பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-12-2025 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 22.12.2025
கிழமை:- திங்கள்கிழமை
திருக்குறள்:
பால்:- அறத்துப்பால்
இயல்:- இல்லறவியல்
அதிகாரம்:- பயனில சொல்லாமை
*குறள் 196:*
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.
*விளக்க உரை:*
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
*பழமொழி :*
Affection grows where kindness lives.
கருணை இருக்கும் இடத்தில் அன்பு வளரும்.
*இரண்டொழுக்க பண்புகள் :*
1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.
2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.
*பொன்மொழி :*
மது உள்ளே சென்றதும் அறிவு வெளியேறி விடுகிறது மது அருந்தக்கூடாது .- தாமஸ் பேகன்
*பொது அறிவு :*
1.இயற்பியலில் இரண்டு முறை நோபல் பரிசு வென்றவர் யார்?
ஜான் பார்டீன் -John Bardeen
2.செயற்கை முறையில் இதயத் துடிப்பை உருவாக்க உதவும் சாதனம் எது?
இதயமுடுக்கி -Pacemaker
*English words :*
Clampdown -crackdown
Stalemate-deadlock
*தமிழ் இலக்கணம்:*
முக்கால் புள்ளி பயன்படுத்தப்படும் இடங்கள் 3:
ஒரு கூற்றின் தொடர்ச்சியாக:
"நல்ல தமிழில் எழுத வேண்டுமென்றால் நாம் அறிய வேண்டியவை: இலக்கணம், இலக்கியம், மொழி நடை."
*அறிவியல் களஞ்சியம் :*
உலக வெப்பநிலை 1850ல் இருந்து கணக்கிடப்படுகிறது. ஆண்டு சராசரி வெப்பநிலையில் உலகின் வெப்பமான ஆண்டாக 2024 உள்ளது. இது தொழிற்புரட்சிக்கு (1850 - 1900) முந்தைய சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 1.55 டிகிரி செல்சியஸ் அதிகம். 2ம் இடத்தில் 2023 (1.48 டிகிரி செல்சியஸ்) இருந்தது. தற்போது 2025 (ஜன., - நவ.,) சராசரி வெப்பநிலை 1.48 டிகிரி செல்சியஸ். இன்னும் ஒரு மாதம் இருப்பதால் இது 2ம் இடம் பெறுவது உறுதி. உலக சராசரி வெப்பநிலை உயர்வை, 1.5 செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என 'பாரிஸ் ஒப்பந்தம் - 2015' குறிப்பிடுகிறது.
*டிசம்பர் 22*
*தேசிய கணித தினம்*
தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.[1]
இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*சீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்*
சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
*நீதிக்கதை*
*சுயமரியாதை வேண்டும்*
ஒரு நாள் புவனேஸ்வரிதேவி தம் மகன் நரேந்திரனிடம், மகனே! நீ என்றும் தூயவனாகவும், சுயமரியாதையுடன் இரு. அதே சமயத்தில் மற்றவர்களின் சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மென்மையானவனாகவும், சமநிலை குலையாதவனாகவும் இரு. ஆனால் தேவைபடும்போது, உன் இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளவும் தயங்காதே! என்று கூறினார்.
தம் தாய் கூறிய இந்த அறிவுரைகளை, நரேந்திரர் துறவறம் மேற்கொண்டு சுவாமி விவேகானந்தர் ஆனபிறகும் மறவாமல் பின்பற்றினார். தன்மானம், சுயமரியாதை உணர்வு விவேகானந்தரிடம் முழுமையாக இருந்தது. தம்மைப் போலவே இந்திய மக்களும் தன்மானத்துடன், இணையற்ற பெருமைக்குரிய தங்கள் பாரம்பரியங்களை அறிந்தவர்களாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ஒரு முறை விவேகானந்தரும் மற்றோர் அன்பரும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் வெள்ளைக்காரர். அவர் அன்பரிடம், நீங்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்ய முடியாது! என்று முரட்டுத்தனமாகக் கூறி, அன்பரை அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார்.
மேலும் அந்த வெள்ளைக்காரர், தமக்குச் சாதகமாக ஏதோ ஒரு ரயில்வே சட்டத்தையும் கூறினார். அன்பரும் ரயில்வேயில் பணிபுரியும் ஒருவர்தாம். அன்பர் டிக்கெட் பரிசோதகரிடம், நீங்கள் கூறுவதுபோல் ரயில்வேயில் அப்படி ஒரு சட்டம் இல்லை என்று கூறி, அந்த ரயில் பெட்டியிலிருந்து வெளியேற மறுத்தார். இவ்விதம் தம்மை ஓர் இந்தியன் எதிர்ப்பதைப் பார்த்து, அந்த வெள்ளைக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது. கடைசியில் இந்தப் பிரச்சனையில் விவேகானந்தர் தலையிட்டார். அதுவும் வெள்ளைக்காரரின் கோபத்தைத் தணிக்கவில்லை. அவர் கோபத்துடன் கடுமையான குரலில் விவேகானந்தரிடம் இந்தியில் பேசினார்.
வெள்ளைக்காரர்: நீ ஏன் இதில் தலையிடுகிறாய்?
விவேகானந்தர்: முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவரை நீ என்று நீங்கள் மரியாதை இல்லாமல் அழைக்கிறீர்களே! முதலில் நீங்கள் மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.
வெள்ளைக்காரர்: தவறுதான், பொறுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தி சரியாகத் தெரியாது. இவன் (This man).
விவேகானந்தர் (குறுக்கிட்டு): உங்களுக்கு இந்தி சரியாகத் தெரியாது என்று சொல்கிறீர்கள்! ஆனால் இப்போது உங்களுக்கு உங்கள் தாய்மொழியான ஆங்கிலமும் சரியாகத் தெரியாது என்று தெரிகிறது. இவன் (This man) என்று அல்ல, இவர் (This gentleman) என்று சொல்ல வேண்டும். தமது தவற்றை உணர்ந்த பரிசோதகர், பெட்டியைவிட்டு வெளியேறினார்.
பின்னர் ஒரு சமயம் விவேகானந்தர், கேத்ரி மன்னரின் தனிச்செயலாளர் ஜக்மோகனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மேற்கூறிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு கூறினார். வெள்ளைக்காரர்களுடன் பழகும்போது நாம் நமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக்கூடாது. உரியவருக்கு உரிய மரியாதை கொடுத்துப் பழகாததால்தான் வெள்ளைக்காரர்கள் நம்மை அவமதிக்கிறார்கள். நமக்கு சுயமரியாதை வேண்டும், பிறருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.
*இன்றைய செய்திகள்*
22.12.2025
⭐டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
⭐நெல்லையில் ரூ.98 கோடியில் காயிதே மில்லத் நூலகம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
⭐காற்றுமாசு- பனிமூட்டம்: டெல்லியில் விமான சேவை பாதிப்பு.
டெல்லியில் நேற்று காற்றின் தரம் 386 என்ற அளவில் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது.
*🏀 விளையாட்டுச் செய்திகள்*
🏀இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
*Today's Headlines*
⭐The Railway Ministry has announced that train fares will be increased from December 26. * This is the second increase in train fares in a year, after the first increase on July 1.
⭐Chief Minister M.K. Stalin laid the foundation stone of the Rs. 98 crore Qaide Millat Library in Nellai.
⭐Air pollution-Smog: Flight services affected in Delhi. Delhi's air quality was in the 'very poor' category at 386 yesterday.
*SPORTS NEWS*
🏀 Australia won the third Ashes Test against England by 82 runsTeacher exam prep.
Tulsi California Walnut Kernels Premium 200g | Light Colored Halves | Large Size | Rich in Omega-3 | Akhrot Giri | Delightful Snack | Without Shell | Brain Food | Crunchy Nuts | Rich in Dietary Fiber
https://amzn.to/4iMZ137