கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று 22-12-2025 நடைபெற்ற JACTTO GEO பொறுப்பாளர்கள் - அமைச்சர்கள் பேச்சு வார்த்தை விவரம்





இன்று 22-12-2025 நடைபெற்ற ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் - அமைச்சர்கள் பேச்சு வார்த்தை விவரம்


அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒரு சில அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கு மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. 


முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்வோம் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.


இன்று மாலை ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்களின் கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேல நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 



Xiaomi Power Bank 4i 20000mAh 33W Super Fast Charging PD |Smart 12 Layer Protection|Type C Input & Output|Triple Output Ports|Supports Android,Apple, Tablets, Earbuds,Watch(MI Powerbank),Black


https://amzn.to/3NdXTd2




இன்று (22.12.2025) தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் 3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை - அரசு அறிவிப்பு

முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்


அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரசு தெரிவிப்பு


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை , தலைமைச் செயலகம் , நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10 - வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு , மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திரு . தங்கம் தென்னரசு மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.


தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 3024, நாள் : 19-12-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



boAt Rockerz 255 Pro+, 60HRS Battery, Fast Charge, IPX7, Dual Pairing, Low Latency, Magnetic Earbuds, in Ear Bluetooth Neckband, Wireless with Mic Earphones (Active Black)


https://amzn.to/4qpbtsI





அமைச்சர்களுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள்

 

அமைச்சர்களுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் தலைமைச் செயலத்தின் பத்தாவது மாடி கூட்ட அரங்கில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள்








Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-12-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-12-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 22.12.2025

கிழமை:- திங்கள்கிழமை


 

திருக்குறள்: 


பால்:- அறத்துப்பால்

இயல்:- இல்லறவியல்

அதிகாரம்:- பயனில சொல்லாமை



*குறள் 196:*


பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் 

மக்கட் பதடி யெனல்.   


                

 *விளக்க உரை:*


பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.


*பழமொழி :*


Affection grows where kindness lives.  


கருணை இருக்கும் இடத்தில் அன்பு வளரும்.


*இரண்டொழுக்க பண்புகள் :*



1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.


2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.


*பொன்மொழி :*


மது உள்ளே சென்றதும் அறிவு வெளியேறி விடுகிறது  மது அருந்தக்கூடாது .- தாமஸ் பேகன்


*பொது அறிவு :*


1.இயற்பியலில் இரண்டு முறை நோபல் பரிசு வென்றவர் யார்?


ஜான் பார்டீன் -John Bardeen


2.செயற்கை முறையில் இதயத் துடிப்பை உருவாக்க உதவும் சாதனம் எது?


இதயமுடுக்கி -Pacemaker


*English words :*


Clampdown -crackdown



Stalemate-deadlock


*தமிழ் இலக்கணம்:*


 முக்கால் புள்ளி பயன்படுத்தப்படும் இடங்கள் 3:


ஒரு கூற்றின் தொடர்ச்சியாக:

"நல்ல தமிழில் எழுத வேண்டுமென்றால் நாம் அறிய வேண்டியவை: இலக்கணம், இலக்கியம், மொழி நடை."


*அறிவியல் களஞ்சியம் :*


 உலக வெப்பநிலை 1850ல் இருந்து கணக்கிடப்படுகிறது. ஆண்டு சராசரி வெப்பநிலையில் உலகின் வெப்பமான ஆண்டாக 2024 உள்ளது. இது தொழிற்புரட்சிக்கு (1850 - 1900) முந்தைய சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 1.55 டிகிரி செல்சியஸ் அதிகம். 2ம் இடத்தில் 2023 (1.48 டிகிரி செல்சியஸ்) இருந்தது. தற்போது 2025 (ஜன., - நவ.,) சராசரி வெப்பநிலை 1.48 டிகிரி செல்சியஸ். இன்னும் ஒரு மாதம் இருப்பதால் இது 2ம் இடம் பெறுவது உறுதி. உலக சராசரி வெப்பநிலை உயர்வை, 1.5 செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என 'பாரிஸ் ஒப்பந்தம் - 2015' குறிப்பிடுகிறது.


*டிசம்பர் 22*


*தேசிய கணித தினம்*



தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.[1]



இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.




*சீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்*


சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.


*நீதிக்கதை*


 *சுயமரியாதை வேண்டும்*




ஒரு நாள் புவனேஸ்வரிதேவி தம் மகன் நரேந்திரனிடம், மகனே! நீ என்றும் தூயவனாகவும், சுயமரியாதையுடன் இரு. அதே சமயத்தில் மற்றவர்களின் சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மென்மையானவனாகவும், சமநிலை குலையாதவனாகவும் இரு. ஆனால் தேவைபடும்போது, உன் இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளவும் தயங்காதே! என்று கூறினார். 




