கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2026-2027 Term 1 / Quarterly Exam Time Table

 


2026-2027 முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு கால அட்டவணை


2026-27- Quarterly Time Table- Classes - 1 to 12


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை மற்றும் தனியார் பள்ளிகளின் இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், நாள் : 09-09-2026


2026-2027 Term 1 / Quarterly Exam Time Table



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


அரசு ஊழியர்களுக்கு பயனுள்ள நிதித்துறையின் 4 மற்றும் 5வது அறிவிப்புகள்



நிதித் துறை அறிவிப்புகள் : அரசு ஊழியர்களுக்கு 4 மற்றும் 5வது அறிவிப்புகள் சிறப்பு வாய்ந்தவை


👇👇👇

4. திருமண முன்பணம் - திருமணம் முடிந்த 60 நாட்கள் வரையிலும் பெற்றுக்கொள்ளலாம். பழைய நடைமுறை: திருமணத்திற்கு 180 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்..

5. முன்பணம், கடன் பெறும் நடைமுறை மேலும் எளிதாக்கப்படும். வீட்டுக் கடன் நடைமுறை எளிதாக்கப்படும் - கடன் பெற 6 ஆண்டுகள் பணி முடிக்கத் தேவையில்லை - தகுதிகாண் பருவம் முடித்தாலே போதுமானது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கவே செல்போன் தடையா?

 


கோவில்களில் செல்போனுக்கு தடை தொடர்பாக பரவும் தவறான தகவல்!


பரவும் செய்தி


“கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க மட்டுமே செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.


உண்மை என்ன?


மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2022-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி, கோவில்களின் கண்ணியம் மற்றும் புனிதத்தன்மையை பேணும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டை தடுக்க வேண்டும், செல்போன்களுக்கான பாதுகாப்பு மையங்களை (Safety Deposit Counters ) அமைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, முதற்கட்டமாக 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் செல்போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.


தவறான தகவலை பரப்பாதீர்!


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-09-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-09-2026 | School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



14 இ.ஆ.ப., அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளராக ஸ்ரேயா பி சிங் IAS நியமனம் - அரசாணை வெளியீடு



14 இ.ஆ.ப., அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளராக ஸ்ரேயா பி சிங் IAS நியமனம் - அரசாணை G.O.Rt.No. 3213, Dated : 08-09-2026 வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



PKBFS Guidelines


பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – முக்கிய வழிகாட்டுதல்கள்


1. திட்ட விரிவாக்கம்


17.09.2026 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.


திட்டம் மாநிலம் முழுவதும் முறையாகவும் தடையின்றியும் செயல்படுத்தப்பட வேண்டும்.


2. முதன்மைக் குழு (Core Committee)


கிராம ஊராட்சி / பேரூராட்சி அளவில் முதன்மைக் குழு அமைக்க வேண்டும்.


இதில் ஊராட்சி/பேரூராட்சி பிரதிநிதி, பள்ளித் தலைமையாசிரியர்/முதல்வர், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், SMC பிரதிநிதி மற்றும் கூட்டமைப்பு பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுவர்.


பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும்.


SHG உறுப்பினர்களைத் தேர்வு செய்வதும், சமையலறை மையத்தை இறுதி செய்வதும் முதன்மைக் குழுவின் முக்கியப் பொறுப்பு.


3. சமையலறை மையம்


முன்னுரிமையாக பள்ளி வளாகத்தில் உள்ள மதிய உணவு சமையலறை/சத்துணவு மையத்தையே காலை உணவு தயாரிக்கும் இடமாக பயன்படுத்த வேண்டும்.


தேவையான பழுதுபார்ப்பு, மின்சாரம், சேமிப்பு வசதி, சமையல் பாத்திரங்கள் போன்றவை உரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.


4. SHG உறுப்பினர் தேர்வு – முக்கிய நிபந்தனைகள்


உணவு தயாரிப்பில் அடிப்படை அறிவு/திறன் இருக்க வேண்டும்.


பொதுவாக 10ஆம் வகுப்பு வரை கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.


மலைப்பாங்கான/தொலைதூர/பழங்குடியினர் பகுதிகளில் 10ஆம் வகுப்பு படித்தவர் கிடைக்காவிட்டால் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு படித்தவர் தேர்வு செய்யலாம்.


கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும்.


போதுமான நிதி நிலை/மூலதன வசதி கொண்ட SHG ஆக இருக்க வேண்டும்.


உறுப்பினரின் விருப்பக் கடிதம் மற்றும் குழுத் தீர்மானம் பெறப்பட வேண்டும்.


தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சமையல் மற்றும் திறன் பயிற்சி வழங்கப்பட வேண்டும். 


5. பயிற்சி


அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்க வேண்டும்.


உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான சமையல் தொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் மூலம் பயிற்சி வழங்க வேண்டும்.


பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் கைப்பேசி செயலியில் தகவல் பதிவு செய்வது குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டும்.


திட்டம் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே பயிற்சி நிறைவு செய்ய வேண்டும்.


6. 10 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள்


தனி சமையலறை அமைக்க வேண்டிய அவசியமில்லை.


அருகிலுள்ள அதிக மாணவர்கள் உள்ள பள்ளியில் உணவு தயாரித்து Hot Box மூலம் வழங்கலாம்.


இத்தகைய பள்ளிகள் ஆரம்பத்திலேயே அருகிலுள்ள அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளியுடன் இணைக்கப்பட வேண்டும்.


7. சமையல் மற்றும் உணவு வழங்கும் நேரம்


காலை 6.00 மணிக்கு சமையல் தொடங்க வேண்டும்.


காலை 8.00 மணிக்குள் சமையல் முடிக்க வேண்டும்.


மாணவர்களுக்கு காலை 8.00–9.00 மணிக்குள் சூடாக உணவு வழங்க வேண்டும்.


பாத்திரங்களை சுத்தம் செய்து காலை 9.30 மணிக்குள் சமையல் பணியாளர்கள் பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும்.


சமையலுக்கு முன்பும் உணவு பரிமாறிய பின்பும் பாத்திரங்கள் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.


உணவுப் பொருட்களை வைக்க செய்தித்தாள்களைப் பயன்படுத்தக் கூடாது.


8. உணவுப் பொருட்கள் கொள்முதல்


அனைத்து உணவுப் பொருட்களும் தரமானதாகவும் உணவுத் தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.


அரிசி, உப்பு, எண்ணெய், பருப்பு போன்ற முக்கியப் பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.


இப்பொருட்களை உள்ளூரில் தனியாக கொள்முதல் செய்யக்கூடாது.


கொள்முதல் செய்வதற்கு முன் பொருட்களின் தரம் சரிபார்க்கப்பட வேண்டும்.


9. எரிவாயு மற்றும் பாத்திரங்கள்


திட்டம் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே தேவையான பாத்திரங்கள் மற்றும் LPG வசதிகள் தயாராக இருக்க வேண்டும்.


ஒவ்வொரு பள்ளி மையத்திற்கும் 2 LPG சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.


10.தலைமையாசிரியரின் முக்கியப் பொறுப்புகள்


காலை உணவு பெற விரும்பும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதி செய்தல்.


சமையலறையை உரிய நேரத்தில் திறந்து வைக்க ஏற்பாடு செய்தல்.


உணவு பரிமாறும் நேரத்தில் ஆசிரியர் ஒருவர் சுழற்சி முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்தல்.


உணவு வீணாகாமல் இருப்பதை உறுதி செய்தல்.


உணவு தரம் மற்றும் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதை கண்காணித்தல். 


11. மாணவர் எண்ணிக்கை


பள்ளிக் கல்வித்துறையின் தரவுகள் மற்றும் பள்ளியின் தினசரி வருகைப் பதிவின் அடிப்படையில் தினசரி தேவையான அளவு காலை உணவு தயாரிக்க வேண்டும்.


மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப SHG உறுப்பினர்கள் மற்றும் தேவையான சமையல் வசதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.


12. தினசரி பதிவேடுகள்


கீழ்க்கண்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்:


மாணவர் வருகைப் பதிவு


மொத்த மாணவர் எண்ணிக்கை


பண வரவு–செலவு பதிவு


உணவுப் பொருட்கள்/இருப்பு பதிவு


அதிகாரிகளின் ஆய்வுக் குறிப்புகள்


செலவினம் மற்றும் உள்ளூர் கொள்முதல் பதிவு


உணவின் சுவை குறிப்பு பதிவு. 


13. குறைபாடு / முறைகேடு கண்டறியப்பட்டால்


இருப்புப் பொருட்கள் அல்லது நிதியில் குறைபாடு கண்டறியப்பட்டால் உரிய அலுவலர்கள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தேவையான புகார் மற்றும் தொடர் நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.


14. கண்காணிப்பு – மிக முக்கியம்


மாவட்ட ஆட்சியர் மற்றும் தொடர்புடைய மாவட்ட அலுவலர்கள் மூலம் வாரத்திற்கு 3 நாட்கள் காலை உணவு மையங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.


நியமிக்கப்பட்ட மண்டல உதவித் திட்ட அலுவலர்கள் வாரத்திற்கு 10–15 பள்ளி மையங்களில் ஆய்வு செய்ய வேண்டும்.


உதவித் திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் தினசரி தொடர் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.


உணவின் தரம் மற்றும் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். 


15. மூன்று அடுக்கு கண்காணிப்பு அமைப்பு


மாவட்ட அளவு → வட்டார அளவு → ஊராட்சி/பேரூராட்சி அளவு


மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு.


வட்டார அளவில் BDO/Executive Officer உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு.


ஊராட்சி/பேரூராட்சி அளவில் ஏற்கனவே அமைக்கப்பட்ட முதன்மைக் குழுவே கண்காணிப்புக் குழுவாக செயல்படும். 


16. நிதி நிர்வாகம்


திட்டத்திற்கென தனி வங்கிக் கணக்கு பராமரிக்க வேண்டும்.


கணக்கின் பெயர் “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட கணக்கு” என மாற்றப்பட வேண்டும்.


நிதி பரிவர்த்தனைகள் வங்கி/மின்னணு முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.


ஊராட்சி/பகுதி அளவிலான கூட்டமைப்புகள் நேரடி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளக்கூடாது.


வரவு–செலவு மற்றும் ரசீதுகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். 


🚨 DEO / BEO / தலைமையாசிரியர்கள் உடனடியாக உறுதி செய்ய வேண்டிய TOP 10


1. 17.09.2026 முதல் 6–8ஆம் வகுப்புக்கு திட்டம் தொடங்குதல்


2. அனைத்து பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை சரிபார்த்தல்


3. 10-க்கும் குறைவான மாணவர் பள்ளிகளை அருகிலுள்ள மையத்துடன் இணைத்தல்


4. SHG சமையல் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்தல்


5. 15 நாட்களுக்கு முன் பயிற்சி முடித்தல்


6. சமையலறை, LPG, பாத்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்தல்


7. TNCSC மூலம் முக்கிய மளிகைப் பொருட்களைப் பெறுதல்


8. 6.00 AM–8.00 AM சமையல்; 8.00–9.00 AM உணவு வழங்குதல்


9. தினசரி பதிவேடுகள் மற்றும் Mobile App பதிவுகளை உறுதி செய்தல்


10. தொடர் கள ஆய்வு + உணவின் தரம்/அளவு + நிதி/இருப்பு கண்காணிப்பு மேற்கொள்ளுதல்.


மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம்


மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நியமனம் - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு



தற்காப்பு கலை பயிற்சி புகைப்படம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான தகவல்கள்


தற்காப்பு கலை பயிற்சி புகைப்படம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான தகவல்கள் 


தற்காப்பு கலை பயிற்சி நடைபெறும் பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம். 


பயிற்சி நடைபெறும்போது ஒவ்வொரு பயிற்சி வகுப்பையும்  *Time stamp உடன் கூடிய புகைப்படம் எடுத்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்* எனவும் ஒவ்வொரு பயிற்சி வகுப்பின் புகைப்படத்தினை வட்டாரவளமயத்தில் உறுதி செய்து அதன் பின்னரே தற்காப்பு கலை பயிற்றுனருக்கு ஊதியம் விடுவிக்கப்படும் எனவும் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நிறைய பள்ளிகளில் அனைவரையும் கும்பலாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளனர். அவ்வாறு செய்யக்கூடாது.


பயிற்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது  (Live photos) புகைப்படம் எடுத்து இருக்க வேண்டும். 


Image file ஆக புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும்.  PDF file ஆக பதிவேற்றம் செய்ய வேண்டாம்.


தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் தங்கள் பள்ளிகளில் எட்டு வகுப்புகள் முடிந்திருந்தால் உடனடியாக பயிற்றுனரின் ஊதியம்  கோருவதற்கு வட்டார வளமயத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள ஊதிய கேட்புப்பட்டியலில் பூர்த்தி செய்து வட்டார வள மையத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


ஊதியக்கேட்புப் பட்டியலுடன் தற்காப்பு கலை பயிற்றுநர் மற்றும்  மாணவிகளின் Attendance copy இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


நன்றி.


- வட்டார வளமைய மேற்பார்வையாளர் 


PKBFS New Name Board Installation| DSE Proceedings

 


பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் - புதிய பெயர்ப் பலகை நிறுவுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



PKBFS New Name Board Installation| DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்துகள்



பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்புப் பேருந்துகள் - சட்டசபையில் அறிவிப்பு


போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை

TN DIPR

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-27

பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்புப் பேருந்துகள்

போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற, மலை மற்றும் உட்புறப் பகுதிகளில் பள்ளி நேரங்களுக்கு ஏற்ப காலை மற்றும் மாலை நேரங்களில் 140 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 19,000 மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2026-2027 Term 1 / Quarterly Exam Time Table

  2026-2027 முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு கால அட்டவணை 2026-27- Quarterly Time Table- Classes - 1 to 12 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, தொட...