கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் "கிளாண்டர்ஸ்" நோய்த் தொற்றால் சென்னையில் குதிரை உயிரிழப்பு



மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் "கிளாண்டர்ஸ்" நோய்த் தொற்றால் சென்னையில் குதிரை உயிரிழப்பு


சென்னை சேப்பாக்கத்தில் பொதுமக்கள் சவாரிக்கு பயன்படும் குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் தொற்றால் உயிரிழப்பு


மனிதர்களுக்கு பரவும் ஆபத்தான கிளாண்டர்ஸ் தொற்றால் குதிரை உயிரிழந்த நிலையில், சென்னையில் 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினர் பரிசோதனை


சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்று நோயால் குதிரை ஒன்று உயிரிழந்ததையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


குதிரைகள், கழுதைகளிடையே பாக்டீரியாவால் ஏற்படும் 'கிளாண்டர்ஸ்' நோயானது மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட குதிரைகளுடன் நேரடித் தொடர்பு அல்லது அந்த குதிரைகளின் தொடர்புடைய பொருள்களில் இருந்து மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவலாம். எளிதில் பரவக் கூடியது, மரணத்தை ஏற்படுத்தக்கூடியதும் ஆகும்.


இந்நிலையில் சென்னையில் மக்கள் சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து சென்னை முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.



பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்தவும் மேலும் இதுபற்றி தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


குதிரைகள் பராமரிக்கப்படும் பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடாமல் உடனடியாக கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து கால்நடைத்துறை அலுவலர்கள் கூறியதாவது: 'கிளாண்டர்ஸ்' என்பது, பாக்டீரியாவால் ஏற்படும் கொடிய தொற்றாகும்; இது குதிரை, கழுதை போன்ற விலங்குகளைத் தாக்குவதோடு மட்டுமல்லாமல், அவற்றோடு நெருங்கி பழகும் மனிதர்களுக்கும் பரவக்கூடிய ஒரு ஆபத்தான நோய். இந்த நோய்க்கு, இதுவரை முழுமையான தடுப்பூசியோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ கிடையாது. பாதிக்கப்பட்ட குதிரையின் சளி, கண்ணீர் மற்றும் உடலில் உள்ள புண்களிலிருந்து வடியும் திரவங்கள் மூலமும், அவை பயன்படுத்திய தண்ணீர் வாளி, தீவனத் தொட்டிகள் மூலமும், இந்த தொற்று பரவக்கூடியது. 



 கால்நடை பராமரிப்புத் துறை, சென்னை மாநகராட்சி இணைந்து, குதிரைகள் வளர்க்கப்படும் பகுதிகளில், கிருமி நாசினிகளைத் தெளித்து, துாய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது பிற மாவட்டங்களில் இருந்தோ குதிரைகளைக் கொண்டு வருவதற்கும், எல்லைகளில் அவற்றின் நடமாட்டத்திற்கும், தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 



குதிரை வளர்ப்போர் மற்றும் பராமரிப்பாளர்கள், தங்கள் விலங்குகளிடம் சளி, இருமல் அல்லது தோலில் புண்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



தேவையே புதிய கண்டுபிடிப்பின் தாய் - மேரி கியூரி ( Marie Curie )ன் சாதனை



Need is Mother of Invention 


தேவையே புதிய கண்டுபிடிப்பின் தாய் - மேரி கியூரி ( Marie Curie )ன் சாதனை


நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மேரி கியூரி ( Marie Curie ) ஆய்வு செய்து கொண்டருந்தபோது அவரின் உதவியாளர் வந்தார்.


‘‘உங்களுக்குத் தெரியுமா மேடம்? நம் பிரான்ஸ் நாட்டு வீரர்கள் எல்லையில் நடக்கும் போரில் அதிகம் காயம் அடைகிறார்களாம்!’’


‘‘அவர்களுக்கு சிகிச்சை தர மருத்துவர்கள் யுத்த களத்திலேயே இருக்கிறார்களே?’’


‘‘இருக்கிறார்கள் மேடம். ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை செய்வதில் ஒரு சிக்கல் வருகிறதாம்!’’


