கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளிகளில் ITI அமைத்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (School ITI) நிறுவுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Setting up of ITI in Government Schools - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேவையான ஆவணங்கள்

 


18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேவையான ஆவணங்கள்


முக்கிய அறிவிப்பு


18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க டிசம்பர் 9 செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேவையான ஆவணங்கள்


1. ஆதார் கார்டு

2. போட்டோ 1

3. பிறப்புச் சான்றிதழ்

4. பள்ளிச் சான்றிதழ் (TC)



 வாக்குச்சாவடிகளில் BLOக்கள் இருப்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.


THIRAN - அரையாண்டு தேர்வு சார்ந்த தகவல்கள்


திறன் - அரையாண்டு தேர்வு சார்ந்த தகவல்கள்:


- THIRAN மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு, டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை அரையாண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும். 


- திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும். 


- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக  பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 


- Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்த அரையாண்டுத்தேர்வில் பங்குபெற வேண்டும். 


- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 


- அரையாண்டுத் தேர்விற்கான "மாதிரி வினாத்தாள்" தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு இந்த வாரம் அனுப்பப்படும். 


- மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.


TETOJAC மாநில உயர்மட்டக்குழுவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு

 

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு


டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் இன்று 08-12-2025 சென்னையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் பேரெழுச்சியோடு நடைபெற்றது. இந்த போராட்டத்தின்  தொடர்ச்சியாக காவல்துறையின் ஏற்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் டிட்டோஜாக்  மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நேரடியாக சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்தனர். 


அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஏற்கனவே கடந்த 12.08.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்  ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக எடுத்துரைத்தனர். 


அது தொடர்பாக அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பும் அவரிடம் வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நான்கு கோரிக்கைகள் ஏற்பு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆணைகள் விரைவில்  வெளியிடப்படும் என்று அமைச்சர் அவர்கள்  கூறிய விவரங்களும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. 


இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட  மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் உங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக  இன்றே உத்தரவுகள் வெளியிடுவதற்குரிய வாய்ப்பு இல்லை என்றாலும்,  இந்த நிமிடம் முதல் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தீர்வு காண்பதற்கான முயற்சிகளை நான் விரைவுபடுத்துகிறேன். 


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களோடு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்தார்கள் .அந்த அடிப்படையில் அவருடைய பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது 


  அதன்பின்பு தலைமைச் செயலக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில்

 இன்று நடைபெற்ற ஒரு நாள் காத்திருப்புப்  போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ள சூழலில், இந்த போராட்டத்தை சென்னையில் தொடர்ந்து நடத்துவதை விட இந்த போராட்டத்தை ஒரு விரிவடைந்த போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .


அதன் அடிப்படையில் வருகிற 12/12/2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு நாள் வேலை நிறுத்தத்துடன் கூடிய மறியல் போராட்டத்தை நடத்துவது என முடிவாற்றப்பட்டுள்ளது


இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான டிட்டோஜாக் கூட்டங்களை 10-12-2025 அன்று நடத்த வேண்டும் என முடிவாற்றப்பட்டது


 அதன்பின்பும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு மீண்டும் கூடி அறிவிக்கும் 


டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள்



Pears Pure & Gentle Bathing Soap Bar 125 g (Combo Pack of 8) Moisturizing Glycerin Soap for Soft|| Glowing Skin & Body - Paraben Free|| For Men & Women


https://amzn.to/44fLDid




TETOJAC தலைவர்கள் கைது, வீட்டுக்காவல் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் - TNPGTA அறிக்கை



TETOJAC தலைவர்கள் கைது, வீட்டுக்காவல் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் - TNPGTA அறிக்கை


TNPGTA மாநிலக் கழக கண்டன செய்தி

🌑🌑🌑🌑🌑🌑🌑 


*பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தொடக்க கல்வி கோரிக்கைகள் சார்ந்து டிட்டோஜாக் கூட்டமைப்பு சார்பாக பள்ளிக்கல்வித்துறை DPI இயக்குனர் அலுவலகத்தில்  காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு செய்து நாளை காலை போராட்டத்திற்கு புறப்பட தயாரான  நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் ஆசிரியர் விரோத போக்கை TNPGTA பேரியக்கம் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.* 

