கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்





Portable Tyre Inflator for Car, Bike, Cycle with 150 PSI Pressure, Digital Display, Auto Shut-Off, LED Light, 2.7m Cord, Air Pump Compressor for Cigarette Lighter Socket (Black)


https://link.amazon/B01IUAUCt


School Education Department - Policy Note 2026-2027



பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2026-2027


School Education Department - Policy Note 2026-2027



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





APC Back-UPS BX600C-IN 600VA / 360W UPS | Backup for WiFi Router, Desktop PC & CCTV | 3 Power Backup Outlets | 2 Year Warranty


https://link.amazon/B0b98Ph82


பொதுப்பிரிவினருக்கு (OC) சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்க இயலாது - தமிழ்நாடு அரசு

 


பொதுப்பிரிவினருக்கு (OC) சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்க இயலாது - தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.


இந்த வழக்கில் முக்கியமான சரத்துக்கள் சுருக்கமாக:



1. பொதுப்பிரிவினருக்கு (OC) TET தகுதி மதிப்பெண் 60% (90) → 50% (75) ஆகக் குறைக்க வேண்டும் என்பதே மனுதாரர்களின் முக்கிய கோரிக்கை. மேலும் ஏற்கனவே நடைபெற்ற TNTET தேர்வுகளுக்கும் இந்த மாற்றத்தை பின்னோக்கிப் பொருந்தச் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 


2. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு: General Category-க்கான 60% தகுதி மதிப்பெண்ணை 50% ஆகக் குறைக்க உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கவில்லை. 


3. TET கட்டாயத் தகுதி என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக பதவி உயர்வை விரும்பும் ஆசிரியர் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்துகிறது. 


4. In-service teachers-க்கு TET பெறுவதற்கான கால அவகாசம் 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதி பெற வேண்டிய கடைசி தேதி 31.08.2028 என குறிப்பிடப்பட்டுள்ளது. 


5. 2028 வரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பது TET மதிப்பெண்ணில் தளர்வு அல்ல. TET-ன் கட்டாயத் தன்மை தொடர்கிறது என்று அரசு கூறுகிறது. 


ஆக மொத்தத்தில் பொதுப்பிரிவினர் (OC) தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு மதிப்பெண் தளர்வு கிடையாது என்பதை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.





OnePlus Nord CE6 Lite | 8GB+256GB | Hyper Black | Segment's Fastest Dimensity 7400 Apex Processor | 7000mAh Battery | Segment's Highest 144Hz Refresh Rate | 50MP Main Camera, 4K Video Recording


https://link.amazon/B00UoLETV


ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் மராத்தியில் பேசுவது கட்டாயம் - மகாராஷ்டிரா முதலமைச்சர்



ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் மராத்தியில் பேச வேண்டும் - தேவேந்திர பட்னாவிஸ்


        மராத்தி கட்டாயம்


* “மகாராஷ்டிராவில் ஆட்டோ, கார் ஓட்டுநர்களுக்கு கட்டாயம் மராத்தி பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர்கள் மராத்தி கற்றுக்கொள்வதற்கான காலக்கெடு 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் நீட்டிப்போம்.”


- தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிரா முதலமைச்சர்


 Devendra Fadnavis | Marathi




OnePlus Nord CE6 Lite | 8GB+256GB | Hyper Black | Segment's Fastest Dimensity 7400 Apex Processor | 7000mAh Battery | Segment's Highest 144Hz Refresh Rate | 50MP Main Camera, 4K Video Recording


https://link.amazon/B00UoLETV

NHISல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது? வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

 


NHISல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது? வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

(பதிவு எண்.133/2021)

மாநில மையம்

எண்.3(G-1), கிருஷ்ணப்பத் தெரு,

சேப்பாக்கம், சென்னை – 600 005.


பெறுநர்

ஆசிரியர் அவர்கள்,


…………………………….. நாளிதழ்/ஊடகம்.


ஐயா,

வணக்கம். எங்களது அமைப்பின் சார்பாக கீழ்காணும் பத்திரிகை செய்தியினை தங்களது நாளிதழ்/ஊடகத்தில் பிரசுரம்/ஒளிபரப்பு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

          பத்திரிகை செய்தி

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


✍️🔥தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் மற்றும் பொதுச்செயலாளர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் கூட்ட வெளியிட்ட பத்திரிகை செய்தி.


