அரசு உதவிபெறும் பள்ளி - முதுகலை ஆசிரியர் நிரந்தர பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-03-2025
Government Aided School - Permanent Post Graduate Teacher Post - Last Date to Apply: 17-03-2025
>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு உதவிபெறும் பள்ளி - முதுகலை ஆசிரியர் நிரந்தர பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-03-2025
Government Aided School - Permanent Post Graduate Teacher Post - Last Date to Apply: 17-03-2025
>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி குழு மற்றும் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு ஏற்படும் கால தாமதத்திற்கு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தம் செய்யக் கூடாது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 9533 / எச்2 / 2015, நாள் : 23-04-2015
No suspension of salary of teachers for delay in renewal of government aided school recognition - Director of Elementary Education Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் சம்பளம் பெறுவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி
Government aided schools face problem in getting salaries due to lack of allocation of funds - Daily News
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களின் ஜனவரி மாத சம்பள பட்டியலை பதிவேற்றும்போது 'நிதி ஒதுக்கீடு இல்லை' என வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9000 அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு மாதந்தோறும் சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வட்டார கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் கருவூலத்துறைக்கு அனுப்பப்படும்.
அங்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை இணையதளம் IFHRMS Website மூலம் சம்பள பட்டியல் தயார் செய்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாதந்தோறும் சம்பள பட்டியல் பள்ளி தாளாளர், செயலாளர் கையெழுத்து பெற்று அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கிருந்து மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்களில் சரி பார்க்கப்பட்டு கருவூலத்துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் சம்பள பில்லை பதிவேற்றம் செய்வார்கள்.
சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்யும் போது 'சம்பள மானியம்' என்ற பகுதியில் உள்ளீடு செய்யும் போது 'நிதி ஒதுக்கீடு இல்லை' என்று தகவல் வருகிறது.
இதனால் ஜனவரி மாத சம்பளம் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு
The order gives full powers to school Correspondents to pay teachers in government aided schools
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி தாளாளர்கள்/ செயலாளர்கள்/ நிர்வாகிகள்
*ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
*அதற்காக தாங்கள் உடனடியாக DSC விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்
*முதல் கட்டமாக தாளாளரே DDO ஆக 1-3-2025 முதல் செயல்படுவார்
Commissioner of Treasuries and Accounts Proceedings Letter
Guideline for DSC
அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நியமன ஒப்புதல் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் செயல்முறைகள் கடிதம், நாள்: 10-05-2024
Guidelines for Approval of Appointment of Teaching Posts in Government Aided Primary and Middle Schools - Education Department Government Secretary's Proceedings Letter, Dated: 10-05-2024
அரசுக் கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024-ல் அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியமன ஒப்புதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வருத்து ஆணையிடப்பட்டுள்ளது. இதில், சிறுபான்மைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்களுக்கும் பதவி உயர்வுகளுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை
தலைமைச் செயலகம்
சென்னை 9
Efile கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024
பெறுநர்
அய்யா,
பொருள்: பள்ளிக் கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நியமன ஒப்புதல் அளிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய பிற ஆசிரியர் நியமனங்களுக்கும் - நியமன ஒப்புதல் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் - தொடர்பாக.
2. அரசாணை (நிலை) எண் 185.பள்ளிக் கல்வித்துறை, நாள்.17.09.2019
3. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு, WA(MD)No.76 of 2019etc, batches, தீர்ப்பாணை நாள்.3103.2021.
4. மாண்பமை புதுதில்லி உச்சநீதிமன்ற சிறப்பு அனுமதி மனு SLP (c) No.15702of 2021, தீர்ப்பாணை நாள்.16.02.2024.
5. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகள் WA(MD) Nos. 320 of 2023 and 689of 2022 தீர்ப்பாணை நாள்.20:11.2023.
6. பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க. எண். 34116/ டி1/ இ4/ 2013, நாள்.29-03-2023.
7. தொடக்கக்கல்வி இயக்குநரின் கடித நக.எண். 004126/எச்/ஜி/2024, நாள் 08.05.2024.
பார்வை 7ல் காணும் கடிதத்தில் தொடக்ககல்வி இயக்குநர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சரகம், வெங்கடாசலபுரம், புனித ஜார்ஜ் இனிகோ தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை திருமதி 1, இருதய அமலி என்பவரின் நியமனம் மாவட்டக் கல்வி அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், மேற்படி ஆசிரியர் தணது. நியமனத்திற்கு ஒப்புதல் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையில், கீழ்க்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம், நிர்வாகிகள் / தலைமை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மாத மாதம் பணம் வசூலிக்கக்கூடாது - மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு
Aided Schools Correspondents / Administrators / Headmasters should not collect monthly amount from government aided school teachers for any reason - District Education Officer Proceedings
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் பணம் வசூல் - நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகிகளுக்கு சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும் செலவினங்களை ஆசிரியர்களிடம் வசூல் செய்யக்கூடாது - சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 3898/ ஆ2/ 2024, நாள் : 14-11-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
G.O. Ms. No. 146, Dated: 28-06-2024
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் பணியிட மாறுதல் செய்தல் - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 வெளியீடு...
அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மாவட்டத்திற்கு உள்ளேயும் அதன் பின்னரும் உபரி ஆசிரியர் இருந்தால் மாவட்டத்திற்கு வெளியேயும் பணியிட மாறுதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு...
>>> அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் - 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உபரிப் பணியிடங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2023-2024ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாகப் பணிபுரிந்துவரும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 139, நாள்: 19-06-2024 வெளியீடு...
School Education - Permission and guidelines for Deployment / deputation of surplus Secondary Grade / Graduate Teachers in government aided primary and middle schools as per staff fixation schedule for the year 2023-2024 - G.O.Ms.No. 139, Dated: 19-06-2024 Released...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமன விதிமுறைகள் (Appointment Procedures)...
Rules for Approval of Appointment of Teachers in Government Aided Schools - Guidelines - Government Secretary, School Education Department Letter No: 4132/ Elementary Education 2(1)/ 2024, Dated: 10-05-2024...
அரசு நிதயுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமன ஒப்புதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் கடிதம் எண்: 4132/ தொக 2(1)/ 2024, நாள்: 10-05-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் - 244 ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வி இயக்குநர் செய்தி வெளியீடு எண்: 722, நாள்: 31-05-2024...
>>> செய்தி வெளியீடு எண்: 722, நாள்: 31-05-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் - மதிப்பீட்டுத் தொகை - மாணவர்கள் எண்ணிக்கை வாரியாக...
அனைவருக்கும் வணக்கம் 🙏,
இன்று சென்னை, ஊ.வ.இயக்குநர் அவர்களால் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதன்படி,
ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் முதன்மையாக அந்தஅந்த பள்ளியின் சொந்த நிதியிலிருந்து பழுது நீக்கம் செய்து கொள்ள வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தங்கள் பகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்களை அணுகி புதிய கட்டடங்கள் கோரி பெறலாம்...
அல்லது
நமக்கு நாமே திட்டத்தில் மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பகுதியினை செலுத்தி நிர்வாக அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவுரைகள் இன்று வழங்கப்பட்டது.
மதிப்பீட்டு தொகை...
2023-24 SoRன்படி ( அலகு தொகை) ரூ. இலட்சத்தில்...
100 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.7.43
200 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.8.29
300 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.8.90
400 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.9.40
400 க்கும் மேல் உள்ள மாணவர்கள் - ரூ.9.82
இதனை பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். மேலும், இவ்வலுவலத்திலிருந்து முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.
👆மேற்கண்ட செய்தி மாவட்ட ஆட்சியரின் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அவர்களிடமிருந்து வந்துள்ளது.
அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024...
2023-2024ஆம் கல்வி ஆண்டு - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்வது சார்ந்த வழிகாட்டுதல்கள் - பணி நிரவல் கலந்தாய்வு 20-12-2023 அன்று நடைபெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 09-11-2023 (Academic Year 2023-2024 - Guidelines for Counselling of Surplus Teachers in Government Aided Schools - Surplus Counseling to be held on 20-12-2023 - Director of School Education Proceedings Rc.No: 48834/ D1/ E4/ 2023, Dated: 09-11-2023)...
2023-2024 ஆம் ஆண்டில் அரசு நிதி உதவி பெறும் நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா (Kalai Thiruvizha in Aided Schools) போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் (SPD) செயல்முறைகள் ந.க.எண்: 3856 / ஆ3/ கலை/ ஒபக/ 2023, நாள்: 02-11-2023 (Issue of Guidelines relating to Conduct of Art Festival Competitions in Government Aided Middle/ High and Higher Secondary Schools - Proceedings of State Project Director, Director of School and Elementary Education Rc.No: 3856 / B3/ Arts/ SS/ 2023, Date: 02-11-2023)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மே 26ஆம் தேதிக்குள் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - Govt-aided schools to deplayement surplus teachers by 26th - School Education Department orders
பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கு 1.8.2022 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்து பள்ளிகளுக்கு 15.10.2022-க்குள் ஆணை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்ட அறிக்கையின்படி, உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை வருவாய் மாவட்டத்துக்குள் தகுதியுள்ள காலிப்பணியிடங்களில் பணிநிரவல் செய்தும், கூடுதலாக உள்ள உபரி ஆசிரியர்களைத் தேவையுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாணவர்கள் நலன் கருதி கல்வி ஆண்டின் இடையில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாமல் ஆண்டின் இறுதியில் பணிநிரவல் மேற்கொள்ளப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை 2022-23-ம் கல்வி ஆண்டின் இடையில் பணிநிரவல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் ஜூன் முதல் தேதியிலிருந்து பணிபுரியும் வகையில் உபரி ஆசிரியர்களைத் தகுதியுள்ள இடத்துக்கு மே மாதம் 26-ஆம் தேதிக்குள் பணிநிரவல் செய்து அதன் அறிக்கையை ஆணையரகத்துக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேவை வழக்கு 03.04.2025க்கு ஒத்திவைப்பு Teacher Eligibility Test required f...