கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-12-2025

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-12-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 12.12.2025

கிழமை:- வெள்ளிக்கிழமை


 

திருக்குறள்: 

குறள் 1032:

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து.

விளக்க உரை:

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.


பழமொழி :
Every ending starts a new life page.

ஒவ்வொரு முடிவும் புதிய வாழ்க்கைப் பக்கத்தைத் தொடங்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.


பொன்மொழி :

தனக்கென்று ஒரு பொறுப்பு இருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி வேலையில்லாமல் சோம்பி இருக்கும்போது ஏற்படுவதில்லை. ஜோ.கிப்ஸன்


பொது அறிவு :

01.குஜராத்தில் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள முக்கியமான நகரம் எது?

அகமதாபாத்-Ahmedabad

02.இந்தியாவில் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படும் நகரம் எது?

புவனேஸ்வர்-ஒடிசா
Bhubaneswar, Odisha,

English words :

accelerator-increase in speed

tranquil -peaceful


தமிழ் இலக்கணம்:

வினா எழுத்துகள் 5
அவை எ, யா, ஆ, ஓ, ஏ
எ, யா மொழிக்கு முதலில் வரும்
எங்கு?, யார்?
ஆ,ஓ மொழிக்கு இறுதியில் வரும்
பேசலாமா? தெரியுமோ?
ஏ முதலிலும் இறுதியிலும் வரும்
ஏன்? நீதானே?


அறிவியல் களஞ்சியம் :

அறிவியல் விந்தைகள்

* புவிக் கோளில் ஒரு நிமிடத்தில் 6000 தடவைகள் மின்னல் தோன்றுகிறது

* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைப் போல இரண்டு மடங்கு நீளம் உடையது.

* உலகில் 10% பேர் இடது கை பழக்கம் உள்ளவர்கள்.

* மரம் கொத்தி ஆனது ஒரு வினாடியில்  20 முறை மரத்தைக் கொத்தும்



நீதிக்கதை

மரங்கொத்தியின் தன்னம்பிக்கை

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்.

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா? என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்... என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும் என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும் என்றார்.


இன்றைய செய்திகள்

12.12.2025

⭐ தமிழக சட்டசபை தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது.

⭐இந்தியாவில் உள்ள கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்த ரூ.
183248.54 மத்திய அரசு விடுவித்துள்ளது.

⭐ தாய்லாந்து-கம்போடியா எல்லையில் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளதால் தாய்லாந்தின் எல்லையிலிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2 முறை சாம்பியனான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் முறையாக வெண்கலம் பதக்கம் பெற்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
இந்தியாவின் இந்த வெற்றி மிகவும் சிறப்பானது.


Today's Headlines

⭐Tamilnadu Assembly Elections,  Verification of Electronic Voting Machines has begun.

⭐The Central Government has released Rs. 183248.54 for the development of Gram Panchayats in India.

⭐ More than 400,000 people on the Thailand border have been evacuated and placed in camps as the two sides engage in renewed clashes on the Thai-Cambodian border.

🏀The two-time champion Indian junior hockey team won the bronze medal for the first time. They defeated Argentina 4-2 in the third-place match. This victory for India is more impressive.


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் - 2வது கட்ட விரிவாக்கம்


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் - 2வது கட்ட விரிவாக்கம் - முதலமைச்சர் நாளை (12.12.2025) தொடங்கி வைக்கிறார் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


JA to Assistant Promotion - DSE Proceedings

 

இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை எண் 146 முதல் 399 முடிய உள்ளவர்களுக்கு கலந்தாய்வு 15-12-2025 திங்கள்கிழமை காலை 11-00 மணிக்கு கூகுள் மீட் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 11-12-2025 


Counseling for those who are going to be promoted from Junior Assistant to Assistant with priority number 146 to 399 will be held on Monday, 15-12-2025 at 11:00 AM through Google Meet at the respective District Chief Education Office - Proceedings of the Joint Director of School Education, Date: 11-12-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



இன்று (டிசம்பர் 11) விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது - தலைமைச் செயலாளர்

 


இன்று (டிசம்பர் 11) பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது


 CPS ஒழிப்பு இயக்கம் அமைப்பினர் இன்று (டிசம்பர் 11) அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தலைமைச்செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை


📕📘  *CPS ஒழிப்பு  இயக்கம்* சார்பில் *வியாழக்கிழமை  11.12.2025* அன்று *ஒரு நாள் வேலைநிறுத்தம்


📕📘 *ஜாக்டோ ஜியோ* சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற *சனிக்கிழமை (13.12.25)* அன்று உரிமை மீட்பு  உண்ணாவிரத  போராட்டம்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Helmet & Multipurpose Cable Lock


https://amzn.to/4oMjrvz






பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-12-2025

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-12-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 11.12.2025

கிழமை:- வியாழக்கிழமை


 

திருக்குறள்: 


பால்:- பொருட்பால்

இயல்:- குடியியல்

அதிகாரம்:- உழவு



*குறள் 1031:*


சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் 

உழந்தும் உழவே தலை. 


*விளக்க உரை:*


உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.


*பழமொழி :*


Life is a poetry written by our actions. 


நமது செயல்களால் எழுதப்படும் கவிதை தான் வாழ்க்கை.



*இரண்டொழுக்க பண்புகள் :*



1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.


2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.



*பொன்மொழி :*


ஒருவருக்கு ஏற்படும் பயம் நீங்கும் போது ஏற்படும் நம்பிக்கையே அதிக மகிழ்ச்சி அளிக்கும் - ஸ்காட்



*பொது அறிவு :*


01.இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் பெயர் என்ன?



  ஐஎன்எஸ் விக்ராந்த்

INS Vikrant


02.இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் எங்கு

தொடங்கப்பட்டது?


கோழிக்கோடு- கேரளா

Kozhikode , Kerala.


*English words :*


sit tight-stay in your place


 isolated - alone or separated


*தமிழ் இலக்கணம்:*


 காற்புள்ளி பயன்படுத்தும் இடங்கள் குறித்து காண்போம் (எடுத்துக்காட்டுகளுடன்):

பட்டியலிடும்போது: தொடர்ச்சியான வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களைப் பிரிப்பதற்குக் காற்புள்ளி இடுவோம்.

எ.கா.: நான் பழங்கள், காய்கறிகள், மற்றும் தானியங்களை வாங்கினேன். (நான் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் வாங்கினேன். இப்படியும் எழுதலாம்)


*அறிவியல் களஞ்சியம் :*


 மோனல்



* இந்த பறவை அதிகம் காணப்படும் இடம் இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் ஆகும்.

* இது இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் மாநில பறவை ஆகவும் நேபாளத்தின் தேசிய பறவை ஆகவும் உள்ளது.

* இது இந்தியா தவிர பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அதிகம் காணப்படுகிறது.

* ஆண் பறவை அழகிய பல வண்ணங்களிலும் பெண் பறவை வண்ணமற்று சாதாரணமாகவும் காணப்படும்.

* இதன் அழகிய இறகுகளுக்காக வேட்டை ஆட படுவதால் அழியும் நிலையில் உள்ளது.



*டிசம்பர் 11*


*சுப்பிரமணிய பாரதி  அவர்களின் பிறந்தநாள்*



சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.


பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.


பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.




*பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்*




பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.



*பன்னாட்டு மலை நாள்*



பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.


மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.


*நீதிக்கதை*


 *அன்னையின் வளர்ப்பு*



நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார். ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெயிலில் காட்டினார்.


பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல்படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார். ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். 


ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேலையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார். இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர். சி. வி இராமன் ஆனார்.


*இன்றைய செய்திகள்*


11.12.2025



⭐தமிழகத்தில் 40 சிப்காட் தொழில் பூங்காக்கள் உள்ள நிலையில் மேலும் 21 இடங்களில் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 


⭐இந்தியாவின் யுபிஐயில் 2024-25 நிதியாண்டில் 12,930 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறை உலகளவில் 49% பங்கைக் கொண்டுள்ளது


⭐2025-ல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டினருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் அமெரிக்கா


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார். விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.


🏀3 வடிவ கிரிக்கெட்டிலும் சாதித்த ஒரே இந்திய வீரர்- வரலாறு படைத்த பும்ரா. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்றைய ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


*Today's Headlines*


⭐While there are 40 SIPCOT industrial parks in Tamil Nadu,  the Tamil Nadu government is taking steps to set up industrial parks in 21 more locations.


⭐India's UPI transactions reached 12,930 crore in the financial year 2024-25.  India's UPI transaction system has a 49% share globally


⭐85,000 visas have been canceled so far in 2025. The United States imposes strict restrictions on foreigners 


 *SPORTS NEWS*


🏀Indian batsman Rohit Sharma (781 points) continues to lead the batsmen rankings. Virat Kohli (773 points) has moved up two places to take second place.


🏀The only Indian player to achieve in all 3 formats of cricket - Bumrah creates history. Jasprit Bumrah took 2 wickets against South Africa yesterday.  He has taken 100 wickets in T20 cricket.



Himalaya Natural Glow Fairness Cream, 50gm


https://amzn.to/48xGq7W




9 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு


9 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு



>>> அரசாணைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் உதகமண்டலம் ஆகிய 7 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்.


திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்,


காஞ்சிபுரம் - உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியம்,


விழுப்புரம் - வானூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து கிளியனூர் ஊராட்சி ஒன்றியம்,


திருவண்ணாமலை - தெள்ளார் மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து மழையூர் ஊராட்சி ஒன்றியம்,


கிருஷ்ணகிரி - தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து அஞ்செட்டி ஊராட்சி ஒன்றியம்,


ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாயல்குடி ஊராட்சி ஒன்றியம்,


விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி மற்றும் கானை ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து கஞ்சனூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கம்.


நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து குந்தா ஊராட்சி ஒன்றியம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கம்


Safari Genius Alley 55cm Cabin Trolley Bag Hard Case Polypropylene, 4 Spinner Wheels, 360 Degree Wheeling Carry on Luggage, Travel Bag, Suitcase, Trolley Bags, Deep Forest


https://amzn.to/4939unL



JACTTO GEO உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டங்கள் வாரியாக பங்கேற்கும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல்

 

13.12.2025 அன்று நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ (JACTTO GEO) உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டங்கள் வாரியாக பங்கேற்கும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் விவரம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Dettol Original Bathing Soap Bar (900gm) | 150g (Pack of 6)


https://amzn.to/3MtnluV




New Panchayat Unions Creation - G.O.s Released


7 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி அரசாணைகள் வெளியீடு


New Panchayat Unions Creation - G.O.s Released


அரசாணை (நிலை) எண்: 340, நாள் : 04-12-2025

மற்றும்

அரசாணை (நிலை) எண்: 345, நாள் : 08-12-2025



திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி அரசாணைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Himalaya Natural Glow Fairness Cream, 50gm


https://amzn.to/48xGq7W




1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD, DSE & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்


1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD, DSE & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள், நாள் : 22-10-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



YOUVA Navneet Soft Bound Long Book/Soft cover Notebook for Students | Single Line | 172 Pages | Pack of 6 | Regular Size 17 cm x 27 cm


https://amzn.to/4q694mw




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-12-2025

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-12-2025 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀🌀...