கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voters Listல் பெயர் சேர்க்க / நீக்க / திருத்தம் மேற்கொள்ள / மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள் - தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க / நீக்க / திருத்தம் மேற்கொள்ள / மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள் - தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு


Special camps for adding /deleting / correcting /cl Changing names in the voters' list - Chief Electoral Officer's order


சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் :

27.12.2025 சனி

28.12.2015 ஞாயிறு

03.01.2026 சனி

04.01.2026 ஞாயிறு


இடம்: அந்தந்த வாக்குச்சாவடிகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb




CMBFS திட்டத்தை ஆய்வு செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்கள் - மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு

 


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்களை நியமித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு


District Collector orders appointment of officers to each school to inspect the Chief Minister's BreakFast Scheme


CMBFS காலை உணவு Visit



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



boAt Rockerz 255 Pro+, 60HRS Battery, Fast Charge, IPX7, Dual Pairing, Low Latency, Magnetic Earbuds, in Ear Bluetooth Neckband, Wireless with Mic Earphones (Active Black)


https://amzn.to/4qpbtsI




ஆசிரியர்களுக்கு RIESI பெங்களூரில் 30 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - DEE Proceedings

 


RIESI Bangalore 30 Days CELT Programme Bengaluru 


பெங்களூரு RIESI நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியலை அனுப்ப இயக்குநர் செயல்முறைகள்


ஆசிரியர்களுக்கு RIESI Bangalore 30 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb




Old Pension Scheme குறித்த அரசாணை வெளியிடும் வரை சமரசம் கூடாது

 


பழைய பென்ஷன் திட்டம் குறித்த அரசாணை வெளியிடும் வரை சமரசம் கூடாது - 2016ஆம் ஆண்டு போராட்ட வரலாறு திரும்ப வேண்டும் - அரசு ஊழியர்கள் ஆவேசம்


பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்தக் கோரி தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது; அரசாணை வெளியாகும் வரை சமரசம் இல்லை, 2016 போராட்ட வரலாறு திரும்பும் என ஊழியர்கள் ஆவேசமாக உள்ளனர், 

ஏனெனில் மத்திய அரசு OPS-ஐ அமல்படுத்த வாய்ப்பில்லை என மத்திய அரசு நிதி அமைச்சகம் உறுதியளித்துள்ள நிலையில், தமிழகத்தில் வாக்குறுதியளித்தும் தாமதிக்கும் திமுக அரசு மீது அதிருப்தி நிலவுகிறது; இதனால், OPS அமல்படுத்தப்படும் வரை போராட்டங்களைத் தொடர அரசு ஊழியர்கள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. 


போராட்டங்களுக்கான காரணங்கள்:

மத்திய அரசு நிலைப்பாடு: மத்திய நிதி அமைச்சகம், தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த எந்த திட்டமும் இல்லை என நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.


மாநில அரசுகளின் நிலை: ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற சில மாநிலங்கள் OPS-ஐ அமல்படுத்தினாலும், மத்திய அரசின் நிலைப்பாடு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


தமிழகத்தில் வாக்குறுதி மீறல்: 2021 தேர்தல் வாக்குறுதியில் OPS-ஐ அமல்படுத்துவதாக திமுக கூறியிருந்தும், பல மாதங்கள் ஆகியும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


CPS-க்கு கட்டாய மாற்றம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பெற்ற ஊழியர்களை புதிய திட்டத்திற்கு மாற்ற அதிகாரிகள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 


அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடு:

சமரசம் இல்லை: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணை வெளியாகும் வரை சமரசம் கிடையாது என அரசு ஊழியர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.


2016 போராட்டம்: 2016ஆம் ஆண்டு நடந்த போராட்டங்களைப் போன்று மீண்டும் தீவிர போராட்டங்கள் வெடிக்கும் என எச்சரிக்கின்றனர்.


காலவரையற்ற வேலைநிறுத்தம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி விரைவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. 


அரசு தரப்பு நிலைப்பாடு (தற்போதைய நிலை):
மத்திய அரசால் NPS corpus-ஐ மாநில அரசுகளுக்கு திருப்பித் தர முடியாது என நிதி அமைச்சகம் கூறுகிறது.


தமிழக அரசு, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது, இது OPS-ஐ அமல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது என ஊழியர்கள் கருதுகின்றனர். 



பழைய பென்ஷன் திட்டம் குறித்த அரசாணை வெளியிடும் வரை சமரசம் கூடாது - 2016 போராட்ட வரலாறு திரும்பணும் - அரசு ஊழியர்கள் ஆவேசம் - அரசிடம் பேச்சுவார்த்தைக்கு செல்லும் நிர்வாகிகளிடம் திட்டவட்டம் - நாளிதழ் செய்தி






Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb




ஆண்டுதோறும் TET நடத்த வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை குறித்த தகவல்

 

ஆண்டுதோறும் TET நடத்த வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை குறித்த தகவல் 


சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 19.12.2025 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் பணிபுரிகிறார்கள் என்ற RTI தகவல்கள் அடிப்படையில் NCTE Guidelines சார்ந்து ஆண்டுதோறும் ஒருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதனை அடுத்து பணி நியமனத்திற்கான‌ நியமனத் தேர்வையும் கட்டாயம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்த உத்தரவு இடவேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.பி.புகழேந்தி அவர்கள் வழக்கு விசாரணையை 20.01.2026க்கு ஒத்திவைத்ததுடன் பள்ளி கல்வி துறை முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்டோர்க்குப் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு இட்டுள்ளார்கள்.





Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb






அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு முன் / அடுத்த நாட்களில் (23-12-2025 / 05-01-2026) ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாமா?


அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு முன் / அடுத்த நாட்களில் (23-12-2025 / 05-01-2026) ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாமா?


Can teachers take leave before/during the half-yearly exam vacation (23-12-2025 / 05-01-2026)?



*ஆசிரியர் நண்பர்களே...


*வழக்கமாக ஒவ்வொரு முறையும் வரும் சந்தேகம்* 


1) 23/12/25 ஒரு நாள் விடுப்பு வேண்டும் எனில் EL எடுக்கலாம்..


2) 24/12/25 முதல் 4/1/26 வரை 12 நாட்கள் விடுமுறை , எனவே 23/12/25 CL எடுக்க இயலாது.


3) CL + holiday 10 நாட்கள் மேல் அனுமதி இல்லை..


4) 22/12 & 23/12 இரண்டு நாட்களுக்கும் விடுப்பு வேண்டும் எனில்  EL எடுக்கலாம் ( இரண்டு நாட்கள் மட்டும் EL ஆகும்) 


20/12 & 21/12 சனி ஞாயிறு முன் அனுமதி...

24/12 முதல் 4/1/26 வரை விடுமுறை அனுமதி ..


Govt holiday + EL + vacation allowed (upto 180 days) 


 ( CL க்கு மட்டுமே 10 நாட்கள் வரையறை)


5) 5/1/26 ஒரு நாள் அல்லது 6/1/26 சேர்த்து இரண்டு நாட்களுக்கு விடுப்பு வேண்டும் எனில்  EL எடுக்கலாம் 


6) 5/1/26 & 6/1/26 இரண்டு நாட்களுக்கு ML எடுக்கலாமா? 


5 & 6 உடம்பு சரியில்லாமல் போகும் என்பதை இன்றே கணிக்க இயலாது 🤣🤪


7) ML முன் இணைப்பு மற்றும் பின் இணைப்பு உண்டா? 


ஆம்...ML ...( Unearned leave on MC) க்கு


மருத்துவர் சான்று வழங்கும் தேதி  முதல் விடுப்பு ஆரம்பம்..

மருத்துவர் fitness  வழங்கும் தேதி அன்று பணியில் சேர வேண்டும்..


8) தலைமை ஆசிரியர் , JA & Watchman ( இருப்பின்) போன்ற கோடை விடுமுறை அற்ற பணியாளர்கள்... 

23/12 CL எடுக்கலாம்

24 & 31 RL எடுக்கலாம்...


( 24, 26, 29, 30, 31 & 2/1/26 பணி நாள் தான்) 


அவர்கள் 5,6 விடுப்பு வேண்டும் எனில் CL எடுக்கலாம்...


