கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? சரி செய்வது எப்படி?

 


கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? சரி செய்வது எப்படி? - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 


கல்லீரல் நோய் முற்றி 

நடிகர் அபினய் அவர்கள் இறந்திருப்பது 

சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. 


அவரை இழந்து வாடும் அவர்தம் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு 

ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையைத் தொடங்குகிறேன். 


கல்லீரல் நோய் என்றாலே அது மது அருந்துவதால் தான் வந்திருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். 


இருபது வருடங்களுக்கு முன்பு, 

கல்லீரல் நோய் என்று ஒருவர் வந்தால் 

அவர் அளவுக்கு மீறி மது அருந்தியதால் அவருக்கு கல்லீரல் நோய் வந்திருக்க நூற்றுக்கு நூறு சதவிகிதம் வாய்ப்பு அதிகம். 


ஆனால் இப்போது 

கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு 

மது மட்டுமே காரணமன்று. 

மதுவுடன் சேர்த்து 

அதிக மாவும் இனிப்பும் உடல் உழைப்பின்மையும் உறக்கமின்மையும் மன அமைதியின்மையும் இப்போது காரணமாகி இருக்கின்றன. 


ஆம்... 

கல்லீரலை பாதிக்கும் 

கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் 

இரண்டு வகைப்படும் 


முதல் வகை

மதுவினால் ஏற்படுவது 

இதை "ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோய்" 


இரண்டாவது வகை

மது அல்லாத காரணங்களால் 

ஏற்படும் "ஃபேட்டி லிவர் நோய்"

வளர்சிதை மாற்ற காரணிகளால் இந்த நோய் ஏற்படுவதால் இதற்கு "MAFLD" 

METABOLIC ASSOCIATED FATTY LIVER DISEASE என்று அழைக்கப்படுகிறது.


பெரும்பாலும் நாற்பதுகளை நெருங்கும்/தாண்டிய  ஆணோ பெண்ணோ 

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது தற்செயலாக 

தென்படும் "ஃபேட்டி லிவர்" என்ற கண்டுபிடிப்பு 


இப்போது இந்த நோய் இருபது முதல் முப்பது வயது மக்களுக்கும் தென்பட ஆரம்பித்திருக்கிறது. 


உங்களது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்ட்டில்  Fatty liver ( grade 1 /2) என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது Hepatomegaly with fatty changes என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். 


கல்லீரலில் அதிகமான கொழுப்பு தேங்குவதால் ஏற்படும் நிலை தான் இந்த "கல்லீரலில் கொழுப்பு படியும் நோய்" 


நிறைய பேருக்கு தற்செயல் கண்டுபிடிப்பாக தென்படுவதால்  இது "நார்மல்" என்று ஆகிவிடாது. 


 கல்லீரல்  அடிவாங்குகிறது என்பதும். 

அது எழுப்பும் கூக்குரலாகவே இந்த நோயைக் கருத்தில் கொள்ள வேண்டும். 


பொதுவாக கல்லீரல் ஒரு கல்லுளி மங்கன் போன்ற உறுப்பு. 

எதற்கும் அசையாத ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பு. 


தான் உண்டு. தன் வேலையுண்டு என்று அதன் வேலையைப் பார்க்கும். 


அமிலத்தன்மை கொண்ட மதுவைக்கூட செரிமானம் செய்யும் தன்மை கொண்டது. 

கல்லைக்கூட  செரிமானம் செய்யக்கூடியது.


ஆனால் அப்படிப்பட்ட ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பையே அசைத்துப்பார்க்கக் கூடியது இந்த "கல்லீரல் கொழுப்பு படியும் நோய்". . 


சமீபத்தில் என்னை உடல் பருமன் என்று சந்தித்த 10 வயது பாலகனுக்கு  ஃபேட்டி லிவர் இருந்தது. மிரண்டு தான் போனேன். 

அவன் எங்கே மது அருந்தினான்? 

மது என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது.. 


ஆனாலும் அவனது கல்லீரலில் எப்படி கொழுப்பு ஏறியது? 


கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானதா? நல்லதா? 


கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானது அன்று. 


நல்லதன்று. 


 நிச்சயம் கெட்டது.


 இதை மட்டும் மனதில் நன்றாக இருத்திக் கொள்வோம்.


எதனால் கல்லீரலில் கொழுப்பு சேருகிறது??


கல்லீரலின் பிரதான வேலைகளுள் சில


-க்ளூகோசை -> கொழுப்பாக( triglyceride ) மாற்றி உடலில் சேமிப்பது. 

-லைபோ புரதங்களை உருவாக்குவது 

- ரத்த உறைதலுக்குத் தேவையான காரணிகளை உருவாக்குவது 

- எதிர்ப்பு சக்திக்குத் தேவையான ஆண்டிபாடிகளை உருவாக்குவது 

- ப்ளாஸ்மா புரதங்களை உருவாக்குவது 

- கொழுப்பை செரிமானம் செய்யத் தேவையான பித்த நீரை சுரப்பது 


என்று 

கல்லீரலை சமையல் கூடத்துடன் ஒப்பீடு செய்யலாம்.  


ஒரு உதாரணம் கூறுகிறேன்...


ஒரு கிலோ மாவு வாங்கிக் கொடுத்தால் நமது அம்மா அதில் நமக்கு இட்லி சுட்டுத்தருவார்.

( ஏன் அப்பா சுட மாட்டாரா? அம்மா தான் சுட வேண்டுமா.. என்று கேட்டு விடாதீர்கள். இது  கதை மட்டுமே. வீட்டில் கணவர் மனைவி இருவருமே உணவு சமைக்கலாம்.) 


மீதம் மாவை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பார். 


ஒரு கிலோ மாவு மூன்று நாளைக்கு வரும் என்பது நம் அம்மாவுக்குத் தெரியும். 


அடுத்த மூன்று நாட்களுக்கு மாவு புதிதாக வாங்கத் தேவையில்லை. ஏனெனில் ஃபிரிட்ஜில் தான் மாவு இருக்கிறதே..! 


ஆனால் அடுத்தநாளும் மறதி கொண்ட நம் அப்பா தெரியாமல் ஒரு கிலோ மாவு வாங்கி வந்துவிட்டால் அம்மா என்ன செய்வார்??


இந்த ஒரு கிலோ புது மாவை ஃபிரிட்ஜில் வைப்பார். ஆக அடுத்த ஆறு நாட்களுக்கு மாவு கைவசம் இருக்கும். 


இப்படி தேவைக்கு மீறி மாவு இருந்தும் தினமும் யாரோ ஒருவர் மாவு/ பரோட்டா என வாங்கி வந்துவிட்டால்.. நம் அம்மா என்ன தான் செய்வார் பாவம்..!!


ஃப்ரிட்ஜும் ஒரு அளவுக்கு மேல் இடம் கொள்ளாது. 

ஒரு கட்டத்துக்கு மேல் கிச்சனே அலங்கோலமாகி விடும். 


இந்த சினாரியோவை நமது கல்லீரலுக்கும் சிந்தித்து பாருங்கள்


மாவுச்சத்து ஒரு வரைமுறைக்குள் இருந்தால் உடல் அதை சக்திக்கு உட்கொண்டுவிடும். 


அது வரம்பு மீறிச் சென்றால் நம் கல்லீரல் அதைக் கொழுப்பாக மாற்றி தொப்பையில், தொடை, இடுப்பு , மார்பு பகுதிகளில் சேமிக்கும். 


மீண்டும் மீண்டும் அதிக மாவுச்சத்து சாப்பிட்டால் , உண்ட வீட்டையே ரெண்டாக்கிய கதையாய் தன்னை உற்பத்தி செய்த கல்லீரலிலேயே கொழுப்பு படிந்து சேர ஆரம்பித்துவிடும். 


ஆக, ஃபேட்டி லிவருக்கு காரணம் அதிக மாவுச்சத்து தான். கொழுப்பு அல்ல 


உங்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைப்பார்த்தவுடன் நீங்கள் உண்ணும் மாமிசம் / முட்டை/ பால் போன்றவற்றை  நிறுத்தி விட்டு அதற்குப்பதிலாக அதிகமதிகம் சோறு/ கோதுமை / மைதா என்று உண்பீர்களானால் நிச்சயம் உங்களது ஃபேட்டி லிவர் பிரச்சனை குறையாது. 

அதிகமாகவே செய்யும். 


ஃபேட்டி லிவர் பிரச்சனையில் கொழுப்பு கல்லீரலில் படிவதால்


இந்த கொழுப்பு படிந்துள்ள இடங்கள், நார்மல் கல்லீரலை விட அதிக ஒலி அலையை பிரதிபலிக்கும். அதனால் அந்த இடங்கள் நார்மல் கல்லீரலை விட பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும். 


இதில் grade I என்பது கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்து காணப்படுவது. நார்மல் கல்லீரலில் கொழுப்பு படியாது. இது ஆரம்ப நிலை. 

