மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 இல் சோதிக்கக்கப்பட்ட கற்றல் விளைவுகளுக்கான செயல் திட்ட வார்ப்புருக்கள்
Action Plans Templates : for the Learning Outcomes Surveyed in SLAS 2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 இல் சோதிக்கக்கப்பட்ட கற்றல் விளைவுகளுக்கான செயல் திட்ட வார்ப்புருக்கள்
Action Plans Templates : for the Learning Outcomes Surveyed in SLAS 2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வு - தற்காலிக விடை குறிப்பு வெளியீடு
Tamil Nadu Public Service Commission - Group 4 Examination held on 12.07.2025 - Tentative Answer Key Released
Tamil Nadu Public Service Commission
Combined Civil Services Examination-IV
(Group-IV Services)
(Notification No.7/2025)
Examination held on 12.07.2025 F.N. -
Tentative key Released on 21.07.2025
Link:
https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=58ff38aa-81fc-453e-9bd9-517996eccbbb
அரசுப் பள்ளிகளில் SMC கூட்டத்தை July 25ஆம் தேதி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டத்தை ஜூலை 25 ஆம் தேதி நடத்துமாறு பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் (School Management Committee) கூட்டம் கடந்த அக்டோபர் முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு மாதமும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டின் முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூலை 25 ஆம் தேதி மாலை 3 முதல் 4.30 மணி வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை பள்ளிகள் தீர்மானமாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.
மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உள்ள கற்றல் திறன் குறித்தும், அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்க வேண்டும். கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து, பெற்றோருடன் ஆலோசித்து, உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். பள்ளி மேம்பாட்டுக்காக, முன்னாள் மாணவர்களிடம் பொருள், தொகை பெற்றதை, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பு, துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதித்து, சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
SLAS தேர்வு, திறன் இயக்க பயிற்சி, எண்ணும் எழுத்தும் இயக்கம், இல்லம் தேடி கல்வி, உயர் கல்வி வழிகாட்டி, இடை நிற்றல் கணக்கெடுப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும். அதற்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
>>> பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள் & வழிகாட்டுதல்கள் - SPD செயல்முறைகள்...
துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் விண்ணப்பம் : Application to add Unavailed Joining Time in Earn Leave Account
தலைமை & உதவி ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & விண்ணப்பப் படிவம்
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்று புதிய பள்ளியில் சேர்ந்துள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பழைய பள்ளிக்கும் புதிய பள்ளிக்கும் 8 கிலோமீட்டருக்கு மேல் இருந்தால், அனுபவிக்காத பணியேற்பிடைக் காலம் 5 நாட்களை தங்களது ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்க்க கீழ்கண்ட விண்ணப்பத்தினை வருகின்ற ஆகஸ்ட் மாத குறைதீர் முகாமில் கொடுக்கலாம்
>>> தலைமை ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & படிவம்...
>>> உதவி ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & படிவம்...
சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுமதி
காலை நடைப் பயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால், தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி என அப்போலோ நிர்வாகம் அறிக்கை.
SMC-மூலம் பணியாற்ற அறிவியல் மற்றும் தமிழ் பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு
திருப்பூர் மாவட்டம் அறிவொளி நகர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு
SMC-மூலம் பணியாற்ற அறிவியல் மற்றும் தமிழ் பட்டதாரி ஆசிரியர் தேவை...
Qualification= B.Sc/ B.A-B.Ed
(OR)
M.A B.Ed / M.SC.,B.Ed
Salary=15,000
வழி
சேடபாளையம் TO
*அறிவொளி நகர்*
பல்லடம் வட்டம்
திருப்பூர் மாவட்டம்.
Phone:
+919751036186
🚥🥗🥗🥗🥗🥗🥗🚥
மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, தொடக்கப்பள்ளியை பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பதிவு
ஒரத்தநாடு ஆம்பலாப்பட்டு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, அப்பள்ளியைப் பார்வையிட்டோம்.
முதலமைச்சர் காலை உணவுத்திட்டப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, பள்ளி வளாகத்தைப் பார்வையிட்டோம். ஊர் மக்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கையை கேட்டறிந்து, உடனே அவற்றை பரிசீலிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலரிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
அன்று ‘நீட்’ தேர்வில் தோல்வி ; இன்று ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை : ஒரு சாதனை நிகழ்வு
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் மாணவி ரிதுபர்ணா (20). இவர் மங்களூருவை அடுத்துள்ள அடியாரில் உள்ள சயாத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பொறியியல் பிரிவில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.
இவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
இதுகுறித்து ரிதுபர்ணா கூறுகையில், “எனக்கு பள்ளி நாட்களில் இருந்து மருத்துவராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதற்காக 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று, நீட் நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த தேர்வில் என்னால் வெற்றி பெற முடியவில்லை.
இதனால் எனது கனவுகள் கலைந்து போனதாக மனமுடைந்து போனேன். எனது பெற்றோரும் நண்பர்களும் என்னை தேற்றி, பொறியியல் படிக்குமாறு கூறினர். இதனால் சயாத்ரி கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பிரிவில் சேர்ந்தேன்.
எனது கல்லூரி பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள் ஒருங்கிணைத்த அனைத்துவிதமான புதுமையான திட்டங்களிலும் ஆர்வத்தோடு பங்கேற்றேன்.
குறிப்பாக ரோபோ இயந்திர வடிவமைப்பு, ஆட்டோமேஷன் பயன்பாடு, இயந்திர வடிவமைப்பு ஆகியவற்றில் எனக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது.
கல்லூரி நண்பர்களுடன் இணைந்து பாக்கு மரங்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் கருவி, பாக்கு அறுவடை மற்றும் தரம் பிரிக்கும் ரோபோ ஆகியவற்றை வடிவமைத்தேன்...
எங்களின் இந்த முயற்சிக்கு கோவாவில் நடந்த ரோபோட்டிக்ஸ் சர்வதேச மாநாட்டில் பதக்கம் கிடைத்தது.
இதன் மூலம் சிங்கப்பூர், ஜப்பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த ரோபோட்டிக்ஸ் நிபுணர்களின் அறிமுகம் கிடைத்தது. மேலும் இங்கிலாந்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸில் ஜெட் இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் ஆக ஓராண்டு பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இதற்காக எனக்கு ஆண்டுக்கு ரூ.39.58 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது.
அந்த பயிற்சி காலத்தில் எனது முழு கவனத்தையும் செலுத்தி கடினமாக உழைத்தேன்.
ஜெட் விமானத்தின் இன்ஜின் தயாரிக்கும் பிரிவில் எனது பரிந்துரைகள் பெரிதும் ஏற்கப்பட்டன.
இதன் காரணமாக கடந்த மாதத்தில் எனக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம் சம்பளம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அதற்கான பணி நியமன கடிதத்தை பெற்றதும் என் பெற்றோரிடமும், கல்லூரி நிர்வாகத்திடம் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி, ஏராளமானோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர், மங்களூருவை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள், கல்லூரி பேராசிரியர்கள் என ஏராளமானோர் என்னை நேரில் சந்தித்து பாராட்டினர்.
என்னைப் பொறுத்தவரை, தோல்விகளை கண்டு அச்சப்படாமல் இளைஞர்கள் புதிய துறைகளில் உற்சாகத்துடன் போராடினால், நிச்சயம் இமாலய வெற்றி கிடைக்கும்.
நான் எனது மருத்துவர் கனவு சிதைந்த போதும், துவளாமல் வேறு துறையில் ஆர்வமோடு இயங்கினேன். இப்போது இளம் பொறியாளராக, படிப்பை முடிக்கும் முன்பாகவே ரூ.72 லட்சம் சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். இதன் மூலம் எனது பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவேன்.” என்றார்.
20 வயதிலேயே சாதித்த ரிதுபர்ணாவை சமூக வலைதளங்களில் ஏராளமான இளைஞர்களும், கல்வியாளர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-07-2025 : School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
துணைக் குடியரசுத் தலைவர் ராஜினாமா
மருத்துவக் காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் மாறுதல் ஆணைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை மற்றும் மனமொத்த மாறுதல் பெற விண்ணப்பிக்க நிபந்தனைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Procedure for Uploading Mutual Transfer applications on the EMIS website and Conditions for applying Mutual Transfer - Proceedings of the Director of School Education
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
🏫🏫🏫🏫🏫🏫🏫🏫
DSE- பள்ளிக்கல்வித்துறை
2025-2026 பொது மாறுதல்
மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தல் -
22-07-2025 முதல் 27-07-2025 வரை
முதன்மை கல்வி அலுவலர் வழி ஆணைகள் வழங்குதல் 29-07-2025
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-07-2025 - School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு முழுவதும் உள்ள 3201 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் - மாவட்ட வாரியாக
Details of 3201 Primary School Headmaster Vacancies across Tamil Nadu - District wise
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தென்காசி மாவட்டம் : தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விவரம்
* கீழப்பாவூர் ஒன்றியம்
01.Pups கோட்டையூர்
02.Pups வேட்டைக்காரன் குளம்
03.Pups செம்புலி பட்டணம்
04.Pups காமராஜ்நகர்
05.Pups மருதடியூர்
06. Pups மகிழ்வண்ணநாதபுரம்
07. Pups கருமடையூர் 6வது வார்டு
செங்கோட்டை ஒன்றியம் :
08..GPS திருவெற்றியூர்
சங்கரன்கோவில் ஒன்றியம்:
09.Pupsமீனாட்சிபுரம்
M.N.நல்லூர் ஒன்றியம்:
10.Pupsஅருணாசலபுரம்
11.Pupsமருதங்கிணறு
12.Pupsஇலந்தைக்குளம்
கடையநல்லூர் ஒன்றியம்:
13.Pups ஊர்மேலழலகியான்
14.Pups அய்யாபுரம்
15.pups பொய்கை
16.Pups பூப்பாண்டிபுரம்
* வாசுதேவநல்லூர் ஒன்றியம்:
17.நகராட்சி து. பள்ளி கற்பகவீதி (புளியங்குடி)
* குருவிகுளம் ஒன்றியம் :
18.Pups கற்படம்
19.Pups தர்மத்துப்பட்டி
20.Pups ஶ்ரீரங்கராஜபுரம்
* கடையம் ஒன்றியம்:
21.Pups செக்கடியூர்
* ஆலங்குளம் ஒன்றியம்
22.Pups காத்தப்பபுரம்
23.Pups எந்தலூர்
24.Pups கரையாளனூர்
25.Pups தங்கம்மாள்புபுரம்
26.Pups மாவலியூத்து
ரேபிஸ் நோய் : நம்மை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை
🦮🐕🦺🐈🐕🐕🦺🦮🐈⬛🐕
சமீபத்தில் தெருநாயை சாக்கடையில் இருந்து காப்பாற்றும் போது நாயிடம் இருந்து கடிபட்ட ப்ரிஜேஷ் எனும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த கபடி வீரர் ரேபிஸ் நோய் ஏற்பட்டு துடிதுடித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
கடந்த இரண்டு மாதங்களில் கேரள மாநிலத்தில் மூன்று சிறு வயதினர் நாய்க்கடிக்குப் பின் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழ்நிலையில்
ரேபிஸ் குறித்தும், நம்மையும் நம் சுற்றத்தாரையும் தற்காத்துக் கொள்ளத் தேவையான விஷயங்களைப் பற்றி அறிவோம்.
ரேபிஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
இந்தியாவைப் பொருத்தவரை இந்தத் தொற்று, பெரும்பாலும் நாய்களிடம் ( 95%) இருந்தும்
அதன் பின் பூனைகள் (2%), நரி, கீரிப்பிள்ளை (1%) உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பரவுகின்றது.
ரேபிஸ் வைரஸ் தொற்றுடைய நாயோ பூனையோ, மனிதர்களைக் கடிக்கும் போதோ பிராண்டும் போதோ அல்லது காயமுற்ற பகுதியில் நக்கும் போதோ அல்லது மனிதர்களின் வாயில் , கண்ணில் அதன் எச்சில் படும் போதோ, ரேபிஸ் வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் செல்கிறது.
இது ஏனைய வைரஸ்கள் போல ரத்த ஓட்டத்தில் கலந்து பரவும் தன்மையற்றது. மாறாக நரம்புகளில் ஊடுருவி மூளையை நோக்கி மெதுவாக ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
விலங்கிடம் கடிபட்டு தொற்று அடைந்ததில் இருந்து நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும்.
பொதுவாக, எந்த இடத்தில் விலங்கு கடித்திருக்கறது என்பதைப் பொருத்து அந்த காலம் முடிவாகும்.
மூளைக்கு மிக அருகில் இருக்கும் தலை, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் கடிபட்டால் சீக்கிரமே அறிகுறிகள் தோன்றிவிடும்.
இன்னும் கை, கால்கள், விரல்கள் ஆகிய பகுதிகளில் நரம்புகள் அதிகமாக உணர்வூட்டுவதால் அங்கு உள்ளே செல்லும் வைரஸும் எளிதில் தண்டுவட நரம்பை அடைந்து அங்கிருந்து தண்டுவட நீர் மூலம் மூளையை அடைந்துவிடுகிறது.
பொதுவாக பெரும்பான்மையான ரேபிஸ் நோயாளர்களில் மூளையை வைரஸ் அடைவதற்கு 21 நாட்கள் நேரம் எடுத்துக் கொள்கிறது.
ரேபிஸ் நோய் ஏற்பட்டுவிட்டால் மரணம் சம்பவிப்பது 100% உறுதி.
இதற்குக் காரணம்,
இந்த வைரஸ் மூளையைச் சென்று அடைந்த பிறகே மூளையில் தொற்று (எண்கெஃபாலைட்டிஸ்) ஏற்பட்டதற்கான அறிகுறிகளை வெளியிடும். வைரஸானது மூளையைச் சென்று அடைந்து விட்ட பிறகு எந்த சிகிச்சை கொடுத்தும் காப்பாற்றுவது மிகக் கடினம் என்ற நிலையே இப்போது வரை இருந்து வருகிறது.
காய்ச்சல்
கடும் தலைவலி
நீரைக் கண்டு அச்சம் கொள்ளுதல் ( ஹைட்ரோ ஃபோபியா) ,
ஒலியைக் கேட்டு அச்சம் கொள்ளுதல் ( ஃபோனோபோபியா) ,
காற்று மேலே பட்டால் கூட கடும் உடல் வலி ஏற்படும். தொண்டைப் பகுதி தசைகள் லேசாக நீர்பட்டால் கூட இறுக்கிக் கொண்டு மூச்சுத் திணறல் ஏற்படும்.
எச்சில் அதிகமாக சுரக்கும். முதலில் ஆங்காங்கே
தசை இறுக்க நிலை ஏற்பட்டு,
பிறகு பக்கவாதம், பிதற்றல் நிலை என்று நோய் முற்றி மரணம் சம்பவிக்கும்.
எனவே,
நாய்க்கடியோ பூனைக்கடியோ உதாசீனப்படுத்தாமல் உடனடியாக அதற்குரிய முக்கியமான உயிர்காக்கும் சிகிச்சைகளான
1.காயத்தைக் கழுவி சுத்தம் செய்தல்
2. ரேபிஸ் தடுப்பூசியை முறையாகப் பெறுதல்
3. தேவை இருக்கும் இடங்களில், ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசியைப் பெறுதல்
ஆகிய மூன்றையும் கட்டாயமாகச் செய்தாக வேண்டும்.
வளர்ப்பு நாய்களால் ரேபிஸ் தொற்று ஏற்படாது என்றே பலரும் அலட்சியமாக இருக்கின்றனர்.
அவ்வாறின்றி 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த 121 ரேபிஸ் மரணங்களில் 51 மரணங்கள் வளர்ப்பு நாய்க்கடிகளால் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாய்க்கடி/ பூனைக்கடி விஷயத்தில் முதலும் முக்கியமானதும் கடியை வகைப்படுத்துவதாகும்.
வகை ஒன்று
CATEGORY I
விலங்கைத் தொடுவது,
விலங்குக்கு உணவு வழங்குவது,
காயம் ஏற்படாத நல்ல நிலையில் உள்ள தோலில் விலங்கு நக்குவது, காயம் ஏற்படாத நல்ல நிலையில் உள்ள தோலில் விலங்கின் எச்சில் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட எச்சங்கள் படுவது .
மேற்கூறியவற்றால் ரேபிஸ் நோய் பரவுவதில்லை.
எனவே இவர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை.
வகை இரண்டு
CATEGORY II
லேசான ரத்தம் வெளியே வராத அளவு
சிறிய அளவு பிராண்டல்/ பல் பதியாத அளவு சிறிய அளவு கடி
கடிபட்ட இடத்தை சுத்தமாகக் கழுவ வேண்டும் அதனுடன்
ரேபிஸ் தடுப்பூசி ( ANTI RABIES VACCINE) வழங்கப்பட வேண்டும்.
வகை மூன்று
( CATEGORY III)
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் ரத்தம் வெளியே வருமாறு தோல் முழுமையையும் உள்ளடக்கிய கடி / பிராண்டல்/ காயம் ஏற்பட்ட இடத்தில் நக்கப்படுதல்/ கண், வாய் உள்ளிட்ட இடங்களில் விலங்கின் எச்சில்படுவது ஆகியன மூன்றாம் நிலை கடியாகும்.
கடிபட்ட இடத்தைக் கழுவுதல் + ரேபிஸ் தடுப்பூசியைப் பெறுதல் அதனுடன் கடிபட்ட இடத்தில் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசி கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
-----
கடிபட்ட பிறகு உடனே செய்ய வேண்டியது
காயம்பட்ட இடத்தை ஓடும் குழாய் நீரில் தண்ணீரைத் திறந்து விட்டு நன்றாக சோப் போட்டுத் தேய்த்து 15 நிமிடங்கள் கழுவ வேண்டும். பிறகு கடிபட்ட இடத்தில் போவிடோன் அயோடின் போன்ற கிருமி நாசினியை உபயோகிக்கலாம்.
மூன்றாம் வகைக் கடியாக இருப்பின் கடித்த இடத்தைச் சுற்றி ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் (RABIES IMMUNOGLOBULIN) ஊசியை கட்டாயம் வழங்க வேண்டும். கூடவே டெட்டானஸ் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- கடிபட்ட இடத்தில் வைரஸ் இருக்கும் என்பதால் கட்டாயம் கடிபட்ட இடத்தை வெறும் கையால் தொடுதல் கூடாது
- கட்டாயம் காயத்தின் மீது மண், காபித் தூள், எலுமிச்சை, மூலிகைகள், வெற்றிலை போன்றவற்றை அப்புவது தவறு.
-------
கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் -
எச்.ஐ.வி நோயாளிகள் , புற்று நோய் கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்கள், எதிர்ப்பு சக்தி குன்றியோர் , ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்பவர்கள்,
ஹைட்ராக்சி குளோரோகுயின், மலேரியா சிகிச்சையில் பயன்படும் குளோரோகுயின் போன்ற மாத்திரைகளை உட்கொள்வோருக்கு
இரண்டாம் வகை கடி ஏற்பட்டிருந்தாலும்
அதை மூன்றாம் வகைக் கடியாகக் கருத்தில் கொண்டு
ரேபிஸ் தடுப்பூசியுடன்
கட்டாயம் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் வழங்கப்பட வேண்டும். ரேபிஸ் தடுப்பூசி மட்டுமே இவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை போதுமான அளவு வழங்காது என்பதே இதற்கான காரணம்.
ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுளின் - அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கடிபட்ட உடனே நன்றாக பதினைந்து நிமிடங்கள் ஓடும் குழாய் நீரில் சோப் போட்டுக் கழுவி விட்டு, அரசு மருத்துவமனைக்கு விரைந்திட வேண்டும்.
கடிபட்ட இடத்தில் ரத்தம் வந்ததென்றால் அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருத்துவர் கடியை சரியாக வகைப்படுத்துவதற்கு இந்தத் தகவல் உறுதுணையாக இருக்கும்.
எவ்வளவு சீக்கிரம்
தடுப்பூசி பெறுகிறோமோ அவ்வளவு நல்லது.
உள்ளே சென்ற வைரஸ் மூளையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குமுன் நாம் எதிர்ப்பு மருந்தை வழங்கியாக வேண்டும்.
முதல் தவணை ( 0 நாள்)
அதிலிருந்து மூன்றாவது நாள், பின் ஏழாம் நாள், பின் இருபத்தி எட்டாம் நாள் என்று நான்கு தவணை மருத்துவமனைக்குச் சென்று தோலினூடே வழங்கப்படும் ஊசியைச் முறையாகச் சரியாகப் போட்டுக் கொள்ள வேண்டும்.
