கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பலி ஆடாக்கப்படும் ஆசிரியர்கள்: இது நிர்வாகச் சீர்கேடா அல்லது அதிகார வன்முறையா?



பலி ஆடாக்கப்படும் ஆசிரியர்கள்: இது நிர்வாகச் சீர்கேடா அல்லது அதிகார வன்முறையா? - வாட்ஸ்அப் பகிர்வு


சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள் என்று மேடைகளில் புகழப்படும் ஆசிரியர்கள், களத்தில் அதிகார வர்க்கத்தாலும் நிர்வாக அமைப்பாலும் எந்த அளவுக்குக் கேவலப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்குப் பெரம்பலூர் தேனூர் மேல்நிலைப் பள்ளிச் சம்பவமே சாட்சி.


 வகுப்பறையில் ஆபாச வாசகங்கள் எழுதிய மாணவர்களை ஒழுங்குபடுத்த முயன்ற முதுகலை ஆசிரியரை, ஒரு பஞ்சாயத்துச் செயலாளர் பள்ளிக்குள் புகுந்து மிரட்டி மாணவர்களுக்கு முன்பாகவே முட்டி போட வைத்திருப்பது ஒட்டுமொத்தக் கல்விச் சமூகத்தின் முகத்திலேயும் அறைந்த அவமானம்.



மற்ற அரசுத் துறைகளில் தவறு நடக்கும் போது கீழ்நிலை ஊழியர்களைக் காப்பாற்ற ஒட்டுமொத்த நிர்வாகமும் கவசமாக நிற்கும் போது, பள்ளிக் கல்வித்துறையில் மட்டும் ஆசிரியர் மீது கை வைக்க யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற அவல நிலை ஏன் உருவானது?



 *அதிகாரிகளின் மெத்தனமும் பழிவாங்கும் போக்கும்:* 


 எந்தத் துறையிலாவது தார்ச்சாலை உடைந்ததற்கோ, பாலம் விரிசல் விட்டதற்கோ பொறியாளர் உடனே சஸ்பெண்ட் ஆகிறாரா? காவல் துறையில் குற்றங்கள் தடுக்கத் தவறினால் உடனடியாக பணிநீக்கம் நடக்கிறதா? ஆனால், பள்ளியில் மாணவன் ஒழுங்கீனமாக நடந்தாலும் ஆசிரியர் மீது மெமோ; மாணவனைக் கண்டித்தாலும் சஸ்பெண்ட். ஆசிரியர் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய கல்வித்துறை அதிகாரிகளே, சமூக வலைதளப் பரபரப்புக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் பயந்து ஆசிரியர்களை உடனடியாக பலி ஆடாக்குவது வாடிக்கையாகிவிட்டது.


 *பறிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும், கட்டப்பட்ட கைகளும்:*


 "மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, தட்டிக் கேட்கக் கூடாது" என்று விதிகளை வகுத்துவிட்டு, வகுப்பறையில் ஆபாசப் படங்கள் வரையும் ஒழுங்கீனத்தைச் சகித்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன வகையான நீதி? ஆதிக்க மனோபாவத்துடன் ஒரு உள்ளாட்சிப் பணியாளர் தலைமை ஆசிரியர் அறைக்கும் வகுப்பறைக்கும் வந்து தாதா போல் மிரட்டி ஆசிரியரை முட்டி போட வைக்கிறார் என்றால், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் உயிருக்கும் சுயமரியாதைக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது?



  *சுயமரியாதையை இழந்து எதற்கு இந்தப் பணி?*


 எந்நேரமும் தலைக்கு மேல் தொங்கும் மெமோ கத்திகள், ஆப் (App) பதிவுகள், கற்பித்தல் சாராத சுமை, போதாதற்கு மாணவர்களாலும் பெற்றோர்களாலும் அதிகார வர்க்கத்தாலும் இழைக்கப்படும் அநீதிகள். சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு வகுப்பறையில் நிற்கும் ஆசிரியரால் எப்படி ஒரு தலைமுறையை நிமிர்ந்து நிற்கக் கற்றுக்கொடுக்க முடியும்?


ஆசிரியரை முட்டி போட வைத்த அந்த பஞ்சாயத்துச் செயலாளர் மீது உடனடியாக அரசு ஊழியர் பணித் தடுப்பு, அத்துமீறல் மற்றும் மிரட்டல் சட்டப் பிரிவுகளின் கீழ் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், தன் துறை ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பாய் நிற்காமல் மௌனம் காக்கும் அதிகார வர்க்கத்தின் மனநிலையும் மாற வேண்டும்.


ஆசிரியர்களின் சுயமரியாதையை நசுக்கும் கல்வித்துறை, எதிர்காலத் தலைமுறையின் முதுகெலும்பையே உடைக்கிறது என்பதை அரசு உணர வேண்டும்.


PRASHAST 2.0 | ONE DAY (03/09/26) MISSION FOR INCLUSIVE EDUCATION



முதன்மைக் கல்வி அலுவலர் (SS)- காஞ்சிபுரம் அவர்களின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

‼️ ONE DAY (03/09/26) MISSION FOR INCLUSIVE EDUCATION -PRASHAST 2.0 ‼️


அனைவருக்கும் வணக்கம். மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி *நாளை (03/09/26) மாவட்ட  அளவில்* அனைத்து வகை பள்ளிகளிலும் *( அரசு பள்ளிகள்/ நிதி நாடும் பள்ளிகள்/ தனியார் பள்ளிகள்)*  பணிபுரியும் அனைத்து வகை  ஆசிரியர்களும் *(All type of Teaching staffs)* உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ்  *PRASHAST 2.0 Video tutorials* முழுமையாக பார்த்து முடித்தல் சார்ந்து *காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்* செயல்முறைகள்.


 *இணைப்பு :* மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.


 NOTE : Tomorrow (03/09/26) is the last day for Complete the PRASHAST 2.0 Video Tutorials. Otherwise concern teachers & Hm's will be responsible for Health screening.


பாம்பு பழங்களில் விஷத்தை ஏற்றுமா? அவற்றை உண்டால் மரணம் ஏற்படுமா?



 பாம்பு பழங்களில் விஷத்தை ஏற்றுமா? அவற்றை உண்டால் மரணம் ஏற்படுமா?


சுவோமோட்டோ விளக்கம்.


நமது அண்டை நாடான இலங்கையில் 

மட்டக்களப்பு ஊரில் ,  பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக செய்தி வருகிறது.


நேற்று  மாலை வீட்டிற்கு அருகிலுள்ள நாவல் மரத்தில் இருந்து நிலத்தில் விழுந்த பழத்தை எடுத்து சாப்பிட்ட சிறுவன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.


உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்டதே உயிரிழப்புக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அன்னாரை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக. 


உண்மையில் 

பாம்பு பழங்களில் விஷத்தை ஏற்றுமா? 

அப்படியே பாம்பின் விஷம் பழங்களில் இருந்தாலும் அவற்றை உண்பதால் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுமா? 


இரண்டுக்கும் இல்லை என்பதே பதில். 


பாம்புகள் தாவரப்பட்சினிகளோ பழமுண்ணிகளோ அன்று. 

அவை மாமிசத்தை மட்டுமே உண்டு பிழைக்கும் மாமிசப்பட்சினிகள். 


தவளைகள், கொரித்து உண்பவை, பறவைகள், மீன்கள், பூச்சிகள் இவற்றை மட்டுமே உண்ணும் வகையில் அவற்றின் ஜீரண மண்டலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


எனவே, நாவல் பழத்தை அவை உண்ணாது. 


முதல் தர்க்கமே பிழையானது. 


சரி ஒருவேளை தெரியாமல் அறியாமல் 

தனது விஷத்தை பழத்தில் அது இறக்கி வைத்திருந்தாலும் 


அந்த விஷம் என்பது புரதமும் பல்வேறு வகை நொதிகளும் அடங்கிய கலவையாகும். 

அந்த விஷத்தை 

தனது விஷப் பற்கள் மூலம் ஊசி போட்டு எதிரி விலங்கிற்குள் ஏற்றி ரத்தத்தில் கலக்கச் செய்தால் மட்டுமே விஷத்தன்மை இருக்கும். 


மற்றபடி பாம்பின் விஷத்தை மனிதர்கள் பருகினாலும் மனிதர்களுக்கு விஷம் ஏறாது. 

