கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Best Toys Details for Children



 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அவற்றின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும். வயது வாரியாக சிறந்த பொம்மை வகைகளை கீழே காணலாம்.


Best Toys Details for Children 


1. 0 - 2 வயது வரை (தவழும் மற்றும் ஆரம்பக் கல்வி)

இந்த வயதில் குழந்தைகள் கைகளால் தொட்டுணரக்கூடிய மற்றும் சத்தம் எழுப்பக்கூடிய பொம்மைகளை விரும்புவார்கள்.

  • கிலுகிலுப்பைகள் (Rattles): குழந்தைகளின் கேட்கும் திறன் மற்றும் கைகளை அசைக்கும் திறனை வளர்க்கும். https://amzn.to/4qKWjhh

  • வடிவங்களை அடுக்கும் பிளாக்குகள் (Stacking Rings/Blocks): நிறங்கள் மற்றும் அளவுகளைப் புரிந்துகொள்ள உதவும். https://amzn.to/4jyb6JP அல்லது https://amzn.to/4puztcQ

  • துணிப் புத்தகங்கள் மற்றும் மென்மையான பொம்மைகள் (Soft Toys): குழந்தைகளின் தொடு உணர்வை மேம்படுத்த பாதுகாப்பான தேர்வாகும். https://amzn.to/4pAH35U

  • நடைவண்டி (Wooden Push Walker): குழந்தைகள் நடக்கப் பழகும்போது சமநிலையை (Balance) பராமரிக்க உதவும். https://amzn.to/3Nb0yo6


2. 2 - 3 வயது வரை (பேச்சு மற்றும் கற்பனைத் திறன்)

இந்த வயதில் குழந்தைகள் மொழியைக் கற்கத் தொடங்குவார்கள் மற்றும் எதையாவது கற்பனை செய்து விளையாடுவார்கள்.

  • தமிழ் மற்றும் ஆங்கில எழுத்து பலகைகள் (Alphabet Boards): 

  • குறிப்பாக தமிழ் உயிரெழுத்துக்கள் கொண்ட சுழலும் பிளாக்குகள் (FLYI 3-in-1 Tamil Learning Shelf) மொழியைக் கற்கச் சிறந்தவை. https://amzn.to/3NBqfOB

  • கிச்சன் செட் (Kitchen Playsets): மற்றவர்களைப் பார்த்து அப்படியே செய்து பார்க்கும் 'ரோல் பிளே' (Role Play) விளையாட்டுக்கள் சமூகத் திறனை வளர்க்கும். https://amzn.to/4qLhMH4

  • வண்ணக் குச்சிகள் (Crayons): நச்சுத்தன்மையற்ற (Non-toxic) கிரயான்ஸ் மூலம் கிறுக்குவது குழந்தைகளின் கைத் தசைகளை வலுப்படுத்தும். https://amzn.to/3LDb8DO


3. 3 - 5 வயது வரை (சிந்தனை மற்றும் அறிவுத் திறன்)

பள்ளிக்குச் செல்லும் வயது என்பதால், யோசித்து விளையாடும் பொம்மைகள் அவசியம்.

  • புதிர்கள் (Puzzles): விலங்குகள், பழங்கள் அல்லது இந்திய வரைபடம் போன்ற புதிர்கள் மூளை வளர்ச்சிக்கு மிகச் சிறந்தவை. https://amzn.to/3NlF1Jg

  • களிமண் கலை (Clay Modeling): களிமண் கொண்டு உருவங்கள் செய்வது குழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்கும். https://amzn.to/49vvyXg

  • லெகோ மற்றும் பில்டிங் பிளாக்குகள் (Building Blocks): கற்பனைக்கு ஏற்ப வீடுகள் அல்லது பாலங்கள் கட்டுவது பொறியியல் சார்ந்த சிந்தனையைத் தூண்டும். https://amzn.to/3Z4qEM5

  • மியூசிக்கல் டிரம்ஸ் (Drum Sets): இசையில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு லயத்தைக் கற்றுக்கொள்ள உதவும். https://amzn.to/3NefK3N


பொம்மைகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:

  1. பாதுகாப்பு: சிறிய துகள்கள் உள்ள பொம்மைகளைத் தவிர்க்கவும் (விழுங்கும் அபாயம் உள்ளது).

  2. பொருள்: முடிந்தவரை மரத்தினால் ஆன (Wooden Toys) அல்லது பிபிஏ (BPA-free) இல்லாத பிளாஸ்டிக் பொம்மைகளைத் தேர்வு செய்யவும்.

  3. சுத்தம்: துவைக்கக்கூடிய அல்லது எளிதில் துடைக்கக்கூடிய பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பது சுகாதாரமானது.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-01-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-01-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 09.01.2026

கிழமை:- வெள்ளி


 

திருக்குறள்: 


பால்:- அறத்துப்பால்

இயல்:- துறவறவியல்

அதிகாரம்:- கொல்லாமை



*குறள் 323:*


ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 

பின்சாரப் பொய்யாமை நன்று. 


