பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-09-2025 : School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-09-2025 : School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
செப்டம்பர் 2025 மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி
September 2025 School Calendar
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
*2025 செப்டம்பர் மாதம் - "ஆசிரியர் டைரி"*
_*02.09.2025 - செவ்வாய்க்கிழமை*_
கலைத் திருவிழா குறுவட்ட அளவில் வெற்றியாளர்கள் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்.
_*05.09.2025 - வெள்ளிக்கிழமை*_ `ஆசிரியர் தினம் _ டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்
&
`மீலாடி நபி`- அரசு விடுமுறை
_*06.09.2025 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
BEO அலுவலகம்.
_*08.09.2025 - திங்கள் கிழமை*_
*TNTET தாள் I & II* விண்ணப்பிக்க கடைசி நாள்
_*13.09.2025 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
DEO அலுவலகம்
_*15.09.2025 - திங்கள் கிழமை*_
6-9 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.
_*Inspire Award*_ விண்ணப்பிக்க கடைசி நாள்
_*கா.ந.அண்ணாதுரை*_ முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாள்.
2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்: 15.09.2025
_*18.09.2025 - வியாழக்கிழமை*_
1-5 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.
_*20.09.2025 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
CEO அலுவலகம்.
_*26.09.2025 - வெள்ளிக்கிழமை*_
முதல் பருவம்/ காலாண்டு தேர்வு முடிவு.
_*27.09.2025 - சனிக்கிழமை*_
முதல் பருவம்/ காலாண்டு தேர்வு விடுமுறை.
_*06.10.2025 - திங்கள் கிழமை*_
இரண்டாம் பருவம் தொடக்கம் பள்ளி திறப்பு.
`குறிப்பு` :
இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 5 மற்றும் 21 ஆம் தேதிகள் அரசு விடுமுறை தினத்தில் உள்ளது.
அரசுப் பள்ளியிலிருந்து அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ள மாணவி : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு
அரசுப் பள்ளி to அமெரிக்கா...!
அமெரிக்க வெளியுறவு துறை நிதியுதவி வழங்கும் ‘The Kennedy-Lugar Youth Exchange and Study (YES)’ எனும் திட்டத்தின் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார் ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவி தட்சண்யா.
பண்பாடு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான இத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் ஓராண்டு பள்ளிப் படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவி தட்சண்யா, 11-ஆம் வகுப்பை, Belton-ல் உள்ள Heartland பள்ளியில் படித்து வருகிறார். 12-ஆம் வகுப்பை தமிழ்நாட்டில் தொடர்வார் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
THIRAN : August Month Assessment மதிப்பெண்களை உள்ளீடு செய்யும் முறை
THIRAN: Method of entering August Month Assessment marks
THIRAN - MARKS ENTRY
அனைவருக்கும் வணக்கம்.
🎯 திறன் மாதாந்திர தேர்வு மதிப்பெண் விவரங்கள் தற்போது பதிவேற்றம் செய்ய முடியும்.
🎯 Tamil, English & Maths மாதாந்திர தேர்வு எழுதிய திறன் மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்யவும்
🎯 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சரியாக பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது EDIT OPTION இல்லை.
🎯 மதிப்பெண்கள் பதிவு செய்ய கடைசி நாள் 05-09-2025
நன்றி
Login to emis.tnschools.gov.in website
வலது மேல்புற மூலையில் உள்ள மூன்று கோடுகளை Click செய்யவும்
Thiran Assessment Option ஐ Click செய்யவும்
தோன்றும் திரையில் Exam Mark Entry என்னும் Option ஐ Click செய்யவும்
ஒவ்வொரு வகுப்பிலும் Monthly Assessment August என்பதன் கீழ் வரும் Start Button ஐ Click செய்து மதிப்பெண்களை உள்ளீடு செய்யவும்
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும்
TET Judgement will be on 01.09.2025
நாளை (01-09-2025) காலை பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் என்ற சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் மூலமாக மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும் என சற்று முன் நமது வழக்கின் வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் நமது பொதுச் செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்
எனவே நாளைய தினம் தீர்ப்பு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது
தகவல் பகிர்வு : மாநில மையம் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம் (Details related to the case number: 37664 - 2023 filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's Judgment that Teacher Eligibility Test is required for promotion)...
2 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 3182, நாள்: 29-08-2025 வெளியீடு
2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் ஆட்சியர் அருண்ராஜ், சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் சார் ஆட்சியர் மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
TNSED PARENTS APP UPDATE NEW VERSION 0.0.52
Updated on 11 August 2025
👉👉 SMC member attendance enhancement work
NSNOP bug fixing
Added 7 blocks module daily report
👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
For parents of students from Tamil Nadu for information and school management
Parent App is an app created by the Tamil Nadu State Education Department with a goal of engaging parents and the larger community towards the development of schools.
Parents can access information about their children’s attendance, scholastic and co-scholastic performance. Feedback can be provided on the management of the school and welfare schemes and scholarships offered.
Parents can view all data about the school - student enrollment, teacher details and infrastructure.
Members of the School Management Committee can collect data of the school and surrounding habitation to plan for the development of the school. All parents of the school can access the resolutions passed by this committee.
Parents can offer feedback across various categories like infrastructure, safety, learning and welfare schemes.
Parents can access resources on child development, education schemes and career options to support their children.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-08-2025 : School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
இன்று (29.08.25) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு SMC கூட்டம் சார்ந்து தெளிவுரைகள்
1. TN Parents App ஐ *update* செய்திடவும்
2. உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது இம்முறை *Present/ Absent/ Vacant* என்கின்ற 3 options இருக்கும். Vacant ஆக உள்ள உறுப்பினர்களுக்கு vacant என்று பதிவு செய்யவும். முக்கியமாக உள்ளாட்சி உறுப்பினர்களின் காலக்கெடு முடிவுற்றதால் அவர்களுக்கு vacant என்று பதிவு செய்திடவும்.
3. இந்த முறை *குழு புகைப்படம்* மற்றும் *தீர்மான நகல்* புகைப்படமாக Appல் பதிவு செய்தல் வேண்டும்.
4. *முக்கியமான தீர்மானங்களை* மட்டும் appல் update செய்யவும்.
5. மறக்காமல் பள்ளி மேலாண்மை குழு *உறுப்பினர்களின் வருகையினை* TNSED parents appல் பதிவு செய்யவும்.🙏
SMC கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாட வேண்டிய கூட்டப்பொருள்கள்
அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம் 🙏🙏 நாளை (29.8.2025 ) மாலை 3 to 4:30 மணி வரை நடைபெற உள்ள SMC கூட்டத்தில் கீழ் காண் கூட்டப் பொருளை SMC உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் உரையாடுதல் வேண்டும்.
கூட்டப் பொருள்.
1) TNSED PARENT APP ல் SMC உறுப்பினர்கள் வருகை தவறாமல் பதிவு செய்தல்.
2) திறன் இயக்கம் சார்ந்து
3) எண்ணும் எழுத்தும்செயல்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் தொடர் மதிப்பீடு.
4) முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு.
5) உள்ளடக்கிய கல்வி மாணவர்கள் முன்னேற்றம்.
6) அனைத்து குழந்தைகளும் பள்ளியில் -பள்ளி செல்லக் குழந்தைகள் இடைநிற்றல் குழந்தைகள் பள்ளி வருகை உறுதி செய்தல்.
7) என் பள்ளி என் பெருமை.
8) போஸ்கோ சட்டம்.
9) போதை பொருள்.
10) இல்லம் தேடி கல்வி
11 மணற்கேணி செயலி
12) கலைத் திருவிழா.
சத்துணவுப் பணியாளர்களின் CPS Account Slip - செய்தி வெளியீடு
சத்துணவுப் பணியாளர்களின் CPS Account Statement நாளை (29.08.2025) வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
SSLC பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி அறிவிப்பு
SSLC Mark Sheet Distribution - DGE Press Release
SSLC பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் 03.09.2025 அன்று வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
வட்டார அளவிலான உயர் கல்வி மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமனம்
வட்டார அளவிலான உயர் கல்வி மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமித்து (பட்டியல் அந்தந்த கல்வி மாவட்ட மின்னஞ்சலில்) பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள் வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
"நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" திட்டத்தின் கீழ் தொண்டு நிறுவனம் சார்பில் பயிற்சிகள் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு
நம்முடைய பள்ளிக் கல்வித்துறையின் "நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" திட்டத்தின் கீழ் "அக்னிச் சிறகுகள்" தொண்டு நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 14 ஆயிரம் பள்ளிகளில் மாணவச் செல்வங்களுக்கு நினைவாற்றல் அதிகரிப்பு மற்றும் வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
"சிறகை விரி உயர பற" என்ற அத்திட்டத்தை என்னுடைய திருவெறும்பூர் தொகுதியில் உள்ள திருச்சி மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் இன்று தொடங்கி வைத்து, "தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்படவுள்ள இப்பயிற்சிகளை மாணவச் செல்வங்கள் உள்வாங்கி, பயன்படுத்திக் கொள்ளவேண்டும்" என கேட்டுக் கொண்டோம்.
அன்பில் அறக்கட்டளை சார்பில் கல்வி விருதுகள் வழங்கும் விழா - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு
அன்பில் அறக்கட்டளை சார்பில் கல்வி விருதுகள் வழங்கும் விழா 2-ஆம் ஆண்டாக நடைபெற்றது.
2024-25ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் - போட்டித் தேர்வுகள் - திறனாய்வுத் தேர்வுகள் ஆகியவற்றில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாவட்டங்கள், 2025-26ஆம் கல்வியாண்டில் அதிக மாணவர் சேர்க்கை மேற்கொண்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கும், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் துணை நின்ற ஆசியர்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் என மொத்தம் 33 விருதுகளை வழங்கி வாழ்த்தினோம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச செயலிகளையும் வெளியிட்டோம்.
"அன்பில் 26" எனும் இந்த விழா சிறக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள்...
SMC உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது TNSED Parents Appல் இம்முறை கூடுதல் Options
SMC உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது TNSED Parents Appல் இம்முறை Present/ Absent/ Vacant என்கின்ற 3 options இருக்கும்.
* Vacant ஆக உள்ள உறுப்பினர்களுக்கு vacant என்று பதிவு செய்யவும். முக்கியமாக கிராமப்புற உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுற்றதால் அவர்களுக்கு vacant என்று பதிவு செய்திட தகவல். உறுதிப்படுத்திக் கொள்ளவும். நகர்புற உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு வழக்கம்போல வருகைப்பதிவு செய்யலாம்
* உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தேவையில்லை. ஒருவேளை கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தால் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு Attendance போட வேண்டாம்.