காரணம், நமது இரைப்பையில் இருக்கும் 

வீரியமான ஹைட்ரோ குளோரிக் அமிலம் 

பாம்பின் நஞ்சை முழுவதுமாக செரித்து விடும். 


ஒருவேளை வாய் பகுதியில் ஈறுகளில் காயம் இருந்து அதன் வழியாக உள்ளே சென்று ரத்தத்தில் கலந்தால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த முடியும். 


மற்றபடி பாம்பின் விஷம் ஏறிய பழம் அதை சாப்பிட்டதால் சிறுவன் மரணம் என்பது அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் 

பிழையானது 


பிரேதப் பரிசோதனை முடிவுகள் மட்டுமே உண்மையை வெளிக் கூறும் எனினும் 

சிறுவனின் இறப்பிற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.


நாவல் மரத்தில் பழங்களைப் பறிக்கும் போது நிஜமாகவே அங்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கி சில நிமிடங்களில் மரணத்தைக் கொண்டு வரும் நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்பு கடித்திருக்கலாம். 

பல நேரங்களில் பாம்பு கடித்த பற்கள் வெளியே தெரியாமலும் இருக்கலாம். 

பாம்பு கடித்ததை முள் தைத்ததாக சிறுவன் தவறாக எண்ணி நேரத்தை வீணடித்திருக்கலாம். அல்லது 

காலதாமதம் ஆனதால் சுவாசத்திற்கு தேவையான தசைகள் செயலிழந்து மரணித்திருக்கலாம். 


இரண்டாவது வாய்ப்பு 


அந்த மரத்தில் இருந்த குழவி அல்லது கட்டெறும்பு ஆகியவை கடித்து அதனால் அதி தீவிர ஒவ்வாமை (ANAPHYLAXIS) ஏற்பட்டு அதனால் மூச்சுக் குழாய் சுருங்கி மரணம் சம்பவித்திருக்கலாம். 


மூன்றாவது வாய்ப்பு 


மரத்தில் இருந்து கீழே விழுந்து அதனால் பின் மண்டையில் / கழுத்து தண்டு வட எலும்பு அடிபட்டு மூர்ச்சையாகி மரணம் சம்பவித்திருக்கலாம். பிரேதப் பரிசோதனை யில் மட்டுமே இவை தெரிய வரலாம். 


நான்காவது வாய்ப்பு 


அந்த சிறுவனுக்கு ஏற்கனவே இருந்த இதயம் சார்ந்த பாதிப்புகள் தீவிரமடைந்து அதனாலும் மரணம் சம்பவித்திருக்க சிறிய வாய்ப்புண்டு. 


பாம்புகள் பழங்களையோ 

காய்கறிகளையோ தீண்டாது. 

அது அவற்றின் உணவன்று 

இது நம்மிடையே உள்ள மூடநம்பிக்கையாகும். 


இன்னும் ஒரு மூடநம்பிக்கை உண்டு

வெள்ளரிக்காய், புடலங்காய் உள்ளிட்டவை 

திடீரென ரொம்ப கசக்கும். 

உடனே நம் பெற்றோர் " பாம்பு வாய் வைத்திருக்கும். சாப்பிடாத" என்பார்கள். 


உண்மையில் அவற்றில் பாம்பு வாய் வைப்பதில்லை. 

மாறாக வெள்ளரிக்காய், புடலங்காய் உள்ளிட்டவை குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae)  குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகள் ஆகும். 


வேறு விலங்குகள் சாப்பிடக் கூடாது 

தாங்கள் இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இனம் 

குக்குர்பிட்டேசின் எனும் நச்சுப் பொருளை 

சுரக்கும். 

இந்த குக்குர்பிட்டேசினை அதி வெயில், நீர் தேவையான அளவு போதாமை, மண் வளம் குன்றும் போது சற்று அளவுக்கு அதிகமாக உருவாக்கும். 

அதனால் அந்த காய்கறிகளில் அதிக கசப்புத் தன்மை  இருக்கும். 


இந்த காய்கறிகளை சாப்பிட்டால் 

வயிற்றுப் போக்கு வாந்தி உள்ளிட்ட உணவு ஒவ்வாமை நிகழ்வுகள் ஏற்படும். 


