இடுகைகள்

Ration Shop லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நியாயவிலை கடைகளுக்கு 'ஜன் போஷான் கேந்த்ராஸ்' என்று பெயர் மாற்றம் - மத்திய அரசு திட்டம்...

படம்
 ரேசன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டம்... நியாயவிலை கடைகளுக்கு 'ஜன் போஷான் கேந்த்ராஸ்' என்று பெயர் மாற்ற மத்திய அரசு திட்டம்.  நாடு முழுவதும் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 60 ரேசன் கடைகளின் பெயரை மாற்றுகிறது மத்திய அரசு. குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப்பிரதேசத்தில் 60 ரேசன் கடைகளின் பெயரை சோதனை முயற்சியாக மாற்ற திட்டம். ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தெலுங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களில்  இன்று 60 ஜன் போஷன் கேந்திராக்கள் (நியாய விலை கடைகள்) தொடங்கப்பட்டது.  இந்த முன்முயற்சி முறையான ஊதியம் பெறும் FPS டீலர்கள் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்கள் மற்றும் மனிதவளத்தை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்யும்.  அதே நேரத்தில், சமூகத்தின் ஊட்டச்சத்து தேவைகளை, உணவுப் பாதுகாப்பு மட்டுமல்ல, அனைவருக்கும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும் மேம்படுத்த முனைகிறது.  மேலும் மேரா ரேஷன் ஆப், தர மேலாண்மை அமைப்பு, தர கையேடு கையேடு, @FCI_India ஒப்பந்த கையேடு, ஆய்வகங்களின் NABL அங்கீகாரம் போன்ற பல்வேறு முன்முயற்சிகள் தொடங்கப்பட்டன, இந்த முயற்சிகள் அமைப்புக்கு அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வரு

யுபிஐ மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருள் வாங்கலாம் சென்னை, புறநகர் பகுதிகளில் அறிமுகம் (Ration items can be purchased through UPI, introduced in Chennai and suburbs)...

படம்
 யுபிஐ மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருள் வாங்கலாம் சென்னை, புறநகர் பகுதிகளில் அறிமுகம் (Ration items can be purchased through UPI, introduced in Chennai and suburbs)... ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய ‘மொபைல் முத்தம்மா’ திட்டம் சென்னையில்   தொடக்கம்... இனி ரேஷன் கடைகளிலும் UPI வசதி : வந்துவிட்டது ‘மொபைல் முத்தம்மா (Mobile Muthamma)’ திட்டம் - சென்னையில் தொடக்கம்... தற்போது பணத்தை பெரும்பாலானோர் தங்கள் கைகளில் எடுத்து செல்வதில்லை. மாறாக மொபைல் போனில் உள்ள கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களை பயன்புடத்தி பணத்தை செலுத்துகின்றனர். சிறு கடைகள் முதல் மாலில் உள்ள பெரிய கடைகள் வரை அனைத்திலும் வாங்கப்படும் சிறு பொருளாக இருந்தாலும் சரி, தங்கள் மொபைல் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது. மக்கள் இதற்கே பழகியுள்ளனர். இந்த சூழலில் மக்களின் நலன் கருதி ரேஷன் கடைகளிலும் UPI வசதி மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என பேரவையில் கூட்ட

நியாய விலைக் கடையில் அரிசி விநியோகம் - நாளை (01-01-2023) முதல் புதிய முறையில் ரசீது - உணவு வழங்கல் துறை உத்தரவு (Distribution of Rice at Ration Shop - Receipt in New Mode from Tomorrow (01-01-2023) - Food Supply Department)...

படம்
  நியாய விலைக் கடையில் அரிசி விநியோகம் - நாளை (01-01-2023) முதல் புதிய முறையில் ரசீது - உணவு வழங்கல் துறை உத்தரவு (Distribution of Rice at Ration Shop - Receipt in New Mode from Tomorrow (01-01-2023) - Food Supply Department)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கிராம உதவியாளர் - நியாய விலைக்கடை பணியாளர்கள் தேர்வு - முதல்வருக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை - நாளிதழ் செய்தி (Village Assistant - Ration Shop Staff Selection - Handicapped Association Request to Chief Minister - Newspaper News)...

படம்
 கிராம உதவியாளர் - நியாய விலைக்கடை பணியாளர்கள் தேர்வு - முதல்வருக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை - நாளிதழ் செய்தி (Village Assistant - Ration Shop Staff Selection - Handicapped Association Request to Chief Minister - Newspaper News)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் காலிப் பணியிடங்கள் நிரப்ப மாவட்ட வாரியாக அறிவிக்கை வெளியீடு (District wise notification release for filling up the vacancies of Salesman, Builder in Ration Shops)...

படம்
  >>> நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் காலிப் பணியிடங்கள் நிரப்ப மாவட்ட வாரியாக அறிவிக்கை வெளியீடு (District wise notification release for filling up the vacancies of Salesman, Builder in Ration Shops)... தமிழக ரேஷன் கடை காலிப்பணியிடங்கள்: கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள் விழுப்புரம் – 244 பணியிடங்கள் விருதுநகர் – 164 பணியிடங்கள் புதுக்கோட்டை – 135 பணியிடங்கள் நாமக்கல் – 200 பணியிடங்கள் செங்கல்பட்டு – 178 பணியிடங்கள் ஈரோடு – 243 பணியிடங்கள் திருச்சி – 231 பணியிடங்கள் மதுரை – 164 பணியிடங்கள் ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள் திருவண்ணாமலை – 376 பணியிடங்கள் அரியலூர் – 75 பணியிடங்கள் தென்காசி – 83 பணியிடங்கள் திருநெல்வேலி – 98 பணியிடங்கள் சேலம் – 276 பணியிடங்கள் கரூர் – 90 பணியிடங்கள் தேனி – 85 பணியிடங்கள் சிவகங்கை – 103 பணியிடங்கள் தஞ்சாவூர் – 200 பணியிடங்கள் ராமநாதபுரம் – 114 பணியிடங்கள் பெரம்பலூர் – 58 பணியிடங்கள் கன்னியாகுமரி – 134 பணியிடங்கள் திருவாரூர் – 182 பணியிடங்கள் வேலூர் – 168 பணியிடங்கள் மயிலாடுதுறை – 150 பணியிடங்கள் திருப்பத்தூர் – 240 பணியிடங்கள் கள்ளக்குறிச்

நியாயவிலை கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு (Ration shops working hours change - Government of Tamil Nadu order)...

படம்
தமிழகம் முழுதும் நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக 2.30 மணி நேரம் நியாய விலை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தழிகம் முழுதும் நியாய விலை கடைகள் நேரத்தை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிறத்துள்ளது. அதன்படி அரசு பிறப்பித்த உத்தரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையிலும், இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு சென்னை மற்றும் புறநகரில் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை செயல்பட்டு வந்த நியாய விலை இனி மேற்கண்ட நேரங்களில் செயல்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, பெரும்பாலான நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு கடை செயல்படும் நேரம் குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவில்லை என்றும், கடை ஊழியர்கள் கடை திறக்கும் நேரம், கடைகளை திறந்து செயல்படுத்த வேண்டிய நெறிமுறைகளை குறித்த பயிற்சி அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியாய

அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது என்பது போன்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தமிழ்நாடு அரசு விளக்கம்(Government of Tamilnadu interprets reports that Government employees and those with an annual income of more than Rs 1 lakh do not have rations are completely untrue) செய்தி வெளியீடு எண்: 879, நாள்: 13-10-2021...

படம்
 அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது என்பது போன்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தமிழ்நாடு அரசு விளக்கம்(Government of Tamilnadu interprets reports that Government employees and those with an annual income of more than Rs 1 lakh do not have rations are completely untrue) செய்தி வெளியீடு எண்: 879, நாள்: 13-10-2021... >>> செய்தி வெளியீடு எண்: 879, நாள்: 13-10-2021...

நியாயவிலைக் கடைகளில்(Ration Shop) பொருட்கள் வாங்க சிரமப்படுவோர், வேறொரு நபர் வாயிலாக வாங்குவதற்கான அங்கீகார படிவம்(Authorization Format)...

படம்
 ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க சிரமப்படுவோர், வேறொரு நபர் வாயிலாக வாங்குவதற்கான அங்கீகார படிவத்தை, உணவு வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழக ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், கடைக்கு செல்ல முடியாத நிலையில், தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பி, பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதற்கு, கார்டுதாரர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ரேஷன் கடையில் வழங்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை ஊழியர்கள் பணத்திற்கு விற்பதாகவும், வட்ட வழங்கல் அதிகாரிகள் ஒப்புதல் தர தாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுகின்றன. உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளவர்கள், அதற்கான அங்கீகார சான்று ஒப்புதல் படிவத்தை, ' www.tnpds.gov.in ' என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த படிவத்தை உரிய முறையில் சரிபார்த்து, விரைந்து ஒப்புதல் தர, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நியாய விலைக்கடைகளில் பணியாளர்களை தவிர்த்து வெளியாட்கள் இருந்தால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு ந.க.எண்: 16307/2021/பொவிதிமு1(1), நாள்: 19-07-2021...

