இடுகைகள்

Online Class லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்லைன் கல்வி - கற்றல் செயல்பாடுகள் முன்னேற்றம் குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் & பள்ளிப்பார்வை படிவம் (Online Education - Proceedings of Tirupur District Chief Educational Officer & School Visit Format on the progress of learning activities)...

படம்
  >>> ஆன்லைன் கல்வி - கற்றல்  செயல்பாடுகள் முன்னேற்றம் குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் & பள்ளிப்பார்வை படிவம் (Online Education - Proceedings of Tirupur District Chief Educational Officer & School Visit Format on the progress of learning activities)...

ஆன்லைன் வகுப்புகள் நேரடி கற்றலுக்கு ஈடாகாது என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை(Parliamentary Standing Committee Report that Online Classes do not equate to direct learning)...

படம்
 ஆன்லைன் வகுப்புகள் நேரடி கற்றலுக்கு ஈடாகாது என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை... Parliamentary Standing Committee Report that Online Classes do not equate to direct learning.

கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...

படம்
 தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தற்பொழுது துவங்கியிருக்கும் புதிய கல்வியாண்டில் பயிலும் 2 மற்றும் 3வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் கொரோனா 2ஆம் பேரலை காரணமாக மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கான 2021-22 புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகளும் துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் துவங்குமா என்று எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தது. இந்நிலையில் கல்லூரிகளில் 2ஆவது மற்றும் 3ஆம்

ONLINE CLASS தொடர்பாக தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள் பராமரிக்கவேண்டிய பதிவேடுகள் - ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 1183/ஆ4/2021, நாள்: -07-2021...

படம்
>>> ONLINE CLASS தொடர்பாக தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள் பராமரிக்கவேண்டிய பதிவேடுகள் - ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 1183/ஆ4/2021, நாள்:  -07-2021...

ஆபத்தான 'ஆன்லைன்' வகுப்பு - மரம் ஏறி படிக்கும் மாணவர்கள்...

படம்
 மொபைல் போன் சிக்னல் கிடைக்காததால், மரத்தில் ஏறி மாணவர்கள், 'ஆன்லைன்' வகுப்பை கவனிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி அருகே பெரப்பஞ்சோலை, பெரியகோம்பை ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லுாரி, பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. பெரப்பஞ்சோலை, பெரியகோம்பையில் மொபைல்போன் டவர்கள் இல்லை. பேசுவதற்கே சரியாக சிக்னல் கிடைக்காது. பாடம் சம்பந்தப்பட்ட வீடியோ, ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டும் என்றால், 5 கி.மீ., துாரம் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும். இதனால், மாணவர்கள், அந்த கிராமத்தில் உயரமாக உள்ள ஆலமரத்தின் கிளைகள் மீது அமர்ந்து, ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். தினமும் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை உயிரை பணயம் வைத்து, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது, மாணவர்களின் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஓராண்டாகவே இப்பகுதி மாணவர்கள், ஆலமரத்தில் அமர்ந்து தான் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். மாணவர்களின் நலன்கருதி, அப்ப

பள்ளிகளில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறை அமைக்க உதவி: நாடாளுமன்றக் குழுவிடம் ISRO சம்மதம்...

படம்
  கரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யும் நோக்கில், நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறையை அமைக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க, கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இஸ்ரோ சம்மதம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு நேரடியாகச் செல்வதில் தடை ஏற்பட்டது. ஆன்லைன் மூலமும், யூடியூப் மூலமும்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டாக கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யும் நோக்கில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உதவியுடன் வகுப்பறை அமைக்க உதவி செய்யக் கோரி இஸ்ரோவிடம், கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டிருந்தது. கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம், நிலைக்குழுத் தலைவர் எம்.பி. வினய் சகாஸ்ரபுத்தே தலைமையில் நேற்று நடந்தபோது இந்த விவகாரம் குறித்துப் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்கள் பங்கேற்றனர். இஸ்ரோ சார்பிலும் விஞ்ஞானிகள் பங்கேற்

ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சமர்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...

படம்
 ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சமர்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு... ஸ்மார்ட் போன்’ இல்லாததால், இணையதள வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இணையவழியில் கற்பித்தல் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலால், நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டுப்பள்ளித் திட்டத்தின்கீழ் கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை முன்னெடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகள் இணையதளம் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன. மறுபுறம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், பாடம் சார்ந்த பயிற்சி வழிமுறைகளை ஆசிரியர்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி, கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளத

தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் - மாணவர் மனசு பெட்டி - அரசாணை எண்: 83, நாள்: 17-06-2022 வெளியீடு (G.O. (1D) No.83, Dated: 17-06-2021)...