 

Grade II என்பது கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவதால், போர்டல் சிறை சரியாக புலப்படாமல் போகும் (portal vein)  இது அடுத்த கட்டம்  


Grade III என்பது கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால் உதரவிதானம் (diaphragm) சரியாக புலப்படாது .இது முற்றிய நிலை. 


எனினும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் 

கிரேடிங் செய்யப்படுவது மருத்துவருக்கு மருத்துவர் மாறுபடுகிறது. 


எனவே, என்னைப் பொருத்தவரை 

கிரேடு 2 மற்றும் அதற்கு மேல் கிரேடிங் செய்யப்படும் மக்கள் - 

கட்டாயம் ஃபைப்ரோ ஸ்கேன் (FIBRO SCAN) எனும் இன்னும் துல்லியமான ஸ்கேன் செய்து கல்லீரல் பாதிப்பின் அளவை இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். ஃபைப்ரே ஸ்கேன் மூலம் எவ்வளவுக்கு எவ்வளவு கல்லீரல் திசு பாதிப்புக்குள்ளாகி தழும்பாகி இருக்கிறது என்பதை அறிய முடியும். 


இந்த கல்லீரலில் படியும் கொழுப்பானது,  பின்னாளில் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி


மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு படியும் நோயாக மாறலாம் (NON ALCOHOLIC STEATO HEPATOSIS) இதை சுருக்கமாக  NASH என்று அழைக்கிறோம். 

இத்தகைய நிலையில், கல்லீரல் செல்கள் தொடர்ந்து இடற்பாட்டுக்கு உள்ளாகி மரணமடைந்து தழும்புகளாக மாறிவிடும். 


இவ்வாறு சிறுகச் சிறுக  மீளுருவாக்கம் செய்ய இயலாத நிலையை அடைந்து சுருங்க ஆரம்பித்து விடும். இது கல்லீரல் அழற்சி நோய் (Cirrhosis) எனப்படும். இந்த அளவுக்கு முற்றிய நோயை ரிவர்ஸ் செய்ய இயலாது. 


இது பின்னாளில் கல்லீரல் புற்றுநோய்(HEPATO CELLULAR CARCINOMA)  அல்லது கல்லீரல் செயலிழப்பு(LIVER FAILURE)  வரை இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.


நம்மை பயமுறுத்தும் செய்தி யாதெனில்  மேலை நாடுகளில் இருபது வயதைக்கூட எட்டாத பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் செய்த ஆய்வுகளில் அவர்களில் பெரும்பாலானோருக்கு மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் ஃபேட்டி லிவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


உண்மையில் நம் நாட்டிலும் அதே அளவு பிரச்சனை இருக்கக்கூடும் ஆனால் யாரும் இங்கு பரிசோதனைக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என்பதால் இருக்கும் பிரச்சனை வெளியே தெரிவதில்லை. 


நாமும் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், சாக்லேட், கேக் என்று ரீபைன்டு கார்போஹைட்ரேட்டுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். 

இதன் கேடுகளை அறிந்தால் நாம் அப்படி செய்யமாட்டோம் என்றே நினைக்கிறேன்.


குழந்தைகள் எதை உண்ண வேண்டும் . எதை உண்ணக்கூடாது என்பதில் பெற்றோரின் கவனம் என்றும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 


மேலும், ஃபேட்டி லிவரை அதன் ஆரம்ப நிலையில்   ரிவர்ஸ்/ சரி செய்ய  இயலும்..


எப்படி??


ஃபேட்டி லிவர் எப்படி வந்தது என்பதை அறிந்தோம் அல்லவா..


பிரச்சனை - மாவுச்சத்து அடங்கிய உணவுகளை அளவின்றி தின்றதால் வந்தது. 


அதை உடனே நிறுத்த வேண்டும். 

தினமும் உட்கொள்ளும் மாவுச்சத்தின் அளவைப்

பாதியாகக் குறைக்க வேண்டும் 


இனிப்பு சுவை தரும் அனைத்து உணவுகளையும்  பண்டங்களையும்  நிறுத்த வேண்டும். 


குறை மாவு 

தேவையான புரதம் 

தேவையான ஆரோக்கியமான கொழுப்பு   உணவு முறைக்கு  மாறுவது உங்களுக்கு நன்மை பயக்கும். 


எப்படி???? 


1. மாவுச்சத்து குறைத்து உண்பதால் மேற்கொண்டு க்ளூகோஸ் கொழுப்பாக மாற்றம் அடைவது நின்று விடும்.


2. இந்த உணவு முறையில், நியூட்ரிசனல் கீடோசிஸ் நிலையில், உடல் கொழுப்பை எரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பும் கரைய ஆரம்பித்து விடும். 


