கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு...

 

 கோடை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி இயக்குனரின் பத்திரிக்கை செய்தி...



>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் பத்திரிக்கை செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




*🔸2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு*


2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். 


எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். 


அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது. தெரிவித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை


*பள்ளிக் கல்வி இயக்குநர்*







சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி (Matric, Nursery & Primary) பள்ளிகளில்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு 25% சேர்க்கை வழங்குதல்‌ - 28.05.2024 அன்று சார்ந்த பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்வு செய்தல்‌ - தலைமை ஆசிரியர்‌,/ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ /ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ நியமனம்‌ செய்தல்‌ - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 299/ RTE 25%/ DC1/ 2024, நாள்‌: 22.05.2024...

 


சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி (Matric, Nursery & Primary) பள்ளிகளில்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு 25% சேர்க்கை வழங்குதல்‌ - 28.05.2024 அன்று சார்ந்த பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்வு செய்தல்‌ - தலைமை ஆசிரியர்‌,/ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ /ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ நியமனம்‌ செய்தல்‌ - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 299/ RTE 25%/ DC1/ 2024, நாள்‌: 22.05.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌

ந.க.எண்‌: 299/ RTE 25%/ DC1/ 2024, நாள்‌: 22.05.2024.


பொருள்‌: திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ - 2024-2025 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ அனைத்து சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி (Matric, Nursery & Primary) பள்ளிகளில்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு 25% சேர்க்கை வழங்குதல்‌ - 28.05.2024 அன்று சார்ந்த பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்வு செய்தல்‌ - தலைமை ஆசிரியர்‌,/ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ /ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ நியமனம்‌ செய்தல்‌ - சார்பு.


பார்வை 

1... குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌ 2009 மற்றும்‌ தமிழ்நாடு விதிகள்‌ 2011


2.  அரசாணை (நிலை) எண்‌.271, பள்ளிக்கல்வித்துறை (சி2) நாள்‌. 25:10.2012.


3. அரசாணை (நிலை) எண்‌.60, பள்ளிக்கல்வித்‌ (எக்ஸ்‌ 2) துறை நாள்‌. 0104.2013.


4. அரசாணை (நிலை) எண்‌.59. பள்ளிக்‌ கல்வித்‌ (பொ நூ 2) துறை நாள்‌. 12.05.2014.


5. அரசாணை (நிலை) எண்‌.66, பள்ளிக்‌ கல்வித்துறை நாள்‌. 07.04.2017.


6. சென்னை - 06, தமிழ்நாடு தனியார்‌ பள்ளிகள்‌ இயக்குநர்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்கல்வி உரிமைச்‌ சட்ட மாநில முதன்மைத்‌ தொடர்பு அலுவலரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌:1872/சி12024, நாள்‌.0104.2024.


குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌ - 2009-ன்‌ பிரிவு 12(1) (6) படியும்‌, தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்‌ கல்வி உரிமை விதிகள்‌ 2011 விதி 8 மற்றும்‌ 9 படியும்‌ சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ உள்ள நுழைவு நிலை வகுப்பில்‌ (Entry Level Class) 25 விழுக்காடு இடங்கள்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்து ஒவ்வொரு வருடமும்‌ குழந்தைகள்‌ சேர்க்கப்பட்டு வருகின்றனர்‌. இக்கல்வியாண்டில்‌ (2024-2025) விண்ணப்பித்ததில்‌ தகுதியுள்ள குழந்தைகளில்‌ 25% இட ஒதுக்கீடு எண்ணிக்கையை விட குறைவாக உள்ள பள்ளிகளில்‌ நேரடியாக சேர்க்கையும்‌, 25% இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை விட அதிகமாக விண்ணப்பம்‌ பெற்றுள்ள பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையிலும்‌ தெரிவு செய்து சேர்க்கை செய்யப்படும்‌.


குலுக்கல்‌ முறையில்‌ தெரிவு செய்யும்‌ முறையானது 28.05.2024 அன்று இணைப்பில்‌ உள்ளவாறு தலைமை ஆசிரியர்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌//ஆசிரியர்‌ பயிற்றுநர்‌ /வருவாய்‌ துறை அலுவலர்‌ முன்னிலையில்‌ நடைபெறும்‌. எனவே இணைப்பில்‌ உள்ள தலைமை ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌,/ஆசிரியர்‌ பயிற்றுநர்‌ / வருவாய்‌ துறை அலுவலர்‌ சம்மந்தப்பட்ட பள்ளிகளில்‌ 28.05.2024 அன்று காலை 9.00 மணிக்குச்‌ சென்று எவ்வித புகாருக்கும்‌ இடமளிக்காமல்‌, இத்துடன்‌ இணைக்கப்பட்ட தனியார்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதல்களைப்‌ பின்பற்றி குலுக்கல்‌ முறையில்‌ குழந்தைகள்‌ தெரிவு செய்திடுவதை உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.




மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேல்முறையீடு - தேர்வு பட்டியல் முடிவு வெளியிட உயர்நீதிமன்றம் தடை...

 


மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேல்முறையீடு - தேர்வு பட்டியல் முடிவு வெளியிட உயர்நீதிமன்றம் தடை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



18 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு...


சென்னை: 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இறுதி முடிவுகளை வெளியிடக் கூடாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற பிற விண்ணப்பதாரர்களின் நியமன வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஆணையிட்டு, வழக்கின் விசாரணையை ஐகோர்ட் ஜூன் 10-க்கு ஒத்திவைத்தது...


முழுமையான விவரம் : 

 மாவட்ட கல்வி அதிகாரிகள் 18 பேரின் தேர்வு பட்டியலை ரத்து செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தேர்வு பட்டியலை தயாரிக்க அனுமதித்த உயர்நீதிமன்றம், இறுதி முடிவை வெளியிட தடை விதித்துள்ளது.


மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான 18 காலியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்களை வரவேற்று, 2018 டிசம்பரில், அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.


தேர்வுகள் நடந்து முடிந்து, 2020 டிசம்பரில் வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது; நியமனங்களும் நடந்து முடிந்தன. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், நிர்மல்குமார் என்பவர் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.


மனுக்களை விசாரித்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு:


இடஒதுக்கீட்டு முறையையும், பிரிவு வாரியான ஒதுக்கீட்டையும் பின்பற்றாமல், ஒழுங்கற்ற முறையில் தேர்வு நடந்துள்ளது. எனவே, மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் ரத்து செய்யப்படுகிறது.


காலியிடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, பொதுப் பிரிவினருக்கு எனவும், ஆசிரியர் பிரிவினருக்கு எனவும் தனித்தனியே தேர்வு பட்டியலை வெளியிடும் வகையில், மீண்டும் தேர்வு பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்படுகிறது.


நான்கு வாரங்களில் இந்தப் பணிகளை முடித்து, திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்.


இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


இந்த உத்தரவை எதிர்த்து, தற்போது பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.


இம்மனு, நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 10க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள, தேர்வாணையத்துக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், இறுதி முடிவுகளை வெளியிட தடை விதித்தும், வழக்கு விசாரணை முடியும் வரை தற்போது பணியில் உள்ள அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.


பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள்...



 ♥பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள்...


♥நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். 


♥அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம். 


♥1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும். 


♥2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா? 


♥3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள். 


♥4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்! 


♥5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள். 


♥6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள். 


♥7. நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும். 


♥8. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னோர்களின் சிறப்புகளையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும். உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள். 


♥9. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே உங்கள் மகளுக்கு பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள். 


♥10. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். வெளியுலகில் எந்த மாதிரி பிரச்சனைகள் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். மேலும் தற்காப்பு கலைகளையும் சொல்லிக் கொடுங்கள். 


♥11. இன்றைய காலகட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் அடுத்தவர் கையை எதிர் பார்க்க முடியாது. அனைத்து வேலைகளை பற்றியும் சொல்லி கொடுங்க. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள். 


♥12. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்!


கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம்?

 கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம்?



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டாரக்கல்வி அலுவலர் பதவிக்கு, 01.01.2024-ன்படி தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமை பட்டியல்...

 

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது திருத்தம் , சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டாரக்கல்வி அலுவலர் பதவிக்கு, 01.01.2024-ன்படி தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமை பட்டியல்...



MSHM TO BEO Panel 2024 - Final List Published...


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2024 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது திருத்தம் , சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 4797/ ஐ1/ 2024, நாள்: 23-05-2024...


Priority List of Eligible Candidates for the Post of Block Education Officer from Middle School Head Master as on 01.01.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வேளாண் உதவி இயக்குநர் பதவிக்கான நேர்முக தேர்வு ரத்து - உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக TNPSC நடவடிக்கை...

வேளாண் உதவி இயக்குநர் பதவிக்கான நேர்முக தேர்வு ரத்து - உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை...



மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு...


மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சாதாரண குடிமகன் பச்சை மையினால் கையொப்பமிடக் கூடாது என்பதற்கான அரசாணைகள் எதுவும் இல்லை - மாவட்ட வருவாய் அலுவலர்...



 சாதாரண குடிமகன் பச்சை மையினால் கையொப்பமிடக் கூடாது என்பதற்கான அரசாணைகள் எதுவும் இல்லை - மாவட்ட வருவாய் அலுவலர்...



There are no ordinances that prevent ordinary citizens from signing in green ink - District Revenue Officer...





அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வகுப்பு மற்றும் பிரிவுகளை EMIS வலைத்தளத்தில் மாற்றம் செய்யும் வழிமுறை...


 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வகுப்பு மற்றும் பிரிவுகளை EMIS வலைத்தளத்தில் மாற்றம் செய்யும் வழிமுறை - Class Change Request...


Dear Team,

Class change option module has been released for Government , Government Aided and Private schools.

Please find the attached documents for the steps...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution 2026 | Budget & Phase wise school list | SPD Proceedings

2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வ...