கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS 2026 அரசு பணியாளர்களுக்கு e_Card

 


NHIS 2026 அரசு பணியாளர்களுக்கு e_Card


NHIS 2026 to Tamilnadu Government Employees:


தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 இன் படி பயனாளிகளுக்கான NHIS Identity Card அவர்களது IFHRMS ID  விபரங்களில் இருந்து e_Card ஆக வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

( G.O.Ms.No.122 Finance (Health insurance) Department  Dated 24.6.2026 (Para No. 14 , Page no 24)


இது தொடர்பாக 01.07.2026 அன்று நடைபெற்ற இயக்குனரக ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும்   e_ ID CARD வழங்கப்பட ஏதுவாக அனைத்து பணியாளர்களின் e_SR-ல் அவர்களது   குடும்ப உறுப்பினர்கள் விவரத்தினை 13-07-2026 - க்குள் முழுமையாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Deaths inside cars – How to prevent them?



கார்களுக்குள் ஏற்படும் உயிரிழப்புகள் - தடுப்பது எப்படி?


சமீப காலமாக பூட்டிய காருக்குள் 

நிகழும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 


சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  காருக்குள் தூங்கிய மருத்துவர் மரணமடைந்திருப்பதும் பெரும்

 துக்கம்


இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்து 

காருக்குள் நிகழும் மரணங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. 


தற்போதையை காலத்தில் 

மகிழுந்து எனும் கார் வைத்திருப்பது நம்மிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாம் அனைவரும் 

இது குறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பது காலத்தின் கட்டாயமாகவும் உயிர்களைக் காக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன் 


பூட்டிய கார்களுக்குள் ஏசி ஆன் செய்து விட்டு உறங்குவதும் ஆபத்து. 


வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக நேரம் நிற்க வந்தால் ஏசி ஆன் செய்திருந்தாலும் பல பேருடன் காருக்குள் இருப்பதும் ஆபத்து 


என்பதை பின்வரும் கட்டுரை ஆய்வுப் பூர்வமாக உங்களுக்கு விளக்கும் என்று நம்புகிறேன். 


பொதுவாக, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளே இவ்வாறு காருக்குள் விளையாடும் போது தெரியாமல் ஆட்டோமேட்டிக் சென்ட்ரல் லாக் ஆகி 

உள்ளேயே அடைபட்டு போய் அதிகமாக மரணிக்கின்றனர். 


அரிதாக பெரியவர்களும் குறிப்பாக அதீத போதையில் இருப்பவர்களும் மரணமடைகிறார்கள். 


இது எதனால் நிகழ்கிறது என்று பார்ப்போம். 


ஒரு சராசரி மனிதனுக்கு 

தினசரி 300 லிட்டர் ஆக்சிஜன் அவன் சுவாசிக்கத் தேவை. 


அதாவது ஒரு மணிநேரத்துக்கு 12.6 லிட்டர் ஆக்சிஜன் எனும் உயிர்வளி கட்டாயத் தேவையாகும். 


இப்போது முற்றிலும் பூட்டப்பட்ட ஜன்னல்கள்  மூடப்பட்ட காருக்குள் 

நான்கு குழந்தைகள் மாட்டிக் கொள்கின்றனர் என்பதைக் கற்பனை செய்வோம்.. 


பூட்டிய காருக்குள் சுமார் 3000 முதல் 4000 லிட்டர் காற்று அடைபட்டிருக்கும்.  

வெளியில் இருந்து காற்று உள்ளே வருவதற்கோ 

உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்வதற்கோ இயலாது. 


காற்றில் 21% ஆக்சிஜன் கலந்துள்ளது. 

அப்படியென்றால் காருக்குள் இருக்கும்   சுமார் 3500 லிட்டர் அடைபட்ட காற்றில் ,

735 லிட்டர் ஆக்சிஜன் இருக்கும். 


ஒரு குழந்தை ஒரு நிமிடத்திற்கு 

0.25 லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்கும் என்றால் நான்கு குழந்தைகளும் ஒரு நிமிடத்திற்கு ஒரு லிட்டர் ஆக்சிஜன் என 

ஒரு மணிநேரத்திற்கு அறுபது லிட்டர் வீதம் 

அடுத்த பனிரெண்டரை மணிநேரம் அவர்கள் நால்வரும்  சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் உள்ளே இருக்கிறது. 


பிறகு ஏன் பூட்டப்பட்ட கார்களுக்குள் சென்ற குழந்தைகள் இரண்டு மூன்று மணிநேரங்களுக்குள் மூர்ச்சையாகி மரணமடைகின்றனர்? 


இதற்குக் காரணம் 

நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது  

ஆக்சிஜனை வைத்துக் கொண்டு 

 சுவாசத்தை வெளிவிடும் போது 

கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை மூச்சுக் காற்றில் வெளியேற்றுகிறோம். 


முறையாக ஜன்னல்கள் திறந்திருக்கும் காரில் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வெளியே சென்று, புதிய ஆக்சிஜன் உள்ள காற்று உள்ளே வந்து விடும். 


ஆனால் அடைக்கப்பட்ட காருக்குள் 

கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வெளியிடும் மூச்சுக் காற்றின் கார்பன் டை ஆக்சைடு அளவுகள்  கூடிக் கொண்டே செல்லும். 


இது தான் உயிரைக் கொல்லும் முக்கிய ஆபத்து. 


ஒரு இடத்தில் நிலவும் காற்றில், கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 1000 பிபிஎம் (PPM) என்பதற்கு கீழ் இருப்பது உகந்தது என்கிறது உலக சுகாதார நிறுவனம். 


சென்ஸ் ஏர் எனப்படும் காருக்குள் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு சென்சார் தயாரிக்கும் நிறுவனம் இது குறித்து பல ஆய்வுகள் செய்துள்ளது. 


கதவுகள், ஜன்னல்கள் பூட்டப்பட்ட காருக்குள் நான்கு மனிதர்கள் ஏசி போட்டுக் கொண்டு பயணம் செய்யும் போது 


1½ நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு - 1000 பிபிஎம் தொட்டு விடுகிறது

5 நிமிடங்களில் - 2500 பிபிஎம் 


(2000 பிபிஎம் தாண்டினாலே 

மயக்கம், தலை சுற்றல், தலைவலி, தூக்கம் வருவது போல் இருப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.)


22 நிமிடங்களில் - 6000 பிபிஎம் 


இத்தனைக்கும் ஏசியை  வெளிப்புறக் காற்று உள்ளே புகும் மோடில் வைத்துப் பயணிக்கும் போதே இத்தகைய நிலை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 


இதுவே கதவுகள் பூட்டப்பட்டு ஜன்னல்கள் மூடிய எஞ்சின் ஓடாத காருக்குள் நான்கு பேர் இருக்கும் போது 15 நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 40000 பிபிஎம் தொட்டிருக்கின்றன. 


மற்றொரு ஆய்வில் 

இருவர் சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் காரில் ஏசி போட்டு பயணிக்கும் போது 

பிபிஎம் 1400 என்ற அளவில் உயர்ந்துள்ளது. 

பிறகு இந்த அளவுகள் 1000 க்கு கீழ் குறைவதற்கு அடுத்த நாள் காலை வரை அதாவது பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டுள்ளது. 


இப்போது கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 

கூடக் கூட மனித உடலுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம் 


2000-2500 பிபிஎம் வரை

-  சோர்வு 

- கவனச்சிதறல் 

- வேக்காடாக உணர்தல் 


2500-5000 பிபிஎம் 

- தலைவலி

- தலை சுற்றல் 

- உறக்கம் ஏற்படும் நிலை 


5000- 40,000 பிபிஎம் 

- மூச்சுத் திணறல் 

- மூர்ச்சை நிலை

- அதீத கவனக் குறைபாடு 


40,000 க்கு மேல்

- தீவிர மூச்சுத் திணறல் 

- கோமா 

- திடீர் மரணம் ஏற்படுதல் 


இதில் இருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் 

காருக்குள்  அடைபடும் போது காற்றில் இருக்கும் ஆக்சிஜன் நமக்கு பல மணிநேரங்களுப் போதுமானதாக இருந்தாலும் கூட 

நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் - மிகவும் வேகமாக உள்ளே அதன் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே செல்லும். 


இதனால் நாம் தேவைக்கும் அதிகமாக கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கத் துவங்குவோம். அதனால் 

நமது உடலில் ஒரே நேரத்தில் 

ஆக்சிஜன் குறைபாடும் ( ஹைப்பாக்சியா) 

கூடவே ஹைப்பர் கேப்னியா ( கார்பன் டை ஆக்சைடு அதிகமாகும்) சூழ்நிலையும் தோன்றும் 


இதனால் உடல் அமிலத்தன்மைக்குச் செல்லும். 

