கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சட்டமன்றத் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரிய ஆசிரியர்கள் / அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி Dean முன்பு ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) சான்றிதழ் பெற்று வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு


சட்டமன்றத் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரிய ஆசிரியர்கள் / அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி Dean முன்பு ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) சான்றிதழ் பெற்று வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு


கரூர் மாவட்டம் : தேர்தல் 2026 - தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 - 4 சட்டமன்ற தொகுதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்தல் - உடல்நல பாதிப்புகளால் தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க கோரியது - தனியர்களுக்கு மருத்துவ தகுதி (Medical Fitness) குறித்த பரிந்துரையினை அனுப்பி வைக்க கோருதல் தொடர்பாக - கரூர் மாவட்ட ஆட்சியரின் குறிப்பாணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் குறிப்பாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ந.க.அ4/18466/2025 நாள் : 26.03.2026


மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,

கரூர்.


குறிப்பாணை


பொருள்:


தேர்தல் 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026-கரூர் மாவட்டம் 4 சட்டமன்ற தொகுதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்தல் உடல்நல பாதிப்புகளால் தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க கோரியது தனியர்களுக்கு மருத்துவ தகுதி (Medical Fitness) குறித்த பரிந்துரையினை அனுப்பி வைக்க கோருதல் தொடர்பாக.


பார்வை:

1. தனியரது விண்ணப்பம்.

2 தொடர்புடைய ஆவணங்கள்.


தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்கக் கோரியது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விண்ணப்பத்தின்பேரில் பணியாளர் மருத்துவ தகுதி பெறும் பொருட்டு மருத்துவ குழுமத்திற்கு பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக்குழு தலைவர் (Dean) முன்பாக 27.03.2026 அன்று காலை 10.00 மணிக்கு விண்ணப்பம் அளித்த அலுவலர்கள் நேரில் ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) குறித்து பரிந்துரையினைப் பெற்றுவர அறிவுறுத்துமாறு கீழ்க்கண்ட துறைத்தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு: மருத்துவ தகுதி கோரிய

அலுவலர்களின் பட்டியல்.


ஒம்/-கு.ரவிகுமார்.

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர், கரூர்.


/உண்மை நகல்/உத்தரவுப்படி/


மாவட்ட ஆட்சித்தலைவருக்காக,

26/3/26


பெறுநர்:


1. முதன்மைக் கல்வி அலுவலர்,கரூர். (35 விண்ணப்பங்கள்)


2. உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), கரூர். (1விண்ணப்பம்)


3. மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கரூர். (1 விண்ணப்பம்)


4. வட்டார போக்குவரத்து அலுவலர்,கரூர். (1விண்ணப்பம்)


5. மாவட்ட நூலக அலுவலர், கரூர். (1 விண்ணப்பம்)


6. சார்பதிவாளர், வெள்ளியணை. (1விண்ணப்பம்)



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-03-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 27.03.2026 

கிழமை:- வெள்ளி 


திருக்குறள்:


குறள் 844: 


வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை 

உடையம்யாம் என்னும் செருக்கு. 


விளக்க உரை: 

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.


பழமொழி :

A guilty conscience pricks. 

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.


பொன்மொழி : 

சேமிப்பு இல்லை என்றால் உழைப்பும் வீணே.



பொது அறிவு : 

01.இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

டாக்டர்.ஹோமி ஜஹாங்கீர் பாபா  -Dr.Homi J. Bhabha


02.இந்தியாவில் நவீன வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் (பசுமைப் புரட்சி) சிற்பி என்று அழைக்கப்படுபவர்யார்?

டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் 

Dr.M.S. Swaminathan.


English words :

Doodle – Drawing absent-mindedly

Scratch – Rough, quick writing


தமிழ் இலக்கணம்: 

அறிவோம் தமிழ் 

இன்று ஐவகை நிலங்களில் ஆடவர் எவ்வாறு அழைக்கப் படுகின்றனர் என்று காண்போம்

மருதம் - கடையர் 

நெய்தல் - பரதர்

பாலை- எயினர்

முல்லை- இடையர் 

குறிஞ்சி - வேடுவர்



அறிவியல் களஞ்சியம் :

மேகத்தின் எடை சுமார் 10 லட்சம் பவுண்டுகள் (million pounds) வரை இருக்கலாம். 


மார்ச் 27


உலக நாடக அரங்க நாள்  

உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.


உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.




யூரி அலெக்சியேவிச் ககாரின் அவர்களின் நினைவு நாள்

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.


நீதிக்கதை


 அழகிய ரோஜா செடியும் அற்புத கள்ளிச் செடியும்


அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.


அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.


நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காத என்று கேட்டது. 


சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது. 


நீதி:


தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.



இன்றைய செய்திகள்

27.03.2026


⭐தமிழகத்தில் ஏப்.1 முதல் அமலாகிறது 60 சுங்கச்சாவடிகளில் 5% வரை கட்டணம் உயர்வு


⭐தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் நடவடிக்கையில் இதுவரை ரூ.34.64 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 


⭐ புதுச்சேரியில் வழிப்பறி செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய முகமூடி கும்பலை போலீசார் கைதுசெய்துள்ளனர்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக புதியவர்கள் களமிறங்குவார்கள் என அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.


🏀 'டி-20' அரங்கில் கேப்டனாக 2 அல்லது அதற்கு மேல் சதம் விளாசியவர்கள் பட்டியலில் ரோகித், சமாரி, மெக் லானிங் உள்ளிட்டோருடன் இணைந்தார் அமேலியா கெர்.


Today's Headlines


⭐ In Tamil Nadu, toll fees at 60 toll plazas will be increased by up to 5% starting from April 1st.


⭐ In Tamil Nadu, flying squads and surveillance teams for election monitoring have seized ₹34.64 crore in cash so far.


⭐ In Puducherry, police have arrested a masked gang that was hiding with dangerous weapons, intending to commit robbery.


 SPORTS NEWS 


🏀 Chennai Super Kings captain Ruturaj Gaikwad has stated that new players will open the innings for the team.


🏀 In T20 cricket, Amelia Kerr has joined the list of captains who have scored two or more centuries, alongside Rohit Sharma, Sophie Devine, and Meg Lanning.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-03-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 26.03.2026 

கிழமை:- வியாழன் 


திருக்குறள்:

குறள் 843:

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

விளக்க உரை:

அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.


பழமொழி :
A contended mind is a continual feet.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.


இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.


பொன்மொழி :

நீங்கள் ஒருவருக்கு நன்மை செய்தால், அது உங்களுக்கே நன்மை செய்தது போன்றது. ஒருவருக்கு தீமை செய்தால் , அது உங்களுக்கே தீமையாகும் - அல்குர்ஆன்


பொது அறிவு :

01.விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?

ராகேஷ் சர்மா -Rakesh Sharma

02.காந்தி அமைதிப் பரிசு பெற்ற முதல் இந்திய அமைப்பு எது?

ராமகிருஷ்ணா மிஷன் -
Ramakrishna Mission


English words :

Debate – Discussion between candidates

Secret Ballot – Voting privately


தமிழ் இலக்கணம்:

அறிவோம் தமிழ்

இல்லை, அல்ல, அன்று

இந்த மூன்று வார்த்தைகளும் ஒரே பொருள் தருவது போல் தோன்றினாலும் அப்படி அல்ல. இவைகளை நாம் பயன்படுத்தும் இடம் வேறு படும்.

இல்லை என்பது ஒரு பொருள் அல்லது நபர் இல்லாததைக் குறிக்கும்.

1. என்னிடம் பணம் இல்லை

2. என் தகப்பனார் இங்கு இல்லை

அல்ல என்பது "ஒன்று வேறு ஒன்றாக இல்லை என்று சொல்ல"

1. இது என் புத்தகம் அல்ல

அன்று என்பதும் மேலே குறிப்பிட்ட அதே பொருள் தான் தரும் ஆனால் இது உயர்ந்த இலக்கிய நடை ஆக பயன்படுத்தப் படும்

1. இது உண்மை அன்று

2. இது நன்மை அன்று


அறிவியல் களஞ்சியம் :

ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்திலும், அதற்கு மூன்று இதயங்களும் உள்ளன.


மார்ச் 26

லூடுவிக் வான் பேத்தோவன் அவர்களின் நினைவுநாள்

லூடுவிக் வான் பேத்தோவன் (Ludwig van Beethoven, /ˈlʊdvɪɡ væn ˈbeɪˌtoʊvən/ (About this soundகேட்க); 1770 - மார்ச் 26, 1827)[1] அவர்கள் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார். அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.


நீதிக்கதை

நரி சொன்னப் பொய்

ஒரு நாள் காலையில் சேவலானது மரத்தின் மீது அமர்ந்து பலமுறைக் கூவிக் கொண்டே இருந்தது. சேவல் கூவும் சத்தத்தைக் கேட்ட நரி சேவல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியோ மிகுந்தப் பசியுடன் இருந்ததால் அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசை ஏற்பட்டது. ஆனால் சேவலோ மரத்தின் மீது இருந்ததால் நரியால் மரத்தில் ஏறிப்பிடிக்க முடியவில்லை.

