கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Relaxations லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Relaxations லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Census 2027 பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு?

 


Census 2027 பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்க வேண்டும்? - உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை


மக்கள் தொகை கணக்கெடுப்புப் Census 2027 பணியில் யாரையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

1. கர்ப்பிணிப் பெண்கள் 

2. கடுமையான நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 

3. கடுமையான மாற்றுத்திறனாளிகள் 

4. பத்தாம் வகுப்பிற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்கள் 

5. குறிப்பிட்ட சமூக / மத சமூகங்கள் மீது சார்புடையவர்கள்.

மத்திய அரசின் சுற்றறிக்கை Circular 19 Census 2027

☝️☝️☝️

பத்தி 7, பக்கம் 4...


 While choosing the Census personnel, adequate number of female enumerators and supervisors may be selected. However, pregnant ladies,persons with severe chronic ailments, persons with severe disabilities, persons below matriculate, persons biased towards specific social/ religious communities, etc. may be avoided to the extent possible as appointing them for field-work would be difficult/counter-productive.


மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​போதுமான எண்ணிக்கையில் பெண் கணக்கெடுப்பாளர்களும் மேற்பார்வையாளர்களும் தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள், கடுமையான நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான மாற்றுத்திறனாளிகள், பத்தாம் வகுப்புக்குக் கீழ் தேர்ச்சி பெற்றவர்கள், குறிப்பிட்ட சமூக/மத சமூகங்கள் மீது சார்புடையவர்கள் போன்றோரை களப்பணிக்கு நியமிப்பது கடினமானதாகவும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்பதால், அவர்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



No.9/25/2026-CD(CEN)

Ministry of Home Affairs, Government of India

OFFICE OF THE REGISTRAR GENERAL, INDIA

Janganana Bhawan, Tower-A, Census Division,

2/A, Man Singh Road, New Delhi-110011.

Dated: April 20th, 2026

CENSUS OF INDIA 2027- CIRCULAR No.19


Subject: Preparation of District Census Plan.

As you are aware Census 2027 is the 16th Census in the series from 1872 and 8th Census since independence. The intention of conducting Census during the year 2027 has already been notified in the Gazette of India.

2. Population Census is the largest administrative and statistical exercise in the country.Like the previous Censuses, the Census 2027 is being conducted in two phases, namely Phase I-House Listing and Housing Census popularly known as HLO during six months from April to September, 2026 in a period of 30 days as per the convenience of the State Governments and UT administrations along with option of Self-enumeration of 15 days period just before the 30 days period of house-to-house houselisting work. This phase besides providing an unambiguous frame for the 2nd phase i.e. Population Enumeration,would also provide very useful data on housing conditions, amenities available to the households and assets possessed by them. Questions of the Phase I of the Census have been notified in January, 2026. Phase II-Population Enumeration (PE) will be conducted during February 2027 (UT of Ladakh and snow-bound non-synchronous areas of UT of Jammu and Kashmir and States of Uttarakhand and Himachal Pradesh, Phase II will be conducted during September 2026). In phase II, information on demographic, socio-economic, education, migration, fertility ete, will be collected from each individual.

3. To facilitate improvement in quality and faster release of Census data, a number of initiatives have been adopted for Census 2027 as mentioned below:

(a) Digital approach for data collection: The data collection in the Census 2027 is planned to be done by digital means. An enumerator has to collect and submit data directly through Mobile App, using her/ his smart phone and syne the same directly on census web server. In addition to this, an online provision for self-enumeration through Self Enumeration portal (SE portal) has been made for the households, who would like to fill the census schedule on their own. For this one has to login on the SE portal with his mobile no. and OTP for filling the requisite information on Census schedule.

(b) The Census Management & Monitoring System (CMMS) portal is being used for management and monitoring of various Census activities like allocation of work to Census functionaries including Enumerators and Supervisors, management of training for Census oficials, progress of work in the field by each enumerator, autogeneration of Census Records/Abstracts, etc.;

(c)The creation and demarcation of House Listing Blocks (HLBs) and formation of Supervisory Circles (SCs) will be carried out through HLB Creators (HLBC) web mapping applications.

(d) A Code Directory for all descriptive type questions will remain available in the mobile app.;



தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Chief Minister Stalin announces further relaxations of corona restrictions in Tamil Nadu) செய்தி வெளியீடு எண்: 310, நாள்: 02-03-2022...



>>> தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Chief Minister Stalin announces further relaxations of corona restrictions in Tamil Nadu) செய்தி வெளியீடு எண்: 310, நாள்: 02-03-2022...


"திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்" - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி (LKG, UKG) மற்றும் மழலையர் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு(Curfew restrictions in Tamil Nadu extended till 02-03-2022 - Permission to open Nursery and Kindergartens from 16-02-2022 - Chief Minister Mr. M.K.Stalin's announcement) செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...



தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு.


வரும் 16ஆம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி.


மார்ச் 3 வரை மக்கள் அதிகம் கூடும் அரசியல் மற்றும் மதம், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும். 


திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி.


>>> தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் உத்தரவு(Chief Minister orders various relaxations in curfew)...



 ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் உத்தரவு(Chief Minister orders various relaxations in curfew)...






💒🛕🕋  வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு...

அனைத்து வழிபாட்டு தலங்களும், அனைத்து வார நாட்களிலும் திறக்கப்படும்...

🎒👩🏻‍🦲🧑🏻‍🦳👩🏻‍🦳 *மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி கள் முழுமையாக செயல்பட அனுமதி..

📢📢 *கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடற்கரைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் செல்ல அனுமதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

*1️⃣1️⃣ மணிவரை கடைகள் மற்றும் ஹோட்டல்கள் செயல்பட அனுமதி

💛❤️ *நவம்பர் 1 ஆம் தேதி முதல் திருமண நிகழ்ச்சியில் 1️⃣0️⃣0️⃣ பேர் வரை கலந்து கொள்ளலாம்!

❌❌ *அரசியல், கலாச்சார நிகழ்ச்சி களுக்கு தொடர்ந்து தடை






31.07.2021 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு குறித்த அரசாணை (G.O.Ms.No.466, Dated: 30-07-2021) - இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகள் 09.08.2021 வரை அமலில் இருக்கும்...



 31.07.2021 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு குறித்த அரசாணை (G.O.Ms.No.466, Dated: 30-07-2021) - இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகள் 09.08.2021 வரை அமலில் இருக்கும்...


>>> Click here to Download G.O.Ms.No.466, Dated: 30-07-2021...


தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் (ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை) நீட்டிப்பு...



செய்தி வெளியீடு எண்: 529, நாள்: 30-07-2021...


தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்.


தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு.


தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், 9ஆம் தேதி வரை நீட்டிப்பு.


விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை. 


அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.


அதிக அளவில் கூட்டம் சேர்ந்தால், குறிப்பிட்ட பகுதியை மூட நடவடிக்கை எடுக்கலாம் - அரசு உத்தரவு.


>>> செய்தி வெளியீடு எண்: 529, நாள்: 30-07-2021...


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு (Lockdown extended with Relaxations) - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (செய்தி வெளியீடு எண்: 457, நாள்: 16-07-2021)...

 


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


 திரையங்குகள், மதுக்கூடங்கள் திறக்கத் தடை தொடரும். 


பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை...


புதுச்சேரி தவிர்த்து இதர மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குத் தொடர்ந்து தடை.


மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களைத் தவிர்த்து இதர சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை.


திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் சமூக கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை.


பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு.


திருமணங்களில் 50 நபர்களும், இறுதிச் சடங்குகளில் 20 நபர்களும் மட்டுமே அனுமதி.


பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, பாடப்புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப்பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.


தட்டச்சு - சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் செயல்பட அனுமதி.


>>> செய்தி வெளியீடு எண்: 457, நாள்: 16-07-2021...


”தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-07-2021வரை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...









 ”தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-07-2021வரை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

செய்தி வெளியீடு எண்: 421, நாள்: 10-07-2021ன் படி 

 பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடர்கிறது.


>>> செய்தி வெளியீடு எண்: 421, நாள்: 10-07-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாட்டில், 12-07-2021வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 * தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு.


*அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டங்களுக்குள்ளே, மாவட்டங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்தில் 50% பயணிகளுக்கு அனுமதி.


*தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து


*அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.


*பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு.



*டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி


*அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி


*மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது


*அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க  தமிழக அரசு அனுமதி 


*உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள்  அமர்ந்து உண்ண அனுமதி




*பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி


*அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி


*கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை 


*நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும்




*அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி; திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.


*வணிக நிறுவனங்கள் இரவு 8மணிவரை செயல்படஅனுமதி.


 * தேநீர்கடைகள் உணவகங்களில் 50%பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி


>>> செய்தி வெளியீடு எண்: 370, நாள்: 02-07-2021...


வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் 28-06-2021 முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்:

வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் 28-06-2021 முதல் ஜவுளி, நகை கடைகள் திறக்க அனுமதி. 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் இரவு 7மணிவரை இயங்க அனுமதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...





தொழிற்சாலைகள் கொரோனா நிலையான கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றி மருத்துவத்துறை சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பின் கீழ் செயல்பட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...



Public health and preventive medicine - COVID 19 PANDEMIC - Ease of lockdown - Monitoring industries and Services establishments by Local Authorities - Instructions issued - Regarding


>>> கோவிட் 19 தளர்வுகள் - உள்ளூர் சுகாதார அலுவலர்களால் தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள் கண்காணிக்கப்படுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி - வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு...

 


தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி  உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது  போக்குவரத்துக்கு அனுமதி - வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு...


செய்தி வெளியீடு எண்: 325, நாள்: 25-06-2021..


 தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.


பள்ளி,  கல்லூரிகளில் நிர்வாகப் பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம்.


23 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி.


4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி.


அனைத்து மாவட்ட கடற்கடைகளும் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறப்பு.


>>> செய்தி வெளியீடு எண்: 325, நாள்: 25-06-2021...


11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதியில்லை - அரசாணை வெளியீடு...



28-06-2021வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதியில்லை - அரசாணை (G.O.Ms.No.409, Dated: 20-06-2021) வெளியீடு...


See Serial Number: 48

>>> Click here to Download G.O.Ms.No.409, Dated: 20-06-2021...



28-06-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிந்துள்ளது தமிழ்நாடு அரசு...






 28-06-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிந்துள்ளது தமிழ்நாடு அரசு...


🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷


தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது!


மாவட்டங்களை 3️⃣ வகையாக பிரித்து கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி உள்ளது


*வகை-1 ல் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் அடங்கும்-இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும்-புதிய தளர்வுகள் இல்லை!


2️⃣3️⃣ மாவட்டங்களுக்கான தளர்வுகள் விவரங்கள்!


1️⃣ *மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி!


2️⃣  *11 மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ள செயல்பாடுகளுக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி! புதிய தளர்வுகள் இல்லை!


3️⃣ *மாவட்டங்களுக்குள் குளிர் சாதன வசதிகள் இல்லாத 50% பேருந்துகள் இயங்க அனுமதி!


சென்னையில் மெட்ரோ இரயில் இயங்க அனுமதி.


4️⃣ *33% பணியாளர்கள் உடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி!


5️⃣ *காலணி, கண் கண்ணாடி கடைகள் செயல்பட அனுமதி!



6️⃣ *வாடகை டாக்ஸியில் 3 பேரும் ஆட்டோக்கள் 2 பேருடன் செல்ல அனுமதி!



7️⃣ *சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசின் அத்தியாவசிய அலுவலகங்கள்  100% பணியாளர்கள் உடன் செயல்பட வேண்டும்!


*பிற அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்கள் உடன் செயல்பட அனுமதி!


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 100% அரசு அலுவலகங்கள் இயங்கும்! தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்கள் உடன் 3 மாவட்டங்களில் மட்டுமே அனுமதி


8️⃣ *உணவகங்கள், பேக்கரி, தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி!


9️⃣ *வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் திறக்க அனுமதி!


🔟 *செல்போன் கடைகள், TV, MIXIE, GRINDER பழுது பார்க்கும் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி!


1️⃣1️⃣ *திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் களிடம் இருந்து E- registration மூலம் அனுமதி பெற வேண்டும்...


>>> தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு - நாள்: 20-06-2021...




பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...









 பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...


#தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி


தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்கலாம்


தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி


நாளை (14-06-2021) முதல் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தேநீர் கடைகள் செயல்படலாம்


தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை



#நாளை (14-06-2021) முதல் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி


#அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களுக்கு அனுமதி




#பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி.


#காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம்


இனிப்பு, கார வகைகளை பார்சலில் மட்டுமே விற்க அனுமதி...



>>> செய்தி வெளியீடு எண்: 269, நாள்: 13-06-2021...


தமிழ்நாட்டில் 14-06-2021 வரை மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் குறித்த முழு விவரம் (தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:229, நாள்: 05-06-2021)...










 கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில்


* மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி.


• தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் . இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 


* காய்கறி , பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . . மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு , ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் .  இறைச்சிக் கூடங்கள் ( Slaughter House's  ) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் . அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 


• சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு , பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் .


 * தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.


 மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு , ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்


கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் . . தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 


* காய்கறி , பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 






* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு , ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் . - இறைச்சிக் கூடங்கள் ( Slaughter houses ) ) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் . 


* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் . 


* அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் • அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் , 


* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு , பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் . 


• தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் , வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் ( Housekeeping ) இ - பதிவுடன் அனுமதிக்கப்படும் . . மின் பணியாளர் ( Electricians ) பிளம்பர்கள் ( Plumbers ) ( கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் ( Motor Technicians ) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ - பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் . 


* மின் பொருட்கள் ( electrical goods ) , பல்புகள் , கேபிள்கள் , ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் - 7/10 கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 


* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் ( விற்பனை நிலையங்கள் அல்ல ) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 


* ஹார்டுவேர் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . . வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்டும் .


. கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் 


வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் ( விற்பனை நிலையங்கள் அல்ல ) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 


வாடகை வாகனங்கள் , டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும் . மேலும் , வாடகை டேக்ஸிகளில் , ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் , ஆட்டோக்களில் , ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் . பொது . நீலகிரி மாவட்டம் , கொடக்கானல் , ஏற்காடு . ஏலகிரி , குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ - பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் .


• கோயம்புத்தூர் . திருப்பூர் , சேலம் , கரூர் , ஈரோடு , நாமக்கல் , திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் , ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் , ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின் , ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும் , மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் , 10 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் . 


* தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி , பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் , பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் , இது தொடர்ந்து செயல்படுத்தப்படும் . 


• பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும் . இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் . கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த , பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் , பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் . 


 மேலும் , கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி , பொது இடங்களில் முகக் கவசம் அணிவது , சமூக இடைவெளியினை கடைபிடிப்பது , கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும் , நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் , பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.


என முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்...


>>> தமிழ்நாட்டில் 14-06-2021 வரை மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் குறித்த முழு விவரம் (தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:229, நாள்: 05-06-2021)...


தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் - முதல்வர் ஆலோசனை...



 தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மருத்துவ குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலர் இறையன்பு மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.




முதல்வர் ஆலோசனை:


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அரசு நோய் பரவலின் காரணத்தை கண்டறிந்து அதை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. மாவட்டங்கள் தோறும் அனைத்து பகுதிகளிலும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனைகளை செய்து தொற்றுள்ளவர்களை எளிதாக கண்டறிந்து சிகிச்சைக்கு உட்படுத்தி வருகிறார்கள். தமிழக முதல்வர் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தார். இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி 36 ஆயிரமாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரமாக குறைந்துள்ளது.




இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இறப்பு விகிதம் ஒரு நாளைக்கு 490 என்ற அளவில் உள்ளது.




இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினரை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினரும் பங்கேற்றனர். ஜூன் 7ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இன்னும் 4 நாட்களில் கொரோனா எந்த அளவுக்கு குறையும் என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்து இந்த கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் & துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு...

 


கோவிட்-19 பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் மற்றும் துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Every Problem is an Opportunity - Today’s Short Story

 ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வாய்ப்பு - இன்று ஒரு சிறுகதை  Every Problem is an Opportunity - Today’s Short Story தினம் ஒரு குட்டி கதை - "ஒ...