இதற்கும் பாம்புகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 


பாம்புகள் எப்போது தனது நஞ்சை உபயோகிக்கும்? 


பிற விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டு 

தங்களை பாதுகாக்கவும் 


தங்களின் இரைகளை மூர்ச்சையாக்கவும் மட்டுமே நஞ்சை உபயோகிக்கும் 


மற்றபடி பழங்கள், காய்கறிகள் என்று தங்கள் உணவில்லாதவற்றில் நஞ்சை வீணாக்காது. 


பழங்கள் / காய்கறிகளில் பாம்பு வாய் வைக்கும், நஞ்சு கக்கும் என்பதில் அறிவியல் இல்லை. 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


2 மாணவிகளுக்காக தினமும் காட்டின் வழியாக 5 கி.மீ. நடந்து பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்

 


இரண்டே மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க தினமும் காட்டின் வழியாக 5 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்


மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமப் பள்ளியில் பணிபுரியும் ஜீவன் மிதாரி (Jeevan Mithari) என்ற ஆசிரியர், இரண்டே மாணவிகளுக்காக தினமும் அடர்ந்த காட்டின் வழியாக 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பாடம் கற்பித்து வருகின்றார்.


இந்தச் சிறப்பான கல்விச் சேவை குறித்த முக்கிய விவரங்கள்:

இடம்: மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல்டெக் தங்கர்வாடா (Kavaltek Dhangarwada) பகுதி.


மாணவிகள்: அப்பள்ளியில் இரண்டு மாணவிகள் மட்டுமே படிக்கின்றனர். இருவரும் சகோதரிகள்.


நடைப்பயணம்: காட்டுப் பாதையில் ஒரு வழிக்கு 5 கி.மீ. தூரம் தினமும் நடந்து சென்று பாடம் நடத்துகிறார்.


காரணம்: மற்ற ஆசிரியர்கள் செல்ல தயங்கிய அந்த கடினமான பகுதிக்கு, மாணவிகள் படிப்பை பாதியில் விட்டுவிடக் கூடாது என்பதற்காக இவர் தாமாக முன்வந்து கற்பித்து வருகிறார்.


Dr. Radhakrishnan Award Presentation Ceremony 2026 - DSE Proceedings



டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Dr. Radhakrishnan Award Presentation Ceremony – Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TNSED Schools App New Version: 0.4.4 - Updated on 04-09-2026



தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

TNSED Schools App New Version: 0.4.4 - Updated on 04-09-2026 - Schemes bug fixes and enhancement added



* TNSED Schools App


* What's is new..?



🎯 Schemes bug fixes and enhancement added


UPDATED ON  04 September 2026

Version: Now 0.4.4


Link:




Official app for the teachers by State School Education Department, Tamil Nadu

The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.


Teachers' Day Celebration 2026 Invitation | School Education Department



பள்ளிக் கல்வித் துறை - ஆசிரியர் தின விழா 2026 - டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்


School Education Department – ​​Teachers' Day Celebration 2026 – Invitation to the Dr. Radhakrishnan Award Presentation Ceremony



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர் பெருமக்கள் தாங்கள் விருது பெறும் புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய QR Code வெளியீடு

 

டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களின் கவனத்திற்கு


டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர் பெருமக்கள் தாங்கள் விருது பெறும் புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய QR Code வெளியீடு



ஆசிரியர் தின வாழ்த்துகள் | Teachers' Day Wishes

 



உங்களால் இதைப் படிக்க முடிகின்றது என்றால், இதற்காக நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது யாருக்கு என்பதும் உங்களுக்குத் தெரியும் 


If you can read this, You know who deserves to be thanked


இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் 


 Teachers' Day Wishes





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பலி ஆடாக்கப்படும் ஆசிரியர்கள்: இது நிர்வாகச் சீர்கேடா அல்லது அதிகார வன்முறையா?

பலி ஆடாக்கப்படும் ஆசிரியர்கள்: இது நிர்வாகச் சீர்கேடா அல்லது அதிகார வன்முறையா? - வாட்ஸ்அப் பகிர்வு சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள் என்று மேடை...