சிறப்பு நிகழ்வு


9) College AP TRB 27/12/25 நடைபெறுகிறது... 

அதில் தங்களுக்கு (ஆசிரியர்கள் ) பணி எனில் 


22, 23 CL or 5, 6 CL தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் 😊 ( on duty உம் பணியாக தான் கருத வேண்டும் )



SIR - வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? - SMS மூலம் அறியும் முறை



SIR - வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? - SMS மூலம் அறியும் முறை


SIR - Is your name in the draft voter list? - How to find out through SMS


எஸ்.ஐ.ஆர். வரைவுப் பட்டியல்: சுலபமாக அறியலாம்


வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்க்கும் வழிமுறைகள் 


SIR Draft Roll 


வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை அறிய, '1950' என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்


'ECI <space> உங்கள் EPIC எண் (உதாரணம்: ECI TSK0000000) என டைப் செய்து '1950' என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும்.



boAt Rockerz 255 Pro+, 60HRS Battery, Fast Charge, IPX7, Dual Pairing, Low Latency, Magnetic Earbuds, in Ear Bluetooth Neckband, Wireless with Mic Earphones (Active Black)


https://amzn.to/4qpbtsI




ஆண்டாள் நாச்சியார் வரலாறு

 


ஸ்ரீ ஆண்டாள் வரலாறு: 


ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரைப் பற்றிப் பார்க்கலாம். 


பல நூறு ஆண்டுகளுக்கு முன் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நந்தவனம் அமைத்து, வடபத்ரசாயி எனப்படும் வடபெருங் கோயிலுடையானுக்குப் பூ மாலைகள் சமர்ப்பித்துக் கைங்கரியம் செய்து வந்தவர் பெரியாழ்வார் . 


குழந்தைப் பேறு இல்லாத அவருக்கு, அவரது நந்தவனத்திலே, ஒரு துளசிச் செடியின் கீழ், ஒரு பெண் குழந்தை கிடைத்தது. 


அன்று திருவாடிப்பூரம். அக்குழந்தைக்குக் கோதை எனப் பெயரிட்டு, சீரும் சிறப்புமாய் வளர்த்து வந்தார் பெரியாழ்வார். 


கோதை என்றால் தமிழில் மாலை என்று பொருள்.  


வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். 


கோதை சிறு வயதிலேயே கண்ணன்பால் பிரேமை கொண்டு காதல் வசப்பட்டாள். 


தினந்தோறும் பெருமாளுக்குப் பெரியாழ்வார் தொடுக்கும் மாலையைத் தன் கழுத்தில் சூடி அழகு பார்த்து, இப்படிச் சூட்டினால் பெருமாளுக்கு அழகாக இருக்குமா என்று பார்த்து விட்டு, அந்த மாலையைக் கழற்றி வைத்து விடுவாள். 


தினந்தோறும் இவ்வாறு நடந்து வந்தது. 


ஒரு நாள் பெரியாழ்வார் இதைப் பார்த்து விட்டார். 


“இதென்ன அபத்தம்” எனக் கோதையைக் கடிந்து கொண்டு, அன்றைக்குச் கோயிலுக்குப் போகாமலும், எம்பெருமானுக்கு மாலை சூட்டாமலும், தூங்கி விட்டார்.  


அவரது கனவில் பெருமாள் தோன்றி, ‘உன் மகள் சூடிக்களைந்த மாலையே எனக்கு உவப்பானது’ எனக் கூறி மறைந்தார். 


பெரியாழ்வார் வியந்து, தன் மகள், பிராட்டியின் அம்சம் என்று உணர்ந்து போற்றினார். 


கோதை மணப் பருவம் எய்த, 


“மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று கூறி விட்டாள். 


அத்துடன், திருவரங்கத்துப் பெருமாளையே மணக்க விரும்புவதாகவும் சொல்லி விட்டாள். 


ஶ்ரீமத் பாகவத காலத்தில் விரதம் இருந்து, ஆயர் பெண்கள் கண்ணனை அடைந்ததை எண்ணியும், தமிழர் மரபுப்படி பாவை நோன்பு இருத்தலையும், கருத்தில் கொண்டு திருப்பாவைப் பாடல்களாலேயே பாவை நோன்பு நோற்றார் ஆண்டாள். 


