கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

New Curriculum for 1 to 3th Std | Training for BEOs and BRTEs | Joint Proceedings



1 முதல் 3 ஆம் வகுப்புகள் புதிய பாடத்திட்டம் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்


New Curriculum for Classes 1 to 3 | Training for Block Educational Officers and Block Resource Centre Teacher Educators | Joint Proceedings of the Directors


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்கக இயக்குநர்களின் இணை செயல்முறைகள், சென்னை -06.


ந.க.எண்.29299/எஃப்4/2023 நாள். 16.07.2026.


பொருள்:


பயிற்சி - 1 முதல் 3 ஆம் வகுப்புகள் வரை புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கியமை பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் அளித்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக.


பார்வை:


1. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம் எண்.RC.No.2531/A11/FLN-PMU/SS/22 Date 30.03.2023.


2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.50656/அ1/இ4/2023, நாள் 31.08.2023.


3. இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2640773/ஊ1/2026, நாள்.11.06.2026.


பார்வையில் கண்டுள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் பள்ளிக்கல்வித் துறை செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து, மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கு, முதல் பருவத்திற்கான பயிற்சியானது மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது வட்டார அளவில் உள்ள பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு புதிய பாடத்திட்டம் சார்ந்த (1 முதல் 3 ஆம் வகுப்பு வரை) முதல் பருவத்திற்கான ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறது.


இந்த இணையவழி பயிற்சியில் தங்களது மாவட்டத்திலேயே உரிய அலுவலர்கள் பங்கேற்கும் வகையில், எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் இணைந்து பயிற்சி மையத்தினை தெரிவு செய்து, 23.07.2026 அன்று ஒரு நாள் பயிற்சி நடைபெறும் வகையில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியின் மைய எண்ணிக்கைக்கேற்ப அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள். முதுநிலை விரிவுரையாளர்கள் பொறுப்பேற்று நடத்திடுமாறும், பயிற்சி முடிவுற்ற பின்னர் அறிக்கை விவரத்தினை பின்னர் இந்நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மேற்படி பயிற்சி சார்ந்து உத்தேச செலவினத் தொகை தங்களது நிறுவன வங்கிக் கணக்கிற்கு பின்னர் விடுவிக்கப்படும்.


இணைப்பு: மைய எண்ணிக்கை விவரப் படிவம்


இயக்குநர்

தொடக்கக்கல்வி இயக்ககம்


இயக்குநர்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்


இயக்குநர்,

பள்ளிக்கல்வி இயக்ககம்



பெறுநர்


1. முதல்வர்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்.


2. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.


3. மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


நகல்


1. கூடுதல் முதன்மைச் செயலர். பள்ளிக்கல்வித் துறை, தலைமைச் செயலகம். சென்னை-09 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.


2. மாநிலத்திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.


3. இயக்குநர். பள்ளிக்கல்வி இயக்ககம். சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.


4. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



NHIS Number அறிய Website Link



NHIS Number அறிய வலைதள முகவரி


Website Link to know NHIS Number 


https://tnnhis2016.com/TNEMPLOYEE/IDCardSearch.aspx



Today's (17-07-2026) Wordle



Today's (17-07-2026) Wordle Puzzle 


Wordle விளையாடும் முறை: 


ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.


பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,


மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 


சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  


 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.


தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.


 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.


 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 



Wordle Game Link: 



>>> Click Here...



Yesterday's (16-07-2026) Wordle Answer: CAKES 





NEET (UG) 2026 Final Answer Key

 


The NEET (UG) 2026 Final Answer Key has been released.


Visit the official portal to check the Final Answer Key:


https://neet.nta.nic.in



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-07-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-07-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:46 சிற்றினம் சேராமை

குறள் எண்:452

குறள்:

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

பொருள்:

தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.


பழமொழி :

Fact is stronger than fiction.

கற்பனையை விட உண்மை விசித்திரமானது.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.

2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.


பொன்மொழி :

“மாற்றம் ஒன்றே மாறாதது.”


Thought for the Day :

Time is precious; once it is lost, it never comes back. Use it wisely.


பொது அறிவு :

1. சிறைகள் இல்லாத நாடு எது?

நெதர்லாந்து.

2. இந்தியாவில் சூரிய ஒளி முதலில் தோன்றும் மாநிலம் எது?

அருணாச்சல் பிரதேசம்


English words :

**Vague** - Not clear or specific, தெளிவற்ற.                      

  **Reluctant** - Unwilling and hesitant, தயக்கமுள்ள.


புவியியலும் சுற்றுசூழலும் :

"மாநிலங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

உதாரணம்: தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள்.

மாவட்டங்கள் மேலும் தாலுகாக்கள் அல்லது வட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன."


NMMS :

MAT

"CONCEPTUALIZATION" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு உருவாக்க முடியாத வார்த்தை எது??

(1) ACTUAL.

(2) TOTAL.

(3) PLANTATION.

(4) EXPLANATION.