தம் தாய் கூறிய இந்த அறிவுரைகளை, நரேந்திரர் துறவறம் மேற்கொண்டு சுவாமி விவேகானந்தர் ஆனபிறகும் மறவாமல் பின்பற்றினார். தன்மானம், சுயமரியாதை உணர்வு விவேகானந்தரிடம் முழுமையாக இருந்தது. தம்மைப் போலவே இந்திய மக்களும் தன்மானத்துடன், இணையற்ற பெருமைக்குரிய தங்கள் பாரம்பரியங்களை அறிந்தவர்களாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். 




ஒரு முறை விவேகானந்தரும் மற்றோர் அன்பரும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் வெள்ளைக்காரர். அவர் அன்பரிடம், நீங்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்ய முடியாது! என்று முரட்டுத்தனமாகக் கூறி, அன்பரை அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார். 




மேலும் அந்த வெள்ளைக்காரர், தமக்குச் சாதகமாக ஏதோ ஒரு ரயில்வே சட்டத்தையும் கூறினார். அன்பரும் ரயில்வேயில் பணிபுரியும் ஒருவர்தாம். அன்பர் டிக்கெட் பரிசோதகரிடம், நீங்கள் கூறுவதுபோல் ரயில்வேயில் அப்படி ஒரு சட்டம் இல்லை என்று கூறி, அந்த ரயில் பெட்டியிலிருந்து வெளியேற மறுத்தார். இவ்விதம் தம்மை ஓர் இந்தியன் எதிர்ப்பதைப் பார்த்து, அந்த வெள்ளைக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது. கடைசியில் இந்தப் பிரச்சனையில் விவேகானந்தர் தலையிட்டார். அதுவும் வெள்ளைக்காரரின் கோபத்தைத் தணிக்கவில்லை. அவர் கோபத்துடன் கடுமையான குரலில் விவேகானந்தரிடம் இந்தியில் பேசினார்.




வெள்ளைக்காரர்: நீ ஏன் இதில் தலையிடுகிறாய்? 




விவேகானந்தர்: முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவரை நீ என்று நீங்கள் மரியாதை இல்லாமல் அழைக்கிறீர்களே! முதலில் நீங்கள் மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.




வெள்ளைக்காரர்: தவறுதான், பொறுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தி சரியாகத் தெரியாது. இவன் (This man). 




விவேகானந்தர் (குறுக்கிட்டு): உங்களுக்கு இந்தி சரியாகத் தெரியாது என்று சொல்கிறீர்கள்! ஆனால் இப்போது உங்களுக்கு உங்கள் தாய்மொழியான ஆங்கிலமும் சரியாகத் தெரியாது என்று தெரிகிறது. இவன் (This man) என்று அல்ல, இவர் (This gentleman) என்று சொல்ல வேண்டும். தமது தவற்றை உணர்ந்த பரிசோதகர், பெட்டியைவிட்டு வெளியேறினார். 




பின்னர் ஒரு சமயம் விவேகானந்தர், கேத்ரி மன்னரின் தனிச்செயலாளர் ஜக்மோகனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மேற்கூறிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு கூறினார். வெள்ளைக்காரர்களுடன் பழகும்போது நாம் நமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக்கூடாது. உரியவருக்கு உரிய மரியாதை கொடுத்துப் பழகாததால்தான் வெள்ளைக்காரர்கள் நம்மை அவமதிக்கிறார்கள். நமக்கு சுயமரியாதை வேண்டும், பிறருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.


*இன்றைய செய்திகள்*


22.12.2025



⭐டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி  ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.  


⭐நெல்லையில் ரூ.98 கோடியில் காயிதே மில்லத் நூலகம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்


⭐காற்றுமாசு- பனிமூட்டம்: டெல்லியில் விமான சேவை பாதிப்பு.


டெல்லியில் நேற்று காற்றின் தரம் 386 என்ற அளவில் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.


*Today's Headlines*



⭐The Railway Ministry has announced that train fares will be increased from December 26. * This is the second increase in train fares in a year, after the first increase on July 1.


⭐Chief Minister M.K. Stalin laid the foundation stone of the Rs. 98 crore Qaide Millat Library in Nellai.


⭐Air pollution-Smog: Flight services affected in Delhi. Delhi's air quality was in the 'very poor' category at 386 yesterday. 



 *SPORTS NEWS*


🏀 Australia won the third Ashes Test against England by 82 runsTeacher exam prep.



