அரசு உதவிபெறும் பள்ளி - முதுகலை ஆசிரியர் நிரந்தர பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-03-2025
Government Aided School - Permanent Post Graduate Teacher Post - Last Date to Apply: 17-03-2025
>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு உதவிபெறும் பள்ளி - முதுகலை ஆசிரியர் நிரந்தர பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-03-2025
Government Aided School - Permanent Post Graduate Teacher Post - Last Date to Apply: 17-03-2025
>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம், நிர்வாகிகள் / தலைமை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மாத மாதம் பணம் வசூலிக்கக்கூடாது - மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு
Aided Schools Correspondents / Administrators / Headmasters should not collect monthly amount from government aided school teachers for any reason - District Education Officer Proceedings
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் பணம் வசூல் - நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகிகளுக்கு சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும் செலவினங்களை ஆசிரியர்களிடம் வசூல் செய்யக்கூடாது - சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 3898/ ஆ2/ 2024, நாள் : 14-11-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2023-2024ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாகப் பணிபுரிந்துவரும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 139, நாள்: 19-06-2024 வெளியீடு...
School Education - Permission and guidelines for Deployment / deputation of surplus Secondary Grade / Graduate Teachers in government aided primary and middle schools as per staff fixation schedule for the year 2023-2024 - G.O.Ms.No. 139, Dated: 19-06-2024 Released...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமன விதிமுறைகள் (Appointment Procedures)...
Rules for Approval of Appointment of Teachers in Government Aided Schools - Guidelines - Government Secretary, School Education Department Letter No: 4132/ Elementary Education 2(1)/ 2024, Dated: 10-05-2024...
அரசு நிதயுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமன ஒப்புதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் கடிதம் எண்: 4132/ தொக 2(1)/ 2024, நாள்: 10-05-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் - மதிப்பீட்டுத் தொகை - மாணவர்கள் எண்ணிக்கை வாரியாக...
அனைவருக்கும் வணக்கம் 🙏,
இன்று சென்னை, ஊ.வ.இயக்குநர் அவர்களால் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதன்படி,
ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் முதன்மையாக அந்தஅந்த பள்ளியின் சொந்த நிதியிலிருந்து பழுது நீக்கம் செய்து கொள்ள வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தங்கள் பகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்களை அணுகி புதிய கட்டடங்கள் கோரி பெறலாம்...
அல்லது
நமக்கு நாமே திட்டத்தில் மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பகுதியினை செலுத்தி நிர்வாக அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவுரைகள் இன்று வழங்கப்பட்டது.
மதிப்பீட்டு தொகை...
2023-24 SoRன்படி ( அலகு தொகை) ரூ. இலட்சத்தில்...
100 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.7.43
200 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.8.29
300 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.8.90
400 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.9.40
400 க்கும் மேல் உள்ள மாணவர்கள் - ரூ.9.82
இதனை பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். மேலும், இவ்வலுவலத்திலிருந்து முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.
👆மேற்கண்ட செய்தி மாவட்ட ஆட்சியரின் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அவர்களிடமிருந்து வந்துள்ளது.
அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024...
2023-2024 ஆம் ஆண்டில் அரசு நிதி உதவி பெறும் நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா (Kalai Thiruvizha in Aided Schools) போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் (SPD) செயல்முறைகள் ந.க.எண்: 3856 / ஆ3/ கலை/ ஒபக/ 2023, நாள்: 02-11-2023 (Issue of Guidelines relating to Conduct of Art Festival Competitions in Government Aided Middle/ High and Higher Secondary Schools - Proceedings of State Project Director, Director of School and Elementary Education Rc.No: 3856 / B3/ Arts/ SS/ 2023, Date: 02-11-2023)...
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்கு இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (Salary issue of Government Aided Schools Teachers will be resolved in two days - Minister Anbil Mahesh Poyyamozhi said)...
அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத சில பள்ளிகளில் அனுமதியளிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கோரப்பட்டது. அதே பள்ளி நிர்வாகத்தின் கீழ் உள்ள பிற பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணிபுரிவதை சுட்டிக்காட்டி, பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்க மறுத்தது.
அதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கலாகின. நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.சுரேஷ்குமார் அமர்வு உத்தரவு:
கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை 1:30 அல்லது 1:35 என்ற அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். ஒரு கல்வி நிறுவன ஏஜன்சி அல்லது கூட்டு மேலாண்மை அல்லது கார்ப்பரேட் நிர்வாகத்தின் கீழ் பள்ளி இருந்தாலும், தனித்த ஒரு பள்ளியை மட்டுமே தனி அலகாக (யூனிட்டாக) கொண்டு அலுவலர்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும்.
கல்வி நிறுவனம் முழுவதையும் தனி அலகாகக் கருதக்கூடாது. குறிப்பிட்ட கல்வியாண்டில் ஆசிரியர் பணியிடத்தை நிர்ணயித்த பின், கூடுதலாக இருந்தால் பள்ளிக் கல்வித்துறை அடையாளம் காண வேண்டும். அதை பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். கூடுதல் ஆசிரியர்களை தேவையான பள்ளிகளில் பணி நிரவல் அடிப்படையில் நியமிக்க வேண்டும். அவ்வாறு வேறு பள்ளியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டால், குறித்த காலத்திற்குள் பணியில் சேர வேண்டும்.
1991-92 கல்வியாண்டிற்கு முன் துவங்கப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி கூடுதலாக தமிழ் அல்லது ஆங்கில வகுப்புகள் துவங்கப்பட்டிருந்தால், அதில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 2021-22 கல்வியாண்டு முதல் சம்பளத்திற்கான நிதியை அரசு வழங்க வேண்டும். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறை) சட்டம் 2018ன்படி ஒருங்கிணைந்த விதிமுறைகளை விரைவில் அரசு கொண்டுவர வேண்டும்.
அதுவரை இந்நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவம்பரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதில் தேவையற்ற வழக்குகள் தாக்கலாவதைத் தவிர்க்க நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம், கூடுதலாக உள்ள அலுவலர்களை அடையாளம் காணுதல், தேவையான பள்ளிகளில் பணி நிரவல் மூலம் நியமித்தல், பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதி உட்பட பல்வேறு விஷயங்களை இந்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றனர்.
W.A.(MD).No.76 of 2019 etc., batch
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
Reserved on : 28.09.2020
Pronounced on : 31.03.2021
CORAM:
THE HON'BLE MR.JUSTICE M.SATHYANARAYANAN
AND
THE HON'BLE MR. JUSTICE R.SURESH KUMAR
W.A.(MD).Nos.76 of 2019, 1461 of 2018, 701 of 2019, 1074 of 2019,
1277 of 2019, 1473 of 2018, 1531 of 2018, 1612 of 2018, 225 of 2019,
919 of 2019, 918 of 2019, 96 of 2018, 495 of 2019, 1150 of 2018,
1354 of 2019, 1517 of 2019, 1525 of 2019, 1565 of 2019, 1566 of 2019,
6 of 2020, 15 of 2020, 741 of 2020, 743 of 2020, 745 of 2020, 773 of
2020, 783 of 2020, 784 of 2020, 785 of 2020, 762 of 2020
and
W.P.No.31575 of 2019, W.P.(MD).Nos.1152 of 2018, 3973 of 2016,
4816 of 2017, 11155 of 2017, 5767 of 2018, 7643 of 2018, 9947 of
2018, 10187 of 2018, 23869 of 2018, 24688 of 2018, 25020 of 2018,
7471 of 2019, 11117 of 2019, 16785 of 2019, 23444 of 2019,
24026 of 2019, 25272 of 2019, 1183 of 2020, 1208 of 2020, 1544 of
2020, 5098 of 2020, 5594 of 2020, 6530 of 2020, 6678 of 2020, 8275 of
2020, 8450 of 2020, 9564 of 2020, 9666 of 2020, 9709 of 2020, 9874 of
2020, 9918 of 2020, 10052 of 2020, 10063 of 2020, 10090 of 2020,
10123 of 2020, 10250 of 2020, 10257 of 2020, 10385 of 2020,
10705 of 2020, 11832 of 2020, 11851 of 2020, 21699 of 2018,
1937 of 2020, 9637 of 2020, 10238 of 2020, 11071 of 2020,
11128 of 2020, 11467 of 2020, 11862 of 2020, 11865 of 2020,
11868 of 2020, 11863 of 2020, 11886 of 2020, 12399 of 2020,
12409 of 2020, 12562 of 2020, 12663 of 2020, 12692 of 2020,
12704 of 2020, 12705 of 2020, 12713 of 2020,
12866 of 2020
and connected miscellaneous petitions
W.A.(MD).No.76 of 2019
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் . உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும் . சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.A. ( MD ) Nos . 76 , 225 , 341 of 2019 , 1612 , 1076 , 1093 , 1461 , 1473 and 1531 of 2018 - ல் 09.04.2019 ம் நாளிட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் , அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை சிறுபான்மையற்ற தொடக்க / நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் , பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து கீழ்க்கண்ட நெறிமுறைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அறிவுறுத்தலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது . ( i ) ஒவ்வொரு தனிமேலாண்மையும் பள்ளியும் ஒரு அலகாகவும் . ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைக் கொண்டு கூட்டு மேலாண்மையாக செயல்படும் பள்ளிகள் அலகாகவும் கருதப்படுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்து நவம்பர் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின் நகல்.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின்றி பணிநியமனம் செய்யப்பட்ட உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்து பணப்பலன் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வும் உண்டு என திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்: 2503/ ஆ5/ 2020, 16-02-2021...
புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்...
அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளும்போது, மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் கொண்டு வரலாம் என, பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், கோனேரிராஜபுரத்தில் உள்ள அரசு உதவி்பெறும் வடமட்டம் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு முருகன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட இப்பணியிடத்துக்கான நியமனத்துக்கு அனுமதி கோரி, மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது. பள்ளியின் கோரிக்கையை நிராகரித்து, மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அனுமதி பெற அவசியமில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட பணியிடத்தில் பிற பள்ளிகளில் உபரியாக உள்ள பணியாளர்களை நியமிக்க வேண்டிய தேவையில்லை எனவும் கூறி, மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்துத் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் காலியாக இருந்த பணியிடத்துக்கு, 4 ஆண்டுகள் தாமதமாக 2018- ஆம் ஆண்டு தான் நியமன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனம் மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என எந்த விதிகளும் இல்லை. இதுபோன்ற விதிகளை பள்ளிக்கல்வித் துறை வகுக்கலாம். அனுமதிக்கப்பட்ட பணியிடத்துக்கு நியமனம் மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் எடுத்த நடைமுறைகளைக் குறை கூற முடியாது.’எனத் தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட மறுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.
அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் பயன், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக, நீட் தேர்வில் 720-க்கு 150 மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குகூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதேநேரம், 500-க்கும் அதிகமான மதிப்பெண் எடுத்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்காது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை, நடுத்தர மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். எனவே, கலந்தாய்வு தொடங்குவதற்குள், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் தமிழக அரசு சேர்க்க வேண்டும்’’ என்றனர்.
Tamil Nadu Government Employees Conduct Rules, 1973 - Released in Tamil தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் , 1973 - தமிழில் வெளியீடு T...