கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pledge to eradicate untouchability

 

 

இன்று (30-01-2026) காலை 11 மணிக்கு மேற்கொள்ள வேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Pledge to be taken today (30-01-2026) at 11 am - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-01-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-01-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 30.01.2026

கிழமை:- வெள்ளி


 

திருக்குறள்: 


குறள் 373:

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

விளக்க உரை:

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.


பழமொழி :
Self control is the strongest power.

தன்னடக்கம் தான் மிகப் பெரிய சக்தி.


இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.


பொன்மொழி :

சகிப்புத் தன்மையால் தான் மகான்கள் நிம்மதிப் பெறுகின்றனர்.துன்பம் வரும் காலத்தில் அமைதியாக இருக்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...

-------மார்க் ட்வைன்


பொது அறிவு :

1.பணத்திற்கு ரூப்யா' (Rupya) என்று பெயர் சூட்டியவர் யார்?

ஷெர்ஷா சூரி- Sher Shah Suri

02. இந்தியாவின் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் யார்?

திரு.ச. பொ. ராதாகிருஷ்ணன்
Thiru.C. P. Radhakrishnan


English words :

overwrought-very worried

inception-beginning of something



தமிழ் இலக்கணம்:

ஒருமை பன்மை குறித்து இன்று பார்ப்போம்
பேருந்து இதை பன்மையாக மாற்றும் போது பேருந்துகள் என்றும்  புறா இதை பன்மையாக மாற்றும் போது புறாக்கள் என்றும் எழுதுகிறோம். ஏன் புறா புறாக்களாக வல்லினம் மிகுந்து வருகிறது? ஒரு எழுத்து நெடிலில்  முடியும் போது அதை பன்மைக்கு மாற்றும் போது கள் விகுதி முன்னால் வல்லினம் மிகுந்து வரும்.
எ.கா –விழா –விழாக்கள்
பூ –பூக்கள்
கனா –கனாக்கள்
ஆ –ஆக்கள்



ஜனவரி 30

மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள்

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை"  என்று அழைக்கப்படுகிறார்  .   சத்தியாக்கிரகம்  என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.


நீதிக்கதை

வெட்டுக்கிளியும் ஆந்தையும்

ஒரு நாள் ஒரு ஆந்தை அங்குள்ள ஒரு மரத்தின் மரப்பொந்தில் தூங்கிக் கொண்டிருந்தது. கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் சத்தத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஆந்தை வெட்டுக்கிளியிடம் கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி கேட்டது. வெட்டுக்கிளி ஆந்தையைப் பார்த்து நீ ஒரு குருட்டு ஆந்தை. பகலில் வெளியே வராமல் இரவில் எல்லோரும் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய் நீ என்ன யோக்கியவானா என்று திட்டியது.

ஆந்தை தன்னுடையத் தந்திரத்தினால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று நினைத்து உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. அது இன்னும் தேவகானம் போல் ஒலிப்பதற்கு என்னிடம் ஒரு அமிர்தம் இருக்கிறது. அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும், உன் குரலும் அமிர்தமாய் மாறிவிடும். மேலே வந்தால் உனக்கு நான் தருகிறேன் என்றது. ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் பக்கத்தில் சென்றது. வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.

நீதி :

பிறருக்கு தொந்தரவு செய்தல் கூடாது.



இன்றைய செய்திகள்

30.01.2026

⭐சென்னையில் ரூ.822.70 கோடி செலவில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம்-முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

⭐SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.

⭐மோதலுக்கு அமெரிக்கா-ஈரான் தயாராகி வருகின்றன: மத்திய கிழக்கில் பதற்றம் நீடிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

🏀ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ரைபகினா முன்னேற்றம்.



Today's Headlines

⭐Chief Minister laid the foundation stone of the new integrated bus stand at Broadway-Chennai for Rs. 822.70 crore.

⭐ The Supreme Court has granted 10 more days to add names to the SIR voter list.

⭐Tensions continue to rise in the Middle East as the US and Iran prepare for conflict.

SPORTS NEWS

🏀The Australian Open tennis tournament, one of the Grand Slam tournaments, is being held in Melbourne.

🏀 Australian Open tennis: Rybakina advances to the final after defeating Pegula.




