கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TPD Training - Participants List

 

 

முதுகலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி - கலந்து கொள்ளும் விலங்கியல் பாட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள்


TPD Training - Participants List P.G. Zoology (17.11.2025 to 22.11.2025)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Men's Vegan Leather Personalized Customised Print Wallet with Customized Name and Your Chosen Charm| Customizable with Name & Charm | Birthday Gift for Him (Imported Wallet), Brown


https://amzn.to/43he3I1




2002 Voters List Website Link


2002 வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்ய வலைதள முகவரி


Website Link to Download 2002 Voters List 


 https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

இந்த லிங்கில் சென்று உங்களின் 2002 வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.


Electoral Roll of last SIR -2002  :-

      https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx



ER of last SIR - 2005 :-

     https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx



ELECTORAL ROLL - SEARCH Website Link 


https://erolls.tn.gov.in/electoralsearch/



Milton Aura 1000 Thermosteel Bottle, 1 Litre, Dark Blue | 24 Hours Hot and Cold




Amazon வலைதள முகவரி இணைப்பு:


https://amzn.to/3LyO48X


மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

 

மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 06-11-2025 வெளியீடு


பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


Senior Junior Pay Anomalies - Appointment of Officers - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Smart Multipurpose Foldable Laptop Table with Cup Holder, Study Table, Bed Table, Breakfast Table, Foldable and Portable/Ergonomic & Rounded Edges/Non-Slip Legs (Wood), 59 cm, 8 cm




https://amzn.to/47OyfT3



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-11-2025

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 12.11.2025

கிழமை:- புதன்கிழமை



*திருக்குறள்:-*


பால்:- பொருட்பால்

இயல்:- நட்பியல்

அதிகாரம்:- பெரியாரைப் பிழையாமை


*குறள் : 894*



கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க் 

காற்றாதார் இன்னா செயல். 



*விளக்க உரை:*



ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.



*பழமொழி :*


Work hard in silence; let success make the noise. 



அமைதியாக உழை ;உன் வெற்றியே பேசட்டும்.



*இரண்டொழுக்க பண்புகள் :*



1.கோபம் என் அறிவை மறைக்கும்.



2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.



*பொன்மொழி :*



அமைதியை விட உயர்வான சந்தோஷம் இந்த உலகில் வேறு ஒன்றும் இல்லை - கௌதம புத்தர்



*பொது அறிவு :*



01.பரப்பளவு அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு எது?



கனடா- Canada



02. "ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்" என்று அழைக்கப்படும் நாடு எது?



ஸ்விட்சர்லாந்து-Switzerland



*English words :*



labour-work



gruffly-sadly



*தமிழ் இலக்கணம்:* 



 எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப் பின் வல்லினம் மிகாது.



ஒன்று + கொடு = ஒன்றுகொடு


இரண்டு + பேர் = இரண்டுபேர்.



*அறிவியல் களஞ்சியம் :*



 புவி வெப்பத்தை அதிகரிக்க வைக்கும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது மீத்தேன். இது பசுக்களின் சாணத்தில் இருந்து அதிகளவில் வெளிவருகிறது. சுவீடன் நாட்டு விவசாய பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசுஞ்சாணத்தில் 'ஆஸ்பராகாப்சிஸ் டாக்ஸ்ஃபோர்மிஸ்' எனும் சிவப்பு நிறப்பாசியைச் சேர்ப்பதன் வாயிலாக, அதிலிருந்து உற்பத்தி ஆகும் மீத்தேனை, 44 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.



*நவம்பர் 12*



*உலக நுரையீரல் அழற்சி நாள்*



உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) என்பது நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும். சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாளை கொண்டாடின. 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.



உலகளாவிய அளவில் நியூமோனியா நோய் தாக்கத்தால் ஆண்டுக்கு சராசரியாக 1.6 மில்லியன் பேர் இறக்கின்றனர். 5 வயதிற்கும் குறைந்த 155 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைகின்றனர். இது எயிட்சு, மலேரியா, எலும்புருக்கி நோய் போன்றவற்றினால் இறப்பு ஏற்படுவதை விட அதிகம் என மருத்துவ சங்க குறிப்பு தெரிவிக்கின்றது.



*சலிம் அலி அவர்களின் பிறந்தநாள்...*



சலிம் அலி (Sálim Ali; நவம்பர் 12, 1896 – சூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலிம் அலியின் முழுப்பெயர் சலிம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் இந்தியாவில் முதன்முதலில்பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.