பல உறுப்புகளும் செயலிழக்கும்.  

மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 

மூர்ச்சை நிலைக்குச் சென்று 

சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. 


இதற்கடுத்தபடியாக 

நிற்கும் காரில் ஏசி போட்டுக் கொண்டு 

அனைத்து ஜன்னல்களையும் அடைத்துக் கொண்டு நீண்ட நேரம்  உறங்குவது சரியா? 


தவறு.. உயிருக்கு ஆபத்தானதும் கூட.. 


அதாவது கார் ஓடும் போதும் கூட 

ஏசியை காற்று உள் சுழற்சி மட்டும் ஆகும் மோடில் வைத்திருந்தால் 

வெளியே இருந்து புதிய காற்று உள்ளே வராது. 


மகிழுந்தை வெளிப்புறத்தில் நிறுத்தி வைத்திருக்கும் போது, 

வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் மோடில் வைத்திருந்தால் பெரிய பிரச்சனை இல்லை. 


 அதுவே கார்களை நிறுத்தும் கீழறைகள் (BASEMENT)  அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட அறை ஆகியவற்றில் காரை நிறுத்தி இஞ்சின் ஆன் செய்து உள்ளே உறங்குவது ஆபத்தானது. 


காரணம் - காருக்குள் செல்லும் காற்றானது, 

அந்தக் காரின் இஞ்சின் வெளியிடும் 

கார்பன்டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு கலந்த காற்றாக இருக்கும். 

தொடர்ந்து இந்த கலப்படமான காற்று காருக்குள் வரும் போது, இயல்பாகவே சுவாசிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கூடிவிடும்.  

இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும். 

அதிலும் குடி போதையில் இருக்கும் போது இதை கவனிக்கும் வாய்ப்பு குறைவு. 

இதனால் மரணம் நிகழும். 


இதைத் தவிர்க்க, 

காருக்குள் தூங்க வேண்டும் என்றால் 

பாதுகாப்பான திறந்த வெளியில் 

ஜன்னல்களை லேசாகத் திறந்து வைத்து விட்டு இஞ்சினை ஆன் செய்யாமல் உறங்குவது சிறந்தது. 


இன்னும் கார் சம்பந்தமான ஏசி இயக்கத்தில் பாதுகாப்புக்காக சில டிப்ஸ்கள் இதோ


ஏசி மோடில் இரண்டு வகை உண்டு


- நாம் சுவாசிக்கும் காற்று உள்ளேயே சுழற்சியில் இருக்கும் மோட் 

- வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே வரும் மோட். 


காருக்குள் இருவருக்கு  மேல் 

நால்வர் மற்றும் அதற்கு மேல் நபர்கள் பயணிக்கும் போது 


வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே புகும் ஏசி மோடில் பயணிப்பது நல்லது. இது உங்கள் காருக்குள் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் சரியாக இருப்பதை உறுதி செய்யும். 


நீண்ட நெடிய பயணங்கள் செல்லும் போது அவ்வப்போது கட்டாய ப்ரேக் எடுத்து 

சில நிமிடங்கள் அனைவரும் இறங்கி வெளிக்காற்றைப் பெறுவது கட்டாயமாகிறது 


வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிக நேரம் கார் நிற்க நேருமாயின், ஏசியை ஆஃப் செய்து விட்டு ஜன்னல்களைத் திறந்து கொண்டு நிற்பது நல்லது. காரணம் - நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் வாகனங்களின் புகை அதிகமாக இருக்கும். குறிப்பாக நமக்கு முன் நிற்கும் கார்/ பேருந்தின் எக்ஸ் ஹார்ட் டில்லியில் இருந்து வெளிவரும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு/ கார்பன் மோனாக்சைடு அதிகம் உள்ள காற்றை நமது காருக்குள் ஏசி உள்ளிழுக்கும். இது நமக்கு ஊறு விளைவிக்கலாம். இது போன்ற சமயங்களில் காற்று உள் சுழற்சி மட்டும் ஆகுமாறு மோட் செட் செய்து கொள்ளவும். 