3. நாம் உணவிலேயே தேவையான அளவு கொலஸ்ட்ராலை கொடுத்து விடுவதால் கல்லீரல் தினமும் கஷ்டப்பட்டு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. இது அதன் பணிச்சுமையை வெகுவாக குறைத்து விரைவில் நலம் பெற உந்து சக்தியாக அமையும். 


உங்களின் உறவினர்களில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் இருப்பின் அவருக்கு இந்த டயட்டை பரிந்துரை செய்யுங்கள். 


அவரது கல்லீரலை பிரச்சனை தீவரமாவதற்குள் காக்க ஒரு வாய்ப்பு வழங்குங்கள். 


ஃபேட்டி லிவர் பிரச்சனையை கொலஸ்ட்ரால் மாத்திரைகளாலோ வேறு எந்த குறுக்கு வழியிலோ சரி செய்ய இயலாது. 


எதைத் தின்றதால் அது வந்ததோ

அதை நிறுத்த வேண்டும்.  


சிரோசிஸ் அல்லாத 

ஆரம்ப நிலைகளில்  இருக்கும் ஃபேட்டி லிவர் பிரச்சனை  "குறை மாவு நிறை கொழுப்பு"  உணவுமுறையால் கட்டுப்படும் வாய்ப்பு அதிகம். 


சிரோசிஸ் / முற்றிய ஃபேட்டி லிவர் இருப்பவர்கள் - குடல் மற்றும் கல்லீரல்  நோய் சிறப்பு நிபுணரின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். 


சிரோசிஸ் நோய் ஏற்படும் போது 

கல்லீரல் ஆல்புமின் உற்பத்தியை குறைப்பதால், 

வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்து வயிறு வீங்கும், 

உடல் மெலிந்து போகும், 

உணவுக் குழாயில் ரத்த நாளங்கள் புடைப்பு ஏற்படுத்தி பின்னாளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவு உண்டாகலாம். 

எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படலாம். 


சிரோசிஸ் நோயில் மஞ்சள் காமாலை ஏற்படவும் செய்யலாம்.  ஏற்படாமலும் இருக்கலாம். 

கல்லீரல் பாதிப்பு என்றாலே மஞ்சள் காமாலை இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. 


சிரோசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 

சிகிச்சையாக "கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை" நிவாரணமாக இருக்கிறது. 

இறந்த கொடையாளரிடம் இருந்து எடுத்து வைக்கும் கல்லீரல் மாற்று சிகிச்சை, உயிருள்ள உறவினரிடம் இருந்து  கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து வைப்பது இரண்டாவது வகை. 

இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இலவசமாக செய்யப்படுகிறது. 

தனியார் மருத்துவமனைகளில் முப்பது லட்சம் வரை செலவினம் வருகிறது. 


இவையன்றி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலாதோருக்கு சிரோசிஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வயிற்றில் சுரக்கும் நீரை வெளியேற்றுதல், அவ்வப்போது எண்டோஸ்கோபி செய்து ரத்த நாள வெடிப்புகளுக்கு சுருக்கு முடிச்சு போடுதல், கல்லீரலுக்கு உகந்த மருந்துகளை உண்ணுதல் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப் படுகிறது. 


புரதச்சத்து மிக்க, கொழுப்புச் சத்து குறைவான, மாவுச்சத்து குறைவான உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. 


மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இருப்பின் அவற்றை விட்டொழிக்க வேண்டும். 


தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி 

எட்டு மணிநேர உறக்கம் 

மன அமைதி பேணும் வாழ்வியல் 

இவையும் கல்லீரல் நலம் பேண முக்கியம். 


சிரோசிஸ் என்பது முடிவுரை அன்று. 

முறையான மருத்துவ சிகிச்சைகள் மூலமும் கண்காணிப்பு மற்றும் சிறப்பான கவனிப்பு  

மூலம் சிறந்த வாழ்வையும் ஆயுள் நீட்சியையும்  உறுதி செய்ய முடியும் 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை




UDISE+ தரவுகளை 100% துல்லியமாகவும், முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்ய உத்தரவு

 

UDISE Plus தரவுகளை 100% துல்லியமாகவும், முழுமையாகவும் 30.11.2025க்குள் முடித்திட பள்ளிக் கல்வித் துறை உத்தரவு  Samagra Shiksha, DSE, DEE & DPS Joint Proceedings & நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்


UDISE+ தரவுகளை 100% துல்லியமாகவும், முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல் தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகளின் இயக்குநர்களின் கூட்டு செயல்முறைகள், நாள் : 11-11-2025 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Tollgateக்கு செல்லாமலேயே பணம் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் NHAI - பொது மக்கள் அதிர்ச்சி

 


Tollgateக்கு செல்லாமலேயே பணம் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் NHAI - பொது மக்கள் அதிர்ச்சி


Tollgateக்கு செல்லும் முன்பே பணம் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் NHAI : சென்னை-பெங்களூரு சாலையில் AI Camera மூலம் பணம் பிடித்தம் - பொது மக்கள் அதிர்ச்சி


Chennai - Bangalore தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்களை மாற்றும் MLFF என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.


தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) MLFF - Multi Lane Free Flow System என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பழைய டோல்பூத் முறையை மெதுவாக மாற்றத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறையின் ஆசீர்வாதத்துடன் பொது மக்களிடம் அநியாயக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் Toll Gate நிர்வாகங்களின் இந்த புதிய அவதாரம் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இந்த புதிய முறைமையில் AI அடிப்படையிலான ANPR (தானியங்கி எண் தட்டு அங்கீகாரம்) கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவை வாகன எண்களை தானாகப் பிடித்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள FASTag கணக்கில் இருந்து கட்டணத்தை கழித்துவிடும். இந்த வாகனங்கள் சுங்க சாவடியில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறப்படுகிறது. வாகனங்கள் 100 முதல் 120 கிமீ வேகத்திலும் இலகுவாக சென்று விடலாம். இதன்மூலம் பயண நேரம் குறைவதோடு, சாலை நெரிசலும் குறையும் என பகீர் கிளப்புகின்றனர்.


முதற்கட்டமாக, ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி), சென்னசமுத்திரம் (வேலூர் அருகே), மற்றும் பாரனூர் (ஜிஎஸ்டி பாதை) ஆகிய மூன்று இடங்களில் இந்த புதிய கேமரா முறை பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்படுகிறது. இதன் வெற்றியைப் பொருத்து, தமிழ்நாட்டின் மற்ற டோல்கேட்களிலும் அடுத்த கட்டங்களில் இது விரிவுபடுத்தப்படும் என மத்திய அரசின் NHAI தெரிவித்துள்ளது.




2026 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் - அரசாணை வெளியீடு



2026ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் - அரசாணை (நிலை) எண்: 708, நாள் : 11-11-2025 வெளியீடு


Government Holidays for the year 2026 - Government Order G.O. (Ms) No.: 708, Dated: 11-11-2025 Released 


குறிப்பு: வழக்கம் போல் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை.



>>> அரசாணை (நிலை) எண்: 708, நாள் : 11-11-2025



>>> Public Holidays G.O. (Ms) No.: 708, Dated: 11-11-2025



செல்வம் அதிகரிக்க வணங்க வேண்டிய கடவுள்




 இந்த அம்மன் படம் வீட்டில் இருந்தால் திருஷ்டிகள் விலகும்; பணவரவு பெருகும்!


மீன் செல்வத்தின் அடையாளம். அதன்மீது வீற்றிருப்பது போன்ற அம்பாளின் திருக்கோலம் அபூர்வமானது; மிகவும் விசேஷமானது. இந்த அம்பிகையின் படம் வீட்டில் இருந்தாலே சகல சம்பத்துகளும் வந்து சேரும்; வீட்டில் செல்வம் வற்றாமல் நிறைந்திருக்கும்' என்பது நம்பிக்கை. இந்த அம்பிகையை `ஐஸ்வர்ய மகா கெளரி' எனப் போற்றுகின்றன ஞானநூல்கள்!


ஆம்! வீட்டில் எப்போதும் பணம் புழங்க வேண்டும்; கடன் பிரச்னைகள் விரைவில் தீரவேண்டும் என விரும்புகிறீர்களா? எனில், மகா சக்தியை ஐஸ்வர்ய மகாகெளரியாக தியானித்து வழிபடவேண்டும். இந்த கெளரிதேவியின் அருளால் வீட்டில் உள்ள திருஷ்டி தோஷம் முற்றிலும் விலகும். குலதெய்வங்களின் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்!


அகத்திய மாமுனிவர் ஐஸ்வர்ய மகா கெளரி வழிபாடு குறித்து அருளியுள்ளார். அதுபற்றி அறியும் முன் இந்த தேவியின் தோற்றம் குறித்து புராணங்கள் சொல்லும் தகவலை அறிவோம்.


முன்பு ஒருமுறை பெரும் ஊழி ஏற்பட்டது. ஊழிக்காலம் முடிந்ததும் மீண்டும் படைப்புகள் நிகழ்ந்தன. அப்போது அலைகடலின் நடுவில் சுவர்ணலிங்கம் தோன்றியது.


