மாணவர் தரநிலை அறிக்கை 2025-2026
Student Rank Report Card 2025-2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மாணவர் தரநிலை அறிக்கை 2025-2026
Student Rank Report Card 2025-2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய மாணவர்களிடம் போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் வேப்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
TET தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசு முடிவு
* டெட் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டை தொடர்ந்து உத்தர பிரதேச அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு
* ஆசிரியர்கள் பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம் என செப். 1ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-09-2025 : School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 17.09.2025
கிழமை:- புதன்கிழமை
* திருக்குறள்:
பால்:- பொருட்பால்
இயல்:- அரசியல்
அதிகாரம்:- தெரிந்து செயல்வகை
*குறள் : 461*
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.
*விளக்க உரை:*
ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.
*பழமொழி :*
Time is a silent teacher.
காலம் ஒரு அமைதியான ஆசிரியர்.
*இரண்டொழுக்க பண்புகள் :*
1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.]
2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.
*பொன்மொழி :*
ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப் போவது மரியாதைக்குரியது- ஆபிரகாம் லிங்கன்
*பொது அறிவு :*
01. இந்தியாவில் விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் 23- December 23
02. பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பெண்மணி யார்?
திருமதி. இந்திரா காந்தி
Mrs.Indira Gandhi
*English words :*
stand up – support, உறுதுணையாக நிற்றல். stand for – represent, ஒரு நபருக்காக அல்லது மக்களுக்காக செயல் படுதல் அல்லது பேசுதல்
*Grammar Tips:*
Some common mistakes with close and the correct form
1. Close the pen –X
Cap the pen ✓
2. Close the curtains X
Draw the curtains ✓
3. Close the jar X
Tighten the lid ✓
4. Close the umbrella X
Fold the umbrella ✓
5. Close your shirt X
Button your shirt ✓
*அறிவியல் களஞ்சியம் :*
ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 'மெகாலோபிகி ஓபெர்குலாரிஸ்' எனும் ஒருவகை புழுவின் முடியிலிருந்து எடுக்கப்படும் சில மூலக்கூறுகளுக்குப் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இதிலிருந்து புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கபடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
*செப்டம்பர் 17*
*பெரியார் பிறந்த தினம் - சமுக நீதி நாள்*
பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.
*நீதிக்கதை*
*இயல்பு*
இரு துறவிகள் ஆற்றில் தவம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேள் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். உடனடியாக ஒரு துறவி அந்த தேளை எடுத்து ஆற்றங்கரையில் விட்டார். அப்போது அத்தேள் அவரைக் கடித்துவிட்டது.
சிறிது நேரத்தில் திரும்பவும் அத்தேள் ஆற்றில் விழுந்து விட்டது. மீண்டும் அத்துறவி அதனை எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. இதனைக் கண்ட இன்னொரு துறவி, ”நண்பரே , தேள் கொட்டும் எனத் தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் அதனைக் காப்பாற்ற எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.
துறவி சொன்னார்: “கொட்டுவது தேளின் இயல்பு. காப்பாற்றுவது எனது இயல்பு”
*இன்றைய செய்திகள்*
17.09.2025
⭐தமிழகத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
⭐ஆயுதபூஜை, தீபாவளி: நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடக்கம்..!
⭐சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..!
⭐தமிழ்நாட்டிற்கு உரங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்
*🏀 விளையாட்டுச் செய்திகள்*
🏀வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
*Today's Headlines*
⭐Chief Minister M.K. Stalin inaugurated 4 new industrial parks in Tamil Nadu.
⭐ Special trains are announced for Ayudha Puja and Diwali to Nellai, Nagercoil and Thoothukudi. Bookings start from tomorrow onwards.
⭐Chennai - Nellai Vande Bharat train coaches' number increased to 20.
⭐Chief Minister's letter to Prime Minister Modi seeking urgent action to provide fertilizers to Tamil Nadu.
*SPORTS NEWS*
🏀This is the second time that Vaishali has won the Grand Chess Tournament. She was directly qualified for the Candidates Chess Tournament which is to be held next year.