*விளக்க உரை:*


இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.


*பழமொழி :*


Questions are the seeds of knowledge. 


கேள்விகளே அறிவின் விதைகள்.


*இரண்டொழுக்க பண்புகள் :*



1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.


2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.


*பொன்மொழி :*


என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை . என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


*பொது அறிவு :* 


01.நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது? 



  ஜாம்ஷெட்பூர் -Jamshedpur


02.தங்கப் போர்வை நாடு" (Golden Fleece)எனப்படுவது  எது?


ஆஸ்திரேலியா -Australia


*English words :*


Slammed-banged 


generous -noble


*தமிழ் இலக்கணம்:* 


இன்று 500 ஐ எப்படி எழுதுவது என்று பார்ப்போம்

1. ஐநூறு ரூபாய் எனக்கு கிடைத்தது

2. ஐந்நூறு ரூபாய் எனக்கு கிடைத்தது

இதை பிரித்து எழுதுவோம்.

ஐநூறு = ஐ+ நூறு 

ஐந்நூறு = ஐந்து + நூறு 


 ஐந்நூறு ரூபாய் எனக்கு கிடைத்தது என்பதே சரி


*அறிவியல் களஞ்சியம் :*


 நீங்கள் சுழற்றிக்கொண்டே ஒரு பந்தை கைவிடும்போது, பலத்த காற்று வீசும் பட்சத்தில் அது பறந்து போகும் என்கிறது அறிவியல். இதை மேக்னஸ் விளைவு என்று அழைகிறார்கள். இந்த விளைவு தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து விளையாட்டை ஒரு தந்திரமான மற்றும் எளிமையான விளையாட்டாக மாற்றுகிறது.


*ஜனவரி 09*


*NRI Day - வெளிநாடுவாழ் இந்தியர் நாள்*



வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.


*நீதிக்கதை*


 *உயிரைக் காத்த உண்மை*


நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தன. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக் கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவசாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங்களை வைத்தான். ஒரு நாள் நரி, ஓநாய், முயல் மூன்றும் விவசாயி வைத்த பந்தயங்களில் மாட்டிக் கொண்டன. 


அவற்றைப் பிடித்த விவசாயி முதலில் முயலிடம் என் தோட்டத்திற்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான். அதற்கு முயல் முள்ளங்கி இலைகளைச் சாப்பிட வந்தேன். பசியினால் தான் இந்தத் தவறைச் செய்து விட்டேன். இனி ஒருபோதும் இங்கே வரமாட்டேன். என்னை மன்னித்துவிடு என்று உண்மையைக் கூறியது. அடுத்தது நரியிடம் கேட்டான். அதற்கு நரி முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்துவிடக்கூடாது என்று எண்ணித் தான் வந்ததாகக் கூறியது. 


அதற்கு அடுத்தபடியாக ஓநாயிடம் கேட்டான். அதற்கு அந்த ஓநாய் நீ திருடி வைத்துள்ள எங்களுக்கு உணவாக வேண்டிய ஆட்டுக்குட்டிகளை உண்ண வந்தேன் என்று ஆணவத்துடன் கூறியது. மூன்றையும் விசாரித்த விவசாயி தன் தவறை ஒப்புக்கொண்ட முயலை மட்டும் விடுவித்து நரியையும், ஓநாயையும் கொன்றான். 


நீதி :


உண்மை நிச்சயம் வெல்லும்


*இன்றைய செய்திகள்*


09.01.2026


⭐ பொதுமக்களின் வசதிக்காகவும், குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பொது மற்றும் ஏசி இல்லாத ரயில் பெட்டிகளின் உற்பத்தியை அடுத்த 2 ஆண்டுகளில் 9640 பொது மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளைத் தயாரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.


⭐சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும்  பொருட்களால் புகை மண்டலம் ஏற்படுகிறது. மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.  எனவே புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்.


⭐பிலிப்பின்ஸ் நாட்டிலுள்ள மாயோன் எரிமலையின் உச்சியிலிருந்து அவ்வப்போது பாறைகள் சரிந்து விழுவதால் அப்பகுதியில் வசிக்கும் 729 குடும்பங்களைச் சேர்ந்த 2,800-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருதை வென்றார். ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


*Today's Headlines*


⭐The Government of India plans to manufacture 9640 general and non-AC coaches in the next 2 years. Additionally, the production of public and non-AC train coaches aims to provide convenience to the public and ensure safe travel at affordable fares.


⭐In Chennai city, the burning of materials on Bhogi day creates a thick cloud of smoke. This causes health problems such as breathing difficulties and eye irritation for the general public. Therefore, the Tamil Nadu Pollution Control Board appeals to the public to celebrate a smoke-free Bhogi festival.