கட்டாயம் மூடிய காரில் ஏசி போட்டு உறங்கக் கூடாது. அதுவும் மது அருந்தி விட்டு உறங்கவே கூடாது.


பொதுவாக கார்களை நாம் லாக் செய்யும் போது ஜன்னல்களில்  ஒன்றோ இரண்டிலோ குறைந்தபட்சம் ஒரு செண்ட்டிமீட்டர்  இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டால் 

தற்செயலாக விபரீதமாக  குழந்தைகள் உள்ளே சென்று விளையாடி கார் லாக் ஆனால் கூட 

அந்த ஒரு செண்டிமீட்டர் இடைவெளியானது உயிர்களைக் காப்பாற்றக் கூடும். 


நம் குழந்தைகளை கண்காணிப்புடன் வளர்த்து வருவோம்.

 என்றும் 

குழந்தைகள் காணவில்லை எனில் முதலில் சுற்றி இருக்கும் கார்களில் சென்று தேடுவதை வழக்கமாகக் கொள்வோம்.


காரணம் தற்காலக் குழந்தைகள்

கார்களின் சாவிகளை தானே எடுத்துக் கொண்டு அவற்றை சிறிய அழுத்தில் திறந்து உள்ளே சென்று விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அவர்களிடம் கார் சாவி கிடைக்காமல் பார்த்துக் கொள்வதையும் உறுதி செய்யலாம். 


கார் - ஏசி - கார்பன் டை ஆக்சைடு - ஆக்சிஜன் - கார்பன் மோனாக்சைடு  என்று நாம் கற்றுக் கொண்ட இந்த விஷயங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றுவோம் 


இன்னுயிர்களைக் காப்போம்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


தற்காப்பு கலை பயிற்றுநர், காவல்துறையிடமிருந்து குற்றமின்மை அறிக்கை (Police verification report) பெறும் வழிமுறை

 


தற்காப்பு கலை பயிற்றுநர் காவல் நிலையத்திலிருந்து குற்றமின்மை அறிக்கை (Police verification report) பெற மேற்கண்ட  link ஐ பயன்படுத்திக் கொள்ளவும்.


The trainer needs to apply 


Steps to apply for Police verification report in online 


1. Open portal

2. click citizen services 

3. click paid services 

4. Click police verification report 

5. Click New request 

6. If already registered Click login. 


       If new means click register and enter all  the details as requested and proceed further ( full name, address, contact details, id proof, passport size photograph etc)


https://www.police.tn.gov.in/citizenportal



Census 2027 | சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) குறித்த தகவல்கள்

 


Census 2027 | சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) குறித்த தகவல்கள் 


Census 2027


தமிழ்நாட்டில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) நடைபெறுகிறது


இதன் மூலம் பொதுமக்கள் நேரில் வருபவர்களுக்காகக் காத்திருக்காமல், தங்கள் இல்லம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக சுயமாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.


✅சுய கணக்கெடுப்பு செய்யும் முறை:

அதிகாரப்பூர்வ தளம்: 


https://se.census.gov.in/


 (Census of India Self-Enumeration Portal).


📝பதிவு செய்தல்: உங்கள் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி லாகின் (Login) செய்யவும்.


✍️தகவல் பதிவு: உங்கள் அடிப்படை விவரங்கள் மற்றும் குடியிருப்பு விவரங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்


🌸சரிபார்ப்பு (Validation): சுய கணக்கெடுப்பு முடிந்ததும் உங்களுக்கு ஒரு SE ID (சுய கணக்கெடுப்பு எண்) கிடைக்கும்.


🌹அதிகாரி வருகை:

 ஆகஸ்ட் மாதம் 

வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு (HLO) 01-08-2026 முதல் 30-08-2026 வரை

உங்கள் பகுதிக்கு நேரில் வரும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் இந்த SE ID-ஐ காண்பித்து தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.




Microsoft நிறுவனத்தில் தொடரும் பணிநீக்கம்



Microsoft நிறுவனத்தில் தொடரும் பணிநீக்கம்


செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதற்காக, உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2.5% பேரை (4,800 ஊழியர்கள்) மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் பணிநீக்கம் செய்துள்ளது. 


இந்த பணிநீக்கங்கள் முதன்மையாக வணிக விற்பனைப் பிரிவு (Commercial Sales) மற்றும் எக்ஸ்பாக்ஸ் (Xbox) கேமிங் பிரிவைச் சார்ந்தவையாகும்.