படம்
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு குழு உருவாக்கப்படும்.   குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.  குறைகளை தீர்க்க ஹெல்ப் லைன் எண், மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும். ஆன்லைன் வகுப்பில் கண்ணியமான உடை அணிய வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள். >>> Click here to Download G.O. (1D) No.83, Dated: 17-06-2021... >>> தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் (தமிழில்)... பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி அளவில் குழு அமைக்கப்பட்ட வேண்டும். குழுவில் பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர், 2 நிர்வாகிகள் இடம்பெற வேண்டும்.  பள்ளிகள் அமைக்கும் குழுவில் பள்ளிசாராத நபர் ஒருவர் இடம்பெற வேண்டும். அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு அளிப்போர் மீது புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக காவல்துறை ஆய்வாளர்கள் அலைபேசி எண்கள் வெளியீடு...

படம்
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சமயத்தில் சில பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ஆசிரியர்களால் பாலியல் ரீதியான தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்காகவும், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தக்கூடிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுடன் மத்திய மண்டல ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 08) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், 255 பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். முழுவதும் பதிவு செய்ய வேண்டும் அப்போது அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இணையவழி வகுப்புகள் உரிய முறைப்படுத்துதலுடன் நடைபெற வேண்டும். அனைத்து இணையவழி

ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு...

படம்
  கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு. கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு. கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி தீவிரம். நேரடி வகுப்புகளைப் போன்று, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற வாய்ப்பு. 7 பேர் கொண்ட குழு வரும் 11ஆம் தேதிக்குள் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.

ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள்...

படம்
 ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள்... பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைக் கூட்டம்  - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 160, நாள்: 26-05-2021...   பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை. ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளின் நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவுகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இருவர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். ஆன்லைன்  வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் -- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை... >>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 160, நாள்: 26-05-2021...  

மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்த உத்தரவு...

படம்
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வந்து மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தெர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக 1 முதல் 11ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வில்லாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை உயர் கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களுக்கு வந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.  அரசு அனுமதி வழங்கினால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது க

கல்லூரி பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இணையவழி வகுப்பு - வாரத்தில் 6 நாட்கள் நடைபெறும் என அரசு அறிவிப்பு...

படம்
கரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இன்று முதல் நேரடி வகுப்புகள் கிடையாது. வாரத்தில் 6 நாட்கள் இணையவழி வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகளை மார்ச்31-ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு  விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கம்போல வகுப்பு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் குழப்பம் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுமா அல்லது விடுமுறை விடப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு  (மார்ச் 23) முதல் இணையவழி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில

தமிழகத்தில் உள்ள அனைத்து வகைக் கல்லூரிகளிலும் 23.03.2021 முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வழிக் கல்வி தொடரும் - அரசாணை வெளியீடு...

படம்
Disaster Management Act 2005 - COVID 19 - Online Classes to be Conducted in all Higher Educational Institutions - Direct classes will be canceled in all types of colleges in Tamil Nadu from 23.03.2021 and online education will continue - Government Order released...G.O.Ms.No.327, Dated: 22-03-2021... >>> Click here to Download  G.O.Ms.No.327, Dated: 22-03-2021...

பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து 1 வருடம் நிறைவு! தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டின் நிலை? எப்பொது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்?

படம்
 கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு ஓராண்டு நிறைவு; ஆன்லைன் கல்வி மாணவர்களுக்கு கைகொடுத்ததா? கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவுபெற்று விட்டது. இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஆன்லைன் வழிக்கல்வி மாணவர்களுக்கு கைகொடுத்ததா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை கொரோனா கோரத்தாண்டவம் தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதிக்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த நேரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.  கடைசித்தேர்வு கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடத்தப்பட்டதால், சில மாணவர்கள் தேர்வை எழுத முடியாமல் போனதாக தகவல் வெளியானது. அதையடுத்து அந்த மாணவர்களுக்கு தனியாக தேர்வும் நடத்தப்பட்டது. மேலும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, அவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. இவ்வாறாக பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில்,

முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் - ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான இணைப்பு (Link)...

படம்
முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் - ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான  இணைப்பு (Link)... AXN-INFOTECH  PG COMMERCE ONLINE TRAINING REGISTRATION FORM https://docs.google.com/forms/d/e/1FAIpQLSemT9DMZkXyliD838QIiEshDOzbFYI-VbKfruDdTUb1x9QIXQ/viewform

பள்ளிக் கல்வி - முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

படம்
  பள்ளிக் கல்வி - முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு AXN Infotech நிறுவனம் மூலம் Computerised Accounting System - Tally என்ற தலைப்பில் 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... >>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பள்ளிக் கல்வி - IIT/JEE போன்ற தொழில்நுட்பக் கல்விக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க 11&12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்...

படம்
  பள்ளிக் கல்வி - IIT/JEE போன்ற தொழில்நுட்பக் கல்விக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க 11&12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்... >>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...