⭐More than 2,800 people from 729 families living in the area are being evacuated due to occasional rock falls from the summit of the Mayon volcano in the Philippines.


 *SPORTS NEWS*


🏀The 5th and final Ashes Test match between Australia and England was held in Sydney. Starc won the Man of the Series award for his outstanding performance in the Ashes Test series, and Starc took 5 wickets.



>>> சிறந்த ட்ரிம்மர்களின் (Trimmers) பட்டியல்...



எரிவாயு சிலிண்டர் மானியத்தை தடையின்றி பெற e-KYC செயல்முறை



எரிவாயு சிலிண்டர் மானியத்தை தடையின்றி பெற e-KYC செயல்முறை


எரிவாயு சிலிண்டர் பயனர்கள், தங்களுக்கு வரும் மானியத்தை தடையின்றி பெறுவதை உறுதி செய்ய e-KYC செயல்முறையை முடிக்க வேண்டியது அவசியம். எண்ணெய் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டிற்கு மார்ச் 31ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது. இந்த தேதிக்குள் e-KYC செயல்முறையை முடிக்கவில்லை என்றால், பயனர்கள் மானியம் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.



👉மத்திய அரசு ஒரு வருடத்தில் அதிகபட்சம் ஒன்பது சிலிண்டர்கள் வரை மட்டுமே மானியத்தை வழங்குகிறது. இந்த தொகையை விட அதிகமாக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முழுமையாக செலுத்த வேண்டும். இருப்பினும், இந்த மானியம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்க, அவர்களின் கணக்குகள் செயலில் இருக்க வேண்டும். முறையான சரிபார்ப்பு இல்லையென்றால், நிதி வெளியீடு நிறுத்தப்படலாம்.



>>> சிறந்த ட்ரிம்மர்களின் (Trimmers) பட்டியல்...



அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களே விழித்துக் கொள்ளுங்கள்

 


அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களே விழித்துக் கொள்ளுங்கள்! - அன்புமணி ராமதாஸ் 


திமுக அரசு அறிவித்திருக்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சவலைக் குழந்தையாக இருக்கிறது என்றும், திமுக அரசை நம்பிய அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் அரசு ஊழியர்கள்  சங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. அரசு ஊழியர்களுக்கு இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனையை செய்து விட்டதாக திமுக அரசு பொய்யளந்த நிலையில், ஆட்சியாளர்களின் மோசடி 3 நாளில் அம்பலமாகியுள்ளது.


தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியும் குரல் கொடுத்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை  வலியுறுத்தி கடந்த 6&ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தினர். கடந்த காலங்களில் இத்தகைய வேலைநிறுத்த அறிவிப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருந்த திமுக அரசு, இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருப்பதால், கடந்த 2&ஆம் தேதி அரசு ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அதற்கு அடுத்த நாள் ஜனவரி 3&ஆம்  தேதி, அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.


தமிழக அரசின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, திமுக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் மோசடியானது என்பதையும், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை தவிர்ப்பதற்காகவே இந்த நாடகத்தை திமுக அரசு நடத்துவதையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். ஆனால், ஆட்சியாளர்களோ, ஒவ்வொரு அரசு ஊழியர் அமைப்பிலும் உள்ள திமுக ஆதரவு நிர்வாகிகள் மூலம் சங்க நிர்வாகிகளை கோட்டைக்கு அழைத்துச் சென்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கச் செய்ததுடன், எந்தவித ஆலோசனையும் நடத்தாமல்   6&ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாகவும் அறிவிக்கச் செய்தனர். அரசு ஊழியர்களை ஏமாற்றுவதற்கான இந்த மோசடி நாடகத்தில் திமுக அரசுக்கு தற்காலிக வெற்றி கிடைத்தது.


ஆனாலும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு மோசடி என்பதை அது அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே அரசு ஊழியர் அமைப்புகள் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன. சென்னையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விவாதித்த தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை சவலைக் குழந்தை என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ள அச்சங்கம்,‘‘ஓய்வூதியத்திற்காக ஊதியத்தில் 10% தொகை பிடிப்பதை கைவிட வேண்டும்; இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகையை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பதைப் போல பொது வருங்கால வைப்பு நிதியாக (ஜி.பி.எஃப்) மாற்ற வேண்டும்; பொது வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெற அனுமதிக்க வேண்டும்; ஓய்வு பெறும் போது அந்த நிதியை வட்டியுடன் வழங்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட அம்சங்களை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று திமுக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.