இந்த பணிநீக்கத்திற்கான காரணங்கள்: 

செயற்கை நுண்ணறிவு துறையில் Microsoft நிறுவனம் அதிக முதலீடுகளைச் செய்து வருவதால், அதற்கேற்ப தனது வணிகத்தை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது. 


குறிப்பாக, எக்ஸ்பாக்ஸ் பிரிவில் வருவாய் மற்றும் லாபம் குறைவாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்டவர்கள் விவரம்: 

எக்ஸ்பாக்ஸ் பிரிவில் உடனடியாக 1,600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மேலும் அடுத்த ஆண்டில் கூடுதல் பணிநீக்கங்கள் இருக்கலாம்.


முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த முறையும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு ஆதரவு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருகிறது.


Wayanad Landslide | What is the cause?



வயநாடு நிலச்சரிவு - காரணம் என்ன?


 கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழப்பு; மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்


கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்ற இடத்தில் அண்மையில் மீண்டும் ஒரு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 


கடந்த 2024-ஆம் ஆண்டு முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளின் சோகம் இன்னும் மறையாத நிலையில், அங்கு பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த புதிய பேரிடர் நிகழ்ந்தது.


சமீபத்திய நிலச்சரிவு விவரம்

கல்லாடி பகுதியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், சுரங்கப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தொழிலாளர் தங்குமிடங்கள் மற்றும் வாகனங்கள் மண்ணில் புதைந்தன.


பாதிப்புகள்: 

இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் வரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.


காரணம்: 

தொடர்ச்சியான கனமழையுடன், சுரங்கப் பணிகளுக்காக மலைப் பகுதியில் அகற்றப்பட்டு மலை போல் தேங்கியிருந்த மண் குவியல்கள் முறையாக அகற்றப்படாததே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்களும், கேரள அரசும் குற்றம் சாட்டுகின்றனர்.


மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கேரள முதல்வர் வி.டி.சதீசன் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். 


இந்த நிலச்சரிவு விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை இந்த காணொளியில் காணலாம் (அதிர்ச்சியூட்டும் காணொளி - மென்மையான மனம் கொண்டவர்கள் காண வேண்டாம்)




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சான்றுகளை வெளிப்படுத்தும் கரிவலம்வந்தநல்லூர்

 


Karivalamvandanallur reveals historical evidence dating back 2,500 years.


2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சான்றுகளை வெளிப்படுத்தும் கரிவலம்வந்தநல்லூர் 


தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் நடைபெற்ற அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககாலம் செங்கற்களால் கட்டப்பட்ட படிக்கட்டு கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, கீழடிக்கு அடுத்த முக்கிய சங்ககால நகரமாக தென்காசியும் இருக்கலாம் என்ற கருத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் முன்வைக்கச் செய்துள்ளது.



கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கிணறு 4 மீட்டர் × 4 மீட்டர் அளவுடைய சதுர வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் உள்ளே இறங்குவதற்கு கற்களால் செய்யப்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. இதன் சுவர்கள் அனைத்தும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளதுடன், அந்தச் செங்கற்கள் ஒன்றோடொன்று பொருந்தும் வகையில் இன்டர்லாக்கிங் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளில் ஏற்பட்டுள்ள தேய்மானம் இந்தக் கிணறு நீண்டகாலம் பயன்படுத்தப்பட்டதைக் காட்டுகிறது. மேலும் சுவர்களில் இருந்த நீர்க்கறைகள், அப்போது நீர்மட்டம் உயரமாக இருந்ததற்கான சான்றாக உள்ளன. இது பழங்கால நீர் மேலாண்மை முறையின் சிறந்த எடுத்துக்காட்டு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



இந்த இடம், மதுரையிலிருந்து செங்கோட்டை கணவாய் வழியாக மேற்கு கடற்கரைக்குச் செல்லும் பழமையான வணிகப்பாதையில் இருந்துள்ளது. 1930-களிலேயே இப்பகுதியில் ரோமன் தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதனால் வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.