‘‘என்ன சிக்கல்?’’


‘‘காயம்பட்ட வீரர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க யுத்த களத்திலிருந்து அவர்களை நகரத்துக்கு அழைத்து வர வேண்டியுள்ளது. சிறு சிறு காயங்களுக்குக் கூட நகரத்துக்கு அழைத்து வர வேண்டியுள்ளது.’’


‘‘புரிகிறது. எக்ஸ்ரே  எடுப்பதற்காகத்தானே?’’


‘‘ஆமாம் மேடம்!’’


‘‘நாம் ஏன் எக்ஸ்ரே மெஷினையே யுத்த களத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது?’’ என்று மேடம் கியூரி கேட்க, உதவியாளர் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.


‘‘அது சாத்தியமா மேடம்?’’


‘‘சாத்தியப்படுத்துவோம்’’ என்ற மேரி கியூரி ஒரு திட்டம் வகுத்தார். அதன்படி கொஞ்சம் உயரமான ட்ரக் வண்டிகள் இருந்தால் தன்னிடம் விற்குமாறு விளம்பரம் செய்தார். அதில் 20 ட்ரக் வண்டிகள் கிடைத்தன.



அந்த 20 வண்டிகளிலும் எக்ஸ்ரே மெஷின்களைத் தூக்கி உள்ளே வைத்தார். மெஷினை இயக்க ஜெனரேட்டர்களையும் உள்ளே வைத்தார்.


‘எக்ஸ்ரே மெஷின்களை எப்படி இயக்க வேண்டும்’ என்று பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தார். பெண்களே ட்ரக்கையும் இயக்கினார்கள். வழியில் திடீரென்று வண்டி ரிப்பேராகி நின்று விட்டால் என்ன செய்வது? அதனால் அனைத்து பெண்களும் மோட்டார் மெக்கானிசம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். அவரும் கற்றுக் கொண்டார்.



அதன்பின், நகரும் எக்ஸ்ரே மெஷின் ட்ரக்குகளுடன் போர்க்களத்தில் போய் நின்றார்கள் பெண்கள். இதைப் பார்த்த ராணுவ டாக்டர்களுக்கு நிம்மதி. காயமடையும் வீரர்களுக்கு உடனுக்குடன் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து அறுவை சிகிச்சை செய்தனர்.


இதனாலேயே பிரான்ஸ் அப்பகுதி தாக்குதலை எளிதாக முறியடித்து வெற்றி பெற்றது.


‘விஞ்ஞானியின் கடமை வெறுமே புதிதாய்க் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, அதை மக்களுக்கு பயன்படும் விதமாக மாற்றி அமைப்பதிலும் இருக்கிறது’ என்பதை உலகுக்குச் சொன்ன மேரி கியூரியை அனைவரும் பாராட்டினார்கள்.


Guy Goma - BBCன் சுவாரசியமான Blooper



Guy Goma - BBCன் சுவாரசியமான Blooper


 'யானைக்கும் அடி சறுக்கும்' என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் 'டைனோசருக்கே அடி சறுக்கிய கதை' ஒன்று உள்ளது. தெரியுமா?


2006ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி BBC தொலைக்காட்சியில் நேரலையாக ஆண் ஒருவரை - பெண் தொகுப்பாளர் ஒருவர் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.


ஆனால் பேட்டி கொடுத்தவர் பிதுங்கப் பிதுங்க முழித்துக் கொண்டு, கொஞ்சம் குழப்பத்துடன் பதிலளிக்கத் தொடங்கினார்.


தொகுப்பாளர்: வணக்கம், 'நியூஸ் வயர்லெஸ்' என்ற தொழில்நுட்ப இணையத்தின் ஆசிரியர் கை கியூனி நம்முடன் இணைந்திருக்கிறார். குட் மோர்னிங்


பேட்டி கொடுப்பவர்: குட் மோர்னிங்


தொகுப்பாளர்: இன்று வந்த தீர்ப்பு உங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததா?