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*காவல்துறையை வைத்து கோழைத்தனமாக அடக்கு முறையை கையாண்டிருக்கும் தமிழக அரசின் அடக்குமுறைக்கு TNPGTA சார்பாக கண்டனங்கள்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


*அடக்கு முறையை கையாள கையால தமிழக மண்ணில் வீரியமான போராட்டங்கள்  தமிழக மண்ணில்  கடும் கோபத்துடன் இருக்கும் ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களால் தமிழக அரசுக்கு எதிராக கட்டமைக்கப்படும்*

 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


*ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறுத்தி ஆசிரியர் அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றிட உருப்படியான முயற்சிகளை செய்திட TNPGTA பேரியக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்*


🌑🌑🌑🌑🌑🌑🌑🌑


மாநிலக் கழகத்தின் சார்பாக


*பொ.அன்பழகன்*

 மாநில பொதுச் செயலாளர்

*TNPGTA*


Pears Pure & Gentle Bathing Soap Bar 125 g (Combo Pack of 8) Moisturizing Glycerin Soap for Soft|| Glowing Skin & Body - Paraben Free|| For Men & Women


https://amzn.to/44fLDid




TETOJAC தலைவர்கள் கைது, வீட்டுக்காவல் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் - TNHHSSGTA அறிக்கை

 

 

TETOJAC தலைவர்கள் கைது, வீட்டுக்காவல் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் - TNHHSSGTA அறிக்கை


*TNHHSSGTA மாநில அமைப்பு கண்டன அறிக்கை*

****************************************

*கண்டிக்கிறோம்* *கண்டிக்கிறோம்*

*****************************************

*டிட்டோஜாக் தலைவர்கள் கைது , வீட்டுக்காவல் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது*


      *தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வித் துறையில் செயல்பட்டு வரும் ஆசிரியர் இயக்கங்கள் இணைந்த கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) பல்வேறு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கைகளுக்காக அரசுக்கு முன்கூட்டியே அறிவிப்பாணை வழங்கி நாளை 8.12.2025 திங்கள்கிழமை சென்னை DPI வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில்*

       *இயக்க பொறுப்பாளர்களிடம் கோரிக்கையில் குறித்து அழைத்து பேசி தீர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக  தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்தும் வீட்டுக்காவலில் வைத்தும் வருவதாக தகவல்கள் வருகிறது*

      *கோரிக்கைகளுக்காக அறவழிப் போராட்டத்தில் ஈடுபடும் இயக்க பொறுப்பாளர்களை கைது செய்வதை அல்லது வீட்டுக்காவலில் வைப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந் நடவடிக்கையை உடனடியாக  தமிழக அரசு கைவிட்டு டிட்டோஜாக் நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.*

      *மேலும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை அடக்கு முறையை கையாள நினைத்தால் தமிழக அரசுக்கு அது பலனளிக்காது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்*

              இவண்

முனைவர் *அ. மாயவன்* Ex MLC

நிறுவனத் தலைவர்


*சி.ஜெயக்குமார்*

மாநிலத் தலைவர்


*மா .குமரேசன்*

மாநில பொதுச் செயலாளர்


*ம. விஜய சாரதி*

மாநில பொருளாளர்


*மு.மாயகிருஷ்ணன்*

மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்

*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*


Pears Pure & Gentle Bathing Soap Bar 125 g (Combo Pack of 8) Moisturizing Glycerin Soap for Soft|| Glowing Skin & Body - Paraben Free|| For Men & Women


https://amzn.to/44fLDid




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-12-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-12-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 08.12.2025

கிழமை:- திங்கள்கிழமை


 

திருக்குறள்: 

பால் : பொருட்பால் 

‌இயல்:  அரசியல் 

அதிகாரம்: அறிவுடைமை

குறள்: 422



சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ 

நன்றின்பா லுய்ப்ப தறிவு. 


விளக்கவுரை: 


மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.


 *பழமொழி :* 


one honest friend is better than a hundred fake ones. 

நூறு போலி நண்பர்களை விட ஒரு உண்மையான நண்பன் சிறந்தவன்.


 *ஈரொழுக்கப் பண்புகள் :* 


1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.