அதேபோல், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகமும் திமுக அரசின் ஓய்வூதியத் திட்டத்தை கடுமையாக  விமர்சித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் அறி\முகம் செய்யப்பட்ட பிறகு கடந்த 23 ஆண்டுகளில் ஒவ்வொரு பேராசிரியரிடமிருந்தும் ரூ. 1 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தத் தொகையை பங்களிப்பு என்ற பெயரில் அரசே வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள பேராசிரியர்கள், அந்தத்  தொகையை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். ஒருவேளை பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பத் தர அரசு மறுத்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக திமுக அரசுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


திமுக அரசு அறிமுகம் செய்துள்ள ஓய்வூதியத் திட்டம் குறித்து 3 நாள்களுக்கு முன் நான் என்னென்ன குற்றச்சாட்டுகளையெல்லாம் முன்வைத்தேனோ, அவை அனைத்தும் உண்மை என்பதை அரசு ஊழியர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். திமுகவின் ஓய்வூதியத் திட்ட மோசடி பல்லிளிக்கத் தொடங்கி விட்டது.


இதையும் தாண்டி திமுக அரசின் ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்து விட்டாலும் கூட, அதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தேர்தலுக்கு முன்பாக இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரப்போவதில்லை. இந்தத் தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்குகளை ஏமாற்றி வாங்கி வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை திமுக அறிவித்துள்ளது. ஒருவேளை திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் கூட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வராது என்பது தான் உண்மை ஆகும்.






அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்தாலும், அது செயல்பாட்டுக்கு வரப்போவதில்லை. எனவே, எவரும் திமுக அரசை நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்களை ஏமாற்றிய திமுக அரசை வரும் தேர்தலில் வீழ்த்துங்கள். அதன் பிறகு அமையும் ஆட்சியில்  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்  திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.




>>> சிறந்த ட்ரிம்மர்களின் (Trimmers) பட்டியல்...




TAPS - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை



தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் TAPS குறித்து அறிக்கை


தமிழக அரசின் - ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு - திமுகவின் தேர்தல் கால வாக்குறுதிக்கு எதிர்மாறானது.


வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.


பழைய ஓய்வூதியத்  திட்டத்தின் முழுப் பயன் கிடைக்க வேண்டும்.


=============== #அறிக்கை =============


            தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாது ஏமாற்றம் அளித்துள்ளது. 


          திமுக 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண். 309 ல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம்.


         திமுக 2021 தேர்தல் அறிக்கையில் CPS (Contributory Pension Scheme) ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் OPS (Old Pension Scheme) திரும்பக் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்தது. 


           ஆனால், நான்கரை ஆண்டுகளுக்குப் பின் வெளியான TAPS (Tamil Nadu Assured Pension Scheme) ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10% பிடித்தம் செய்ய வேண்டும், அரசு மீதி பொறுப்பேற்கும் என்கிறது. 


           கடைசி சம்பளத்தின் 50% ஓய்வூதியம், DA உயர்வு, 25 லட்சம் பணிக்கொடை ஆகியவையெல்லாம் ஓரளவுக்கு பயன்தரக்கூடியது தான். ஆனால், உண்மையில் இது CPS-ன் சிறு மாற்றம் தான். தற்போது அறிவித்துள்ள தமிழ்நாடு உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் ஓய்வூதியத்திற்காக சந்தா பிடிக்கும் திட்டம். இத்திட்டம் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மறு வடிவமே. 


             பங்களிப்பு ஓய்வூதியம் என்பது பணத்தைப் பிடித்துக்கொண்டு அதற்கும் வட்டி தருகிறது. அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள். அதற்கும் வட்டி தருகிறார்கள். அனைத்தையும் அதாவது முதலீட்டு பணத்தை தருவதாக அமைகிறது. ஆனால் TAPS தராது. 


             இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உத்திரவாத ஓய்வூதியத்தால், பழைய ஓய்வுதியத் திட்டத்தின் முழுப் பயன் கிடைக்காது என்கின்றனர். 


           தமிழ்நாடு அரசின் - புதிய - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட (TAPS) அறிவிப்பு, 2003 முதல் CPS-இல் சிக்கிய லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல். 


             மேலும்  போராட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்கான வேலைகள் தான் இவை. 

தமிழக அரசு அறிவித்த ஓய்வூதியத்தில் தொகுத்துப் பெறும் வாய்ப்பு இல்லை. 


           தமிழ்நாடு அரசின் உத்திரவாத ஓய்வூதியத் திட்டத்திற்கு CPS ஒழிப்பு இயக்கத்தினர் உட்பட மற்ற அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். 


            தேர்தல் நெருங்கும் போது ஏமாற்று அறிவிப்பு வெளியிட்டு ஆசிரியர்களை, அரசு ஊழியர்களை நம்ப வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


             எனவே தமிழக அரசு சுமார் 6 ½ லட்சம் ஆசிரியர்களையும் மற்றும் அரசு ஊழியர்களையும், தேர்தல் கால வாக்குறுதியையும் கவனத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில்  கேட்டுக் கொள்கிறேன்.