29-08-2025 அன்று SMC கூட்டத்தில் TNSED Parents Appல் UPLOAD செய்ய வேண்டியவை
29-08-2025 அன்று SMC கூட்டத்தில் குழு புகைப்படம், தீர்மானம் நகல் TNSED Parents Appல் UPLOAD செய்ய வேண்டும்
Economics, Commerce & Other Subjects Incentive தணிக்கை தடை வழக்கில் 29-08-2025 அன்று தீர்ப்பு
உயர்நீதிமன்றம் மதுரை கிளை இதர பாடங்கள் Economics, Commerce & Other Subjects Incentive தணிக்கை தடை வழக்கில் 29-08-2025 அன்று தீர்ப்பளிக்கிறது
நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி - ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஒரு நாட்டுக்கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது.
சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, நீல நிற முட்டையை இட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் டாக்டர் அசோக் கூறுகையில், "கோழியின் கணையத்தில் உள்ள 'பிலிவர்டின்' (biliverdin) என்ற நிறமி காரணமாக முட்டை நீல நிறத்தில் மாறியிருக்கலாம். இது ஓர் அரிய நிகழ்வு," என்று தெரிவித்தார்.
மேலும், நீல நிற முட்டை இட்ட அந்தக் கோழியை ஆய்வுக்காக எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-08-2025 : School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
26-08-2025 அன்று இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்
1. THIRAN செயல்பாடுகள் அனைத்தையும் HM மேற்பார்வை செய்ய வேண்டும்.
2. THIRAN வகுப்பில் ஆசிரியர் - THB பயன்பாட்டை HM உறுதி செய்ய வேண்டும்.
3. THIRAN test முறையாக நடைபெற வேண்டும். தேர்வு முடிந்ததும் செப்டம்பர் முதல் வாரம் EMIS-ல் entry போட வேண்டும்.
4. வகுப்புகளை நடத்துவது அல்ல. மாணவர்களை அந்தந்த வகுப்பிற்கான அடிப்படை திறன்களை அடைய வைத்து அனுப்ப வேண்டும் என்பதே நமது ultimate goal.
5. Knowledge based questions மட்டுமல்லாமல் application based, understanding based, MOT, HOT questions கேட்கப்படுவதால் அது சார்ந்த வினாக்கள் தொடர் பயிற்சி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். SLAS, NAS, NMMS தேர்வுகளில் இம்மாதிரியான வினாக்களே கேட்கப்படுகின்றன.
6.SLAS low performance பள்ளிகள் காரணம் சொல்வதை விடுத்து விட்டு அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
7. 6 முதல் 8 வகுப்பு வரையிலான focused learners அனைவரின் விவரங்களும் HM கையில் வைத்திருக்க வேண்டும். இம்மாணவர்கள் எத்தனை LO அடைந்துள்ளனர், reading & writing skill performance improvements பற்றி weekly once ஆசிரியர்களிடம் HM review செய்ய வேண்டும்.
8. காலாண்டு தேர்விற்கு THIRAN மாணவர்களுக்கு Tam, Eng, Maths பாடங்களுக்கு வினாத்தாள்
அனுப்பப்படும்.
9. THIRAN வகுப்பு பற்றி பெற்றோர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
10. மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் star போன்ற reward வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.
11. மாணவர்கள் முன் slow learners, வாசிக்க தெரியாது போன்ற negative words பயன்படுத்தக் கூடாது. Positive approach, appreciation வழங்க வேண்டும்.
12. Manarkeni app videos,
Kalvi TV videos வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும்.
13. வாசிப்பு இயக்கம் புத்தகம் வாசித்தல், 6-8 தேன் சிட்டு போன்றவற்றை மாணவர்களை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்.
14. English 7 பாடவேளையில் 1 பாடவேளை language lab பயன்படுத்த வேண்டும். Focused learners முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
15. கனவு ஆசிரியர் புத்தகத்தை அனைத்து ஆசிரியர்களும் வாசிக்க வேண்டும்.
16. Children's Day special- மாணவர்களின் படைப்புகளை thenchittu@magzine.com website-ல் share செய்யலாம்.
💐💐
முகலூர் கிராமம், ஓசூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எழில்மிகு தோற்றம்
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
முதன்மைக் கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் - விளக்கம் அளிக்குமாறு ஆசிரியருக்கு குறிப்பாணை - CEO Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காஞ்சிபுரம் மாவட்டம் - தென்னேரி, அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) திருமதி.P.சசிகலா என்பார் அலுவலரிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்தமைக்கு விளக்கம் கோருதல் - குறிப்பாணை வழங்குதல் சார்ந்து - காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி.P.சசிகலா என்பார், 08.08.2025 அன்று மாலை சிறப்பு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, முதன்மைக் கல்வி அலுவலர் பார்வையிட சென்றார். அப்போது மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் பாடப்புத்தகம் அல்லாமல், தனியார் மூலம் தயாரிக்கப்பட்ட பாடக்குறிப்பு கையேடுகளை வைத்திருந்ததும், மாணவர்களிடம் முதன்மைக் கல்வி அலுவலர் இது குறித்து விசாரித்த போது தாங்கள் இதை மட்டுமே பின்பற்றி படித்து வருவதாக தெரிவித்தனர்.
மேலும், பள்ளி பாடவேளை நேரத்திலும், வகுப்பில் தனியர் மூலம் தயாரித்த கையேடு தான் பயன்படுத்த வேண்டுமென கூறி, இந்த கையேடு மட்டுமே ஆங்கில ஆசிரியரால் விற்கப்பட்டது, எனவே. நாங்கள் அனைவரும் இந்த கையேடு மட்டுமே பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்தனர்.
இது குறித்து ஆங்கிலப் பாட ஆசிரியரிடம் விசாரித்த போது, ஆசிரியர் உயர் அலுவலரிடம் முறையற்ற வார்த்தைகளையும், குரலை உயர்த்தி பேசியும் அவமதித்தார். மேலும், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நான்கு பாடவேளையில் அரசால் வழங்கப்படும் பாடப்புத்தகத்தை முழுமையாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க இயலாது.
எனவே தான். நான் தனியார் மூலம் தயாரித்த பாடக்குறிப்பு கையேடுகளை வைத்து கொண்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றேன் என்று கூறினார். இச்செயல், அரசின் பாடத்திட்டத்தையும், பள்ளியில் ஒதுக்கப்படும் பாடப்பிரிவு நேரத்தையும் அவமதிப்பதாக உள்ளது. இது முற்றிலும் அரசுக்கு எதிராக செயல்படும் நோக்கமாக கருதப்படுகிறது.
எனவே இதற்குண்டான விளக்கத்தினை 3 நாட்களுக்குள் அளிக்குமாறு தெரிவிக்கலாகிறது.
அவ்வாறு விளக்கம் அளிக்க தவறினால் விளக்கம் அளிக்க ஏதும் இல்லை என கருதி தங்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின்படி துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
9 - 12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களும் Assessment தேர்வை எழுதும் முறை
CG பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் 9 to 12ஆம் வகுப்பு போதிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களும் இந்த Assessment தேர்வை 26.08.2025 முதல் 28.08.2025 தேதிக்குள் EMIS இணைய தளத்தில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
https://exams.tnschools.gov.in/login
உயர்கல்வி வழிகாட்டுதல் Career Guidance பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வை எவ்வாறு செய்வது என்பதற்கான காணொளி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
Quarterly Exam 2025: Timetable
காலாண்டுத் தேர்வு 2025 : கால அட்டவணை
6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு காலஅட்டவணை அனுப்புதல் - பள்ளிக்கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரின் இணைச் செயல்முறைகள், நாள் : 25-08-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
DGE - TTSE 2025 Instructions
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
11.10.2025 சனிக்கிழமை நடைபெற உள்ள தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் 11ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் ( மெட்ரிக் / CBSE / ICSE ) www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவங்களை 22.08.2025 முதல் 04.09.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்விற்கு விண்ணப்பிக்க 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் https://www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 28.08.2025 பிற்பகல் முதல் 10.09.2025 பதிவேற்றம் செய்யலாம்
கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜ கண்டிகை அரசு பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள சித்தராஜ கண்டிகை பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் 4 மாணவிகளுக்கு நேற்று (26.08.2025) பிற்பகல் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து 4 மாணவிகளும் லேசாக மயக்கமடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 4 மாணவிகளையும் மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு மாணவிக்கு மேலும் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் பள்ளிக்கு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து வந்த ரசாயனம் காரணமாக இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் மாணவிகள் படித்து வரும் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் தொழிற்சாலைகள் இருப்பதால் அதிலிருந்து ஏதேனும் நச்சுக் கழிவுகள் வெளியேறி அதன் காரணமாக மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதா? அல்லது மாணவிகள் ஏதேனும் உணவை உட்கொண்டு அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் 4 மாணவிகள் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பள்ளியில் மயங்கிய சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு 60% நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை - தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்
RTE - இணையதளப் பக்கம் திறக்காதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதள பக்கத்தை திறக்காதது ஏன்?
RTE-ன் கீழ் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் சேர்க்கை வழங்குவது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி
மத்திய அரசு 60% நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை - தமிழ்நாடு அரசு
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இணையதள பக்கத்தை திறக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதளப் பக்கத்தைத் திறக்காதது ஏன் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Right to Education Act | கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்த நிதி ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக இணையதளப் பக்கம் திறக்காததை சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பியது.
RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதளப் பக்கத்தைத் திறக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு உரிய நிதியை தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் , மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை எனக் கூறாமல் தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், தனியார் பள்ளிகள் இயக்குனர் குப்புசாமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மறுத்ததால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் மாநில அரசு தனது பங்காக 40 சதவீத நிதியை ஒதுக்க தயாராக உள்ள போதும், மத்திய அரசு 60 சதவீத நிதியை ஒதுக்காததால் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சம பொறுப்பு உள்ள போதிலும் மாநில அரசுக்கு எதிராக மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அந்த வழக்கு செப்டம்பர் ஏழாம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதளப் பக்கத்தை இன்னும் திறக்காமல் இருப்பது ஏன் எனவும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் நிதி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை காரணமாக மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, இணையதளப் பக்கத்தைத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனையும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை நீதிபதிகள், செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
வங்கி, நிதி நிறுவனங்களில் , முதல்முறையாக கடன் கேட்டு விண்ணப்பிப்போருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல
GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
DEPARTMENT OF FINANCIAL SERVICES
LOK SABHA
UNSTARRED QUESTION NO-4122
ANSWERED ON MONDAY,AUGUST 18, 2025/SRAVANA 27,1947 (SAKA)
STATUS AND RECOGNITION OF CIBIL SCORE
4122. KM. SUDHA R:
Will the Minister of FINANCE be pleased to state:-
(a) the legal status and recognition of CIBIL, score;
(b) whether the Government has authorised any organisation to prepare CIBII. and paid any fees
to such organisation and if so, the details thereof;
(c) whether any weightage is given to CIBII. scores by public sector banks while lending home
loan, gold loan and farm loan;
(d) whether the Government plans to have its own agency replacing CIBIL, to do due diligence
before lending loans; and
(e) whether the Government plans to remove CIBII. scores as mandatory requirement for home loans and gold loans from private and scheduled banks and if so, the details thereof and if not,the reasons there for?
ANSWER
THE MINISTER OF STATE IN THE MINISTRY OF FINANCE
(SHRI PANKAJ CHAUDHARY)
(a): TransUnion CIBIL. Limited, which was formerly Credit Information Bureau (India) Limited and referred to as "CIBII" is one of the credit information companies (CICs). Credit Information Companies function under the extant framework of Credit Information Companies(Regulation) Act, 2005 (CICRA), and the rules and regulations made thereunder.
As per the functions enabled according to provisions in sub-section 1(c) of Section 14 of CICRA,credit information companies provide credit scoring to its specified users or specified users of any other credit information company or to other credit information companies being its members.CICs generate Credit Information Report (CIR) of a borrower which also includes the credit score (for e.g., CIBII, score as generated by TransUnion CIBIL. Ltd).
(): Reserve Bank of India (RBI) has granted Certificate of Registration (CoR) under Section 5 of CICRA to four Credit Information Companies (CICs) for carrying on the business of Credit Information in India, as mentioned below:
■ TransUnion CIBIL Ltd.
Equifax Credit Information Services Pvt Ltd.
Experian Credit Information Company of India Pvt L.td.
CRIF High Mark Credit Information Services Pvt Ltd.
ஆகஸ்ட் 2025 மாத வருமானவரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு
*KALANJIYAM WEBSITE*
⬇️
*LOGIN*
⬇️
*e service (HR & pin)*
⬇️
*EMPLOYEE SELF SERVICE*
⬇️
*REPORT*
⬇️
*INCOME TAX PROJECTIONS REPORT SELF SERVICE & CLICK ACTION BUTTON*
⬇️
*Write month name* (Aug-2025) & *CLICK Continue button*
⬇️
*CLICK Submit*
⬇️
(new screen) *OK*
⬇️
*CLICK MONITORING REQUEST STATUS*
⬇️
*CLICK VIEW OUTPUT*
⬇️
*DOWNLOAD*
வணக்கம்!
SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் வாழ்த்துகள்.
SMC-யின் அடுத்த கூட்டம் வரும் 29.08.2025 வெள்ளிக்கிழமை, மாலை 3.00 - 4.30 மணி வரை நடக்கவிருக்கிறது. உங்கள் பள்ளியின் தலைமையாசிரியரை தொடர்புகொண்டு பேசி, இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.
குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை உறுதிசெய்வது SMC குழுவில் உள்ள நம் அனைவரின் பொறுப்பு.
இந்தக் கூட்டத்தில், மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் திறன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசயங்களில் விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் இயற்றப்படும் புதிய தீர்மானங்களையும், கடந்த ஆண்டுகளில் போட்டு இன்னும் பூர்த்தியாகாத தேவைகளையும் , மீண்டும் புதிய தீர்மானமாகவே இப்போது வந்திருக்கும் SMC புதிய பெற்றோர் செயலியில் பதிவிட வேண்டும்.
SMC கூட்டத்தில் கலந்துகொள்ள அனைவரும் வருக!
📌கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் & காணொளிகள்:
https://bit.ly/SMCSupportvideos
📌 ஊக்கமூட்டும் காணொளி:
https://youtu.be/qsB-DSC57j4
📌செயலி லிங்க் : https://bit.ly/TNSEDParentsApp
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை (TNSED)
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாட திறன் மற்றும் கணித திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன் THIRAN" (Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் செயல்படுத்துதல் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர்களின் இணை செயல்முறைகள், நாள் 03-07-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-08-2025 : School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
THIRAN மதிப்பீடுகள் : State Team தகவல்
Dear Team,
As mentioned in the circular regarding the monthly assessments, the August THIRAN assessments will be conducted this week. Please find attached the poster containing the assessment dates and the mark entry timelines. We kindly request you to share this information with the schools.
Note: The question papers will be available from the previous day, 9.00 a.m., until 29.08.2025, 6.00 p.m.
அன்புள்ள குழுவினருக்கு,
மாதாந்திர மதிப்பீடுகள் தொடர்பான சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆகஸ்ட் THIRAN மதிப்பீடுகள் இந்த வாரம் நடத்தப்படும். மதிப்பீட்டு தேதிகள் மற்றும் மதிப்பெண் நுழைவு காலக்கெடு அடங்கிய சுவரொட்டியை இணைக்கவும். இந்தத் தகவலைப் பள்ளிகளுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: வினாத்தாள்கள் முந்தைய நாள், காலை 9.00 மணி முதல் 29.08.2025, மாலை 6.00 மணி வரை கிடைக்கும்.
