கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reconstitution of SMCs for 2026-2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – SPD Proceedings




 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


Reconstitution of School Management Committees for the years 2026–2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – Proceedings of the State Project Director


மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி


மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


ந.க. எண். : 1338/A11/பமேகு/ஒபக/2026, நாள். 24/08/2026


பொருள்:


பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.


பார்வை:


(1) அரசாணை (நிலை) எண்.144, நாள்: 28.06.2024, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.


(2) அரசாணை (நிலை) எண். 143, நாள்: 19.08.2026, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.


பார்வை-1இல் காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது கடந்த 2024 ஆகஸட் மாதம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.


பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகளில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கானப் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும்


1


பார்வை-2இல் காணும் அரசாணையில் பக்கம்-22இல் கண்டுள்ள "மறுகட்டமைப்பு நாளுக்கு முன்னதாக செய்ய வேண்டியவை" தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திடவும்,


மேலும், பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 9-இல் உள்ள கால அட்டவணைக்கு மாற்றாக, பக்கம் 4, பத்தி x.-இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





boAt Wave Call 3 Smartwatch 1.83” HD Display with Animated Watch Faces; BT Calling, Functional Crown, Multiple Sports Modes, IP68, HR, SpO2 Monitor, Smart Watches for Men & Women (Timber Brown)


https://link.amazon/B0c7XR0xj

23.08.2010க்கு முன்னர் பணியேற்ற ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு - சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்

 


Exemption from TET for teachers appointed before 23.08.2010 – Tamil Nadu Government moves special resolution in the Legislative Assembly


23.08.2010க்கு முன்னர் பணியேற்ற ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு - சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றம்


ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பேரவையில் அரசினர் தீர்மானம் கொண்டு வந்த அமைச்சர் ராஜ்மோகன்.


2010 ஆகஸ்ட் 23க்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு வேண்டும்.


இதற்கு மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.



>>> தீர்மானம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





Milton Flip Lid 1000 Thermosteel Water Bottle 1 LTR, 24 Hr Hot and Cold I Leak Proof Lid, ISI Certified I Vacuum Insulated I for Office, Gym, School I Silver


https://link.amazon/B0ctZewv6



தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை


இணை நிகழ்ச்சி நிரல்


2026, ஆகஸ்ட் 25, செவ்வாய்க்கிழமை


ஆவணி 8, திருவள்ளுவர் ஆண்டு 2057


காலை 9.30 மணி


இனம் 1 ஏற்கெனவே அறிவித்துள்ளவாறு


2. அரசினர் தனித் தீர்மானம்


மாண்புமிகு திரு. ராஜ்மோகன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர், கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:-


"ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவைப் போதிக்கும் தொழில் மட்டுமல்ல; அது மனித வளத்தை உருவாக்கி, சமூகத்தின் எதிர்காலத்தைச் செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும். மேலும், பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாகக் கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளான, விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளது.


தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் (NCTE) 23.08.2010-ஆம் தேதியிட்ட அறிவிக்கையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.


ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித இடையூறும் இன்றி தங்களது பணியைச் சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியிலிருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 01.09.2025-ஆம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு (சிவில் அப்பீல்) எண்.1405/2025, 1385/2025 மற்றும் 1385/2025-இல் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவினால், தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வினை பெற இயலும், மேலும் தேர்ச்சி பெறவில்லையெனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சீராய்வு மனுவின் மீதான 29.05.2026-ஆம் நாளிட்ட தீர்ப்பில், பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.08.2028-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றிப் பணியாற்றி ஓய்வுபெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை, தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் எனவே, வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் செயலாகும். இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்டகால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், இம்மாமன்றத்தில் பின்வரும் தீர்மானம் முன்மொழியப்படுகிறது.


1. தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் நீண்டகாலப் பணியனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.


2. இதற்கேற்ப, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல், உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, 23.08.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) வழியாக இதுதொடர்பான தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் / சற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டுமாறு ஒன்றிய அரசை இப்போவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.


3. மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப்பலன்கள் எவ்விதத் தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது."


ஏற்கெனவே அறிவித்துள்ள இனம் 2 என்றுள்ளதை இனம் 3 என மாற்றி வாசிக்கவும்


அவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்


ஏற்கெனவே அறிவித்துள்ளவாறு


இரா. சாந்தி, செயலாளர்.