Tulsi California Walnut Kernels Premium 200g | Light Colored Halves | Large Size | Rich in Omega-3 | Akhrot Giri | Delightful Snack | Without Shell | Brain Food | Crunchy Nuts | Rich in Dietary Fiber


https://amzn.to/4iMZ137




Voters Listல் பெயர் சேர்க்க / நீக்க / திருத்தம் மேற்கொள்ள / மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள் - தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க / நீக்க / திருத்தம் மேற்கொள்ள / மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள் - தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு


Special camps for adding /deleting / correcting /cl Changing names in the voters' list - Chief Electoral Officer's order


சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் :

27.12.2025 சனி

28.12.2015 ஞாயிறு

03.01.2026 சனி

04.01.2026 ஞாயிறு


இடம்: அந்தந்த வாக்குச்சாவடிகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb




CMBFS திட்டத்தை ஆய்வு செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்கள் - மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு

 


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்களை நியமித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு


District Collector orders appointment of officers to each school to inspect the Chief Minister's BreakFast Scheme


CMBFS காலை உணவு Visit



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



boAt Rockerz 255 Pro+, 60HRS Battery, Fast Charge, IPX7, Dual Pairing, Low Latency, Magnetic Earbuds, in Ear Bluetooth Neckband, Wireless with Mic Earphones (Active Black)


https://amzn.to/4qpbtsI




ஆசிரியர்களுக்கு RIESI பெங்களூரில் 30 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - DEE Proceedings

 


RIESI Bangalore 30 Days CELT Programme Bengaluru 


பெங்களூரு RIESI நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியலை அனுப்ப இயக்குநர் செயல்முறைகள்


ஆசிரியர்களுக்கு RIESI Bangalore 30 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb




Old Pension Scheme குறித்த அரசாணை வெளியிடும் வரை சமரசம் கூடாது

 


பழைய பென்ஷன் திட்டம் குறித்த அரசாணை வெளியிடும் வரை சமரசம் கூடாது - 2016ஆம் ஆண்டு போராட்ட வரலாறு திரும்ப வேண்டும் - அரசு ஊழியர்கள் ஆவேசம்


பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்தக் கோரி தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது; அரசாணை வெளியாகும் வரை சமரசம் இல்லை, 2016 போராட்ட வரலாறு திரும்பும் என ஊழியர்கள் ஆவேசமாக உள்ளனர், 

ஏனெனில் மத்திய அரசு OPS-ஐ அமல்படுத்த வாய்ப்பில்லை என மத்திய அரசு நிதி அமைச்சகம் உறுதியளித்துள்ள நிலையில், தமிழகத்தில் வாக்குறுதியளித்தும் தாமதிக்கும் திமுக அரசு மீது அதிருப்தி நிலவுகிறது; இதனால், OPS அமல்படுத்தப்படும் வரை போராட்டங்களைத் தொடர அரசு ஊழியர்கள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. 


போராட்டங்களுக்கான காரணங்கள்:

மத்திய அரசு நிலைப்பாடு: மத்திய நிதி அமைச்சகம், தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த எந்த திட்டமும் இல்லை என நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.


மாநில அரசுகளின் நிலை: ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற சில மாநிலங்கள் OPS-ஐ அமல்படுத்தினாலும், மத்திய அரசின் நிலைப்பாடு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


தமிழகத்தில் வாக்குறுதி மீறல்: 2021 தேர்தல் வாக்குறுதியில் OPS-ஐ அமல்படுத்துவதாக திமுக கூறியிருந்தும், பல மாதங்கள் ஆகியும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


CPS-க்கு கட்டாய மாற்றம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பெற்ற ஊழியர்களை புதிய திட்டத்திற்கு மாற்ற அதிகாரிகள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 


அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடு:

சமரசம் இல்லை: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணை வெளியாகும் வரை சமரசம் கிடையாது என அரசு ஊழியர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.


2016 போராட்டம்: 2016ஆம் ஆண்டு நடந்த போராட்டங்களைப் போன்று மீண்டும் தீவிர போராட்டங்கள் வெடிக்கும் என எச்சரிக்கின்றனர்.


காலவரையற்ற வேலைநிறுத்தம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி விரைவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. 


அரசு தரப்பு நிலைப்பாடு (தற்போதைய நிலை):
மத்திய அரசால் NPS corpus-ஐ மாநில அரசுகளுக்கு திருப்பித் தர முடியாது என நிதி அமைச்சகம் கூறுகிறது.


தமிழக அரசு, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது, இது OPS-ஐ அமல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது என ஊழியர்கள் கருதுகின்றனர். 



