கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சங்கங்களுடன் இன்று நடைபெறுவது சந்திப்பும் செய்தி தெரிவித்தலும் மட்டுமே -



சங்கங்களுடன் இன்று நடைபெறுவது சந்திப்பும் செய்தி தெரிவித்தலும் மட்டுமே - 


மாண்புமிகு அமைச்சர் உயர்திரு.ஏ.வ.வேலு அவர்களுடன்  ADAF கூட்டமைப்பினர் இல்லத்தில் சந்திப்பு - சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அல்ல சந்திப்பும் செய்தி தெரிவித்தல் என்ற திட்டம் எனவும் 11 மணிக்கு தலைமை செயலகத்தில் மேற்கொள்கிறோம் - ADAF அச்சந்திப்புக்கு வாருங்கள் என கூட்டமைப்பு நேரில் அழைப்பு


தோழர்களுக்கு வணக்கம் 


இன்று நம் ADAF கூட்டமைப்பின் மாநில முதன்மை கள அமைப்பாளர்கள் மற்றும் மாநில கள அமைப்பாளர்கள் காலை 9.30 மணி அளவில் மாண்புமிகு அமைச்சர் அவர்களை அவரது இல்லத்தில்  சந்தித்தோம். 


அரசு பேச்சுவார்த்தை என்பது வேலை நிறுத்தம் அறிவித்துள்ள அனைத்து அமைப்புகளையும் அழைத்து மேற்கொள்ளப்படுவதை கடைபிடிக்கவில்லை என தெரிவித்தோம். அதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை என்பது திட்டமில்லை மாண்புமிகு முதல்வர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்படும் நிலை உள்ளது அடுத்தும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிடுகிறார் அதை கருத்தில் கொண்டு தங்கள் போராட்டங்களின் மீது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற செய்தி அரசு சார்பில் தெரிவிக்க உள்ளோம் எனவும். 

ADAF கூட்டமைப்பை தலைமை்செயலகம் வந்து சந்திப்பில் பங்கேற்கவும் என நேரில் அழைப்பு விடுத்தார். அழைப்பை தொடர்ந்து செல்கிறோம்.

பங்கேற்று விரிவான செய்தி வெளியிடப்படும்.

🙏🏻

தோழமையுடன்


மாநில முதன்மை கள அமைப்பாளர்கள்

ADAF



NIVEA Soft Light Moisturizer, 300 ml | Instant Hydration with Vitamin E & Jojoba Oil | Non-Greasy Cream for Face, Body and Hands | For Smooth, Healthy Skin


https://amzn.to/4s5pHQV




OPS, CPS, UPS வேறுபாடுகள் - முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார்?

 

 

பழைய ஓய்வூதியம் மற்றும் புதிய ஓய்வூதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்  - முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார்?



OPS, CPS, UPS Differences


பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளைத் தெளிவாக விளக்குகிறது கீழேயுள்ள பதிவு.


அதன் முழுமையான விவரங்கள் இதோ:


1. பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)

அமலாக்கம்: மத்திய அரசில் 1.4.2004-க்கு முன் அதாவது 31-03-2004 வரை (தமிழ்நாட்டில் 31-03-2003 வரை மட்டுமே).


யாருக்கு: 2003-க்கு முன் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு.


ஓய்வூதியத் தொகை: கடைசி மாதச் சம்பளத்தில் 50% வரை உறுதியாகக் கிடைக்கும்.


பங்களிப்பு: ஊழியர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து எவ்விதத் தொகையும் செலுத்தத் தேவையில்லை. முழுச் செலவையும் அரசே ஏற்கும்.


இதர பலன்கள்: அகவிலைப்படி (DA) உயர்வு உண்டு. குடும்ப ஓய்வூதியம் முழுமையாகக் கிடைக்கும்.


சவால்: இது அரசுக்கு மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.


2. புதிய / பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ( NPS / CPS)

அமலாக்கம்: 2003-க்குப் பிறகு (தமிழ்நாட்டில்)


யாருக்கு: 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு.


ஓய்வூதியத் தொகை: இது முதலீடு சார்ந்தது. நாம் முதலீடு செய்த தொகை மற்றும் பங்குச்சந்தை லாபத்தைப் பொறுத்தே அமையும். ஓய்வூதியம் உறுதி கிடையாது.


பங்களிப்பு: ஊழியர் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படும். மத்திய அரசு 14% பங்களிப்பு வழங்கும் (தமிழ்நாடு அரசின் பங்களிப்பு தற்போது வரை 10% மட்டுமே) 


இதர பலன்கள்: மத்திய அரசு பணியில் ஓய்வு பெறும்போது 60% தொகையை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள 40% மட்டுமே மாத ஓய்வூதியமாக வரும். அகவிலைப்படி உயர்வு கிடையாது. 

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்னும் CPS திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த பணத்துடன், தனது பங்களிப்பையும் சேர்த்து ஓய்வு பெறும் நாள் அன்று வரை உள்ள தொகைக்கு 7.1% வட்டியுடன் மொத்தமாக வழங்கி விடுகிறது.


சவால்: பங்குச்சந்தை அபாயம் உள்ளது; அரசு ஊழியர்களுக்கு தனது பணமும் சேர்ந்து பறிபோகும் வாய்ப்புள்ளது என்பதால் இதில் துளியும் விருப்பம் இல்லை.


3. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)


அமலாக்கம்: 2024-25 (மத்திய அரசின் முன்மொழிவு).


யாருக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு (மாநில அரசுகள் விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம்).


ஓய்வூதியத் தொகை: உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் முதலீடு கலந்த பலன்கள்.


பங்களிப்பு: ஊழியர் பணம் பங்களிப்பு செய்ய வேண்டும். அரசு தனது பங்களிப்பைத் தொடரும்.


இதர பலன்கள்: குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


நிலைப்பாடு: இது அரசுக்கும் ஊழியருக்கும் இடையிலான ஒரு நடுத்தர சமரசத் திட்டமாக இது கருதப்படுகிறது. முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


இறுதியாக : தமிழ்நாட்டில் மத்திய அரசை பின்பற்றி, அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவே அதிக வாய்ப்பு உள்ளது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.


ஒரு சிலர் பணி ஓய்வுக்காலம் பாதுகாப்பாக அமைய வேண்டும் எனும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தும் என்று கூறுகிறார்கள்.


ஜாக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் 06-01-2025 அன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருமித்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கே கிடைத்துள்ளது என்பதால் அவர்களின் நியாயமான கோரிக்கையை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொள்வார் என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர். 




பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு - போட்டோ ஜியோ தகவல்

 

 

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு - போட்டோ ஜியோ தகவல்


நாளைய அறிவிப்பை பார்த்துவிட்டு போராட்டத்தை தொடங்குவதா? வாபஸ் பெறுவதா? எனும் முடிவு - போட்டோ ஜியோ


இன்று அமைச்சர் திரு எ.வ.வேலு மற்றும் நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு ஆகியோருடன் போட்டோ ஜியோ மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 






OnePlus Nord Buds 3r TWS Earbuds up to 54 Hours Playback, 2-mic Clear Calls, 3D Spatial Audio, AI Translation, 12.4mm Drivers, Dual-Device Connectivity, 47ms Low Latency - Aura Blue


https://amzn.to/4rQFMdh



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சங்கங்களுடன் இன்று நடைபெறுவது சந்திப்பும் செய்தி தெரிவித்தலும் மட்டுமே -

சங்கங்களுடன் இன்று நடைபெறுவது சந்திப்பும் செய்தி தெரிவித்தலும் மட்டுமே -  மாண்புமிகு அமைச்சர் உயர்திரு.ஏ.வ.வேலு அவர்களுடன்  ADAF கூட்டமைப்பி...