வருமான வரி (IT) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief)

 

நிதியாண்டு 2025-26 வருமான வரி (Income Tax) புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief)


₹12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான விளிம்புநிலை நிவாரணம் குறித்த விளக்கம்.



வரி விகிதங்கள் (New Tax Regime - FY 2025-2026):


₹0 - ₹4,00,000: வரி இல்லை (Nil).


₹4,00,001 - ₹8,00,000: 5% வரி (₹20,000 வரை).


₹8,00,001 - ₹12,00,000: 10% வரி (₹40,000 வரை).


₹12,00,001 - ₹16,00,000: 15% வரி.


₹12,00,000 வரையிலான மொத்த வரி ₹60,000 ஆகும்.



 விளிம்புநிலை நிவாரணம் என்றால் என்ன? 


வருமானம் ₹12,00,000-ஐ விடச் சிறிதளவு அதிகரிக்கும் போது, ஈட்டிய கூடுதல் வருமானத்தை விடச் செலுத்த வேண்டிய வரி அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.



 முக்கிய விதிகள்:


நிவாரண வரம்பு: ₹12,70,580 வரை வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணம் பொருந்தும்


அதிகபட்ச வருமானம்: ₹12,70,590 மற்றும் அதற்கு மேல் வருமானம் இருந்தால், விளிம்புநிலை நிவாரணம் கிடைக்காது.



 வருமான வரி கணக்கீடு உதாரணங்கள் (Marginal Relief-உடன்):


₹12,00,100 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹100 மட்டுமே (₹59,915 நிவாரணம்).



>>> Income Tax Calculation Statement 2025-2026 (PDF)...



IUML மாநாட்டில் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்



கும்பகோணம் IUML மாநாட்டில் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 


1. வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற உலமாக்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் ரூ.5000 ஆக உயர்வு.


2. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கக்கூடிய 10 உருது மொழி ஆசிரியர் காலிப் பணியிடம் நிரப்பப்படும்.


3. சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் வக்ஃப் வாரியம் அமைக்கப்படும்.


4. உலமாக்களில் முதல்கட்டமாக 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.50 ஆயிரம் ஆக உயர்வு


5. கல்லறைத் தோட்டம், கபரஸ்தான் தோட்டம் இல்லாத இடங்களில் அரசு நிலம் தேர்வு செய்து அமைக்கப்படும்.


முனைவர் பட்டம் பெற்றதை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்



முனைவர் பட்டம் பெற்றதை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்


PHYSICAL ACTIVITIES FOR SKILL DEVELOPMENT AMONG SCHOOL CHILDREN USING MACHINE LEARNING TECHNOLOGY என்ற தலைப்பில் ஆய்வினை நிறைவு செய்ததற்காக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட "முனைவர்" பட்ட சான்றிதழை என்னுடைய வாழ்வியலின் வழிகாட்டி - அரசியல் ஆசான் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் காண்பித்து, வாழ்த்துப் பெற்றுக்கொண்டேன்.



ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி - அமைச்சர் அவர்களின் பதிவு



ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் நலன்காக்கும் அரசாகச் செயல்படும் #திராவிடமாடல் அரசின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரசாணையாக,



பல லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் கனவுகளோடு காத்திருக்கும் தேர்வர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும்,


பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது.


இதன் மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நம் முதலமைச்சர் என்றுமே உறுதுணையாக இருப்பார் என்பதையும், இது சமூகநீதி காக்கும் அரசு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.


ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி!


Non Teaching Staffs to Art Master பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் விவரம்

 

01.01.2026 நிலவரப்படி Non Teaching Staffs to Art Master பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.4034/சி5/இ2/2026, நாள்: 20.01.2026


பொருள்: தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணி மாறுதல் வழங்குதல் 01.01.2026 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் விவரங்கள் கோருவது - சார்ந்து


பார்வை


1. அரசாணை(நிலை)எண் 283 பள்ளிக் கல்வித் (எம்1) துறை 03.11.2009.


2. அரசாணை (நிலை)எண் 76 பள்ளிக் கல்வித் (ப.க.3(1))துறை 10.04.2015.


3. தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகள் அரசாணை (நிலை) எண்.13 பள்ளிக்கல்வி (ப.சு.3(1))த் துறை, நாள்: 30.01.2020


4. அரசாணை (நிலை) எண்.20. மாற்றுத்திறனாளிகள் (DAP-32) நலத்துறை, நாள்: 20.06.2018


5. அரசாணை (நிலை) எண்.06, மாற்றுத்திறனாளிகள் (DAP-32) நலத்துறை, நாள்: 21.06.2025


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் 20% கலையாசிரியராக பணிநியமனம் வழங்க பார்வையில் காணும் அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரல்லாப் பணியாளர்களில் பதவி வாரியாக கீழ்க்காணுமாறு பணிமாறுதல் மூலம் பணிநியமனம் வழங்க பார்வை (3)இல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1. உதவியாளர்

4% சதவிதம்


2. இளநிலை உதவியாளர்

4% சதவிதம்


3. ஆய்வக உதவியாளர்

3% சதவிதம்


4. பதிவறை எழுத்தர்

2% சதவிதம்


5. அலுவலக உதவியாளர்

2% சதவிதம்


6. காவலர்

2% சதவிதம்


7. நூலகர்

3% சதவிதம்


மொத்தம்

20% சதவிதம்


மேலும், பார்வை 4 மற்றும் 5 இல் காணும் அரசாணையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 இன்படி பதவி உயர்வில் கீழ்க்காணும் விவரப்படி இட ஒதுக்கீடு (Reservation) வழங்கவும் வகைசெய்யப்பட்டுள்ளது.


DISABILITY       PERCENTAGE OF RESERVATION


a) Blindness and Low vision - 1%

b) Deaf and Hard of Hearing  - 1% 

c) Locomotor Disability including Cerebral palsy, Leprosy Cured, Dwarfism, Acid Attack victims and Muscular Dystrophy  - 1%

d) Autism, Intellectual Disability. Specific Learning Disability, mental illness.  &

e) Multiple disabilities from amongst persons under clauses (a) to (d) including deaf-blindness - 1%


மேற்குறித்த மாற்றுத்திறனாளி பிரிவினர் எவரும் கீழ்க்காணும் கல்வித் தகுதியினை பெற்றிருப்பின் அவர்கள் சார்பான விவரத்தினை படிவம் 2இல் பதிவு செய்து அதற்கான அத்தாட்சி சான்றின் நகலினை முதன்மைக்கல்வி அலுவலர் சான்றொப்பமிட்டு அனுப்பிவைக்க வேண்டும்.


பார்வை (3) காணும் அரசாணையில் கலையாசிரியருக்கான


கல்வித்தகுதிகள் கீழ்க்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


1. General Qualification:-


A Pass in +2 under 10+2 Pattem


2. Technical Quailfication


Degree with Drawing and Painting of a recognised University in the State approved by UGC or its equivalent or Diploma in Painting or Diploma in Drawing of Annamalai University or A Diploma in Paintings or Commercial Arts or Modelling of the Govemment College of Arts and Crafts or Government Technical Examinations (Higher Grade) in Free Hand Outline and Model Drawing or Government Diploma in Drawing or a Certificate issued by the Tamil Nadu Institute of Architecture and Sculpture, Mamallapuram; and Technical Teachers Certificate:


or


A Diploma in Fine Arts, awarded by the Director of Technical Education or a Degree in Fine Arts awarded by the Madras University or the Bharathiyar University or any other equivalent Diploma/Degree in Fine Arts issued by other Universities and boards recognised by University Grants Commission


Provided that the educational qualification 10+2 prescribed shall not apply to the candidates passed SSLC prior to 2005 and successfully undergone the Technical Teachers Certificate examination conducted by the Director of Government Examinations. Tamilnadu


பணிமாறுதல் மூலம் கலையாசிரியர் பணிநியமனம் வழங்க 01.01.2026 நிலவரப்படி மேற்காண் கல்வித்தகுதிகளை பெற்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தகுதிவாய்ந்த ஆசிரியரல்லாத பணியாளர்களின் (உதவியாளர். இளநிலை உதவியாளர். ஆய்வக உதவியாளர் பதிவறை எழுத்தர். அலுவலக உதவியாளர், காவலர், நூலகர்) விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிகம் 1 மற்றும் படிவம் 2இல் (தமிழில் மட்டும்) பூர்த்தி செய்து 20/02/2026-க்குள் அனுப்புமாறு அனைத்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மை கல்வி அலுவலர்கள்


இணைப்பு படிவம் 1 மற்றும் 2


பெறுநர்:


(பணியாளர் தொகுதி) 20121


1. அனைத்து முதன்மை கல்வி அலுவ


2. இவ்வலுவலக அ2" பிரிவு


(நகல் கீழ்க்காணும் அலுவலர்களுக்கு பணிந்தனுப்படுகிறது)


1. மாநில திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை- 6.


2 இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை -6.


3. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை 6.


5. இயக்குநர், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை-6.


4. செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6.


6.இயக்குநர்.பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்.சென்னை-6.


ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தேர்ச்சி மதிப்பெண்கள் - முக்கிய அறிவிப்பு

 

ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தேர்ச்சி மதிப்பெண்கள் - முக்கிய அறிவிப்பு


📢 முக்கிய அறிவிப்பு – ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET)


📄 அரசாணை எண் : G.O.(Ms) No.23


📅 தேதி : 28.01.2026

🏢 பள்ளிக்கல்வித் துறை (TRB)


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) – Paper I & Paper II-க்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


✅ அதன்படி:


🔹 மொத்த மதிப்பெண் : 150


📌 பொது பிரிவு (General):

➡️ 60% = 90 மதிப்பெண்கள் (Paper I & II)


📌 BC / BCM / MBC / DNC / மாற்றுத்திறனாளிகள் (PWD):

➡️ 50% = 75 மதிப்பெண்கள் (Paper I & II)


📌 *SC / SC(A) / ST:* 

➡️ 40% = 60 மதிப்பெண்கள் (Paper I & II)


📌 இந்த குறைந்தபட்ச மதிப்பெண் விதிமுறை :


✔️ 11.08.2025  முதல் நடைபெற்ற TNTET தேர்வுகளுக்கும்

✔️ எதிர்காலத்தில் நடைபெறும் TNTET தேர்வுகளுக்கும் பொருந்தும்.

✔️ ஆசிரியர் பணியமர்த்தலுக்கு TNTET தேர்ச்சி கட்டாயம்.



>>> அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-01-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-01-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 29.01.2026

கிழமை:- வியாழன்


 

திருக்குறள்: 


பால்:- அறத்துப்பால்

இயல்:- துறவறவியல்

அதிகாரம்:- நிலையாமை



*குறள் 331:*


நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 

புல்லறி வாண்மை கடை. 


*விளக்க உரை:* 


நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.


*பழமொழி :*


Learning never goes waste. 


கற்றது ஒரு போதும் வீணாகாது.


*இரண்டொழுக்க பண்புகள் :*



1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.



2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.


*பொன்மொழி :*


விவேகத்துடன் செயல்லாற்றுபவர் எந்த தடைகளையும் தாண்டிவருவார்.குறித்த இலக்கை அடையும் வரை அயராது உழைக்க வேண்டும்.


--------டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம்


*பொது அறிவு :* 


01.நீரின் கொள்ளளவு அடிப்படையில்உலகின் மிகப்பெரிய நீர் தேக்கம் எது?



கரிபா ஏரி-Lake Kariba,


ஜாம்பேசி நதி Zambezi- ரிவேர் ஆப்பிரிக்கா - Africa


02.ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் முக்கிய நீர்வழிப்பாதை எது?


சூயஸ் கால்வாய் -The Suez Canal


*English words :*


invincible-unbeatable


generosity-willing to give freely


*தமிழ் இலக்கணம்:* 


 கட்டடம் மற்றும் கட்டிடம் வேறுபாடு இரண்டுமே கட்டுமானப் பொருளைக் குறித்துப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், சிறிய நுணுக்கமான வேறுபாடு உள்ளது. கட்டடம் (Building) என்பது ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்கு அடுக்கான அமைப்பைக் (Structure) குறிக்கிறது. கட்டிடம் (Site/Plot) என்பது கட்டப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், மனை அல்லது நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும்.


*நீதிக்கதை*


 *பலமும் பயமும்*



சிங்கம் ஒன்று காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்தது. அதற்குச் சேவல் கூவும் ஒலியைக் கேட்டால் போதும் மிகவும் பயந்துவிடும். நான் காட்டரசனாக மிகுந்த பலத்துடன் இருந்து என்ன பயன்? ஒரு சேவல் கூவுவதைக் கண்டு பயந்து வாழ்வது ஒரு வாழ்வா? என்று தனக்குத்தானே மிகவும் நொந்து கொண்டே இருந்தது. அப்போது எதிரே ஒரு யானை மிகவும் சோர்வுடன் தனது காதுகளை இருபக்கமும் வேகமாக ஆட்டிக்கொண்டே வந்தது. அதனைக் கண்ட சிங்கம், யானையாரே, மிகப் பெரிய உருவம் கொண்ட உமக்கு என்ன கவலை? ஏன் வாட்டமாக வருகிறீர்? என்று கேட்டது. 



சிங்க நண்பரே, அதையேன் கேட்கிறீர்? எனக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. இதோ எனது காதுகளின் பக்கத்தில் குளவி ஒன்று பறந்துகொண்டே இருக்கிறது. அது காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால் அந்த வலியைத் தாங்க முடியாது. அந்தக் குளவி காதிற்குள் நுழைந்து விடக் கூடாதே என்ற கவலையுடன் காதுகளை ஆட்டிக் கொண்டே வருகிறேன் என்று கூறியது யானை. எத்தகைய வல்லமை உள்ள உயிருக்கும் கூட அதுக்குன்னு ஒரு கவலை நிச்சயம் உண்டு. அதுபோலத்தான் நமக்கும் என்று உலக வழக்கத்தைப் புரிந்து கொண்டு அதிலிருந்து எதற்கும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் சிங்கம் வாழ ஆரம்பித்தது. 



நீதி :


பயம், பலவீனம் இரண்டும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவானது.


*இன்றைய செய்திகள்*


29.01.2026



⭐ பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் &  சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களை

பொருளாதார ரீதியாக முன்னேற்றும் நோக்கில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் (TABCEEDCO) ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்க தமிழக அரசு

முன்வந்துள்ளது.


⭐ இந்தியாவிலேயே பெண்களை அதிகம் பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டிலுள்ள 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.



⭐ தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைத்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.


⭐சில்லறை தட்டுப்பாட்டை தீர்க்க சிறு ரூபாய் நோட்டுகளுக்கான ATM - மத்திய அரசு திட்டம். ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும்.



*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் விளையாடவுள்ளது.


🏀பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி முடிவு செய்தது.


*Today's Headlines*



⭐ Tamilnadu government has come forward to provide loan assistance of up to Rs. 25 lakhs to the Backward Classes Economic Development Corporation (TABCEEDCO), which aims to economically advance the backward classes, the most backward classes and the scheduled castes.


⭐ The Chief Minister of Tamil Nadu has launched a free vaccination program for girls under the age of 14 in Tamil Nadu to prevent oral cancer.


⭐A government order has been issued in Tamil Nadu reducing the passing marks for the Teacher Eligibility Test by 5%.



⭐Central Government Scheme for ATMs for Small Currency Notes to Address Retail Shortage. * The Central Government is considering setting up hybrid ATMs. Also

The government will prioritise installing these ATMs in places where people congregate.


 *SPORTS NEWS* 


🏀 Bangladesh team out of World Cup series. * The Scotland team will play in the T20 World Cup due to the Bangladesh team's withdrawal.



🏀All teams are preparing for the T20 World Cup series starting on February 7. In that regard, the Australian team has decided to play a 3-match T20 series with Pakistan.


சிறந்த சிசிடிவி (CCTV) கேமராக்கள்

 


சிறந்த சிசிடிவி (CCTV) கேமராக்கள் 


சிசிடிவி (CCTV Camera) கேமராக்கள் இன்று வீடு மற்றும் அலுவலகப் பாதுகாப்பிற்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டன. 2026-ஆம் ஆண்டின் தற்போதைய நிலவரப்படி, சந்தையில் கிடைக்கும் சிறந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவற்றின் முக்கிய விவரங்களை கீழே காணலாம்.

1. சிசிடிவி கேமராக்களின் வகைகள் (Types)

  • டோம் கேமரா (Dome Camera): இது பொதுவாக வீட்டின் உட்புறம் (Indoor) பயன்படுத்தப்படுகிறது. இதன் வடிவம் வட்டமாக இருப்பதால் கேமரா எந்தப் பக்கம் பார்க்கிறது என்பதைக் கண்டறிவது கடினம்.

  • புல்லட் கேமரா (Bullet Camera): இது வெளிப்புறப் (Outdoor) பயன்பாட்டிற்கு ஏற்றது. நீண்ட தூரம் வரை தெளிவாகப் படம்பிடிக்கும் திறன் கொண்டது மற்றும் மழை, வெயிலைத் தாங்கும் (Weatherproof).

  • PTZ கேமரா: இதைப் பயன்படுத்தி கேமராவை இடது, வலது, மேலிருந்து கீழாகத் திருப்பலாம் மற்றும் ஜூம் (Zoom) செய்து பார்க்கலாம். பெரிய மைதானங்கள் அல்லது பார்க்கிங் இடங்களுக்கு இது சிறந்தது.

  • வைஃபை/ஸ்மார்ட் கேமரா (Wi-Fi/IP Camera): இதற்கு வயர்கள் தேவையில்லை. உங்கள் மொபைல் போன் மூலமாகவே எங்கிருந்து வேண்டுமானாலும் நேரலையாகக் கண்காணிக்கலாம்.


2. சிறந்த பிராண்டுகள் மற்றும் விலை விவரங்கள் (Best Brands & Price)

இந்திய சந்தையில், குறிப்பாக தமிழ்நாட்டில் தரம் மற்றும் சேவையின் அடிப்படையில் முன்னணியில் உள்ள பிராண்டுகள்:

பிராண்ட் (Brand)தோராயமான விலை (₹)சிறப்பம்சங்கள்
CP Plus₹1,500 - ₹5,000குறைந்த விலை, சிறந்த சர்வீஸ், எளிய பயன்பாடு.

https://amzn.to/46dtMJp

Hikvision₹2,000 - ₹8,000மிகத்தெளிவான வீடியோ, இரவு நேரப் பார்வை (Night Vision).

https://amzn.to/3NIdYIt

Dahua₹2,000 - ₹7,000நவீன AI தொழில்நுட்பம், நீண்ட ஆயுள்.

https://amzn.to/3Z1bkzZ




Godrej₹3,000 - ₹6,000நம்பகமான இந்திய பிராண்ட், உறுதியான தரம்.

https://amzn.to/4k5U9qE


3. வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை (Buying Guide)

  • Resolution: குறைந்தபட்சம் 2MP (1080p) அல்லது 4MP கிளாரிட்டி உள்ள கேமராக்களைத் தேர்வு செய்யவும்.

  • Night Vision: இரவு நேரத்திலும் இருட்டில் தெளிவாகத் தெரிய 'Infrared' அல்லது 'Full-color night vision' வசதி இருக்கிறதா என்று பார்க்கவும்.

  • Storage: மெமரி கார்டு (SD Card) அல்லது ஹார்ட் டிஸ்க் (Hard Disk) வசதியைச் சரிபார்க்கவும். குறைந்தது 15-30 நாட்கள் ரெக்கார்டிங் இருப்பது நல்லது.

  • Two-way Audio: கேமரா மூலம் பேசவும் கேட்கவும் முடியும் வசதி (Mic & Speaker) இருந்தால் கூடுதல் பாதுகாப்பு.

  • Motion Detection: யாராவது நடமாடினால் உடனே உங்கள் மொபைலுக்கு எச்சரிக்கை (Alert) அனுப்பும் வசதி இருக்கிறதா எனப் பார்க்கவும்.

4. சிறந்த தேர்வுகள் (2026 Trending)

  • பட்ஜெட் தேர்வு: CP Plus Ezykam (வைஃபை கேமரா). https://amzn.to/4q0KEKN

  • வெளிப்புறப் பாதுகாப்பு: Hikvision IP Bullet Cameras. https://amzn.to/45vxNc8 

  •  Godrej Ace Pro Green 4Mp 2560 X 1440 Resolution Plastic Ip66 Solar Powered Camera Wired https://amzn.to/49MKDFs

குறிப்பு: கேமராவை வாங்குவதை விட அதைச் சரியாகப் பொருத்துவது (Installation) முக்கியம். கேபிள்களை மறைத்து வைப்பதும், கேமராவை எட்டாத உயரத்தில் பொருத்துவதும் பாதுகாப்பை உறுதி செய்யும்.


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pledge to eradicate untouchability

    இன்று (30-01-2026) காலை 11 மணிக்கு மேற்கொள்ள வேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Pledge to be tak...