தேவர்களும், முனிவர்களும், அசுரர்களும், நாகர்களும் அதை வணங்கிப்போற்றினர். அந்த லிங்கத்திலிருந்து பொன் மேனியராக சிவபெருமான் வெளிப்பட்டார். அவரைத் தழுவிய பொற்கொடியாக சக்தியும் தோன்றினாள். அவளைத் தேவர்கள் `சுவர்ண வல்லி' எனப் போற்றினர்.


கடல் அரசனும் நாகலோக வாசிகளும், அந்த அம்பிகையைத் தங்கள் உலகுக்கு வந்து இருக்கும்படி வேண்டினர். அம்பிகையும் பாதாள லோகம் சென்று தங்கினாள். அவள் அருளால் பூமியில் தங்கம், இரும்பு, வெள்ளி முதலான உலோகங்கள் விளைந்தன.


இதற்குப் பிறகு, தேவர்கள் ஒருமுறை செல்வம் வேண்டி தவம் புரிந்தனர். அவர்களுக்கு அருளும் பொருட்டு, பாதாளத்திலிருந்து வெளிப்பட்டாள் அம்பிகை. பொன்மயமான பிரகாசத்துடன், கடல் பரப்பில் பெரிய மீன் மீது அமர்ந்த நிலையில் தோன்றினாள் சுவர்ண மகா கெளரி.


அந்த அன்னை, தம்முடைய திருக்கரங்களில் ஞானத்தைக் குறிக்கும் தாமரை, போகத்தைக் குறிக்கும் நீலோற்பல மலர், நோயற்ற வாழ்வுடன் ஆயுள் விருத்தியைத் தரும் அமிர்தக் கலசம், செல்வங்களின் வடிவமான பணப்பேழை ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தந்தாள்!


அவளை வணங்கிப் போற்றிய அனைவருக்கும் அள்ளக் குறையாத செல்வம் தந்து அருள்பாலித் தாள். அன்னையின் அந்த அற்புத வடிவை பொன்னால் செய்து அனைவரும் வழிபடத் தொடங்கினர். அதுவே ஐஸ்வர்ய கெளரி வழிபாடாகத் தொடர்கிறது.


இந்த அம்பிகையின் படம் வீட்டில் இருந்தாலே சகல சம்பத்துகளும் வந்து சேரும். வீட்டில் செல்வம் வற்றாமல் நிறைந்திருக்கும்; ஏதேனும் ஒருவகையில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும்; கடன் பிரச்னைகள் ஏதேனும் இருப்பின், இவளை வழிபடத் தொடங்கியதும் மெள்ள மெள்ள கடன்சுமை குறையும். திருஷ்டி தோஷங்கள் முற்றிலும் விலகும்.


ஏதேனும் காரணங்களால் குலதெய்வ வழிபாடு விடுபட்டுப் போனவர்களுக்கு, அந்த வழிபாட்டைத் தொடர வழிவகை பிறக்கும். குலதெய்வத்தின் பூரண அருள் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.


இந்த தேவியை ஆவணி மாத வளர்பிறை திருதியை வழிபடுவது விசேஷம். அன்பர்கள் சிலர், மாசி மாதத்திலும் வழிபடுவார்கள். மட்டுமன்றி, அம்பாளுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமைகளிலும், பெளர்ணமி தினங்களிலும்கூட இந்த அம்பிகையை வழிபட்டு வரம் பெறலாம்.


அன்று விளக்கேற்றிவைத்து, ஐஸ்வர்ய மஹா கெளரியின் படத்துக்குச் சந்தன - குங்குமத் திலகம் வைத்து, மலர்கள் சாற்றி அலங்கரிக்க வேண்டும். அவள் கடலில் தங்க மீனின் மீது தோன்றினாள் அல்லவா? அந்தக் கோலத்தில்... தாமரையும் நீலோத்பலமும், அமிர்தக் கலசமும், பணப் பேழையும் கொண்டவளாக மனதில் தியானித்து வணங்கலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.


இந்த அம்மனை வழிபடுவதால் வீண் விரயங்களும் மனச் சலனங்களும் விலகும். பாடுபட்டு சம்பாதித்த பணம் கையைவிட்டுப் போகாமல் பயன் தந்து சுகமளிக்கும்; சொத்தும் பொருளாதாரமும் பன்மடங்கு பெருகும்!