*Covai women ICT_போதிமரம்*💐
புதிதாக அரசுப் பணிகளில் நியமனம் பெறுவோருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்திருந்தால் 365 நாட்களில் குழந்தை பிறந்த நாள் முதல் தற்போது வரை உள்ள நாட்களைக் கழித்து விட்டு மீதமுள்ள நாட்களை மகப்பேறு விடுப்பாக அனுபவித்துக் கொள்ளலாம் - G.O. (Ms) No: 164 , Dated: 25-10-2019
புதிதாக நியமனம் செய்யப்பட்ட 2222 பட்டதாரி ஆசிரியர்களில் யாருக்கேனும் ஓராண்டுக்குள் குழந்தை பிறந்திருந்தால் குழந்தை பிறந்த நாட்கள் முதல் தற்போது வரை கழித்து விட்டு (365 நாட்களில்) மீதமுள்ள நாட்களை மகப்பேறு விடுப்பாக Maternity Leave அனுபவித்துக் கொள்ளலாம் என்பதற்கான அரசாணை (நிலை) எண்: 164 - P & AR நாள்:25.10.2019
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஒன்றிய அரசு பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டவில்லையா - ஏன்?
ஒன்றிய அரசு ஊழியர்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் (UPS) தேர்வு செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அளித்த தகவலின்படி, திங்கட்கிழமை (செப்டம்பர் 15) நிலவரப்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் உள்ள சுமார் 23.94 லட்சம் ஊழியர்களில் 40,000 பேர் மட்டுமே இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
செப்டம்பர் 2 அன்று, ஒன்றிய சிவில் சேவைகள் (தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான) விதிகள், 2025-ஐ வெளியிட்டது. இதன் மூலம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme) தேர்ந்தெடுக்கும் ஒன்றிய அரசு ஊழியர்களின் பணி தொடர்பான விஷயங்களை இந்த விதிகள் ஒழுங்குபடுத்துகின்றன.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, ஜனவரி 1, 2004-க்கு முன் பணியில் சேர்ந்த ஒன்றிய அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் நிலையான ஓய்வூதியத்தைப் பெற்று வந்தனர். ஜனவரி 1, 2004-க்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் சந்தை சார்ந்த ஓய்வூதியத்தைப் பெற்றனர்.
NPS சந்தாதாரர்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஜனவரி 1, 2004-க்கு பின் பணியில் சேர்ந்த அனைத்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும் கட்டாயமானது. ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) கட்டாயமில்லை. இந்தத் திட்டத்தின் கீழ், ஓர் ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதியான ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது துணைவருக்கு ஓய்வூதியதாரர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% வரை உறுதியான ஓய்வூதியம் கிடைக்கும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
கட்டாயமா, விருப்பமா?
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) கட்டாயமானது, ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) விருப்பமானது. விதிகளின்படி, செப்டம்பர் 30-க்குள் இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு, ஒருமுறை மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பை ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் முன்பு அல்லது விருப்ப ஓய்வூதியத் திட்டத்தைத் (VRS) தேர்வு செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன் பயன்படுத்தலாம். ஒருமுறை இந்தத் தேர்வு செய்யப்பட்டால், மீண்டும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாற முடியாது. இந்த மாற்றம் "சந்தாதாரர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும்" என்று அந்தத் துறை கூறியுள்ளது.
பங்களிப்பு: தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் (NPS), ஊழியரின் ஓய்வூதிய கணக்கில் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) மூலம் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி (DA) ஆகியவற்றில் ஊழியர் 10% மற்றும் ஒன்றிய அரசு 14% பங்களிக்க வேண்டும். ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS), ஊழியர் மற்றும் அரசு ஆகிய இருவரும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் தலா 10% பங்களிக்க வேண்டும்.
உறுதிப்படுத்தப்பட்ட தொகை:
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) 25 ஆண்டுகள் பணி முடித்த பிறகு, கடைசி 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) எந்தவொரு உறுதியான தொகையும் இல்லை; அது மொத்தமாக திரட்டப்பட்ட நிதியைப் பொறுத்தது.
கூடுதல் அம்சங்கள்:
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS), அரசு அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 8.5% பங்களிப்புடன் ஒரு பொதுவான நிதி உருவாக்கப்படும். மேலும், 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு குறைந்தபட்சம் மாதத்திற்கு ரூ.10,000 ஓய்வூதியம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பணியிலிருந்து நீக்கப்படும் ஊழியர்களுக்கு இந்த உறுதியான ஓய்வூதியம் கிடைக்காது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) மொத்தமாக ஒரு பெரிய தொகை (lump sum payment) இல்லை. ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், ஒவ்வொரு ஆறு மாத கால சேவைக்கும் கடைசி அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் பத்தில் ஒரு பங்குத் தொகையை மொத்தமாகப் பெறலாம்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏன் மெதுவாக உள்ளது?
