கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 26.11.2025

கிழமை:- புதன்கிழமை


 *திருக்குறள்:*


பால்:- பொருட்பால்

இயல்:- அரசியல்

அதிகாரம்:- இடன் அறிதல்


 *குறள் : 491*


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் 

இடங்கண்ட பின்னல் லது 


*விளக்க உரை:* 


முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.


*பழமொழி :*


The fire that burns you,forges you. 


உன்னை எரிக்கும் தீ தான் உன்னை உருவாக்கும்.


*இரண்டொழுக்க பண்புகள் :*


1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.


2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.


*பொன்மொழி :*


ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாக வாழ்வதை விட அரை நிமிடம் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சிறந்தது


  Dr. அம்பேத்கர்


*பொது அறிவு :*


01.உலகிலேயே பருப்பு வகைகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?



  இந்தியா - India


02.தமிழ்நாடு சட்டப் பேரவையின் தற்போதைய சபாநாயகர்யார்?


  திரு. மு. அப்பாவு-Thiru. M. Appavu


*English words :*


incessant-constant


Androit-skillful


*தமிழ் இலக்கணம்:*


 1. குறிலைத் தொடர்ந்து இடையின 'ர' கர மெய் வரவே வராது ஆனால் வல்லின 'ற' கரம் வரும் 

எ.கா. கர்மம் –தவறு

அர்ச்சனை –தவறு. 

கருமம், அருச்சனை என்றே எழுத வேண்டும்

விற்பனை, கற்சிலை, குற்றம், கற்றான்


2. கருப்பு என்பது பஞ்சத்தை குறிக்கும் நிறத்தை அல்ல.

       கறுப்பு என்ற வார்த்தையே நிறத்தை குறிக்கும்


*அறிவியல் களஞ்சியம் :*


 ஆண்களை விட பெண்களால் அதிக நிறங்களை காண முடியும்!


வண்ணங்களை வகைப்படுத்தி காணும் திறன் ஆனது மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் காணப்படுகின்றன. இவ்வகை எக்ஸ் குரோமோசோம்கள் ஆனது பெண்களுக்கு இரண்டும், ஆண்களுக்கு ஒன்றும் இருக்கிறது. ஆக பெண்களால் ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியும்.


*நவம்பர் 26*


இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக  அனுசரிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.


இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும்   இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


*நீதிக்கதை*


 *சிறுவனின் தன்னம்பிக்கை*


ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார். 


உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். 


அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார். 


சிறுவன் சொன்னான். இல்லை, நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன் என்றான்.


*இன்றைய செய்திகள்*


26.11.2025


⭐கோவையில் செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


⭐காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி:

டெல்லியில் அரசு, தனியார் அலுவலகங்களில் 50% வீட்டிலிருந்தே வேலை


⭐பள்ளி, கல்லூரிகளில் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு


⭐16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த (டிசம்பர் 10 முதல்) ஆஸ்திரேலியாவில் தடைவிதிக்கப்ப ட்டுள்ளது போல டென்மார்க் & மலேஷியாவும் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்க திட்டமிட்டுள்ளன.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀டி20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15 ஆம் தேதி மோதும் இந்தியா-பாகிஸ்தான். டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.


*Today's Headlines*


⭐Chief Minister M.K. Stalin inaugurated the Semmozhi Park in Coimbatore. 


⭐Increasing air pollution in New Delhi,  50% of government and private offices to proceed with their work from home.


⭐M.K. Stalin ordered to read the preamble of the Constitution in schools and colleges.


⭐Denmark & ​​Malaysia are also planning to ban social media use by those under 16 (as of December 10), similar to Australia's ban on social media use by those under the age of 16.


 *SPORTS NEWS*


🏀T20 World Cup schedule released: India-Pakistan to clash on February 15 . 

20 countries are participating in the T20 World Cup.



Seagate One Touch 5TB External HDD with Password Protection – Black, for Windows and Mac, with 3 yr Data Recovery Services,


https://amzn.to/4rnw4yD



TNTET 2025 - Paper 1 & 2 - Tentative Answer Keys - TRB Press Release regarding Objections

 

 

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 1 & 2 - தற்காலிக விடைக்குறிப்புகள் - ஆட்சேபணைகள் தெரிவித்தல் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகை செய்தி வெளியீடு


Tamil Nadu Teacher Eligibility Test 2025 - Paper 1 & 2 - Provisional Answer Keys - Teacher's Recruitment Board Press Release regarding Objections


TNTET 2025 - Paper 1 & 2 - Tentative Answer Keys - TRB Press Release regarding Objections



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Aquaguard Water Purifier | Free Service Plan worth ₹2000 | Suitable for Borewell & Tanker Water


https://amzn.to/3LZBwro




TNTET 2025 - Paper 2 - Social Science - Tentative Answer Keys - TRB Released

 

 


 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 2 - சமூக அறிவியல் - தற்காலிக விடைக்குறிப்புகள் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு



Tamil Nadu Teacher Eligibility Test 2025 - Paper II - Social Science Question Paper & Tentative Answer Keys - Teacher's Recruitment Board Released