அகழாய்வில் சிவப்பு நிற பூச்சு பூசப்பட்ட மட்பாண்டம், மயில் ஓவியம் வரையப்பட்ட பானை, மூடியுடன் கூடிய புதைகுழி இருக்கக்கூடிய பானை மற்றும் மனிதர்களின் மோலார் மற்றும் முன்பற்கள் ஆகியவை கிடைத்துள்ளன. இவற்றுடன் கருப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள், கீறல் குறியீடுகள் கொண்ட பானைகள், கண்ணாடி மணிகள், டெர்ரகோட்டா பொம்மைகள், விளையாட்டில் பயன்படுத்திய கற்கள், மைக்ரோலித்திக் கற்கருவிகள், இரும்புப் பொருட்கள், இரும்பு உருக்கின் கழிவுகள் மற்றும் ஹீமடைட் இரும்புத் தாது ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



இந்த அகழாய்வில் உயர்தர தகர வெண்கலம் துண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பு ஆதிச்சநல்லூர், சிவகலை, சாஸ்தாபுரம், திருமலாபுரம், சூலபுரம் ஆகிய இடங்களில் மட்டுமே இது கிடைத்திருந்தது. தற்போது தென்காசி ஆறாவது இடமாக இதில் இணைந்துள்ளது.


தொல்லியல் நிபுணர்களின் கருத்துப்படி, இந்த இடம் இரும்புக்காலத்திலிருந்து சங்ககால நகரமாக வளர்ந்திருக்கலாம். கீழடி, அழகன்குளம், பூம்புகார் போன்ற சங்ககால மையங்களுடன் ஒத்த செங்கற்கள் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால், தென்காசியும் பெரிய சங்ககால குடியிருப்பு அல்லது நகரமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.


மொத்தத்தில், இந்த அகழாய்வு தென்காசியின் வரலாற்றை 2,500 ஆண்டுகளுக்கு முன் சங்ககாலம் வரை எடுத்துச் செல்கிறது. இது தொடர்ந்து நடைபெறும் அகழாய்வுகளில் இன்னும் பெரிய வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கக்கூடிய மிக முக்கியமான தளமாக உருவெடுத்து வருகிறது.


01-01-2026க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற உள்ளவர்கள், TAPS Interim Monthly Payout Option Letter வழங்க மாதிரி கடிதம், படிவங்கள், இணைப்பு விவரங்கள், அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள்

 


01-01-2026க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற உள்ளவர்கள், TAPS Interim Monthly Payout Option Letter வழங்க மாதிரி கடிதம், படிவங்கள், இணைப்பு விவரங்கள், அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் 


TAPS Formats, Circulars & GOs


For those who have retired or are due to retire after 01-01-2026: Model letter, forms, annexure details, Government Orders, and circulars regarding the TAPS Interim Monthly Payout Option Letter.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



நண்பர்களே வணக்கம் 🙏

TAPS 

1.1.2026க்கு பிறகு CPS இல் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற உள்ளவர்கள்,


TAPS Interim Monthly payout option letter வழங்க மாதிரி கடிதம் படிவம் இணைப்பு விவரங்கள் ( 5 pages word editable Tamil unicode Marutham font document) இணைத்துள்ளேன்..


எனது புரிதல் மற்றும் அரசாணை பதிவுகள் என 42 page pdf இணைத்துள்ளேன் 🙏


பள்ளிக் கல்வித் துறையில் இருந்து விண்ணப்பம் அனுப்பிட துறை சார்ந்த அறிவிப்புகள் ஏதும் வரவில்லை...

விரைவில் வரலாம்..


கூடுதல் விவரங்களுக்கு தங்களின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் 🙏

7/7/26


தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் - விண்ணப்ப படிவம் 


TAPS ( Tamilnadu Assured Pension Scheme ) Application Format - Word File 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


In-person-visit-free document registration becomes mandatory from 17.08.2026



பதிவுத் துறையில் இணைய வழியில் வருகை இல்லா ஆவணப் பதிவு 17.08.2026 முதல் கட்டாயம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Online, in-person-visit-free document registration in the Registration Department becomes mandatory from 17.08.2026 | Tamil Nadu Government Press Release


செய்தி வெளியீடு எண்: 348 , நாள்: 07.07.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



"பதிவுத்துறையில் இணைய வழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு"


மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்


திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தகவல்


மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் இன்று (07.07.2026) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் அலுவலர்/தனித்துணை (5) தணிக்கை). ஆட்சியர் (முத்திரை) மாவட்ட மற்றும் வருவாய் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


இந்த ஆய்வு கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:


தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் புதிய ஆட்சி பொறுப்பேற்றபின் பதிவுத்துறையில் லஞ்சம் வாங்கும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தினை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அலுவலர்கள் பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய இருக்கை வசதியை ஏற்படுத்தி, அவர்களுடைய குறைகளை கவனமாக விசாரித்து, லஞ்சம் வாங்குவதை தவிர்த்து, ஆவணப் பதிவுகளை உடனடியாக முடித்து, அன்றைய தினமே உரிய நபர்களிடம் பத்திரங்களை ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


பின்னர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:


மாண்புமிகு தமிழ்நாடு அவர்கள் முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக இந்த அரசு செயல்படும் என்பதை தெரிவித்தார். அதேபோல் அனைத்து துறைகளிலும் அதனை செயல்படுத்தும் விதமாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அறிவுரை வழங்கி வருகிறார். அந்த வகையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று எனது தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


தற்பொழுது அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே சார்பதிவாளர் நிலை அலுவலர்களுக்கு மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. 10.05.2026 முதல் நாளது வரை 259 சார்பதிவாளர்களைப் பொறுத்து மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 249 சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மட்டுமல்லாமல், 10 நிர்வாக சார்பதிவாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேற்கண்ட மாறுதல் ஆணைகள் அனைத்தும் பணியாளர்களின் கோரிக்கையை அடிப்படையாக கொண்டும், வெளிப்படைத் தன்மையுடனும் சார்பதிவாளர்களின் திறன் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் அலுவலகங்கள் மற்றும் பெருமளவில் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும் அலுவலங்களில், நிரந்தர சார்பதிவாளர்கள் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் விதமாக இம்மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி மாறுதல் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடித்தும், நிர்வாக நலனை முன்னிறுத்தியும் பிறப்பிக்கப்பட்டுள்ள இம்மாறுதல் ஆணைகள் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்திட வழிவகுக்குகிறது.


மேலும், பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (Anywhere Registration) கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24 x 7 x 365) இணையவழி தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யும் வசதியான"வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration)" நடைமுறை 17-08-2026 முதல் கீழ்க்கண்ட ஆவணங்களைப் பொறுத்து கட்டாயமாக்கப்படுகிறது.


அ) முதல் விற்பனை மனை (First sale of Plot)


ஆ) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat)


புதிய நடைமுறை


1. பதிவுத்துறை இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிலவிற்பனையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவினை (Login) தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.


2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் விபரங்கள் மற்றும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்ய வேண்டும்.


3. ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு, கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.


4. இணையவழி கட்டணம் செலுத்தி இணையவழியிலேயே சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.


5. ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்படின், சார்பதிவாளர் இணையவழியில் கோரும் தகவலுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கலாம்.


6. சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண இரசீது சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் மின்கையொப்பத்துடன் ஆவணதாரருக்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும்.


7. பதிவு செய்யப்பட்ட 60 நாட்கள் வரை பதிவுசெய்யப்பட்ட ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


8. பதிவுச்சட்டம், 1908-ல் விதி 32,52 மற்றும் 69-ல் உரிய திருத்தம் மேற்கொண்டு புதிதாக இணைய வழி பதிவு விதிகள் உருவாக்கப்பட்டு, இணையவழி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


9. இதுதொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பிரத்யேகமாக ஒர் உதவி மையம் செயல்படும்.


தொழில்நுட்ப தேவைகள்


1. இணைய இணைப்பு


2. ஆதார் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல் 0 & எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப் படலம் கவரும் கருவி


3. புகைப்படக்கருவி (Webcam)


இந்த புதிய நடைமுறை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள முடியும். இதனால் குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் கணிசமாகக் குறையும். மேலும், அலுவலகங்களுக்கிடையேயான பணிச்சுமை சமநிலைப்படுத்தப்பட்டு பதிவுப் பணிகள் விரைவாக நடைபெறும். அதேவேளையில் பொதுமக்களின் காத்திருப்பு நேரம் குறைவதுடன் பதிவுச் சேவைகளின் தரம் செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறனும் மேம்படும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பத்திரப் பதிவுத்துறை தலைவர் திரு. ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப.. கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9



Census 2027 பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு?