*************************************

அரசு ஊழியர்களின் காப்பீட்டுக்காக ரூ.1,489.75 கோடி பிடித்தம்! மருத்துவச் செலவாக வழங்கப்பட்ட தொகை எவ்வளவு? — RTI தகவலில் அதிர்ச்சி. Corpus Fund-ஆக ரூ.28.16 கோடி பிடித்தம். வழங்கப்பட்டது ரூ.3.56 கோடி மட்டுமே! மீதத் தொகை எங்கே? தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி

*************************************


✍️🔥தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக சுமார் ரூ.1,489.75 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகையில் அரசு ஊழியர்களின் மருத்துவச் செலவுகளுக்காக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்ற முக்கியமான விவரத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


✍️🔥தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திண்டுக்கல்லைச் சேர்ந்த Frederic Engels பெற்ற தகவலில், 01.07.2021 முதல் 30.06.2026 வரையிலான ஐந்து ஆண்டுகளில் NHIS திட்டத்திற்காக அரசு ஊழியர்களிடமிருந்து ரூ.14,897,450,208 (சுமார் ரூ.1,489.75 கோடி) பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையில் எத்தனை இனங்களில், எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை வழங்காமல், அவற்றை United India Insurance Company-யிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


✍️🔥ரூ.28.16 கோடி Corpus Fund-ல் ரூ.3.56 கோடி மட்டுமே !

இதனைவிட அதிர்ச்சியளிக்கும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து Corpus Fund-ஆக ரூ.28.16 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து NHIS திட்டத்தில் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.3.56 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் RTI பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் ரூ.24.60 கோடி Corpus Fund தொகையின் நிலை மற்றும் பயன்பாடு குறித்து முழுமையான கணக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டியுள்ளது.


✍️🔥அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களது மருத்துவப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் மருத்துவச் செலவுகளுக்காக எவ்வளவு வழங்கப்பட்டது என்பதற்கான முழுமையான விவரமே RTI பதிலில் வழங்கப்படாதது, NHIS திட்டத்தின் நிதி வெளிப்படைத்தன்மை குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.


✍️🔥இது பற்றி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். ரமேஷ் மற்றும் பொதுச்செயலாளர் இரா. பாலசுப்ரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்…. 


‘Cashless Treatment’ என்ற பெயரில் ஊழியர்களே பணம் செலுத்தும் அவலம்!


✍️🔥NHIS திட்டம் “Cashless Treatment” என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் Package Rate System மூலம் மருத்துவச் செலவுகள் கட்டுப்படுத்தப்படுவதால், மருத்துவமனையின் உண்மையான செலவுக்கும் காப்பீட்டு நிறுவனம் அனுமதிக்கும் Package தொகைக்கும் இடையிலான வித்தியாசத்தை அரசு ஊழியர்களே தங்களது கையிலிருந்து செலுத்த வேண்டிய நிலை தொடர்கிறது.


✍️🔥உதாரணமாக, கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு உண்மையான செலவு ரூ.30,000-க்கும் அதிகமாக இருக்கும் நிலையில் ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், இதய Stent சிகிச்சைக்கு ரூ.1,17,000 வரை செலவாகும் நிலையில் ரூ.85,000 மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் ஏற்கனவே அரசிடம் அளித்துள்ள முறையீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


✍️🔥இதனால், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் அரசு ஊழியர்கள், காப்பீட்டுத் திட்டத்திற்காக ஊதியத்திலிருந்து பணம் செலுத்திய பிறகும், சிகிச்சைக்காக மீண்டும் தங்களது கையிலிருந்து பணம் செலுத்த வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது.


* புதிய NHIS-2026 – முந்தைய திட்டத்தைவிட மோசமானதா?


✍️🔥தற்போது வெளியிடப்பட்டுள்ள G.O.Ms.No.122, Finance (Health Insurance) Department, dated 24.06.2026 மூலம் புதிய NHIS-2026 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த Package Rate System-ஐ நீக்குவதற்குப் பதிலாக, அது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. புதிய திட்டத்தில், மாதாந்திர பிடித்தம் ரூ.300-லிருந்து ரூ.390 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Corpus Fund பிடித்தம் ரூ.5-லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


✍️🔥 Network அல்லாத மருத்துவமனைகளில் மருத்துவ உதவி 75%-லிருந்து 60% ஆக குறைக்கப்பட்டுள்ளது. Package System மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் A1, A2, B, C என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் கட்டாயச் சேர்க்கை தொடர்கிறது.


✍️🔥இதனால், முந்தைய ஆட்சியில் “Cashless Treatment” என்ற பெயரில் மறைமுகமாக Package System நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய அரசு நேரடியாகவே Package System-ஐ மேலும் விரிவுபடுத்தியுள்ளது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டுகிறது.


✍️🔥முழுமையான கணக்கை அரசு வெளியிட வேண்டும்:

கடந்த ஐந்து ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது, எத்தனை ஊழியர்கள் பயனடைந்தனர், எந்தெந்த சிகிச்சைகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது, காப்பீட்டு நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது, நிர்வாகச் செலவாக எவ்வளவு செலவிடப்பட்டது என்பன உள்ளிட்ட முழுமையான கணக்கை தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதேபோல், ஊழியர்களிடமிருந்து Corpus Fund-ஆக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.28.16 கோடியில் ரூ.3.56 கோடி மட்டுமே மருத்துவச் செலவுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சுமார் ரூ.24.60 கோடியின் நிலை என்ன என்பதையும் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.


✍️🔥புதிய காப்பீட்டுத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மையான 100 சதவீத Cashless Treatment வழங்கப்பட வேண்டும். Package Rate System கைவிடப்பட்டு, மருத்துவமனையின் உண்மையான மருத்துவச் செலவை அடிப்படையாகக் கொண்டு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் புறக்கணித்து கட்டாயமாக திணிக்கப்படும் முறையை கைவிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். 


✍️🔥இந்திய வங்கி ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, உண்மையான மருத்துவச் செலவை ஈடுசெய்யும் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.


✍️🔥G.O.Ms.No.122-ஐ உடனடியாக மறுஆய்வு செய்து, Package Rate System-ஐ கைவிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முழுமையான கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சையை உறுதி செய்யும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 


✍️🔥நாளது தேதியில் எத்தனையோ தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் பணமில்லா சிகிச்சையைத் தருவதாக பல்வேறு தளங்களில் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். எனவே மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஊழியர்களின் தன்விருப்பம் கோரப்பட வேண்டும். விருப்பமில்லாத ஊழியர்களை இத்திட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 20.08.2026 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கடிதம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைப் பாதுகாக்க ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை உருவாகும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.


நன்மதிப்புகளுடன்


(எஸ்.ரமேஷ்)

மாநிலத் தலைவர்


(இரா.பாலசுப்ரமணியன்)

பொதுச் செயலாளர்




EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty


https://link.amazon/B03b5bJg4

TNSPARK மீளாய்வுக் கூட்டத் தகவல்கள்

 


அனைவரும் வணக்கம் 


சென்ற  வாரம் வெள்ளிக்கிழமை அன்று மதிப்புமிகு இணை இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற TNSPARK மீளாய்வுக்  கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு 


1. அனைத்து பள்ளிகளும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 11 பாடப்பகுதிகளை நிறைவு செய்து EMIS ல் entry செய்திருக்க வேண்டும்


2. செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மாணவர்களுக்கான TNSPARK ASSESSMENT நடைபெற இருப்பதால் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்குமாறு கூறப்பட்டது. 


3. மேலும் TNSPARK வகுப்பு நடத்தும் ஆசிரியர் ஒவ்வொருவரும் மாணவர்களின் தனித் திறனை வெளிக்கொணரும் வகையில் அவர்களது தனி படைப்புகளை சிறந்த வீடியோ தொகுப்பாக உருவாக்கி குழுவில் பதிவிட வேண்டும்.


மேற்கண்ட தகவலை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


முதன்மைக் கல்வி அலுவலர்





EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty


https://link.amazon/B03b5bJg4


SMC Reconstitution Awareness Meeting Invitation

 


SMC Reconstitution Invitation 


பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு : பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் அழைப்பிதழ் 


School Management Committee Reconstitution : Invitation to an Awareness Meeting for Parents



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty


https://link.amazon/B03b5bJg4



Reconstitution of SMCs (2026–2028): பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள்

 


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2026-2028 : பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள்


Reconstitution of School Management Committees (2026–2028): Guidelines for Conducting Awareness Meetings for Parents



அனைவருக்கும் வணக்கம் 


அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


 பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2026-2028


👉பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் 29.8.2026 அன்று நடைபெறுதல்.


👉 விழிப்புணர்வு கூட்டம் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகள் வெளிப்படைத்தன்மையுடனும் பெற்றோர்களின் முழுமையான பங்கேற்புடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் வகையில் பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டமானது பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து அரசு பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும். 


👉 👉பெற்றோர்களுக்கான அழைப்பு /தகவல் தெரிவித்தல்.


1. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மூலம் அவரிடம் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும் 


2. Whatsapp செய்திகள் மூலம் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெறுவதை குறித்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் 


3. தற்போதைய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலமாகவும் அனைத்து பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் 


4. விழிப்புணர்வு கூட்டம் அழைப்பிதழை பெற்றோர்கள் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் அணுக கூடிய முக்கிய இடங்களான ரேஷன் கடை ஊராட்சி நகராட்சி பேரூராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் சமுதாயக்கூடம் மற்றும் மின் கட்டணம் செலுத்தும் மின்வாரிய அலுவலகம் முன்பாக பார்வையில் படும்படியாக வைக்கலாம்.


👉கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் பள்ளி தலைமையாசிரியர் மேற்கொள்ள வேண்டும்


👉 பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் வழிமுறைகள் அரசாணையின்படி முறையாக பின்பற்றப்பட வேண்டும்.




Xiaomi Power Bank 4i 20000mAh 33W Super Fast Charging PD 


https://link.amazon/B0ik5kVpv


பள்ளிக் கல்வித் துறை - சட்டசபையில் அமைச்சர் வெளியிட்ட 31 புதிய அறிவிப்புகள் என்னென்ன?



 பள்ளிக் கல்வித் துறை - சட்டசபையில் அமைச்சர் வெளியிட்ட 31 புதிய அறிவிப்புகள் 2026-2027 குறித்த  தகவல்கள் 


School Education Department – ​​Details regarding the 31 new announcements made by the Minister in the Legislative Assembly for the period 2026–2027



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவர்களுக்கு விளையாட்டு உடை, மாணவர்களுக்கு பல், கண், காது பரிசோதனை, ஸ்மார்ட் நூலக அட்டை உள்ளிட்ட 31 முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்:


பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கருத்தியல் புரிதல், பகுப்பாய்வு சிந்தனை மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.18.01 கோடியில் மதிச்சுடர் திட்டம் செயல்படுத்தப்படும்.


தமிழக மாணவர்களின் புதுமை மற்றும் தொழில் முனைவுத்திறன் மேம்பாட்டுத் திட்டம். 3,205 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.4.82 கோடியில் செயல்படுத்தப்படும்.


1 முதல் 8-ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளி மாணவர்கள் திறன்களை மேம்படுத்த 6,980 நடுநிலைப் பள்ளிகளில் சதுரங்கம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் ரூ.20.17 லட்சத்தில் மேம்படுத்தப்படும். 


அரசு, தனியார் மற்றும் பெருநிறுவன மருத்துவமனைகளின் பங்களிப்புடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல், கண் மற்றும் காது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.


1 முதல் 12ம் வகுப்பு வரை 2027-28-ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அறிவு பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.


மாணவர்களை நாளைய தொழில்நுட்ப முன்னோடிகளாக மாற்ற செயற்கை நுண்ணறிவு எந்திரவியல், புதுமை மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து டிஎன் ஸ்பார்க் திட்டம் செயல்படுத்தப்படும்.


கல்வியின் வலுவான அடித்தளத்தை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அளிக்க, 414 பள்ளிகளில் ஆயத்தப் பயிற்சி மையங்களில் உள்ள 9731 குழந்தைகளுக்கு நவீன கற்றல், பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும். 


அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் மகிழ்வான கற்றல் சூழலை உருவாக்க 37,417 பள்ளிகளுக்கு ரூ.187.29 கோடி ஒருங்கிணைந்த பள்ளி மானியம் வழங்கப்படும்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உலகத்தர கற்பித்தலுக்குத் தேவையான அறிவு, திறன் மற்றும் தலைமைத்துவத்தை வழங்க ரூ.11.30 கோடியில் டிஎன் - லீட்ஸ் திட்டம் மூலம் பயிற்சி அளிக்கப்படும். 


பொது நூலகங்கள் முழுமையான மின்னுறு அறிவு மையங்களாக மாற்றப்படுவதுடன், ஸ்மார்ட் நூலக அட்டை வழங்கப்படும்.


சென்னை புத்தக கண்காட்சிக்கான அரசு மானியம் ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தி ஆண்டுதோறும் பபாசி அமைப்புக்கு வழங்கப்படும்.


2 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் அறிவுத்திறன்களை உறுதிப்படுத்தும் நோக்கில் 10.5 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் திறன் பிளஸ் திட்டம் ரூபாய் 12.05 கோடி நிதி ஒதுக்கீட்டில் விரிவாக்கம் செய்யப்படும்.


ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கற்றலை வலுப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தமிழ்நாடு தன்னிலை கற்றல் திட்டம் முதற்கட்டமாக 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 70 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். Tourist Destinations


மேலும் கண்டறிக

கல்வித்துறை செய்திகள்

Standardized & Admissions Tests

கற்பித்தல் கருவிகள்

பள்ளி சீருடைகள்

வெற்றிக்கான வாய்ப்புகள் பள்ளிக்கு வரட்டும் என்ற நோக்கில், 172 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேசிய அளவிலான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் வகையில் வெற்றி பாதை திட்டம் ரூபாய் 22.36 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும்.


1,799 அரசு உயர் மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் திறன்மிகு அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூபாய் 21.84 கோடி நிதி ஒதுக்கீட்டில் உபகரணங்கள் வழங்கப்படும்.


படைப்பாற்றல், தலைமைத்துவம், தனித் திறமைகள் மற்றும் கற்றல் ஆர்வம் மலர புத்தகமில்லா கல்வியாக ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டம் 6,279 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூபாய் 1.89 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.


6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான புதிய திறன் சார்ந்த தமிழ் இலக்கியப் போட்டிகள் 13,259 பள்ளிகளில் அறிமுக படுத்தப்படும்.


50 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை விளையாட்டு திறனை மேம்படுத்தும் சிறப்பு பள்ளிகளாக உருவாக்க ரூபாய் 2.34 கோடியில் ஸ்போர்ட்ஸ் பிளஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.


உயர் கல்வி வாய்ப்புகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வாய்ப்பு வழிகாட்டுதல்கள் குறித்த முழுமையான தகவல்களை ஒருங்கிணைத்து அளிக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உயர்கல்வி வழிகாட்டி செயலி ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்


மாணவர்களின் மன நலனை பேணுவதை உறுதி செய்யும் பொருட்டு மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் உணர்வு நல ஆலோசனை சேவைகள் வழங்கிட துணை எனும் திட்டம் ரூபாய் 27.43 கோடி நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்படும்.


சர்வதேச பல்கலைக்கழகங்களின் வாயிலாக ஆசிரியர்களுக்கான பன்னாட்டு தொழில்முறை மேம்பாடு சார்ந்த படிப்புகளை பெறுவதற்கு ஆண்டுக்கு ரூபாய் 1.8 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆசிரியர்களுக்கான பன்னாட்டு சிறப்பு திறன் மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.


ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போருக்கு ஒரு முறை பதிவு, மின்னுரு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் டிஜிட்டல் முறைலான தெரிவு நடைமுறைகளை ஒருங்கிணைத்து முழுமையான மின்னுருவாக்கம் ரூபாய் 4.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.


வாசகர்களின் தேவைகளை நிகழ் நேர தரவுகளின் அடிப்படையில் அறிந்து நிறைவான, வெளிப்படையான நூலக சேவைகளை வழங்க நூலக செயலி ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். 90 பொது நூலகங்களில் ரூபாய் 1.80 கோடி மதிப்பீட்டில் நவீன கழிப்பறை வசதிகள் அமைக்கப்படும். 


தமிழர்களின் தொன்மை சிறப்பை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் வகையில் ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்ட தமிழின் 25 பழம்பெரும் நூல்கள் சிறப்பு மறுபதிப்பாக ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 23.40 லட்சம் மாணவர்களுக்கு புதிய விளையாட்டு உடை ரூபாய் 81.89 கோடி செலவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.


ஓடி விளையாடு முன்னெடுப்பின் கீழ் விளையாட்டு, கலை மற்றும் கல்வி இணை செயல்பாடுகளுக்காக தினமும் ஒரு பிரிவேளை ஒதுக்கீடு செய்யப்படும்.


பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து முக்கிய சேவைகளையும் ஒருங்கிணைத்து வெளிப்படையான நிர்வாகத்தை வலுப்படுத்த ‘இ-வாசல்’ ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.




Nylon 55 litres Waterproof Strolley Duffle Bag- 2 Wheels - Luggage Bag


https://link.amazon/B0aFpFHUq


2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு சொந்த விண்வெளி நிலையம்

 


2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்துவிடும் என இஸ்ரோ ISRO தலைவர் நாராயணன் அறிவிப்பு


 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையமான 'பாரதிய அந்தரிக்ஷா நிலையம்' (Bharatiya Antariksha Station) அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் மற்றும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாரதிய அந்தரிக்ஷா நிலையம் சிறப்பம்சங்கள்


இலக்கு ஆண்டு: 2035ஆம் ஆண்டிற்குள் முழு விண்வெளி நிலையத்தையும் நிறுவுவது.


முதற்கட்ட பணிகள்: விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதிக்கு (First Module) ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


இதர திட்டங்கள்: ககன்யான் மனித விண்வெளிப் பயணம் மற்றும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவது (2040க்குள்) போன்ற முக்கிய திட்டங்களுடன் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது.




Car Mobile Phone Holder Stand for Dashboard & Windshield, 360° Rotational, Strong Suction Cup, Compatible with 4 to 6 inch Devices(Black)


https://link.amazon/B02IVyD5R

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்