ஏப்ரல் 1 முதல், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்ய முதலில் ஜூன் 30 வரை அவகாசம் வழங்கியது. பின்னர், "கோரிக்கைகள்" காரணமாக செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஓய்வூதியத் துறை இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 9 அன்று, செயலாளர் வி.ஸ்ரீனிவாஸ் அனைத்து அமைச்சகங்களுடனும் கூட்டம் நடத்தி, தகுதியான ஊழியர்களிடையே தகவல்களைப் பரப்பி, அவர்கள் நன்கு அறிந்த ஒரு தேர்வை மேற்கொள்ள வலியுறுத்தினார். இருப்பினும், இதுவரை இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
சில ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான (OPS) தங்கள் கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அதே நன்மைகளை வழங்கவில்லை என்றும் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அங்கீகரிக்கப்பட்ட பிறகு, ஆயிரக்கணக்கான ஒன்றிய செயலக சேவை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிய செயலகச் சேவை அமைப்பு (Central Secretariat Service Forum), இரண்டு திட்டங்களும் ஊழியர்களுக்குப் பயனுள்ளதாக இல்லை என்றும், அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைப்போம் என்றும் கூறியிருந்தது.
8ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17.09.2025 அன்று வெளியீடு
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17.09.2025 அன்று வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள்
Exempted Categories from Election Duty
The Commission has exempted certain officers from being drafted for election duty in view of essential nature of duties / service discharged by them.
02. The Officers and staff of following departments will not be requisitioned for deployment of election duty.
Senior Officers of the Indian Forest Service as notified by ECI
Doctors and Compounders working in veterinary Hospitals election duty
Medical staff including Doctors, Nurses, ANMs etc. (except on health related)
Territorial staff of Forest Department
Staff and All india Radio Department
Ayurvedic, Unani and Homeopathic Medical Officer of Ayush Dept (Except on health)
Officers of Rure!brangh of commercial bank if it is a single officer branch Operational Officers /Staff of ÜPSC
03 However, it is further to be noted that any official due to retire within 6 months time or who has already retired but is on extension of service or re-employed should not be drafted for any election related duty.
04. All pregnant women and lactating mothers, whether on maternity leave or not or women staff who are otherwise on medical advice not to undertake any rigorous or hazardous work, may be exempted from election duty.
05. Physically challenged persons with disabilities as defined under the "Persons with Disabilities (Equal Opportunities Protection of Rights and Full Participation) Act 2016 should be deployed on election duty only under unavoidable circumstances,.In the case of physically handicapped persons (including visually handicapped and deaf and dumb persons) it may be considered whether any handicapped person as aforesaid would be able to go to the Polling station / Counting centre and perform election duties there If any person would not be a position to perform election duties. He must be exempted subject to the satisfaction of the District Election Officer / Returning Officer.
05. "மாற்றுத்திறனாளிகள் (சம வாய்ப்புகள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 2016 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, உடல் ஊனமுற்ற நபர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். உடல் ஊனமுற்ற நபர்களின் விஷயத்தில் (பார்வை குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் உட்பட) மேற்கூறிய எந்தவொரு மாற்றுத்திறனாளியும் வாக்குச்சாவடி / வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்று அங்கு தேர்தல் பணிகளைச் செய்ய முடியுமா என்பது பரிசீலிக்கப்படலாம், யாராவது தேர்தல் பணிகளைச் செய்ய முடியாத நிலையில் இருந்தால். மாவட்ட தேர்தல் அதிகாரி / தேர்தல் அதிகாரியின் திருப்திக்கு உட்பட்டு அவருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு - சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி
"ஆசிரியர்களை நாங்கள் பாதுகாக்காமல் வேறு யாரு பாதுகாப்பார்கள்..?" சட்டம் அமல்படுத்திய பிறகு தான் பொருந்தும். ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் TET தேர்வு எழுத வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து அமைச்சர் அன்பில் விளக்கம்
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
ரயில்களில் பொது டிக்கெட் முன்பதிவு - ஆதார் கட்டாயம்
ரயில் டிக்கெட் முன்பதிவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது
பொது டிக்கெட் முன்பதிவில் முதல் 15 நிமிடங்களில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் - ரயில்வே
மாணவர் தரநிலை அறிக்கை 2025-2026 Student Rank Report Card 2025-2026 >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்