2.  காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.


 *பொன்மொழி :* 


சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான சாப்பாட்டைப் பார்க்கிலும், அமைதியோடே சாப்பிடும் எளிய‌ உணவே  நலம். 

- சாலமோன் ஞானி


 *பொது அறிவு :* 


01. இந்தியாவின் முதல் துணை பிரதமராக பணியாற்றியவர் யார்?

விடை: சர்தார் வல்லபாய் படேல் Sardar Vallabhbhai Patel. 


02. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளை கொண்ட உயர்நீதிமன்றம் எது?

விடை: அலகாபாத் உயர்நீதிமன்றம் Allahabad High Court


 *English words :* 


curdled -turned sour

drop by - to visit someone for a short time


 *தமிழ் இலக்கணம்:* 


 சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.


1. உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மெய்யுடன் இணைந்து உயிர் மெய்யாக மட்டுமே இறுதியில் வரும்

எ. கா. –அவரை,  பந்து

2. ஆய்த எழுத்து இறுதியில் வராது 

3. ண், ம், ய், ர், ன், ல், ழ், ள் ஆகிய மெய்யெழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.


 *அறிவியல் களஞ்சியம் :* 


 _மனித உடல் & விலங்குகள்_ 


இரத்த நாளங்கள்:

மனித உடலின் அனைத்து இரத்த நாளங்களையும் ஒன்றாகச் சேர்த்தால், அது பூமியை இரண்டு முறைக்கும் மேல் சுற்றக்கூடும்!


விலங்குகளின் திசைகாட்டி:

கடல் ஆமைகள், பறவைகள் போன்ற பல விலங்குகள் பூமியின் காந்தப்புலத்தை உணர்ந்து திசையை அறிகின்றன.


நரம்பு மண்டலம்: மூளையில் இருந்து உடலுக்கு செல்லும் மின் சமிக்ஞைகளின் வேகம் மணிக்கு 250 மைல்கள் வரை இருக்கும்.


___________________________________________

__________

எம்மோடு இணையுங்கள் 

https://chat.whatsapp.com/JXduPnmUsWyI0HqOGBYrcR?mode=hqrt2

____________________________________________________


 *நீதிக்கதை* 


 _தற்குறி நரி_ 


ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் பெரியதாக தெரிந்தது. நரிக்கு ஏக குஷி. "நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். அதுவும் இந்த காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விடவும் பெரியவனாக நான் உள்ளேன் என நினைத்துகொண்டே வேட்டைக்குச் சென்றது. செல்லும் வழியில் நரி ஒரு சிங்கத்தை கண்டது. சிங்கமோ சற்று முன்னர் தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தது.


நரியும் தன்னுடைய நிழல் சிங்கதைவிடவும் பெரியதாக இருப்பதாக நினைத்துகொண்டு சிங்கம் வரும் வழியில் நடந்து சென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் கடந்து சென்றது.


நரிக்கோ ரொம்ப சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருப்பதனால் சிங்கம் என்னைக் கண்டு பயந்து சென்றது என நினைத்துகொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்குச் சென்றது.


மாலை வீட்டிற்குச் சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை எல்லாம் அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் கூட்டத்திற்கு வந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும், "இனிமேல் இந்த காட்டிற்கு நான் தான் ராஜா" என்றது.


யானையோ, “இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது. உடனே நரி காலையில் நடந்த சம்பவத்தைக் கூறி சிங்கமே என்னைக் பார்த்து பயந்து சென்றது” என்றது. கூட்டத்தில் இருந்த மானோ, “சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜாவாக்குகிறோம்” என்றது.


அடுத்த நாள் நரி அந்த சிங்கத்தை தேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதை கண்டு நரி கர்வத்துடன் நின்றது.


சிங்கம் வந்தவுடன் சிங்கத்தை பார்த்து, "என் முன்னாள் மண்டியிட்டுச் செல்" என்று நரி கூறியது.


சிங்கமோ மிகவும் கோபங்கொண்டு தரக்குறைவாக பேசிய நரியை பார்த்து, "உன்னை மன்னித்து விடுகிறேன் உடனே இங்கிருந்து செல்" என்றது.