>>> சிறந்த ட்ரிம்மர்களின் (Trimmers) பட்டியல்...



TAPS Viral Memes

 


தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து வைரலாகும் மீம்ஸ்


TAPS Tamilnadu Assured Pension Scheme Viral Memes 


நான் உங்கிட்ட என்ன கேட்டேன்?.


பழைய பென்ஷன் வாங்கிட்டு வரச்சொல்லி கேட்டீங்க.


அரசாங்கத்துகிட்ட போய் கேட்டீங்களா??


கேட்டேனே!!


அரசாங்கம் பென்ஷன் கொடுத்துச்சா?


பென்ஷன் கொடுத்துச்சே!!


நீங்க வாங்கிட்டு வந்த பென்ஷன் இங்கே இருக்கு.


நான் கட்டிய பணம் எங்கே இருக்கு??


அதுதாண்ணே இது!!



>>> சிறந்த ட்ரிம்மர்களின் (Trimmers) பட்டியல்...



Best Trimmers Details

 


2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, சந்தையில் கிடைக்கும் சிறந்த ட்ரிம்மர்களின் (Trimmers) பட்டியல் இதோ. உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைக்கு ஏற்ப சிறந்ததை நீங்கள் தேர்வு செய்யலாம்:


1. சிறந்த பட்ஜெட் ட்ரிம்மர்கள் (₹1,000-க்கு கீழ்)

குறைந்த விலையில் நீண்ட காலம் உழைக்கக்கூடிய ட்ரிம்மர்கள்:

  • Mi Beard Trimmer 2C: இதன் பேட்டரி 90 நிமிடங்கள் வரை உழைக்கும். இதில் 40 வகையான லெந்த் செட்டிங்ஸ் (Length Settings) உள்ளன. டைப்-சி (Type-C) சார்ஜிங் வசதி இதற்கு கூடுதல் பலம். https://amzn.to/452iTdb


  • Philips BT1232/15: பிலிப்ஸ் பிராண்டில் மலிவான மற்றும் தரமான மாடல். இது ஸ்கின்-ப்ரெண்ட்லி பிளேடுகளைக் கொண்டது. https://amzn.to/3LxTykC


  • Nova NHT 1073: மிகவும் குறைந்த விலையில் நல்ல பெர்ஃபார்மன்ஸ் தேடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வு. https://amzn.to/3Z4w9KE


2. நடுத்தர பட்ஜெட் (₹1,000 - ₹2,000)

சிறந்த தரம் மற்றும் கூடுதல் வசதிகள் கொண்டவை:

  • Philips BT3241/15: இது 'Lift & Trim' தொழில்நுட்பம் கொண்டது, இது தாடியை சீராக வெட்ட உதவும். 90 நிமிடம் பேட்டரி பேக்கப் மற்றும் விரைவான சார்ஜிங் (Fast Charging) வசதி கொண்டது. https://amzn.to/4qcweYJ


  • Xiaomi Beard Trimmer 2: முழுமையான வாட்டர் புரூப் (IPX7) வசதி கொண்டது, எனவே தண்ணீரில் கழுவி பயன்படுத்தலாம். https://amzn.to/45L6gmT


  • Havells BT6111: அழகான டிசைன் மற்றும் பிடியில் வசதியாக இருக்கும். https://amzn.to/49aNuHU


3. ஆல்-இன்-ஒன் (Grooming Kits)

முகம், உடல் மற்றும் மூக்கு முடிகளை அகற்ற:

  • Philips MG7715/15 (13-in-1): தலை முடி முதல் கால் வரை அனைத்திற்கும் ஒரே கருவி. இதில் பல வகையான அட்டாச்மென்ட்கள் உள்ளன. https://amzn.to/3N3RMIB


  • Bombay Shaving Company Power Play: மல்டி-பர்ப்பஸ் பயன்பாட்டிற்கு இது ஒரு சிறந்த இந்திய பிராண்ட் தேர்வாகும். விலை ரூ.700....  https://amzn.to/4psFBlK




நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:

அம்சம்விளக்கம்
பிளேடு (Blades)துருப்பிடிக்காத ஸ்டீல் (Stainless Steel) அல்லது டைட்டானியம் பிளேடுகளைத் தேர்வு செய்யவும்.
சார்ஜிங் (Charging)இப்போது வரும் மாடல்களில் Type-C சார்ஜிங் இருப்பது மிகவும் வசதியானது.
பயன்பாட்டு நேரம்ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தது 60-90 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்க வேண்டும்.

LIC Customer Login Website Link

 


இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன வாடிக்கையாளர் உள்நுழைவு வலைதள முகவரி இணைப்பு 


LIC Customer Login Website Link


https://ebiz.licindia.in/D2CPM/#MLogin



>>> சிறந்த ட்ரிம்மர்களின் (Trimmers) பட்டியல்...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-01-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-01-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 08.01.2026

கிழமை:- வியாழன்


 

திருக்குறள்: 

பால்:- அறத்துப்பால்

இயல்:- துறவறவியல்

அதிகாரம்:- வாய்மை



*குறள் 296:*


பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.               



 *விளக்க உரை:*


ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.


*பழமொழி :*


Every sunrise brings a new chance.   


ஒவ்வொரு சூரியோதயமும்  இன்னொரு வாய்ப்பை  தருகின்றது.


*இரண்டொழுக்க பண்புகள் :*



1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.


2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.


*பொன்மொழி :*


நேற்று என்பது முடிந்துவிட்டது. நாளை என்பது இன்னும் வரவேயில்லை. நம்மிடம் இருப்பது இன்று மட்டுமே. நற்செயல்களை இப்போதே தொடங்குவோம்.- அன்னை தெரசா


*பொது அறிவு :*


"01.நவீன அறிவியலின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்?


         கலிலியோ கலிலி 


 Galileo Galilei 


02.தமிழ்நாட்டில் முத்து தொழில் அல்லது முத்துக் குளித்தல் அதிகம் நடைபெறும் இடம் எது?


      தூத்துக்குடி  Thoothukudi 


*English words :*


Meticulous – showing great attention to detail.ஒவ்வொரு விவரத்திலும் மிகுந்த கவனத்துடன் இருத்தல்



Articulate – Fluent or persuasive in speaking or writing. தெளிவாக உச்சரித்தல் அல்லது எழுதுதல்


*தமிழ் இலக்கணம்:*


 இன்று 400 எப்படி எழுத வேண்டும் என்று பார்ப்போம்

1. உனக்கு *_நானூறு_* ரூபாய் கொடுத்தேன்

2. உனக்கு *_நாநூறு_* ரூபாய் கொடுத்தேன்

 ‌ இதில் எது சரி?

பிரித்து எழுதி பார்ப்போம் 

நானூறு‌‌ –நான்கு + நூறு 

 

நாநூறு – நான்+ நூறு 


உனக்கு *_நானூறு_* ரூபாய் கொடுத்தேன் என்பதே சரி


*அறிவியல் களஞ்சியம் :*


மனித மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வின் எண்ணிக்கை ஆனது சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகளும், சுமார் 25,000 மரபணுக்களும் (ஜீன்ஸ்) உள்ளன என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மனித உடலின் 10 டிரில்லியன் செல்களிலும் அந்த மரபணுவின் முழு நகல் காணப்படுகிறதாம், அந்த டி.என்.ஏ எல்லாவற்றையும் வரிசைப்படுத்தினால், அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தை விட 100 மடங்கு அதிகமாக நீளுமாம். 


*ஜனவரி 08*


*ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் அவர்களின் பிறந்த நாள்*



ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.


*நீதிக்கதை*


 *தாய் சொல் தட்டாதே*


ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக் காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும் அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது.


வளர்ந்த மரத்தில் காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.வீட்டுக்கார அம்மா நாள்தோறும் வைக்கும் சாதத்தை சாப்பிடுவதும் , வேப்பமரத்தில் வசிப்பதுமாக சந்தோசமாக வாழ்ந்தன காகங்கள்.


அந்த வீட்டில் வசிக்கும் அம்மா மரங்களிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்தியதே சந்தோசத்திற்கு காரணம்.இப்படி நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போது காக்கா சில முட்டைகளை இட்டது.அதை அடைகாத்து குஞ்சுகள் பொரித்தது.




குஞ்சுகளுக்கு தேவையான உணவை தாய் காகமும், தந்தை காகமும் எடுத்து ஊட்டி வளர்த்தது.குஞ்சுகளும் உணவுகளை உண்டு வளர ஆரம்பித்தது.இறக்கைகள் வளரத் தொடங்கின.அப்போது தாய் பறவை தன் குஞ்சுகளைப் பார்த்துக் கூறியது.


"உங்களுக்கு இறக்கைகள் வளர்ந்து விட்டது, என்று பறக்க முயற்சி செய்யாதீர்கள். இன்னும் வளர்ந்தால் தான் பறப்பதற்கு வேண்டிய ஆற்றல் உங்களுக்கு வரும். இப்போது பறக்க முயற்சி செய்து விழுந்து விட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்…….


எனவே , கூட்டை விட்டு வெளியில் வந்தாலும் பறக்க முயற்சிக்க வேண்டாம். கிளைகளில் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்றது தாய் காகம்." சரி" என குஞ்சுகள் கேட்டுக்கொண்டன.சில நாட்கள் சென்ற பின்………..


ஒரு நாள் ஒரு ஒரு குஞ்சு மட்டும் கூட்டில் இருந்து வெளியில் வந்து கிளைகளில் அமர்ந்து கொண்டு வெளி உலகைப் பார்த்துக் கொண்டு இருந்தது.


வானில் பறக்கும் பறவைகளை எல்லாம் பார்த்த குஞ்சு காகம் தானும் பறக்க முயற்சித்தது .கிளைகளில் தாவித்….தாவி. பறக்க முயற்சி செய்தது.அதை கவனித்த மற்றொரு குஞ்சும் வெளியில் வந்தது.தானும் தாவித்…தாவி…. பறக்க முயற்சி செய்தது.


இறக்கைகள் சரியாக வளராத நிலையில் இருந்த அந்த குஞ்சு காகம் தடுமாறி கீழே விழுந்தது .மேலே பறக்க முடியாமல் தன் தாயை கா..கா… என அழைத்த வண்ணம் இருந்தது.


தன குஞ்சுவின் குரல் கேட்டு பறந்து வந்த தாய் காகமும் தந்தை காகமும் கரைந்து கொண்டே இருந்தன.பக்கத்தில் வசித்த காகங்கள் எல்லாம் கூட்டமாக வந்து விட்டன .குஞ்சு காகத்தால் பறக்க முடியவில்லை.


இதைக் கவனித்த அந்த வீட்டு அம்மா குஞ்சு காகத்தை தூக்கி கிளையில் வைத்தார்கள். தனது கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொண்டது குஞ்சு காகம்.


தாய் காகம் மறுபடியும் புத்தி சொன்னது,."இன்னும் உங்களுக்கு பறக்கும் அளவிற்கு இறக்கைகள் வளரவில்லை, பறக்க முயற்சிக்காதீர்கள்."என மீண்டும் எச்சரித்தது காகம்.


"சரி" என கேட்டுக்கொண்ட குஞ்சுகள் மறுநாள் தாய் காகம் வெளியில் போன சமயம் பார்த்து கிளையில் வந்து அமர்ந்து கொண்டன.பறவைகள் பறப்பதை பார்த்த குஞ்சு காகம், நான் இன்று நன்றாக பறந்து விடுவேன்’என்றது.


‘வேண்டாம்’ என்றது மற்ற குஞ்சுகள்.’நேற்று நீ பிழைத்ததே இந்த வீட்டுக்கார அம்மா உன்னை எடுத்து இங்கு விட்டதால்தான் ,நம் அம்மா காகம் நம்மை எச்சரித்ததை மறந்து விட்டாயா?


"தாய் சொல் தட்டவேண்டாம் "அவர்கள் நமது நன்மைக்காகத்தான் சொல்வார்கள் .,என்றது மற்றொரு குஞ்சு.


இதை எல்லாம் கேட்காத குஞ்சு காகம் இறக்கையை அடித்து பறந்தது.அடுத்த நிமிடமே தரையில் வந்து விழுந்தது.மேலே மேலே பறக்க முடியாமல் தாவித்தாவிச் சென்று…கழிவு நீரில் விழுந்து விட்டது.


இறக்கைகள் எல்லாம் நனைந்த நிலையில் தாவிச் செல்லவும் முடியாமல் ,பறக்கவும் முடியாமல் தவித்தது.


தாய் காகமும், மற்ற காகங்களும் கா…கா…என கத்தி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்தில் குஞ்சு காகம் கழிவு நீரில் தன் உயிரை விட்டது.




அதைப் பார்த்த மற்ற குஞ்சுகள் கண்ணீர் விட்டன. "தாய் சொல்லைக் கேட்ட" குஞ்சுகள் கூட்டில் பத்திரமாக இருந்தன.


*இன்றைய செய்திகள்*


08.01.2026



⭐டெல்லியில் காற்று மாசினை தடுக்க தவறியதற்காக காற்றுதர மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


⭐ 150.18 மில்லியன் டன் அரிசி உற்பத்தியுடன் இந்தியா, நமது அண்டை நாடான சீனாவை விஞ்சி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.


⭐பி.எஸ்.எல்.வி-சி 62 ராக்கெட் 12-ந் தேதி விண்ணில் பாய்கிறது.

ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀இங்கிலாந்து மற்றும வேல்ஸில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஏற்கனவே 6 அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. 4 அணிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன.


*Today's Headlines*


⭐The Supreme Court has slammed the Air Quality Management Authority for failing to curb air pollution in Delhi.


⭐ India has emerged as the world's largest rice producer, surpassing our neighboring country China, with a rice production of 150.18 million tonnes.


⭐PSLV-C62 rocket to launch on 12th. 17 satellites of research institutes are also planned to be launched by the rocket. 


 *SPORTS NEWS*


🏀The Women's T20 Cricket World Cup is set to be held in England and Wales. 10 teams will participate in this series and will compete in a series of matches, also 6 teams have already qualified. 4 teams are yet to be selected.



>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த இயர்பட்ஸ்...


Best Earbuds in January 2026



Best Earbuds in January 2026


 2026-ஆம் ஆண்டின் தற்போதைய நிலவரப்படி, சந்தையில் கிடைக்கும் சிறந்த இயர்பட்ஸ் (Earbuds) எவை என்பதை பட்ஜெட் வாரியாக கீழே காணலாம்.


1. சிறந்த பட்ஜெட் இயர்பட்ஸ் (₹2,500-க்குள்)

குறைந்த விலையில் நல்ல தரம் தேடுபவர்களுக்கு இவை சிறந்த தேர்வுகள்:

  • OnePlus Nord Buds 3: இதில் 32dB வரை Active Noise Cancellation (ANC) வசதி உள்ளது. 43 மணிநேர பேட்டரி பேக்கப் மற்றும் துல்லியமான பேஸ் (Bass) கொண்ட சிறந்த ஆல்-ரவுண்டர். https://amzn.to/3NjbD6p


  • CMF Buds 2A (by Nothing): தனித்துவமான டிசைன் மற்றும் மிகச்சிறந்த ஆடியோ ஆப் (Nothing X App) வசதி கொண்டது. https://amzn.to/4qmXLqk


  • Realme Buds T310: 45ms வரை மிகக் குறைந்த லேட்டன்சி (Low Latency) கொண்டிருப்பதால் கேமிங்கிற்கு (Gaming) இது மிகவும் ஏற்றது. https://amzn.to/49wcZSR



2. நடுத்தர பட்ஜெட் இயர்பட்ஸ் (₹3,000 - ₹7,000-க்குள்)

கொஞ்சம் கூடுதல் வசதிகள் மற்றும் சிறப்பான சத்தம் எதிர்பார்ப்பவர்களுக்கு:

  • Samsung Galaxy Buds Core: சுமார் ₹3,000 விலையில் Samsung பிராண்டின் நம்பகத்தன்மை, Galaxy AI வசதிகள் மற்றும் நல்ல ANC தரத்துடன் கிடைக்கிறது. https://amzn.to/3YOiUhn


  • Realme Buds Air 7 Pro: இதில் 53dB வரை சக்திவாய்ந்த Noise Cancellation மற்றும் Dual-DAC சிஸ்டம் உள்ளது. இது மியூசிக் பிரியர்களுக்கு (Audiophiles) ஒரு வரப்பிரசாதம். https://amzn.to/4qa1O9o


  • OnePlus Buds 4: மேம்படுத்தப்பட்ட நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் நீண்ட நேர பேட்டரி ஆயுள் கொண்டது. https://amzn.to/49Jl5J3



3. பிரீமியம் இயர்பட்ஸ் (High-End)

மிகச்சிறந்த தரம் மற்றும் தொழில்நுட்பம் வேண்டுமானால்:

  • Apple AirPods Pro 3: ஆப்பிள் பயனர்களுக்கு இதுவே சிறந்த தேர்வு. இதில் புதிதாக 'Heart Rate Monitor' மற்றும் 'Live Translation' போன்ற அதிநவீன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. https://amzn.to/499jYlO


  • Sony WF-1000XM5: ஆடியோ தரத்தில் சமரசமே செய்யாத இயர்பட்ஸ். மிகச்சிறந்த ஆடியோ கோடெக் (LDAC) மற்றும் தெளிவான கால் (Call) குவாலிட்டி கொண்டது. https://amzn.to/4506d6q


  • Bose QuietComfort Ultra Earbuds (2nd Gen): உலகிலேயே மிகச்சிறந்த 'Noise Cancellation' அனுபவத்தைப் பெற விரும்பினால், கண்ணை மூடிக்கொண்டு இதைத் தேர்வு செய்யலாம். https://amzn.to/4aPd7ze




ஒரு சுருக்கமான ஒப்பீடு:

அம்சம்சிறந்த தேர்வு
குறைந்த விலை (Best Budget)OnePlus Nord Buds 3

https://amzn.to/3NjbD6p

கேமிங் (Best Gaming)Realme Buds T310

https://amzn.to/49wcZSR

நாய்ஸ் கேன்சலேஷன் (Best ANC)Bose QuietComfort Ultra 2nd Gen

https://amzn.to/4aPd7ze

ஐபோன் பயனர்களுக்குAirPods Pro 3

https://amzn.to/499jYlO



உங்களுக்கு எந்த விலையில் (Budget) அல்லது எந்த பயன்பாட்டிற்காக (Music, Calling, or Gaming) இயர்பட்ஸ் தேவை என்பதற்கேற்ப தேர்வு செய்யலாம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Best Toys Details for Children

 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அவற்றின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் விதத்தி...