TNTET 2025 - Paper 2 - Social Science - Tentative Answer Keys - TRB Released



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Xiaomi Power Bank 4i 20000mAh 33W Super Fast Charging PD |Smart 12 Layer Protection|Type C Input & Output|Triple Output Ports|Supports Android,Apple, Tablets, Earbuds,Watch(MI Powerbank),Black


https://amzn.to/482UzK3




TNTET 2025 - Paper 2 - Maths & Science -Tentative Answer Keys - TRB Released

 


 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 2 - கணக்கு & அறிவியல் - தற்காலிக விடைக்குறிப்புகள் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு


Tamil Nadu Teacher Eligibility Test 2025 - Paper II - Mathematics & Science Question Paper & Tentative Answer Keys - Teacher's Recruitment Board Released


TNTET 2025 - Paper 2 - Maths & Science -Tentative Answer Keys - TRB Released



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 Women's Cotton Print Unstitched Salwar Suit Material, 2 Mtr Cotton Salwar, Stylish Chinon Dupatta (Design 95; Free Size)


https://amzn.to/4ps6O8B




TNTET 2025 - Paper 1 - Tentative Answer Keys - TRB Released

 


 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 1 - வினாத்தாள் & தற்காலிக விடைக்குறிப்புகள் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு


Tamil Nadu Teacher Eligibility Test 2025 - Paper 1 - Question Paper & Tentative Answer Keys - Teacher's Recruitment Board Released


TNTET 2025 - Paper 1 - Tentative Answer Keys - TRB Released



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



boAt FlexiCharge 400 Charging Cable w/ 4-in-1 Connectivity- USB-A, Type-C, & Lightning Ports, 60W/3A PD Fast Charging,480Mbps Data Sync,2 Swappable Heads,Silicon Cable Tie(Carbon Black)


https://amzn.to/3XQflXe




Nobel Prizeஐ வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை

 


நோபல் பரிசை வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை


Venezuela warns of action if Maria Corina goes to Norway to receive Nobel Prize


இந்த ஆண்டின் நோபல் பரிசு நார்வே நாட்டின் அஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரினா மச்சாடோ ஆவார். வெனிசுலாவின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியவர் ஆவார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தவர். இவர் கடந்த 1967ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி வெனிசுலா நாட்டின் கராகாஸ் என்ற நகரில் பிறந்தவர் ஆவார்.


முன்னதாக, தனக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை கோரிக்கை வைத்திருந்தார். எனவே, இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உலக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. பல நாடுகளில் போர் ஏற்படும் என்ற நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன். போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அதிபர் டிரம்ப்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.



இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோவுக்கு தற்போது விருதை வாங்க சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களுக்கு, அதனை வழங்கும் விழா நார்வே நாட்டில் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த விழாவில் கலந்து கொள்ள மரியா கொரினா மச்சாடோ சென்றால், நடவடிக்கை எடுக்க வெனிசுலா அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மரியா கொரினா மீது சதி, பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதால், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், அவ்வாறு வெளியே சென்றால் தப்பியோடியதாக கருதப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.


Bajaj Pygmy Go 178MM Mini Fan with LED Lighting | Rechargeable | USB Charging | 4-hours Battery Backup | 3 Speed | 2-Light Brightness Setting | High Speed | Portable【Blue】


https://amzn.to/4oRIpth





புரூஸ்லி இறந்தது எப்படி? - hyponatremia என்றால் என்ன? - அதிகமாக தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா?



புரூஸ்லி இறந்தது எப்படி? 


ஹைப்போநாட்ரீமியா என்றால் என்ன? 


அதிகமாக தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா? 


How did Bruce Lee die? - What is hyponatremia? - Is there a danger in drinking too much water?


தற்காலத்தில் இளையோரிடத்தில் யார் விரைவாக 

அதிக குளிர்பானம் / பீர் உள்ளிட்ட திரவங்களைப் பருகுகிறார்கள் என்று போட்டிகள் நடப்பதைக் காண முடிகிறது. 

இவை உயிருக்கு ஆபத்தானவை. 


எப்படி வாருங்கள் புரூஸ்லீயின் மரணம் வழி பாடம் கற்போம் 


டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


ஹாங்காங் நகரில் 20.7.1973 அன்று 

ஹாலிவுட் அதிரடி மன்னன் புரூஸ்லீ சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமடைந்தார்


அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும் 

பயிற்சி செய்யும் போது தலை சுவரில் மோதி அதனால் ஏற்பட்ட மூளை ரத்தக்கசிவால் மரணம் ஏற்பட்டது

மூவர் கொண்ட குழு அவரை கொலை செய்து விட்டதாகவும்  கூறப்பட்டு வந்த நிலையில் 


தற்போது ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் அவரது மரணம் குறித்து ஆராய்ச்சி செய்து 


அவர் அதிகமாக தண்ணீர் பருகியதால் ஹைப்போநாட்ரீமியா ஏற்பட்டு அதன் விளைவால் மரணமடைந்திருக்கலாம் என்கின்றனர்


புரூஸ்லீ அவர்கள் இறந்த அன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம் 


புரூஸ்லீ இறந்த அன்று காலை 

மாரிஜூவானா எனும் மருந்தை உடல் வலிக்காக உட்கொண்டு விட்டு 

பெட்டி டிங் பேய் எனும் அவரது நண்பரின் வீட்டிற்குச் சென்று 

வரவிருக்கும் படத்தின் சில காட்சிகளை நடித்துப் பயிற்சி செய்கிறார். 


இரவு 7.30 மணிக்கு தலை சுற்றல் , குமட்டல் , தலைவலி ஏற்படவே 


தலைவலி மாத்திரையான "EQUAGESIC" மாத்திரையை டிங் பேய் அவருக்கு வாங்கிக் கொடுக்கிறார்


அதை உட்கொண்டு சற்று நேரம் ஓய்வெடுத்த புரூஸ்லீயை 9.30 மணிக்கு சென்று பார்க்கிறார் 


ஆள் மயங்கிக்கிடக்கிறார்


மருத்துவர் வரவழைக்கப்படுகிறார்


அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லப்பட்டு

இறுதி கட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன 


எனினும் சிகிச்சை பலனின்றி ப்ரூஸ்லி மரணமடைகிறார். 


பிரேத பரிசோதனை அறிக்கையில் 

விஷமோ / வேறு வெளி/உள் காயங்களோ இல்லை 


ஆனால் அவரது மூளை நார்மலாக இருக்க வேண்டிய எடையை விட சற்றுக் கூடுதலாக இருந்தது. அவரது மூளை 1575கிராம் இருந்தது. 

சாதாரணமாக நமது மூளை 1200-1300 கிராம் எடை கொண்டது. 


உடனே அவரது மரணத்திற்கான காரணம் ஈக்விஜெசிக் மாத்திரையை உட்கொண்டதால் ஏற்பட்ட அலர்ஜியினால் மூளையில் நீர் சுரந்து (CEREBRAL EDEMA)  இறந்து விட்டார் என்று எழுதப்பட்டு விட்டது. 


ஆனால் அதற்கு முன்பாக மே மாதத்திலும் இதே போன்று 

தலைவலி, வாந்தி, மயக்கம், கிறுகிறுப்பு போன்றவற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். 


புரூஸ்லீ இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து 

திரவ டயட் முறையை கடைபிடித்து வந்ததாகத் தெரிகிறது


உணவாக தண்ணீர்  / கேரட் மற்றும் ஆப்பிள் ஜூஸ் மட்டும் உட்கொள்வதை பழக்கமாக வைத்திருந்திருக்கிறார்


அவரது உடல் வலி காரணமாக அதை சரி செய்யும் முகமாக கோகெய்ன் உட்கொள்ளும் பழக்கமும் இருந்தமையால் அடிக்கடி தாகமெடுத்துக் கொண்டே இருக்கும் 

எனவே தண்ணீரை அளவுக்கதிகமாக குடித்திருக்கிறார்

 

அத்துடன் வலி நிவாரணி மாத்திரையை உட்கொள்ளவும் சிறுநீரகம் சிறிது ஸ்தம்பித்து தண்ணீரை வெளியேற்ற இயலாமல் போயிருக்கும் 

இதன் விளைவாக உடலில் அதிக நீர் சேர்ந்து இருக்கிறது 


நமது உடலில் தண்ணீரின் அளவு கூடும் போது ரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவு குறையும். 


சோடியம் அளவு நார்மலாக 135-140 mEq/L இருக்க வேண்டும் 


ஆனால் 

அளவுக்கு அதிகமாக தண்ணீரை குறைவான கால இடைவெளியில் பருகும் போது சிறுநீரகங்கள் ஸ்தம்பிக்கின்றன


தண்ணீரை வெளியேற்ற இயலாமல் வேலைநிறுத்தம் செய்கின்றன 


இப்போது தண்ணீர் கூடுவதால் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவு குறையும் 

எனவே செல்களுக்கு வெளியே இருக்கும் நீரானது செல்களுக்குள் செல்லும். 

இதனால் செல்கள் வீக்கமடையும். 


மூளையில் இருக்கும் நியூரான்கள் வீக்கமடையும். 

மூளை வீங்கும். இதனால் வலிப்பு ஏற்படும் . தலை சுற்றும். கோமா ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும். 


இது போன்ற நிலையை 

"ACUTE HYPONATREMIA" என்று அழைக்கிறோம் 


சாதாரணமாக நமது சிறுநீரகங்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீரை சுத்தம் செய்து வெளியேற்றும் சக்தி பெற்றவை 


ஒரு நாளைக்கு 20-25 லிட்டர் வரை வெளியேற்றும் சக்தி பெற்றவை. 


ஆயினும் ஒரே நேரத்தில் நான்கு ஐந்து ஆறு லிட்டர் என தண்ணீரை லபக் லபக் என்று பருகினால் சிறுநீரகங்கள் ஸ்தம்பிக்கும்


ரத்தத்தில் சோடியம் அளவுகள் குறையும். 


இதனால் தலை வலி , தலை சுற்றல் , வாந்தி , மயக்கம் போன்றவை ஏற்படும் என்ற விழிப்புணர்வு தேவை


அதற்காகவே இந்தப் பதிவு 


இதே போன்ற ஒரு நிகழ்வை 

ஒரு கேஸ் ரிப்போர்ட்டாக பதிந்துள்ளார்கள்


24 வயதுடைய நான்கு வாரமே ஆன  குழந்தையின் தாய் ஒருத்தி

20 மணிநேரம் தண்ணீர் உணவு  அருந்தாத விரதத்தில் (DRY FASTING)  ஈடுபடுகிறாள். 

விரத நேரத்திலும் தான் ஈன்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறாள். 


விரதத்தை முடிக்கும் நேரத்தில் 

பால் சுரப்பு குறைவாக இருக்கவே


4 லிட்டர் தண்ணீரை அருந்துகிறாள். 


சற்று நேரத்தில் தலைவலி ஏற்படுகிறது. 

அதற்கு தலைவலி மாத்திரை ஒன்றை உட்கொள்கிறாள்


உடனே தலைசுற்றல் ஏற்படுகிறது / தலைவலி இன்னும் அதிகமாகிறது


அதிர்ஷ்டவசமாக

மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு ஹைப்போநேட்ரீமியா கண்டறியப்பட்டு முறையாக மருத்துவம் பார்த்து மீள்கிறாள்


ஒருவேளை புரூஸ்லீ போன்று கண்டுகொள்ளாமல் தூங்கி இருந்தால் இறந்திருக்கக் கூடும். 


இதில் நாம் அறிவது யாதெனில் 


அதீத உடல் உழைப்பு / மாரத்தான் ரன்னிங்/ ஜிம் வொர்க் அவுட்டுகளுக்குப் பின் 

வெறும் நீரை மட்டும் பல லிட்டர்கள் குடிப்பது ஆபத்தானது. 


கட்டாயம் சோடியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்த எலக்ட்ரோலைட் திரவத்தை உட்கொள்ள வேண்டும் 


அப்படி அதிக திரவம் பருக வேண்டிய சூழ்நிலை வந்தால் 

நீரில் ஓ ஆர் எஸ் கலந்து பருக வேண்டும். எக்காரணம் கொண்டும் வெறும் நீரை பல லிட்டர்கள் ஒரே நேரத்தில் பருகுதல் தவறு. 


தண்ணீரை அளவுடன் பருக வேண்டும். 

ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகினாலும் முறையான இடைவெளிவிட்டு பருக வேண்டும். 


நான் பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்

காலை எழுந்ததும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பேன் 

வேலை முடித்து வந்ததும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பேன் என்று கூறுவார்கள் 


இது ஆபத்து நண்பர்களே


சிலர் லேசான வயிற்றுப் போக்குக்கு கூட  எலக்ட்ரோலைட் நிறைந்த ஓ.ஆர்.எஸ் திரவத்தை நீருடன் கலக்கிப் பருகாமல் வெறும் நீரை பல லிட்டர் பருகுவார்கள். 

இதுவும் ஆபத்தில் கொண்டு உய்க்கும் செயலாகும். 


சிறுநீரக கோளாறு

கல்லீரல் கோளாறு 

இதய நோய் இருப்பவர்கள் 

தண்ணீரை அளவுடன் மருத்துவர் பரிந்துரையில் பருக வேண்டும். 

இவர்கள் சற்று அளவு கூடி தண்ணீரைப் பருகினாலும்  ஆபத்து நேரிடும் வாய்ப்பு உண்டு. 


ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்தலாம்? 


 அவ்வாறு சரியாக  வரையறுக்க முடியாது. 

சிறுநீர் கழித்தல் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறையாவது நடக்க வேண்டும். 

சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாக/ சிவப்பு நிறமாக ஆகக்கூடாது. அது சரியான நீர்ச்சத்து இல்லை என்பதைக் காட்டுகிறது. 


வெளிர்மஞ்சள் (STRAW COLOURED URINE)  நிறத்தில் சிறுநீர் இருப்பதே சரியான நிறமாகும்.  


வியர்வை அதிகமாக வெளியேறும் வேலை செய்பவர்கள் அதற்கேற்றவாறு நீர் அருந்த வேண்டும்


பத்து கிலோ வரை எடையுள்ள குழந்தைகளுக்கு  100ml/kg/day 

எனவே பத்து கிலோ எடை இருந்தால் ஒரு லிட்டர் ஒரு நாளைக்கு வரும் 


பத்து கிலோ முதல் இருபது கிலோ வரை எடை இருந்தால் 

1000 ml +  50ml/kg/day ( அடுத்த பத்து கிலோவை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும்) 


எனவே இருபது கிலோ குழந்தை என்றால் 

1000 + (50×10) = 1500 மில்லி / நாளைக்கு


இருபது கிலோவுக்கு மேல் இருந்தால் 

முதல் இருபது கிலோவுக்கு 1500 ml + மீதமிருக்கும் கிலோவுக்கு 20ml/kg/day 


குழந்தை 25 கிலோ இருந்தால் 

1500 + (5 × 20) = 1750 மில்லி/ ஒரு நாளைக்கு தேவைப்படும் 


30 கிலோ அதற்கு மேல் இருப்பவர்களுக்கு தோராயமாக அவர்களது உடல் எடையை × 0.033 யால் பெருக்கினால் அவர்கள் கட்டாயமாக பருக வேண்டிய நீரின் அளவு தெரியும். 


மேற்கூறியவை எல்லாம் தோராயமாக கட்டாயம் தேவைப்படும் அளவுகள் .

இதற்கு மிகுதியாகவும் தேவைப்படும் நேரங்களில் கால சூழ்நிலையைப் பொருத்துப் பருகலாம். தவறில்லை. 


சிறுநீரகக் கோளாறு

கல்லீரல் கோளாறு 

இதய கோளாறு இருப்பவர்கள் கட்டாயம் எவ்வளவு நீர் பருக வேண்டும் என்பதை மருத்துவர் முடிவு செய்தவாறு பின்பற்ற வேண்டும். 


எக்காரணம் கொண்டும் ஒரே நேரத்தில் பல லிட்டர் நீரை போட்டிக்காகவோ ஜாலிக்காகவோ குடித்து வீணாக உயிருடன் விளையாடாதீர்கள். 


அளவுக்கு மிஞ்சினால் நீரும் நஞ்சே


ப்ரூஸ்லி இறக்கும் போது அவருக்கு வயது - 32 மட்டுமே 


அனைவரும் இந்த விசயத்தில் அலர்ட்டாக இருப்போம்  


நன்றி 


ஆதாரங்கள் 

1.https://academic.oup.com/ckj/article/15/6/1196/6549578

2.https://www.sciencedirect.com/science/article/pii/S2376060521000286

3.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1770067/

4.https://www.ncbi.nlm.nih.gov/books/NBK537231/

5.https://www.tribuneindia.com/news/world/bruce-lee-may-have-died-from-drinking-too-much-water-claims-research-453547


டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


Whirlpool 7 kg Magic Clean 5 Star Fully Automatic Top Load Washing Machine Grey (MAGIC CLEAN 7.0 GENX GREY 5YMW)


https://amzn.to/3LPVx3A




Dearness Allowance உயர்வு தொடர்பான அரசாணைகள் விவரம் 7/2016 முதல் 7/2025 வரை


அகவிலைப்படி உயர்வுகள் சார்ந்த அரசாணைகள் விவரம் - ஜூலை 2016 (7/2016) முதல் ஜூலை 2025 (7/2025) வரை


Government Orders regarding Dearness Allowance Hike from July 2016 to July 2025


G.O.s regarding D.A. Hike from 7/2016 to 7/2025

-----------------------------------

G.O. Ms. No. 303

Dated : 11-10-2017

7/2016ல்                 2%


  1/2017ல்               4%


7/2017ல்                 5%


G.O. Ms. No. 123

Dated : 11-4-2018.  

1/2018ல்                 7%


G.O. Ms. No. 313

Dated : 18-9-2018

7/2018ல்                 9%


G.O. Ms. No. 151

Dated : 20-5-2019

1/2019. ல்             12%


G.O. Ms. No. 323

Dated : 17-10-2019

7/2019 ல்              17%


1-1-2020 TO

Dated : 31-12-2021

வரை                    17%


G.O. Ms. No. 3

Dated : 1-1-2022

1/2022ல்               31%


G.O. Ms. No. 254

Dated : 18-8-2022

7/2022ல்               34%


G.O. Ms. No. 7

Dated : 6-1-2023

1/2023ல்               38%


G.O. Ms. No. 142

Dated : 17-5-2022

4/2023ல்              42%


G.O. Ms. No. 310

Dated : 27-10-2023ல்     

7/2023ல்               46%


G.O. Ms. No. 132

Dated : 12-3-2024

1/2024 ல்              50%


G.O. Ms. No. 317

Dated : 18-10-2024

7/2024 ல்              53%


G.O. Ms. No. 95

Dated : 28-4-2025

1/2025ல்               55%


G.O. Ms. No. 247

Dated : 13-11-2025

7/2025 முதல்      58%



அனைத்து அரசு ஆணைகளும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை வலைதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் 



VENUS ZYLO 3 Litre Instant water heater with 3kW copper element | Instant Geyser for Bathroom and Kitchen | Fast Heating | Compact & Durable | Auto Shut-Off | 5 Year Inner tank warranty.


https://amzn.to/4pu6Pca




TETOJAC மாநில பொதுக்குழு கூட்டம் குறித்த தகவல்

 

 டிட்டோஜாக் மாநில பொதுக்குழு கூட்டம் குறித்த தகவல் 


 TETOJAC மாநில பொதுக்குழு கூட்டம் இன்று (25.11.2025) நடைபெறுகிறது



Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8





THIRAN - நவம்பர் மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள்



திறன் - நவம்பர் மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள்:


THIRAN - November assessment information


- நவம்பர் மாத திறன் மதிப்பீடு 25.11.2025 முதல் 27.11.2025 வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு நடைபெறவுள்ளது. 


- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 24.11.2025 முதல் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 


- அனைத்து திறன் மாணவர்களும் இந்த மாதாந்திர மதிப்பீட்டில் பங்குபெற வேண்டும். 


- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 11 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 


- 25.11.2025 முதல் 03.12.2025 வரை EMIS -இல் மதிப்பெண் உள்ளீடு (Mark Entry) செய்ய இயலும்.


IBELL FL8375S Rechargeable Torch, Powerbank Function, Aircraft Aluminum Body, Telescopic Zoom, Water Resistant Flashlight with Multiple Light Modes (Black) LED


https://amzn.to/4nRblQN





பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-11-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 25.11.2025

கிழமை:- செவ்வாய்கிழமை


 *திருக்குறள்:*


பால்:- அறத்துப்பால்

இயல்:- இல்லறவியல்

அதிகாரம்:- புகழ்



*குறள் : 236*



தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் 

தோன்றலின் தோன்றாமை நன்று 


*விளக்க உரை:*


ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.


*பழமொழி :*


Pain is the teacher of courage. 


வலி தான் தைரியத்தின் ஆசிரியன்.


*இரண்டொழுக்க பண்புகள் :*


1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.


2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.


*பொன்மொழி :*


உங்கள் எதிரிகளிடமும் நீங்கள் அன்பு காட்டுங்கள் .ஏனென்றால், அவர்கள் உங்களை தவறுகளை சுட்டிக்காட்டி நீங்கள் திருந்துவதற்கு வழி ஏற்படுத்துகிறார்கள். பெஞ்சமின் பிராங்கிளின்


*பொது அறிவு :*


01.இந்தியாவின் பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் பெண்மணி யார்?



இந்திரா காந்தி 1971

Indiragandhi-1971


02. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதன் முதலில் வழங்கிய நாடு எது?


நியுசிலாந்து 1893

New zealand - 1893


*English words :*


audacious -  bold and daring


tranquil-peaceful and calm


*தமிழ் இலக்கணம்:*


 ‘ர’& 'ற' கரம்

1.மெய்யெழுத்தை தொடர்ந்து இடையின ர வராது

எ.கா. 

நின்ரது 

முன்னின்ரு

தவறாக எழுதப் பட்டுள்ளது 

2. ஆனால் வல்லின ற‌ மெய்யெழுத்துக்கு பின்னர் வரும்

எ.கா –நின்றது

முன்னின்று


*அறிவியல் களஞ்சியம் :*


 அறிவியல் வரலாற்றில் இதுவரை மரபணு மாற்ற CRISPR-Cas9 தொழில்நுட்பம், பல விலங்குகள், தாவரங்கள் ஏன் பாக்டீரியா மீது கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ஜெர்மனியில் உள்ள பெய்ரூட் பல்கலை, சிலந்திகள் மீது பயன்படுத்தி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட சிலந்தி ஒளிர்கின்ற சிவப்பு நிற வலையைப் பின்னுகிறது. சிலந்திகளின் வலை நுால் பல துறைகளில் பயன்படுகிறது.


*நவம்பர் 25*


*பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்*



பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]


அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.


*பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்*


பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.


உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.


ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


*நீதிக்கதை*


*கழுதையின் தன்னம்பிக்கை*


ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை. 


காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான். 


அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது. 


ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது. 


இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது. 


கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது. 


விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. 



வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும். 



நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும். இத்தோடு நம் கதை முடிந்தது என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம். 


*இன்றைய செய்திகள்*


25.11.2025


⭐தமிழகத்தில் செயல்படும் அனைத்து உணவகங்களிலும் (சிறிய தேநீர் கடைகளிலிருந்து பெரிய ரெஸ்டாரண்ட்கள் வரை) சமையல் பணிகளிலும், உணவு பரிமாறும் பணிகளிலும் ஈடுபடும் ஊழியர்கள் கட்டாயமாக குடல் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.


⭐ 'ஆபரேஷன் சைஹாக் நடவடிக்கை மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு , பொது மக்களிடம் ரூ.254 கோடிக்கு மேல் மோசடி செய்த 42 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.


⭐பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான கராச்சியில் மின்வெட்டு காரணமாக பம்பிங் ஸ்டேஷன்கள் செயல்படாததால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀மகளிர் உலக கோப்பை கபடி: இந்திய அணி சாம்பியன்

இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின.

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா, சீன தைபே அணியை வீழ்த்தியது.


*Today's Headlines*


⭐ Tamil Nadu Food Safety Department has ordered that the employees involved in cooking and serving food in all the restaurants operating in Tamil Nadu (from small tea shops to big restaurants) must get the enteric flu vaccine compulsorily.


⭐ By 'Operation Cyhawk', 42 people who have been involved in cyber crimes and extorted more than Rs 254 crore from the public were arrested by Delhi Police for fraud.


Karachi, one of Pakistan's major cities, has experienced severe water shortages due to power cuts, and the pumping stations are not working.


*🏀 Sports news*


🏀Women's World Cup Kabaddi: Team India is the champion

India and Chinese Taipei teams clashed in the final.

India beat Chinese Taipei in a thrilling match.



Helmet & Multipurpose Cable Lock


https://amzn.to/4oMjrvz




SIR - தமிழ்நாட்டில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை - தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் பதில்

 

SIR - தமிழ்நாட்டில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை - தேர்தல் அலுவலர்  அர்ச்சனா பட்நாயக் பதில்


எந்த படிவமும் நிராகரிக்கப்படாது - அர்ச்சனா பட்நாயக் 


கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது.


SIR ஆன்லைன் சர்வர் சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வாங்குவதாக குற்றச்சாட்டு வைப்பது தவறானது.


மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் 50% திரும்பப் பெறப்பட்டுள்ளன


படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் இங்கு வாக்களிக்க சுமார் 869 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் அதிகளவு பீகார் மாநில வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாக வைக்கப்படும் புகாருக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பதில்.


“வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவோருக்கு உரிய காரணம் தெரிவிக்கப்படும்”


தலைமைத் தேர்தல் அலுவலர் விளக்கம்


விசாரணை இல்லாமல் எந்த வாக்காளர் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. நீக்கப்பட்டால் உரிய காரணம் தெரிவிக்கப்படும்


டிசம்பர் 4ஆம் தேதிக்குள் SIR படிவங்களை திரும்ப அளிக்க வேண்டும். காலக்கெடு நீட்டிக்கப்படாது” - அர்ச்சனா பட்நாயக், தலைமைத் தேர்தல் அலுவலர்



Philips Steam Iron DST0820/20 (World no. 1 Ironing Brand) Powerful 15 gm/min Steam Output with Spray, Multilayer Coated Non stick Soleplate with 1250 W quick Heat up






Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/49Bxdfw



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-11-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 24.11.2025

கிழமை:- திங்கள்கிழமை


 *திருக்குறள்:*


பால்:- பொருட்பால்

இயல்:- அரசியல்

அதிகாரம்:- சுற்றந்தழால்


*குறள் 524:*


சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் 

பெற்றத்தால் பெற்ற பயன் 


*விளக்க உரை:*


சுற்றத்தாரால்‌ சுற்றப்படும்படியாக அவர்களைத்‌ தழுவி அன்பாக வாழ்தல்‌ ஒருவன்‌ செல்வத்தைப்‌ பெற்றதனால்‌ பெற்ற பயனாகும்‌.


*பழமொழி :*


After every fall,rise taller. 


விழுவதுவதெல்லாம் உயரமாக எழுவதற்கே.


*இரண்டொழுக்க பண்புகள் :*


1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.


2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.


*பொன்மொழி :*


நல்லதை செய்தால் நல்லவை நடக்கும் .தீயவை செய்தால் தீமையே நடக்கும் அனைவரிடமும் அன்பு செலுத்தினால் உயர்நிலை கிடைக்கும். - புத்தர்


*பொது அறிவு :*


01.மூங்கில் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?


அஸ்ஸாம் மற்றும் 


மத்தியப் பிரதேசம்


Assam  and  Madhyapradesh


02.தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள்.?


ஜனவரி 25 -January 25


*English words :*


jest-joke


perceptive - having a keen understanding


*தமிழ் இலக்கணம்:* 


 இன்று ர, ற வேறுபாடு குறித்து அறிவோம் 

1. தூய தமிழ் மொழியில் ர,ற இரண்டும் முதல் எழுத்தாக வராது. 

2. அரங்கன் என்று தான் எழுத வேண்டும் ஆனால் வாசிப்பது ரங்கன் என்று வாசிக்க வேண்டும் 

3. ற் இறுதி எழுத்தாக வார்த்தைகளில் வராது.

4. ற் அருகில் மெய்யெழுத்துகள் வராது 

எ.கா. கொற்கை, சிற்பி


*அறிவியல் களஞ்சியம் :*


 மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.


*நவம்பர் 24*


*அருந்ததி ராய்  அவர்களின் பிறந்தநாள்*



சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.


இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (en:Narmada Bachao Andolan) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். 

1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்.

மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.

2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றிருக்கிறார்.


*நீதிக்கதை*


 *ஒரு மூதாட்டியின் கதை*




வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி உணவு விடுதி நடத்திவந்தாள். காலையில் அவள் விடுதியில் கிடைக்கும் அப்பம் மிகமிகச் சுவையானதாக இருக்கும். அந்த விடுதிக்கு வரும் அனைவரும் அதனை விரும்பிக் கேட்டுவாங்கி உண்பர். அப்பத்துக்குச் சர்க்கரையும் பாலும் துணைப் பொருள்களாக அளிப்பாள். 


ஒரு சமயம் சர்க்கரை விலை சற்றுக் கூடியது. அப்பத்திற்குப் பெறுகிற விலைக்குச் சர்க்கரை கொடுப்பது அம்மூதாட்டிக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. அதிகவிலை கொடுத்துச் சர்க்கரை வாங்கினாலும், அப்பத்தின் விலையைக் கூட்ட அவள் விரும்பவில்லை. எனவே, அப்பத்திற்குச் சர்க்கரை இல்லை எனக் கூற விரும்பினாள். 


கடைக்கு வழக்கமாக வந்து சாப்பிடும் ஒருவரை அழைத்து. அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என அறிவிப்பு அட்டை ஒன்றை எழுதிவரச் சொன்னாள். அவர் அதன் அடிப்படையில் இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள். 


காலையில் சாப்பிடவந்த ஒருவர் ஓர் அப்பம் வாங்கிச் சாப்பிட்டார். சர்க்கரை இல்லாமலே சாப்பிட்டார். இரண்டாவதாக ஒர் அப்பம் கேட்டார். அவள் இரண்டாவது அப்பம் கொடுத்தாள். அவர் அம்மா! அப்பத்துக்கு சர்க்கரைக் கொடு எனக் கேட்டார். 


அம்மூதாட்டி அறிவிப்புப் பலகையைப் பார்த்தீர்களா?” என்று கேட்டாள். அப்பம் வாங்கியவர் பார்த்தேன்! படித்தேன்! அதன் பிறகுதான் சர்க்கரை கேட்டேன் என்று கூறினார். 


அதைப் படித்துவிட்டுமா கேட்கிறீர்? என்றாள் அம்மூதாட்டி. 


ஆமாம்... அறிவிப்பு அட்டையில் என்ன எழுதி இருக்கிறது? இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என்றுதானே எழுதியிருக்கிறது. இரண்டாவது அப்பத்துக்குத்தானே நான் சர்க்கரை கேட்கிறேன் என்றார். 


ஐயா! அப்படியா பொருள் கொள்கிறீர்கள்? சரி! உங்களுக்கு இன்று சர்க்கரை கொடுத்து விடுகிறேன். நாளை அறிவிப்பு அட்டையில் எழுதியிருப்பதை மாற்றி விடுகிறேன் என்று கூறினாள். 