விடை: (4) EXPLANATION


ஜூலை 17
சர்வதேச நீதிக்கான உலக தினம் (World Day for International Justice)

1998 ஆம் ஆண்டு ரோம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூலை 17 ஆம் தேதி சர்வதேச நீதிக்கான உலக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நிறுவப்பட்டது. உலகின் ஒவ்வொரு பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 80 நாடுகள் 1998 முதல் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளன. 1998 முதல் சுமார் 139 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


உலக எமோஜி தினம் (World Emoji Day)

அவற்றின் பரவலான பயன்பாடு மற்றும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, எமோஜிகளைக் கொண்டாட ஒரு பிரத்யேக நாளைக் கொண்டிருப்பது பொருத்தமானது. ஜூலை 17 ஆம் தேதி உலக எமோஜி தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது - நமது உரையாடல்களை உயிர்ப்பிக்கும் படச்சித்திரங்களை நினைவுகூரும் ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம்.


நீதிக்கதை

"சுத்தமே செல்வம்"

ஒரு கிராமத்தில் சித்தார்த் மற்றும் பவின் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். சித்தார்த் தினமும் வீட்டைச் சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பான். ஆனால் பவின் பயன்படுத்திய பொருட்களை அப்படியே போட்டுவிடுவான். வீட்டில் ஒட்டடை , தூசி படிந்திருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படமாட்டான்.

ஒருநாள் அவர்களது தாத்தா வீட்டிற்கு வந்தார். அவர் ஒரு முக்கியமான நிலப்பத்திரத்தை எடுத்துக் காட்டச் சொன்னார். சித்தார்த் உடனே அலமாரியைத் திறந்து, சுத்தமாக அடுக்கி வைத்திருந்த கோப்பிலிருந்து பத்திரத்தை எடுத்துக் கொடுத்தான்.

அதே நேரத்தில், பவின் தனது பள்ளிச் சான்றிதழைத் தேடினான். ஆனால் தூசிபடிந்த அறையிலும், சிதறிக் கிடந்த பொருட்களிலும் தேடியும் கிடைக்கவில்லை .

இறுதியில், பழைய செய்தித்தாள்களுக்கு நடுவே அது மடிந்து கிடந்தது.

அப்போது தாத்தா, “வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது அழகுக்காக மட்டும் அல்ல; தேவையான நேரத்தில் பொருட்களை எளிதாகக் கண்டுபிடிக்கவும், ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது," என்று அறிவுரை கூறினார்.

அந்த நாளிலிருந்து பவினும் தினமும் வீட்டைச் சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்காக வைத்துப் பழகினான்.

நீதி:

"வீட்டைச் சுத்தமாகவும் பொருட்களை ஒழுங்காகவும் வைத்திருப்பது நல்லபழக்கம்; அது ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும், மனநிம்மதியையும் தரும்.”


இன்றைய செய்திகள்
17.07.2026

🗒️சென்னை பூங்கா ரெயில் நிலையத்தை இன்று  பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் .

🗒️தமிழ்நாட்டில் ஆக. 1- 30-ந்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரையில்
இணையதளத்தில் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் விவரங்களை பதிவு  செய்யலாம்.

🗒️தமிழகத்தில்  15 மாவட்டங்களிலும்  மற்றும்  சமவெளி பகுதிகளிலும்  வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

*விளையாட்டுச் செய்திகள்*

🏀ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.

🏀உலகக்கோப்பை கால்பந்து: மெஸ்ஸி வரலாற்று சாதனை:
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.


Today's Headlines

🗒️Prime Minister Narendra Modi will inaugurate the Chennai Park Railway Station today.

🗒️Tamil Nadu will conduct the Population Census from August 1 to August 30. From today until July 30, people can register their details themselves on the official website.

🗒️The Weather Department has said that heatwave conditions may occur in 15 districts of Tamil Nadu and in the plains.

Sports News

🏀Japan Open Badminton: P. V. Sindhu has advanced to the quarter-finals.

🏀FIFA World Cup: Lionel Messi created a historic record. Defending champions Argentina played brilliantly against England in the semi-final and qualified for the final.


முதல்முறையாக எத்தனால்20 பெட்ரோலுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு



 முதல்முறையாக எத்தனால்20 பெட்ரோலுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு


E20 பெட்ரோலால் தனது Grand Vitara காரின் என்ஜின் பழுதாகிவிட்டதாக வழக்குத் தொடர்ந்த உரிமையாளருக்கு புதிய காரை வழங்க Maruti Suzuki நிறுவனத்திற்கு ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.


E20 பெட்ரோல் பரவலாகிவிட்ட நிலையில், வாகனம் அதற்கு தகுதியானதா? என்பதை நிறுவனம் விளக்கத் தவறியதே இதற்கு காரணம் என நீதிமன்றம் கண்டிப்பு.


வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சம், வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரம் நஷ்டஈடாக வழங்கவும் உத்தரவு


Hotspot சேவை | வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த Airtel நிறுவனம்



வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஏர்டெல் நிறுவனம்


5G டேட்டாவை Mobile Hotspot மூலம் பிற மொபைல்களுக்கு Share செய்து பயன்படுத்த முடியாது என ஏர்டெல் நிறுவனம் விளக்கம்.