6,7,8 வகுப்புக்கான THIRAN மதிப்பீடு Assessment தேர்வு நடைபெறும் நாட்கள்
6,7,8 வகுப்புக்கான திறன் தமிழ் வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
* 26.08.25 தமிழ்
* 28.08.25 ஆங்கிலம்
* 29.08.25 கணிதம்
SBI வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (பாரத ஸ்டேட் வங்கி/ SBI) நிரப்பப்பட உள்ள 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை பிரிவு) தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் : CRPD/CR/2025-26/06
பணி: Junior Associate (Customer Support & Sales)
காலியிடங்கள்: 5,180 (தமிழ்நாட்டிற்கு 380 இடங்கள்)
வயதுவரம்பு: 1.4.2025 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்பபடும்.
சம்பளம்: மாதம் ரூ.24,050 - 64,480
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலை ஆன்லைன் தேர்வு மூன்று பிரிவுகளாக நடைபெறும்.
முதல்நிலைத் தேர்விற்கான அழைப்புக் கடிதத்தை தேர்வு தொடங்கும் நாளுக்கு 7 நாள்களுக்கு முன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும் முதன்மைத் தேர்வில் பங்குபெற முடியும். முதன்மைத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதன்மைத் தேர்வுக்கு செல்பவர்கள் முதல்நிலைத் தேர்வு அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டை மற்றும் முதன்மைத் தேர்வு அழைப்புக் கடிதம் வைத்திருக்க வேண்டும். அழைப்புக் கடிதத்தில் தற்போதைய பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டியிருக்க வேண்டும். . மேலும் 2 புகைப்படங்களை கூடுதலாக கைவசம் வைத்திருக்க வேண்டும்.
கேள்வித்தாள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழியில் அமைந்திருக்கும்.
தேர்வு மையம்: எழுத்துத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், சேலம்,தஞ்சாவூர், திருச்சி. திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாள், முன்னாள் ராணுவ பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகை மற்றும் சான்றிதழ்களின் நகல்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளவும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.8.2025
மேலும் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
சம வேலைக்கு சம ஊதியம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு : ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை
Equal Work Equal Pay - Supreme Court Judgment
>>> உச்சநீதிமன்ற தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஒப்பந்த உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியம் குறித்து உச்ச நீதிமன்றம் தீவிர கவலை தெரிவித்துள்ளது, மேலும் "நமது ஆசிரியர்களை நாம் நடத்தும் விதம் குறித்து நமக்கு ஆழ்ந்த கவலை உள்ளது" என்றும் கூறியுள்ளது.
தொடர்பான செய்தி:
ஒப்பந்த உதவி பேராசிரியர்களுக்கு, குறிப்பாக ரூ.30,000 போன்ற குறைந்த ஊதியம் வழங்கப்படுவது, ஆசிரியர்களின் நலன் மற்றும் பணி சூழல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.
செயல்பாட்டுக்கான தேவை:
இந்த செய்தி "குரு பிரம்மா என புகழ்ந்தால் மட்டும் போதாது" என்ற கருத்துடன் இணைந்து வருகிறது. ஆசிரியர்கள் மீது ஆழ்ந்த மரியாதை கொண்டிருந்தாலும், அவர்களுக்கு போதுமான ஊதியம் மற்றும் சிறந்த பணி சூழலை வழங்குவது அவசியம் என்பதை இது வலியுறுத்துகிறது.
உச்ச நீதிமன்றத்தின் கவலை:
ஊதிய விவகாரம்:
ஆசிரியர்கள், குறிப்பாக ஒப்பந்த பணியாளர்கள் எதிர்கொள்ளும் மிகக் குறைந்த ஊதியங்கள், அவர்களின் பணிக்கான மதிப்பைக் குறைப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.
நீதியான ஊதியம்:
ஆசிரியர்களுக்கு, சம ஊதியம் மற்றும் நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக உள்ளன. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் கவலை, இதற்கான ஒரு தீர்வை நோக்கி செல்கிறது.
பணியின் மதிப்பு:
ஆசிரியர்கள் வழங்கும் கல்வி மற்றும் சமூகப் பணியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதுடன், அவர்களுக்கு அதற்கேற்ப ஊதியமும், கௌரவமும் வழங்கப்பட வேண்டும்.
சுருக்கமாக, குறைந்த ஊதியம் என்பது ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் மகத்தான சேவையின் மதிப்பையும், கண்ணியத்தையும் குறைப்பதாக உச்ச நீதிமன்றம் கவலை கொண்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் உதவிப் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உதவிப் பேராசிரியர்களின் ஊதியக் கட்டமைப்பை, அவர்கள் செய்யும் பணிகளின் அடிப்படையில், அரசு பகுத்தறிவுப்பூர்வமாக நிர்ணயம் செய்ய வேண்டிய நேரம் இது என்று நீதிமன்றம் கூறியது.
ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் தற்போது மாதச் சம்பளம் ரூ.30,000/- பெறுகிறார்கள், தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் மாதத்திற்கு தோராயமாக ரூ.1,16,000/- மற்றும் வழக்கமான நியமனம் பெற்றவர்கள் ரூ.1,36,952/- பெறுகிறார்கள், இருப்பினும் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பணிகளைச் செய்கிறார்கள்.
"உதவிப் பேராசிரியர்கள் மாதந்தோறும் ரூ. 30,000/- ஊதியம் பெறுவது கவலையளிக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, அவர்கள் செய்யும் செயல்பாடுகளின் அடிப்படையில் ஊதியக் கட்டமைப்பை பகுத்தறிவு செய்ய வேண்டிய நேரம் இது" என்று நீதிபதி பி.எஸ். நரசிம்ம மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டது .
" நமது ஆசிரியர்களை நாம் நடத்தும் விதம் குறித்து எங்களுக்கு கடுமையான கவலை உள்ளது," என்று நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது.
பொது விழாக்களில் " குருபிரம்ஹ குருவிஷ்ணு குருதேவோ மகேஸ்வரா" (குருவே உயர்ந்த யதார்த்தம் (பிரம்மம்); அந்த குருவை நான் வணங்குகிறேன்) என்று தொடர்ந்து ஓதினால் மட்டும் போதாது , ஏனெனில் நாம் உண்மையிலேயே அதை நம்பினால், அது தேசம் அதன் ஆசிரியர்களை நடத்தும் விதத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
ஆசிரியர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்றும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அரசியலமைப்பு கோட்பாட்டின் அடிப்படையில் அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
"எந்தவொரு தேசத்தின் அறிவுசார் முதுகெலும்பாக கல்வியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளனர், ஏனெனில் அவர்கள் எதிர்கால சந்ததியினரின் மனதையும் குணத்தையும் வடிவமைப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். அவர்களின் பணி பாடங்களை வழங்குவதைத் தாண்டி செல்கிறது - இது வழிகாட்டுதல், ஆராய்ச்சியை வழிநடத்துதல், விமர்சன சிந்தனையை வளர்ப்பது மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மதிப்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இருப்பினும், பல சூழல்களில், அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் அங்கீகாரம் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கவில்லை.
கல்வியாளர்கள் கண்ணியமாக நடத்தப்படாமலோ அல்லது மரியாதைக்குரிய ஊதியங்கள் வழங்கப்படாமலோ, அது ஒரு நாடு அறிவுக்கு அளிக்கும் மதிப்பைக் குறைத்து, அதன் அறிவுசார் மூலதனத்தைக் கட்டியெழுப்புவதில் ஒப்படைக்கப்பட்டவர்களின் உந்துதலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நியாயமான ஊதியம் மற்றும் கண்ணியமான சிகிச்சையை உறுதி செய்வதன் மூலம், அவர்களின் பங்கின் முக்கியத்துவத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம், மேலும் தரமான கல்வி, புதுமை மற்றும் அதன் இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆகியவற்றிற்கான நாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறோம்.
அனுமதிக்கப்பட்ட பதவிகளில் காலியிடங்கள் இருந்தபோதிலும், தற்காலிக நியமனங்களைச் செய்வதாக நீதிமன்றம் குஜராத் மாநிலத்தை விமர்சித்தது
ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் மற்றும் அனுமதிக்கப்பட்ட பதவி காலியாக இருந்தபோதிலும், அரசு அவர்களை தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் எவ்வாறு தொடர்ந்து நியமிக்கிறது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
"சமநிலைக்கான நியாயமான கூற்றை விட, உதவிப் பேராசிரியர் பதவியை வகிக்கும் விரிவுரையாளர்கள், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இவ்வளவு குறைந்த சம்பளத்தில் தொடர்ந்து ஊதியம் பெறுவதையும், வாழ்வதையும் பார்ப்பது மிகவும் கவலையளிக்கிறது. அனுமதிக்கப்பட்ட 2720 பதவிகளில், 923 பதவிகள் மட்டுமே வழக்கமாக நியமிக்கப்பட்ட ஊழியர்களால் நிரப்பப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், கல்வி நடவடிக்கைகளின் தொடர்ச்சியை உறுதி செய்யவும், மாநில அரசு தற்காலிக மற்றும் ஒப்பந்த நியமனங்களை நாடியுள்ளது. 158 பதவிகள் தற்காலிக நியமனங்கள் மூலம் நிரப்பப்பட்ட நிலையில், 902 பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டன. இந்த நடவடிக்கை 737 பதவிகளை காலியாக வைத்தது, மேலும் 525 புதிய உதவிப் பேராசிரியர் பதவிகள் மற்றும் 347 விரிவுரையாளர் பதவிகள் அனுமதிக்கப்பட்டதன் மூலம் இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகரித்தது.
அனுமதிக்கப்பட்ட பதவிகள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பதால், மாநில அரசு தொடர்ந்து தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனங்களைச் செய்கிறது."
ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள், வழக்கமாக நியமிக்கப்படும் உதவிப் பேராசிரியர்களின் அதே செயல்பாடுகள் மற்றும் கடமைகளைச் செய்பவர்கள், 2012 ஆம் ஆண்டில் ரூ. 40,412 ஊதியமாகப் பெற்ற நிலையில், தற்போது ரூ. 30,000 மட்டுமே பெறும் சூழ்நிலையை நீதிமன்றம் கையாண்டிருந்தது. அவர்கள் சம ஊதியம் கோரினர்.
உதவிப் பேராசிரியர்களின் ஊதிய விகிதத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை மனுதாரர்களுக்கு அனுமதித்த நீதிமன்றம், ஒப்பந்த அடிப்படையிலான இந்த ஊழியர்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாக "மிகக் குறைந்த" மாதாந்திர ஊதியத்தில் பணியாற்றி வருவதால், உண்மைகள் "மிக மோசமானவை" என்று குறிப்பிட்டது. தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் கூட இதேபோன்ற ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்ற உண்மை இருந்தபோதிலும் இது நடந்தது.
நீதிமன்றம் இரண்டு செட் மேல்முறையீடுகளை விசாரித்தது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் வழக்கமான உதவிப் பேராசிரியர்களின் குறைந்தபட்ச ஊதிய விகிதத்திற்கு (ஆச்சார்யா மாதவி பவின் & மற்றவர்கள் vs குஜராத் மாநிலம்) தகுதியுடையவர்கள் என்றும், தற்காலிக நியமனங்கள் செய்யப்பட்டவர்கள் மே 8, 2008 (குஜராத் மாநிலம் vs கோஹெல் விஷால் சாகன்பாய் & மற்றவர்கள்) க்கு முன்பு இதேபோல் நியமிக்கப்பட்டவர்களுக்கு இணையாகப் பெற வேண்டும் என்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து குஜராத் அரசு ஒரு மேல்முறையீடு செய்தது.
அவர்கள் ரிட் மனுக்களை தாக்கல் செய்வதற்கு முந்தைய 3 ஆண்டுகளில் இருந்து, அதாவது 2012 முதல் 8% விகிதத்தில் நிலுவைத் தொகையைப் பெற உரிமை உண்டு என்பதை டிவிஷன் பெஞ்ச் ஒரு மாற்றத்துடன் உறுதி செய்தது. இந்த மேல்முறையீடுகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இரண்டு தீர்ப்புகளின் தொடர்ச்சியாக, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்களால், வழக்கமான அல்லது தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு இணையாகக் கோரி இரண்டாவது மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் வழக்கமாக நியமிக்கப்படுபவர்களுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று கூறி, அவர்களின் மனுவை ஒரு தனி நீதிபதி அனுமதித்தார். அவர்கள் முதலில் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து வருடாந்திர ஊதிய உயர்வுகள் மற்றும் பிற சலுகைகளை வழங்கியது. இருப்பினும், மேல்முறையீட்டில், ஒற்றைத் தீர்ப்பு மேற்கண்ட இரண்டு முடிவுகளையும் பின்பற்றவில்லை என்று டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தது மற்றும் எந்த தர்க்கரீதியான முடிவுக்கும் வராமல் அவர்களின் மனுவை முற்றிலுமாக தள்ளுபடி செய்தது.
இவர்கள் குஜராத்தின் பல்வேறு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள்.
இரண்டாவது மேல்முறையீட்டில், முதல் மேல்முறையீட்டுத் தொகுப்பில் டிவிஷன் பெஞ்ச் முன் அரசு இதேபோன்ற வாதங்களை முன்வைத்ததாகவும், அது சரியாக நிராகரிக்கப்பட்டது என்றும், அதற்கு எதிரான சிறப்பு விடுப்பு மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும் தீர்ப்பளித்தது. இதேபோன்ற நிலைப்பாட்டில், தற்போதைய வழக்கில் இதேபோன்ற தர்க்கத்தை நீதிமன்றம் ஏற்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. முந்தைய உத்தரவுகளை தனி நீதிபதி பின்பற்றவில்லை என்று டிவிஷன் பெஞ்ச் கண்டறிந்திருந்தால், அதை ஒதுக்கி வைத்துவிட்டு மனுவை ஒரு தர்க்கரீதியான முடிவில் தீர்த்து வைத்திருக்க வேண்டும் என்றும் அது கூறியது.
இரண்டாவது மேல்முறையீட்டை ஒதுக்கி வைத்துவிட்டு, அது கூறியது: " உதவிப் பேராசிரியர்கள் மாதந்தோறும் ரூ. 30,000/- ஊதியம் பெறுவது கவலையளிக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, அவர்கள் செய்யும் செயல்பாடுகளின் அடிப்படையில் ஊதிய அமைப்பை பகுத்தறிவு செய்ய வேண்டிய நேரம் இது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் ஆச்சார்யா மாதவி (உச்ச) மற்றும் கோஹெல் விஷால் சாகன்பாய் (உச்ச) தீர்ப்புகளை நாங்கள் தற்போது பின்பற்றி வருகிறோம். மேல்முறையீட்டாளர்களுக்கும், அதேபோன்ற பதவியில் உள்ள உதவிப் பேராசிரியர்களுக்கும் நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருப்பதால், உயர் நீதிமன்றத்தில் தங்கள் தீர்வுகளைத் தேடிக்கொள்ள நாங்கள் அதை விட்டுவிடுகிறோம். உயர் நீதிமன்றம் அதையே பரிசீலித்து சட்டத்தின்படி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்."
வழக்கு விவரங்கள்: ஷா சமீர் பரத்பாய் & ORS. எதிர். குஜராத் & ORS மாநிலம். | SLP (C) எண். 1347 OF 2024
மேற்கோள்: 2025 Livelaw (SC) 827
>>> உச்சநீதிமன்ற தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு வினாத்தாள்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் தகவல் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம்!...