பேட்டி கொடுப்பவர்: இந்தத் தீர்ப்பு வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் உள்ளே வந்தபோது, அவர்கள் என்னிடம் - வேறு ஏதோ சொன்னார்கள். உள்ளே வாருங்கள் உங்களோடு ஒரு நேர்காணல் இருக்கிறது என்றார்கள். எனவே, இது எனக்கு மிகப்பெரியதொரு ஆச்சரியம்தான்.


இப்படி அந்தப் பேட்டி நீண்டு கொண்டு சென்றது. 


தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு, பேட்டி கொடுத்தவர் தயங்காமல் பதிலளித்துக் கொண்டு வந்தார்.


சரி, இதில் என்ன 'சறுக்கல்' இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்.


இந்த பேட்டியைக் கொடுத்தவர் பெயர் கய் கோமா (Guy Goma). அவர் BBCஇல் IT தொடர்பான வேலையொன்றுக்கான நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார். 


அன்றையதினம் நியூஸ் வயர்லெஸ் என்ற தொழில்நுட்ப இணையத்தின் ஆசிரியர் கை கியூனி என்பவர், நேர்காணல ஒன்றுக்காக பிபிசிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.


ஆனால், கை கியூனி என நினைத்து, அங்கு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த கய் கோமவை அழைத்துச் சென்று - நேடியாக BBC பேட்டி கண்டது.


இதில் சுவாரசியம் என்னவென்றால், கய் கோமா சற்றும் தயங்காமல் - கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.


ஆயினும் அவருடைய முகபாவனைகள் மற்றும் குழப்பமான பதில்கள் - ஏதோ தவறு நடந்து விட்டது என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தின.


பிறகு இந்தச் சம்பவத்தை வைத்து இணையத்தில் ஏராளமான 'மீம்ஸ்' உருவாகின.


'இதுதான் BBCயின் மிகச் சிறந்த மோசமான நேர்காணல்' என்று, பிபிசியே பின்னாளில் குறிப்பிட்டது.


பின்னர், அந்த நபரை - பல தொலைக்காட்சிகள் அழைத்துப் பேட்டி கண்டன. அதன் பிறகு பிபிசியும் அழைத்து பேட்டி கண்டது.


இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அவர் நேர்முகத் தேர்வுக்காகச் சென்ற தொழில், அவருக்குக் கிடைக்கவில்லை.


இவ்வாறு தவறுதலாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட கய் கோமா (Guy Goma) கொங்கோ நாட்டைச் சேர்ந்தவர். 2001ஆம் ஆண்டு அவர் உள்நாட்டு போரிலிருந்து தப்பி, பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்.


அவரின் அந்த தவறுதலான பேட்டியின் ஒரு சிறிய துண்டை, பிபிசி தமிழ் - பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. 


அதைப் பார்த்து விட்டு, இணையத்தில் மேலதிக விடயங்களைத் தேடிய போது, அது குறித்து ஏராளமான தகவல்கள் கிடைத்தன.


தவறு எங்கும் நடக்கும். அதை ஏற்றுக் கொண்டு, பிபிசியே தன்னைக் கிண்டல் செய்திருப்பதுதான் இங்கு சுவாரசியம். 


#GuyGoma #BBC #interview 


ஓய்வூதிய உயர்வு கிடைக்கும் வயதுகள்


ஓய்வூதியர்கள் கவனத்திற்கு - ஓய்வூதிய (Pension) உயர்வு கிடைக்கும் வயதுகள்


Government of Tamil Nadu , FINANCE [Pay Cell] DEPARTMENT G.O.Ms.No.313, Dated : 25-10-2017இன் படி ஓய்வூதிய (Pension) உயர்வு கிடைக்கும் வயதுகள்



>>> அரசாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





♨️ 80 வயது நிறைவடைந்த பின்பு 20% ஓய்வூதிய உயர்வு கிடைக்கும்


💢 80 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 81, 82, 83, 84, 85 ஆகிய வயதுகளில் 20% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 85 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 86,  87, 88,  89,  90 ஆகிய வயதுகளில் 30% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢  90 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 91,  92,  93,  94,  95 ஆகிய வயதுகளில் 40% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 95 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 96,  97,  98, 99,  100 ஆகிய வயதுகளில் 50% கூடுதல்  ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார். 


💢 100 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 101 வது வயதிலிருந்து தொடர்ந்து 100% கூடுதல் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வருவார்.


(G.O.Ms.No.313 , Finance [Pay cell] Department, dated 25.10.2017)


💐💐 💐💐💐💐💐💐💐💐



FINANCE [Pay Cell] DEPARTMENT


G.O.Ms.No.313, Dated 25th October 2017.


(Heyvilambi, Ippasi-8, Thiruvalluvar Aandu 2048)


ABSTRACT


OFFICIAL COMMITTEE, 2017 Recommendations of the Official Committee, 2017 Revision of Pension / Family Pension and Retirement Benefits -Orders Issued.


Read the following :-


1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017.


2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated: 27-06-2017.


3. G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, dated: 11-10-2017.


ORDER:


In Government Order first read above, Government constituted an Official Committee to examine and make recommendations on revision of scales of pay and allowances for State Government employees and teachers including employees of Local Bodies and revision of pension, family pension and retirement benefits based on the decisions of the Government of India on the recommendations of the Seventh Central Pay Commission.


2. The Official Committee, 2017 has submitted its report to Government on 27-09-2017. The recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances has been accepted by the Government and accordingly orders were issued in the Government Order third read above.


3. The Government has carefully examined the recommendations of the Official Committee, 2017 on revision of pension / family pension and other retirement benefits and pass the following orders: -


PART A.


PENSION / FAMILY PENSION RELATING TO EMPLOYEES WHO RETIRED / DIED WHILE IN SERVICE BEFORE 1-1-2016


4. Paragraphs 5 to 13 below shall apply in respect of employees who have retired or died before 1-1-2016.


REVISION OF PENSION / FAMILY PENSION:


5. (1) The Pension or Family Pension, including enhanced family pension, relating to employees who retired or died while in service before 1-1-2016 shall, in the first instance, be revised in the following manner:


(i) The existing pension / family pension / enhanced family pension as on 31-12-2015, including the commuted portion but excluding additional pension applicable to pensioners / family pensioners of age 80 years and more, shall be multiplied by a factor of 2.57 and rounded off to the next higher ten rupee to arrive at the revised pension / family pension / enhanced family pension.


(ii) The ceiling limit for pension, family pension and enhanced family pension shall be revised from Rs.38,500/- to Rs.1,12,500/- (i.e. 50% of maximum pay in Pay Matrix of Rs.2,25,000/-), from Rs.23,100/- to Rs.67,500/- (i.c. 30% of maximum pay in Pay Matrix of Rs.2,25,000/-) and Rs.38,500/- to Rs. 1,12,500/- respectively. Therefore, if the revised pension or family pension or enhanced family pension worked out as detailed in paragraph (i) above exceeds the applicable ceiling limit, it shall be restricted to Rs. 1,12,500/-, Rs.67,500/- and Rs. 1,12,500/-respectively.


(iii) The minimum revised pension / family pension / enhanced family pension shall be Rs.7,850/- per month. Therefore, if the revised pension / family pension / enhanced family pension worked out as detailed in (i) is less than Rs.7,850/- per month, it shall be stepped upto Rs.7,850/-.


2026 Anna university 7.5% Reservation-ஐ எதிர்பார்த்துள்ள மாணவர்கள் கவனத்திற்கு

 


2026 Anna University 7.5% Reservation-ஐ எதிர்பார்த்துள்ள மாணவர்கள் கவனத்திற்கு !


கடந்த 2025  ஆண்டு 7.5% ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் மொத்தம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 13859


Round 1: 2177


Round 2:9607


Round 3:2075


என சுற்றுவாரியாக அனைத்து இடங்களும் நிரம்பியது. 