SMC Reconstitution 2026-2028 Meeting Forms



பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு 2026-2028  கூட்ட படிவங்கள்


School Management Committee Reconstitution 2026-2028 Meeting Formats



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Nylon 55 litres Waterproof Strolley Duffle Bag- 2 Wheels - Luggage Bag


https://link.amazon/B0aFpFHUq

Affidavit filed by the TN Govt in the High Court regarding TET Weightage marks

 


ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் குறைப்பு மற்றும் பணிக்காலத்திற்கான சிறப்பு மதிப்பெண்கள் குறித்து தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்


Affidavit filed by the Tamil Nadu Government in the High Court regarding the reduction of Teacher Eligibility Test (TET) marks and special weightage marks for service tenure


ஆசிரியர் தகுதித் தேர்வு


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு ஒரு மதிப்பெண்

பணிக்கால சிறப்பு மதிப்பெண் &

பொதுப்பிரிவினர் மதிப்பெண்


WP No 26016/2026

WP No 26068/2026

WMP 28460 / 2026

WMP 29742/2026

சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள்


அரசு வழங்க முடியாது என எதிர் மனு தாக்கல்


* தகுதி மதிப்பெண்களைத் தீர்மானிப்பது அரசின் கொள்கை சார்ந்த மற்றும் வல்லுநர் குழு சார்ந்த விடயமாகும். தேர்வு முடிந்த பிறகு தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தேர்வின் நம்பகத்தன்மையையும் கல்வித் தரத்தையும் பாதிக்கும்

* உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் TET தேர்வை கட்டாயத் தகுதியாகவே உறுதி செய்துள்ளது. பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தேர்ச்சி பெற கால அவகாசம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளதே தவிர, தகுதி மதிப்பெண்களில் எந்த இளகும் (relaxation) வழங்கப்படவில்லை

* மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) பிரிவு 23-ன் கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஒரு கட்டாய சட்டப்பூர்வ தகுதியாகும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு (SC/ST/OBC/மாற்றுத்திறனாளிகள்) சலுகை வழங்குவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது; ஆனால் பொதுப் பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க NCTE விதிகளில் இடமில்லை.

* 08.07.2026 அன்று அளிக்கப்பட்ட இடைக்காலத் தடையை (Interim Order) நீக்கி, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசால் நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது


தமிழ்நாடு அரசு எதிர் மனு தாக்கல்

Counter Affidavit and Vacat Interim Order petition in W.P.NO.26068 Of 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 



EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty


https://link.amazon/B03b5bJg4

ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த TVK MLA

 


ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் 


ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த TVK MLA


பல ஆண்டுகளாக TET தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்


நியமன தேர்வு தேர்ச்சி பெற்றும் சிலருக்கு வேலை கிடைக்கவில்லை


நானும் டெட் தேர்வு, டிஆர்பி தேர்வு, நியமன தேர்வு உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்கவில்லை.


நியமன தேர்வு இல்லாமல் தகுதி தேர்வு அடிப்படையிலும், சீனியாரிட்டி அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.


ஆசிரியர்களின் பாதி வாழ்க்கை வேலையை எதிர்பார்த்தே போய்விடுகிறது.


சட்டப்பேரவையில் குடியாத்தம் எம்.எல்.ஏ சிந்து பேச்சு



Portable Tyre Inflator for Car, Bike, Cycle with 150 PSI Pressure, Digital Display, Auto Shut-Off, LED Light, 2.7m Cord, Air Pump Compressor for Cigarette Lighter Socket (Black)


https://link.amazon/B01IUAUCt

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்





Portable Tyre Inflator for Car, Bike, Cycle with 150 PSI Pressure, Digital Display, Auto Shut-Off, LED Light, 2.7m Cord, Air Pump Compressor for Cigarette Lighter Socket (Black)


https://link.amazon/B01IUAUCt


School Education Department - Policy Note 2026-2027



பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2026-2027


School Education Department - Policy Note 2026-2027



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





APC Back-UPS BX600C-IN 600VA / 360W UPS | Backup for WiFi Router, Desktop PC & CCTV | 3 Power Backup Outlets | 2 Year Warranty


https://link.amazon/B0b98Ph82


பொதுப்பிரிவினருக்கு (OC) சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்க இயலாது - தமிழ்நாடு அரசு

 


பொதுப்பிரிவினருக்கு (OC) சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்க இயலாது - தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.


இந்த வழக்கில் முக்கியமான சரத்துக்கள் சுருக்கமாக:



1. பொதுப்பிரிவினருக்கு (OC) TET தகுதி மதிப்பெண் 60% (90) → 50% (75) ஆகக் குறைக்க வேண்டும் என்பதே மனுதாரர்களின் முக்கிய கோரிக்கை. மேலும் ஏற்கனவே நடைபெற்ற TNTET தேர்வுகளுக்கும் இந்த மாற்றத்தை பின்னோக்கிப் பொருந்தச் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 


2. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு: General Category-க்கான 60% தகுதி மதிப்பெண்ணை 50% ஆகக் குறைக்க உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கவில்லை. 


3. TET கட்டாயத் தகுதி என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக பதவி உயர்வை விரும்பும் ஆசிரியர் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்துகிறது. 


4. In-service teachers-க்கு TET பெறுவதற்கான கால அவகாசம் 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதி பெற வேண்டிய கடைசி தேதி 31.08.2028 என குறிப்பிடப்பட்டுள்ளது. 


5. 2028 வரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பது TET மதிப்பெண்ணில் தளர்வு அல்ல. TET-ன் கட்டாயத் தன்மை தொடர்கிறது என்று அரசு கூறுகிறது. 


ஆக மொத்தத்தில் பொதுப்பிரிவினர் (OC) தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு மதிப்பெண் தளர்வு கிடையாது என்பதை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.





OnePlus Nord CE6 Lite | 8GB+256GB | Hyper Black | Segment's Fastest Dimensity 7400 Apex Processor | 7000mAh Battery | Segment's Highest 144Hz Refresh Rate | 50MP Main Camera, 4K Video Recording


https://link.amazon/B00UoLETV


ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் மராத்தியில் பேசுவது கட்டாயம் - மகாராஷ்டிரா முதலமைச்சர்



ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் மராத்தியில் பேச வேண்டும் - தேவேந்திர பட்னாவிஸ்


        மராத்தி கட்டாயம்


* “மகாராஷ்டிராவில் ஆட்டோ, கார் ஓட்டுநர்களுக்கு கட்டாயம் மராத்தி பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர்கள் மராத்தி கற்றுக்கொள்வதற்கான காலக்கெடு 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் நீட்டிப்போம்.”


- தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிரா முதலமைச்சர்


 Devendra Fadnavis | Marathi




OnePlus Nord CE6 Lite | 8GB+256GB | Hyper Black | Segment's Fastest Dimensity 7400 Apex Processor | 7000mAh Battery | Segment's Highest 144Hz Refresh Rate | 50MP Main Camera, 4K Video Recording


https://link.amazon/B00UoLETV

NHISல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது? வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

 


NHISல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது? வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

(பதிவு எண்.133/2021)

மாநில மையம்

எண்.3(G-1), கிருஷ்ணப்பத் தெரு,

சேப்பாக்கம், சென்னை – 600 005.


பெறுநர்

ஆசிரியர் அவர்கள்,


…………………………….. நாளிதழ்/ஊடகம்.


ஐயா,

வணக்கம். எங்களது அமைப்பின் சார்பாக கீழ்காணும் பத்திரிகை செய்தியினை தங்களது நாளிதழ்/ஊடகத்தில் பிரசுரம்/ஒளிபரப்பு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

          பத்திரிகை செய்தி

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


✍️🔥தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் மற்றும் பொதுச்செயலாளர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் கூட்ட வெளியிட்ட பத்திரிகை செய்தி.


*************************************

அரசு ஊழியர்களின் காப்பீட்டுக்காக ரூ.1,489.75 கோடி பிடித்தம்! மருத்துவச் செலவாக வழங்கப்பட்ட தொகை எவ்வளவு? — RTI தகவலில் அதிர்ச்சி. Corpus Fund-ஆக ரூ.28.16 கோடி பிடித்தம். வழங்கப்பட்டது ரூ.3.56 கோடி மட்டுமே! மீதத் தொகை எங்கே? தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி

*************************************


✍️🔥தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக சுமார் ரூ.1,489.75 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகையில் அரசு ஊழியர்களின் மருத்துவச் செலவுகளுக்காக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்ற முக்கியமான விவரத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


✍️🔥தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திண்டுக்கல்லைச் சேர்ந்த Frederic Engels பெற்ற தகவலில், 01.07.2021 முதல் 30.06.2026 வரையிலான ஐந்து ஆண்டுகளில் NHIS திட்டத்திற்காக அரசு ஊழியர்களிடமிருந்து ரூ.14,897,450,208 (சுமார் ரூ.1,489.75 கோடி) பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையில் எத்தனை இனங்களில், எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை வழங்காமல், அவற்றை United India Insurance Company-யிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


✍️🔥ரூ.28.16 கோடி Corpus Fund-ல் ரூ.3.56 கோடி மட்டுமே !

இதனைவிட அதிர்ச்சியளிக்கும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து Corpus Fund-ஆக ரூ.28.16 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து NHIS திட்டத்தில் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.3.56 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் RTI பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் ரூ.24.60 கோடி Corpus Fund தொகையின் நிலை மற்றும் பயன்பாடு குறித்து முழுமையான கணக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டியுள்ளது.


✍️🔥அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களது மருத்துவப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் மருத்துவச் செலவுகளுக்காக எவ்வளவு வழங்கப்பட்டது என்பதற்கான முழுமையான விவரமே RTI பதிலில் வழங்கப்படாதது, NHIS திட்டத்தின் நிதி வெளிப்படைத்தன்மை குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.


✍️🔥இது பற்றி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். ரமேஷ் மற்றும் பொதுச்செயலாளர் இரா. பாலசுப்ரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்…. 


‘Cashless Treatment’ என்ற பெயரில் ஊழியர்களே பணம் செலுத்தும் அவலம்!


✍️🔥NHIS திட்டம் “Cashless Treatment” என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் Package Rate System மூலம் மருத்துவச் செலவுகள் கட்டுப்படுத்தப்படுவதால், மருத்துவமனையின் உண்மையான செலவுக்கும் காப்பீட்டு நிறுவனம் அனுமதிக்கும் Package தொகைக்கும் இடையிலான வித்தியாசத்தை அரசு ஊழியர்களே தங்களது கையிலிருந்து செலுத்த வேண்டிய நிலை தொடர்கிறது.


✍️🔥உதாரணமாக, கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு உண்மையான செலவு ரூ.30,000-க்கும் அதிகமாக இருக்கும் நிலையில் ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், இதய Stent சிகிச்சைக்கு ரூ.1,17,000 வரை செலவாகும் நிலையில் ரூ.85,000 மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் ஏற்கனவே அரசிடம் அளித்துள்ள முறையீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


✍️🔥இதனால், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் அரசு ஊழியர்கள், காப்பீட்டுத் திட்டத்திற்காக ஊதியத்திலிருந்து பணம் செலுத்திய பிறகும், சிகிச்சைக்காக மீண்டும் தங்களது கையிலிருந்து பணம் செலுத்த வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது.


* புதிய NHIS-2026 – முந்தைய திட்டத்தைவிட மோசமானதா?


✍️🔥தற்போது வெளியிடப்பட்டுள்ள G.O.Ms.No.122, Finance (Health Insurance) Department, dated 24.06.2026 மூலம் புதிய NHIS-2026 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த Package Rate System-ஐ நீக்குவதற்குப் பதிலாக, அது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. புதிய திட்டத்தில், மாதாந்திர பிடித்தம் ரூ.300-லிருந்து ரூ.390 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Corpus Fund பிடித்தம் ரூ.5-லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


✍️🔥 Network அல்லாத மருத்துவமனைகளில் மருத்துவ உதவி 75%-லிருந்து 60% ஆக குறைக்கப்பட்டுள்ளது. Package System மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் A1, A2, B, C என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் கட்டாயச் சேர்க்கை தொடர்கிறது.


✍️🔥இதனால், முந்தைய ஆட்சியில் “Cashless Treatment” என்ற பெயரில் மறைமுகமாக Package System நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய அரசு நேரடியாகவே Package System-ஐ மேலும் விரிவுபடுத்தியுள்ளது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டுகிறது.


✍️🔥முழுமையான கணக்கை அரசு வெளியிட வேண்டும்:

கடந்த ஐந்து ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது, எத்தனை ஊழியர்கள் பயனடைந்தனர், எந்தெந்த சிகிச்சைகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது, காப்பீட்டு நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது, நிர்வாகச் செலவாக எவ்வளவு செலவிடப்பட்டது என்பன உள்ளிட்ட முழுமையான கணக்கை தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதேபோல், ஊழியர்களிடமிருந்து Corpus Fund-ஆக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.28.16 கோடியில் ரூ.3.56 கோடி மட்டுமே மருத்துவச் செலவுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சுமார் ரூ.24.60 கோடியின் நிலை என்ன என்பதையும் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.


✍️🔥புதிய காப்பீட்டுத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மையான 100 சதவீத Cashless Treatment வழங்கப்பட வேண்டும். Package Rate System கைவிடப்பட்டு, மருத்துவமனையின் உண்மையான மருத்துவச் செலவை அடிப்படையாகக் கொண்டு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் புறக்கணித்து கட்டாயமாக திணிக்கப்படும் முறையை கைவிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். 


✍️🔥இந்திய வங்கி ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, உண்மையான மருத்துவச் செலவை ஈடுசெய்யும் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.


✍️🔥G.O.Ms.No.122-ஐ உடனடியாக மறுஆய்வு செய்து, Package Rate System-ஐ கைவிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முழுமையான கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சையை உறுதி செய்யும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 


✍️🔥நாளது தேதியில் எத்தனையோ தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் பணமில்லா சிகிச்சையைத் தருவதாக பல்வேறு தளங்களில் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். எனவே மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஊழியர்களின் தன்விருப்பம் கோரப்பட வேண்டும். விருப்பமில்லாத ஊழியர்களை இத்திட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 20.08.2026 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கடிதம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைப் பாதுகாக்க ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை உருவாகும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.


நன்மதிப்புகளுடன்


(எஸ்.ரமேஷ்)

மாநிலத் தலைவர்


(இரா.பாலசுப்ரமணியன்)

பொதுச் செயலாளர்




EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty


https://link.amazon/B03b5bJg4

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reconstitution of SMCs for 2026-2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – SPD Proceedings

 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை)...