 


Census 2027 பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்க வேண்டும்? - உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை


மக்கள் தொகை கணக்கெடுப்புப் Census 2027 பணியில் யாரையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

1. கர்ப்பிணிப் பெண்கள் 

2. கடுமையான நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 

3. கடுமையான மாற்றுத்திறனாளிகள் 

4. பத்தாம் வகுப்பிற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்கள் 

5. குறிப்பிட்ட சமூக / மத சமூகங்கள் மீது சார்புடையவர்கள்.

மத்திய அரசின் சுற்றறிக்கை Circular 19 Census 2027

☝️☝️☝️

பத்தி 7, பக்கம் 4...


 While choosing the Census personnel, adequate number of female enumerators and supervisors may be selected. However, pregnant ladies,persons with severe chronic ailments, persons with severe disabilities, persons below matriculate, persons biased towards specific social/ religious communities, etc. may be avoided to the extent possible as appointing them for field-work would be difficult/counter-productive.


மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​போதுமான எண்ணிக்கையில் பெண் கணக்கெடுப்பாளர்களும் மேற்பார்வையாளர்களும் தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள், கடுமையான நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான மாற்றுத்திறனாளிகள், பத்தாம் வகுப்புக்குக் கீழ் தேர்ச்சி பெற்றவர்கள், குறிப்பிட்ட சமூக/மத சமூகங்கள் மீது சார்புடையவர்கள் போன்றோரை களப்பணிக்கு நியமிப்பது கடினமானதாகவும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்பதால், அவர்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



No.9/25/2026-CD(CEN)

Ministry of Home Affairs, Government of India

OFFICE OF THE REGISTRAR GENERAL, INDIA

Janganana Bhawan, Tower-A, Census Division,

2/A, Man Singh Road, New Delhi-110011.

Dated: April 20th, 2026

CENSUS OF INDIA 2027- CIRCULAR No.19


Subject: Preparation of District Census Plan.

As you are aware Census 2027 is the 16th Census in the series from 1872 and 8th Census since independence. The intention of conducting Census during the year 2027 has already been notified in the Gazette of India.

2. Population Census is the largest administrative and statistical exercise in the country.Like the previous Censuses, the Census 2027 is being conducted in two phases, namely Phase I-House Listing and Housing Census popularly known as HLO during six months from April to September, 2026 in a period of 30 days as per the convenience of the State Governments and UT administrations along with option of Self-enumeration of 15 days period just before the 30 days period of house-to-house houselisting work. This phase besides providing an unambiguous frame for the 2nd phase i.e. Population Enumeration,would also provide very useful data on housing conditions, amenities available to the households and assets possessed by them. Questions of the Phase I of the Census have been notified in January, 2026. Phase II-Population Enumeration (PE) will be conducted during February 2027 (UT of Ladakh and snow-bound non-synchronous areas of UT of Jammu and Kashmir and States of Uttarakhand and Himachal Pradesh, Phase II will be conducted during September 2026). In phase II, information on demographic, socio-economic, education, migration, fertility ete, will be collected from each individual.

3. To facilitate improvement in quality and faster release of Census data, a number of initiatives have been adopted for Census 2027 as mentioned below:

(a) Digital approach for data collection: The data collection in the Census 2027 is planned to be done by digital means. An enumerator has to collect and submit data directly through Mobile App, using her/ his smart phone and syne the same directly on census web server. In addition to this, an online provision for self-enumeration through Self Enumeration portal (SE portal) has been made for the households, who would like to fill the census schedule on their own. For this one has to login on the SE portal with his mobile no. and OTP for filling the requisite information on Census schedule.

(b) The Census Management & Monitoring System (CMMS) portal is being used for management and monitoring of various Census activities like allocation of work to Census functionaries including Enumerators and Supervisors, management of training for Census oficials, progress of work in the field by each enumerator, autogeneration of Census Records/Abstracts, etc.;

(c)The creation and demarcation of House Listing Blocks (HLBs) and formation of Supervisory Circles (SCs) will be carried out through HLB Creators (HLBC) web mapping applications.

(d) A Code Directory for all descriptive type questions will remain available in the mobile app.;



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS 2026 அரசு பணியாளர்களுக்கு e_Card

  NHIS 2026 அரசு பணியாளர்களுக்கு e_Card NHIS 2026 to Tamilnadu Government Employees: தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்...