கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Time restriction for minors below 16 years of age to watch movies - Telengana High Court orders



16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் திரைப்படம் பார்க்க நேரக் கட்டுப்பாடு - தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு


Time restriction for minors below 16 years of age to watch movies - Telengana High Court orders


*🔹🔸தெலங்கானாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு காலை 11 மணிக்கு முன்பும் இரவு 11 மணிக்கு பின்பும் திரையரங்கிற்குள் அனுமதி இல்லை..!


*▪️ தெலங்கானா: 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ திரையரங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு!


*அதிகாலை, நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி விஜய்சென் ரெட்டி கருத்து.



SLAS Exam 2025 - OMR Sheet Model




மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு SLAS Exam 2025 - OMR Sheet Model



>>> OMR sheet PDF தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Things to note while filling SLAS 2025 - OMR Sheet

 

 

📝 மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு  SLAS EXAM 2025


🆕 3, 5 & 8-ஆம் வகுப்பு மாணவர்கள் SLAS EXAM க்கான  OMR Fill  செய்தல் & விடையளித்தல்.


➡️ SLAS 2025 - OMR Sheet நிரப்பும் பொழுது கவனிக்க வேண்டியவை


▪️மாணவர்களின் பெயரை ஆங்கிலத்தில் Capital Letter -யில் எழுதவும்.


▪️Black /Blue colour பந்துமுனைப் பேனா மட்டுமே பயன்படுத்தவும்.


▪️ Ink pen / gel pen பயன்படுத்தக் கூடாது.


▪️OMR - ஐ மடக்கவோ,கசக்கவோ, கிறுக்கவோ கூடாது.


▪️தவறான விடைகளை Whitener / பிளேடு மூலம் திருத்தம் செய்ய முயற்சி செய்யக்கூடாது.


▪️ஒரே வினாவிற்கு இரண்டு விடைகளை தேர்வு செய்யக் கூடாது


*வரும் 04.02.2025, 05.02.2025 மற்றும் 06.02.2025 ஆகிய மூன்று நாட்கள் முறையே 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அளவிலான அடைவு ஆய்வு (SLAS)  நடைபெற உள்ளது.


*இதற்கான மாதிரித் தேர்வு வினாத்தாள் பயிற்சியினை அனைத்து பள்ளிகளிலும் வழங்கிட அனைவரிடமும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*இதில் 3 ஆம் வகுப்பு மாணவர்கள் SLAS வினாத்தாளில் வினாவிற்கான விடையினை  வட்டமிட்டு கொடுத்தால் அதனை வைத்து தேர்வு நடத்துபவர் OMR SHEET ல் பூர்த்தி செய்து கொள்வார்.


*5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாளில் விடையினை வட்டமிட்டு பின்னர் மாணவர்கள் தான் OMR SHEET ல் பூர்த்தி செய்ய வேண்டும்.


 *எனவே இது சார்ந்த பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கவும் SLAS வினாத்தாளில் அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும் மாணவர்களை பழக்கப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*மேலும் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு குழந்தைகளில் 20 மாணவர்களுக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில் 30 மாணவர்களும் ( அனைத்து பிரிவுகளில் இருந்தும்) SLAS  தேர்விற்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


*மேற்கண்ட எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்க வேண்டும்.


*மேற்கண்ட எண்ணிக்கைக்கு அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் எந்த மாணவர்கள் SLAS தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதனை EMIS Server  மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதனை தேர்வு நடைபெறும் நாள் அன்று பள்ளியின் EMIS தளத்தில் பதிவிறக்கி அந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்பதனை இதன்மூலம் அனைவருக்கும் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.



>>> OMR sheet PDF தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Instructions to Headmasters regarding SLAS 2025 Examination - DIET Principal's letter

 

மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு (SLAS 2025) தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் -  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன (DIET) முதல்வரின் கடிதம் 


Instructions to Headmasters regarding SLAS 2025 Examination - DIET Principal's letter


Instructions to Head Masters regarding State Level Achievement Survey Examination (SLAS 2025) - Letter from Principal of District Institute of Education and Training (DIET)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


31-01-2025 - School Morning Prayer Activities

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-01-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் :குடிமை

குறள் எண்: 960.

நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும்; குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

பொருள்:
புகழ் போன்ற நன்மை வேண்டின், தீயது செய்ய அஞ்ச வேண்டும். குலப்பெருமை வேண்டின், எவர்க்கும் பணிந்து செல்ல வேண்டும்.


பழமொழி :
சொல் வல்லானை வெல்வது அரிது.

It is difficult to overcome the eloquent.


இரண்டொழுக்க பண்புகள் :  

*எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

பணிவு என்ற பண்பு இல்லாதவன், வேறு எந்த நற்குணம் இருந்தும் இல்லாதவனே - நபிகள் நாயகம்


பொது அறிவு :

"1. ஒரு கோழி ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை இடும்?

விடை : 228 முட்டைகள்.

2. அணிலின் ஆயுள் காலம் எத்தனை ஆண்டுகள்?

விடை :7 ஆண்டுகள்"


English words & meanings :

Jungle.     -     காடு

Land.       -      நிலம்


வேளாண்மையும் வாழ்வும் :

நிலையான நீர் மேலாண்மையானது, மக்கள், சொத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கும் அதே வேளையில், நீரின் நன்மையான பயன்பாடுகளை அதிகப்படுத்துகிறது.


நீதிக்கதை

ஆமை

சிறுவன் ஒருவன் கடல் ஆமை ஒன்றை கண்டான்.அதனை மெதுவாக தொட்டவுடன் ஆமை தனது தலையையும், கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.

சிறுவன் என்னென்னவோ செய்து பார்த்தும் ஆமை தனது தலையையும், கால்களையும் வெளியில் நீட்டவே இல்லை.

அதை பார்த்த சிறுவன் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு ஆமையை நெருங்கினான். அப்பொழுது சிறுவனுடைய மாமா, "தம்பி நீ என்னதான் தொந்தரவு செய்தாலும் ஆமை தன் தலையையோ கால்களையோ வெளியே

நீட்டவே நீட்டாது" என்று கூறினார்.

சிறுவன், "ஆமையை பார்க்க எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. அதனை எவ்வாறு வெளியில் கொண்டு வருவது என்று கூறுங்கள்" என்று  கேட்டான்.

உடனே மாமா, " தம்பி ஆமையை மெதுவாக எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்று கதகதப்பான ஒரு இடத்தில் வை.எந்த தொந்தரவும் செய்யாமல் சிறிது நேரம் இருந்தால், ஆமை தன் தலையையும் கால்களையும் வெளியே நீட்டி ஊர்ந்து செல்ல தொடங்கும்"என்று கூறினார்.

சிறுவனும் அதே போல் செய்ய ஆமையும் ஓட்டை விட்டு வெளியே வந்து ஊர்ந்ததை பார்த்து சிறுவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

ஆச்சரியம் அடைந்த சிறுவன் இது எப்படி என்று தனது மாமாவிடம் கேட்டான். அதற்கு அவனுடைய மாமா, "ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் இப்படித்தான்" என்றாராம்.

மேலும்,"உன்னை சுற்றி இருப்பவர்களை மாற்ற விரும்பினால், நீ உன்னுடைய இன்முகத்தை அவர்களிடம் காட்ட வேண்டும். உன் கனிவான இரக்கம் கொண்ட இதயத்தால் மட்டுமே மற்றவர்களை மாற்ற இயலும்" என்றும் கூறினார்.


இன்றைய செய்திகள்

31.01.2025

* தென் அமெரிக்காவில் உள்ள 'சுரினாம்' நாட்டின் ராணுவத்துக்கு ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலையில்  இருந்து ஆடைகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

* வானிலை முன்னறிவிப்பு: தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.

* அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்.

* ரூ.16,300 கோடி மதிப்பிலான முக்கிய கனிமங்கள் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்.

* ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி,.


Today's Headlines

* For the country'Surinam' which is in South America Army Uniform has been manufactured and sent from Avadi Army Uniform manufacturing unit.

* Weather forecast: Thoothukudi, Nellai and Kumari there is a chance of heavy rain

* Target to launch 100 rockets over the next 5 years: Information by ISRO chief V Narayanan

* The central government approves the scheme for main minerals worth of Rs 16,300 crore.

* Hockey India League: Tamil Nadu Dragons qualified for the semifinals.


Covai women ICT_போதிமரம்


Meeting with TETOJAC Coordinators Dr. Ramadoss on 30-01-2025







30-01-2025 அன்று TETOJAC ஒருங்கிணைப்பாளர்கள் திண்டிவனத்தில் உள்ள மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுடன் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்திப்பு


Meeting with TETOJAC Coordinators Dr. Ramadoss on 30-01-2025


பா.ம.க. தலைமை நிலையச் செய்தி

டிட்டோ ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் மருத்துவர் அய்யா அவர்களுடன் சந்திப்பு


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் இயக்கங்களின்  கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக் அமைப்பைச் சேர்ந்தவர்கள்  இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில்   சந்தித்துப் பேசினார்கள்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம்,  ஊதிய முரண்பாடுகளைக் களைதல்,  ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பெரும் தடையாக இருக்கும் அரசாணை 243-ஐ நீக்குதல்,  உயர்கல்வி கற்பதற்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குதல்,  ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் உரிமை,  அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை தேவையற்றதாக அறிவித்து, அதன் காரணமாக  வழங்கப்படாமல் இருக்கும் தற்போதைய ஆசிரியர்களின் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை  வலியுறுத்த வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.


கடந்த காலங்களில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து  குரல் கொடுத்து வருவதற்காகவும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு ஆசிரியர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


அவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை  என்று கூறிய மருத்துவர் அய்யா அவர்கள்,  ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் உறுதியளித்தார்.


இந்த சந்திப்பில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோ ஜாக்)  ஈ. இராஜேந்திரன், கே.பி.ரக்‌ஷித், அ.வின்சென்ட் பால்ராஜ், ச.மயில், இரா.தாஸ், சி.சேகர், சு.குணசேகரன், கோ.காமராஜ்,  சி.ஜெகநாதன், டி.ஆர்.ஜான்வெஸ்லி, சமூக முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர்  ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.


Vellore female doctor gang rape case - 4 out of 5 convicts get 20 years imprisonment each



 வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - 5 குற்றவாளிகளில் நால்வருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை


Vellore female doctor gang rape case - 4 out of 5 convicts get 20 years imprisonment each


கடந்த 2022ம் ஆண்டு வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.


ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவரை கடத்தி, குற்றவாளிகள் பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 


₹40,000 பணம், 2 சவரன் நகையும் பறித்துள்ளனர்.



வேலூரில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஆட்டோவில் ஆண் நண்பருடன் இரவுக் காட்சி திரைப்படம் சென்ற பெண் மருத்துவர் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் இளம் சிறார் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இளம் சிறார் ஒருவரை தவிர்த்து மற்ற 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.


இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டிஎஸ்பி ரவிச்சந்திரன் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை வேலூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். குற்றப்பத்திரிக்கையை தொடர்ந்து வழக்கு விசாரணை எண் 22/2022ஆக பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கில் அதிகபட்ச தண்டனைக்கான முகாந்திரம் இருந்ததால் கூடுதல் மகளிர் நீதிமன்றத்திலிருந்து விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.


இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கொடுக்கப்பட்டுள்ளது.


20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு..

அதன்படி பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த மகிளா நீதிமன்றம், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.


மேலும் இன்று நான்கு பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இளஞ்சிறார் ஒருவருக்கு நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முன்னதாக இன்றைய தினம் குற்றவாளிகள் நீதிமன்றம் வந்தபோது அவர்களை புகைப்படம், வீடியோ எடுக்க முயன்ற ஒளிப்பதிவாளர்களை குற்றவாளிகள் தாக்கினர். அது நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


20 years in jail for marrying 15-year-old girl



15 வயது சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை 


20 years in jail for marrying 15-year-old girl


கடந்த 2022ம் ஆண்டு திருப்பூர் போயம்பாளையம் பகுதியில், தன் உடன் வேலை செய்து வந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்த மோகன் விக்னேஷ் (30) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறார் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு ஆகிய சட்டப்பிரிவுகளில் மோகன் விக்னேஷை கைது செய்த போலீசார், சிறுமியையும் மீட்டனர்


பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு 20 ஆண்டுகள், குழந்தை திருமண குற்றத்திற்கு 2 ஆண்டுகள், சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு


சிறை தண்டனைகளை தனித் தனியாக அல்லாமல் ஏக காலத்தில் குற்றவாளி அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளதால், 20 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும்

 

SLAS 2025 - Training for Field Investigators

 


மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு 2025 - கள ஆய்வாளர்களுக்கான FIs வழிகாட்டுதல் பயிற்சி


SLAS 2025 - Training PPT for Field Investigators


தமிழ்நாட்டில் 414 ஒன்றியங்களில் உள்ள 45,924 பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு நடத்துவது குறித்து முழு வழிகாட்டுதல்


SLAS - 2025 State Level Achievement Survey Training for Field Investigators (FIs) 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


NHIS - Reimbursement of medical claims pertaining to the treatment - To be placed in DLEC on or before 14.02.2025

 


NHIS - 01.07.2023 முதல் 30.06.2024 வரை மருத்துவச் சிகிச்சை மேற்கொண்ட பணியாளர்கள் / ஓய்வூதியர்கள், தங்களது செலவினத் தொகையை மீளப்பெற 14.02.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கருவூலம் மற்றும் கணக்குத் துறை காலக்கெடு நிர்ணயித்து உத்தரவு


New Health Insurance Scheme for Employees and Pensioners Reimbursement of medical claims pertaining to the treatment period 01.07.2023 to 30.06.2024 through District Level Empowered committee - To be placed in DLEC on or before 14.02.2025



>>> கருவூலம் மற்றும் கணக்குகள் துறை கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TREASURIES AND ACCOUNTS DEPARTMENT

From

Thiru.S.Nagarajan,IAS.,

Commissioner of Treasuries and Accounts

(FAC),

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai

No.571, Anna Salai,

Nandanam, Chennai-35


To

All District Collectors


Rc.No. 526 /NHIS-2/2024 Dated: 23-01-2025


Sir,

Sub: New Health Insurance Scheme for Employees and Pensioners Reimbursement of medical claims pertaining to the treatment period 01.07.2023 to 30.06.2024 through District Level Empowered committee - To be placed in DLEC on or before 14.02.2025

Regarding.

Ref: 1.

G.O.Ms.(No).160, Finance(Salaries) Department, Dated:29.06.2021 

G.O.Ms.No.204, Finance (Health Insurance) Department, dated 30.06.2022

United India Insurance Company Limited, Chennai letter No.010600/Health / 2106 / 2024 dated 21.6.2024

Commissioner of Treasuries and Accounts, Chennai 35 letter Rc.No.526/NHIS-2/2024 dated 27.6.2024 addressed to the Government

The Government Letter No.29735/Finance (HI-2)/2023-2 dated 14.7.2024

Commissioner of Treasuries and Accounts, Chennai 35 letter Rc.No.526/NHIS-2/2024 dated 19.7.2024


I invite the kind attention to the references cited In the reference 6th cited, communication has been sent to all the District Collectors/ Treasury officers/ Pension Pay Officers / All Organisations /Director of Medical and Rural Health Services and Director of Medical Education (for providing TNMAR) to place the medical reimbursement claims pertaining to the treatment period from 01.07.2023 to 30.06.2024 in Dictrict Level Empowered Committee on or before 14.02.2025.

As mentioned in the reference 6 th cited, the cut-off date for forwarding the reimbursement claims to United India Insurance Company by the PPO/TOs/Head Office / Head of Organizations was 20.09.2024 and time has lapsed. In this connection, it is requested to place all the reimbursement claim documents for admissions from 01.07.2023 to 30.06.2024 in District Level Empowered Committee on or before 14.02.2025.

Hence, all the District Collectors are requested to give top priority this subject matter and issue necessary instructions to the Joint Director of Health Services / Treasury Officers to place all pending cases before the District Level Empowered Committee on or before 14.02.2025 and send the committee recommendations (for each case) to United India Insurance Company Limited / Commissioner of Treasuries and Accounts or concerned Head of Departments for settling reimbursement of medical claims to the individuals / petitioners without any delay.

This may be treated as most urgent.

S NAGARAJAN IAS

Commissioner of Treasuries and Accounts (FAC)

Copy

submitted to

The Principal Secretary to Government Finance (Health Insurance) Department Secretariat, Chennai 600 009

Copy to:

The Director of Medical and Rural Health Services, Chennai-06... With a

equest to issue suitable instructions to all Dleaith Servicacl to fave

necessary action.

The Director of Medical Education, Chennai-10... With a request to address

the Dean, Medical Colleges to provide TNMAR rate for cases recommended by

DLEC immediately.

The Pay and Accounts Officers- To communicate the cut off date to the DDOs

and inform the fact to CTA.

All RJDs- To take follow up action.

Pension Pay Officer, Chennai / All Treasury Officers... TO communicate the cut

off date to the DDOs/ Pensioners and to take necessary action to place the

pending cases in DLEC before 14.02.2025.

//Forwarded by order//



>>> கருவூலம் மற்றும் கணக்குகள் துறை கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


30-01-2025 - School Morning Prayer Activities

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-01-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்: 959

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

பொருள்:
நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல் குலத்தின் இயல்பை அவர் வாய்ச்சொல் காட்டிவிடும்.


பழமொழி :
தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு.

Defeat the defeat before the defeat defeats you.


இரண்டொழுக்க பண்புகள் :  

*எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது. அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும் - தந்தை பெரியார்


பொது அறிவு :

1. தியாகிகள் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?

மகாத்மா காந்தி மறைந்த தினம் .

2. தியாகிகளின் இளவரசன் என்று போற்றப்படுபவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.


English words & meanings :

Hill      -     மலை

Island         -     தீவு


வேளாண்மையும் வாழ்வும் :

நீர் மேலாண்மை என்பது நீர் வளங்களைத் திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல், வரவு செலவுத் திட்டம், ஒழுங்குபடுத்துதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.


ஜனவரி 30

மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள்

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை"  என்று அழைக்கப்படுகிறார்.  சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.


நீதிக்கதை

தலைமை அமைச்சர்

ஒரு அரசன் தன்  முக்கிய அமைச்சர்கள் நால்வரை அழைத்து அவர்களில் ஒருவரை  தலைமை  அமைச்சராக நியமிக்க இருப்பதாக கூறினார்.அதற்கு அவர் தான் வைக்கும் தேர்வில்  வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.

தேர்வு இதுதான். கணித முறைப்படி அமைக்கப்பட்ட பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.

மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம் பற்றிய புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தனர். ஒருவர்  மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.

மறுநாள் அரசவையில் பூட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டது. பூட்டின் அமைப்பு எல்லோரையும் படபடக்க வைத்தது. புத்தகங்களையும் ஓலை சுவடிகளையும் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்களும் அவற்றை முன்னும் பின்னும் புரட்டி விடை காண முயன்றனர். ஆனால் பூட்டை திறக்கும் வழி அவர்களுக்கு தெரியவில்லை.

இரவில் நன்கு தூங்கிய அமைச்சர் மெதுவாக எழுந்து வந்து பூட்டை கவனமாக ஆராய்ந்தார். கூர்ந்து கவனித்த அவருக்கு பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சாவியும் இல்லாமல் எந்த கணித சூத்திரத்தின் பயனும் இல்லாமல் பூட்டை இலகுவாகத் திறந்த அவருக்கே  தலைமை அமைச்சர் பதவியை மன்னர் வழங்கினார்.

நீதி :  முதலில் பிரச்சனை என்னவென்று கூர்ந்து கவனித்து அறிந்து கொண்டு, பின்பு அதற்கு தீர்வு காண வேண்டும்.


இன்றைய செய்திகள்

30.01.2025

* தமிழகத்தில் புதிய சிற்றுந்து திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிற்றுந்து பேருந்துகளை இயக்கலாம். மேலும், சிற்றுந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

* சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ.. உலகிலேயே முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள் அமைகின்றன.

* சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இஸ்ரோ 100 வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15- என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்.

* ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 5 வது இடத்திற்கு முன்னேற்றம்.


Today's Headlines

* The Tamil Nadu government has permitted a new mini-bus project in Tamil Nadu. Accordingly, minibusses can be operated in expanded areas in Chennai. Also, minibus fares have been raised.

*Chennai Metro made a historical achievement...for the first time in the world, they are building 5 rails in a single pillar.

* The High Court has ordered an interim injunction to the state for excluding the physically challenged people from applying for the cooking assistant job in schools.

* ISRO 100th Rocket GSLV F-15- successfully launched with NVS-02 satellite.

* ISL Callball Tournament: Jamshedpur won the Punjab team.

* ICC Test ranking: Indian player Varun Emperor Progressed to 5th place


Covai women ICT_போதிமரம்


Negotiations on Demand for Equal Pay for Equal Work of SGTs on 04.02.2025 - DEE Proceedings

 

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தை 04.02.2025 அன்று நடைபெறுகிறது - தொடக்கக் கல்வி இயக்குநரின் DEE செயல்முறைகள்


Negotiations on Demand for Equal Pay for Equal Work of Secondary Grade Teachers on 04.02.2025 -  Directorate of Elementary Education - DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SLAS Exam - Tasks of Headmaster and Teachers

 

 


SLAS தேர்வு - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்


SLAS Exam - Tasks of Headmaster and Teachers


அனைவருக்கும் வணக்கம்


SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்:

4.2.2025 - Tuesday -3 rd std

5.2.2025 - Wednesday -5th std

6.2.2025 - Thursday - 8th  std 


தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்


🎯 தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல். 


🎯 ஒவ்வொரு நாளும் தேர்வு மாணவர்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் OMR  தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல். 


🎯 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்தல். 


🎯 தேர்வு எழுதும் மாணவர்கள் Blue colour ball point pen அல்லது Black colour ball point pen பயன்படுத்துவதை உறுதி செய்தல். 


🎯 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வு எழுதும் நாள் அன்று EMIS - School Login ல் வெளியாகும்.அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு வரும் Field Invigilator வழங்கி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்தல். 


🎯 தேர்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும் பொழுது Std,Section மற்றும் medium  வாரியாக Boys & Girls குறித்து தனியாக ஒரு தாளில் குறித்து வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல் வேண்டும். 


🎯 தேர்வு நடைபெறும் நாளன்று காலை Field Invigilator பள்ளிக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தல் இல்லை என்றால் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் தகவல் தெரிவித்தல். 


🎯 தேர்வு எழுதும் நாளன்று தேர்வு எழுதும் மாணவர்களை புகைப்படம் எடுத்தல் குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிர்த்தல் வேண்டும். 


🎯 குறிப்பு  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.


நன்றி.🙏💐


Avoidance & Effective handling of contempt of court petitions - Procedures to be followed - Government Secretary of Letter



நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தவிர்த்தல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை திறம்பட கையாளுதல் - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசுச் செயலாளரின் கடிதம்


Avoidance & effective handling of contempt of court petitions - Procedures to be followed - Government Secretary of Letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Procedures to be followed on RTI Act petitions and appeals



தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்களின் மீது பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியீடு


Promulgation of procedures to be followed by Public Information Officers and Appellate Officers on Right to Information Act petitions and appeals



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புறப்படும் மனுக்கள் மீது பொது தகவல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Prevention of Child Sexual Abuse – ​​An Awareness Manual for Teachers



 குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் - ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கையேடு


Prevention of Child Sexual Harassment – ​​An Awareness Manual for Teachers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


29-01-2025 - School Morning Prayer Activities

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-01-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண் :958

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

பொருள்:
குடிநலனில் விருப்பமில்லாதிருப்பின், அவன் குலப் பிறப்பைப் பற்றி உலகத்தார் ஐயப்படுவார்.


பழமொழி :
சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி. 

Learning the future by looking at things past.


இரண்டொழுக்க பண்புகள் :  

*எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் - சுபாஷ் சந்திரபோஸ்


பொது அறிவு :

1. முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற்றது?

விடை : உருகுவே        

  2. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?

விடை : உதடு


English words & meanings :

Field.    -     வயல்

Forest.   -     காடு


வேளாண்மையும் வாழ்வும் :

  நீர் பற்றாக்குறை தீர நீர் வளங்கள் மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் முறையான நீர் மேலாண்மை, முக்கியமாக அனைத்து பயன்பாடுகளுக்கும் நீர் பாதுகாப்பை உறுதி செய்கிறது.


நீதிக்கதை

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும்.பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்துகொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்றுகட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப்புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குபின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.


இன்றைய செய்திகள்

29.01.2025

* பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

* இஸ்ரோ , ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100வது ராக்கெட்டை செலுத்த தயாராக இருக்கிறது. இது மேப் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் NavIC-ன் 2வது தலைமுறை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும், முக்கியத்துவமான பணியை நாளை மேற்கொள்ள உள்ளது.

* இந்திய அயலகப் பணி அலுவலர்கள் ஏழு பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்து கீழடி முதலான தொல்லியல் அகாழய்வு மையங்கள் எனப் பல்வேறு பெருமைக்குரிய சின்னங்களை பார்வையிட உள்ளனர்.

* ஊட்டி: பாரம்பரிய படுகர் இன மக்களின் வண்ணக் குடை ஊர்வலத்துடன்களைகட்டிய ஈஸ்வரன் கோவில் திருவிழா. 600 படிக்கட்டுகள் நடந்து பக்தர்கள் திருவிழா கொண்டாடினர்

* நம் நாட்டின் மின்சார வாகனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, வின்ஃபாஸ்ட் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட கார் தொழிற்சாலையை தூத்துக்குடியில் நிர்மாணிக்க வருகிறது.

* மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சதம் விளாசி வரலாறு படைத்த கொங்கடி த்ரிஷா.


Today's Headlines

* The Tamil Nadu government has announced that the law providing strict punishment for crimes against women will come into effect from January 25.

* ISRO is ready to launch its 100th rocket from Sriharikota in Andhra Pradesh. It will carry out the important mission of launching NavIC's 2nd generation satellite, which will provide services including maps, tomorrow.

* A seven-member team of Indian Foreign Service officers will visit Tamil Nadu and visit various landmarks including archaeological sites and archaeological sites.

* Ooty: The traditional Padukar people's colorful umbrella procession during the Easwaran temple festival. Devotees celebrated the festival by walking 600 steps

* To meet the demand for electric vehicles in our country, Winfast is building a state-of-the-art car factory in Thoothukudi.

* India beat Scotland by 150 runs in Women's T20 World Cup. Trisha creates history with century


Covai women ICT_போதிமரம்


Petition for Resisting Appeal to Supreme Court against High Court Order Allowing Incentive Pay Hike for M.Phil., Higher Education - Department of School Education Reply

 

M.Phil., ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்க்கக் கோரிய மனு - நிராகரிப்பு செய்து முதலமைச்சர் தனிப்பரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில்


Petition for Resisting Appeal to Supreme Court against High Court Order Allowing Incentive Pay Hike for M.Phil., Higher Education - Department of School Education Reply



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TET compulsory for promotion case - Video of today's hearing in Supreme Court


பதவி உயர்வுக்கு TET தேவை வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் காணொளி


TET compulsory for promotion case - Video of today's hearing in Supreme Court





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



இன்று 28.01.2025 நடைபெற்ற விவாதத்தில் NCTE ஆசிரியர் தகுதி தேர்வு (பதவி உயர்வு) சார்ந்த முக்கிய விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என தகவல்.


அடுத்து பிப்ரவரி 06-02-2025 அன்று விசாரணைக்கு வரும் என்று (TENTATIVE) எதிர்பார்க்கப்படுகிறது


Amendment to increase punishment for crimes against women released in Gazette


பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் சட்ட திருத்தம் அரசிதழில் வெளியீடு Gazette issue No. 40, Date : 25-01-2025


HOME DEPARTMENT (Police-XII)--Date of Come Into Force of the Tamil Nadu Prohibition of Harassment of Woman (Amendment) Act, 2025 (Tamil Nadu Act 5 of 2025) - Notification No. II(2)/HO/69(b)/2025.--G.O. Ms. No. 36, Home (Police-XII), 25th January 2025.


Amendment to increase punishment for crimes against women released in Gazette


பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம், ஆளுநரின் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியானது.


கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியில் இருந்து அமலுக்கு வந்ததாக தெரிவிப்பு.

 




TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

No. 40, CHENNAI, SATURDAY, JANUARY 25, 2025

Thai 12, Kurothi, Thiruvalluvar Aandu-2056

Part Il—Section 2

Notifications or Orders of interest to a Section of the public issued Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

HOME DEPARTMENT

Pollce-XII)

DATE OF COME INTO FORCE OF THE TAMIL NADU PROHIBITION OF HARASSMENT OF WOMAN (AMENDMENT) ACT, 2025 (TAMIL NADU ACT 5 OF 2025)

[G.O. Ms. No. 36. Home (Police-XI. 25th Januarv 2025

No.I({2y/HO/69(b2025.

In exercise of the powers conferred by sub-section (2) of Section 1 of the Tamil Nadu Prohibition of Harassment of Woman (Amendment) Act, 2025 (Tamil Nadu Act 5 of 2025), the Governor of Tamil Nadu hereby appoints the 25th day of January, 2025 as the date on which the said Act shall come into force.

DHEERAJ KUMAR.

Additional Chief Secretary to Government.



10th Std Public Exam - Answer Sheet Stitching - Instructions to HMs - DGE Letter


மார்ச் / ஏப்ரல்-2025 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள்,  / தலைமையாசிரியர்கள் - விடைத்தாளுடன் முகப்புத்தாள் தைத்தல் - அறிவுரை வழங்குதல் சார்ந்து - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம்


MARCH- APRIL 2025 SSLC EXAM - TOP SHEET - ANSWER SHEET instruction for chief superintendent - Head Master


March / April-2025 10th Class Public Examination - Examination Center Principal Superintendents, / Headmasters - Stitching of Covering Sheet with Answer Sheet - Instructions Regarding - Letter from Director of Government Examinations



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Changes made in UG NEET – 2025 Exam

 

 

UG NEET - 2025 தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் - தேசிய தேர்வு முகமை Natoinal Testing Agency NTA Public Notice 


Changes made in UG NEET – 2025 Exam - NTA Public Notice 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




NEET 2025 UPDATE

26.01.2025


2019 முதல் நடைபெறும் NEET தேர்வு

180 கேள்விகள் Phy45 Che 45 Bio 90

180 நிமிடம் (3 மணி நேரம்)


என நடைபெற்று வந்த நிலையில் Covid பெருந்தொற்று காரணமாக 200 கேள்விகளாக மாற்றப்பட்டிருந்தது.


மீண்டும் இந்த ஆண்டு NEET 2025 தேர்வு 180 கேள்விகள் 180 நிமிடங்கள் என்ற பழைய முறைப்படியே நடத்தப்படும் என NTA அறிவித்துள்ளது. அறிவிப்பு நாள் 25.01.2025. தேவைப்படுவோருக்கு தெரிவிக்கவும். நன்றி.



28-01-2025 - School Morning Prayer Activities

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-01-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால் : பொருட்பால்

அதிகாரம் குடிமை

குறள் எண்:957

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண மறுப்போல் உயர்ந்து.

பொருள்: விண்நிலவு களங்கம் போல், உயர்குடி பிறந்தோர் குற்றம் ஊருக்குத் தெரிந்துவிடும்.


பழமொழி :
செய்வன திருந்தச் செய். 

Do well what you have to do.


இரண்டொழுக்க பண்புகள் :  

*எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அது போலத்தான் நாம் உயர்வதும் - அரிஸ்டாட்டில்


பொது அறிவு :

1. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது?

விடை:  நெருஞ்சிப் பழம்.   

2. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள்______,________

விடை: அனிச்சம் , குவளை


English words & meanings :

Dam.        -      அணை

Desert.      -     பாலைவனம்


வேளாண்மையும் வாழ்வும் :

பல நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள வருவாய் பெருக்கம் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் உணவு தேவையை அதிகப் படுத்தி உள்ளது. விளைவு வேளாண்மை உற்பத்தி அதிகரிக்க வேண்டும்: அதற்கு நீர் தேவையும் அதிகரிக்கும்.


ஜனவரி 28

லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்தநாள்

லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்


நீதிக்கதை

கிணற்றைத்தானே விற்றேன்

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது."எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால்கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவறுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.


இன்றைய செய்திகள்

28.01.2025

*தமிழகத்தில் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு.

* 'திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக் கல்வித்துறை சாதனை.

* தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தின்போது உயிரிழப்புகளைத் தவிர்க்க, மூங்கில் கழியால் உருவாக்கப்படும் சாலையோரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

* உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

* அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

* மகளிர் ஹாக்கி இந்தியா லீக்: ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்.

* பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்.


Today's Headlines

* Under the 'Efficient Classroom' program, 22,931 smart boards were set up in 7 months, a great achievement in record time in the school education department.

* Court order to remove party flag poles from public places and roads in Tamil Nadu within 12 weeks.

* Roadside barriers made of bamboo cuttings are being erected on national highways to avoid casualties during accidents.

* The General Civil Code came into force in the state of Uttarakhand from yesterday.

* President Donald Trump ordered to lift the embargo  on the supply of explosives to Israel by Former US President Joe Biden

* Women's Hockey India League: Odisha Warriors are champions.

* Big Bash Final: Hobart Hurricanes beat Sydney Thunder to become champions.


Covai women ICT_போதிமரம்


Adjournment of High School Headmaster promotion case in Supreme Court to 11.02.2025


உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 11.02.2025க்கு ஒத்திவைப்பு


Adjournment of High School Headmaster promotion case in Supreme Court to 11.02.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


JACTTO GEO State Coordinators Meeting Decisions


ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்


JACTTO GEO State Coordinators Meeting Decisions


04/02/2025 மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் - திருச்சி


06/02/2025 மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்


14/02/2025 வட்ட அளவில் மாலை நேர  ஆர்ப்பாட்டம்


25/02/2025 மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம்


- ஜாக்டோ ஜியோ


State bearers Interview about the decisions taken at the JACTTO GEO High Level Committee meeting


ஜாக்டோ ஜியோ உயர் மட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொறுப்பாளர்கள் பேட்டி


State bearers Interview about the decisions taken at the JACTTO GEO High Level Committee meeting 





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்....



47,013 temporary posts converted into permanent posts by School Education Department G.O. Ms. No: 19, Dated: 27-01-2025

 

47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண் : 19, நாள்: 27-01-2025 வெளியீடு


SSA, RMSA உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைப்பு. இனி  Pay continuation order தேவைப்படாது.


47,013 temporary posts converted into permanent posts issued by School Education Department Ordinance G.O. (Ms) No: 19, Dated: 27-01-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக் கல்வி இயக்குநரக ந.க.எண்ணுடன், தற்காலிகப் பணியிடங்களை  நிரந்தரப் பணியிடங்களாக மாற்றியமைக்கப்பட்ட அரசாணை (நிலை) எண் : 19, நாள்: 27-01-2025 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளீயீடு...


பள்ளிக் கல்வித் துறையில் 28,030 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உள்பட 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.


அதேசமயம், 5,418 பணியிடங்களில் பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும்போது அவை ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளாா்.


அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலா், மெட்ரிக் பள்ளி ஆய்வாளா், சட்ட அலுவலா் உள்பட 55 வகையான பணியிடங்கள் உள்ளன.



 இந்தப் பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக பணியாற்றும் பணியாளா்களை நிரந்தரம் செய்வது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 



இந்தக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தற்காலிகமாக இருக்கக் கூடிய 52,578 பணியிடங்களில் 47,013 இடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டது.


பணி நிரந்தரம்: மேலும், ஆசிரியா் மற்றும் பல்வேறு ஆசிரியா் அல்லாத 5,418 தற்காலிக பணியிடங்களில் பணியாற்றுவோா் ஓய்வு பெற்றவுடன், அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 



இந்த முடிவுகளை ஏற்று உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வி இயக்குநா் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத 47,013 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்.


இதேபோன்று 5,418 பணியிடங்களில் ஊழியா்கள் ஓய்வு பெற்ற பிறகு ரத்தாகும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பட்டதாரி ஆசிரியா்கள் 28 ஆயிரம் போ்: நிரந்தரம் செய்யப்படும் பணியிடங்களில் முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் 5,741, பட்டதாரி ஆசிரியா்கள் 28,030, கணினி பயிற்றுநா் 1,880 போ் உள்ளனா்.


ஆசிரியா் அல்லாத பணியிடங்களைப் பொருத்தவரையில், இளநிலை உதவியாளா்கள் 3,073 பேரும், ஆய்வக உதவியாளா்கள் 5,711 பேரும், தொழிற்கல்வி ஆசிரியா்கள் 3,035 பேரும் உள்ளனா். குறைந்தபட்சமாக உயா் கல்வி இயக்குநா், திட்ட ஒருங்கிணைப்பாளா், நிா்வாக அலுவலா், உதவி கணக்கு அலுவலா், உதவி இயக்குநா் (மின்ஆளுமை) போன்ற பணியிடங்களில் தலா ஒரு தற்காலிக பணியிடம் மட்டுமே உள்ளன. அரசின் உத்தரவால் அவை நிரந்தரம் செய்யப்பட்டுள்ளன.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-02-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள்...