அதேபோல் ஏர்டெல் 5G plus கிடைக்கும் இடங்களில் மட்டுமே வரம்பற்ற 5G சேவையை பயன்படுத்த முடியும் என அறிவிப்பு.


ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும் பொழுது தங்களால் 5ஜி பயன்படுத்த முடிவதில்லை என்று குற்றம் சாட்டிய நிலையில், இவ்வளவு நாட்களாக பயனர்களுக்கு தெரியாமல் இருந்த ஏர்டெல் நிறுவனத்தின் விதிகள் இப்போது பேசுபொருளாகியுள்ளது


ஏர்டெல் நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டா என்றே விளம்பரப்படுத்துகிறது. இதனால் பலரும் பிராட்பேண்ட்டிற்கு தனியாக ரீசார்ஜ் செய்வதை தவிர்த்துவிட்டு, செல்போன் ரீசார்ஜ்ஜை வைத்தே இணையத்தை பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், சமீப காலமாக அன்லிமிடெட் 5ஜி கிடைப்பதில்லை என்று பரவலாக புகார் எழுந்தது.


இந்தச் சூழலில் தான் ஏர்டெல் நிறுவனத்தின் 5G திட்டங்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற சாதனங்களுடன் பகிர்ந்து பயன்படுத்த முடியாதாம். மேலும், சில குறிப்பிட்ட திட்டங்களில் அதிகபட்சமே 300GB வரை மட்டும் தான் பயன்படுத்த முடியுமாம். தற்போது தெரியவந்துள்ள இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


உத்சவ் டெக்கி என்பவர் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விதிமுறைகளின் ஸ்கிரீன்ஷாட்டை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் தான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. 


அதாவது ஏர்டெல் வழங்கும் அன்லிமிடெட் 5G டேட்டாவை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற சாதனங்களுக்குப் பகிர முடியாதாம். இதுவே வாடிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு இந்த நிபந்தனை முன்பே தெரியாது என்றும் அன்லிமிடெட் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இதுபோல போலியாக ஏமாற்றக்கூடாது எனவும் கொந்தளித்து வருகிறார்கள்.


இது மட்டுமின்றி ஏர்டெல், அன்லிமிடெட் 5G டேட்டா என்பது ஏர்டெல் 5G பிளஸ் நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே செயல்படுமாம். 5G கவரேஜ் இல்லாத இடங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது திட்டத்தின் வழக்கமான டேட்டா வரம்பை மட்டுமே பயன்படுத்த முடியும். அது முடிந்துவிட்டால் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது அன்லிமிடெட் 5G டேட்டாக்குள் வராது எனவும் கூறப்படுகிறது.


இது ஒரு பக்கம் இருக்க ரூ.399 ரீசார்ஜ் தொடர்பாகவும் விவாதம் எழுந்துள்ளது. இணையதள பயனாளர் ஒருவர் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையம் அனுப்பியதாக சொல்லி ஒரு மெயிலை இணையத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் ரூ.399 திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா என குறிப்பிடப்பட்டு இருந்தாலும்.. 30 நாட்களுக்குள் 300GB வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு மேல் பயன்படுத்தப்பட்டால் அது வணிக ரீதியான பயன்பாடாக கருதப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது.


இது தொடர்பாகவும் இணையதள பயன்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். 300GB என்று வரம்பு இருந்தால் அதை எப்படி அன்லிமிடெட் திட்டம் என்று கூறலாம்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக அதிகளவு டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் வீட்டில் பிராட்பேண்ட் வசதி இல்லாமல் மொபைல் ஹாட்ஸ்பாட்டை நம்பி வேலை செய்பவர்கள், இந்த விதிகளால் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்..


மேலும் சிலர் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களை ஒப்பிட்டு, ஏர்டெல் அதிக கட்டணம் வசூலிப்பதோடு மட்டுமல்லாமல் 300GB வரம்பு மற்றும் ஹாட்ஸ்பாட் கட்டுப்பாடு போன்ற நிபந்தனைகளையும் விதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஏர்டெல் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement for the self-enumeration census on Aavin milk packets

 


ஆவின் பால் பாக்கெட்டுகளில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு விளம்பரம்


Advertisement for the self-enumeration census on Aavin milk packets


* சுய கணக்கெடுப்பு ஜூலை 17ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது


* இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம் வெளியிடப்படுகிறது


TNTET 2026 Paper 2 | Social Science | Tentative Answer Key

 


ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 (TNTET 2026) | சமூக அறிவியல் உத்தேச விடைகள் (Tentative Answer Keys) ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியீடு



TNTET 2026 Paper II | Social Science |  Tentative Answer Key



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TNTET 2026 Paper II | Maths & Science | Tentative Answer Key

 


ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 (TNTET 2026) | கணக்கு, அறிவியல் உத்தேச விடைகள் (Tentative Answer Keys), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியீடு



TNTET 2026 Paper II | Maths & Science |  Tentative Answer Key



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

New Curriculum for 1 to 3th Std | Training for BEOs and BRTEs | Joint Proceedings

1 முதல் 3 ஆம் வகுப்புகள் புதிய பாடத்திட்டம் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி - இயக்குநர்க...