சேவலைப் பார்த்து, சகோதரனே!, வணக்கம். உனக்கு ஒரு நல்ல செய்தி. இனி பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நீ கொஞ்சம் கீழே வந்தால் இதை பற்றித் தெளிவாக பேசுவோம் என்றது. நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டு தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

அதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, எதையோ அடிக்கடி எட்டிப் பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்குச் சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றது. வேட்டை நாய்கள் என்றதும் நரி வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி கிளம்பியது.

சேவல், அருமை சகோதரா, போகாதே, நான் இப்பொழுதே கீழே இறங்கி வருகிறேன். ஏன் நாய்களைக் கண்டு பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டது சேவல். அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால், என் நிலைமை என்னவாகும்? அதனால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் யாரை ஏமாற்றப் பார்த்தாய், உன்னுடைய கெட்டிக்காரத் தனமானப் பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது.

நீதி :

புத்திசாலிகளை யாரும் சீக்கிரத்தில் ஏமாற்ற முடியாது.


இன்றைய செய்திகள்

26.03.2026

⭐ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்; 8 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் ரத்து செய்தால் ரீபண்ட் இல்லை: புதிய விதிமுறை அமலாகிறது

⭐ கொலம்பியாவில் ராணுவத்தின் C-130 ஹெர்குலிஸ் ரக விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்துள்ளது. இதில் 66 பேர் வரை பலியாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்

⭐போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் முறைப்படி ஒப்புதல் கொடுத்துள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀5வது டி20: நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என வென்றது.


Today's Headlines

⭐ Shocking news for train passengers: No refund will be given if tickets are cancelled within 8 hours before departure — new rule comes into effect.

⭐ In Colombia, a military C-130 Hercules aircraft has crashed and broken apart. Around 66 people have died, and 70 others have been injured.

⭐ Iran has officially agreed to hold talks with the United States to bring an end to the war.

🏀 Sports News

🏀 5th T20: South Africa defeated New Zealand and won the series.
They won by 33 runs and secured the series 3–2


2025-2026 Term 3 / Annual Exam Question Papers - DEE Proceedings

 

2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


2025-2026 Term 3 / Annual Exam Question  Papers - DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 06.

ந.க. எண் : 003636/ஜெ2/2025, நாள் : 25.03.2026


பொருள் : தொடக்கக் கல்வி 2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் வழிகாட்டுதல்கள் - சார்ந்து


பார்வை : சென்னை 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், ந.க.எண். 048688 / எம்1 / இ1/2025. नं. 20.03.2026.


பார்வையில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு / மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்பட்டது.


இத்தேர்விற்கான வினாத்தாள்களை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கி மதிப்பீட்டினை நடத்திடவும் நடுநிலைப் பள்ளிகளில் வினாத் தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ளவும் பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


வகுப்பு 1 முதல் 5


மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் மாணவர்களின் வகுப்பு பயிற்று மொழி மற்றும் பாடவாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத் தாள்களை நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிட வேண்டும்.


மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்களின் EMIS உள்நுழைவின் வழியாக 25.03.2026 முதல் 30.03.2026 வரை வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு-1 இல் இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள்  எண்ணிக்கைக்கு ஏற்ப நகலெடுத்தல் வேண்டும்.


நகலெடுக்கப்பட்ட வினாத்தாள்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஒவ்வொரு பள்ளிக்கும் வகுப்புவாரியாக, பாடவாரியாக மற்றும் பயிற்றுவழி வாரியாகப் பிரித்து, தனித்தனி A3 foolscap size உறைகளுக்குள் வைத்து அவ்வுறையின் மீது பின்வரும் விவரங்களை எழுதி ஒட்டுதல் வேண்டும்.


வகுப்பு:


பாடத்தின் பெயர்


பயிலும் வழி:


தேர்வு நாள்:


ஒரு பள்ளிக்குத் தேவைப்படும் உறைகளின் எண்ணிக்கை 19 ஆகும். (1ஆம் வகுப்புக்கு 3, 2ஆம் வகுப்புக்கு 3, 3ஆம் வகுப்புக்கு 3, 4ஆம் வகுப்புக்கு 5, 5ஆம் வகுப்புக்கு 5, மொத்தம் 19)


அனைத்துப் பள்ளிகளுக்கும் 3ஆம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு நடைபெறுவதற்கு 2


நாள்களுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.


+ அவ்வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் பாதுகாப்பாக வைத்து தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணையின்படி அன்று நடைபெறவிருக்கும் பாடத்திற்கு உரிய வினாத்தாளை மட்டும் பயன்படுத்தி அன்றைய மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்தப்பட வேண்டும்.