நரியோ சிங்கம் தன்னை கண்டு பயந்து விட்டது என நினைத்து “முடியாது” என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது. அது மதிய நேரம் என்பதால் நிழல் உண்மையான அளவில் இருந்தது. அப்பொழுது தான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில் தான் தனுடைய நிழல் பெரியதாக இருந்தது என்று.இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கம் நரியை ஒரே அடியினால் கொன்றது.


நீதி: முட்டாள் தனமாக பெரிதாக யோசித்தால் அதற்கான இழப்பும் பெரிதாக இருக்கும்.


 *இன்றைய செய்திகள்* 


 _08.12.2025_ 


வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில்,  4 வழிச்சாலையாக இந்த புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.


சென்யார் புயலால் இந்தோனேசியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900– ஐ கடந்தது.தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் சென்யார் புயல் உருவானது. 410பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.


ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த  நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.


 *விளையாட்டுச் செய்திகள்* 


ஒரு ஆண்டில் அதிக கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்ற ஆண்டாக 2025-ம் ஆண்டு பார்க்கப்படுகிறது

.2025-இல் 28 வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.


இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


 *Today's Headlines* 


Chief Minister M.K. Stalin inaugurated the Veeramangai Velunachiyar flyover. This new flyover has been built as a 4-lane road, 1 km long, at an estimated cost of Rs. 150 crore.


The death toll from Cyclone Sennyar in Indonesia has crossed 900. Cyclone Sennyar formed in the area adjacent to the southern Andaman Islands. The death toll is feared to rise as 410 people are missing.


A powerful earthquake struck Alaska, USA, registered at 7 on the Richter scale. The earthquake shook houses violently. No tsunami warning was issued despite the powerful quake.


 _SPORTS NEWS_ 


The year 2025 is seen as the year with the most cricketers retiring in a single year. 28 players have retired in 2025.


Australia won the 2nd Test against England by 8 wickets.



Ambrane Unbreakable 60W Fast Charging 1.5M Braided Type C to Type C Cable for Smartphones, Tablets, Laptops & Other Type C Devices, PD Technology, 480Mbps Data Sync (RCTT15, Black)


https://amzn.to/48CPOWv




2026 RH / RL Days List



 2026ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) - சமீபத்திய G.O (Ms) No 14 HRM ( FR-iii) Dept. , Dated 01-02-2022 அரசாணையுடன்


வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் பட்டியல் 2026


2026 RH / RL Days List



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



நண்பர்களே வணக்கம் 🙏


அரசு RH/RL list மட்டுமே வெளியீடு செய்யும்... 


எந்த எந்த பண்டிகை எந்த நாளில் வருகிறது என்று பட்டியல் எதுவும் அரசு வெளியிடுவது இல்லை..

 

இந்த ஆண்டு 2025 Restricted Holidays / Restricted Leave சில குழப்பங்கள் இருந்தது ... 


2026 RH/RL பட்டியல் பண்டிகை தேதிகளின் அடிப்படையில் தயாரித்து இணைத்துள்ளேன்...


இஸ்லாமிய பண்டிகை பிறையின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது நீங்கள் அறிந்ததே...


ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினத்தில் வரும் RH yellow colour highlighted 😊


ஒரே நாளில் இரண்டு பண்டிகை blue colour highlighted..


 G.O (Ms) No 14 HRM ( FR-iii) Dept. , Dated 1.2.22 இன் படி 33 Festival / Occasion



>>> வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் பட்டியல் 2026 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தகவலுக்காக.

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 625702.

7/12/25



Ambrane Unbreakable 3A Fast Charging 1.5m Braided Type C Cable for Smartphones, Tablets & other Type C devices, 480Mbps Data Sync, Quick Charge 3.0 (RCT15A, Black)


https://amzn.to/4pThsWc




பள்ளிக்கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



 பள்ளிக்கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - நாளிதழ் செய்தி 


தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கல்வி சாா்ந்த இணை நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.


அதன் விவரம்: பள்ளி மாணவா்கள் அறிவியல் கருத்துக்கள் வாழ்க்கை நெறிகளை பெற்றிட பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்தும் நோக்கில், நிலையான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகள், மாதிரி பள்ளிகள், தமிழ அரசு அங்கீகாரம் பெற்ற மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இணைவு பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்.


