மைசூரில் நடந்த தசரா திருவிழா கொண்டாட்டத்தின் பொழுது நடைபெற்ற ட்ரோன்கள் ஷோ மூலம் விண்ணில் உருவான வர்ணஜாலம்
Mysuru Dasara Festival Drone Show 2025
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
மைசூரில் நடந்த தசரா திருவிழா கொண்டாட்டத்தின் பொழுது நடைபெற்ற ட்ரோன்கள் ஷோ மூலம் விண்ணில் உருவான வர்ணஜாலம்
Mysuru Dasara Festival Drone Show 2025
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் 2025
Top 10 richest people in India
இந்தியாவில் அதிக சொத்துக்களை வைத்துள்ள 100 பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி 9.55 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார். 2025ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஹுருன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 9.55 லட்சம் கோடியாகும். கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தொழிலதிபர் அதானி, இந்த ஆண்டு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 8.15 லட்சம் கோடியுடன் இந்த இடத்தில் இருக்கிறார். 3வது இடத்தில் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ரூ.2.84 லட்சம் கோடியுடன் உள்ளார். இந்தியாவில் கோடீஸ்வரர்களின் அதிவேக வளர்ச்சியை இந்தப் பட்டியல் வெளிப்படுத்துகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது. அதேபோல, இந்தப் பணக்காரர்கள் பட்டியலில் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 56ல் இருந்து 358 ஆக உயர்ந்துள்ளது. 1687 பேர், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர்.
100 பேர் கொண்ட பட்டியலில் பணக்கார இந்தியர்களில் டாப் 10 லிஸ்டை இங்கு காணலாம்
1.முகேஷ் அம்பானி -9.55 லட்சம் கோடி ரூபாய்
2.கவுதம் அதானி- 8.14 லட்சம் கோடி ரூபாய்
3.ரோஷினி நாடார் - 2.84 லட்சம் கோடி ரூபாய்
4.சைரஸ் பூனாவாலா - 2.46 லட்சம் கோடி ரூபாய்
5.குமார் மங்கலம் பிர்லா - 2.32 லட்சம் கோடி ரூபாய்
6.நீரஜ் பஜாஜ் - 2.32 லட்சம் கோடி ரூபாய்
7.திலீப் சங்வி - 2.30 லட்சம் கோடி ரூபாய்
8.அசீம் பிரேம்ஜி - 2.21 லட்சம் கோடி ரூபாய்
9.கோபிசந்த் ஹிந்துஜா - 1.85 லட்சம் கோடி ரூபாய்
10.ராதாகிஷன் டமானி - 1.82 லட்சம் கோடி ரூபாய்
அரசு ஊழியர்களை ஏமாற்றும் கருவியாக ககன்தீப் சிங் குழு பயன்படக்கூடாது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் - மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசு எத்தகைய ஏமாற்று வேலையை செய்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ, அந்த ஏமாற்று வேலையை ககன்தீப் சிங் பேடி குழுவை பயன்படுத்தி சாமர்த்தியமாக செய்திருக்கிறது திமுக அரசு. பேடி குழுவை அதன் இறுதி அறிக்கைக்கு பதிலாக இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வைத்திருப்பதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது.
ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து தான் திமுக ஆட்சியைப் பிடித்தது என்றாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த 45 மாதங்களாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் திமுகவின் துரோகத்தை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியதாலும், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்ததாலும் நிலைமையை சமாளிப்பதற்காக பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் குழுவை கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி அரசு அமைத்தது. இது தொடர்பாக கடந்த ஆட்சியில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டு விட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு குழுவை அமைப்பது ஏமாற்று வேலை; குழுவின் அறிக்கையை பெறுவதை தாமதப்படுத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏமாற்றும் செயல் என்று எச்சரித்திருந்தேன். எனது எச்சரிக்கை இப்போது உண்மையாகிருக்கிறது.
தமிழ்நாட்டில் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது குறித்த முழுமையான அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருக்க வேண்டிய ககன்தீப்சிங் பேடி குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருக்கிறது. அதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் கூடுதல் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் கூடுதல் காலக்கெடு தேவைப்படுவதாகவும் ககன்தீப்சிங் பேடி குழு கூறியுள்ளது. இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. இது நிச்சயமாக ஏமாற்று வேலை தான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ககன்தீப்சிங் குழு 194 அரசு ஊழியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தியுள்ளது; அவற்றின் மூலம் ஏராளமான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. ஆனால், குழு அமைக்கப்பட்ட பிப்ரவரி 4ஆம் தேதியில் தொடங்கி இன்று வரையிலான 8 மாதங்களில் இவை செய்து முடிக்க முடியாத பணிகள் அல்ல. ஆனால், இந்தப் பணிகளை குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கக் கூடாது என்று அரசும், ககன்தீப்சிங் பேடி குழுவும் செய்த கூட்டுச் சதியின் காரணமாகவே இப்போது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை.
ககன்தீப்சிங் குழு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியே அமைக்கப்பட்டு விட்ட போதிலும், அடுத்த 6 மாதங்களுக்கு அந்தக் குழு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 22, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். மேலும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நான் மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் இந்த சிக்கல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அதனால் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாகத் தான் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ககன்தீப்சிங் குழு அரசு ஊழியர்களிடம் கருத்துக் கேட்கத் தொடங்கியது. இப்பணியை பிப்ரவரி மாதமே தொடங்கியிருந்தால் 3 மாதங்களுக்கு முன்பாகவே முழு அறிக்கையை தாக்கல் செய்திருக்கலாம்.
அவ்வாறு தாக்கல் செய்திருந்தால் அதன் மீது முடிவெடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் அரசுக்கு ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத் தான் ககன்தீப்சிங் குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசின் கருவியாக ககன்தீப்சிங் குழு பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இது திட்டமிட்ட சதி என்று மீண்டும் ஒருமுறை குற்றஞ்சாட்டுகிறேன். இது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரை ககன்தீப்சிங் பேடி குழு அமைக்கப்பட்டதே தேவையற்ற வேலை தான். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 27.11.2018ஆம் நாள் அதன் அறிக்கையை அன்றைய அரசிடம் தாக்கல் செய்து விட்டது. அதன் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். ஆனால், அதை செய்யாமல் புதிய குழுவை திமுக அரசு அமைத்ததன் நோக்கமே அரசு ஊழியர்களை ஏமாற்றுவது தான். அது இப்போது உறுதியாகியிருக்கிறது.
ககன்தீப்சிங் குழுவின் இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது தெரியாத நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழக அரசு நினைத்திருந்தால், எப்போதோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும். அதற்கு நிதிநிலை ஒரு தடையல்ல. இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த எந்தத் தடையும் கிடையாது.
எனவே, ககன்தீப்சிங் பேடி குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
நாட்டில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக ஆரம்பிக்கப்படும் இப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு - தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி விடுவிப்பு
* அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் விடுவிப்பு
மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய நிதியமைச்சகம்
* தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவிப்பு
* அதிகபட்சமாக உ.பி.க்கு ரூ.18,227 கோடியும்,
* பீகாருக்கு ரூ.10,219 கோடியும் விடுவிப்பு.
* ம.பி., ரூ.7,676 கோடியும்
* மகாராஷ்டிரா ரூ.6,418 கோடியும் பெற்றுள்ளன
மாநில வாரியாக விடுவிக்கப்பட்ட தொகைகளின் (கோடியில்) விவரம் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:
State-wise breakup of amounts released (in crore) is given below in the table:
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது
AWARD OF GANDHI ADIGAL POLICE MEDAL TO FIVE POLICE PERSONNEL FOR THEIR OUTSTANDING WORK IN PROHIBITION ENFORCEMENT
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 58% சதவீதமாக உயர்வு
அகவிலைப்படி 55%லிருந்து 58% சதவீதமாக உயர்வு : மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைபடி உயர்வு. ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு வழங்க ஒப்புதல்.
அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 3% சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அகவிலைப்படி 55% லிருந்து 58% சதவீதமாக உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு
👉 பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
👉 தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு
👉 மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
👉 3% அகவிலைப்படி உயர்வுக்கு, பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
👉 மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 55%லிருந்து 58%ஆக அதிகரித்து வழங்க கேபினட் ஒப்புதல்
👉 3% அகவிலைப்படி உயர்வை நடப்பாண்டின் ஜூலை 1ஆம் தேதியிட்டு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Cabinet
Cabinet approves additional instalment of three per cent Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners
Posted On: 01 OCT 2025 3:06PM by PIB Delhi
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi today has approved to release an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief(DR) to pensioners w.e.f 01.07.2025 representing an increase of 3% over the existing rate of 55% of the Basic Pay/Pension, to compensate against price rise.
The combined impact on the exchequer on account of increase in both Dearness Allowance and Dearness Relief would be Rs.10083.96 crore per annum. This will benefit about 49.19 lakh Central Government employees and 68.72 lakh pensioners.
This increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 7th
Central Pay Commission.
MJPS/SKS
(Release ID: 2173541)
Earned Leave Surrender Application - Covering Letter + New Format
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு புதிய படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம்
EL Surrender New Application Format
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு EL Surrender - அக்டோபர் மாதத்தில் செய்பவர்கள் KALANJIYAM APP-ல் Request செய்த பிறகு Request எண்ணை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பத்தில் குறிப்பிடவும்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
>>> களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுறை - காணொளி...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
எண்ணூர் BHEL நிறுவன விபத்தில் 9 அசாம் தொழிலாளர்கள் உயிரிழப்பு : தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
மத்திய அரசின் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டுவரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில் அசாமைச் சேர்ந்த 9 பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.
உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டை வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்லவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
எண்ணூரில் #BHEL நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு மின்துறை அமைச்சர் திரு. @Sivasankar1ss அவர்களையும், @TANGEDCO_Offcl தலைவர் திரு. @Rakri1 அவர்களையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்.
மைசூரில் நடந்த தசரா திருவிழா கொண்டாட்டத்தின் பொழுது நடைபெற்ற ட்ரோன்கள் ஷோ மூலம் விண்ணில் உருவான வர்ணஜாலம் Mysuru Dasara Festival Drone Show ...