வகுப்பு 6 முதல் 8


வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக http://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.


+இணைப்பு -2இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1.00 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.


வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.


தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, துறையின் சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை ஆசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.


அனைத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு 2இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை நன்கு அறிந்திருப்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.


தொடக்கக்கல்வி இயக்குநருக்காக


இணைப்பு:


1. பதிவிறக்க வழிமுறைகள் வகுப்பு 1-5 

2. பதிவிறக்க வழிமுறைகள் வகுப்பு 6-8


பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) நகள்


1. அரசு கூடுதல் முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை. தலைமைச் செயலகம், சென்னை 09


பணிவுடன் அனுப்பலாகிறது.


2 மாநிலத் திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி. சென்னை - 06


3. இயக்குநர்.பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை 06.


தசுவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது


5. முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டம்


தகவலுக்காக


இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை - 06


அரசு ஊழியர்கள் EV வாகனம் வாங்கினால் தள்ளுபடி

 


அரசு ஊழியர்கள் EV வாகனம் வாங்கினால் தள்ளுபடி


 அரசு ஊழியர்களுக்கு மின்சார வாகனங்கள் வாங்கும் போது சிறப்பு தள்ளுபடி வழங்கும் திட்டத்தை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.


இந்த திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மின்சார வாகனங்களை (Electric Vehicles) வாங்கும்போது அதிகபட்சம் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்காக மகிந்திரா, ஓலா, கிராவ்டன், ஏதர் போன்ற நிறுவனங்களுடன் தெலங்கானா அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கும், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்.


March 2026 ஊதியம் மற்றும் பென்ஷன் எப்போது கிடைக்கும்



March 2026 ஊதியம் மற்றும் பென்ஷன் எப்போது கிடைக்கும்


Salary & Pension ECS SETTELEMENT DATE:


ஓய்வூதியம் மற்றும் ஊதியம் ஏப்ரல் 2ஆம் தேதி அனைவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.


கருவூலத்துறை தகவல்


TET எழுத விண்ணப்பிக்க SMC Teachers, பகுதி நேர ஆசிரியர்கள் & AI ஆகியோருக்கு Service Certificate வழங்குதல் தொடர்பாக Ranippet DEO(E) அவர்களின் தகவல்


TET எழுத விண்ணப்பிக்க SMC Teachers, பகுதி நேர ஆசிரியர்கள் & AI ஆகியோருக்கு Service Certificate வழங்குதல் தொடர்பாக  ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) Ranipet DEO(E) அவர்களின் தகவல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் கற்பித்தல் பணி நிலையில் EMIS அடையாள எண் கொண்டு பணிபுரியும் தகுதி உள்ள தற்காலிக/ பகுதி நேர/ தொகுப்பூதிய ஆசிரியர்களும் தகுதித்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்





G.O. Ms. No : 76, Dated : 12-03-2026 - அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பாக நடத்திட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

 


2025-2026ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பாக நடத்திட ஆணை


G.O. Ms. No : 76, Dated : 12-03-2026 - Government Order issued allocating funds for the successful conduct of annual day function in all government schools


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பாக நடத்திட ₹15 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை எண் : 76 வெளியீடு - நாள்:12.03.2026 வெளியீடு


தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து அரசு பள்ளிகளிலும் 2025-2026ஆம்  ஆண்டு விழா கொண்டாட  நிதி ஒதுக்கீடு. அரசாணை எண் : 76 பள்ளிக்கல்வித் துறை நாள் : 12.03.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




New numbers for IT forms

 

 

ஏப்ரல் 1 முதல் வருமான வரி படிவங்களுக்கு புதிய எண்கள்


New numbers for income tax forms from April 1


ஏப்ரல் 1 முதல் வருமான வரி படிவங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்த எண்களுக்கு பதில் புதிய எண்கள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது










பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான TET - விண்ணப்பிக்கும் பொழுது Upload செய்ய வேண்டிய Documents & File size விவரங்கள்

 

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பிக்கும் பொழுது Upload செய்ய வேண்டிய Documents & File size விவரங்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு TET 2026


▪ தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test for Working Teachers) நடைபெற இருக்கிறது.


▪️தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் upload செய்ய வேண்டிய documents details.


▪️நீங்கள் upload செய்யும் documents file format & file size போன்ற விவரங்கள்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சட்டமன்றத் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரிய ஆசிரியர்கள் / அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி Dean முன்பு ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) சான்றிதழ் பெற்று வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சட்டமன்றத் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரிய ஆசிரியர்கள் / அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி Dean முன்பு ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitn...