கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"மணம் இல்லாத கொலையாளி" – கார்பன் மோனாக்சைடு, "மூச்சுப்பாதையை எரிக்கும் விஷம்" – அமோனியா! எப்படி கையாள வேண்டும்?

 


"மணம் இல்லாத கொலையாளி" – கார்பன் மோனாக்சைடு, "மூச்சுப்பாதையை எரிக்கும் விஷம்" – அமோனியா! எப்படி கையாள வேண்டும்?


"The odourless killer" – Carbon monoxide; "The poison that burns the airways" – Ammonia! How should they be handled?



நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் உடலுக்கு ஆக்சிஜனை கொண்டு சென்று உயிரைத் தாங்குகிறது. ஆனால் சில வாயுக்கள் இந்த செயல்முறையை அமைதியாக சிதைத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் மிகவும் ஆபத்தானது கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide). இதற்கு நிறமோ, மணமோ, சுவையோ கிடையாது. அதனால்தான் இதை "Silent Killer" என்று அழைக்கிறார்கள். இந்த வாயு பொதுவாக மூடிய அறைகளில் ஜெனரேட்டர் இயக்கும்போது, கார் அல்லது லாரி இன்ஜின் புகை அதிகமாக இருக்கும் இடங்களில், நிலக்கரி அடுப்பு பயன்படுத்தும் வீடுகளில், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடங்களில், மற்றும் காற்றோட்டம் குறைவான இடங்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த வாயு உடலுக்குள் சென்றவுடன், இரத்தத்தில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபினுடன் ஆக்சிஜனை விட பல மடங்கு வலிமையாக ஒட்டிக்கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் இருந்தாலும் அது செல்களுக்கு சென்று சேர முடியாது. குறிப்பாக மூளை மற்றும் இதயம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. முதலில் தலைவலி, சோர்வு, மயக்கம் போன்றவை தோன்றும். ஆனால் வாயுவை தொடர்ந்து சுவாசித்தால் சில நிமிடங்களிலேயே மயக்கம், கோமா, ஏன் மரணம் கூட ஏற்படலாம்.



மற்றொரு பக்கம், அமோனியா (Ammonia) முற்றிலும் வேறுவிதமாக தாக்குகிறது. இதற்கு மிகவும் கடுமையான நாற்றம் இருக்கும். அமோனியா பொதுவாக உரத் தொழிற்சாலைகள், குளிர்பதன அமைப்புகள், ஐஸ் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் சில சுத்தம் செய்யும் திரவங்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் காணப்படுகிறது. நாம் அமோனியாவை சுவாசிக்கும்போது அது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலின் ஈரப்பதத்துடன் கலந்து ஒரு காரத் தன்மை கொண்ட பொருளாக மாறி, சுவாசப் பாதையின் செல்களை எரிச்சலடையச் செய்கிறது. அதனால் கண்களில் நீர் வடிதல், மூக்கெரிச்சல், இருமல் போன்றவை ஆரம்பிக்கும். அதிக அளவு அமோனியா உடலுக்குள் சென்றால், காற்றுக்குழாய் மற்றும் நுரையீரல் வீங்கி, ஆக்சிஜன் உள்ளே செல்லும் பாதையே குறுகிவிடும். இதனால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.


எளிமையாகச் சொன்னால், கார்பன் மோனாக்சைடு உடலுக்குள் ஆக்சிஜன் செல்லும் "வாகனத்தை" திருடுகிறது; அமோனியா ஆக்சிஜன் செல்லும் "சாலையையே" சேதப்படுத்துகிறது. கார்பன் மோனாக்சைடு இரத்தத்தை தாக்கி ஆக்சிஜன் போக்குவரத்தை தடுக்கிறது; அமோனியா சுவாசப் பாதையை தாக்கி ஆக்சிஜன் நுழைவதை தடுக்கிறது. இரண்டின் முடிவும் ஒன்றே – உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது.


சுவாரஸ்யமான ஒரு உண்மை என்னவென்றால், தீ விபத்துகளில் உயிரிழக்கும் பலர் தீக்காயத்தால் அல்ல; புகையில் இருக்கும் கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மையால் உயிரிழக்கிறார்கள். அதேபோல், அமோனியா கசிவு சில நிமிடங்களிலேயே ஆரோக்கியமான ஒருவருக்குக் கூட கடுமையான மூச்சுத்திணறலை ஏற்படுத்த முடியும். அதனால்தான் இந்த இரண்டு வாயுக்களும் "கண்ணுக்குத் தெரியாத எதிரிகள்" என்று அழைக்கப்படுகின்றன.


எப்படி கையாள வேண்டும்?


கார்பன் மோனாக்சைடு அல்லது அமோனியா விஷத்தன்மை சந்தேகிக்கப்பட்டால், முதலில் அந்த நபரை உடனடியாக திறந்த காற்றோட்டம் உள்ள இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மூடிய இடத்தில் இருந்தால் கதவுகளையும் ஜன்னல்களையும் திறக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மயக்கத்தில் இருந்தால், பாதுகாப்பாக பக்கவாட்டில் படுக்க வைத்து அவசர மருத்துவ உதவியை அழைக்க வேண்டும். மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்படும்; கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மையில் சில நேரங்களில் Hyperbaric Oxygen Therapy கூட தேவைப்படலாம். அமோனியா கண் அல்லது தோலில் பட்டிருந்தால், உடனடியாக அதிக அளவு சுத்தமான நீரால் கழுவ வேண்டும். மிக முக்கியமாக, பாதிக்கப்பட்டவரை காப்பாற்றச் செல்லும் நபரும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அந்த இடத்திற்குள் நுழையக் கூடாது, ஏனெனில் பல விபத்துகளில் காப்பாற்றச் சென்றவர்களும் அதே விஷ வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நினைவில் கொள்ளுங்கள்: தீயை நாம் பார்க்க முடியும், புகையை நாம் உணர முடியும். ஆனால் கார்பன் மோனாக்சைடு மற்றும் அமோனியா போன்ற வாயுக்கள் பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தை அமைதியாக ஏற்படுத்துகின்றன. அதனால் விழிப்புணர்வும், உடனடி மருத்துவ உதவியும் உயிரைக் காப்பாற்றும் மிகப் பெரிய ஆயுதங்களாகும்.


இன்று உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அனைவரும் குணம் அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்..


 

22-06-2026 TN SCERT Special TET 1 & TET 2 CDP SESSION 3 - Youtube Links



 Good afternoon, all. Kindly note today's session and its timings



👉🏽Click here for SPECIAL TET PAPER 1 CDP SESSION 3


https://www.youtube.com/live/WlJ16cuhKcE?si=qh1dFh9PIZdwP78Q



👉🏽Click here for SPECIAL TET PAPER 2 CDP SESSION 3

 

https://www.youtube.com/live/t24vrzgxyU8?si=caX47CiQJegK-0CY



The session starts today, 22.06.26, at 06.30 PM.



🎯Get timely updates from State Resource Centre WhatsApp channel link.

https://whatsapp.com/channel/0029VbCcBG8HgZWVwDltOv1Y


Supplementary Exam Hall Ticket Download - DGE Press Release

 


மேல்நிலை இரண்டாம் ஆண்டு / முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்ககம் செய்தி குறிப்பு 


Supplementary Exam Hall Ticket Download - DGE Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Read 'Vaasippu Iyakkam' books during library periods – DEE Proceedings



நூலக பாட வேளையில் வாசிப்பு இயக்க புத்தகங்கள் மாணவர்கள் வாசிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Implementation of measures to read 'Reading Movement' books during library periods – Proceedings of the Director of Elementary Education.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந.க. எண்.9111/எப்1/2025, நாள் : 18.06.2026.


பொருள்:


தொடக்கக் கல்வி - வாசிப்பு இயக்கம் - நூலக பாட வேளைகளில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக


பார்வை:


சென்னை 6, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், ந.க.எண்.0145/சி7/நூலக மானியம்/ ஒபக/2025, நாள் : 03.06.2026


பார்வையில் காணும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, பள்ளிக் குழந்தைகளிடம் உரையாடலை தொடங்கவும் இயல்பாக உரையாடவும், வாசிப்பு தான் வாசலாக அமையும். வாசிப்பின் வாயிலாக சமூக சிந்தனையை தூண்டவும், உளப்பாடுகளை வெளிக் கொண்டு வரவும் "மாபெரும் வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்வு செயல்பட்டு வருகிறது.


இதன் அடிப்படையில் வாசிப்பு இயக்கத்திற்கான கதைப்புத்தகங்கள் நுழை, நட. ஓடு,பற என்ற வகையில் முதற்கட்டமாக 53 புத்தகங்கள் இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள், மூன்றாம் கட்டமாக 81 புத்தகங்கள் மற்றும் நான்காம் கட்டமாக 57 ஆக மொத்தம் 261 புத்தகங்கள் (174 தமிழ் வழி புத்தகங்கள் மற்றும் 87 ஆங்கில மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்கள்) அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன.


எனவே. மேற்கண்ட வாசிப்பு இயக்கப் புத்தகங்களை 2026-27 கல்வியாண்டிலும் பள்ளி நூலக பாடவேளைகளில் மாணவர்கள் முறையாக வாசித்து பயன்பெறும் வகையிலும், மாணவர்களை கதை சொல்லிகளாகவும் எழுத்தாளர்களாகவும் உருவாக்கும் வகையில் நடைமுறைப்படுத்த தங்கள் ஆளுகைக்குட்பட்ட தலைமையாசிரியர்களுக்கும் சார்ந்த வட்டாரக் கல்வி அனைத்து பள்ளி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்தவும், இப்பொருள் சார்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தொடக்கக் கல்வி இயக்குநர்

18.06.26


பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


"Kakapo" வைக் காப்பாற்றிய Rimu பழம்

 


"காகாபோ" வைக் காப்பாற்றிய ரீமு பழம்  


நியூஸிலாந்து மற்ற பெரிய நிலப்பரப்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டதால், மனிதர்கள் வரும் முன் அங்கே பெரிய பறவைகள் வாழ்ந்து வந்தன.


அதில் முக்கியமானது காகாபோ (Kakapo). உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் அழகான பறவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கிளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், இது உலகிலேயே பறக்க முடியாத ஒரே கிளி ஆகும்.


காரணம், நியூஸிலாந்தில் தரை இறங்கியபின் நிலத்தில் நிறைய உணவுகள் கிடைத்தன. கிளிகளை வேட்டையாட பூனை, நரி என எந்த மிருகமும் இல்லை. வானில் பறக்கும் கழுகுகள் மட்டுமே இவற்றை வேட்டையாடும். அதன்பின் எதற்காக வானில் பறக்க வேண்டும்? தரையிலேயே வாழ்ந்தால் என்ன? அதிலும் கழுகுகள் கண்ணில் படாத வகையில் இரவில் மட்டுமே நடமாடி, பகலில் தூங்கும் நாக்டர்னல் வகை பறவையாக மாறினால் என்ன?


ஆக, அடுத்த பல மில்லியன் ஆண்டுகளில் இந்த டீல் காகாபோ கிளிகளுக்கு மிகச் சாதகமானதாக மாறியது. இவை நியூஸிலாந்து எங்கும் பல்கிப் பெருகின. இவற்றின் எடையும் நான்கு கிலோ அளவுக்கு அதிகரித்தது. இவற்றின் ஆயுளும் நூறாண்டுகளாக மாறியது. உலகிலேயே மிக நீண்ட ஆண்டுகள் வாழும் பறவைகளில் ஒன்றாக மாறியது காகாபோ.


அதன்பின் பல மில்லியன் ஆண்டுகள் கழித்து மனிதர்கள் நியூஸிலாந்தில் இறங்கினார்கள். நான்கு கிலோ கோழிகள் கிடைத்தால் எப்படி இருக்கும்? உணவுக்காகவும், சிறகுக்காகவும் இவை வேட்டையாடப்பட்டன. மனிதர்களுடன் வந்த பூனைகள் இவற்றை வேட்டையாடின.


1980களில் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், எங்கோ ஒரு பள்ளத்தாக்கில் 51 கிளிகள் மட்டுமே மீதமிருந்தன. அவை அனைத்தையும் கைப்பற்றிய நியூஸிலாந்து அரசு, மனிதர்கள், பூனைகள், எலிகள் என எவையுமே இல்லாத தொலைதூர தீவு ஒன்றை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கே இவற்றை கொண்டு சேர்த்தது.


இவற்றுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகள், கூடுகள் அனைத்தும் வழங்கப்பட்டன. முழு தீவும் உங்களுக்குத்தான். ஒரு ராணுவமே உங்கள் பாதுகாப்புக்கு நிற்கிறது. தயவு செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, சந்ததியை பெருக்குங்கய்யா என்றார்கள் விஞ்ஞானிகள்.


ஆனால் கிளிகள் கலவியில் ஈடுபட மறுத்தன. அடுத்த சில ஆண்டுகளில் இனப்பெருக்கமே நடக்கவில்லை. குஞ்சுகள் பிறக்கவில்லை. இப்படியே விட்டுவிட்டால் இனம் அழிந்துவிடும்.


ஏன்? இந்த கிளிகளுக்கு என்னதான் வேண்டும்?


விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டார்கள். அப்போது ஒரு சீசனில் கிளிகள் திடீரென கலவியில் ஈடுபட்டன. அதன்பின் சில குஞ்சுகள் உருவாகின. அதன்பின் பல ஆண்டுகள் மீண்டும் அமைதி.


"இந்த ஆண்டு என்ன நடந்தது?" என யோசிக்கையில், தீவில் ரீமு (Rimu Trees) மரங்கள் கனிந்து ரீமு பழங்கள் உருவானது நினைவுக்கு வந்தது. காகாபோ கிளிகள் ரீமு பழத்தை விரும்பி சாப்பிடும். ஆனால் கலவிக்கும் ரீமு பழத்துக்கும் என்ன தொடர்பு?



அதன்பின் நியூஸிலாந்தில் இருந்து ரீமு பழங்களை கொண்டுவந்தபின் மீண்டும் கிளிகள் கலவியில் இறங்கின. ஆக, ரீமு பழம்தான் இவற்றின் இனப்பெருக்கத்தை துண்டும் காரணியா என்ன? அதில் என்ன மாயமந்திரம் உள்ளது?


ரீமு பழங்களை ஆராய்ந்ததில் அதில் ஏகப்பட்ட கால்சியமும், வைட்டமின் டி3-உம் இருப்பது தெரியவந்தது. இரவில் மட்டுமே நடமாடுவதால் இக்கிளிகளுக்கு சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி3 கிடைக்கும் வாய்ப்பு இல்லை. இயற்கையில் ஒரு கனியில் வைட்டமின் டி3 இருக்கும் என்பதே அதுவரை அறிவியலுக்கு தெரியாது. ஆனால் இக்கிளிகளுக்கு தெரிந்துள்ளது. கால்சியமும், வைட்டமின் டி3-உம் இருந்தால்தான் முட்டை ஓடு வலுவாக ஆகி, குஞ்சுகளுக்கு சத்து கிடைக்கும். ரீமு பழம் இவற்றின் பிரீநேட்டல் வைட்டமின் மாதிரி.


ரிமு மரங்களில் பழங்கள் காய்க்கும்போது, ஆண் காகபோக்கள் "பூமிங்" (Booming) எனப்படும் அதிர்வலை ஒலிகளை எழுப்பி பெண் காகபோக்களை ஈர்க்கின்றன.


இந்த ரகசியம் பிடிபட்டவுடன், ரீமு பழங்களை கொடுத்து கிளிகளின் எண்ணிக்கையை பெருக்கினார்கள். இன்று இவற்றின் எண்ணிக்கை 250 தாண்டியது. ஒரு வைரத்தை விட விலை உயர்ந்தது இவற்றின் முட்டை எனும் அளவுக்கு இவற்றின் இனம் அழியாமல் பாதுகாத்து, ரீமு பழத்தின் மர்மங்களையும் உடைத்த நியூஸிலாந்து அரசு நம் பாராட்டுக்கு உரியதுதானே?



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-06-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-06-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:44 குற்றங்கூறாமை

குறள் எண்:434

குறள்:

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.  

பொருள்:

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்


பழமொழி :

A cat may look at a king.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .

2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.


பொன்மொழி :

யோகா செய்வோம்; நலமான வாழ்வை உருவாக்குவோம்.


Thought for the Day :

Yoga is not about touching your toes; it is about what you learn on the way down."


பொது அறிவு :

1. பிளாஸ்டிக்கை எரிப்பதால் வெளியேறும் நச்சு வாயு எது?

டையாக்சின்.

2. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் முற்றிலும் தடை செய்யப்பட்ட பூச்சிகொல்லி எது?

எண்டோசல்பான்.


English words :

Generate – Produce, உருவாக்கு.

Choose - select, தேர்ந்தெடு


புவியியலும் சுற்றுசூழலும் :

பூமியின் வயது சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகள்.
பூமி ஒரு முறை சுழல 24 மணி நேரம் ஆகிறது.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365¼ நாட்கள் ஆகின்றன.
உலகின் மிகப்பெரிய பெருங்கடல் Pacific Ocean ஆகும்.


NMMS :

SAT - SCIENCE

1. பொருந்தாததைக் கண்டுபிடி

(1) மின் விளக்கு

(2)மின்சார மணி

(3) வெந்நீர் கொதிகலன்

(4) மின் சலவைப் பெட்டி

விடை: (2) மின்சார மணி


நீதிக்கதை

“பொறுமையே வெற்றியின் வழி”

ஒரு பள்ளியில் கார்த்திக் என்ற மாணவன் படித்தான். அவன் எதையும் உடனே கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பான். ஒரு நாள் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டான். முதல் முறையிலேயே அவன் ஓவியம் சிறப்பாக வரவில்லை.

“என்னால் முடியாது!” என்று சோர்ந்து போனான். அப்போது அவனுடைய ஆசிரியர், “பொறுமையுடன் தொடர்ந்து பயிற்சி செய். வெற்றி கண்டிப்பாக வரும்” என்றார்.

அதன்பிறகு கார்த்திக் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி ஓவியம் வரையப் பயிற்சி செய்தான். சில மாதங்களுக்குப் பிறகு நடந்த போட்டியில் முதல் பரிசை வென்றான்.

அப்போது அவன், “வெற்றி உடனே கிடைக்காது; பொறுமையும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் கிடைக்கும்” என்பதை உணர்ந்தான்.

நீதி:

🌱 “பொறுமையே வெற்றியின் வழி.”

🌱 “தொடர்ந்த முயற்சியும் பொறுமையும் வெற்றியைத் தரும்.”


இன்றைய செய்திகள்
22.06.2026

🗒️யோகா தினம்  ஜூன் 21., அனைத்து மக்கள் வாழ்விலும் யோகா அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

🗒️திருவள்ளூரில் நிகழ்ந்த அம்மோனியா வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

🗒️உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை தெற்கு அல்பேனியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

*விளையாட்டுச் செய்திகள்*
🏀நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது

🏀டைமண்ட் லீக் தடகளம்: நீரஜ் சோப்ரா ஏமாற்றம்
இலங்கையின் ருமேஷ் தரங்கா முதலிடம் பிடித்தார்.


Today's Headlines

🗒️ International Yoga Day – June 21: Prime Minister Narendra Modi emphasized that yoga should become a part of the daily lives of all people.

🗒️ In the ammonia gas leak accident in Tiruvallur, financial assistance of ₹2 lakh each has been announced for the affected families.

🗒️ Scientists have discovered the world’s largest underground thermal lake in southern Albania.

Sports News

🏑 In the Nations Cup Hockey Tournament, India defeated New Zealand and created history by winning the championship title.

🏃 Diamond League Athletics: Neeraj Chopra had a disappointing performance, while Rumesh Tharanga of Sri Lanka secured the first position


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் ஆன்லைன் வழியாக ஆங்கிலப் பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்

 


தொடக்கப்பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் ஆன்லைன் வழியாக பயிற்சி - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.


ந.க. எண். 011556/எப் 1/2026, நாள் : 19.06.2026.


பொருள்


 தொடக்க கல்வி - RIESI, Bangalore 10-day Online English Language Enrichment Programme இரண்டாவது மற்றும் மூன்றாம் தொகுதி பயிற்சி தொடக்கப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுக்குப் அளிக்கப்பட உள்ளதால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல்-சார்பாக.


பார்வை


Regional Institute of English, South India, Letter No. RIE/A3/ELEP/10-Day/online/KT-KI-TN/2026-2027, Dated 15.06.2026.


பார்வையில் காணும் கடிதததின் படி, The Regional Institute of English, South India (RIESI), Bangalore மூலமாக ஆசிரியர்களுக்கு 10-day Online English Language Enrichment Programme இரண்டாம் தொகுதி பயிற்சியானது 06.07.2026 முதல் 17.07.2026 வரை மற்றும் மூன்றாம் தொகுதி பயிற்சியானது 20.07.2026 முதல் 31.07.2026 வரை வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி ஆசிரியர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1230 மணி வரை இணையவழியில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே இப்பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து பிற தொடக்க/நடுநிலைப் பள்ளி (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) ஆங்கில பாட ஆசிரியர்களுள், இரண்டாம் தொகுதி பயிற்சியில் (06.07.2026 முதல் 17.07.2026 வரை) கலந்து கொள்ள ஒரு ஆசிரியர் மற்றும் மூன்றாம் தொகுதி பயிற்சியில் (20.07.2026 முதல் 31.07.2026 வரை) கலந்து கொள்ள ஒரு ஆசிரியர் என மாவட்டத்திற்கு இரண்டு ஆசிரியர்களை, RIESI, Bangalore லிருந்து பெற்றப்பட்ட கடிதத்தில் (இணைக்கப்பட்டுள்ளது) தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளைப் பின்பற்றி, தேர்ந்தெடுத்து இத்துடன்


இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கையொப்பமிட்டு Scan செய்து 23,06,2026-க்குள் deef2sec@gmailcom என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு.

1. பார்வையில் காணும் கடித நகல்.

2. படிவம்.


தொடக்கக் கல்வி இயக்குநருக்காக



பெறுநர்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)

மின்னஞ்சல் மூலமாக.



B.Sc., Nursing, B.Pharm., உட்பட மருத்துவ படிப்புகள் சேர்க்கை அறிவிப்பு

 

B.Sc., Nursing, B.Pharm., உட்பட மருத்துவ படிப்புகள் சேர்க்கை அறிவிப்பு


GOVERNMENT OF TAMIL NADU

DIRECTORATE OF MEDICAL EDUCATION AND RESEARCH, KILPAUK, CHENNAI- 10,

NOTIFICATION

Online filled-in applications are invited for admission to the following Course for 2026-2027 Session

Government Seats and Government Quota Seats in Self-Financing colleges:

> B.Sc. Nursing

>B.Pharm

> Bachelor in Audiology and Speech-Language Pathology (B.ASLP) and Bachelor in Prosthetics and Orthotics(B.P.O.),

> Allied and Healthcare UG Degree Courses

> Diploma in General Nursing and Midwifery (DGNM)

>Diploma in Pharmacy

Government Quota Seats in Self-Financing colleges

> Pharm-D

For prospectus and filing up of applications kindly visit the following website. www.tnmedicalselection.org

Date of Commencement for Registration of online application

21.06.2026@ 12.01PM

Last date for Registration of online ap plication

03.07.2026 upto 5.00 PM

DIPR/552/ DISPALY/ 2026

DIRECTOR OF MEDICAL EDUCATION AND RESEARCH




இறால் பண்ணையில் அம்மோனியா வாயு கசிவு - தொழிலாளர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?



இறால் பண்ணையில் அம்மோனியா வாயு கசிவு - தொழிலாளர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?


 திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 74 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் ஏழு பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது.


இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. 


ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவு சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.


இதற்கிடையே, அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சர்  நேரில் ஆறுதல் தெரிவித்தார்.


தொடர்ந்து, அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்த விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.



இந்நிலையில், அமோனியா வாயுக்கசிவால் 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இறால் பண்ணை உரிமையாளர்கள் மோகன், ஜோசப் ஆகியோரை காவல் துறை கைது செய்துள்ளது. 


திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இரவு, பகல் என இரண்டு ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இன்று காலை சுமார் 120 பேர் பணியில் இருந்த போது திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், இந்த வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர்.


இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.



அமோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால் நுரையீரல் வீங்கி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தனது மூளையில் Neuralink பொருத்திக்கொண்ட Noland Arbaughன் 100 நாள் அனுபவங்கள்

 


தனது மூளையில் Neuralink  பொருத்திக்கொண்ட Noland Arbaughன் 100 நாள்  அனுபவங்கள்


எலான் மஸ்கின் நியூராலிங்க் சிப்பினை முதல் முதலாக தனது மூளையில் பொருத்திக் கொண்ட நோலண்ட் அர்பாக். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு வயது 30. 


முதன் முதலில் நியூராலிங்க்கை பொருத்திக் கொண்டவர் என்ற பெயர்  வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.


எலான் மஸ்க் செய்துக் கொண்டிருக்கும் 'நியூராலிங்க்' ஆராய்ச்சி மூக்கின் மேல் விரல் வைக்க கூடிய அளவுக்கு ஆச்சர்யமானது. ஏன் சட்டென்று நம்ப முடியாததும் கூட.


'நியூராலிங்கிற்கு' ஆரம்பத்தில் வைக்கப்பட்ட பெயர், 'டெலிபதி' என்பது தான். லேட்டஸ்ட்டாக வைத்த பெயர் தான் நியூராலிங்க். 


'இயன் எம்.பேங்க்ஸ்' என்ற எழுத்தாளர் எழுதிய 'நியூரல் லேஸ்' எனும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் நாவலை படித்த பிறகு தான் எலான் மஸ்கிற்கு இந்த 'நியூராலிங்க்' ஐடியாவே வந்துள்ளது.


'நியூராலிங்க்' என்பது Brain Computer Interface (BCI) என்கிற சமாச்சாரத்தை சார்ந்தது. அதாவது மனித மூளையின் செயல்பாடுகளை தனியாக ஒரு டிவைஸ் ஒன்றினை வைத்து அறியலாம். மயிரிழையை விட மெல்லிய தங்கம் அல்லது பிளாட்டின இழைகள், அறுவை சிகிச்சை செய்யும் ரோபோட்டின் உதவியால் நமது மூளையில் பொறுத்தப்படும். 


குரங்கு மற்றும் பன்றியிலிருந்து தான் இந்த ஆராய்ச்சி தொடங்கியிருக்கிறது. பல விலங்குகள் இந்த ஆராய்ச்சிக்கு பலியாகின. ஆதலால் Animal Welfare Associationனும் , PETAவும் இதையும் ஆரம்பத்தில் எதிர்த்திருக்கிறார்கள். இந்த ஆராச்சியை தடை செய்ய வேண்டுமென போராட்டம் செய்திருக்கிறார்கள்.


Human Clinical Trail ஐ FDA 2022 ல் நிராகரித்து விட்டு, 2023 ல் Approve செய்திருக்கிறது. இந்த வருட ஜனவரியில் தான் ஒரு மனித மூளையின் இந்த சிப்  வெற்றிகரமாக பொருத்தப்பட்டிருக்கிறது. அவருடைய பெயர் தான் நோலண்ட் அர்பார்க்.



மனித மூளையின் உள்ளே வைக்கப்படும் இந்த கருவி கிட்ட திட்ட மிகச்சிரிய ஐந்து நாணயங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடிக்கி வைத்தது போல  இருக்கும் என்று கூறப்படுகிறது.


இந்த கருவியை பொறுத்திக் கொண்டவர்கள், தான் சிந்திப்பதன் மூலம் செல்போனை இயக்கலாம். கம்ப்யூட்டர் கர்சரை நகர்த்தலாம். கிட்ட திட்ட எந்த  எலக்ட்ரானிக் சாதனத்தையும் சிந்தனையால் கட்டுப்படுத்தலாம். கை கால்களை இழந்தவர்கள், முதுகுத் தண்டுவட பாதிப்புக்குள்ளானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்பது எலோன் மஸ்க்கின் நம்பிக்கை. 


அதற்குள் இந்த கருவியை பொறுத்திக் கொள்ள பலர் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்கிறதோ அதை விட ஆயிரம் மடங்கு மனிதனின் ஆசைகளும் வளர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.


எலான் மஸ்க்கின் நியூராலிங்க் N1 மூளை உள்வைப்பைப் பெற்ற முதல் மனிதரான நோலண்ட் ஆர்பாக், X (முன்னர் ட்விட்டர் என அறியப்பட்டது) என்ற சமூக ஊடகத் தளத்தில் ஒரு விரிவான பதிவைப் பகிர்வதன் மூலம், அந்தச் சாதனத்துடன் தனது 100-வது நாளைக் குறித்துள்ளார். 


2016-ல் நடந்த ஒரு டைவிங் விபத்தின் காரணமாகத் தோள்பட்டைக்குக் கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஆர்பாக், அந்த அனுபவத்தை "அறிவியல் புனைகதை எப்படியோ எனது அன்றாட யதார்த்தமாகிவிட்டது" என்று விவரித்தார். 


மேலும், அந்த செயல்முறை மிகவும் எளிமையானது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்: ஒரு சிறிய கீறல், அவரது மோட்டார் கார்டெக்ஸில் 1,024 மிக மெல்லிய இழைகளை ரோபோ மூலம் பொருத்துதல், மற்றும் விரைவான குணமடைதல். 7-வது நாளுக்குள், அவரது தழும்பு மங்கத் தொடங்கியது, மேலும் மூளை-கணினி இடைமுகம் (BCI) செயல்படுத்தப்பட்டவுடன் அவர் கூர்மையாகவும் நேர்மறையாகவும் உணர்ந்தார். 


இரண்டாவது வாரத்தில், ஒரு சிறிய அளவுத்திருத்த அமர்வுக்குப் பிறகு, தனது முதல் ஆப்பிள் மேக்புக்குடன் அந்த உள்வைப்பை இணைத்து, தனது எண்ணங்களின் மூலம் கர்சரை நகர்த்தியதாகவும் ஆர்பாக் வெளிப்படுத்தினார். 


சில வாரங்களுக்குள், ஸ்க்ரோலிங், கிளிக் செய்தல் மற்றும் தட்டச்சு செய்தல் ஆகியவை அவருக்கு இயல்பான செயலாகிவிட்டன. "மேக் உடனான ஒருங்கிணைப்பு மிகவும் மென்மையாக இருந்தது; நான் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக, மேக்கிற்கு முற்றிலும் புதியவன் என்ற நிலையிலிருந்து ஒரு வல்லுநராக மாறினேன்," என்று அவர் எழுதினார். 



80-வது நாளில், ஆர்பாக் கைகள் பயன்படுத்தாமல் வேர்ல்ட் ஆஃப் வார்கிராஃப்ட் விளையாடிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், அந்த அனுபவம் விரைவில் தடையற்றதாக மாறியது: 


"நான் இப்போது முழு வேகத்தில் அஸெரோத்தில் ரெய்டு செய்து ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் — மவுஸ் இல்லை, கீபோர்டு இல்லை, வெறும் எண்ணம் மட்டுமே. இந்த சுதந்திரம் ஒரு போதை போன்றது."


 "100 நாட்கள் ஆகிவிட்டன, அது இல்லாமல் என் வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. N1 எனக்கு கணினியைப் பயன்படுத்த ஒரு புதிய வழியை மட்டும் கொடுக்கவில்லை — அது எனக்கு வாழ ஒரு புதிய வழியையும் கொடுத்தது," என்று ஆர்பாக் எழுதினார், மேலும் சோதனை முன்னேறும்போது தொடர்ந்து புதிய தகவல்களைப் பகிர்வதாகவும் உறுதியளித்தார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"மணம் இல்லாத கொலையாளி" – கார்பன் மோனாக்சைடு, "மூச்சுப்பாதையை எரிக்கும் விஷம்" – அமோனியா! எப்படி கையாள வேண்டும்?

  "மணம் இல்லாத கொலையாளி" – கார்பன் மோனாக்சைடு, "மூச்சுப்பாதையை எரிக்கும் விஷம்" – அமோனியா! எப்படி கையாள வேண்டும்? "...