படம்
 நியாய விலைக்கடைகளில் பணியாளர்களை தவிர்த்து வெளியாட்கள் இருந்தால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு... கூட்டுறவு சங்க பதிவாளர் கடிதம் ந.க.எண்: 16307/2021/பொவிதிமு1(1), நாள்: 19-07-2021...

கொரோனா நிவாரண தொகை வழங்க விடுமுறை நாட்களில் பணிபுரிந்த நியாயவிலை கடை பணியாளர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...

படம்
 கொரோனா வைரஸ் நிவாரண தொகை வழங்க கடந்த 2 மாதங்களில் விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை செயல்பட்டதால், பணிபுரிந்த விடுமுறை நாட்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரு மாதங்களுக்கு கூடுதல் அரிசி வழங்க உத்தரவு...

படம்
 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி வழங்க உத்தரவு. கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடையில் கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  மே, ஜூன் மாதத்தில் ஏற்கனவே வழங்கப்படும் அளவுடன் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இன்று(08-06-2021) முதல் நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம்...

படம்
 நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம். இன்று(08-06-2021)  முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும். காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் - தமிழ்நாடு அரசு...

ரேஷன் கடைகள் 25-05-2021முதல் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு...

படம்
 ரேஷன் கடைகள் 25-05-2021முதல் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு... ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் - தமிழக அரசு. தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரேஷன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி.

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு...

படம்
  தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம் பெற்று வரும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் குறைந்தபட்சமாக 2556 ரூபாயும், அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயும் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவார்கள். அதே போன்று கட்டுனர்கள் குறைந்தபட்சமாக 2337 ரூபாயும், அதிகபட்சமாக 3500 ரூபாயும் கூடுதலாக பெறுவார்கள். ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தையும் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வின் மூலம் 23 ஆயிரத்து 793 பேர் பயன்பெறுவார்கள் என்றும், 19 முதல் 24 சதவீதம் வரை கூடுதல் நிதிப்பயன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. >>>  ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021...

அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021 - ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தமிழக அரசு அறிவிப்பு...

படம்
  G.O.No: 24, Dated: 22-02-2021 - Pay Fixation to Ration Shop Employees... >>> அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

ரேஷன் கார்டுகளில் உள்ள PHH / NPHH குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்?

படம்
 ரேஷன் கார்டுகளில் உள்ள PHH / NPHH குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்? தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் 5 வகையாக உள்ளன. அவை குடும்பத்தின் வருவாயைப் பொருத்து மாறும். எல்லா ரேஷன் கார்டுகள் ஒன்று போலவே இருக்கும் நிலையில் இந்தக் குறியீடுகள் மூலமாகத் தான் எந்தக் குறியீட்டிற்கு என்ன அர்த்தம் என்று இங்குப் பார்ப்போம். 💥 PHH - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன. 💥 PHH - AAY: ரேஷன் கார்டில் PHH - AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர். 💥 NPHH - முன்னுரிமை இல்லாதவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 90,08,842 கார்டுகள் உள்ளன. 💥 NPHH-S: ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட

🍁🍁🍁 ஊதிய உயர்வு பேச்சு நடத்த 12 சங்கங்களுக்கு அழைப்பு...

 சென்னை:ரேஷன் கடை ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்து, இம்மாதம், 6ம் தேதி நடக்கும் பேச்சில் பங்கேற்க வருமாறு, தமிழக அரசு அமைத்துள்ள குழு, 12 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டுறவு துறை சார்பில், 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில், விற்பனையாளர், எடையாளராக பணிபுரிவோருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தம், இம்மாதம் முடிகிறது.  இதையடுத்து, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக பரிசீலித்து, அறிக்கை அளிக்க, எட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை, தமிழக அரசு சமீபத்தில் நியமித்தது. கூட்டுறவு கூடுதல் பதிவாளரும், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனருமான சக்தி சரவணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அரசின் நிதித்துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் கூட்டம், சென்னை, பாரிமுனையில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கியில், வரும், 6ம் தேதி, காலை, 10:15 மணிக்கு நடக்கிறது.அதில் பங்கேற்க, குழு சார்பில், 12 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...