கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Application for Paramedical courses starts from 17.06.2025


TamilNadu Paramedical


துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் 17.06.2025 முதல் துவங்குகிறது


Counseling application for Paramedical courses starts from 17.06.2025


கடைசி நாள் 07.07.2025



* PARAMEDICAL - COURSE PROSPECTUS


2025-2026 


படிப்புகள் சார்ந்து தெரிந்து கொள்ள.. விண்ணப்பம் அளிக்க கீழே உள்ள PDF பார்க்கவும்

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻



தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASELINE ASSESSMENT

  தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASELINE ASSESSMENT


2025-2026 ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இருந்து புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்த 2 ஆம் வகுப்பு முதல் 5 ஆம்  வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASE LINE ASSESSMENT TNSED SCHOOLS APPல் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது


- EE MISSION



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-06-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 786:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

விளக்கம் :
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்."


பழமொழி :
No good building without a good foundation.

நல்ல அஸ்திவாரம் இன்றி நல்ல கட்டடம் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

நூறு அறிவாளிகளோடு மோதுவதை விட ஒரு மூடனோடு மோதுவது சிரமமானது.

ஈ.வே.ரா.பெரியார்


பொது அறிவு :

01. உலக எழுத்தறிவு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?            

                    செப்டம்பர் 8

                      September  8

02.அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?       

                    அரிஸ்டாட்டில்

                     Aristotle


English words & Tips :

dream     -      கனவு

many       -        பல


Grammar Tips

Tips to write plurals

* Uncountable objects won't have plural forms


Grass – grass
Sand – sand
Fish – fish


* Irregular Plurals:


         Some nouns have unique plural forms that don't follow the standard rules, like "child" becoming "children" or "man" becoming "men".


அறிவியல் களஞ்சியம் :

அறிவியல் வரலாற்றில் இதுவரை மரபணு மாற்ற CRISPR-Cas9 தொழில்நுட்பம், பல விலங்குகள், தாவரங்கள் ஏன் பாக்டீரியா மீது கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ஜெர்மனியில் உள்ள பெய்ரூட் பல்கலை, சிலந்திகள் மீது பயன்படுத்தி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட சிலந்தி ஒளிர்கின்ற சிவப்பு நிற வலையைப் பின்னுகிறது. சிலந்திகளின் வலை நுால் பல துறைகளில் பயன்படுகிறது.


ஜூன் 17

லியாண்டர் பயஸ் அவர்களின் பிறந்தநாள்

லியாண்டர் பயஸ் (பி. ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.



நீதிக்கதை

ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி, அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்? அது என் தூக்கத்தை கலைத்ததுடன் என்னையும் காயப்படுத்தி விட்டது” என்றார்.

அதற்கு அந்த பெண் அரசரை பார்த்து, “மன்னர் பெருமகனே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன்.

வரும் வழியில் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?.

அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை.

நான்  எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தை கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான் தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டி நின்றாள்.

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்து விட்டேன்”, என்று கூறியதோட அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.

சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, “அரசே, தங்களை கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள் இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது” என்றனர்.

காவலர்களை பார்த்து மன்னர், “காவலர்களே, அறிவற்ற மரம் கல்லால் அடித்தால் பழம் தருகிறது. அவ்வாறு இருக்க அறிவுள்ள நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?. மேலும் அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை.

பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தால் அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள்.

அது மட்டுமல்ல அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள்.

நான் என் குடிமக்களுக்காக அவளுக்கு பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

நீதி : செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும். எனவே, நாம் தெரியாமல் தவறு செய்திருந்தால் உரியவரிடம் மன்னிப்பு கேட்டு பழக வேண்டும்.


இன்றைய செய்திகள்

17.06.2025


⭐ SBI வங்கி கடன் வட்டி வீதம் 2.5% ஆக குறைப்பு -

⭐ இந்தியா தனது அரிய வகை கனிமங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தவுள்ளது.

⭐ தமிழகம் முழுவதும் கடந்த 25 நாட்களில்,  10 லட்சம் மோசடி எஸ்.எம்.எஸ் லிங்க் தடுத்து நிறுத்தம்: சைபர் க்ரைம் கூடுதல் எஜிபி சந்தீப் மிட்டல் தகவல்.

⭐ இஸ்ரேலில் விடியற்காலையில் டெல் அவிவ் மற்றும் ஹைஃபாவில் ஈரான் ஏவுகணைகளை ஏவி, வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் மின் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆறு நகர அணிகள் பங்கேற்கும் முதல் ரக்பி பிரீமியர் லீக் ஜூன் 15 அன்று மும்பையில் தொடங்கியது.

🏀 பொகாரோவின் ஆர்பிஎஃப்
பாராக்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஜார்க்கண்டின் 18 வயதுக்குட்பட்டோர் மாநில அளவிலான கபடி போட்டியில் 22 மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 639 சிறுவர், சிறுமிகள் பங்கேற்கின்றனர்.

🏀3 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் சென்னை டென்னிஸ் போட்டி அக்டோபர் மாதம்  நடைபெற உள்ளது.. சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அறிவிப்பு


Today's Headlines

✏️ SBI Bank loan interest rate reduced to 2.5%

✏️ India planned to stop exporting its rare earth minerals to other countries.

✏️ 10 lakh fraudulent SMS links intercepted across Tamil Nadu in last 25 days: Cyber Crime Additional AGP Sandeep Mittal.

✏️ In Israel, Iran fired missiles at Tel Aviv and Haifa in the early hours of the morning, hitting homes, hotels and electrical infrastructure.

*SPORTS NEWS*

🏀 The first Rugby Premier League, featuring six city teams, began in Mumbai on June 15.

🏀  A team of 639 Boys and Girls from 22 districts are participating in the Jharkhand Under-18 State Level Kabaddi Tournament being held at the RBF Barracks Ground, Bokaro.

🏀 International Tennis Federation announced, The Women's Chennai Tennis Tournament will be held in October after 3 years..


Covai women ICT_போதிமரம்


Benefits of SGSP Accounts - Treasury Director Letter



வங்கிகளில் பராமரிக்கப்படும் சேமிப்புக் கணக்கை மாநில அரசின் ஊதியத் தொகுப்பு SGSP சேமிப்புக் கணக்காக மாற்றம் செய்வதால் கிடைக்கும் சிறப்பு பலன்கள் தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரின் கடிதம்


Benefits of SGSP Accounts - Treasury Director Letter


Letter from the Director of Treasury and Accounts regarding the special benefits available on converting savings accounts maintained in banks into State Government Salary Package Savings Accounts



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மேற்குறிப்பிட்ட தகவலின் படி அரசு ஊழியர்களுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக ஏற்படக்கூடிய மரணம் மற்றும் ஊனத்திற்கு மட்டுமே விபத்து காப்பீடு ஒரு கோடி வழங்கப்படும். மற்றபடி கொலை, தற்கொலை, பால்வினை நோயால் மரணம், பிரசவகால மரணம், மது அருந்தி விபத்து மரணம், சாலை விதியை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டு மரணம் போன்ற காரணங்களுக்கு விபத்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு கிடையாது.

விஜயுடன் ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு - கடும் அதிர்ச்சியில் தி.மு.க. தலைமை - நாளிதழ் செய்தி

 


விஜயுடன் ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு - கடும் அதிர்ச்சியில் தி.மு.க. தலைமை - நாளிதழ் செய்தி 


தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள், த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து, தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டது, தி.மு.க., தலைமையை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஓட்டு வங்கி பறிபோய் விடுமோ என்ற கவலையில் அக்கட்சியினர் இருப்பதாக கூறப்படுகிறது.


அ.தி.மு.க., ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர்.


அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், அனைத்து போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தார். 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்' என, உறுதி அளித்தார்.


தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்பது உட்பட, பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.


இதையடுத்து, கடந்த சட்டசபை தேர்தலில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிக அளவில் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்தனர். தி.மு.க., வெற்றி பெற்றது.


ஆனால், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில், தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனத் தலைவர் மாயவன், மாநிலத் தலைவர் ஜெயகுமார் மற்றும் நிர்வாகிகள், கடந்த 13ம் தேதி த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்தனர்.



அப்போது, 'கடந்த நான்கு ஆண்டுகளில், முதல்வரை எட்டு முறை நேரில் சந்தித்தோம். ஒவ்வொரு முறையும் அதே கோரிக்கையை திரும்ப திரும்ப சொன்னோம். அவரும் கேட்டார். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


'போய் வாருங்கள் என்றார். மறுநாள், முதல்வருடன் எடுத்த புகைப்படங்கள் நாளிதழ்களில் வரும். ஆனால், கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தான், உங்களை சந்திக்கிறோம். உங்களின் ஆதரவை நாடுகிறோம்' என தெரிவித்தனர்.



ஒன்பது கோரிக்கை


அதை கேட்ட விஜய், 'உங்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு' என சொல்லி அனுப்பினார். இந்த தகவல் தான், தி.மு.க., தலைமையை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.


'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆதரவு எப்போதும் தங்களுக்கு தான்' என, தி.மு.க., நினைத்திருந்த நிலையில், ஆசிரியர் சங்கத்தினர், விஜயை சந்தித்து பேசியதால், தங்கள் ஓட்டு வங்கி பாதிக்கப்படுமோ என, அச்சம் அடைந்தனர்.


அதைத் தொடர்ந்து, மற்ற சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, 'விரைவில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, அரசு தரப்பில் உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கை:


விஜயை ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்திக்கவில்லை. ஜாக்டோ - ஜியோ தொடர்ந்து பேச்சு நடத்தியும், பல்வேறு கட்ட போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாலும், அரசிடம் இருந்து சரண்டர், மகப்பேறு விடுப்பு என, ஒன்பது கோரிக்கைகளை பெற்றுள்ளோம்.


பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை, செப்., 30க்குள் பெறப்படும் என, அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே, அரசிடம் இருந்து நல்ல முடிவுகள் வரும் என எதிர்பார்த்து, தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை ஒத்தி வைத்துள்ளோம்.


ஜாக்டோ - ஜியோ பேரமைப்பு, பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பு. இதில் பங்கேற்றுள்ள சங்கங்களின் மாநில அமைப்புகள், தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப தனித்துவமாக செயல்படுவது, அவர்களின் தனிப்பட்ட முடிவாகும். அதற்கும், ஜாக்டோ - ஜியோவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



நம்பிக்கை


அரசை சமாதானப்படுத்துவதற்காக, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'குறிப்பிட்ட சங்க நிர்வாகிகள் விஜயை சந்தித்தது, தி.மு.க.,வை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


'அதனால், அந்த சந்திப்புக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என, ஜாக்டோ - ஜியோ வெளியிட்ட அறிக்கையை, சாதகமாக பரப்பி வருகின்றனர். விஜய் உடனான சந்திப்பால், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது' என்றனர்.




SLAS Report card download செய்ய புதிய முறை

 



SLAS Assessment Report card download செய்ய புதிய முறை


தங்கள் பள்ளியின் EMIS  Website-ல் State Level Achievement Survey ASSESSMENT REPORT DOWNLOAD செய்வதற்கான வழிமுறை


Website: emis.tnschools.gov.in (School Login)


தங்களின் பள்ளி user ID and password மூலம் login செய்து கொள்ளவும்


அதன் பின்னர் Menu-வில்

⬇️

SLAS ASSESSMENT 

⬇️

SLAS 2024-25


Click செய்து தங்களின் பள்ளி SLAS Assessment Report download செய்து கொள்ளவும்..


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-06-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 782 :

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

விளக்கம் :
அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.


பழமொழி :
Politeness is the flower of humanity.

நற்பண்புகள் மனித இனத்தின் மலர்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

அடித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும் - ஜோசப் அடிசன்


பொது அறிவு :

01.இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை எது?

பெங்கால் கெஜட்
The Bengal Gazette


02.தமிழ்நாட்டில் புகழ்பெற்ற சித்தன்னவாசல் ஓவியங்கள் உள்ள மாவட்டம் எது?

புதுக்கோட்டை மாவட்டம்
Pudukottai District



English words & Tips :

need    -    தேவை

reality     -     நிஜம்


Grammar Tips

Usage of preposition
at, on and in

at.   comes before time
On.  comes before days
In. Comes  before  seasons,month and year


அறிவியல் களஞ்சியம் :

பூமியிலிருந்து மிக தொலைவில் உள்ள நட்சத்திரத்தின் புகைப்படம் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்டது. இந்த நட்சத்திரம் 1290 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.


ஜூன் 16

சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் நினைவுநாள்

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் (வங்காள மொழி:চিত্তরঞ্জন দাস) (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.

இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு.

அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.


பிரபுல்லா சந்திர ராய் அவர்களின் நினைவுநாள்

பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray - வங்கமொழியில் - প্রফুল্ল চন্দ্র রায়, ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர்.



நீதிக்கதை

காலத்தின் அருமையை அறிவோம்

விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களை பார்த்து, “அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது?” என்று கேட்டான்.

இந்த கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது” என்றான்.

இரண்டாவது அறிஞர், “மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது” என்று பதிலளித்தார்.

மூன்றாவது அறிஞர் எழுந்து, “அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்” என்று பதில் அளித்தார்.

நான்காவது அறிஞர், “அரசே, நம்ம பூமிக்கு வேண்டியஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது” என்றான்.

ஐந்தாவது அறிஞர், “வாழ்க்கையில் அனைத்தும் இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயணும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது” என்றார்.

இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து, “அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு வாய்ந்த பொருள். நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்?. அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது?. பொறுமையாக இருக்க ஏது அவகாசம். சூரியனை பயன்படுத்த ஏது காலம்?. அன்பு காட்டை ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான்”.

அரசர் அந்த ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்த கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளை கொடுத்து பாராட்டினார்.

அது மட்டுமல்ல அவரை தனது அமைச்சராக நியமித்து கௌரவப்படுத்தினார். மற்ற ஐந்து அறிஞர்களும் அரசரின் செயலை பாராட்டினார்.


இன்றைய செய்திகள்

16.06.2025

⭐இன்றைய செய்திகள்

⭐ " IITல் உயர்கல்வி பயில தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிக்கு வீடு மற்றும் லேப்டாப் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

⭐" போயிங் 787
விமானங்கள் ஆய்வு. ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கும் போயிங் 787 8/9 ஏக விமானங்களை ஆய்வு செய்ய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு.

⭐ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் "ஆபரேஷன் ரைசிங் லயன்"-ஐ தொடங்கியது.


🏀 விளையாட்டுச் செய்திகள்.

🏀ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பையில் இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்கம் வென்றனர்.

🏀வருடாந்திர கால்பந்து பிரபல-தொண்டு போட்டி  மான்செஸ்டர் யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபோர்டில் தொடங்குகிறது.


Today's Headlines

✏️ Tamilnadu Chief Minister M.K. Stalin provided a house and a laptop to a tribal student who qualified for higher education at IIT

✏️ Boeing 787 aircraft inspection. The Directorate General of Civil Aviation has ordered an inspection of the Boeing 787 8/9 aircraft owned by Air India.

✏️ Israel launched "Operation Rising Lion" against Iran.


SPORTS NEWS

🏀 Indian shooters won gold at ISSF World Cup.

🏀 The annual football celebrity-charity tournament kicks off at Manchester United's Old Trafford.


Covai women ICT_போதிமரம்


DEE - Holidays 2025-2026 Academic Year



தொடக்கக்கல்வித்துறை - 2025-2026ஆம் கல்வியாண்டு விடுமுறை நாட்கள் விவரம்


DEE - List of Holidays 2025-2026


Department of Elementary Education - Details of holidays for the academic year 2025-2026




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி - முக்கிய நாட்கள்


⭕ 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள் ;


 ⭕ அனைத்து சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை 


⭕ செப் -18 முதல் 26 ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. 


⭕ ஆயுத பூஜை , விஜயதசமி விடுமுறையைச் சேர்த்து செப் .27 முதல் அக் .5 ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை


 ⭕ டிச .15 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது டிச .24 முதல் ஜன .4.2026 வரை ( 12 நாட்கள் ) அரையாண்டு விடுமுறை 


⭕ 2026 ஜன .14 முதல் ஜனவரி 18 வரை ( 5 நாட்கள் ) பொங்கல் விடுமுறை 


⭕ ஏப்ரல் 10 ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது.


⭕ கோடை விடுமுறை 2026 ஏப்ரல் 25 - ம் தேதி தொடங்குகிறது 


⭕ 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை...💐


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் EMIS வலைதளத்தில் வெளியீடு

 

Transfer application form enable in EMIS individual login. Proper Director Proceedings Expected to be published soon


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் EMIS வலைதளத்தில் வெளியீடு - விரைவில் இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு



ஆசிரியர் சங்கத்தினர் த.வெ.க தலைவர் விஜய் உடன் சந்திப்பு - கோரிக்கைகள் பற்றி பேட்டி

 ஆசிரியர் சங்கத்தினர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடன் சந்திப்பு - கோரிக்கைகள் பற்றி பேட்டி


Teachers' Federation meets TVK leader Vijay - Interview about demands




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


TNPSC - 391 Assistant Engineer (Electrical) Posts - Notification No.9A/2025 , Date:11.06.2025

 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில்  BE எலக்ட்ரிக்கல் படித்த இளைஞர்களுக்கு TNPSC மூலம் AE Electrical பதவிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -  Combined Technical Services Examination ( Non - Interview Posts) Notification No.9A/2025 , Date:11.06.2025 - 391 Assistant Engineer (Electrical) Posts - Tamil Nadu Power Distribution Corporation Limited



TNPSC  - 391 Assistant Engineer (Electrical) Posts - Notification No.9A/2025 , Date:11.06.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்கள்


 வேலைவாய்ப்புகள் - திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி பேராசிரியர்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்


Job Notification - Applications can be made for the post of Temporary Assistant Professor at Manonmaniam Sundaranar University, Tirunelveli




Issuance of free bus pass to students - DSE Proceedings


மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Issuance of free bus pass to students - Proceedings of the Director of School Education


மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குதல் சார்ந்து - அனைத்து மாணவர்களின் விவரம் சரிபார்த்து, EMIS ல் புகைப்படம் உடனே பதிவேற்றம் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் பதவி உயர்வில் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து, அதற்கான சட்ட ரீதியான தீர்வுகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியீடு

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறை சமூக நீதி (Social Justice) அடிப்படையில் இருந்து வந்த நிலையில், தகுதி (Merit) அடிப்படையில் முதுநிலை (Seniority) நிர்ணயம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள மாற்றம், எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து, அதற்கான சட்ட ரீதியான தீர்வுகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து அரசாணை (நிலை) எண் : 27, நாள் : 11-06-2025 வெளியீடு 


G.O. (Ms) No : 27, Dated : 11-06-2025, While the Tamil Nadu government service selection system was based on social justice, the changes brought about by the Supreme Court's decision to determine seniority and grant promotions based on merit - A government order has been issued to form a committee headed by a retired judge to examine the future impact of the Supreme Court decision and report to the government on legal solutions.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


காவல்துறையில் பதவி உயர்வுக்கான பணிக்கால வரம்பு குறைப்பு

 காவல்துறையில் பதவி உயர்வுக்கான பணிக்கால வரம்பு குறைப்பு


Reduction in the tenure limit for promotion in the police





Schedule for Conducting and Completing Sports Competitions in 2025-2026 AY - DSE Proceedings

  

2025-2026ஆம் கல்வி ஆண்டில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடாந்திர செயல்திட்ட அட்டவணை - பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 10-06-2025


Proposed Annual Action Plan Schedule for Conducting and Completing Sports Competitions in the Academic Year 2025-2026 - Proceedings of the Director of School Education, Date: 10-06-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தனியார் பள்ளியில் முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளுக்கு தடை



 தனியார் பள்ளியில் முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளுக்கு தடை - பெற்றோர், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி


பாஜக நிர்வாகி நடத்தும் தனியார் பள்ளியில் முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளுக்கு தடை - பெற்றோர், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி


முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளின் வாசனை சைவ உணவு உண்ணும் மாணவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், அதனால் அசைவ உணவுகளை பள்ளிகளுக்கு கொண்டு வரக்கூடாது என பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்


பெற்றோருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் மின்னஞ்சல் தகவல்


அன்புள்ள பெற்றோரே,  

வணக்கம்! 

எங்கள் பள்ளிக் கொள்கையின்படி, பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் சேராத மாணவர்கள் அசைவ உணவை பள்ளிக்குக் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு இது ஒரு நினைவூட்டல். இதில் இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற அனைத்து வகையான அசைவ உணவுகளும் அடங்கும்.

 பள்ளி மதிய உணவைத் தேர்வு செய்யாத குழந்தைகள் அந்தந்த வகுப்பறைகளில் தங்கள் உணவை உட்கொள்கிறார்கள் என்பதையும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அசைவ உணவின் நீடித்த வாசனை ஒரே இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற மாணவர்களுக்கு அசௌகரியத்தையும் விரும்பத்தகாத அனுபவத்தையும் ஏற்படுத்தும். அனைத்து குழந்தைகளுக்கும் வசதியான மற்றும் இனிமையான சூழலைப் பராமரிக்க, பெற்றோர்கள் இந்தக் கொள்கையை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எந்தக் குழந்தையும் அசைவ உணவை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், அவர்கள் அதை உட்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக, அந்த நாளுக்கான பள்ளி மதிய உணவு அவர்களுக்கு வழங்கப்படும்.


Dear Parent,

Greetings from The Lords!

This is a gentle reminder that, as per our school policy,students are not allowed to bring non-vegetarian food to school if they have not opted for the school lunch program.This includes all forms of non-vegetarian food, such as meat,fish, and eggs.

We also wish to highlight that the children who have not opted for school lunch consume their food in the respective classrooms. In such cases, the lingering smell of non vegetarian food can cause discomfort and an unpleasant experience for other students sharing the same space. To maintain a comfortable and pleasant environment for all children, we request parents to strictly adhere to this policy.If any child is found carrying non-vegetarian food, they will not be allowed to consume it. Instead, they will be provided with the school lunch for that day.


இந்த தகவல் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள்








GPF/ DCRG / CPS உள்ளிட்ட ஓய்வூதிய நிலுவை இனங்களை முடித்தல் - DSE Proceedings

  

GPF/ DCRG / CPS உள்ளிட்ட ஓய்வூதிய நிலுவை இனங்களை முடித்தல் - DSE Proceedings 



GPF/ DCRG / CPS உள்ளிட்ட ஓய்வூதிய நிலுவை இனங்களை முடித்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும், மாவட்ட வாரியாக ஒப்படைக்க வேண்டிய நாட்கள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர்களுக்கு CCRT நிறுவனம் மூலம் பணியிடைப் பயிற்சி - DSE செயல்முறைகள்



ஆசிரியர்களுக்கு CCRT நிறுவனம் மூலம் பணியிடைப் பயிற்சி - DSE செயல்முறைகள்


In-service training for teachers through CCRT - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


NEET (UG) 2025 Results released


NEET (UG) 2025 Results released 


 NEET (UG) 2025 Results are now LIVE!


All candidates are advised to check their email for their scorecards. You can also download your result using your login credentials at 

👉 neet.nta.nic.in



>>> Click Here to Download NTA Press Release...



TNPSC OMR தாளில் மாற்றம்

 TNPSC OMR தாளில் மாற்றம்


 Changes TNPSC OMR Sheet



Kalanjiyam Mobile App New Version Update - Version 1.22.3 - Updated on 13-06-2025

 

  

 

 KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.22.3


IFHRMS Kalanjiyam Mobile App New App New Update 


Version 1.22.3


Updated on 13-06-2025


*Whats New?


• SGSP Insurance Detail Integrated


🧶Update Link👇👇👇


👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam





About this App

Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls


Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.


School Timetable | Revised Model | 2025-2026 Academic Year

 


2025-2026ஆம் கல்வியாண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட பள்ளி கால அட்டவணை - மாதிரி


Revised School Time table Model for the 2025-2026 Academic Year



>>> தொடக்கப் பள்ளிகள்....



>>> நடுநிலைப் பள்ளிகள்...



எண்ணும் எழுத்தும் - 1-5 ஆம் வகுப்புகள் - கால அட்டவணை 


1-3ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)


4-5ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)


6-8ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)

Learning Outcomes | Class 4 & 5 | Ennum Ezhuthum Term 1

 

 எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - குழந்தைகள் பெற வேண்டிய கற்றல் விளைவுகள் தொகுப்பு 


Term 1 - Ennum Ezhuthum - 4 & 5th Standard - Learning Outcomes that children should achieve



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


School Working Days and Holidays - 2025-2026 Academic Year



2025-2026ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில்


Details of school working days and leave days for the academic year 2025-2026 - on one page


பள்ளி நாட்காட்டி 2025 - 2026 - அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில்


Academic School Calendar 2025 - 2026 - Single Page ( All Details )



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026ஆம் கல்வியாண்டு நாட்காட்டி (87 பக்கங்கள்)


2025-2026 Academic Year Calendar - Tamilnadu School Education Department 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-26 கல்வியாண்டில் 210 வேலை நாட்கள்.


அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Adi Dravidar and Tribal Welfare Department Hostel Admission - Press Release

 

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி / ஐடிஐ / டிப்ளமோ / கல்லூரி விடுதி சேர்க்கை  - செய்தி வெளியீடு


Adi Dravidar and Tribal Welfare Department School / ITI / Diploma / College Hostel Admission - Press Release




2025-2026 Academic Year Calendar - Tamilnadu School Education Department



தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026ஆம் கல்வியாண்டு நாட்காட்டி வெளியீடு


2025-2026 Academic Year Calendar - Tamilnadu School Education Department 


தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் மாதிரி கால அட்டவணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-2026ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில்


Details of school working days and leave days for the academic year 2025-2026 - on one page



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி - முக்கிய நாட்கள்


⭕ 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள் ;


 ⭕ அனைத்து சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை 


⭕ செப் -18 முதல் 26 ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. 


⭕ ஆயுத பூஜை , விஜயதசமி விடுமுறையைச் சேர்த்து செப் .27 முதல் அக் .5 ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை


 ⭕ டிச .15 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது டிச .24 முதல் ஜன .4.2026 வரை ( 12 நாட்கள் ) அரையாண்டு விடுமுறை 


⭕ 2026 ஜன .14 முதல் ஜனவரி 18 வரை ( 5 நாட்கள் ) பொங்கல் விடுமுறை 


⭕ ஏப்ரல் 10 ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது.


⭕ கோடை விடுமுறை 2026 ஏப்ரல் 25 - ம் தேதி தொடங்குகிறது 


⭕ 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை...💐


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

விளக்கம் :
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.


பழமொழி :
Beat after beat will make even a stone move.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.


பொன்மொழி :

நோய் இல்லை என்று மனதில் உறுதி செய் ஏனென்றால் மனம் போல உடல் அமையும். - மகாகவி பாரதியார்


பொது அறிவு :

01.உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?

         ஆண்டிஸ் மலைத்தொடர் 

         Andes  mountain range

02.  தமிழ்நாட்டில் கும்பக்கரை நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?

              தேனி மாவட்டம்

              Theni district


English words & Tips :

plan      -    திட்டமிடு

want      -    வேண்டும்


Grammar Tips :

Subject-Verb Agreement:
Ensure your verbs match your subject in number (singular or plural). For example, "The cat runs," not "The cat run".

* Avoid Double Negatives: Phrases like "I don't have no money" are incorrect. Use a single negative.



அறிவியல் களஞ்சியம் :

மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.


நீதிக்கதை

தவளை கற்று தரும் பாடம்

ஒரு ஊரில் நிறைய தவளைகள் இருந்தன. சிறிய  பெரிய தவளைகளெல்லாம்  உள்ளேயே ஒரு பந்தயம்  வைக்கலாம் என்று முடிவு செய்தது. அது என்ன போட்டியென்றால் ஓட்டப்பந்தய போட்டி ஆகும். ஓட்டப் பந்தயத்திற்கு எல்லா தவளைகளும் தயாராகி வந்தன. தவளைகளின் ரன்னிங் ரேஸ் போட்டியை பார்ப்பதற்காகவே ஆர்வமாக கூடி இருந்தார்கள்.  ஓட்டப்பந்தயத்தில் அருகிலுள்ள  டவரை தொட வேண்டும். இது தான் அந்த போட்டியோடு விதி ஆகும்.

அந்த தவளையை தான் வெற்றி பெற்ற தவளை என்று முடிவு சொல்லப்பட்டது. போட்டி தொடங்கியது, போட்டியை காண வந்த அனைவரும் சொன்னார்கள். இது ஒரு சுலபமான போட்டியே கிடையாது. இந்தப் போட்டி ஒரு கடுமையான போட்டி ஆகும். முதலில் இந்த தவளைகளில் எந்த ஒரு தவளையும் கோபுர உச்சியை அடையவே முடியாது. அந்த தவளைகளைப் பார்த்து கூறிக் கொண்டே இருந்தார்கள். மேலும் இந்த தவளைகளில் எந்த ஒரு   கோபுர உச்சியை டச் பண்ண கூட  இல்லை என்று பேசிக் கொண்டே இருந்தார்கள்.

இந்த போட்டியை நேரில் காண நிறைய மக்கள் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு வரும் பேசும்  கேட்ட அந்த  எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டது. நம்மால் இந்த போட்டியில் ஜெயிக்கவே முடியாது போன்று இருக்கிறதே என்று  பண்ணி ஒரு  அந்த போட்டியில் இருந்து பின் வாங்க முடிவு செய்தன.  இந்த போட்டியிலிருந்து  கொள்வதாக அறிவித்தன. அது மட்டுமில்லாமல் அந்த  கோபுர உச்சியை தொட போவதில்லை. அந்த டவரை தொடுவது என்பது  என்று ஒரு   பேசிக் கொண்டே இருந்தார்கள்.

பல தவளைகளும் ஆகி போட்டியிலிருந்து  ஐ நீக்கி கொண்டன. இப்படியே நிறைய  போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. ஒரே ஒரு  தவளை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டிருந்தது. கோபுர உச்சியைத் தொடுவது  என்று நினைத்தது. அதனால் பல தவளைகளும் பெயர் நீக்கம் செய்தன. இருந்தாலும் கூட, அந்த ஒரு தவளை மட்டும்   கோபுர உச்சியை நோக்கி மெல்ல மெல்ல சென்றுக் கொண்டே இருந்தது. ஒரு சில வினாடிகளில் அந்த குட்டி ஆனது டவரை அடைந்து வெற்றியும் பெற்றது. அனைவரும் வியந்து போய் பாராட்டினார்கள்!. குட்டி ஆல் மட்டும் எப்படி டவரை அடைந்து வெற்றி  பெற முடிந்தது. போட்டியை -ஆக பார்த்து கொண்டிருந்த  கேட்டார்கள். உன்னால் மட்டும் எப்படி அந்த  டவரை தொட முடிந்தது. அந்த தவளையை அழைத்து கேட்டார்கள்.

வெற்றி அடைந்த அந்த தவளையானது  பெறுவதற்காக மேடையின் மீது ஏறியது. அப்போது தான் அங்கே இருந்த மக்களுக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அந்த  டவரை தொட்டு வெற்றியடைந்த  தவளைக்கு காது கேட்காது. மற்றவர்கள் பேசுவதை கேட்க முடியாது என்று தெரிந்தது. அனைவரும் குட்டி தவளையின் திறமையை கண்டு புகழ்ந்தார்கள். பாராட்டி பரிசுயும் கொடுத்தார்கள். அந்த  தவளையும்  மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றது.


இன்றைய செய்திகள்

13.06.2025

⭐தட்கல் டிக்கெட்  முன்பதிவுக்கு ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம்: ரயில்வே அறிவிப்பு.

⭐போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

⭐தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

⭐ அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவிப்பு. இதில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் பலி.


🏀 விளையாட்டுச் செய்திகள்.

🏀FIH புரோ லீக் ஹாக்கியில் ஐரோப்பிய லெக்கில் இந்தியா அர்ஜென்டினாவிடம் 3-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

🏀தேசிய முதுநிலை விளையாட்டுப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார் 70 வயதான அசாம் தடகள வீரர்.


Today's Headlines

✏️  From 1st July   onwards Aadhaar  is mandatory  for Tatkal ticket booking Indian Railways' announcement

✏️ Tamil Nadu Law and Order Additional Director Davidson Devasirvadham has said that strict action will be taken against police personnel who assist in illegal activities including drug trafficking and cannabis smuggling.

✏️ The Tamil Nadu government has started the process of enumerating  the workers from northern states who are living in Tamil Nadu.

✏️ Tata Group announces Rs 1 crore compensation to families of those died in Ahmedabad Air India plane crash.


*SPORTS NEWS*

🏀 India lost 3-4 to Argentina in the European leg of the FIH Pro League hockey.

🏀 70-year-old Assamese athlete won four gold medals at the National Senior Games


Covai women ICT_போதிமரம்


Smart Classroom Guidelines


 திறன் வகுப்பறை - பராமரிப்பு வழிகாட்டுதல்கள்


Smart Classroom Maintenance Guidelines 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-06-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

விளக்கம் :
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.


பழமொழி :
As clear as a bell.

உள்ளங்கை நெல்லிக்கனி போல.


இரண்டொழுக்க பண்புகள் :

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.


பொன்மொழி :

பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்லி மாட்டிக் கொள். ஏனென்றால் பொய் வாழ விடாது . உண்மை சாக விடாது. - விவேகானந்தர்


பொது அறிவு :

01. இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் யார்?

              திரு.ஞானேஷ்குமார்

             Thiru. Gyaneshkumar

02. முதன் முதலில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற  நகரம் எது? 

             கோலாலம்பூர் (சிங்கப்பூர்)

             Kualalumpur (Singapore)


English words & Tips :

challenge     -      சவால்

arrange      -      ஏற்பாடு


Grammar Tips :

Common rule to use 'K' or' ck' in the end of a word

'k'  is used after a consonant
Ex: pink ,think,blink,work and etc

'ck' is used after a short vowel sound

Frock ,click, brick ,duck neck ,back and etc



அறிவியல் களஞ்சியம் :

நாம் கண்களை அனிச்சையாக சிமிட்டுவது, கண்களை ஈரமாக வைத்துக் கொள்வதற்கும், தூசுகளை நீக்குவதற்கும் உதவுகிறது என்பதை அறிவோம். அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், விழித்திரையில் விழும் ஒளிகளைக் கண் சிமிட்டுதல் முறைப்படுத்துகிறது என்றும், இதன் வாயிலாக அதிகமான நேரம் ஒரு பொருளைக் கவனித்துப் பார்க்க முடிகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


ஜூன் 12

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் ௧௪ வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.



நீதிக்கதை

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.


இன்றைய செய்திகள்

12.06.2025

⭐RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

⭐2025 இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1.46 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

⭐மனிதர்களின் இதய ரத்தக்குழாய்களில் இருக்கும் அடைப்புகளை சரி செய்ய சிறிய அளவு ரோபோக்களை அமெரிக்காவை சேர்ந்த ட்ரெக்செல் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

⭐ஜூன் 13 முதல் 16 வரை தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு  கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


🏀விளையாட்டுச் செய்திகள்

🏀ஹாக்கி - FIH புரோ லீக்கில் இந்தியா Vs அர்ஜென்டினா.

🏀AFC ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கிடம் 0-1 என்ற அதிர்ச்சி தோல்வியை இந்தியா சந்தித்தது.


Today's Headlines

✏️ The Madras High Court has directed the Union Government to allocate the funds required for 25% reservation in private schools under the RTE Act to the Tamil Nadu.

✏️ India's population is estimated to reach 1.46 billion by the end of 2025

✏️ Medical scientists at Drexel University in the US have invented small robots to repair blockages in human heart blood vessels.

✏️ Meteorological Department announced  Heavy rain in many districts of Tamil Nadu from June 13 to 16


SPORTS NEWS

🏀 Hockey - India vs Argentina in FIH Pro League
.
🏀India suffered a shock 0-1 defeat to Hong Kong in the AFC Asian Cup qualifiers.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Application for Paramedical courses starts from 17.06.2025

TamilNadu Paramedical துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் 17.06.2025 முதல் துவங்குகிறது Counseling application for Paramed...