தனியாரில் தசை வழி வழங்கப்படும் ரேபிஸ் தடுப்பூசி பெறுபவர்கள்
முதல் தவணை ( 0 நாள்)
அதிலிருந்து மூன்றாவது நாள், பின் ஏழாம் நாள், பின் பதினான்காம் நாள், அதன் பின் இருபத்தி எட்டாம் நாள் என்று ஐந்து தவணை சென்று தசைக்குள் வழங்கப்படும் ஊசியை முறையாகச் சரியாகப் போட்டுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி பெறும் இந்த ஒரு மாத காலத்தில்
உணவுப் பத்தியம் ஏதுமில்லை. மாமிசம், மீன், முட்டை உள்ளிட்ட அனைத்தையும் சாப்பிடலாம்.
தமிழ்நாட்டில் 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த ரேபிஸ் மரணங்களில் செய்யப்பட்ட ஆய்வில்,
மரணமடைந்தவர்களில் 73.6% பேர் கடிபட்ட பிறகான ரேபிஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவில்லை என்பதும்
17.4% பேர் ஆரம்ப தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டாலும்
முழுமையாக நான்கு தவணைகளையும் ( 0, 3,7,28) முழுமையாக முடிக்கவில்லை.
ஒரே ஒரு நபர் தான் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தது தெரிய வந்தது.
அந்த ஆய்வில், இறந்த நபர்களில் 83.5% பேர் நாய்களால் கடிக்கப் பெற்று , 73.5% பேர் மூன்றாம் வகை ( CATEGORY III) கடியைப் பெற்றிருந்தும் அவர்களில் 5% பேர் மட்டுமே ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் பெற்றிருந்தது தெரியவந்தது. இதிலிருந்து, கடியை வகைப்படுத்துதலின் முக்கியத்துவமும் ,
மூன்றாம் வகைக் கடிக்கு கட்டாயம் இம்யூனோகுளோபுளின் வழங்கப்பட வேண்டியதன் அத்தியாவசியம் குறித்தும் நாம் அறிய முடிகிறது.
வீட்டில் செல்ல நாய்கள் மற்றும் பூனைகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் அவற்றுக்கு வருடாந்திர ரேபிஸ் தடுப்பூசியை முறையாக வழங்கி வர வேண்டும். கூடவே தாங்கள் வளர்க்கும் நாய் மற்றும் பூனையை, தெரு நாய் மற்றும் பூனைகளுடன் கலந்து விடாதவாறு பராமரிப்பதும் அவர்களின் கடமை.
தடுப்பூசி பெறப்பட்ட நாய், பூனை கடித்தாலும் பிராண்டினாலும் மனிதர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு அரிதாக உள்ளது. எனவே, கடித்தது நாம் வளர்க்கும் செல்ல நாயாக இருந்தாலும் சரி. அதற்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் சரி, கடிபட்டவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
ஒருமுறை சரியாக நாய்க்கடிக்குப் பின்பான ரேபிஸ் தடுப்பூசி அட்டவணையை முடித்தவர்கள் ( கட்டாயம் அதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்) அதற்குப் பின்பு மூன்று மாதங்களுக்குள் மற்றொரு கடிபட்டால் அவர்களுக்கு காயம்பட்ட இடத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சிகிச்சை மட்டும் பெற்றால் போதுமானது.
ரேபிஸ் தடுப்பூசி பெறத் தேவையில்லை.
முந்தைய முழு அட்டவணை தடுப்பூசிகளைப் பெற்று
மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில் தற்போது புதிதாக கடிபட்டிருந்தால்,
முதல் தவணை ( 0 நாள்)
மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமானது. இவர்களுக்கு இம்யூனோகுளோபுளின் தேவையில்லை.
முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி ( PRE EXPOSURE PROPHYLAXIS)
விலங்கு நல ஆர்வலர்கள், மருத்துவர்கள், விலங்கு நல ஆர்வலர்கள்,
நாய் வளர்ப்போர், நாய்களைப் பிடிப்பவர்கள்,
அதிகமான தெரு நாய்கள் இருக்கும் பகுதிகளில் வாழ்பவர்கள் - முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி பெறுவது குறித்து சிந்தித்து முடிவெடுக்கலாம்.
இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் - குழந்தைகளுக்கு முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி பெறுவதற்கு ஊக்குவிக்கிறது.
முன்கூட்டிய ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி அட்டவணை பின்வருமாறு
தடுப்பூசி பெறும் முதல் நாள் ( 0 நாள்)
மூன்றாவது நாள்
21 அல்லது 28வது நாள்
ஆகிய மூன்று தவணைகள் பெற வேண்டும்.
ஒருமுறை முன்கூட்டிய தடுப்பூசிகளை எடுத்தவர்களுக்கு
அவர்கள் நாய்க்கடி வாங்கும் போது
முதல் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரு தவணைகள் மட்டும் ரேபிஸ் தடுப்பூசி போட்டால் போதுமானது. மேலும் இவர்களுக்கு இம்யூனோகுளோபுளின் வழங்கத் தேவையில்லை.
ரேபிஸ் 100% மரணத்தை விளைவிக்கக் கூடிய கொடூர நோயாக இருப்பினும்
முறையான விரைவான
சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்குதல் உயிர்களைக் காக்கக் கூடிய நடவடிக்கைகளாகும்.
தொடர்ந்து நடக்கும் ரேபிஸ் மரணங்கள் குறித்த ஆய்வுகளில் தெரிய வருபவை யாதெனில்
கடிபட்டவர்களுக்கு கடிபட்டதே தெரியாமலும், தெரிந்தாலும் கடிபட்ட இடத்தை சுத்தமாக நன்றாக சோப் போட்டுக் கழுவாமல் இருப்பதும்,
அதற்குப் பின்பு தடுப்பூசி போடாமல் அலட்சியம் செய்வதும்,
தடுப்பூசி போடப்பட்டாலும் வகைப்படுத்துதலில் சிக்கல் ஏற்பட்டு இம்யூனோகுளோபுளின் வழங்கப்படாமல் இருப்பதும்,
குறிப்பிட்ட அட்டவணைப்படி அனைத்து தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெறாமல் இருப்பதும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.
எந்தவொரு விலங்குக் கடியையும் அது நாய்க்கடியோ பூனைக்கடியோ அதன் சிறு பிராண்டலையும்
துச்சமெனக் கருதாமல் அலட்சியம் செய்யாமல்
உடனடியாக மருத்துவமனை விரைந்து அதற்குரிய சிகிச்சையும் தடுப்பூசியையும் பெறுவோம் என்று உறுதி ஏற்போம்.
ரேபிஸ் நோயால் ஏற்படும் மரணங்களைத் தடுத்திடுவோம்.
இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழின் "நலம் வாழ" பகுதியில் ரேபிஸ் நோய் குறித்த எனது விழிப்புணர்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக பணி நியமனம் பெற்று தமிழ்நாட்டில் அரசுப் பணியில் இருக்கும் ஒட்டுமொத்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை
இன்றைய தேதி (நாள்: 20-07-2025/ ஞாயிறு ) வரையில்
* SGT :-
2012-2013➖9️⃣6️⃣6️⃣6️⃣
2013-2014➖ *NIL*
2014-2015➖2️⃣2️⃣9️⃣6️⃣
2015-2016➖ 3️⃣2️⃣
2016-2017➖ 2️⃣6️⃣5️⃣
2017-2018➖ *NIL*
2018-2019➖ *NIL*
2019-2020➖ *NIL*
2020-2021➖ *NIL*
2021-2022➖ *NIL*
2022-2023➖ *NIL*
2023-2024➖ *NIL*
2024-2025➖ *NIL*
2025-2026
(*WAITING 2768*)
➖➖➖➖➖➖➖➖
*TOTAL* 1️⃣2️⃣2️⃣5️⃣9️⃣
➖➖➖➖➖➖➖➖
⏭️⏭️⏭️🟢⏮️⏮️⏮️
* B.T. Assistant :-
2012-2013➖ 8️⃣7️⃣6️⃣3️⃣
2013-2014➖ *NIL*
2014-2015➖1️⃣1️⃣1️⃣5️⃣9️⃣
2015-2016➖ *NIL*
2016-2017➖ *NIL*
2017-2018➖ 2️⃣5️⃣5️⃣
2018-2019➖ *NIL*
2019-2020➖ *NIL*
2020-2021➖ *NIL*
2021-2022➖ *NIL*
2022-2023➖ *NIL*
2023-2024➖ *NIL*
2024-2025➖ *NIL*
2025-2026➖
( *WAITING 3192*)
➖➖➖➖➖➖➖➖
*TOTAL* 2️⃣0️⃣1️⃣7️⃣7️⃣
➖➖➖➖➖➖➖➖
பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தகவல்
DSE - B.T. Assistant District to District Transfer Counselling News
அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி
🎄🎄🎄🎄🎄🎄🎄
நாளை காலை 9.00 மணிக்கு (21.07.25) பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மாநில முன்னுரிமை வரிசை எண் :
Maths : FROM 2101 TO 2606 (506 Numbers)
Maths 2606 is the End Figure.
நடைபெற இருப்பதால் உரிய ஆசிரியரை மாறுதல் கலந்தாய்விற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TETOJAC மாநில பொதுக்குழுக் கூட்டம் பற்றிய தகவல்
எதிர்வரும் 23.07.2025 இல் டிட்டோஜாக் மாநில பொதுக்குழுக் கூட்டம்
சாலையில் ஒளிரும் சிக்னல் விளக்குகளுக்கு மின்சக்தி எப்படி கிடைக்கிறது?
அதன் பெயர் ரோடு ஸ்டட் என்பார்கள். அது இருவகையில் வேலை செய்யும்.
இரவில் வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சங்களை வாங்கி எதிரொளிக்கும் வகையில் ரிஃப்ளெக்டர் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கும்.
அதே சமயத்தில் பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தினை கிரகித்து அதனுள் பொதியப்பட்டுள்ள சிறு சோலார் செல்களில் சக்தியை வாங்கி லித்தியம் வகை பேட்டரியில் மின்சாரத்தை சேகரித்துக் கொள்ளும்.
இருள் கவிய துவங்கியதும் அதில் இருக்கும் லைட் டிபண்டிங் ரெசிஸ்டர் (LIGHT DEPENDING RESISTOR) என்ற வெளிச்சத்தை உணரும் சென்சார் வேலை செய்து மிகக் குறைந்த மின்சாரத்தை உபயோகித்து அதிக வெளிச்சத்தை வெளியே விடும் லைட் எமிட்டிங் டயோடு (LIGHT EMITTING DIODE) எனப்படும் LED (எல்இடி) விளக்குகளின் மூலமாக விளக்குகளை ஒளிரச் செய்கின்றது.
அதனால் இரவு 12 மணி நேரம்கூட எல்.இ.டி. பல்புகள் ஒளிரும் அளவிற்கு சக்தியை கிரகித்து வைத்துக் கொள்ள முடிகிறது.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் : கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வுக்கு பின் காலிப்பணியிடங்கள் விவரம் பின்வருமாறு
கரூர் ஒன்றியம்
1. சேமங்கி
2. ஒரம்புப்பாளையம்
3. சிந்தாயூர்
4. பெரிய காளிபாளையம்
5. முஸ்லீம் உருது
தாந்தோணி ஒன்றியம்
1. சின்ன குளத்துப்பட்டி
2. உ.காளியப்ப கவுண்டனூர்
3. வீரணம்பாளையம்
4. வெங்கடாபுரம்
5. வடக்கு மேட்டுப்பட்டி
6. கா.குள்ளம்பட்டி
7. வாசுகுமரன்பட்டி
க.பரமத்தி ஒன்றியம்
1. இச்சிக்காட்டூர்.
2. ப.காளிபாளையம்.
3. குஞ்சாம்பட்டி.
4. ஊத்துப்பட்டி.
5. குளத்துப்பாளையம்.
6. கருநெல்லிவலசு.
7. ஆதிரெட்டிபாளையம்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்
1. பாம்பன்பட்டி
2. நாதிப்பட்டி
3. குள்ளம்பட்டி
4. தேசியமங்கலம்
5. செம்பாறைப்பட்டி
6. அய்யம்பாளையம்
7. கணக்கம்பட்டி
8. தாசில்நாயக்கனூர்
9. அக்கரக்காம்பட்டி
10. பூவம்பாடி
அரவக்குறிச்சி ஒன்றியம்
1.PUPS பெரியமஞ்சுவளி
2.PUPS நாச்சிபாளையம்புதூர்
4.PUPS செங்காளிவலசு
5.PUPS குரும்பப்பட்டி
குளித்தலை ஒன்றியம்
1. ஊ.ஒ.தொ.பள்ளி, மேல்நங்கவரம்
2.ஊ.ஒ.தொ.பள்ளி, எரமநாயக்கன்பட்டி
தோகைமலை ஒன்றியம்
1. ராக்கம்பட்டி
2. கள்ளை
3. மேல கம்பேஸ்வரம்
4. மேல மேட்டுப்பட்டி
5. வருந்திப்பட்டி
6. நாகனூர்
7. முனையம்பட்டி
8. செம்பாறை கல்லுப்பட்டி
கடவூர் ஒன்றியம்
1.சி.புதூர்
2.மஞ்ச புளியம்பட்டி
3.நரியம்பட்டி
4.கொட்டாம்பட்டி
5.கோடங்கிபட்டி
6.கருணாபுறம்
7. மண்பத்தையூர்
பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) முக்கிய நகர்வுகள்
2022 – 2024 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தற்போதைய நிலை, மேம்படுத்தப்பட்ட புதிய பெற்றோர் செயலியின் சிறப்பு அம்சங்கள் மற்றும் புதிய செயலியில் தீர்மானங்களை பதிவிடுவதற்கான வழிகாட்டுதல்கள்:
குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (2009) கீழ் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு கூட்டமானது மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2022 – 24 ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. பள்ளி மேம்பாடு சார்ந்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் TNSED Parent App வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுத் தீர்மானங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள பெற்றோர் செயலி முக்கியப் பங்காற்றுகிறது.
பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானங்களை பதிவு செய்யும் பெற்றோர் செயலியின் பயன்பாடு மற்றும் உள்ளீடு செய்வது குறித்து, பள்ளி மேலாண்மைக் குழு மாநில ஒருங்கிணைப்புக் குழுவால் மாவட்டம் , வட்டாரம் மற்றும் பள்ளி அளவில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கிய நகர்வுகள்:
• 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற SMC மறுகட்டமைப்புக்கான பெற்றோர் விழிப்புணர்வு கூட்டங்களில் 23.2 லட்சம் பெற்றோர் பங்கேற்றனர்.
• மொத்தம் 37,519 அரசுப் பள்ளிகளில் SMC குழுக்கள் மறுக்கட்டமைக்கப்பட்டன.
• ஆகஸ்ட் 2022 முதல் அக்டோபர் 2024 வரை மொத்தம் 19 முறை SMC கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் சராசரியாக 70% உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
• 35,735 பள்ளிகள், SMC பெற்றோர் செயலியின் மூலம் தீர்மானங்களைப் பதிவு செய்துள்ளனர்
• பள்ளிகளில் இருந்து 2022- ஆம் ஆண்டிலிருந்து இருந்து செயலி வழியாக நமக்குக் கிடைத்த தீர்மானங்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேல் ஆகும்.
• பதிவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது சார்ந்து துறைகள் நடவடிக்கை எடுப்பதற்காக கல்வித்துறைச் செயலரிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டது
• தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து முறையாக தகவல் பெறப்பட்டது.
• இதனைத் தொடர்ந்து, தீர்மானங்கள் மீதான நடவடிக்கைளை கண்காணிக்க , மாநில அளவிலான கண்காணிப்பு குழு (SLMC) மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு (DLMC) போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டது .அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது
• மேலும், மாவட்ட கல்வி மீளாய்வு(DER) கூட்டங்களில், பள்ளி மேலாண்மை குழுவின் தீர்மானங்கள் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியரால் துறைவாரியாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளியின் தேவைகள் அனைத்தும் மாவட்ட கல்வி மீளாய்வு கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது.
• 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக்கான பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் ஆகஸ்ட் 2, 2024 அன்று தொடங்கி , ஆகஸ்ட் 31, 2024 வரை அனைத்து பள்ளிகளில் மறுகட்டமைப்பு நிறைவடைந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 18.9 லட்சம் பெற்றோர் பங்கேற்றனர்
• புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்ட பின்னர் , 2024 அக்டோபர் மாதம், இது வரை பதிவு செய்யப்பட்டிருந்த 3 லட்சம் தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதன் முன்னேற்றத்தையும் மற்றும் பள்ளியின் அன்றைய தேவைகளையும் அனைத்து பள்ளி மேலாண்மைக் குழுக்களும் TNSED பெற்றோர் செயலியில் பதிவேற்றம்(status update) செய்தனர்.
• தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்ற நிலையை (Status Update) TNSED பெற்றோர் செயலியில் பதிவு செய்யும் செயல்பாட்டுக்கு பின்பு 1,92,543 (24.06.2025 இந்த தேதி வரை ) தீர்மானங்கள் நமக்கு கிடைத்தன. இந்தத் தீர்மானங்களில் 1,50,421 தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இது மொத்தத் தீர்மானங்களில் 78% ஆகும்.
• தீர்மானங்கள் / தேவைகள் மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகின்றன: பள்ளி அளவில் தீர்வு காணப்பட வேண்டியவை, மாவட்ட அளவில் தீர்வு காணப்பட வேண்டியவை, மாநில அளவில் தீர்வு காணப்பட வேண்டியவை என்று பிரிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டன.
•
நிலை தீர்மானங்களின் எண்ணிக்கை சதவீதம்
Resolved 150421 78%
Unresolved 42122 22%
தீர்மானங்களின் எண்ணிக்கை சதவீதம்
பள்ளி அளவில் 60,754 91%
மாவட்ட அளவில் 88,694 71%
மாநில அளவில் 973 71%
அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மூலம் 71% தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் உதாரணத்திற்கு வேலை செய்து முடிக்கபட்ட/ தீர்வு கண்டு நிறைவு செய்யப்பட்ட சில முக்கியமான தீர்மானங்களின் தொகுப்பு இது
முக்கியமான தீர்மானங்களின் தொகுப்பு நிறைவு
உயர் மின்னழுத்தக் கம்பிகளை அகற்றுதல் 562
பழுதடைந்த கட்டடத்தை அகற்றுதல் 3269
பழுதடைந்த சுற்றுச்சுவரை அகற்றுதல் 185
புதிய இயற்பியல் ஆய்வகம் 14
புதிய உயர்-தொழிநுட்ப ஆய்வகம் 125
புதிய உயிரியல் ஆய்வகம் 14
புதிய ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம் 39
புதிய கணித ஆய்வகம் 14
புதிய கணினி ஆய்வகம் 121
புதிய கலை ஆய்வகம் 16
புதிய கழிப்பறை 143
புதிய கழிவுநீர்த் தேக்கத் தொட்டி 237
புதிய குடிநீர் இணைப்பு 55
புதிய குடிநீர் இணைப்பு - ஊராட்சி 594
புதிய குடிநீர் இணைப்பு - போர்வெல் 197
புதிய சுற்றுச் சுவர் 2675
புதிய நீர் இணைப்பு 196
புதிய நீர் இணைப்பு - ஊராட்சி 1074
புதிய நீர் இணைப்பு - போர்வெல் 572
புதிய மின் இணைப்பு 120
புதிய மின்சார இணைப்பு 612
புதிய வகுப்பறை 1603
புதிய வேதியியல் ஆய்வகம் 12
போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் 294
மாணவர்களுக்கான புதிய கழிப்பறை 2009
மாணவிகளுக்கான புதிய கழிப்பறை 1416
மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான புதிய கழிப்பறை 109
மாற்றுத் திறன் கொண்ட மாணவிகளுக்கான புதிய கழிப்பறை 46
மொத்தம் 16323
TNSED புதிய பெற்றோர் செயலியின் சிறப்பம்சங்கள்
Highlights of TNSED Parents New App
TNSED புதிய பெற்றோர் செயலி
• கடந்த இரண்டு ஆண்டுகளில் SMC கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்தும், பதிவேட்டில் பதிவான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டும் நமக்குக் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், அரசின் துறைகள் பள்ளியின் தேவைகளான தீர்மானங்களை எடுத்து உடனே வேலையைத் தொடங்க , தகவல்களை தெளிவாகப் பெறும் மேம்பட்ட வசதிகளோடு புதிய செயலி தேவை அறியப்பட்டது.
• தலைவர் , HM மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்களை பரவலாக அறிந்தபோது , பள்ளியின் தேவைகளை செயலி வழியாக பதிவு செய்யும்போது செயலியில் மேம்படுத்த வேண்டியவை பற்றிய கருத்துக்கள் சேகரிகக்கப்பட்டது.
• இந்தச் செயலி
o SMC தலைவர் , HM இருவரும் இணைந்து தீர்மானங்களை செயலியில் பதிய வேண்டுமென்பதால், செயலி பெற்றோர், SMC தலைவர், HM ஆகியோருக்கு எளிதில் புரியும் வகையிலும்,
o பள்ளியின் அனைத்து தேவைகளையும் ஒரு தொகுப்பாகக் காணும் வகையிலும்,
o தீர்மானங்கள் மீது துறைகள் நடவடிக்கை எடுக்க ஏதுவான வகையிலும்,
இந்த புதிய பெற்றோர் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
TNSED புதிய பெற்றோர் செயலி மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்
புதிய செயலியில் பள்ளியின் தீர்மானங்களைப் பதிவிட, பள்ளியின் தேவைகள் 6 தலைப்புகளாக பிரிக்கப்பட்டது.
1. Emergency (அவசரத்தேவை)
2. மாணவர்கள்
3. கற்றல்
4. நலத்திட்டங்கள், உதவித்தொகைகள்
5. பள்ளி வளாகம்
6. ஆசிரியர்கள், பணியாளர்கள்
o Emergency தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ உயர் மின்னழுத்தக் கம்பிகள் (HT Line)
▪ குறைந்த மின்னழுத்தக் கம்பிகள் (LT Line)
▪ டிரான்ஸ்பார்மர்
▪ மின்கம்பம்
▪ மின் இணைப்பு
▪ மின் கசிவு - ஷாக் அடிக்கிறது
▪ எர்த் கம்பி ( Earth wire )
▪ கட்டிடங்கள் - இடிக்க வேண்டியது
▪ அறுவை சிகிச்சையை உறுதிசெய்தல்
▪ பள்ளிச்சூழல் பாதுகாப்பு
▪ கற்பித்தலுக்கு இடையூறு
▪ பள்ளி செயல்பட கட்டிடம் இல்லை.
▪ பள்ளி வளாகத்தை சேதப்படுத்துதல்
▪ கிணறு குழிகள் - ( மூடி போடுதல் )
▪ பாம்புகள் நடமாட்டம்
▪ வனவிலங்கு நடமாட்டம்
▪ திறந்தநிலை சாக்கடை - பள்ளிக்கு அருகில்
▪ திறந்தநிலை சாக்கடை - பள்ளிக்கு உள்ளே
▪ திறந்தநிலை கழிவுநீர்த் தொட்டி - பள்ளிக்கு அருகில்
▪ திறந்தநிலை கழிவுநீர்த் தொட்டி - பள்ளிக்கு உள்ளே
▪ திறந்தநிலை ஆழ்துளைக் கிணறு - ( மூடி போடுதல் )
▪ மழைத்தண்ணீர் தேங்கியுள்ளது
▪ அருகில் குளம் ,கண்மாய் ( தடுப்பு தேவை )
▪ பள்ளி முன்பு நெடுஞ்சாலை ( வேகத்தடை தேவை )
▪ ஆபத்து உருவாக்கும் மரம் , கிளை அகற்றுதல்
▪ நான்கு வழிச் சாலை - பேருந்து வேண்டும்
▪ மலைப்பகுதி - பேருந்து வேண்டும்
▪ காட்டுப்பகுதி - பேருந்து வேண்டும்
▪ பேருந்து நிறுத்தம் வேண்டும் - பள்ளி அருகே
▪ பேருந்து பயணத்தில் மாணவர்களுக்கு நெருக்கடிகள்
o மாணவர்கள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ குழந்தைகளின் ஆரோக்கியம்
▪ குழந்தைகளின் பாதுகாப்பு
▪ போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல்
o கற்றல் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ கற்பித்தலுக்கு துணை செய்யும் கருவிகள்
▪ வகுப்பறை கற்றலுக் கற்பித்தல் பொருட்கள்
o நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ நலத்திட்டங்கள்
▪ அரசு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள்
▪ அரசு உதவித்தொகைகள் மற்றும் உதவித்தொகை வழங்கும் தேர்வுகள்
o பள்ளி வளாகம் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ கட்டிடங்கள்
▪ தண்ணீர்
▪ மின்சாரம்
▪ காலை / மதிய உணவு
▪ வளாகப் பொருட்கள்
▪ பொது வளாகம்
o ஆசிரியர்கள், பணியாளர்கள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ ஆசிரியர்
▪ ஆசிரியர் பாதுகாப்பு
▪ பணியாளர்கள் தேவை
▪ பயிற்சிகள்
• மேல்கண்ட ஒவ்வொரு தொகுப்பிற்கு உள்ளேயும் அது தொடர்பான தேவைகளின் பட்டியலும் . அதன் தொடர்ச்சியாக உப தேவைகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது
• செயலியில் தீர்மானங்களைத் தேட ஏதுவாக Search Option ஆனது தேவைகளைப் பட்டியலிடும் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது
• செயலியில் தீர்மானங்கள் சார்ந்து அனைத்து தகவல்களும் சரியாகவும் முழுமையாகவும் பெறப்படுகிறது
உதாரணத்துக்கு :
புதிய பேருந்து வசதி வேண்டும் ‘ என்ற தேவை ( தீர்மானம்) புதிய செயலியில் எவ்வாறு இருக்கிறது ,அதை வரிசையுடன் பதிவு செய்து submit/சமர்ப்பித்தல் – வரை செல்லும் படத்தையும் – அது செயலியில் எப்படி காண்பிக்கப்படும் என்ற படத்தையும் கீழே காணலாம்
அதாவது பேருந்து வேண்டும் என்பதை இப்படி மேலே கண்டபடி ஒரே பக்கத்தில் பதிவிட்டு Submit கொடுக்க முடியும்.
இன்னொரு உதாரணமாக பள்ளியில் புதிய மாணவிகள் கழிப்பறை என்ற தேவை (தீர்மானம் ) புதிய செயலியில் எவ்வாறு இருக்கிறது , அதை வரிசையுடன் பதிவு செய்து submit/சமர்ப்பித்தல் – வரை செல்லும் படத்தையும் – அது செயலியில் எப்படி காண்பிக்கப்படும் என்ற படத்தையும் கீழே காணலாம்
அதாவது கழிப்பறை வேண்டும் என்பதை இப்படி மேலே கண்டபடி பதிவிட்டு Submit கொடுக்க முடியும்
• செயலியில் பெறப்படும் தீர்மானங்கள், அந்தந்த தேவை சார்ந்து முழு விபரங்களைப் பதிவிட ஏதுவாக இடம்பெற்றுள்ளது
• செயலியில் தகவலுக்காக மட்டும் பெற்றுக்கொள்ளப்படும் - என்ற பகுதி இடம் பெற்றுள்ளது . அதாவது ஒரு குறிப்பிட்ட விசயத்தைப் பற்றிய தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்ளும் பகுதி இது . அவற்றை பதிவிடும் பதிவிடங்கள் இடம்பெற்றுள்ளன.
• தீர்மானங்கள் சார்ந்தும் பள்ளிக்குழந்தைகள் நலன் சார்ந்தும் தேவையான நேரங்களில் ஆர்வத்துடன் தங்கள் நேரத்தை ஒதுக்கி, பள்ளி மேலாண்மைக் குழு உறுபினர்கள் பள்ளிக்காக செய்யும் வேலைகளைப் பற்றி பதிவிடும் “SMC பங்கேற்று உதவியது “ என்ற option கொடுக்கப்பட்டுள்ளது.
• தேவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று சொல்வதோடு , அதன் தரத்தைப் பற்றி கூறும் – அதாவது மதிப்பீடு செய்ய ஏதுவாக options உருவாக்கப்பட்டுள்ளது
• முக்கியமாக குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி வளாகத்திலும் , அதைச் சுற்றிலும் உடனடியாக சரி செய்ய வேண்டிய தேவைகளை தீர்மானங்களாகப் பதிவு செய்ய , ‘Emergency needs – மிக அவசரமாக சரி செய்ய வேண்டிய தேவைகள்’ என்று தொகுத்து , செயலியில் நுழைந்ததுமே நாம் பார்க்கும் படியாக முதல் தொகுப்பாக வைக்கப்பட்டுள்ளது
• மிக மிக அவசியமான தேவைகள் தீர்மானங்களாக இந்த செயலியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளது
இப்படி பல புதிய அம்சங்கள் கொண்ட செயலியை பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் TNSED பெற்றோர் செயலி பற்றிய காணொளித் தொகுப்பு (video manual) மற்றும் வழிகாட்டும் PPT போன்றவை மாநில அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும்.
TNSED Parents புதிய செயலியில் தீர்மானங்களை பதிவிடுவதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்:
நடைபெற இருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் வருகைப்பதிவு மற்றும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை புதிய செயலியில் உள்ளீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் பின்வரும்வாறு வழங்கப்படுகிறது.
வருகைப்பதிவு:
• பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெறும் அன்றே நமது பெற்றோர் செயலியில் “உறுப்பினர் வருகை” என்ற optionஇல் உறுப்பினர்களின் வருகையைப் பதிவிட வேண்டும் .
• எப்போதெல்லாம் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் தவறாமல் உறுப்பினர்களின் வருகையை செயலியில் பதிவிட வேண்டும்.
தீர்மானங்கள் உள்ளீடு செய்தல்:
• பழைய செயலியில் உள்ளீடு செய்யப்பட்டு அந்த தேவை நிறைவேறாமல் (Unresolved) இருப்பின், அவ்வாறான தேவை இன்னும் உங்கள் பள்ளியில் இருந்தால் கூட்டத்தில் புதிதாக தீர்மானம் நிறைவேற்றி அதனை புதிய செயலியில் மீண்டும் பதிவிட வேண்டும்.
• ஆகஸ்ட்-2025 இல் நடைபெற்ற மறுகட்டமைப்பு முதல் தற்போது வரை பல்வேறு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தீர்மான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. அவ்வாறான தீர்மானங்களை நடைபெற இருக்கும் கூட்டத்தில் பதிய செயலியில் உரிய தலைப்பு மற்றும் உப தலைப்பின் கீழ் சென்று உள்ளீடு செய்ய வேண்டும்.
• பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம் நடைபெறும் நாளன்று , உறுப்பினர்கள் பள்ளி வளாகத்தைச் சுற்றி பார்வையிட்டபின், அப்போது கண்டறிந்த தேவைகளை பட்டியலிட்டு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து சேர்ந்து முடிவெடுத்து செயலியில் தீர்மானங்களாக பதிவு செய்ய வேண்டும் .
• தீர்மானங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற குறைந்த பட்சம் 50 சதவிகித உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்
• செயலியில் பதிவிடப்படும் அனைத்து தீர்மானங்களும் பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.
• தீர்மானங்களைப் பதிவு செய்யும் போது அதன் விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்,
• புகைப்படம் பதிவு செய்ய வேண்டிய தீர்மானங்களுக்கு மிகவும் பொருத்தமான புகைப்படத்தை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும்.
• சில தீர்மானங்களுக்கு “முன்” மற்றும் “பின்” நிலையைக் காட்டும் இரண்டு புகைப்படங்களையும், தேவைப்படும் இடங்களில் மட்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
• தீர்மானங்களுக்கு உரிய தகவல்களை உரிய இடத்தில் பதிவு செய்த பின்பு , மேலும் அதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இருந்தால் “விவரிக்கவும் / காரணம்/ விளக்கம்” என்று குறிப்பிட்டு கேட்கப்பட்ட இடங்களில் மட்டும் தட்டச்சு செய்து பதிவு செய்ய வேண்டும் .
தீர்மானங்களின் நிலையை பதிவு செய்யும் போது (Status update ) செய்ய வேண்டியவை :
• தீர்மானங்களின் நிலையில் முன்னேற்றம் இருக்கும் போதும், முழுமையாக தேவை பூர்த்தியான பின்பும், நிறைவேறும் போதும், தீர்மான முன்னேற்ற நிலையை உடனுக்குடன் செயலியில் பதிவு செய்யப்பட வேண்டும்.
• தீர்மானங்களாக இயற்றிய தேவைகள் முழுமையாக நிறைவடைந்து , வேலை நடந்து முடிந்தால் மட்டுமே, நிறைவேற்றப்பட்டது என்று செயலியில் பதிவு செய்யவேண்டும்.
தேவை முழுமையாகப் பூர்த்தியாகாமல் “நிறைவடைந்தது” என்று பதிவு செய்யப்பட்டால், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளால், தேவை நிறைவடைய எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் போய்விடும்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
Instructions for HeadMasters / Teachers Applying for Dr. Radhakrishnan Award - DSE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளியில் காலை உணவு / மதிய உணவு உண்ணும் மாணவர்களின் விவரம் பதிவு செய்ய உத்தரவு
தற்போது 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் அரசு (ஊராட்சி ஒன்றிய) / உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு உண்ணும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு உண்ணும் மாணவர்களின் விவரங்கள் தொடர்புடைய வகுப்பு ஆசிரியர்களின் Individual ID மூலம் TNSED SCHOOLS APP-ல் உள்ளிட வேண்டும்
>>> TNSED Schools App New Version: 0.3.1 - Updated on 18-07-2025...
சத்துணவு உண்ணும் மாணவர்களின் பெற்றோர் ஒப்புதல் படிவம் - Noon Meal Consent Form...
>>> ஒப்புதல் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 இல் சோதிக்கக்கப்பட்ட கற்றல் விளைவுகளுக்கான செயல் திட்ட வார்ப்புருக்கள் Action Plans Templates : for the L...