அரியலூர் அருகே சிலிண்டர் வாகனம் வெடித்து விபத்து - போக்குவரத்துக்கு தடை



அரியலூர் அருகே சிலிண்டர் வாகனம் வெடித்து விபத்து - போக்குவரத்துக்கு தடை


பொதுமக்கள் கவனத்திற்கு


அரியலூர் அருகே சிலிண்டர் வெடி விபத்து காரணமாக - திருச்சி தஞ்சை மாவட்டங்களுக்கு  செல்லும் பேருந்துகள் நிறுத்தம் - போக்குவரத்துக்கு தடை


அரியலூர் To கீழப்பளூர்  வழியாக திருச்சி தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்கும் தடை



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர் லாரி தீப்பிடித்து எரிந்து விபத்து



சிலிண்டர்கள் லாரியில் இருந்து வெடித்து சிதறியதன் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்டுள்ளது



>>> காணொளி 2




Milton Aura 1000 Thermosteel Bottle, 1 Litre, Dark Blue | 24 Hours Hot and Cold | Easy to Carry | Rust & Leak Proof | Tea | Coffee | Office| Gym | Home | Kitchen | Hiking | Trekking | Travel Bottle




Amazon வலைதள முகவரி இணைப்பு:


https://amzn.to/3LyO48X


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-11-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 11.11.2025

கிழமை:- செவ்வாய்கிழமை


*திருக்குறள்:*


 பால்:- பொருட்பால்

இயல்:- நட்பியல்

அதிகாரம்:- பெரியாரைப் பிழையாமை


*குறள் : 892*



பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் 

பேரா இடும்பை தரும். 



*விளக்க உரை:* 



ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.



*பழமொழி :*


sweat is the perfume of success. 



வியர்வை தான் வெற்றியின் வாசனை.



*இரண்டொழுக்க பண்புகள் :*



1.கோபம் என் அறிவை மறைக்கும்.



2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.



*பொன்மொழி :*



நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை - விவேகானந்தர்



*பொது அறிவு :*



01.கேரளாவையும் தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய கணவாய்எது?



  பாலக்காடு கணவாய்


   Palakkat Gap



02. சர்வதேச கல்வி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?



ஜனவரி 24 - January 24



*English words :*



articulate-able to express the thought clearly



coastal -located on the land by the edge of the sea



*தமிழ் இலக்கணம்:*



 வினைத்தொகையில். வல்லினம் மிகாது.



ஊறு + காய் = ஊறுகாய்


சூடு + சோறு = சுடுசோறு.



*நவம்பர் 11*



*தேசிய கல்வி நாள்*



தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.



*மௌலானா அபுல் கலாம்  ஆசாத்*



மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.



*நீதிக்கதை*


 *விடா முயற்சி*


போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான்.  வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.


ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.


இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்


நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.


தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.



*இன்றைய செய்திகள்* 


11.11.2025



⭐சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


* தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளன.



⭐ டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு : 11 படுகாயம்



⭐ புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.


 கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.



⭐மலேசியா அருகே கடலில் படகு மூழ்கி 7 அகதிகள் உயிரிழப்பு-பலர் மாயம்



*🏀 விளையாட்டுச் செய்திகள்*



🏀 தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்துள்ளார்.



*Today's Headlines*



⭐ Steps should be taken to rescue imprisoned Tamil Nadu fishermen - Chief Minister M.K. Stalin's letter. One hundred twenty-eight fishermen and 248 fishing boats from Tamil Nadu are in Sri Lankan custody.



⭐ 8 dead, 11 injured in car blast near Red Fort in Delhi.


7 fire tenders reached the spot and are actively involved in extinguishing the fire.



⭐ Major lakes, including Pudukottai Aranthangi Neelakondan Lake will be renovated for Rs. 15 crore. Kandavarkottai Town Panchayat will be upgraded to a municipality. 



⭐ 7 refugees died due to the sinking of a boat in the sea near Malaysia – many of them are missing.



*SPORTS NEWS* 



🏀 Tamil Nadu player Ravichandran Ashwin has announced his retirement from the CSK team.


Microtek Pulse Oximeter with Oxygen Saturation Monitor, Heart Rate and SpO2 Levels Oxygen Meter with OLED Display

இதயத் துடிப்பின் அளவையும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவையும் அறிந்து கொள்ள உதவும் கருவி

Limited Time Offer





Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3LvU02v



டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு இடத்தைப் பார்வையிட்ட பின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி



டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு இடத்தைப் பார்வையிட்ட பின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி


 "அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன, மேலும் அனைத்து தகவல்களையும் கருத்தில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். 


குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் காவல்துறையினரால் வெளியிடப்படாததால், நாடு தழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது, இதனால் நெரிசலான பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது எனவும், 


மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அருகிலுள்ள வாகனங்கள் சேதமடைந்ததாகவும், சில பாதசாரிகள் காயமடைந்ததாகவும் திரு. அமித்ஷா கூறினார்.



PU Leather Executive Portfolio File Folder – Legal Size Document Holder with 20 Leafs/Pockets, Certificate Organizer, Professional Zip File for Office, School & Business Use




https://amzn.to/49N7fpx

25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

 


மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள “அன்புச்சோலை” திட்டத்தின் மையத்தை திருச்சி பொன்மலையில் இன்று தொடங்கி வைத்தார்கள்.


ஒரு மாநகராட்சியில் இரண்டு மையங்கள் வீதம் திருச்சி உட்பட மொத்தம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் 2 மையங்கள் என மொத்தம் 25 “அன்புச் சோலை” மையங்களையும் காணொளிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்துச் சிறப்பித்தார்.




மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



ரூ.10 கோடி செலவில் 25 இடங்களில் கட்டப்பட்டுள்ள மூத்தோர்களுக்கான அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


அதன்படி, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா 2, சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



Globe Lock for Door/Shutters 2.5 inchTake a Look at thisBrass Padlock with Keys Suitable for Home and Office Security Purpose



https://amzn.to/4qRyjdr


ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி



ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி


Room facilities for passengers to stay and rest at railway stations


 ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சில மணி நேரம் தங்கி விட்டு குளித்துவிட்டு தங்கள் பயணத்தை தொடர்வதற்கு தங்கும் வசதி ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது 


சாதாரண அறை 

ஒரு அறைக்கு 

5 கட்டில்கள் 

ஒரு நபருக்கு கட்டணம்..

6 மணி நேரம்

ரூபாய்.300 


12 மணி நேரம் 

 450 ரூபாய் 


24 மணி நேரம்

 750 ரூபாய் 


AC அறைகள்

ஒரு அறைக்கு  

5 கட்டில்கள் 


ஒரு நபருக்கு கட்டணம்.....

6 மணி நேரம் 

600 ரூபாய் 

12 மணி நேரம் 1000 ரூபாய் 

24 மணி நேரம்

1700 ரூபாய் 


அறையில் தங்குவதற்கு அவசியம் ஆதார் அட்டை தேவை 


அன்றைய தினம் தாங்கள் ரயிலில் பயணித்த டிக்கெட் கையில் வைத்திருக்க வேண்டும்


மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம் 

73053 05956

86081 88147

97512 22288


மேலும் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் Retiring Room வசதி உள்ள ரயில் நிலையங்கள்! பட்டியல் 


பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தின் கீழ் உள்ள சில முக்கிய நிலையங்களில் Retiring Room வசதி வழங்கப்பட்டுள்ளது. 


📍 Retiring Room வசதி உள்ள நிலையங்கள் பட்டியல்:


➡️ மயிலாடுதுறை (Mayiladuthurai)

➡️ விழுப்புரம் (Villupuram)

➡️ திருவண்ணாமலை (Tiruvannamalai)

➡️ சிதம்பரம் (Chidambaram)

➡️ வேளாங்கண்ணி (Velankanni)

➡️ கும்பகோணம் (Kumbakonam)

➡️ நாகப்பட்டினம் (Nagapattinam)

➡️ திருவாரூர் (Thiruvarur)

➡️ விருத்தாசலம் (Virudhachalam)

➡️ புதுச்சேரி (Puducherry)

➡️ வேலூர் (Vellore)

➡️ தஞ்சாவூர் (Thanjavur)

➡️ திருச்சி (Tiruchchirappalli)


📲 முன்பதிவு முறை:

🔹 IRCTC / RailOne இணையதளம் அல்லது ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

🔹 உங்கள் PNR எண் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

🔹 செக்-இன் செய்யும் போது அடையாள ஆவணம் அவசியம்.


📌 குறிப்பு:

சில நிலையங்களில் இவ்வசதி தற்போது பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சில நிலையங்களில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 🔧


தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...


Smart Multipurpose Foldable Laptop Table with Cup Holder, Study Table, Bed Table, Breakfast Table, Foldable and Portable/Ergonomic & Rounded Edges/Non-Slip Legs (Wood), 59 cm, 8 cm




https://amzn.to/47OyfT3



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? சரி செய்வது எப்படி?

  கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? சரி செய்வது எப்படி? - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா  கல்லீரல் நோய் முற்றி  நடிகர் அபினய் அவர்கள் இறந்திருப...