2025 Community wise


7.5% reservation cut off details 👇👇


OC 141


BC 138


MBC/DNC 141


BCM 107.5


SC 113.5


ST 98 


SCA 80.5 


இந்த ஆண்டு cut off மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் காரணம் கணிதத்தில் மொத்த centeum 732 


Physics 105 எனவே 


இந்த ஆண்டு *5 முதல் 10 மதிப்பெண்கள்* வரை குறையாலாம்  எவ்வளவு என்பது தெளிவாக June 29 rank list வந்த பிறகே கணித்து உறுதிபடுத்த இயலும். 


 2026 ல் உள்ள மாணவர்கள் மேற்கண்ட கட் ஆப் மதிப்பெண்களோடு தங்களுது  மதிப்பெண்ணை ஒப்பிட்டு தங்களுடைய வாய்ப்புகளை உறுதி படுத்தி கொள்ளவும். மாணவர்கள் & பெற்றோர்கள் இடைத்தரகர்களிடம்  ஏமாறாமல் விழிப்புடன் இருக்கவும். 


நன்றி.


வெளியாகிறது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

 


வெளியாகிறது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்


* 10 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். SSLC பொதுத்தேர்வு ரிசல்ட் வரும் புதன்கிழமை மே 20ஆம் தேதி வெளியாகும்"


-  அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு


* Tamil Nadu Class 10 public exam results will be released on May 20. Students can check their results on tnresults.nic.in and dge.tn.gov.in.



தமிழ்நாடு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு



 தமிழ்நாடு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு 


அமைச்சர்களும், துறைகளும்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு


Press Release No: 38

Date: 16.05.2026

LOK BHAVAN, TAMIL NADU -PRESS RELEASE

The Hon'ble Chief Minister of Tamil Nadu has recommended to the Hon'ble Governor of Tamil Nadu, the portfolios and subject allocations to the Council of Ministers, who were sworn in along with him on 10.05.2026. The Hon'ble Governor of Tamil Nadu has approved the allocation of portfolios among the Council of Ministers as follows:-


செய்தி வெளியீடு எண்: 38 , நாள்: 16.05.2026 

லோக் பவன், தமிழ்நாடு

செய்தி அறிக்கை 

10.05.2026 அன்று தம்மோடு பதவியேற்ற அமைச்சரவைக்கான துறைகள் மற்றும் பொறுப்பு ஒதுக்கீடுகளை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், அமைச்சரவைக்கு பின்வருமாறு துறைகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்:-


📌 முதலமைச்சர் C. ஜோசப் விஜய் - காவல், உள்துறை, பொதுநிர்வாகம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், இளைஞர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை


📌 N. ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை


📌 ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை (நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத்துறை


📌 Dr. K.G. அருண் ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை


📌 கே.ஏ. செங்கோட்டையன் - நிதித்துறை


📌  P. வெங்கடரமணன் - உணவுத்துறை 


📌 R.. நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை, ஊழல் தடுப்பு


📌 ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல்துறை, செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை 


📌 Dr. டி.கே. பிரபு - கனிமவளத்துறை


📌 செல்வி.S. கீர்த்தனா - தொழிற்துறை



NEET மறு தேர்வு - தேர்வு மையங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு

 

NEET மறு தேர்வு - தேர்வு மையங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு


தற்போதைய முகவரி மற்றும் தேர்வு நகரத் தேர்வை மாற்றியமைப்பதற்கான கால அவகாசம்


15 மே முதல் 21 மே 2026 வரை (23:50 மணி வரை) — neet.nta.nic.in என்ற இணையதளத்தில்.


• விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான முதல் மற்றும் இரண்டாவது தேர்வு நகரங்களைக் குறிப்பிடலாம்.


• இச்சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளாத மாணவர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே தேர்வு செய்துள்ள நகரமே தக்கவைக்கப்படும்.


• தற்போதைய முகவரி மற்றும் தேர்வு நகரம் ஆகியவற்றைத் தவிர, வேறு எந்த விவரங்களையும் திருத்துவதற்கு அனுமதி இல்லை.


• 21 மே 2026-க்குப் பிறகு, எந்தவொரு மாற்றத்தைக் கோரும் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.


