கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் செய்ய வேண்டியவை


பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் செய்ய வேண்டியவை





SMC மறுகட்டமைப்பு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 24 உறுப்பினர்கள் குறித்த தகவல்

 

செப்டம்பர் மாதம் நடைபெறும் மறுகட்டமைப்பு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 24 உறுப்பினர்கள் யார் யார் என்ற விபரம்



SMC Parents Awareness Meeting குறித்து CEO தகவல்

 


SMC Parents Awareness Meeting குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் CEO தகவல்


அனைவருக்கும் வணக்கம்.


*தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கான பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் தொடர்பான சுற்றறிக்கை* 


 முதற்கட்டமாக மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்து பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, *சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை* அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.


இதன்படி, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக *பார்வை-2இல் கண்டுள்ள அரசாணை பக்கம் 22 முதல் 25 வரை* கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி *கூட்டத்திற்கான அழைப்பிதழை* பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 27.08.2026 வியாழக்கிழமைக்குள்ளாக மாணவர்கள் மூலம், 

*புலனக் குழுச் (வாட்ஸ்அப்) செய்திகள், துண்டுப் பிரசுரங்கள்* மூலமாக தலைமையாசிரியர்கள் அனுப்பி வைக்கவேண்டும்.



மேலும், பெற்றோர்களுக்கான *விழிப்புணர்வுக் கூட்டத்தை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில்* பள்ளி மேலாண்மைக் குழுவின் தற்போதைய உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும்.


இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் *பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரது வருகை பதிவு விவரத்தினை* பெற்றோர் கூட்டம் நடைபெறும் 29.08.2026 அன்று பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி தலைமையாசிரியர் தவறாது பதிவு செய்ய வேண்டும்.


*Login to School Login - https://emis.tnschools.gov.in*


*Select "School" Tab*


*Select "SMC Reconstitution 2026-2028" Module*


*Select Meeting Type - "Parents Awareness meeting attendance*


"விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பதிவிட வேண்டும்.

விழிப்புணர்வுக் கூட்டத்தில் *பங்கேற்றவர்களின் குழு புகைப்படத்தை* பதிவேற்றம் செய்ய வேண்டும்.இறுதியாக *'Submit Attendance'* தேர்வு செய்தவுடன் *பதிவு செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின்* எண்ணிக்கையுடன் *மொத்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை* காண்பிக்கப்படும். 

அதனை சரிபார்த்து சரியாக இருப்பின் *மீண்டும் 'Submit'* தேர்வு செய்தவுடன் தங்கள் பள்ளியின் பள்ளிமேலாண்மைக் குழு விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும்.


*முதன்மை கல்வி அலுவலர் தஞ்சாவூர்*


SMC Awareness Meeting Attendance Update



பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2026-2028


பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மறு கட்டமைப்பு நாள் வருகைப்பதிவு செய்யும் வழிமுறை


Attendance - Demo of Web module


📌 EMIS – SMC Parents Awareness Meeting Attendance Update

🔐 Login to emis.tnschools.gov.in

🏫 Select School

📋 Select SMC Reconstitution 2026–2028

👥 Select Parents Awareness Meeting Attendance

👨‍👩‍👧 Enter Male & Female Attendance

📸 Upload Group Photo

✅ Click Submit Attendance → Submit



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு



Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director


கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு 02.09.2026 முதல் தொடங்குகிறது - இணை இயக்குநரின் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



யானையிடம் இருந்து நொடியில் உயிர் தப்பிய இளைஞர்கள்

 


யானையிடம் இருந்து நொடியில் உயிர் தப்பிய இளைஞர்கள்


மைசூர்-பண்ணாரி சாலை ஆசனூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை யானை தாக்க முயன்ற அதிர்ச்சி காட்சி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




Every Problem is an Opportunity - Today’s Short Story



 ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வாய்ப்பு - இன்று ஒரு சிறுகதை 


Every Problem is an Opportunity - Today’s Short Story


தினம் ஒரு குட்டி கதை -


"ஒரு ஊரில் , ஒரு ராஜா !"


ஒரு நகரத்தில் ஒரு சட்டமிருந்தது.


அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும்.


ஆனால்,  அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டும்தான்.!


ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.


அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது.  வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே.!


மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்...


இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது.


இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.

ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.


இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.


இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. 


அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.. இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. 


அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். 


அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.


மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான்.


மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''


தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான்,


 ''மன்னன் செல்லும் படகா இது! 


பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! 


நான் நின்றுகொண்டா செல்வது! 


சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''


கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! 


சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.


மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.


மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டி தான்.! 


காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை.


அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான.


படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் 


''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''


''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''


''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''


''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை.!''


''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''



''அதுவா.! 


நான் என்ன செய்தேன் தெரியுமா? 


ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்...!


இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; 


இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்...


மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். 


இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்...!


நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. 


இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.


இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்...!


சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்...! 


அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்...! 


உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு...!'' என்றான் மன்னன்.


கருத்து: சூழ்நிலை எதுவாயினும் மனம் தளராமல் சிந்தனை செய்தால் தீர்வு நிச்சயமாக கிடைக்கும்.


🌹🌹🌹🌹🌹🌹


கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் வரலாறும், சிறப்புகளும்

 




கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் வரலாறும், சிறப்புகளும்


நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கவும், பித்ரு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கவும் மன நோய்களை நீக்கி மனஅமைதி தரும் தலமாக உள்ளது கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம். கொடுமுடி மகுடேஸ்வரரை வழிபட்டால் சகல பிணிகளும் நீங்கும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற பாதிப்புகளும் விலகும் என்பது நம்பிக்கை.


மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, பல திருப்பணிகளைச் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.


இன்றைக்கு பல பேருக்கு திருமணம் நடைபெறாமல் தடை ஏற்படுகிறது. சிரமப்பட்டு திருமணம் நடைபெற்றாலும் புத்திரபாக்கியம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ராகு கேது தோஷம் திருமணம், புத்திர பாக்கிய தடையைத் தருகிறது. இந்த தோஷங்களும் தடைகளும் நீங்க சிறந்த பரிகார தலமாக உள்ளது கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம்.


சிவன், பிரம்மா, விஷ்ணு:


இது சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயமாக இது விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம். அதுபோல இங்கு மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால், இது கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை மகுடேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.


தல வரலாறு


மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது. ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும், தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க மேரு மலையை கையாண்டனர். 


ஆதிசேஷன் மேரு மலையை சுற்றி வளைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனிடமிருந்து மேரு மலையை விடுவிக்க முயற்சித்தார். இந்த போட்டியில் மேரு மலை சிறு சிறு துண்டுகளாகி, நாலா பக்கமும் சிதறியது. அவை ஒவ்வொன்றும் சிவலிங்கமாக மாறியது. அப்படி உருவானதே கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் என்று சொல்லப்படுகிறது.


அமுதபுரி ஆலயம்


பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் ‘பிரம்மபுரி' என்றும், திருமால் பூஜித்ததால் ‘அரிகரபுரம்' என்றும், கருடன் இத்தல இறைவனை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் ‘அமுதபுரி' என்றும் இந்த தலத்துக்கு பல பெயர்கள் உள்ளன.


திருமண வரம் கிடைக்கும்


வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. 


இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இந்தக் கோவிலில் வேப்பமரமும், அரச மரமும் இணைந்துள்ள மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும் குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.


ஆலய வழிபாடு:


கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரங்களும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன. 


இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடிநாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்.


சுயம்பு லிங்கம்:


இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களைக் காணலாம். அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்தபோது ஏற்பட்ட விரல் தடயங்கள் என்பது ஐதீகம். 


மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்று அமைந்துள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும். 


அம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியில் சரஸ்வதிக்கும் தனி சந்நிதி உள்ளது.


பிரம்மா:


இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிலர் இந்த மரம் அதையும் விட பழமையானது, இதன் வயதை கணக்கிட முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். வன்னி மரத்தடியில் பிரம்மாவின் சந்நிதி உள்ளது. 


இந்த வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்களும், மற்றொரு பகுதி முட்கள் இல்லாமலும் உள்ளது. ஆண் மரமாக கருதப்படும் இந்த வன்னி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை, காய்கள் காய்ப்பதில்லை என்பது சிறப்பம்சம். 


இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாட்களானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத் தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.


மகாலட்சுமி அருள்:


பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும், ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.


மன நோய் தீர்க்கும் ஆலயங்கள்:


காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும். காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகா விஷ்ணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற குற்றங்களும், மனநோயும் நீங்கும்.


நாக தோஷங்கள் நீங்கும்:


ஆதிசேஷனால் உருவான ஆலயம் என்பதால், இங்கு நாகர் வழிபாடு மிகவும் விசேஷம். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தற்போதும் நடைபெற்று வருகிறது. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் இதுபோன்று செய்கிறார்கள். 


இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைப் பேறு கிடைக்கவும் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.


எங்கு எப்படி செல்வது:


திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட இந்த ஆலயம், தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில், 210-வது திருத்தலமாகத் திகழ்கிறது. கரூர் - ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கொடுமுடி உள்ளது. கோவிலின் அருகிலேயே ரயில் நிலையம் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் எளிதாக வந்து செல்லலாம்.


 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் செய்ய வேண்டியவை

பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் செய்ய வேண்டியவை