடித்தால் நோயின் தீவிரத்தையும் 

காலத்தையும் அதன் பாதிப்புகளையும் நம்மால் குறைத்திட முடியும். 


நன்றி இந்து தமிழ் 

மறையாத கட்டுக் கதைகள் - 3 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை





Postal Ballot உள்ள உறையை பிரிக்காமலேயே நிராகரிக்க 4 காரணங்கள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

தபால் ஓட்டுச்சீட்டு உள்ள உறையை (Form 13B) பிரிக்காமலேயே நிராகரிக்க 4 காரணங்கள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் ஓட்டுச்சீட்டு உள்ள சிறிய உறையை (Form 13B) பிரிக்காமலேயே, சில முக்கிய காரணங்களுக்காக அந்த வாக்குகளை செல்லாததாக நிராகரிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதல்களை (2026-ன் படி) வழங்கியுள்ளது.

தபால் வாக்குகள் நிராகரிக்கப்படும் முக்கிய காரணங்கள்:

படிவம் 13A இல்லை: ஓட்டுச்சீட்டு இருக்கும் சிறிய உறையுடன் (13B), உறுதிமொழி படிவம் (Declaration - Form 13A) இணைக்கப்படாமல் இருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும்.

கையொப்பம் இல்லை: உறுதிமொழி படிவத்தில் (13A) வாக்காளரின் கையொப்பம் இல்லையெனில் வாக்கு செல்லாது.

சான்றொப்பம் இல்லை: உறுதிமொழி படிவத்தில், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி (Attesting Officer) சான்றொப்பம் (Attestation) செய்யாமல் இருந்தால் நிராகரிக்கப்படும்.

பொருந்தாத எண்கள்: உறுதிமொழி படிவத்தில் (13A) குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டின் வரிசை எண்ணும் (Serial Number), சிறிய உறையின் (13B) மீதுள்ள வரிசை எண்ணும் ஒன்றாக இல்லாவிட்டால், அந்த வாக்கு செல்லாததாக அறிவிக்கப்படும்.


வாக்கு எண்ணிக்கை நடைமுறை:

தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் 500 தபால் வாக்குகளுக்கு ஒரு டேபிள் வீதம் அமைக்கப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மைக்ரோ அப்சர்வர், மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர்கள் பணியில் ஈடுபடுவர்.முக்கிய குறிப்பு: தேர்தல் கமிஷன் அனுப்பிய படிவம் தான் என்பதை உறுதி செய்த பிறகே, படிவம்-13சி (Outer Envelope) திறக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தபால் ஓட்டை பிரிக்காமலேயே நிராகரிக்கலாம் - வழிகாட்டுகிறது தேர்தல் கமிஷன் (பத்திரிக்கைச் செய்தி)



TNEA 2026 விண்ணப்பப் பதிவு தொடக்கம்



பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.


தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.


மே 3 முதல் ஜூன் 2 வரை www.tneaonline.org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம் - 

OC / BC / BCM / MBC @ DNC ₹500, 

SC / SCA / ST ₹250.


அசல் சான்றிதழ் பதிவேற்ற கடைசி நாள் - ஜூன் 6 தேதி ஆகும்.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை


5 மாநில தேர்தல் - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை


தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடக்கம். 


தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


TN Assembly Election 2026 - Exit Poll Survey Results



வெளியானது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்  


TN Assembly Election 2026 - Exit Poll Survey Results


மீண்டும் திமுக ஆட்சி - அக்னி நியூஸ் சர்வீஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு:


திமுக 169 இடங்களிலும், அதிமுக 64, தவெக 1 இடங்களிலும் வெல்லும் என கணிப்பு


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.


சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்:


DMK Alliance: 145 - 160 


ADMK Alliance: 50 - 65


TVK: 13 - 18


பிற: 5 - 8



நியூஸ் 18:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 80


TVK: 18 - 24


பிற: 2 - 6



தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.


NDTV & PEOPLE PULSE:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 80


TVK: 18 - 24


பிற: 2 - 6


MINNAMBALAM EXIT POLL:


DMK - 155


Admk - 72


Tvk - 5


Others -2


REPUBLIC & P MARC:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 85


TVK: 16 - 26


பிற: 1 - 6


MUMBAI SATTA BAZAAR PREDICTION:


DMK: 145 -155


ADMK:45 - 65


TVK: 7 - 9


VOTE VIBE SURVEY:


DMK Alliance: 103 - 113


ADMK Alliance: 114 - 124


TVK: 04 - 10


பிற: 0


இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளின் படி, திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.







அதிமுக ஆட்சி அமைய வாய்ப்புள்ளது என வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் 


JVC & TIMES NOW:


ADMK: 128-147 


DMK: 75-95 


TVK: 8-15


CNN NEWS 18:


ADMK: 114 - 124


DMK: 103 - 113


TVK: 4 - 10



இவை தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களிடம் எடுத்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் மட்டுமே - உண்மையான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 4 அன்று வெளியாகவுள்ளன



தற்போதைய Trending - NASA Landsatல் உங்கள் பெயரை உருவாக்கலாம் - நீங்கள் முயற்சி செய்து பார்த்தீர்களா?



தற்போதைய Trending - NASA Landsatல் உங்கள் பெயரை உருவாக்கலாம் - நீங்கள் முயற்சி செய்து பார்த்தீர்களா? 


நீங்க ட்ரை பண்ணி பார்த்துட்டீங்களா?


* இப்போ இதுதான் ட்ரெண்ட்!


📍நாசாவின் இணையதளத்தின் மூலம் Satellite Art உருவாக்குவது தற்போது ட்ரெண்டாகியுள்ளது!


* NASA landsat இணையதளத்திற்குள் சென்று உங்கள் பெயரை பதிவிட்டால், காடுகள், மலைகள், பாலைவனம் என இயற்கையில் அமைந்துள்ள வடிவங்களின் மூலம் Art உருவாக்கித் தருகிறது


வலைதள முகவரி :

https://science.nasa.gov/specials/your-name-in-landsat/



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNLA Election 2026 - Leading Status

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - முன்னிலை நிலவரம்  TNLA Election 2026 - Leading Status இதே இணைப்பில் Update செய்யப்படும். தொடர்ந்து முன்...