நாச்சியார் திருமொழிப் பாடல்களால் பெருமானுக்குத் தூது விட்டார். 


சூடிக்கொடுத்த சுடர்கொடி நாச்சியார் பாடிக் கொடுத்த நாச்சியாராகவும் ஆனார். 


ஆழ்வாரின் கனவில் மீண்டும் தோன்றிய திருவரங்கத்துப் பெருமான், கோதையைத் தம்மிடம் அழைத்து வரக் கூறினான். 


அதேபோல, பாண்டிய மன்னன் வல்லவதேவனும்,  தன்னிடமும் இறைவன் கனவில் கூறியபடி, ஆண்டாளின் பயணத்துக்கு ஏற்பாடு செய்ய, பெரியாழ்வார் அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் சென்றார். 


எல்லோரும் பிரமிப்புடன் பார்த்திருக்க, அரங்கனின் கருவறையை அடைந்து, நேராக உள்ளே சென்று பெருமானின் திருவடி பற்றி அமர்ந்ததும், ஆண்டாள் மறைந்து பகவானுடன் கலந்தாள். 


இங்கே, 


“ஒரு மகள் தன்னையுடையேன், உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டு போனான்” என்னும் பெரியாழ்வார் திருமொழி (3-8-4) பாசுரம் நினைவு கூறத் தக்கது. 


இது தான் ஆண்டாளின் திருக்கல்யாணம். 


ஆன்மாவான உயிர், இறைவனின் திருவடிகளில் இணைவதைக் குறிப்பதே இது. 


வைணவத்தில் ஆண்டாளுக்கும், திருப்பாணாழ்வாருக்கும் மட்டுமே கிடைத்த பேறு இது. 


பின்னர், பெரியாழ்வார் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமக்கள் வேண்ட, “வாரணம் ஆயிரம்” என்ற அன்னையின் கனவுத் திருமணத்தை நனவாக்கி, முறைப்படி திருமணம் புரிந்து கொண்டான் அரங்கன் என்பது வழி வழியான கதை. 


இன்றும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாருடன் ஶ்ரீரங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களைக் காத்தருளுகிறான். 


ஆண்டாளின் பாடல்களின் அகச்சான்றுகளை வைத்து டாக்டர் மு. இராகவன், இவரது காலத்தை ஆராய்ந்திருக்கிறார். 


திருப்பாவை 13-ம் பாசுரத்தில் வரும் ‘வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று’ எனும் சொற்றொடரில் இருக்கும் வானவியல் சம்பவத்தை நிபுணர்களுடன் ஆராய்ந்து, அது கி.பி. 885, நவம்பர் மாதம் 25ஆம் தேதி என்று சொல்லியிருக்கிறார் டாக்டர் இராகவன், தமது ‘ஆழ்வார்கள் கால நிலை’ எனும் புத்தகத்தில். 


எனவே ஆண்டாளின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். 


ஆண்டாளின் பாடல்களின் அமைப்பு, சொல்லாட்சி, பாவை நோன்பு, காதல் முதலியவற்றை ஆராய்ந்தால், இரண்டு விஷயங்கள் தெளிவாகும்.


1. ஒரு பெண்ணால்தான் இத்தனை நளினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். 


ஆண்டாள் நிஜமானவர் என்பதை அவரது பெண்மை மிளிரும் பாடல்களே அறிவிக்கின்றன.


“அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த தட முலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன்”.      


  – நாச்சியார் திருமொழி (1-4).

என்ற வரிகளில் மிளிரும் பெண்மையும் காதலும் கவனிக்கத் தக்கது.


2. ஆண்டாள் தமிழில் மிகுந்த புலமை பெற்றிருந்திருக்கிறார்; அவர் தம் தந்தை பெரியாழ்வாரிடம் கற்றிருக்கவேண்டும்.


திருப்பாவை எளிமையானது. 


ஆனால் அதன் யாப்பு கடினமானது. 


’இயற்றரவினை கொச்சக் கலிப்பா’ என அதனை வகைப் படுத்துகிறார்கள். 


கடுமையான பா அமைப்பு அது. 