• விண்ணப்பதாரர்களிடமிருந்து இதற்கென எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

தேர்வு நகரம் குறித்த அறிவிப்பு, நுழைவுச் சீட்டுகள் (Admit Cards) மற்றும் பிற விவரங்கள் ஆகியவை, ஜூன் 14-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்


ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள NEET UG 2026 மறுதேர்வு தொடர்பான புதிய அறிவிப்பை NTA  வெளியிட்டுள்ளது. 


அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வெழுதவுள்ள நகரத்தை மாற்றிக்கொள்ள அல்லது புதிதாக தேர்வு செய்ய ஒரு சிறப்பு “city selection/correction window” திறக்கப்பட்டுள்ளது.


மே 21 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதை தவறவிட்டால், முன்பு தேர்ந்தெடுத்த நகரத்திலேயே தேர்வு எழுத வேண்டியிருக்கும் என்று NTA தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற, Cut-off Marks கணக்கிடும் முறை



Method of calculating cut-off marks for admission to higher educational institutions (Engineering, Agriculture, Veterinary Medicine, Fisheries, Paramedical, Law and Arts and Science Colleges) in Tamil Nadu


தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ( பொறியியல்,  வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், துணை மருத்துவம்,  சட்டம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ) சேர்க்கை பெற , கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Googlebook குறித்த தகவல்கள்

 


Googlebook குறித்த தகவல்கள் 


கூகுள்புக். இது ஒரு லேப்டாப். பெயரிலிருந்தே கூகுளின் தயாரிப்பு என்று அறிந்துகொண்டிருப்பீர்கள். 


அண்மையில் ஆண்ட்ராய்ட் விழா ஒன்றை கூகுள் நடத்தியது. ஆண்ட்ராய்டில் வரவிருக்கும் புதிய வசதிகளைப் பட்டியலிட்டது. 


ஐஃபோன்காரர்களின் கூடுதல் சாபத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்போது ஆண்ட்ராய்ட் ஈக்கோசிஸ்டத்தில் இருக்கும் வசதிகள் ஐஃபோனுக்கு வந்து சேரவே பல்லாண்டுகள் ஆகும். 


இவ்விழாவை ஒட்டி அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு தான் கூகுள்புக். 'கூகுள் புக்ஸ்' அல்ல. 


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிளவுட் தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்தது. அப்போது கூகுள் 'குரோம்புக்' என்று ஒரு கருவியை அறிமுகப்படுத்தியது. குரோம் பிரவுசர் தான் இதில் மூலவர். மற்றவை அனைத்துமே 'மேகமாய் வந்து போகிறாய்' என்று கிளவுட் மயம். 


இப்போதும் கிளவுட் உள்ளது. ஆனால் அதைவிடப் பரபரப்பாகப் பேசப்படுவது ஏஐ. செய்யறிவு. இந்த ஏஐயுகத்தில் அவதரிக்கும் கூகுளின் புதிய லேப்டாப் கூகுள்புக். 


இதில் அனைத்துமே ஜெமினி மயம். இப்போது 'ஜெமினி இன்டெலிஜென்ஸ்' என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் நினைவுக்கு வரலாம். அதிலேயே இப்போது ஜெமினி தான் உள்ளது என்றறிக. 


ஒரு காலத்தில் ஏஐ சாட் பாட்டாக இருந்தது. பின்னர் ஏஜென்ட் என்று உருமாறியது. இப்போது ஆபரேட்டிங் சிஸ்டமே ஏஐ. கூடாரம்-ஒட்டகம் என்றொரு கதை படித்திருப்பீர்கள். இங்கு கூடாரம் டிஜிட்டல் உலகம். ஒட்டகம் ஏஐ. 


இதுவரை நாம் பணியாற்றிவந்த விதமே மாறவிருக்கிறது என்கிறது கூகுள். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு சாஃப்ட்வேர் என்னும் நிலைகூட மாறலாம். என்ன வேண்டுமோ ஏஐயிடம் கேட்டுப்பாருங்கள். அது இல்லை என்று சொல்லுவதில்லை. 


ஆண்ட்ராய்ட், குரோம், ஜெமினி என அனைத்தையும் சரியான விகிதத்தில் மிக்ஸ் செய்துள்ளது கூகுள். 