சலிம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.



“இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் தன்வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலிம் அலியின் முக்கிய நூல்களாகும்.



*நீதிக்கதை*



 *காகமும் நாய்க்குட்டியும்*



ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள். அந்த நாய்க்குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட நாய்க்குட்டி காகத்திடம் சென்று. என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது. அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம். 



இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள் என்றது நாய்க்குட்டி. எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்! என்று சொன்னது காகம். உண்மைதான்! என்றது நாய்க் குட்டி.



பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம். ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி. இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப்பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்? 



குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் என் இனத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.



ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி. அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம். திருடுதல், ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.



நீதி : ஒருவர் செய்கின்ற நல்ல செயல்களைவிட தீய செயல்களே முன்னிற்கும்.



*இன்றைய செய்திகள்*


 12.11.2025



⭐சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 10 முதல் அமல்.


⭐டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்- பிரதமர் மோடி உறுதி.


⭐பூத் கமிட்டியினர் வாக்காளர் விவரங்களை சேகரித்து நிரப்ப தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து படிவமும் செயலியும் வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பகுதியிலும் எஸ்ஐஆர் செயல்படுத்தப்படும் விதம் விசாரிக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அணியை வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அணி சாதனை.


*Today's Headlines*


⭐ The Australian Government announced a Children's social media ban, which comes into effect from December 10th  onwards



 ⭐Delhi car blast incident: Conspirators will be brought to justice - PM Modi assured



⭐Booth committees have been provided with a form and an app from the Chief Election Commission to collect and fill in voter details. The manner in which S.I.R. is being implemented in each area is being investigated, and a report is being prepared.



 *SPORTS NEWS*



🏀Jammu and Kashmir team defeats Delhi team for the first time in Ranji Trophy history.



Bajaj iLED 8.5W Rechargeable Emergency Inverter LED Bulb | Cool Day Light | Upto 4 Hours Battery | B22D | (Pack of 1, White)





Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47HBUSt




கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? சரி செய்வது எப்படி?

 


கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? சரி செய்வது எப்படி? - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 


கல்லீரல் நோய் முற்றி 

நடிகர் அபினய் அவர்கள் இறந்திருப்பது 

சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. 


அவரை இழந்து வாடும் அவர்தம் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு 

ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையைத் தொடங்குகிறேன். 


கல்லீரல் நோய் என்றாலே அது மது அருந்துவதால் தான் வந்திருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். 


இருபது வருடங்களுக்கு முன்பு, 

கல்லீரல் நோய் என்று ஒருவர் வந்தால் 

அவர் அளவுக்கு மீறி மது அருந்தியதால் அவருக்கு கல்லீரல் நோய் வந்திருக்க நூற்றுக்கு நூறு சதவிகிதம் வாய்ப்பு அதிகம். 


ஆனால் இப்போது 

கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு 

மது மட்டுமே காரணமன்று. 

மதுவுடன் சேர்த்து 

அதிக மாவும் இனிப்பும் உடல் உழைப்பின்மையும் உறக்கமின்மையும் மன அமைதியின்மையும் இப்போது காரணமாகி இருக்கின்றன. 


ஆம்... 

கல்லீரலை பாதிக்கும் 

கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் 

இரண்டு வகைப்படும் 


முதல் வகை

மதுவினால் ஏற்படுவது 

இதை "ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோய்" 


இரண்டாவது வகை

மது அல்லாத காரணங்களால் 

ஏற்படும் "ஃபேட்டி லிவர் நோய்"

வளர்சிதை மாற்ற காரணிகளால் இந்த நோய் ஏற்படுவதால் இதற்கு "MAFLD" 

METABOLIC ASSOCIATED FATTY LIVER DISEASE என்று அழைக்கப்படுகிறது.


பெரும்பாலும் நாற்பதுகளை நெருங்கும்/தாண்டிய  ஆணோ பெண்ணோ 

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது தற்செயலாக 

தென்படும் "ஃபேட்டி லிவர்" என்ற கண்டுபிடிப்பு 


இப்போது இந்த நோய் இருபது முதல் முப்பது வயது மக்களுக்கும் தென்பட ஆரம்பித்திருக்கிறது. 


உங்களது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்ட்டில்  Fatty liver ( grade 1 /2) என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது Hepatomegaly with fatty changes என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். 


கல்லீரலில் அதிகமான கொழுப்பு தேங்குவதால் ஏற்படும் நிலை தான் இந்த "கல்லீரலில் கொழுப்பு படியும் நோய்" 


நிறைய பேருக்கு தற்செயல் கண்டுபிடிப்பாக தென்படுவதால்  இது "நார்மல்" என்று ஆகிவிடாது. 


 கல்லீரல்  அடிவாங்குகிறது என்பதும். 

அது எழுப்பும் கூக்குரலாகவே இந்த நோயைக் கருத்தில் கொள்ள வேண்டும். 


பொதுவாக கல்லீரல் ஒரு கல்லுளி மங்கன் போன்ற உறுப்பு. 

எதற்கும் அசையாத ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பு. 


தான் உண்டு. தன் வேலையுண்டு என்று அதன் வேலையைப் பார்க்கும். 


அமிலத்தன்மை கொண்ட மதுவைக்கூட செரிமானம் செய்யும் தன்மை கொண்டது. 

கல்லைக்கூட  செரிமானம் செய்யக்கூடியது.


ஆனால் அப்படிப்பட்ட ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பையே அசைத்துப்பார்க்கக் கூடியது இந்த "கல்லீரல் கொழுப்பு படியும் நோய்". . 


சமீபத்தில் என்னை உடல் பருமன் என்று சந்தித்த 10 வயது பாலகனுக்கு  ஃபேட்டி லிவர் இருந்தது. மிரண்டு தான் போனேன். 

அவன் எங்கே மது அருந்தினான்? 

மது என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது.. 


ஆனாலும் அவனது கல்லீரலில் எப்படி கொழுப்பு ஏறியது? 


கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானதா? நல்லதா? 


கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானது அன்று. 


நல்லதன்று. 


 நிச்சயம் கெட்டது.


 இதை மட்டும் மனதில் நன்றாக இருத்திக் கொள்வோம்.


எதனால் கல்லீரலில் கொழுப்பு சேருகிறது??


கல்லீரலின் பிரதான வேலைகளுள் சில


-க்ளூகோசை -> கொழுப்பாக( triglyceride ) மாற்றி உடலில் சேமிப்பது. 

-லைபோ புரதங்களை உருவாக்குவது 

- ரத்த உறைதலுக்குத் தேவையான காரணிகளை உருவாக்குவது 

- எதிர்ப்பு சக்திக்குத் தேவையான ஆண்டிபாடிகளை உருவாக்குவது 

- ப்ளாஸ்மா புரதங்களை உருவாக்குவது 

- கொழுப்பை செரிமானம் செய்யத் தேவையான பித்த நீரை சுரப்பது 


என்று 

கல்லீரலை சமையல் கூடத்துடன் ஒப்பீடு செய்யலாம்.  


ஒரு உதாரணம் கூறுகிறேன்...


ஒரு கிலோ மாவு வாங்கிக் கொடுத்தால் நமது அம்மா அதில் நமக்கு இட்லி சுட்டுத்தருவார்.

( ஏன் அப்பா சுட மாட்டாரா? அம்மா தான் சுட வேண்டுமா.. என்று கேட்டு விடாதீர்கள். இது  கதை மட்டுமே. வீட்டில் கணவர் மனைவி இருவருமே உணவு சமைக்கலாம்.) 


மீதம் மாவை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பார். 


ஒரு கிலோ மாவு மூன்று நாளைக்கு வரும் என்பது நம் அம்மாவுக்குத் தெரியும். 


அடுத்த மூன்று நாட்களுக்கு மாவு புதிதாக வாங்கத் தேவையில்லை. ஏனெனில் ஃபிரிட்ஜில் தான் மாவு இருக்கிறதே..! 


ஆனால் அடுத்தநாளும் மறதி கொண்ட நம் அப்பா தெரியாமல் ஒரு கிலோ மாவு வாங்கி வந்துவிட்டால் அம்மா என்ன செய்வார்??


இந்த ஒரு கிலோ புது மாவை ஃபிரிட்ஜில் வைப்பார். ஆக அடுத்த ஆறு நாட்களுக்கு மாவு கைவசம் இருக்கும். 


இப்படி தேவைக்கு மீறி மாவு இருந்தும் தினமும் யாரோ ஒருவர் மாவு/ பரோட்டா என வாங்கி வந்துவிட்டால்.. நம் அம்மா என்ன தான் செய்வார் பாவம்..!!


ஃப்ரிட்ஜும் ஒரு அளவுக்கு மேல் இடம் கொள்ளாது. 

ஒரு கட்டத்துக்கு மேல் கிச்சனே அலங்கோலமாகி விடும். 


இந்த சினாரியோவை நமது கல்லீரலுக்கும் சிந்தித்து பாருங்கள்


மாவுச்சத்து ஒரு வரைமுறைக்குள் இருந்தால் உடல் அதை சக்திக்கு உட்கொண்டுவிடும். 


அது வரம்பு மீறிச் சென்றால் நம் கல்லீரல் அதைக் கொழுப்பாக மாற்றி தொப்பையில், தொடை, இடுப்பு , மார்பு பகுதிகளில் சேமிக்கும். 


மீண்டும் மீண்டும் அதிக மாவுச்சத்து சாப்பிட்டால் , உண்ட வீட்டையே ரெண்டாக்கிய கதையாய் தன்னை உற்பத்தி செய்த கல்லீரலிலேயே கொழுப்பு படிந்து சேர ஆரம்பித்துவிடும். 


ஆக, ஃபேட்டி லிவருக்கு காரணம் அதிக மாவுச்சத்து தான். கொழுப்பு அல்ல 


உங்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைப்பார்த்தவுடன் நீங்கள் உண்ணும் மாமிசம் / முட்டை/ பால் போன்றவற்றை  நிறுத்தி விட்டு அதற்குப்பதிலாக அதிகமதிகம் சோறு/ கோதுமை / மைதா என்று உண்பீர்களானால் நிச்சயம் உங்களது ஃபேட்டி லிவர் பிரச்சனை குறையாது. 

அதிகமாகவே செய்யும். 


ஃபேட்டி லிவர் பிரச்சனையில் கொழுப்பு கல்லீரலில் படிவதால்


இந்த கொழுப்பு படிந்துள்ள இடங்கள், நார்மல் கல்லீரலை விட அதிக ஒலி அலையை பிரதிபலிக்கும். அதனால் அந்த இடங்கள் நார்மல் கல்லீரலை விட பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும். 


இதில் grade I என்பது கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்து காணப்படுவது. நார்மல் கல்லீரலில் கொழுப்பு படியாது. இது ஆரம்ப நிலை. 

 

Grade II என்பது கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவதால், போர்டல் சிறை சரியாக புலப்படாமல் போகும் (portal vein)  இது அடுத்த கட்டம்  


Grade III என்பது கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால் உதரவிதானம் (diaphragm) சரியாக புலப்படாது .இது முற்றிய நிலை. 


எனினும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் 

கிரேடிங் செய்யப்படுவது மருத்துவருக்கு மருத்துவர் மாறுபடுகிறது. 


எனவே, என்னைப் பொருத்தவரை 

கிரேடு 2 மற்றும் அதற்கு மேல் கிரேடிங் செய்யப்படும் மக்கள் - 

கட்டாயம் ஃபைப்ரோ ஸ்கேன் (FIBRO SCAN) எனும் இன்னும் துல்லியமான ஸ்கேன் செய்து கல்லீரல் பாதிப்பின் அளவை இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். ஃபைப்ரே ஸ்கேன் மூலம் எவ்வளவுக்கு எவ்வளவு கல்லீரல் திசு பாதிப்புக்குள்ளாகி தழும்பாகி இருக்கிறது என்பதை அறிய முடியும். 


இந்த கல்லீரலில் படியும் கொழுப்பானது,  பின்னாளில் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி


மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு படியும் நோயாக மாறலாம் (NON ALCOHOLIC STEATO HEPATOSIS) இதை சுருக்கமாக  NASH என்று அழைக்கிறோம். 

இத்தகைய நிலையில், கல்லீரல் செல்கள் தொடர்ந்து இடற்பாட்டுக்கு உள்ளாகி மரணமடைந்து தழும்புகளாக மாறிவிடும். 


இவ்வாறு சிறுகச் சிறுக  மீளுருவாக்கம் செய்ய இயலாத நிலையை அடைந்து சுருங்க ஆரம்பித்து விடும். இது கல்லீரல் அழற்சி நோய் (Cirrhosis) எனப்படும். இந்த அளவுக்கு முற்றிய நோயை ரிவர்ஸ் செய்ய இயலாது. 


இது பின்னாளில் கல்லீரல் புற்றுநோய்(HEPATO CELLULAR CARCINOMA)  அல்லது கல்லீரல் செயலிழப்பு(LIVER FAILURE)  வரை இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.


நம்மை பயமுறுத்தும் செய்தி யாதெனில்  மேலை நாடுகளில் இருபது வயதைக்கூட எட்டாத பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் செய்த ஆய்வுகளில் அவர்களில் பெரும்பாலானோருக்கு மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் ஃபேட்டி லிவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


உண்மையில் நம் நாட்டிலும் அதே அளவு பிரச்சனை இருக்கக்கூடும் ஆனால் யாரும் இங்கு பரிசோதனைக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என்பதால் இருக்கும் பிரச்சனை வெளியே தெரிவதில்லை. 


நாமும் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், சாக்லேட், கேக் என்று ரீபைன்டு கார்போஹைட்ரேட்டுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். 

இதன் கேடுகளை அறிந்தால் நாம் அப்படி செய்யமாட்டோம் என்றே நினைக்கிறேன்.


குழந்தைகள் எதை உண்ண வேண்டும் . எதை உண்ணக்கூடாது என்பதில் பெற்றோரின் கவனம் என்றும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 


மேலும், ஃபேட்டி லிவரை அதன் ஆரம்ப நிலையில்   ரிவர்ஸ்/ சரி செய்ய  இயலும்..


எப்படி??


ஃபேட்டி லிவர் எப்படி வந்தது என்பதை அறிந்தோம் அல்லவா..


பிரச்சனை - மாவுச்சத்து அடங்கிய உணவுகளை அளவின்றி தின்றதால் வந்தது. 


அதை உடனே நிறுத்த வேண்டும். 

தினமும் உட்கொள்ளும் மாவுச்சத்தின் அளவைப்

பாதியாகக் குறைக்க வேண்டும் 


இனிப்பு சுவை தரும் அனைத்து உணவுகளையும்  பண்டங்களையும்  நிறுத்த வேண்டும். 


குறை மாவு 

தேவையான புரதம் 

தேவையான ஆரோக்கியமான கொழுப்பு   உணவு முறைக்கு  மாறுவது உங்களுக்கு நன்மை பயக்கும். 


எப்படி???? 


1. மாவுச்சத்து குறைத்து உண்பதால் மேற்கொண்டு க்ளூகோஸ் கொழுப்பாக மாற்றம் அடைவது நின்று விடும்.


2. இந்த உணவு முறையில், நியூட்ரிசனல் கீடோசிஸ் நிலையில், உடல் கொழுப்பை எரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பும் கரைய ஆரம்பித்து விடும். 


3. நாம் உணவிலேயே தேவையான அளவு கொலஸ்ட்ராலை கொடுத்து விடுவதால் கல்லீரல் தினமும் கஷ்டப்பட்டு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. இது அதன் பணிச்சுமையை வெகுவாக குறைத்து விரைவில் நலம் பெற உந்து சக்தியாக அமையும். 


உங்களின் உறவினர்களில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் இருப்பின் அவருக்கு இந்த டயட்டை பரிந்துரை செய்யுங்கள். 


அவரது கல்லீரலை பிரச்சனை தீவரமாவதற்குள் காக்க ஒரு வாய்ப்பு வழங்குங்கள். 


ஃபேட்டி லிவர் பிரச்சனையை கொலஸ்ட்ரால் மாத்திரைகளாலோ வேறு எந்த குறுக்கு வழியிலோ சரி செய்ய இயலாது. 


எதைத் தின்றதால் அது வந்ததோ

அதை நிறுத்த வேண்டும்.  


சிரோசிஸ் அல்லாத 

ஆரம்ப நிலைகளில்  இருக்கும் ஃபேட்டி லிவர் பிரச்சனை  "குறை மாவு நிறை கொழுப்பு"  உணவுமுறையால் கட்டுப்படும் வாய்ப்பு அதிகம். 


சிரோசிஸ் / முற்றிய ஃபேட்டி லிவர் இருப்பவர்கள் - குடல் மற்றும் கல்லீரல்  நோய் சிறப்பு நிபுணரின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். 


சிரோசிஸ் நோய் ஏற்படும் போது 

கல்லீரல் ஆல்புமின் உற்பத்தியை குறைப்பதால், 

வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்து வயிறு வீங்கும், 

உடல் மெலிந்து போகும், 

உணவுக் குழாயில் ரத்த நாளங்கள் புடைப்பு ஏற்படுத்தி பின்னாளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவு உண்டாகலாம். 

எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படலாம். 


சிரோசிஸ் நோயில் மஞ்சள் காமாலை ஏற்படவும் செய்யலாம்.  ஏற்படாமலும் இருக்கலாம். 

கல்லீரல் பாதிப்பு என்றாலே மஞ்சள் காமாலை இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. 


சிரோசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 

சிகிச்சையாக "கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை" நிவாரணமாக இருக்கிறது. 

இறந்த கொடையாளரிடம் இருந்து எடுத்து வைக்கும் கல்லீரல் மாற்று சிகிச்சை, உயிருள்ள உறவினரிடம் இருந்து  கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து வைப்பது இரண்டாவது வகை. 

இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இலவசமாக செய்யப்படுகிறது. 

தனியார் மருத்துவமனைகளில் முப்பது லட்சம் வரை செலவினம் வருகிறது. 


இவையன்றி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலாதோருக்கு சிரோசிஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வயிற்றில் சுரக்கும் நீரை வெளியேற்றுதல், அவ்வப்போது எண்டோஸ்கோபி செய்து ரத்த நாள வெடிப்புகளுக்கு சுருக்கு முடிச்சு போடுதல், கல்லீரலுக்கு உகந்த மருந்துகளை உண்ணுதல் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப் படுகிறது. 


புரதச்சத்து மிக்க, கொழுப்புச் சத்து குறைவான, மாவுச்சத்து குறைவான உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. 


மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இருப்பின் அவற்றை விட்டொழிக்க வேண்டும். 


தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி 

எட்டு மணிநேர உறக்கம் 

மன அமைதி பேணும் வாழ்வியல் 

இவையும் கல்லீரல் நலம் பேண முக்கியம். 


சிரோசிஸ் என்பது முடிவுரை அன்று. 

முறையான மருத்துவ சிகிச்சைகள் மூலமும் கண்காணிப்பு மற்றும் சிறப்பான கவனிப்பு  

மூலம் சிறந்த வாழ்வையும் ஆயுள் நீட்சியையும்  உறுதி செய்ய முடியும் 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



005 Ink Compatible for Epson Printers : M3140, M3170, M1120, M1140, M1180, M2140, M1140 / M1170 / M1180 Black - Twin Pack Ink Bottle 120ml Each Bottle




https://amzn.to/3WQCGYw


UDISE+ தரவுகளை 100% துல்லியமாகவும், முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்ய உத்தரவு

 

UDISE Plus தரவுகளை 100% துல்லியமாகவும், முழுமையாகவும் 30.11.2025க்குள் முடித்திட பள்ளிக் கல்வித் துறை உத்தரவு  Samagra Shiksha, DSE, DEE & DPS Joint Proceedings & நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்


UDISE+ தரவுகளை 100% துல்லியமாகவும், முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல் தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகளின் இயக்குநர்களின் கூட்டு செயல்முறைகள், நாள் : 11-11-2025 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Portable Washing Machine, 16L Mini Washing Machine With Spin Basket,Small Portable Washer Machine


https://amzn.to/486SMU6




Tollgateக்கு செல்லாமலேயே பணம் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் NHAI - பொது மக்கள் அதிர்ச்சி

 


Tollgateக்கு செல்லாமலேயே பணம் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் NHAI - பொது மக்கள் அதிர்ச்சி


Tollgateக்கு செல்லும் முன்பே பணம் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் NHAI : சென்னை-பெங்களூரு சாலையில் AI Camera மூலம் பணம் பிடித்தம் - பொது மக்கள் அதிர்ச்சி


Chennai - Bangalore தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்களை மாற்றும் MLFF என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.


தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) MLFF - Multi Lane Free Flow System என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பழைய டோல்பூத் முறையை மெதுவாக மாற்றத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறையின் ஆசீர்வாதத்துடன் பொது மக்களிடம் அநியாயக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் Toll Gate நிர்வாகங்களின் இந்த புதிய அவதாரம் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இந்த புதிய முறைமையில் AI அடிப்படையிலான ANPR (தானியங்கி எண் தட்டு அங்கீகாரம்) கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவை வாகன எண்களை தானாகப் பிடித்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள FASTag கணக்கில் இருந்து கட்டணத்தை கழித்துவிடும். இந்த வாகனங்கள் சுங்க சாவடியில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறப்படுகிறது. வாகனங்கள் 100 முதல் 120 கிமீ வேகத்திலும் இலகுவாக சென்று விடலாம். இதன்மூலம் பயண நேரம் குறைவதோடு, சாலை நெரிசலும் குறையும் என பகீர் கிளப்புகின்றனர்.


முதற்கட்டமாக, ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி), சென்னசமுத்திரம் (வேலூர் அருகே), மற்றும் பாரனூர் (ஜிஎஸ்டி பாதை) ஆகிய மூன்று இடங்களில் இந்த புதிய கேமரா முறை பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்படுகிறது. இதன் வெற்றியைப் பொருத்து, தமிழ்நாட்டின் மற்ற டோல்கேட்களிலும் அடுத்த கட்டங்களில் இது விரிவுபடுத்தப்படும் என மத்திய அரசின் NHAI தெரிவித்துள்ளது.



Portable Washing Machine, 16L Mini Washing Machine With Spin Basket,Small Portable Washer Machine


https://amzn.to/486SMU6




2026 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் - அரசாணை வெளியீடு



2026ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் - அரசாணை (நிலை) எண்: 708, நாள் : 11-11-2025 வெளியீடு


Government Holidays for the year 2026 - Government Order G.O. (Ms) No.: 708, Dated: 11-11-2025 Released 


குறிப்பு: வழக்கம் போல் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை.



>>> அரசாணை (நிலை) எண்: 708, நாள் : 11-11-2025



>>> Public Holidays G.O. (Ms) No.: 708, Dated: 11-11-2025



Parker Vector Mettalix Chrome Trim Fountain Pen with Quink Ink Bottle - Blue | Refillable Fountain Pen for Professionals, Students | Ergonomically crafted for comfortable, fatigue-free writing




https://amzn.to/49JFI8n

செல்வம் அதிகரிக்க வணங்க வேண்டிய கடவுள்




 இந்த அம்மன் படம் வீட்டில் இருந்தால் திருஷ்டிகள் விலகும்; பணவரவு பெருகும்!


மீன் செல்வத்தின் அடையாளம். அதன்மீது வீற்றிருப்பது போன்ற அம்பாளின் திருக்கோலம் அபூர்வமானது; மிகவும் விசேஷமானது. இந்த அம்பிகையின் படம் வீட்டில் இருந்தாலே சகல சம்பத்துகளும் வந்து சேரும்; வீட்டில் செல்வம் வற்றாமல் நிறைந்திருக்கும்' என்பது நம்பிக்கை. இந்த அம்பிகையை `ஐஸ்வர்ய மகா கெளரி' எனப் போற்றுகின்றன ஞானநூல்கள்!


ஆம்! வீட்டில் எப்போதும் பணம் புழங்க வேண்டும்; கடன் பிரச்னைகள் விரைவில் தீரவேண்டும் என விரும்புகிறீர்களா? எனில், மகா சக்தியை ஐஸ்வர்ய மகாகெளரியாக தியானித்து வழிபடவேண்டும். இந்த கெளரிதேவியின் அருளால் வீட்டில் உள்ள திருஷ்டி தோஷம் முற்றிலும் விலகும். குலதெய்வங்களின் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்!


அகத்திய மாமுனிவர் ஐஸ்வர்ய மகா கெளரி வழிபாடு குறித்து அருளியுள்ளார். அதுபற்றி அறியும் முன் இந்த தேவியின் தோற்றம் குறித்து புராணங்கள் சொல்லும் தகவலை அறிவோம்.


முன்பு ஒருமுறை பெரும் ஊழி ஏற்பட்டது. ஊழிக்காலம் முடிந்ததும் மீண்டும் படைப்புகள் நிகழ்ந்தன. அப்போது அலைகடலின் நடுவில் சுவர்ணலிங்கம் தோன்றியது.


தேவர்களும், முனிவர்களும், அசுரர்களும், நாகர்களும் அதை வணங்கிப்போற்றினர். அந்த லிங்கத்திலிருந்து பொன் மேனியராக சிவபெருமான் வெளிப்பட்டார். அவரைத் தழுவிய பொற்கொடியாக சக்தியும் தோன்றினாள். அவளைத் தேவர்கள் `சுவர்ண வல்லி' எனப் போற்றினர்.


கடல் அரசனும் நாகலோக வாசிகளும், அந்த அம்பிகையைத் தங்கள் உலகுக்கு வந்து இருக்கும்படி வேண்டினர். அம்பிகையும் பாதாள லோகம் சென்று தங்கினாள். அவள் அருளால் பூமியில் தங்கம், இரும்பு, வெள்ளி முதலான உலோகங்கள் விளைந்தன.


இதற்குப் பிறகு, தேவர்கள் ஒருமுறை செல்வம் வேண்டி தவம் புரிந்தனர். அவர்களுக்கு அருளும் பொருட்டு, பாதாளத்திலிருந்து வெளிப்பட்டாள் அம்பிகை. பொன்மயமான பிரகாசத்துடன், கடல் பரப்பில் பெரிய மீன் மீது அமர்ந்த நிலையில் தோன்றினாள் சுவர்ண மகா கெளரி.


அந்த அன்னை, தம்முடைய திருக்கரங்களில் ஞானத்தைக் குறிக்கும் தாமரை, போகத்தைக் குறிக்கும் நீலோற்பல மலர், நோயற்ற வாழ்வுடன் ஆயுள் விருத்தியைத் தரும் அமிர்தக் கலசம், செல்வங்களின் வடிவமான பணப்பேழை ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தந்தாள்!


அவளை வணங்கிப் போற்றிய அனைவருக்கும் அள்ளக் குறையாத செல்வம் தந்து அருள்பாலித் தாள். அன்னையின் அந்த அற்புத வடிவை பொன்னால் செய்து அனைவரும் வழிபடத் தொடங்கினர். அதுவே ஐஸ்வர்ய கெளரி வழிபாடாகத் தொடர்கிறது.


இந்த அம்பிகையின் படம் வீட்டில் இருந்தாலே சகல சம்பத்துகளும் வந்து சேரும். வீட்டில் செல்வம் வற்றாமல் நிறைந்திருக்கும்; ஏதேனும் ஒருவகையில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும்; கடன் பிரச்னைகள் ஏதேனும் இருப்பின், இவளை வழிபடத் தொடங்கியதும் மெள்ள மெள்ள கடன்சுமை குறையும். திருஷ்டி தோஷங்கள் முற்றிலும் விலகும்.


ஏதேனும் காரணங்களால் குலதெய்வ வழிபாடு விடுபட்டுப் போனவர்களுக்கு, அந்த வழிபாட்டைத் தொடர வழிவகை பிறக்கும். குலதெய்வத்தின் பூரண அருள் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.


இந்த தேவியை ஆவணி மாத வளர்பிறை திருதியை வழிபடுவது விசேஷம். அன்பர்கள் சிலர், மாசி மாதத்திலும் வழிபடுவார்கள். மட்டுமன்றி, அம்பாளுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமைகளிலும், பெளர்ணமி தினங்களிலும்கூட இந்த அம்பிகையை வழிபட்டு வரம் பெறலாம்.


அன்று விளக்கேற்றிவைத்து, ஐஸ்வர்ய மஹா கெளரியின் படத்துக்குச் சந்தன - குங்குமத் திலகம் வைத்து, மலர்கள் சாற்றி அலங்கரிக்க வேண்டும். அவள் கடலில் தங்க மீனின் மீது தோன்றினாள் அல்லவா? அந்தக் கோலத்தில்... தாமரையும் நீலோத்பலமும், அமிர்தக் கலசமும், பணப் பேழையும் கொண்டவளாக மனதில் தியானித்து வணங்கலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.


இந்த அம்மனை வழிபடுவதால் வீண் விரயங்களும் மனச் சலனங்களும் விலகும். பாடுபட்டு சம்பாதித்த பணம் கையைவிட்டுப் போகாமல் பயன் தந்து சுகமளிக்கும்; சொத்தும் பொருளாதாரமும் பன்மடங்கு பெருகும்!



அரியலூர் அருகே சிலிண்டர் வாகனம் வெடித்து விபத்து - போக்குவரத்துக்கு தடை



அரியலூர் அருகே சிலிண்டர் வாகனம் வெடித்து விபத்து - போக்குவரத்துக்கு தடை


பொதுமக்கள் கவனத்திற்கு


அரியலூர் அருகே சிலிண்டர் வெடி விபத்து காரணமாக - திருச்சி தஞ்சை மாவட்டங்களுக்கு  செல்லும் பேருந்துகள் நிறுத்தம் - போக்குவரத்துக்கு தடை


அரியலூர் To கீழப்பளூர்  வழியாக திருச்சி தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்கும் தடை



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர் லாரி தீப்பிடித்து எரிந்து விபத்து



சிலிண்டர்கள் லாரியில் இருந்து வெடித்து சிதறியதன் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்டுள்ளது



>>> காணொளி 2




Milton Aura 1000 Thermosteel Bottle, 1 Litre, Dark Blue | 24 Hours Hot and Cold | Easy to Carry | Rust & Leak Proof | Tea | Coffee | Office| Gym | Home | Kitchen | Hiking | Trekking | Travel Bottle




Amazon வலைதள முகவரி இணைப்பு:


https://amzn.to/3LyO48X


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TPD Training - Participants List

    முதுகலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி - கலந்து கொள்ளும் விலங்கியல் பாட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் - மாநில கல்வியியல் ஆராய்...