அறிவிப்பு அட்டை எழுதியவரை அழைத்தாள். ஐயா, அறிவிப்பு அட்டையில் அப்பத்துக்கு இன்றுமுதல் சர்க்கரை இல்லை என எழுதிவிடுங்கள் என்றாள். அந்த நாள் முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இன்றி விற்கத் தொடங்கினாள். காலைச் சிற்றுண்டிச் சிக்கல் இவ்வாறு தீர்ந்தது. 


பகலுணவு வழங்குவதில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டது. 


அன்று மதியம் வழிப்போக்கன் ஒருவன் அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தான். மூதாட்டியிடம் ஐந்து பணம் கொடுத்துவிட்டு அம்மா, எனக்கு அதிகமான பசியாக இருக்கிறது. எலுமிச்சங்காய் அளவு சோறாவது எனக்குச் சீக்கிரமாகப் போடு என்றான். 


மூதாட்டி நீ கேட்டபடியே எலுமிச்சங்காய் அளவு சோறு போடுகிறேன் என்று கூறினாள். 


ஒரு வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து. எலுமிச்சங்காய் அளவு சாதம் மட்டும் உருட்டி அவன் இலையில் போட்டாள். 


அதைப் பார்த்ததும் வழிப்போக்கன், இது எப்படி என் வயிற்றுக்குப் போதும்? வயிற்றுப் பசிக்குத்தானே சோறு சாப்பிடுகிறோம்? என்றான். 


நீ கேட்டபடி எலுமிச்சங்காய் அளவு சோறு போட்டுவிட்டேன். விரும்பினால் சாப்பிடு! இல்லையானால் எழுந்து போ! என்று சொன்னாள். 


அப்படியா? எனக்கு இது வேண்டாம். நான் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடு, நான் போகிறேன் என்றான் வழிப்போக்கன். 


உணவு விடுதிக்கு உரியவள் ஐந்து பணத்தைத் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட்டாள். 


வழிப்போக்கன் மரியாதை ராமனைத் தேடிச் சென்றான். நீதிபதியான மரியாதை ராமனிடம் நடந்ததைக் கூறி முறையிட்டான். நீதிபதி உணவு விடுதி நடத்தி வந்த மூதாட்டிக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். 


விடுதிக்குச் சொந்தக்காரியான அம்மூதாட்டி நீதிபதியின் முன் நின்று, ஐயா! வழிப்போக்கன் கேட்டபடி, அவன் கொடுத்த பணத்திற்குச் சோறு போட்டுவிட்டேன் என்று கூறினாள். அத்தோடு தான் இலையில் உருட்டிப் போட்ட எலுமிச்சங்காய் அளவு சோற்று உருண்டையையும் சாட்சியமாக எடுத்துக் காட்டினாள். 


அதை எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, நீதிபதி மரியாதை ராமன் புன்னகை தவழ, அம்மா! நீ என்ன ஒப்புக்கொண்டாய்? எலுமிச்சங்காய் அளவு சோறு போடுவதாகத்தானே ஒப்புக்கொண்டாய்? நீ போட்ட இந்த சோற்றுப் பருக்கை ஒன்றே ஒன்றாவது இருக்கிறதா பார்! ஆகவே, வழிப்போக்கன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு! அல்லது எலுமிச்சங்காய் அளவு பருமன் உள்ள ஒரு சோற்றுப் பருக்கையையாவது போடு என்று தீர்ப்பு வழங்கினார். 


சொல்லின் நுணுக்கத்தை உணர்ந்த உணவு விடுதிக்கு உரிமைக்காரியான மூதாட்டி அந்த அளவு பருமனாகும் சோற்றுக்கு உரிய அரிசிக்கு நான் எங்கே போவேன்? என்று கூறி, வழிப்போக்கன் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நீதிக்கு அடிபணிந்து நடந்தாள்!


*இன்றைய செய்திகள்*


24.11.2025


⭐யமுனை நதி மாசுபாடு - டெல்லி அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது - டெல்லி உயர்நீதிமன்றம் அதிருப்தி


⭐உத்தரகாண்டில் அரசுப் பள்ளி அருகே 20 கிலோ எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் பறிமுதல்பள்ளி பைகள்


⭐கனமழை எச்சரிக்கை- 4 மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀 பார்வையற்றோருக்கான முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்தியா, நேபாளத்தை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாத்தியமாக்கியது.


🏀  ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.


*Today's Headlines*


⭐ Actions taken by Delhi Government to reduce pollution in  Yamuna River is shocking –  Delhi High Court was  dissatisfied.


⭐ 161 gelatin stick explosives weighing 20 kg seized near a government school in Uttarakhand.


⭐Heavy rain warning government declared an important announcement  to the 4 district administrations. very heavy rain is likely to occur in Thoothukudi, Tenkasi, Nellai and Kumari districts.


 *SPORTS NEWS* 


🏀 India has won the first ever Women's T20 World Cup for the visually impaired. This historic victory was made  by India defeating Nepal in the final.


🏀 The Junior World Cup Hockey series to be held in Chennai, from the 28th to the 10th of December.


Dettol Liquid Handwash Refill - Original Hand Wash- 1350ml | Germ Defence Formula


https://amzn.to/43MIJkD




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2025

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2025 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...