கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Agriculture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Agriculture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Tamilnadu Agriculture Budget 2025



வேளாண் நிதிநிலை அறிக்கை 2025 - முக்கிய அறிவிப்புகள்


Tamilnadu Agriculture Budget 2025


 விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிப்பு


உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்பிகிறேன்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.


கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு, 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி.


1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளன.


வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி  உள்ளனர்; அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.


2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.


கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.


30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.


டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு.


தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும்.


1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு.


63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு.


முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். 


நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு.


இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும்.


இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்வு.


முதலமைச்சர் மண்ணுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். 


கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். 



ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


 இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.* 


தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். 


சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு.


சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


இதன் மூலம், 7.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.


ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம். 


தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும் - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


 ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என்று புதிய திட்டம் ரூ. 125 கோடியில் செயல்படுத்தப்படும்.


நகர்ப்புற, கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துகளை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு, 75% மானியத்தில் எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கபடும்.


கரும்புக்கான ஊக்கத் தொகை, ரூ. 215ல் இருந்து ரூ. 349 ஆக உயர்வு. 


கரும்பு டன் ஒன்றுக்கு 3500 வழங்கப்படும். இதற்காக ரூ. 297 கோடி ஒதுக்கீடு.


காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். 


பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.


பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். 


புரதச்சத்து நிறைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.


ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.


நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 


அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு. 


நம்மாழ்வார் விருது திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்.


அங்கு செயல்படுத்தப்படும் வேளாண் தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.


பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.


லட்சம் ஏக்கரில், ரூ. 12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும்.


ரூ. 15 கோடியில், 7  அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். 


உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும் - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


 உற்பத்தியை அதிகரித்திட நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்!


மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த, 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி ஒதுக்கீடு.


நெல் சாகுபடியை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு.


உழவர்களை அவர்களின் கிராமங்களிலேயே சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட ‘உழவரைத் தேடி வேளாண்மை’ திட்டம் தொடங்கப்படும்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு


மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். 


ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு.


இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2ம் இடம். 


இதனை ஊக்குவிக்க, ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும்.


பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 


வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைக்க மானியம் வழங்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு.


காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். 


பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.


பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். 


புரதச்சத்து நிரைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.


2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 


விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கீடு. 


பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு.


5,000 வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள், இ-வாடகை செயலி மூலம் வழங்கப்படும்.


உழவர்கள் குறைந்த வாடகையில் இயந்திரம் பெற, ரூ. 17  கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்.


அனைத்து வேளாண் பணிகளையும் இயந்திரம் ஆக்கும் நோக்கில், ரூ. 3 கோடியில் இது குறித்து உழவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படும். 

 

300 கிராம இளைஞர்களுக்கு மன் அள்ளும் இயந்திரம் மற்றும் வேளாண் இயந்திரங்கள் தொடர்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

 

வேளாண் வணிகத்துறை மூலம் 100 மதிப்பு கூட்டு அலகு அமைக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 


56 ஒழுங்குறை விற்பனை கூடங்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்படும்.


500 ஏக்கரில் வெண்ணெய் பழம் சாகுபடி ஊக்குவிக்கப்படும்.


50 உழவர் சந்தைகள் தேர்வு செய்யப்பட்டு 10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும். 


வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விறப்னை செய்யப்படும்.


உழவர்களுக்கு 10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும்.


மின்சாரம் இணைப்பு இல்லாத உழவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ. 24 கோடி ஒதுக்கீடு. 


மின் மேட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



Apply for Agristack / Grains - Unique Identification Number for Farmers by 31-03-2025



 31-03-2025க்குள் அக்ரிஸ்டாக் / கிரைன்ஸ் - விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற விண்ணப்பிக்கவும்


Apply for Agristack / Grains - Unique Identification Number for Farmers by 31-03-2025




தென்னை வளர்ச்சி வாரியம் - 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) ரூ.7500 வரை தென்னை நடவு மானியம் - விண்ணப்பப்படிவம் (Coconut Development Board - Coconut Plantation Subsidy up to Rs.7500 for the year 2022-23 (for two consecutive years) - Application Form)...



>>> தென்னை வளர்ச்சி வாரியம் - 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) ரூ.7500 வரை தென்னை நடவு மானியம் - விண்ணப்பப்படிவம் (Coconut Development Board - Coconut Plantation Subsidy up to Rs.7500 for the year 2022-23 (for two consecutive years) - Application Form)...


தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) தென்னை நடவு மானியம்  

நெட்டை கன்றுகளுக்கு 1 ஹெக்டேர் பரப்பில் புதியதாக தென்னங்கன்றுகள் நடவு செய்த விவசாயிகள் ரூபாய் 6500/-

நெட்டை× குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரூபாய் 6750/-

குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரு7500/- மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால் தகுதியுள்ள விவசாயிகள் மேற்படி படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.

மேலும் 10 ஏக்கர் பரப்பு (4 ஹெக்டேர்) வரை உள்ளவர்கள் மட்டுமே மேற்படி மானியம் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.



பிரதமர் வேளாண் நிதி உதவி திட்டத்தில் (PM-KISAN - EKYC) 13 ஆம் தவணையை தொடர்ந்து பெற நவம்பர் 30க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் (Link Aadhaar number with bank account by November 30 to avail 13th installment of Prime Minister Agricultural Financial Assistance Scheme)...

 பிரதமர் வேளாண் நிதி உதவி திட்டத்தில் (PM-KISAN - EKYC) 13 ஆம் தவணையை தொடர்ந்து பெற நவம்பர் 30க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் (Link Aadhaar number with bank account by November 30 to avail 13th installment of Prime Minister Agricultural Financial Assistance Scheme)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




10.03.2020க்கு முன்னர் கணக்கு தேர்வு பாகம்-1 ல் தேர்ச்சி பெற்ற 500 இளநிலை உதவியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதித்து அரசு செயலாளர் & வேளாண்மை இயக்குநர் உத்தரவு (Order of the Secretary to the Government & Director of Agriculture Granting Advance Increment to 500 Junior Assistants who passed Part-1 of the Accounts Examination before 10.03.2020)...



>>> 10.03.2020க்கு முன்னர் கணக்கு தேர்வு பாகம்-1 ல் தேர்ச்சி பெற்ற 500 இளநிலை உதவியாளர்களுக்கு முன்  ஊதிய உயர்வு அனுமதித்து அரசு செயலாளர் & வேளாண்மை இயக்குநர் உத்தரவு (Order of the Secretary to the Government & Director of Agriculture Granting Advance Increment to 500 Junior Assistants who passed Part-1 of the Accounts Examination before 10.03.2020)...


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Appointment of Agricultural Graduate Vocational Teachers by Teachers Recruitment Board - Proceedings of the Joint Director of School Education seeking vacancy details in Government Higher Secondary Schools) ந.க.எண்: 48189/வி1/இ1/2021, நாள்:27-09-2021...



 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி  ஆசிரியர்கள் நியமனம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Appointment of Agricultural Graduate Vocational Teachers by Teachers Recruitment Board - Proceedings of the Joint Director of School Education seeking vacancy details in Government Higher Secondary Schools) ந.க.எண்: 48189/வி1/இ1/2021, நாள்:27-09-2021...



>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 48189/வி1/இ1/2021, நாள்:27-09-2021...

B.Sc., Agri படிப்பிற்கான விண்ணப்பம் 08.09.2021 முதல் ஆரம்பம் (Tamil Nadu Agricultural University UG Admission 2021 Notification)...

B.Sc., Agri படிப்பிற்கான விண்ணப்பம் 08.09.2021 முதல் ஆரம்பம் (Tamil Nadu Agricultural University UG Admission 2021 Notification)...


"Tamil Nadu Agricultural University UG admission will commence on 8th September , 2021 


Tamil Nadu Agricultural University offers eleven undergraduate degree programmes through 14 constituent and 28 affiliated colleges.  


The online applications for admissions to undergraduate degree programmes for the current academic year , 2021-22 will open on sch September ( Wednesday ) 2021. As per government direction a new initiative from this year onwards , Agriculture and Horticulture degree programmes are to be offered in Tamil Medium also at Agricultural College and Research Institute and Horticultural College and Research Institute , Coimbatore. 


Dr. M. Kalyanasundaram , Dean ( Agriculture ) and Chairman Admissions Committee informed that , the Government of Tamil Nadu have also announced during the budget section to start one Horticultural College at Jeenur in Krishnagiri District and three Agricultural Colleges at Karur District , Keezhvelur in Nagapattinam District and Chettinad in Sivagangai District as Constituent colleges of TNAU during the academic year 2021-22 itself





3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள்(New Agricultural Colleges will be opened in 3 Districts) : அரசு அறிவிப்பு...



 3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.


இதில் வேளாண் துறை சார்பில் வெளியான அறிவிப்பு:


''வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, கரூர்‌ மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌ (கீழ்வேளூர்), சிவகங்கை (செட்டிநாடு) ஆகிய மூன்று மாவட்டங்களில்‌ ரூ.30 கோடி மதிப்பில்‌ அரசு வேளாண்மைக்‌ கல்லூரிகள்‌ தொடங்கப்படும்‌.


தற்போது, வேளாண்‌ கல்வி மற்றும்‌ வேளாண்‌ ஆராய்ச்சியின்‌ தேவை அதிகரித்துள்ளது. இதனைக்‌ கருத்தில்‌ கொண்டு, வேளாண்‌ நிதிநிலை அறிக்கையில்‌ கிருஷ்ணகிரியில்‌ புதியதாக அரசுத்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.


வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, 2021-2022ஆம்‌ ஆண்டில், கரூர் மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ கீழ்வேளூா்‌, சிவகங்கை மாவட்டத்தில்‌ செட்டிநாடு ஆகிய இடங்களில்‌ மூன்று புதிய அரசு வேளாண்மைக்‌ கல்லூரிகள்‌ தொடங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம்‌ மொத்தம்‌ ரூ.30 கோடி நிதியை ஒதுக்கும்''‌.


இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.


>>> வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை எண்: 5, அறிவிப்புகள்: 2021-2022...


தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை(Agriculture Budget - 2021-2022) தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - முக்கிய அம்சங்கள்...

 


வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.


நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.


உணவு தானிய பயிர்கள், தென்னை, கரும்பு, பருத்தி, சூர்யகாந்தி பயிர்களில் தேசிய அளவில் முதல் 3 இடங்களில் தமிழகம் இடம்பெற வழிவகை.


வேளாண் தொகுப்பு திட்டம், மானாவாரி நில 

மேம்பாடு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட 16 திட்டங்கள் மூலம் இலக்கை அடைய வழிவகை.


சாகுபடி பரப்பு 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்தப்படும்.


தரிசு நிலங்களை மாற்றிட குளங்கள், பண்ணை குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்கள் பெருக்கப்படும் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.


நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.


தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும்.


கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும்.


இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை.


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.


சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம்.


தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும்.


நெல் ஆதார விலை அதிகரிப்பு:


நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை சன்ன ரகத்திற்கு ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி கொள்முதல் செய்யப்படும்.


கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறிய அளவில் 10 உழவர் சந்தைகள் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.


மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் கொண்ட தளைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.


மூலிகை செடிகளை பெருக்கும் திட்டம் ரூ.2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.


வேளாண்மையின் பெருமையை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள சென்னையில் மரபுசார் வேளாண் அருங்காட்சியகம்.


பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு.


தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம்.


76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.


 பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.


பனைவெல்ல பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும்.


காய்கறிகளை குறைவாக சாகுபடி செய்யக்கூடிய 2,000 கிராமங்களில் மண் வளத்தை மேம்படுத்தி 1250 ஹெக்டர் பரப்பில் காய்கறி பயிரிட மானியம். 


அனைத்து மாவட்டங்களிலும் 100 ஹெக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம்.


குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.


கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு; இதன்மூலம் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர்.


35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காவிரி டெல்டாவில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


சென்னை கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும்.


கிருஷ்ணகிரியில் 150 ஏக்கரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கிடு.


சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70%  மானியத்தில் நிறுவப்படும். 


இத்திட்டம் ரூ.114 கோடியே 68 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.


நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சந்தைப்படுத்த எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை அமைக்கப்படும்.


ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் ரூ.10 கோடி செலவில் நவீன குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.


“பண்ருட்டியில் பலா சிறப்பு மையம்"- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.


விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க ரூ.4508 கோடி ஒதுக்கீடு.


வட்டார அளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் ரூ.23 கோடி செலவில் கொள்முதல்.


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்.


20000 ஹெக்டேர் தென்னந்தோப்புகளில் சொட்டுநீர் பாசனமுறை நடப்பாண்டில் ஏற்படுத்த திட்டம்.


இந்த ஆண்டு 17 லட்சம் தரமான தென்னங்கன்று உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் தரப்படும்.


>>> 2021-2022 வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்...



ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்பு எண்களை வெளியிட்டது தமிழக அரசு...

 கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்பு எண்களை தமிழக அரசு வெளியிட்டது. விளைப்பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.




>>> தமிழக அரசின் இன்றைய (20/05/2021) செய்தி வெளியீடு எண்:111 (AGRICULTURE DEPARTMENT) PDF...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு ஒத்திவைப்பு

 உச்சநீதிமன்றத்தில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேவை  வழக்கு 03.04.2025க்கு ஒத்திவைப்பு  Teacher Eligibility Test required f...