கல்விப் பணிகளில் செயலாற்றிவரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பட்டியல் மாநில அளவில் பள்ளிக்கல்வி இயக்குநராலும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியா்கள் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் பராமரிக்கப்படும். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அரசு சார நிறுவனங்கள் பள்ளிகளில் நிகழ்ச்சிகளில் நடத்துதல், நுழைவுத் தோ்வு சிறப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும் முன்பு பள்ளி நிா்வாகம், மாவட்ட கல்வித் துறை நிா்வாகத்திற்கு உரிய தகவல் தெரிவித்தால் போதும். உரிய அனுமதி பெறத் தேவையில்லை. பட்டியலில் இடம் பெறாத தொண்டு நிறுவனங்கள் பள்ளி செயல்பாடுகளில் பங்கேற்கும் போது, தங்களது நிகழ்ச்சிகளின் செயல் திட்டத்தை பள்ளிகள் அமைந்துள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு முழு விவரங்களையும் சமா்பிக்க வேண்டும்.



மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், சமூக நல அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட 8 உறுப்பினா்கள் குழுவில் இடம் பெற்றிருப்பா். 


மாநில அளவிலான குழுவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பல்வேறு பள்ளிக்கல்வி இயக்குநா்கள் உள்ளிட்ட 7 உறுப்பினா்கள் குழுவில் இடம் பெற்றிருப்பா்.


பள்ளிகள் அன்றாட கற்பித்தல் நிகழ்வுகளுக்கு இடையூறின்றி பாடத்திட்டத்தோடு தொடா்புடைய செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதுவும் பள்ளிகளில் தலைமையாசிரியா் அல்லது அவரால் அங்கீகாரம் பெற்ற ஆசிரியா் முன்னிலையில் இந்த செயல்பாடுகள் நடைபெறும் போது, அவா்கள் அதிருப்தியடைந்தால் தற்காலிகமாக நிகழ்ச்சியை நிறுத்தவும் அதிகாரம் உண்டு.


பல்வேறு பள்ளி விழாக்கள், கலை, பண்பாடு, பாரம்பரியம், மரபு சாா் விழாக்கள், பண்டிகைகள் ஆகியவை பள்ளிகளில் கொண்டாடும் போது மாணவா்கள் பாதுக்காப்பை கருத்தில் கொண்டு நேரம், அவசரகால வழி போன்றவைகளை நிா்ணயிக்கவேண்டும். 


ஊறுவிளைவிக்கும் ஒளிவிளக்குகள், மாசு ஏற்படும் ஒலி பெருக்கிகள் போன்றவைகளில் கவனம் தேவை. விழா ஒருங்கிணைப்பு குழுவில் அனைத்து மதங்களைச் சாா்ந்த ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் இடம் பெறவேண்டும்.


பள்ளி நிகழ்வில் ஒளி, ஒலிப் பாடல்கள், சொற்பொழிவுகள் ஆகியவை கண்ணியமிக்கவையாகவும் இருத்தல் வேண்டும். விழா ஒருங்கிணைப்புக் குழு ஒத்திகை பாா்த்து அனைவருக்கும் ஏற்ற வகையிலும் அமைந்துள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். 


சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்கக் கூடியவா்களின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதன்மைப் பட்டியலில் பராமரிக்கப்படுகிறது. இந்த பட்டியல்களில் இடம் பெறாதவா்கள் பங்கேற்கும் போது அவா்கள் குறித்த தனிப்பட்ட முழு விவரங்களையும் அளித்து உரிய முன் அனுமதி பெற வேண்டும். அனைத்து முன் அனுமதிகளும் 15 வேலை நாள்களுக்கு முன்பு பெறவேண்டும். விண்ணப்பங்களை பரிசீலிக்கும் குழுவிற்கும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.


கல்விச் சுற்றுலா, களப் பயணம், வெளிநாடு சுற்றுலா போன்றவைகள் மேற்கொள்வதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.


மாணவா்களை சமூகத்திற்கு பொருத்தமுள்ள மனித வளமாக உருவாக்கும் பள்ளிச் செயல்பாடுகளில் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் நோக்கமாகக் கொண்டு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை பள்ளி நிா்வாகங்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் பள்ளி ஆசிரியர்கள்



மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 


2027ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு


நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை இரு கட்டங்களாக நடத்த மத்திய அரசு திட்டம். முதற்கட்டமாக வீடுகளும், அதன்பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடைபெறும் என மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவிப்பு.


2026 ஏப்ரல் - செப்டம்பர் வரை மாநிலங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களில், வீடுகள் கணக்கெடுப்பு நடைபெறும். பின்னர் 2027 மார்ச் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடக்க உள்ளன.


இது குறித்த தகவல்கள் 


2026 ஏப்ரல் முதல் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும் பணி தொடங்கும் என்றும், 2027ல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும்  மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி இரு கட்டங்களாக நடைபெறும் என்றும்  அறிவிக்கப்பட்டு உள்ளது.


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில்,  இதுதொடா்பான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி லோக்சபாவில் கேள்வி எழுப்பினார்., இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் , மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.


முதல் கட்டமாக  2026 ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையில் வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிகள்  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் வசதிக்கேற்ப 30 நாள்களுக்கு நடத்தப்படும்.


இரண்டாம் கட்டத்தில் மக்கள்தொகை கணக்கிடுதல், 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்கப்படும்.


பனிப்பொழிவு பகுதிகளைக் கொண்ட, லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள் போன்ற  2-ஆம் கட்ட கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதத்திலேயே நிறைவடையும்.



கடந்த ஏப்ரலில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும். 


ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் முன், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள், தரவுப் பயனா்களின் உள்ளீடுகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் கேள்விகள் இறுதி செய்யப்படும்.


150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நமது முந்தைய கணக்கெடுப்புகளின் அனுபவங்கள், அடுத்த கணக்கெடுப்புப் பணிகளில் பயன்படுத்தப்படும். 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்ம முறையில் நடத்தப்படும். அதன்படி, கைப்பேசி செயலிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், மக்கள் தங்களின் விவரங்களை இணையவழியில் சுயமாகப் பதிவேற்றவும் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.


2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நாடு தழுவிய முன் சோதனை நவம்பர் 30 அன்று முடிவடைந்தது, இதுதொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சகம் மேலும் கூறியது. நவம்பர் 10 முதல் 30, 2025 வரை நடத்தப்பட்ட வீட்டுப் பட்டியல் கட்ட முன்னோடி, டிஜிட்டல் தரவு சேகரிப்பு மாதிரியையும் சோதித்து, நவம்பர் 1 முதல் 7, 2025 வரை பதிலளிப்பவர்களை சுயமாக கணக்கெடுக்க அனுமதித்தது.


1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் விதி 6 இன் படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாத்தாள்கள் மற்றும் அட்டவணைகள் சட்டத்தின் பிரிவு 8 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் மத்திய அரசால் அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலம் அறிவிக்கப்படுகின்றன. பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் கேள்வித்தாளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்தது, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பொதுவாக கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். “2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான காலக்கெடு முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் பின்பற்றப்பட்ட கடந்த கால நடைமுறைகளைப் போலவே வைக்கப்பட்டுள்ளது.”


மக்கள் தொகை கணக்கெடுப்பில், 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை மற்றும் 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) ஆணை (அவ்வப்போது திருத்தப்பட்டது) ஆகியவற்றின் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட SC மற்றும் ST களின் பட்டியலின்படி பட்டியல் சாதிகள் (SCs) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (STs) கண்டிப்பாக கணக்கிடப்படுகிறார்கள்.


2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஏப்ரல் 30, 2025 தேதியிட்ட அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் முடிவின்படி சாதி கணக்கெடுப்பு செய்யப்படும். 


“மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்விகள் இறுதி செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்படும். 1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 8 இன் துணைப்பிரிவு (2) இன் கீழ், பதிலளிப்பவர் கேள்விகளுக்கு தனது சிறந்த தகவல்களை அளிக்க வேண்டும்.”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Shakti Technology S3 High Pressure Car Washer Machine 1800 Watts and Pressure 120 Bar for Cleaning Car, Bike & Home (S3)


https://amzn.to/4pO3TqZ




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளிகளில் ITI அமைத்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (School ITI) நிறுவுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Set...