பழைய பென்ஷன் திட்டம் குறித்த அரசாணை வெளியிடும் வரை சமரசம் கூடாது - 2016 போராட்ட வரலாறு திரும்பணும் - அரசு ஊழியர்கள் ஆவேசம் - அரசிடம் பேச்சுவார்த்தைக்கு செல்லும் நிர்வாகிகளிடம் திட்டவட்டம் - நாளிதழ் செய்தி






Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb




ஆண்டுதோறும் TET நடத்த வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை குறித்த தகவல்

 

ஆண்டுதோறும் TET நடத்த வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை குறித்த தகவல் 


சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 19.12.2025 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் பணிபுரிகிறார்கள் என்ற RTI தகவல்கள் அடிப்படையில் NCTE Guidelines சார்ந்து ஆண்டுதோறும் ஒருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதனை அடுத்து பணி நியமனத்திற்கான‌ நியமனத் தேர்வையும் கட்டாயம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்த உத்தரவு இடவேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.பி.புகழேந்தி அவர்கள் வழக்கு விசாரணையை 20.01.2026க்கு ஒத்திவைத்ததுடன் பள்ளி கல்வி துறை முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்டோர்க்குப் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு இட்டுள்ளார்கள்.





Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb






அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு முன் / அடுத்த நாட்களில் (23-12-2025 / 05-01-2026) ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாமா?


அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு முன் / அடுத்த நாட்களில் (23-12-2025 / 05-01-2026) ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாமா?


Can teachers take leave before/during the half-yearly exam vacation (23-12-2025 / 05-01-2026)?



*ஆசிரியர் நண்பர்களே...


*வழக்கமாக ஒவ்வொரு முறையும் வரும் சந்தேகம்* 


1) 23/12/25 ஒரு நாள் விடுப்பு வேண்டும் எனில் EL எடுக்கலாம்..


2) 24/12/25 முதல் 4/1/26 வரை 12 நாட்கள் விடுமுறை , எனவே 23/12/25 CL எடுக்க இயலாது.


3) CL + holiday 10 நாட்கள் மேல் அனுமதி இல்லை..


4) 22/12 & 23/12 இரண்டு நாட்களுக்கும் விடுப்பு வேண்டும் எனில்  EL எடுக்கலாம் ( இரண்டு நாட்கள் மட்டும் EL ஆகும்) 


20/12 & 21/12 சனி ஞாயிறு முன் அனுமதி...

24/12 முதல் 4/1/26 வரை விடுமுறை அனுமதி ..


Govt holiday + EL + vacation allowed (upto 180 days) 


 ( CL க்கு மட்டுமே 10 நாட்கள் வரையறை)


5) 5/1/26 ஒரு நாள் அல்லது 6/1/26 சேர்த்து இரண்டு நாட்களுக்கு விடுப்பு வேண்டும் எனில்  EL எடுக்கலாம் 


6) 5/1/26 & 6/1/26 இரண்டு நாட்களுக்கு ML எடுக்கலாமா? 


5 & 6 உடம்பு சரியில்லாமல் போகும் என்பதை இன்றே கணிக்க இயலாது 🤣🤪


7) ML முன் இணைப்பு மற்றும் பின் இணைப்பு உண்டா? 


ஆம்...ML ...( Unearned leave on MC) க்கு


மருத்துவர் சான்று வழங்கும் தேதி  முதல் விடுப்பு ஆரம்பம்..

மருத்துவர் fitness  வழங்கும் தேதி அன்று பணியில் சேர வேண்டும்..


8) தலைமை ஆசிரியர் , JA & Watchman ( இருப்பின்) போன்ற கோடை விடுமுறை அற்ற பணியாளர்கள்... 

23/12 CL எடுக்கலாம்

24 & 31 RL எடுக்கலாம்...


( 24, 26, 29, 30, 31 & 2/1/26 பணி நாள் தான்) 


அவர்கள் 5,6 விடுப்பு வேண்டும் எனில் CL எடுக்கலாம்...


சிறப்பு நிகழ்வு


9) College AP TRB 27/12/25 நடைபெறுகிறது... 

அதில் தங்களுக்கு (ஆசிரியர்கள் ) பணி எனில் 


22, 23 CL or 5, 6 CL தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் 😊 ( on duty உம் பணியாக தான் கருத வேண்டும் )


Nylon Small Sling Cross Body Travel Bag for Business Office Messenger One Side Shoulder Carry Handbag Bag For Men & Women (35 x 18 x 25 Cm)


https://amzn.to/4s0NUrO




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று 22-12-2025 நடைபெற்ற JACTTO GEO பொறுப்பாளர்கள் - அமைச்சர்கள் பேச்சு வார்த்தை விவரம்

இன்று 22-12-2025 நடைபெற்ற ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் - அமைச்சர்கள் பேச்சு வார்த்தை விவரம் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகே...