கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் கூடுதலாக 6568 வாக்குச் சாவடிகள் - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தி வெளியீடு


தமிழ்நாட்டில் கூடுதலாக 6568 வாக்குச் சாவடிகள் - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தி வெளியீடு


Additional Election Booths - TN CEO Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Bags For Womens / Ladies Shoulder Bag


https://amzn.to/4537uJR




மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ரயில்களில் சலுகைகள்: மத்திய அமைச்சர்


 மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ரயில்களில் சலுகைகள்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்


ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் இலவசமாக சக்கர நாற்காலிகளை பயன்படுத்த ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. எனினும், பயணிகளுக்கு துணையாக எவரும் இல்லையெனில் உரிமம் பெற்ற தொழிலாளர்களை நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து தகவல்கள் ரயில் நிலையங்களின் வளாகங்களில் இடம் பெற்றுள்ளன. தற்போது 5,868 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள் உள்ளன.


மேலும் வயதான, மாற்றுத்திறனுடைய மற்றும் நோயாளிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு மற்ற முன்முயற்சிகளையும் ரயில்வே மேற்கொண்டுள்ளது. 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கீழ் படுக்கையை ஒதுக்க கணினி மூலம் பயணிகள் முன்பதிவு முறையில் வகை செய்யப்பட்டுள்ளது. அதற்கான விருப்பத்தேர்வு இல்லாத நிலையிலும் முன்பதிவு செய்யும்போது உள்ள இடங்களைப் பொருத்து ஒதுக்கப்படும்.  தூங்கும் வசதியைக் கொண்ட ஒரு பெட்டியில் 6 முதல் 7 கீழ் படுக்கைகளும், மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் 4 முதல் 5 கீழ் படுக்கைகளும், இரண்டடுக்கு குளிரசாதனப் பெட்டியில் 3 முதல் 4 கீழ் படுக்கைகளும் மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு ஒதுக்கப்படுகிறது.


இத்தகவலை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று (10 டிசம்பர் 2025) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.


LuvLap Moisturising Wipes with Aloe Vera Lid (72 Wipes/Pack, Pack of 3)


https://amzn.to/48Hb39G




SIR பணியின் போது கண்டறிய முடியாத, காலமான, போலி வாக்காளர்கள் பட்டியலை முகவர்களிடம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

 

 

எஸ்ஐஆர் SIR பணியின் போது கண்டறிய முடியாத, காலமான, போலி வாக்காளர்கள் குறித்த பட்டியலை வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு


நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர கணக்கெடுப்பு பணிகளின் (எஸ்ஐஆர்) ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி அதிகாரிகள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்றும் கூட, தொடர்பு கொள்ள முடியாத வீடு மாறிய அல்லது காலமான, போலி வாக்காளர்கள் குறித்த பட்டியலை, தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளின் மாவட்ட தலைவர்களால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்நடவடிக்கை பீகாரில் நடைபெற்ற  எஸ்ஐஆர் பணிகள் போல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.


எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்ட சுமார் ஐந்து லட்சம் வாக்குச்சாவடி அதிகாரிகள், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடம் வாக்குச்சாவடி நிலையிலான கூட்டத்தில் இப்பட்டியலை ஒப்படைக்க வேண்டும்.


இதன் மூலம் எந்தவொரு தவறையும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக சரிசெய்ய முடியும்.


தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரும், விடுபடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  


Tulsi California Walnut Kernels Premium 200g | Light Colored Halves | Large Size | Rich in Omega-3 | Akhrot Giri | Delightful Snack | Without Shell | Brain Food | Crunchy Nuts | Rich in Dietary Fiber


https://amzn.to/4iMZ137




பழைய ஓய்வூதியம் கோரி 11.12.2025 அன்று வேலை நிறுத்தம் - தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்கம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடிதம்



CPS ஒழிக்க 11.12.2025 வேலை நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்கம் சார்பாக கடிதம்


 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பழைய ஓய்வூதியம் கோரி CPS ஒழிக்க 11.12.2025 வேலை நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்கம் சார்பாக சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களுடன் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது



 Premium Natural Californian Almonds 200g


https://amzn.to/4rUSV5c




எளிய வழிமுறைகளில் பாஸ்போர்ட் NOC & அரசுப் பணியாளர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு விரைவான ஒப்புதல் பெறும் முறை

 

 

Passports NOC & Quick approval for foreign trips for Government officials in Simple Steps 


எளிய வழிமுறைகளில் பாஸ்போர்ட் NOC & அரசுப் பணியாளர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களுக்கு விரைவான ஒப்புதல் பெறும் முறை


NOC for the issue of Passports for Government officials is now Simple. Get Quick approval for foreign trips with just a few steps. Watch our guide on YouTube

☝️☝️☝️


 - TN SimpleGov



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




Bajaj Frore Neo Table Fan 400 MM | Table Fans For Home & Office | Aerodynamically Balanced Blades | 100% Copper Motor | High Air Delivery | 3-Speed Control | 2-Yrs Warranty 【White】


https://amzn.to/48LO6mT





Scholarship வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய EMISல் புதிய வசதி



கல்வி ஊக்கத் தொகை மாணவிகளது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய EMIS இணையத்தில் புதிய வசதி


SC / MBC Girls Scholarship வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய EMISல் புதிய வசதி


 தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு....


SC/MBC கல்வி ஊக்கத் தொகை மாணவிகளது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய வங்கிக்கோ / அஞ்சலகத்திற்கோ நாம் இனி செல்ல தேவையில்லை.


EMIS Login சென்று 


Student List => 


Scholarship Disbursement Status  என்பதனை 


Click செய்தால் கீழ்க்காண்டவாறு அனைத்து வகுப்புகளின் SC/MBC மாணவிகளது பெயர் பட்டியல் வரும்.


அதில் Payment Status எனும் கலத்தில்  Complete என குறிப்பிடப்பட்டு இருந்தால் தொகை நிச்சயமாக வரவாகி இருக்கும்.


அதே நேரத்தில் சில பேருக்கு மட்டும் 


Incomplete - Aadhaar mapping does not exist / Aadhaar number not mapped to IIN என்றோ 


Yet to start என்றோ குறிப்பிடப்பட்டு இருந்தால் மட்டுமே தொகை வரவாகி இருக்காது.🙏


boAt BassHeads 225 in-Ear Super Extra Bass Wired Headphones, with Mic (Black)


https://amzn.to/4iwFxjk





பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-12-2025

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-12-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 10.12.2025

கிழமை:- புதன்கிழமை


 

திருக்குறள்: 


பால்:- பொருட்பால்

இயல்:- அரசியல்

அதிகாரம்:- இறையாட்சி



*குறள் 384:*



அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா 


மான முடைய தரசு. 



*விளக்க உரை:*



ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.



*பழமொழி :*


Every moment is a gift of life. 



ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையின் பரிசு.



*இரண்டொழுக்க பண்புகள் :*



1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.



2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.



*பொன்மொழி :*



நீ மகிழ்ச்சி அடைய வேண்டுமானால் மற்றவர்களை மகிழ்ச்சி அடையச் செய் - மார்க் ட்வைன்



*பொது அறிவு :*



01. இந்தியாவில் வீர சாகசம் புரியும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் விருது எது?



கீதா சோப்ரா விருது


The Geeta Chopra Award



02.உலகிலேயே விலையுயர்ந்த பழம் எது?


  

யுபாரி கிங் மெலன்


Yubari King Melon



*English words :*



damages-funny climbed for loss or injury



uproar-public anger or protest



*அறிவியல் களஞ்சியம் :*



 பூச்சிகளும் புதுமைகளும்:



1.) A ladybird might eat more than 5,000 insects in its lifetime. லேடிபர்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கரும்புள்ளி செவ்வண்டு தன் வாழ்நாளில் தீங்கு தரும் 5,000 பூச்சிகளை உண்டு அழிக்கும்.



2. ) A bee’s wings beat 190 times a second. ஒரு தேனீ ஒரு நொடியில் 190 முறை தன் இறக்கைகளை அடிக்கும்.



*டிசம்பர் 10*



*மனித உரிமைகள் நாள்*



ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.




1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.



ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.



*நீதிக்கதை*



 *பிச்சைக்காரனின் தன்னம்பிக்கை*



ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார். 



அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா? என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார். 



ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான். 


அன்பரே... நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான். 



கணவான், எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா? என்று கேட்டார். 



கோட் சூட் வாலிபன் சொன்னான், நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள். 


எனக்குள் ஒழிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன். 


அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன். 



என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா, என்றான்.



*இன்றைய செய்திகள்* 


10.12.2025



⭐காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு 7.35 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.



⭐மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு.



⭐இந்தோனேசியாவில் அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலி.



*🏀 விளையாட்டுச் செய்திகள்*



🏀கர்நாடகா மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில்  வெற்றியை பதிவுசெய்தது சௌராஷ்டிரா அணி.



🏀 இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி  ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது.



*Today's Headlines*



⭐Cauvery Management Authority has ordered the Karnataka government to release 7.35 TMC of water to Tamil Nadu. 



⭐ The central government orders all states to appoint officers for the population census.



⭐20 people were killed in a fire at an office building in Indonesia.


 *SPORT NEWS*



🏀Saurashtra won the T20I match between Karnataka and Saurashtra by 1 run.



🏀 The first match of the 5-match T20 series between India and South Africa will be played at the Barapati Stadium in Cuttack, Odisha.


Parachute Advansed Deep Nourish Body Lotion for Women & Men, Dry Skin, 400ml | Pure Coconut Milk, 100% Natural, 72h Moisturisation


https://amzn.to/4png52s





பல ஆண்டுகளாக திருமணத்திற்காக புகழ்பெற்ற கோயிலில், இனி திருமண விழாக்கள் நடத்தப்படாது என முடிவு



 பல ஆண்டுகளாக திருமணத்திற்காக புகழ்பெற்ற கோயிலில், இனி திருமண விழாக்கள் நடத்தப்படாது என முடிவு



விவாகரத்து வழக்குகளின் அதிகரிப்பு, சோழர் கால பெங்களூரு கோவிலில் திருமணங்களைத் தடை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது எப்படி?


பெங்களூருவில் உள்ள 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோமேஸ்வரர் கோயில் பூசாரிகள், சடங்குகளை விட நீதிமன்றத்தில் அதிக நேரம் செலவிடுவதால், திருமணங்களை நடத்துவதை நிறுத்திவிட்டது. 


விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதாலும், முறைகேடான தம்பதிகளிடமிருந்து போலி ஆவணங்கள் வருவதாலும், சோழர் காலத்தில் கட்டப்பட்ட உல்சூர் கோயில், அதன் பிம்பத்தைப் பாதுகாக்கவும், சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கவும் திருமண விழாக்களை நிறுத்தத் தொடங்கியது.


நகரத்தின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றான சோமேஸ்வர சுவாமி கோயில், பெங்களூருவின் ஹல்சூரு (உல்சூர்) பகுதியில் அமைந்துள்ளது. 


பெங்களூருவின் பழமையான கோயில்களில் ஒன்றான சோழர் காலத்தைச் சேர்ந்த சோமேஸ்வர சுவாமி கோயில், கடந்த சில ஆண்டுகளாக திருமண விழாக்களை நடத்துவதை நிறுத்திவிட்டது, ஏனெனில் பூசாரிகள் கோவிலில் சடங்குகளை நடத்துவதை விட விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். 


ஆயிரக்கணக்கான தம்பதிகள் அதன் வளாகத்தில் சபதம் எடுப்பதைக் கண்ட கோயில், கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக திருமண விழாக்களை அனுமதிப்பதை ஏன் நிறுத்தியது என்பது குறித்து பக்தர்களிடையே குழப்பம் நிலவியது, இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீடித்த ஒரு பாரம்பரியம். விவாகரத்து வழக்குகளின் அதிகரிப்பு, அவர்கள் செய்யும் திருமணங்களுக்கு சாட்சிகளாக பணியாற்றும் பூசாரிகள், விவாகரத்து கோரும் தம்பதிகள் காரணமாக நீதிமன்ற அறைகளைச் சுற்றி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


சட்ட மோதல்கள் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக, கோயில் நிர்வாகத்தின் இந்த முடிவு சமீபத்தில்தான் பகிரங்கப்படுத்தப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சோழர் கால ஆலயம் உல்சூர் மற்றும் ஹலசூரு கோயில் என்றும் பிரபலமாக உள்ளது.


12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹலசூரு சோமேஸ்வரர் கோயில், நகரத்தில் இந்து திருமணங்களுக்கு ஒரு புனித இடமாக நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. மக்கள் தொகை அடர்த்தியான ஹலசூரு (உல்சூர்) பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஜோடிகளை அதன் மரியாதைக்குரிய திருமண விழாக்களுக்காக ஈர்த்து வந்தது, 


ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், விவாகரத்து வழக்குகளின் அதிகரிப்பால் அந்தக் கூற்றுக்களின் புனிதத்தன்மை சோதிக்கப்பட்டுள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கோயில் அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட விவாகரத்து தொடர்பான புகார்களைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது, இது பத்தாண்டுகளுக்கு முன்பு ஆண்டுதோறும் ஐந்துக்கும் குறைவாக இருந்தது.


இங்கு நடந்த திருமணங்களால் சிக்கல்கள் ஏற்பட்டன. "பல ஜோடிகள் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள போலி ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனர். சில நாட்களுக்குப் பிறகு, இந்த ஜோடிகளின் பெற்றோர் வருகிறார்கள், சில சந்தர்ப்பங்களில், நீதிமன்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன," என்று கோயில் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி வி.கோவிந்தராஜு கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற சம்பவங்கள் "கோயிலின் பிம்பத்தை பாதிக்கக்கூடும்" என்றும் கோயில் அதிகாரிகள் தெளிவுபடுத்தியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


விவாகரத்து வழக்குகளில் சாட்சிகளாக நீதிமன்றத்திற்கு அடிக்கடி அழைக்கப்படும் பூசாரிகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கோயிலின் நிர்வாக அதிகாரி முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரிக்கு அளித்த அதிகாரப்பூர்வ தகவலில் விளக்கியதாக பெங்களூரு மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த முடிவு கலவையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. சில பக்தர்கள் பூசாரிகளின் நேரத்தை மிச்சப்படுத்தியதாக பாராட்டினாலும், மற்றவர்கள் இது கலாச்சார நடைமுறைகளை அரிக்கும் ஒரு மிகையான எதிர்வினை என்று கண்டனம் தெரிவித்தனர்.


"கோயில் மற்ற சடங்குகள் மற்றும் மத விழாக்களை தொடர்ந்து அனுமதிக்கிறது, ஆனால் திருமணங்கள் தற்போதைக்கு அனுமதிக்கப்படாது என்று முடிவு செய்துள்ளது.  எதிர்காலத்தில் இந்தக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று நிர்வாகம் சுட்டிக்காட்டியது," என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அமிஷ் அகர்வாலா கூறினார்.


தென்னிந்தியாவில் கோயில்களில் திருமணங்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை பொதுவாக எளிமையாக நடத்தப்படுகின்றன, பழைய கோயில்கள் பெரும்பாலும் விரும்பத்தக்க தேர்வாகும். ஆனால் அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள், பூசாரிகளை சட்ட சிக்கலில் சிக்க வைத்துள்ளன, சோமேஸ்வரர் கோயிலை திருமண விழாக்களுக்கு இங்கே வர வேண்டாம் என்று சொல்ல வைத்துள்ளன.


Comfort After Wash Fabric Conditioner, Refill pouch, super saver pack, 2 Litre 


https://amzn.to/3Mnw4yC




Provident Fundக்கு பெற்றோர் பெயரை முன்மொழிந்தாலும், திருமணத்திற்கு பிறகு அது செல்லாது


Provident Fundக்கு பெற்றோர் பெயரை முன்மொழிந்தாலும், திருமணத்திற்கு பிறகு அது செல்லாது - உச்சநீதிமன்றம் 


பி.எப் நிதிக்கு பெற்றோர் பெயரை முன்மொழிந்தாலும், திருமணத்திற்கு பிறகு அது செல்லாது; ஊழியர் இறந்த நிலையில், நிதியை அவரது மனைவி, பெற்றோருக்கு சமமாக பிரித்து வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்


Odonil Bathroom Air Freshener Neem Mixed Fragrances Blocks 192g (48g, Pack of 4)


https://amzn.to/3XwkcwF




TNPSC December 2025 துறைத்தேர்வுக்கான Hall Ticket வெளியீடு

 

 



TNPSC December 2025 துறைத்தேர்வுக்கான Departmental Examination Hall Ticket வெளியீடு

👇👇👇


https://apply.tnpscexams.in/public/dept-hall-ticket-download/eyJpdiI6Ik04M1dEeWxwTHhubE5CQUJuWlpUUVE9PSIsInZhbHVlIjoiNGZPNGcrbmpFR2pXYXRVNEtUTnIxSFJPaEhNZGRteWQ0UlJreDZ3cllzOD0iLCJtYWMiOiI4NjFmZDJhMzI5ZjE1YzY0ZmY0NzI1ZTZjYTc5ZGY3M2MwMzE5YWE3Mjk5N2ZiMTJiMTg5NjE4MmZmYjYyMmFmIn0=



Havells Gatik Pro 400mm Pedestal Fan| 120 Ribs Guard for Safety| Smooth Oscillation| Heavy Base| ISI Marked | 2 Year Warranty | Grey


https://amzn.to/49RyLm2





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் கூடுதலாக 6568 வாக்குச் சாவடிகள் - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தி வெளியீடு

தமிழ்நாட்டில் கூடுதலாக 6568 வாக்குச் சாவடிகள் - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தி வெளியீடு Additional Election Booths - TN CEO Press ...