பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் B.P. மாத்திரைகளை சாப்பிட்ட 3 மாணவிகள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஆசிரியர்கள் திட்டியதால் இரத்த அழுத்தம் மாத்திரைகளை சாப்பிட்ட 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் (மேல்பள்ளிப்பட்டு) பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 3 மாணவிகளை, ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையடைந்த அம்மாணவிகள் மூவரும் அளவுக்கு அதிகமான பிபி (இரத்த அழுத்த) மாத்திரைகளை உட்கொண்டு மயங்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், அவர்களை உடனடியாக செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றது.
அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்றைய சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களிடையேயான உறவு என்பது மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டியதாக இருக்கிறது. ஆசிரியர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த போக்கு காரணமாக ஆசிரியர்கள் படிக்காத குழந்தைகளை, ஒழுங்கீனமான குழந்தைகளை கண்டிக்க முடியாத நிலை இருக்கிறது.
இதற்கு பெற்றோரும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். சின்ன சின்ன தோல்வி, ஏக்கம், அவமானம் என எதையும் சந்திக்கவிடாமல், தோல்வியே சந்திக்காமல் வளரும் குழந்தைகள், திடீரென ஏற்படும் நெருக்கடியை அல்லது தோல்வியை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். செல்லம் கொடுத்து வளர்ப்பது என்பது அந்த குழந்தைகளை அழிப்பதற்கு சமம்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
கழிவறைக்கு சென்ற 9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி காயம் - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
* தருமபுரி: தொப்பூர் அருகே அரசு பள்ளியின் கழிவறை கதவை திறந்த 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சி
* தேர்தல் பணிகளின் போது கொடுக்கப்பட்ட மின் இணைப்பை பராமரிக்காததால் இரும்பு கதவு வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளது. கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
தினம் ஒரு தகவல்
பிறப்பு, இறப்பு பதிவு தாமதம்: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
1.பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம், 1969-ல் திருத்தம் செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு.
நிகழ்வு நடந்த 1 ஆண்டுக்கு மேல், 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய வேண்டுமெனில், மாவட்ட ஆட்சியர், துணை மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடுவரின் உத்தரவு அவசியம்.
3.
2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமான பதிவுக்கு முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் உத்தரவு கட்டாயம்.
4.
இரு சூழல்களிலும், பிறப்பு அல்லது இறப்பு விவரங்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்த பிறகே பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.
5.
தாமதப் பதிவுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.
பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட விதிகள் தாமத பதிவுக்கு பொருந்தும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ நாச்சியார் கோயில் தேரோட்டம் : விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
Local holiday for Virudhunagar district on August 14
‘காட்சில்லா எல் நினோ' (Godzilla El Nino) : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
விஸ்வரூபம் எடுக்கப்போகும் எல் நினோ
பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ, 2026-ன் இறுதியில் 1,000 ஆண்டுகளில் இல்லாத மிகத் தீவிரமான ‘காட்சில்லா எல் நினோ'வாக (Godzilla El Nino) மாறும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
அமெரிக்காவின் NOAA கணிப்பின்படி, இது தீவிரமடைய 81% வாய்ப்புள்ளது.
இதனால் 2027ல் இதுவரை இல்லாத கடும் வெப்பம், வறட்சி, பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கணிப்பு.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளிக் கல்வி இயக்ககம் - WWF India - Wild Wisdom Global Challenge-2026 ஆங்கில வினாடி வினா (English Quiz) போட்டி - பள்ளி மாணவர்கள் பங்கேற்பது சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) தொடர்பான வழிகாட்டுதல்கள்
வணக்கம்.🙏
10.08.2026 முதல் 17.08.2026 வரை நடைபெறும் தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) தொடர்பாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு Albendazole மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் தனியாக அனுப்பப்படும்.
கவனிக்க வேண்டியவை:
- உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாத்திரை வழங்க வேண்டாம்.
- காலை உணவு அல்லது மதிய உணவு எடுத்த பிறகே மாத்திரை வழங்க வேண்டும்.
- காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வழங்கலாம்.
- மாத்திரைகளை ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
- மாத்திரைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
- மாணவர்களின் உடல்நலன் குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நன்றி.
மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலி குறித்த விளக்கக் காணொளி
Census 2027 | HLO App | Video
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்