கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் வாகனம் வாங்குதல் / அகற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி தமிழ்நாடு அரசு மனித வள மற்றும் மேலாண்மை துறை அரசாணை (நிலை) எண் : 11, நாள் : 11-02-2026 வெளியீடு


G.O.(MS.) No.11, Dated:11.02.2026


IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் வாகனம் வாங்குதல் / அகற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி தமிழ்நாடு அரசு மனித வள மற்றும் மேலாண்மை துறை அரசாணை (நிலை) எண் : 11, நாள் : 11-02-2026 வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




ABSTRACT

Tamil Nadu Government Servants’ Conduct Rules, 1973 - SimpleGov - Simplification of procedures for acquiring/disposing of vehicle by Government Servants - Intimation through IFHRMS - Instructions - / issued.

HUMAN RESOURCES MANAGEMENT (A) DEPARTMENT G.O.(MS.) No.11 Dated:11.02.2026


Read:

1. G.O.(Ms.) No.105, Human Resources Management (AR-1) Department, dated 28.11.2023.

2. Minutes of the SimpleGov- Empowered Committee meeting held on 09.02.2026.

ORDER :

In the Government order first read above, the SimpleGov initiative commenced with the formation of the Screening Committee and the Empowered Committee and the detailed process to be followed therein.

1. Sub-rule (2) of rule 7 of the Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 prescribes that a Government servant who enters into any transaction concerning any movable property exceeding his total monthly emoluments in value, whether by way of purchase or sale, shall report to the prescribed authority within one month from thR datR Of every such transaction.

2. Further, according to clause (a) of sub-rule (4) of rule 6 of the Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 no Government servant shall, save in the ordinary course of business with a bank or a firm or a Public Limited Company of standing, duly authorised to conduct banking business either himSe’If or through any member of his family or any other person acting on his behalf, lend or borrow money as principal or agent, to or from any person specified therein or lend money to any person at interest or in a manner whereby return in money or in kind is charged or paid and as per the proviso to said clause,the Government servant shall enter into such transaction with the previous sanction of the Government.

3. The SimpleGov proposal for simplification of procedures for acquiring/ disposing of vehicle by Government servants was compiled by the Advisor, SimpleGov, after due consultation vrith the Department concerned and placed before the Screening Committee for its recommendation on 02.02.2026. The Screening Committee after due consideration has recommended to the Empowered Committee for its decision.

4. In the Empowered Committee meeting held on 09.02.2026, among others, the Committee perused and examined the recommendation of the Screening Committee on the possibilities for simplification of the process of acquiring/disposing of vehicle by Government servants and arrived at the following decisions:-

(a) Default digitisation: The existing paper-based process for reporting under rule 7(2) of the Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 shall be fully digitised through IFHRMS platform.

(b) Mandatory entry in the Service record: ÆI vehicle sanction and intimation records shall be automatically synchronized with the employee's digital service record maintained in IFHRMS portal.

(c) Self-declaration protocols for vehicle acquisition/disposal: A self-declaration mechanism shall be introduced for vehicle acquisitions funded entirely through personal savings or institutional loans.

(d) Clarification on borrowing under Rule 6(4)(a) of Tamil Nadu Government Servants' Conduct Rules,1973: Rule 6(4)(a) shall be clarified to state that loans sanctioned by banks, public financial Institutions or registered non-banking financial companies for the purchase of motor vehicles shall not be treated as transactions requiring prior sanction or intimation.

5. Accordingly, the Government have examined the recommendation of the Empowered Committee regarding simplification of the process of acquiring/ disposing of vehicle by Government servants and has decided to issue the following instructions In this regard:-

(1) The Government servant shall submit an intimation regarding the transaction of acquiring/disposal of vehicle with the value exceeding three months total emoluments within one month from the date of such transaction under sub-rule (2) of rule 7 of the said Rule in the prescribed format along with the self-declaration as annexed to this order through IFHRMS portal. No permission shall be required for such transactions.

(2) All the transactions in respect of vehicle purchase or disposal shall be automatically synchronized with the employee’s digital service book through IFHRMS portal w“ith an acknowledgement.

(3) No prior permission is required under clause (a) of sub-rule (4) of rule 6 of the said Rule, for obtaining loans from bank, public financial Institutions or registered non -banking financial companies exclusively for the purchase of vehicle.

6. Necessary amendments to Tamil Nadu Government Servants' Conduct

Rules,1973 will be issued separately to this effect.

(BY ORDER OF THE GOVERNOR)

N. MURUGANANDAM

CHIEF SECRETARY TO GOVERNMENT


All Secretaries to Government, Chennai-600 009. All Departments of Secretariat, Chennai-800 009.

..3..


ANNEXURE


FORM

Intimation of vehicle transaction

(If the value exceeds three months total emoluments)


1 Name of the Government Servant

2 Designation

3 Department

4 IFHRMS ID number

5 Present pay (Rs.) and level of pay

whether the property is acquired or disposed of

7 Description of the property

8 Make/ Model

9 New/ Replacement



10 Mode of acquisition / disposal


t t Sale / Purchase Price of the vehicle


Actual data of transaction (acquired or disposed of Source of funds (for acquisition)



If loan (from bank, family member, relative, personal friend, finance company)/EMI (attach supporting document)

Name of the bank/ financial institution (if applicable)


Q Acquisition O Disposed of


0 Two-wheeler 0 Four-wheeler



0 New 0  Replacement


0 Sale O Purchase O Gift O Other (specify)

0 Own savings

O Bank loan

0 Gift (subject to rule 3 of TNGSCRs,1973)

0 Other (specify)

0 Document attached

J6 Amount of loan (if applicableJ

Self-Certification and Undertaking

(Strike out whichever ls not applicable)


I, .................................................. (name), IFHRMS ID ......................., hereby

solemnly affirm and undertake the following regarding the vehicle transaction described In this application:

ta) I affirm that the purchase is being funded through my personal savings/ institutional bank loans/ contributions from family members/ personal friend and that there is no financial contribution from any individual or entity with whom I have or had official dealings.

( b) I certify that I have no official dealings with the seller or the agency from which

the vehicle is being purchased ito whom the vehicle is being sold.

c) I affirm that the details of the transaction provided by me match my existing service records and annual property returns filed under sub-rule (3) of rule 7 of Tamil Nadu Government Servante' Conduct Rules,197S.

id) I am fully aware that suppression or misstatement of material facts in this undertaking will attract disciplinary action under the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules.


Place:

Date: ....................................

(Digital signature / authentication ofthe Government servant)

N. MURUGANANDAM

CHIEF SECRETARY TO GOVERNMENT

//True copy//


All HODs including District Collector/ District Judges / District Magistrates. The Sz›cretary, Tamil Nadu Pub)ic Service Commission,

Chennai - 600 003.

The Registrar, High Court of Madras, Chennai-600 104. The Registrar, Madurai Bench of Madras High Court,

Madurai.

The Advisor, digital & Simplified Governance, TNeGA, Chennai400 002.

Copy to:

The Chief Minister's Office, Chennai&00 009.

The Special Personal Assistant to Minister, Human Resources Management Department, Chennai -600 009.

The Principal Private Secretary to Chief Secretary to Government, Chennai-600 009. The Private Secretary to Principal Secretary to Government,

Human Resources Management Department, Chennai-600 009.

The Human Resources management DCC J AR) Department 

All Sections / All Officers in Human Resources Management Department, Chennai-600 009.

The Law (HRM / Scrutiny) Department, Chennai400 009. Stock file/spare copy.


//FORWARDED BY ORDER//



இன்று 23.02.2026 திங்கள் காலை 10 மணி அளவில் ஓய்வூதியர்களின் குறைதீர்ப்பு முகாம்



இன்று 23.02.2026 திங்கள் காலை 10 மணி அளவில் ஓய்வூதியர்களின் குறைதீர்ப்பு முகாம்


இன்று 23.02.2026 திங்கள் காலை 10 மணி அளவில்


மதுரை ஆட்சியர் அலுவலத்தில் Mini Meeting Hall ல் ஓய்வூதியர்களின் குறைதீர்க்க Chennai A G office ல் இருந்து அலுவலர்கள் வருகிறார்கள்.


 மதுரை, திண்டுக்கல்,தேனி, சிவகங்கை,ராமநாதபுரம்,  ஓய்வூதியர்கள் குறைகள் மற்றும் நிலுவைத் தொகைகள் ஏதேனும் வராமல் இருந்தால் தீர்வு காண்பதற்கு இது நல்ல வாய்ப்பு.


OFFICE OF THE PRINCIPAL ACCOUNTANT GENERAL (ACCOUNTS S ENTITLEMENTS) TAMIL NADU

date: 11/02/26

EM/1/25-26 /537-33304

Deputy Chief Secretary, Finance Department, Secretariat. Chennai

12 FEB 2026

Pension Adalat proposed to be conducted at Madurai on 23/02/26-reg.

H is proposed to conduct a Pension Adalat at Madurai comprising of Madurai, Theni. Dindigul, Sivagangai, and Ramanathapuram Districts on 23/02/26 by this office exclusively for pensioners for redressal of their grievance from 10.00 ain onwards. Grievances relating to GPF accounts are also proposed to be taken up during the Adalat.

it is therefore requested to issue necessary instructions to the Revenue Authorities for providing a hall with required infrastructure for conducting this Adalat and aiso to give wide publicity in the Madurai region.

The following officials from this office along with Smt. P. Vijaya, DAG(Pension) will attend the Adalat.

1.Smt. Sripriya S

2.Smt. Amirthalakshmi K.3.Shri. Christopher A Anas 4.Shri. Gokulakrishnan V

Asst. Accounts officer Asst.Accounts officer Asst. Accounts officer Asst. Accounts oflicer

This office may be intimated about the venue at the carliest.Expecting your kind cooperation in this regard.

Yours faithfully.


Dy. Accountant General (Pension)




+2 அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் நாட்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


DSE - Internal Mark Uploading Dates


+2 அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் நாட்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


Dates for uploading marks for +2 internal assessment - Directorate of Government Examinations Announcement



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


1012 துப்புரவுப் பணியாளர்களுக்கு Old Pension Scheme - G.O. No.: 03, Dated: 09-02-2026 வெளியீடு

 

1012 துப்புரவுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் - அரசாணை எண் : 03, நாள் : 09-02-2026 வெளியீடு


Old Pension Scheme implementation for 1012 Sanitation Workers - Government Order No.: 03, Dated: 09-02-2026 Released


1012 துப்புரவுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து அரசாணை வெளியீடு


G.O.Ms.No.03 - CPS to Old Pension Scheme



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு அரசு ஒப்புதல்

 

 

ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு அரசு ஒப்புதல்



தமிழ்நாடு அரசு  மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல் 


நிரந்தர பணியாளர்களை போலவே ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல்


தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.


தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்த செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்க தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.


11, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு Hall Ticket வெளியீடு

 

11, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு


dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-02-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 23.02.2026 

கிழமை:- திங்கள்



திருக்குறள்: 

குறள் 213:

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.      

விளக்க உரை:

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.


பழமொழி :
Effort never fail.

முயற்சி திருவினையாக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


பொன்மொழி :

எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இறைவன் நமது பக்கம் இருக்கிறார் என அறிந்து கொள்ளுங்கள் - சுவாமி விவேகானந்தர்.


பொது அறிவு :

01.இந்தியாவில் இருந்து அண்டார்டிகா சென்ற முதல் பெண் விஞ்ஞானிகள் யார்?

சுதிப்தா சென்குப்தா மற்றும் அதிதி பந்த்

Sudipta Sengupta and Aditi Pant

02.சுதந்திர இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவர் யார்?

சர்தார் பல்தேவ் சிங்

Sardar Baldev Singh


English words :

Bravely -courageously

Circumnavigate-Sail around


தமிழ் இலக்கணம்:

தேனீர் தேநீர் எது சரி? என்று பார்ப்போம் வாருங்கள்

முதலில் பிரித்து பார்க்க வேண்டும்
தேனீர் = தேன்+நீர் என்று வரும். இதன் பொருள் தேன் கலந்த நீர் என்பதாகும்
தேநீர் = தே+ நீர் என்று வரும்.
தே என்ற சொல்லுக்கு இனிமை, இறைவன், தேயிலை என்று மூன்று பொருள் வரும்.
இங்கு தேயிலை கலந்த நீர் தேநீர் என்று வரும். எனவே *தேநீர்* தான் சரி



அறிவியல் களஞ்சியம் :

விஞ்ஞானிகள் கணக்கிட்டபடி, ஒரு நூற்றாண்டுக்கு சராசரியாக 2 மில்லி வினாடிகள் (ஆயிரத்தில் ஒரு வினாடியில் இரண்டு பங்கு) அளவு பூமியின் சுழற்சி மெதுவாகி/குறைந்து கொண்டிருக்கிறது. இதன் பொருள், 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில், அவைகளின் நடமாட்டம் இருந்த காலத்தில், ஒரு நாள் என்பது சுமார் 23 மணி நேரம் ஆகும்.


பிப்ரவரி 23

சீகன் பால்க் அவர்களின் நினைவுநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது.இந்தியாவிற்கு அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதோடு தமிழில் அச்சு எழுத்துகளையும் உருவாக்கினார்.


நீதிக்கதை
அன்பை அடைக்க கதவு உண்டோ?

ஒரு நாள் கடை தெருவின் வழியே ஒரு ஐந்து வயது சிறுவன் தன் மூன்று வயது தங்கையை அழைத்து கொண்டு சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, எந்த பொம்மை வேண்டும் என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான்.

அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக்கொண்டே, உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்துவிட்டு, கடைக்காரரைப் பார்த்து இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர், அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே, எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்றுக்கூறி மீதமுள்ள சிப்பிகளை அந்த சிறுவனிடம் திருப்பிக் கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த, அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம், ஐயா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே ஐயா, என்றான்.

அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம்தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும். அதை தடுத்து விட்டேன்.

மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றாவது ஒரு நாள் அவன் பெரியவனான பிறகு இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான் என்றார்.


இன்றைய செய்திகள்

23.02.2026

⭐வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அடிக்கல் நாட்டினார் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

⭐டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இருப்பினும் உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிதாக 15 சதவீத வரிவிதித்துள்ளார்.

⭐எல் சால்வடார் மற்றும் மெக்சிகோ கடற்படைகள் சுமார் 10 டன் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி


Today's Headlines

⭐ The foundation stone for the statue of V. O. Chidambaranar was laid by Vice President C. P. Radhakrishnan.

⭐ The U.S. Supreme Court has canceled the reciprocal tax imposed by Donald Trump. However, Trump has newly imposed a 15% tax on countries around the world.

⭐ The navies of El Salvador and Mexico have seized approximately 10 tons of illegal drugs.

🏀 Sports News

🏀 In the Super 8 round of the ICC Men's T20 World Cup, England achieved a magnificent victory by defeating Sri Lanka.


மாணவரை 'நாய்' எனக் கூறிய ஆசிரியை பணியிட மாற்றம்

 

மாணவரை 'நாய்' எனக் கூறிய ஆசிரியை பணியிட மாற்றம் - திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை


திண்டுக்கல் அருகே தொடக்கப்பள்ளியில் இடை நின்ற நிலையில் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட 5ம் வகுப்பு மாணவரை 'நாய்' என திட்டிய ஆசிரியை திருமலைப்புதுார் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்குள்ள 5ம் வகுப்பு மாணவர் இடை நின்றார்.தனிநபர் ஒருவர் மாணவரிடம் பேசி அதேப் பள்ளியில் மீண்டும் சேர்த்தார். இந்நிலையில் அந்த மாணவரை பள்ளி ஆசிரியை பாத்திமா 'நாய்' என திட்டியதால் பள்ளிக்கு வராது மாணவர் வீட்டில் இருந்தார். இதை அறிந்த தனிநபர் மாணவரை பள்ளிக்கு அழைத்து சென்று ஆசிரியை பாத்திமாவிடம் முறையிட்டார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் விபரம் நேற்று மதியம் 3:00 மணிக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதியழகனிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் வட்டாரக்கல்வி அலுவலர் செலின்மேரியிடம் விசாரிக்க உத்தரவிட்டார். அவர் ஆசிரியை, மாணவரை பள்ளியில் சேர்த்த நபரிடம் விசாரித்து அறிக்கை அளித்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன், ஆசிரியை பாத்திமாவை திருமலைப்புதுார் தொடக்கப் பள்ளியில் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.




தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு



தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று (23-02-2026) மதியம் 2.30 மணிக்கு வெளியிட உள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.


voters.eci.gov.in


electoralsearch.eci.gov.in 


மற்றும் தேர்தல் ஆணைய செயலியில் பெயர்களை சரிபார்க்கலாம்.


Final Voter list in Tamil Nadu will be published on 23.02.2026 - Election Commission press release


தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும் என அறிவிப்பு - தேர்தல் ஆணையம் செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



செல்போன் மாயமான சர்ச்சையில் மன உளைச்சல் - அரசுப் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி



 செல்போன் மாயமான சர்ச்சையில் மன உளைச்சல் - அரசுப் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவிக்கு சிகிச்சை - நாளிதழ் செய்தி 





அரசு உதவிபெறும் பள்ளி - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

 

 

அரசு உதவிபெறும் பள்ளி - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - அறிவிப்பு


Job Notification



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



WANTED 

1.BT Social with B.A (History) B.Ed, 

2. BT (English), 

3. BT(Tamil), 

4. Computer Teacher,

5.PGT Hindi with M.A (Hindi) B.Ed 

for Govt. Aided School. 

Send Resume to mfsdhssrecruit@gmail.com, 

Ph,: 044-25382972, Mobile: 8610524778


பொதுத்தேர்வு தேர்வு - கண்காணிப்புக் கேமரா (CCTV) பொருத்த அறிவுறுத்துதல்



பொதுத்தேர்வு தேர்வு - கண்காணிப்புக் கேமரா (CCTV) பொருத்த அறிவுறுத்துதல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு தேர்வு மையம் - தேர்வு கட்டுபாட்டு அறை / சொல்லுவதை எழுதுபவர்கள் அறைகள் மற்றும் வரண்டா ஆகிய பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா (CCTV) பொருத்த அறிவுறுத்துதல் சார்பாக தேனி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



முடி மாற்றும் அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடு - அரசாணை வெளியீடு



முடி மாற்றும் அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடு - அரசாணை வெளியீடு


முடி மாற்றும் அறுவை சிகிச்சை மற்றும் அழகுக்கலை சிகிச்சைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.


அழகுக்கலை மற்றும் முடி மாற்று சிகிச்சைகளின் போது ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, இனி வரும் காலங்களில் தகுதியான மருத்துவர்கள் மட்டுமே இச்சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.


பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை  (MCh/DNB Plastic Surgery) அல்லது தோல் சிகிச்சை  (MD/DNB Dermatology) மருத்துவர்கள் மட்டுமே இச்சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி-தமிழ்நாடு அரசு.


கருணை உள்ளம் - இன்று ஒரு சிறு கதை

 

 

கருணை உள்ளம் - இன்றைய சிறுகதை - Today's Short Story 


கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.


(பொருள்: கண்ணோட்டம் என்னும் சிறந்த இரக்கப் பண்பு இருப்பதால் தான் இந்த உலகம் அழியாமல் நிலைபெற்றுள்ளது.)


நான் Uber ஓட்டுகிறேன். பெரும்பாலும் இரவு டியூட்டி. கடந்த வாரம் இரவு 11 மணிக்கு ஒரு முதியவரை எடுத்தேன். அவர் காரில் ஏறி,


“இன்றிரவு என்னை ஐந்து இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நான் உங்களுக்கு $500 தருகிறேன். காசாக. ஆனால் முடியும் வரை ஏன் என்று கேட்கக்கூடாது,” என்றார்.


ஐந்து முகவரிகள் கொடுத்தார்.


முதல் இடம்: புறநகர் பகுதியில் ஒரு வீடு.

அவர் காரிலேயே இருந்தார். அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டே பத்து நிமிடம். அமைதியாக அழுதார்.

“சரி. அடுத்தது.” நான் ஓட்டினேன்.


இரண்டாம் இடம்: ஒரு ஆரம்பப் பள்ளி.

வெறிச்சோடியது. இருள். அவர் இறங்கி விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். ஒரு ஊஞ்சலில் அமர்ந்தார். இருபது நிமிடம் இருந்தார். திரும்பி வந்தார்.

“நான் இங்கே 43 ஆண்டுகள் கற்பித்தேன். என் வாழ்க்கையின் சிறந்த வேலை.”


மூன்றாம் இடம்: ஒரு டைனர் (சிறிய உணவகம்).

அவர் உள்ளே சென்றார். காபி ஆர்டர் செய்தார். ஒரு மேசையில் தனியாக அமர்ந்தார். குடிக்கவே இல்லை. சுற்றி பார்த்துக்கொண்டே இருந்தார். பதினைந்து நிமிடம். திரும்பி வந்தார்.


“என் மனைவியும் நானும் முதல் டேட்டுக்கு வந்த இடம் இது. 1967.”


நான்காம் இடம்: கல்லறை.

அவர் இறங்கி ஒரு கல்லறைக்கு சென்றார். அதற்குப் பக்கத்தில் நின்று பேசினார். என்ன சொன்னார் என கேட்க முடியவில்லை. முப்பது நிமிடம். திரும்பி வந்தபோது கண்கள் சிவந்திருந்தன.

“என் மனைவி. இன்று மூன்று ஆண்டுகள்.”


ஐந்தாம் இடம்: மருத்துவமனை.

“இது கடைசி,” என்றார். காரை நிறுத்தச் சொன்னார்.


“இப்போது நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா? எனக்கு நான்காம் நிலை புற்றுநோய். இன்னும் சில வாரங்கள். ஒருவேளை சில நாட்கள். இன்று இரவு என் வாழ்க்கையை முழுவதும் இன்னொரு முறை பார்க்க நினைத்தேன். முடியாத முன்.”


அங்கேயே நான் அழ ஆரம்பித்தேன்.


“அந்த வீடு – என் குழந்தைகளை வளர்த்த இடம்.

அந்த பள்ளி – என் வாழ்க்கையின் நோக்கத்தை கண்ட இடம்.

அந்த டைனர் – நான் காதலித்த இடம்.

அந்த கல்லறை – நான் விடைபெற்ற இடம்.


இங்கே இந்த மருத்துவமனை – இன்று நான் சேரப் போகும் இடம். ஹாஸ்பிஸ் வார்டு. நான் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்.”


அவர் $500 கொடுத்தார்.

“என் வாழ்க்கை முழுவதையும் என்னை ஓட்டி காட்டியதற்கு நன்றி. என்னிடம் இனிமையாக நடக்கும் கடைசி அந்நியர் நீங்கதான்.”


நான் பணத்தை மறுத்தேன்.

“இதை நான் எடுக்க முடியாது.”


அவர் வற்புறுத்தினார்.


“தயவு செய்து. இதை யாருக்கும் விட முடியாது. என் குழந்தைகள் என்னுடன் பேசுவதில்லை. நண்பர்கள் யாரும் இல்லை. நீங்க எனக்கு மூன்று மணி நேர அன்பு கொடுத்தீர்கள். அது $500-ஐ விட பெரியது.”


அவர் இறங்கினார். சிறிய சூட்கேஸ் எடுத்தார்.

“உங்க பெயர் என்ன?”

“மார்கஸ்.”

“நன்றி மார்கஸ். என் வாழ்க்கையின் கடைசி நல்ல விஷயம் நீங்கதான்.”


அவர் மருத்துவமனைக்குள் நடந்துசென்றார்.

நான் காரில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் அழுதேன்.


அவரை மறக்க முடியவில்லை. மறுநாள் திரும்பிப் போனேன்.

“மிஸ்டர் பட்டர்சன். ரூம் 412.”

மலர்கள் எடுத்துச் சென்றேன். கதவைத் தட்டினேன்.

அவர் படுக்கையில் இருந்தார். என்னைக் கண்டு சிரித்தார்.

“மார்கஸ்… நீங்க வந்துட்டீங்க.”


“அப்படியே விட்டுவிட முடியவில்லை. நீங்கள் சுகமா?”

“இறக்கிறேன். ஆனால் நேற்று என் வாழ்க்கையை பார்த்துவிட்டேன். அதனால்… நான் நன்றாக இருக்கிறேன்.”


நாங்கள் இரண்டு மணி நேரம் பேசினோம்.

அவரது மனைவி. மாணவர்கள். பேசாமல் போன குழந்தைகள். வாழ்க்கை.


இரண்டு வாரங்கள் தினமும் அவரைச் சந்தித்தேன். காபி கொண்டு சென்றேன். செய்தி வாசித்தேன். சில சமயம் அமைதியாக இருந்தோம்.


“நான் தனியாக இறப்பேன் என்று நினைத்தேன்,” என்றார் ஒரு நாள்.

“ஆனால் நீங்க இருக்கிறீர்கள். ஒரு அந்நியர் குடும்பமாக மாறினார். அது ஒரு பரிசு.”


நான் அவரது கையை பிடித்தேன்.

“நீங்கள் இனி தனியாக இல்லை.”


அவர் அழுதார்.

“நன்றி. நான் தெரியாமல் போன நேரத்தில் என்னை பார்த்ததற்கு.”


செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:17.

மிஸ்டர் பட்டர்சன் இறந்தார்.

நான் அங்கே இருந்தேன். அவரது கையை பிடித்தபடி.


அவரது கடைசி வார்த்தைகள்:


“மக்களிடம் சொல்லுங்கள். அந்நியர்களை உண்மையாகப் பாருங்கள். எல்லோரும் இறக்கிறார்கள். சிலர் வேகமாக. ஆனால் நாமெல்லாம் ஒரு பயணத்தில் இருக்கிறோம். அந்த வழியில் கருணையாய் இருங்கள். நீங்கள் கருணையாய் இருந்தீர்கள். என் கடைசி நாட்களை அழகாக்கினீர்கள்.”


அவர் கண்களை மூடியார்.

இதய மானிட்டர் நேர்கோடு.


அவரது இறுதிச்சடங்கில் ஆறு பேர் மட்டும்.

நான். மூன்று நர்ஸ்கள். ஒரு வக்கீல். ஒரு பழைய மாணவர்.


நான் பேசினேன்:

“ஒவ்வொரு அந்நியரும் ஒருவரின் முழு உலகம்.

ஒவ்வொரு பயணிக்கும் ஒரு கதை இருக்கிறது.


ஒவ்வொரு மனிதரும் யாராவது தங்களை கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அவர் எனக்கு $500 கொடுத்து தனது வாழ்க்கையை ஓட்டச் சொன்னார்.

ஆனால் அதைவிட பெரிய ஒன்றை தந்தார் – அந்நியரிடம் கருணை காட்டுவது கூடுதல் விஷயம் அல்ல. அதுவே எல்லாம்.”


அந்த $500 இன்னும் என் காரில் இருக்கிறது.

செலவிடவில்லை. நினைவாக வைத்திருக்கிறேன்.


ஒவ்வொரு பயணியும் கடைசி பயணமாக இருக்கலாம்.

ஒவ்வொரு அந்நியரும் கடைசி விடைபெறலாம்.


அதனால் நான் இப்போது வேறுபட்டபடி ஓட்டுகிறேன்.

கேட்கிறேன். கேட்கிறேன். பார்க்கிறேன்.


ஒரு முதியவர்…

ஒரு மென்மையான கடைசி இரவு…

ஒரு அந்நியர் தங்கியிருந்ததால்.


அந்த அந்நியராக நீங்களும் இருங்கள்.

இன்று யாரோ ஒருவரின் கடைசி பயணம் இருக்கலாம்.

அதை மென்மையாக்குங்கள்


“அமைதியான தருணங்கள்… ஆனால் சத்தமான உண்மைகள்.”

முன்னோக்கி அனுப்பப்பட்ட பதிவு — பகிர வேண்டிய மதிப்பு உள்ளது.

🙏🙏💖🙏🙏🙏🙏🙏


Science Practical Exam - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்


SSLC அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - 2026 தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியல் திருத்தம் / சேர்த்தல் / நீக்கம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

 

SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தம் / சேர்த்தல் / நீக்கம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Scribes நியமித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

 


பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர்களாக (Scribes) பள்ளி ஆசிரியர்களையே நியமிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு


கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆசிரியர்களையே சொல்வதை எழுதுபவர்களாக (Scribe) நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-02-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 20.02.2026 

கிழமை:- வெள்ளி



திருக்குறள்: 

குறள் 341:

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.

விளக்க உரை:

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.


பழமொழி :

Borrowing is sorrowing.

கடன் துன்பத்திற்கு வழிவகுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக உன்னிடமே திரும்பி வரும்.- சுவாமி விவேகானந்தர்


பொது அறிவு :

01.நம் உடலில் உள்ள இரத்தம் ஒரு நாளைக்கு பயணம் செய்யும் தூரம் எவ்வளவு?

சுமார் 19,000 கிலோமீட்டர் -
Approximately 19,000 km

02 மழை நீரில் காணப்படும் வைட்டமின் எது?

வைட்டமின் B12
Vitamin B12


English words :

consequence –impact happens due to some incidents

ஒரு செயலினால்‌ ஏற்படும் பின்விளைவுகள்.

contest –a competition to find out who is the best

யார் சிறந்தவர் என்று கண்டறியும் போட்டி


தமிழ் இலக்கணம்:

ஒருமை பன்மையில் வரக்கூடிய பிழைகளை எவ்வாறு கண்டறிந்து அதை சரி செய்வது? வாருங்கள் பார்ப்போம்
ஒருமை சொற்கள் இறுதியில் து என முடியும்.

பன்மை சொற்கள் இறுதியில் ன என முடியும்.
இதை கண்டறிய எதை என்ற கேள்வி கேட்க வேண்டும்.
எ.கா 1. பசு‌ கன்றுகளை ஈன்றன.
எது? பசு.‌ பசு ஒருமை
ஒருமை து வில் முடியும்

சரியான விடை –பசு‌ கன்றுகளை ஈன்றது.

2. கீரைகளில் இரும்பு சத்து உள்ளன.


எது? இரும்பு சத்து.‌ இரும்பு சத்து ஒருமை

சரியான விடை

கீரைகளில் இரும்பு சத்து உள்ளது.

3. வண்டிகள் வரிசையாக நிற்கின்றது


எது? வண்டிகள்.‌ இது பன்மை.
சரியான விடை
வண்டிகள் வரிசையாக நிற்கின்றன.


அறிவியல் களஞ்சியம் :

இப்போது நமது பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் / 86,400 வினாடிகள் ஆகும். அப்படித்தான் என எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஒரு நாளின் நேரம் என்பதும் மாறக்கூடியதே என்ற தகவல் பெரும்பாலோருக்குத் தெரியாது.  இந்த நேரம் முற்றிலும் நிலையானது அல்ல. பூமி உருவான காலத்தில் இருந்து, பூமியின் சுழற்சி வேகம், பல காரணிகளைப் பொருத்து மாறிக்கொண்டே வந்திருக்கிறது


பிப்ரவரி 20

சமூக நீதிக்கான உலக நாள்

சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.



நீதிக்கதை

எதையும் நாமே நாடிப்போவது சரியா?

ஒரு நாள் நவீன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான். அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு, பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி, உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள் என்றார்.

ஆனால் நவீன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை. கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை. அதை பார்த்த அவன் அம்மா, சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார். அப்பவும் நவீன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார். அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள். எவ்வளவு சிறியதாக இருக்கிறது. நான் பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும். இப்பொழுது பாருங்க.. அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமாக சாக்லேட் கிடைத்திருக்கிறது பாருங்கள் என்றான்.

எதையுமே நாம் விரும்பிக் கேட்டால் குறைவாகத்தான் கிடைக்கும். அதுவாக தேடி வந்தால் அதிகமாகக் கிடைக்கும் என்பதை நவீனின் அம்மா புரிந்து கொண்டார்.


இன்றைய செய்திகள்

20.02.2026

⭐தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைகால சிறப்புத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

⭐நைஜீரியாவில் விஷவாயு கசிவால் வெடித்து சிதறிய சுரங்கம்: 38 தொழிலாளர்கள் பலி

⭐அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 8 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.


Today's Headlines

⭐ Minister Geetha Jeevan has officially announced that eligible women in Tamil Nadu will henceforth receive ₹2,000 every year as a special summer assistance amount.

⭐ A mine exploded due to a toxic gas leak in Nigeria: 38 workers died.

⭐ Severe snowstorm in the United States: 8 skiers lost their lives.

🏀 Sports News

🏀 ICC Men's T20 World Cup: West Indies register a huge win by defeating Italy.


TETக்கு விண்ணப்பிக்க Service Certificate பெறுவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் - DEOs Proceedings


TETக்கு விண்ணப்பிக்க பணிச்சான்று பெறுவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் - மாவட்டக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள், நாள்: 17-02-2026


Attachments to be attached to obtain Service Certificate to apply for TET - Proceedings of District Education Officers, Date: 17-02-2026


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பணிச்சான்று வழங்குவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் குறித்தான சிவகங்கை & இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள் கடிதம் நாள்: 17.02.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஆசிரியர் தகுதித் தேர்வு 2026

அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை - DEOs Proceedings


பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வி வாரிய அறிக்கையின்படி அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு -2026 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் (Online)இல் ஆசிரியர் விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், இப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : ஒரு ஆசிரியர் இரண்டு தேர்வுகளில் (TET Paper 1 மற்றும் TET Paper 2) விண்ணப்பம் செய்து இருந்தால் தனித்தனியாக கருத்துரு சமர்ப்பிக்கப்பட வேண்டும்)


1. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வட்டாரக்கல்வி அலுவலர்

2. கையொப்பத்துடன் Annexure 1 - இரு நகல்களில்

3. சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விண்ணப்ப கடிதம்

4. பணி நியமன ஆணை நகல்

5. பணிப்பதிவேடு முதல் பக்க நகல்

6. முதன் முதலில் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணை நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

7. தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

8. TET தாள் 1/ TET தாள் 2 உரிய கல்வித் தகுதித் சான்று நகல்கள்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-02-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 19.02.2026 

கிழமை:- வியாழன்



திருக்குறள்: 

குறள் 519:

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு

விளக்க உரை:

மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.


பழமொழி :
An empty sack cannot stand upright

வெறும் கையால் முழம் போட முடியாது


இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

வாழ்க்கையில் எந்த நெருக்கடி நிலையில் இருக்கும்பொழுதும் வாய்மையை கடைப்பிடிப்பது போல உறுதியான நிச்சயமான பாதுகாப்பு வேறு எதுவும் கிடையாது- கார்லஸ் டிக்கின்ஸ்


பொது அறிவு :

01.2000 ரூபாய் நோட்டின் பின்புறத்தில்  இடம்பெற்றுள்ள சின்னம் எது?

    மங்கள்யான்- Mangalyaan

02.உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான கடிகாரம்  எங்குள்ளது?

      மெக்கா-சவூதி அரேபியா

Mecca-Saudi Arabia.


English words :

regret –to feel sorry that you did something or that you did not do something.

ஒன்றைச் செய்தமைக்காக/செய்யாமைக்காக வருத்த உணர்வு கொள்ளுதல்

remorse –a feeling of sadness because you have done something wrong.

தவறு செய்துள்ளமை காரணமாக மனத்தில் தோன்றும் வருத்த உணர்வு.


தமிழ் இலக்கணம்:

தன்/தம் பயன் படுத்தும் இடங்கள்
ஒருமை வரும்போது *தன்* உபயோகப் படுத்த வேண்டும்.

1. அருளன் *தன்* கையால் பரிசைப் பெற்றுக் கொண்டான்


2. சிறுமிகள் *தம்* கரங்களால் மலர் தூவினர்


ஆனால் இதற்கு விலக்கும் உண்டு. மரியாதைக்குரியவர்களைக் குறிக்கும் போது ஒருமையில் இருந்தாலும் *தம்*  என்று தான் குறிக்க வேண்டும்
சான்றோர் தம்மைத் தாம் புகழ மாட்டார்கள்

தலைவர் தம் பணத்தைக் கொடுத்து பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்தார்.


அறிவியல் களஞ்சியம் :

நமது  பூமிப்பந்து சுற்றிக்கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், முழுமையான காரணம் பலருக்குத் தெரியாது. சூரியனின் ஈர்ப்பு விசையால் சுழல்வதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பூமி சுழல்வதற்கான முக்கிய காரணம், அதன் உருவாக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே பெறப்பட்ட கோண உந்தம் (Angular Momentum) ஆகும். சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலம், அதாவது சூரிய விண்மீன் ஒரு பெரும் சுழலும் வாயு மற்றும் தூசியின் மேகத்தில் இருந்து உருவானது. இந்த மேகம் சுழன்று கொண்டே இருந்தது. அப்போது உருவானதுதான் இந்த பூமி.  பூமி உள்ளிட்ட கோள்கள் உருவாகும்போது, இந்தப் பிரபஞ்ச அளவிலான சுழற்சியின் உந்தம் அனைத்துக்  கோள்களுக்கும் பரிமாறப்பட்டது. இந்த உந்தத்தை இழக்க எந்த புற விசையும் இல்லாததால், பூமி இன்றும் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது.


பிப்ரவரி 19

நீதிக்கதை

அன்பை வெளிப்படுத்தும் விதம்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார். திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியை அந்த மாணவியிடம் நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று பதில் கூறினாள்.

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார். அன்பு என்றால் இது தான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார்.


இன்றைய செய்திகள்

19.02.2026

⭐ தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர், மாற் றுத்திறனாளிகள் & ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மூலம் சுமார் 35.33 லட்சம் நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

⭐உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்துவருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முடங்கியுள்ளது.

⭐’ரஷ்யாவிடம் இருந்து 2000 குழந்தைகள் மீட்பு' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை:
நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்.


Today's Headlines

⭐ Under the social security schemes in Tamil Nadu, about 3.533 million (35.33 lakh) people are benefiting from pensions provided to senior citizens, persons with disabilities, and destitute widows.

⭐ In Cuba, which is known as the “Sugar Bowl of the World,” the fuel shortage is worsening day by day. As a result, the country’s economy and the normal life of the people have been severely affected.

⭐ ‘2,000 children rescued from Russia’ – Ukrainian President Zelenskyy

🏀 Sports News

🏀 T20 World Cup:
Pakistan advanced to the Super 8 round after defeating Namibia.


NMMS 2026 Results - DGE Press Release

 

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட தேர்வு 2025 - 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு


NMMS 2026 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு


NMMS 2026 Results - DGE Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


NMMS 2026 Results - Website Link

 

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட தேர்வு 2025 - 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு


வலைதள இணைப்பு 


NMMS 2026 Results - Website L

👇 👇 👇 


https://apply1.tndge.org/nts-result-change-2022



User Name: 9 Digit Roll number 


Password: Date of Birth (YYYY-MM-DD)



மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings

 

 மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாநில திட்ட இயக்ககம்


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600 006


அனுப்புநர்

திருமதி.மா.ஆர்த்தி.இ.ஆ.ப.

மாநிலத் திட்ட இயக்குநர் 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் 

சென்னை 600 008


பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

அனைத்து மாவட்டங்கள்.


ந.க.எண். 3701/C7 /MLM /ஒபக/2026, நாள்: 16.02.2026


அய்யா அம்மையீர் 

பொருள்:


17 FEB 2025


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளிகளில் 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் சோதித்து அறித்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக


பார்வை

1. மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கிய அறிவுரைகள்


2. தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித நகஎண். 022696/2/2025. 10.02.2026


பார்வை-2ன் படி கண்டுள்ள கடிதத்தின் படி 2025-26-ஆம் கல்வியாண்டு 100 நாட்கள் அறைகூவல் மதிப்பீடு 14000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல் கழித்தல், பெருக்கல். வருத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை சோதித்து அறிவதற்கான மதிப்பீடு வினாத்தாள் (Assessment Tool மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீடு பணிகளைப் போன்று இவ்வாண்டும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் பின்வரும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


வஎண்.  மதிப்பீடு செய்யப்படும் நாள் வகுப்பு பாடம் மாணவர் எண்ணிக்கை



1)  18.02.2026   1 முதல் 3    தமிழ் ஆங்கிலம் & கணிதம்  குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்


2)  20.02.2026   4மற்றும் 5    தமிழ் ஆங்கிலம் & கணிதம்  குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்



பள்ளிகளில் முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் /திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறனறியும் இப்பொருண்மையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறுவளமையங்கள் அல்லாத ஆனால், அதே ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள பிற குறுவள மைய எல்லைக்குள் இடம்பெறும் பள்ளிகளை மதிப்பீடு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நகல்


மாநில திட்ட இயக்கு 226


தொடக்கக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்.


கிருஷ்ணகிரி மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (ஒபசு) அவர்களின் செயல்முறைகள்


ந.க.எண்.119/MLM/ஒபக/2025 நாள்:17.02.2026


(நகல்) சென்னை-6. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்.3701/C7/MLM/ஒபக/2026 நாள். 02.2026-னை இத்துடன் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), அனைத்து வட்டாராக் கல்வி அலுவலர்கள், மற்றும் வட்டார வள மைய (பொ) மேற்பார்வையாளர்களுக்கு தகவலின் பொருட்டும் தக்க நடிவடிக்கையின் பொருட்டும் அனுப்பிவைக்கப்படுகிறது இணைப்பு-பார்வை கடிதம்


முதன்மை அலுவலர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி, ஓசூர்.


பெறுதல்: மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி),


2.அணைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.


3.அனைத்து வட்டார வளமைய (பொ) மேற்பார்வையாளர்கள். 

4.சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்.


நகல்


முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி அவர்களுக்கு தகவலுக்காக அன்புடன் அனுப்பப்படுகிறது.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-02-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 18.02.2026 

கிழமை:- புதன்



திருக்குறள்: 

குறள் 513:

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

விளக்க உரை:

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.


பழமொழி :
Hard work writes your destiny.        

கடின உழைப்பே உங்கள் விதியை எழுதும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிட்ஜ்


பொது அறிவு :

01.இந்திய மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் யார்?

மீரா குமார்-Meira Kumar

02.இந்திய நாணயத்தின் (ரூபாய்) சின்னத்தை (₹) வடிவமைத்தவர் யார்?

டி. உதய குமார்-தமிழ்நாடு
D. Udaya Kumar - Tamilnadu


English words :

Famished - starving

Sluggishly - slowly


தமிழ் இலக்கணம்:

வாக்கிய பிழை பாகம் 2
மாறன் சிறந்த இசை வல்லுனராக ஆக விரும்பினான்
வல்லுனராக –இதிலே ஆக என்று இருப்பதால் தனியாக ஒரு ஆக தேவையில்லை

2. பத்தே பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.


பத்தே, மட்டும் இரண்டுமே அழுத்தம் கொடுக்கும் சொல். எனவே
அ. பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

ஆ. பத்தே பத்து  கடைகள்  திறந்து இருந்தன.

என்று எழுத வேண்டும்
நாளை மற்றும் ஒரு குறிப்பு பார்ப்போம்


அறிவியல் களஞ்சியம் :

பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை உடைக்கும் சரியான செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும், பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை எளிய மூலக்கூறுகளாக சிதைக்கின்றன, பின்னர் அவை உறிஞ்சி அல்லது வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது.


பிப்ரவரி 18

மார்ட்டின் லூதர்  அவர்களின் நினைவுநாள்

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.


மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்


மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.



நீதிக்கதை

நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.

அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.


இன்றைய செய்திகள்

18.02.2026

⭐ 2030க்குள் 33% மின் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

⭐இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

⭐இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை 2026: கனடாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.


Today's Headlines

⭐ In Tamil Nadu, 33% Electric Buses by 2030: Chief Minister M. K. Stalin announced.

⭐ In the interim budget, ₹47,248 crore has been allocated to the agriculture sector.

⭐ In the interim budget, ₹48,534 crore has been allocated to the School Education Department, said Minister Thangam Thennarasu.

🏀 Sports News

🏀 In the ICC Men's T20 World Cup 2026, New Zealand defeated Canada by 8 wickets.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் வாகனம் வாங்குதல் / அகற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி தமிழ்நாடு அரசு மனித வள மற்றும் மேலாண்மை துறை அரசாணை (நிலை) எண் : 11, நாள் : 11-02-2026 வெளியீடு

G.O.(MS.) No.11, Dated:11.02.2026 IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் வாகனம் வாங்குதல் / அகற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி தமிழ்நாடு அரசு மன...