கடுமையானதொரு யாப்பில், மிக எளிய பாடல்கள் அமைக்கும் திறமை ஒரு சிறிய பெண்ணிடம் இருந்தது என்பது ஒரு மிகப் பெரிய விஷயம்.


இன்றைக்கு நம்மிடம் உள்ள நம் சிறந்த கவிஞர்கள் கூட, திருப்பாவையின் யாப்பமைதியில் பாட்டு எழுதினால், இத்தனை எளிமையாக, அத்துனை அழகாக, கருத்தாழமிக்கதாக அமைப்பது கடினம்.



அவரது நாச்சியார் திருமொழியில், அறுசீர், எழுசீர், ஆசிரிய விருத்தங்கள், கலி விருத்தங்கள், கலிநிலை விருத்தங்கள், கலிநலத்துறை பாடல்கள் என்று எடுத்து, வரிக்கு வரி அதில் உள்ள எழுத்துக்களை, ஒற்றெழுத்து இல்லாமல் எண்ணிப் பார்த்தால், ஒரே எண்ணிக்கையில் வருமாம். நீங்கள் யாராவது இதனை சோதனை செய்துதான் பாருங்களேன்!



boAt Rockerz 255 Pro+, 60HRS Battery, Fast Charge, IPX7, Dual Pairing, Low Latency, Magnetic Earbuds, in Ear Bluetooth Neckband, Wireless with Mic Earphones (Active Black)


https://amzn.to/4qpbtsI




திருச்செந்தூர் முருகன் பற்றிய தகவல்கள்




திருச்செந்தூர் முருகன் பற்றிய  தகவல்கள் :



1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். 


2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.


3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.


4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.


5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு. 


6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். 


7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள். 


8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது. 


9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். 


10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது. 


11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.


12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன. 


13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 


14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம். 


15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது. 


16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று. 


17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 


18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.


19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது. 


20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும். 


21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது. 


22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.


23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.


24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ள.ன


25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.


26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.


27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.


28. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.


30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.


31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.


32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.


33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.


34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.


35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.


36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.


37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.


38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன. 


39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.


40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.


41. சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.


சித்திரை, ஐப்பசி, தை    - 3

ஆடி, தை அமாவாசை    - 2

ஆவணி, மாசித் திருவிழா    - 10

ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம்    - 2

மாத விசாகம்    - 12

ஆனி தை வருடாபிஷேகம்    - 3

தீபாவளி, மகாசிவராத்திரி    - 4

மொத்தம்         36


42. திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.


43. திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.


44. திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.


45. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.


46. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.


47. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.


48. திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்.பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.


49. ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.


50. திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.


51. மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்கு வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.


52. கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.


53. திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.


54. சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.


55. திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.


56. கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.


57. மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும் கொண்டருள்பவன் திருமுருகன்.


58. சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.


59. யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.


60. திருச்செந்தூரில் ஒரு தினமாவது உபவாச விரதம் இருப்பது நல்லது 



boAt Rockerz 255 Pro+, 60HRS Battery, Fast Charge, IPX7, Dual Pairing, Low Latency, Magnetic Earbuds, in Ear Bluetooth Neckband, Wireless with Mic Earphones (Active Black)


https://amzn.to/4qpbtsI





SIR 2026 Draft Roll Tamilnadu




வாக்காளர் தீவிர சுருக்கமுறை திருத்தம் 2026, தமிழ்நாடு - வாக்காளர் பட்டியல் 19-12-2025 அன்று வெளியிடப்பட்டது 


 தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள மொத்த வாக்காளர் பட்டியலையும் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி


SIR Draft Roll 2026 Tamilnadu 


SIR 2026 Voters List Released on 19-12-2025


தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள மொத்த வாக்காளர் பட்டியலையும் டவுன்லோட் செய்ய வலைதள முகவரி இணைப்பு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

 


>>> ரூ. 20,000-க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல் போன்கள்... 



Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voters Listல் பெயர் சேர்க்க / நீக்க / திருத்தம் மேற்கொள்ள / மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள் - தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க / நீக்க / திருத்தம் மேற்கொள்ள / மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள் - தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு Special...