மேஜிக் கர்சர் - கூகுள்புக்கில் அறிமுகமாகவிருக்கும் அதிமுக்கிய அம்சம். அதாவது கர்சர் இருக்குமிடமெல்லாம் ஏஐ. 


மவுஸ் பாயிண்ட்டர் என்பது யூஸர் இண்டர்ஃபேஸ் வரலாற்றில் மிக முக்கியக் கண்டுபிடிப்பு. அதில் நவீனம் என்று எதுவுமே வரவில்லை. 


கடைசியாக 'ரைட் கிளிக்' என்று ஒன்று வந்தது. அதை வைத்து நம் விண்டோஸ்காரர்கள் 'ரெஃப்ரெஷ்' செய்து செய்து புளகாங்கிதம் அடைந்தனர். இதைத் தவிர வேறு எதுவுமே நடக்கவில்லை பாருங்கள். 



கூகுள் இதை மாற்றவிருக்கிறது. மவுஸ் பாயிண்ட்டர் எங்குள்ளதோ அதுவே காண்டெக்ஸ்ட். ஓர் உதாரணம். ஒரு  அறையின் படம். இன்னொன்றில் ஒரு சோஃபா. இரண்டையும் இணைக்கவேண்டும் என்றால் மேஜிக் பாயிண்ட்டரே போதும். 


நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்று புரிந்துகொள்ளும். மவுஸ் பாயிண்ட்டரை நகர்த்தியே நமக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம். 


அதாவது தனித்தனியாகப் ப்ராம்ப்ட்கள் எழுதத் தேவையில்லை. 


'குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினில் யாது கொடுத்தும் கொளல்'. 

இந்த வரி புரியலயே என்றால் திருவள்ளுவரைத் தான் கேட்க வேண்டும். 


நாம் விரும்புவதை வெளிப்படையாகச் சொல்லாமலேயே  புரிந்துகொள்பவரை எந்த விலை கொடுத்தும் உடன் வைத்துக்கொள் என்கிறார். 

மேஜிக் பாயிண்ட்டர் கூட வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்புணர்கிறது.


இந்த லேப்டாப் மிகச் சிறந்த ஹார்ட்வேர்களுடன் வரவிருக்கிறது. இன்டெல் நிறுவனமும் இதில் இணைகிறது. அவர்களுக்கும் இது மறுவாழ்வு தரும் என்று நம்புவோம். 


இக்கருவியைச் செய்வதற்காக அஸுஸ், டெல், ஹெச்பி, லெனோவா என்றொரு பெரிய கூட்டணியை அமைக்கிறது கூகுள். 


கூகுள்புக்கின் சில படங்களை  வெளியிட்டுள்ளனர். பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.



லேப்டாப்பைப் பார்த்தவுடனேயே இது கூகுள்புக் என்று தெரிந்துவிடும். இதற்கென glowbar என்னும் ஒன்றை அறிமுகப்படுத்துகின்றனர். இது வெறுமனே ஜிகுனா வேலைமட்டும் அல்ல. பயனாளர்களுக்குப் பலவகைகளிலும் உதவும். 


லுக் ஒகே. செயல்திறனும் நன்றாக இருந்தால் கூகுள்புக் மிகப் பெரிய வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். 


அண்மையில் 'நியோ' என்றொரு மாடலை ஆப்பிள் அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் பலராலும் ஏளனம் செய்யப்பட்டது. ஆனால் இன்று மார்க்கெட்டில் பரபரப்பாக விற்கும் லேப்டாப் மேக்புக் நியோ தான்.  


கூகுள்புக் நியோவை முந்திச்செல்லுமா? காத்திருப்போம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் "கிளாண்டர்ஸ்" நோய்த் தொற்றால் சென்னையில் குதிரை உயிரிழப்பு

மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் "கிளாண்டர்ஸ்" நோய்த் தொற்றால் சென்னையில் குதிரை உயிரிழப்பு சென்னை சேப்பாக்கத்தில் பொதுமக்கள்...